Tuesday, May 03, 2005

தெறிப்பு - 17


Shreks Online


செம்மஞ்சட்தொடர்வண்டி, பொஸ்ரன்
'05 மே, 03 செவ். 11:47 கிநிநே.


யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
-செம்புலப்பெயல்நீரனார்

என்னம்மா உன்னம்மா யாரோ?
என்னப்பா உன்னப்பா கூட்டோ?
என் பாதை உன் பாதை ஒன்றோ?
களித்தரையோடு மழைநீர் போலே
கலவுற்றோம் நாம் காதல் உள்ளூறி
-நம்காலப்படிபாடினார்

எங்காத்தா ஒங்காத்தா யாரு?
என் நய்னா ஒன் நய்னா தோஸ்தோ?
என் ரூட்டு ஒன் ரூட்டு ஒண்ணோ?
பாரு பொறம்போக்கு நெலத்திலே மழே
ஜோரு ஜாயிண்டாச்சு தோ தில் லவ்லே
-வம்புலம்பெயர்நீரானார்

~தெறிப்பு

11 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//எங்காத்தா ஒங்காத்தா யாரு?
என் நய்னா ஒன் நய்னா தோஸ்தோ?
என் ரூட்டு ஒன் ரூட்டு ஒண்ணோ?
பாரு பொறம்போக்கு நெலத்திலே மழே
ஜோரு ஜாயிண்டாச்சு தோ தில் லவ்லே
-வம்புலம்பெயர்நீரானார் //

இந்த லொள்ளுக்கே இன்னும் நிறைய படம் போடுங்க எண்டு சொல்லலாம்! ;)

-மதி

கறுப்பி said...

"Kiss" எண்டு கண்ட உடன ஏதோ "A" படம் போட்டிருக்கிறார் பெயரிலி எண்டு சந்தோஷமாப் பாத்தா சும்மா புலுடா காட்டுறார்.

SnackDragon said...

நம்காலப்படி பாடினாரும் , வம்புலம்பெயல்நீரானாரும் எனக்கு அறிஞ்ச ஒரு ஆள் மாதிரி தெரியுதே!

Jayaprakash Sampath said...

லவாலை·ப் அப்படி ஒண்ணும் சொகமில்லை

ஜெயச்சந்திரன் said...
This comment has been removed by a blog administrator.
ஜெயச்சந்திரன் said...

படம் போட்டு கவிதையோ? கவிதை யாத்த கவி க் கோ நீடு வாழி

இளங்கோ-டிசே said...

Peyarili is helping single persons to get a partner by this poster (Lavalife dating site) :-). Thanx for understanding our feelings Peyarili :-).

வசந்தன்(Vasanthan) said...

டி.சே.!
அடங்கும்.

இளங்கோ-டிசே said...

வசந்தன், நான் 'அடங்காத்தமிழன்' பரம்பரை :-).

{பெயரிலி ஏற்கனவே யாராவது கமராவில் படமெடுத்துப்போட்டால் அடிக்கப்போகின்றேன் என்று வெருட்டினவர். இப்படி எல்லாம் நான் கதைக்க, என்ன நடக்கப்போகின்றதோ, யானறியேன் பராபரமே :-)}

ஈழநாதன்(Eelanathan) said...

டி.சே அதெல்லாம் மனுசி வரட்டும் பார்ப்பம்.அடங்காத் தமிழனா அடை கா தமிழனா என்று.
பெயரிலி வம்புலப் பெயர்நீரனார் கேள்விப்பட்ட பெயராத் தான் இருக்கு

-/பெயரிலி. said...

என்னமோ நடக்குது; மர்மமாய் இருக்குது; ஒண்ணுமே புரியல்லே இணையத்திலே ;-))