Tuesday, August 29, 2006

குவியம் - 30

பதிவுகளைப் பயன்படுத்துதல்

ஒரு பதிவு; அதை எழுதுகின்றவரின் பதிவு திட்டமிடப்பட்டவகையிலே "கேள்வியும் நானே பதிவும் நானே" என்ற வகையிலே, அங்கங்கு ஈழத்தவரின்மீதான வெறுப்பினை ஒத்தி ஒட்டி வெளியிடப்படும் பதிவு என்பதினை அவற்றிலே வரும் செய்திகளின் ஆதார ஊடகங்களின் அமைப்புகளை வைத்துக்கொண்டே அறிந்து கொள்வது இலகு. அநாமதேயப்பின்னூட்டங்கள் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும் பதிவுகளிலே வருவதும் அனுமதிக்கப்படுவதும் வழமையே. ஆனால், அநாமதேயமாகவே எல்லாப்பின்னூட்டங்களும் ஒத்தி ஒட்டப்பட்ட செய்தியினை விவரிக்கும் வளைக்கும் திரிக்கும் வண்ணமாக வரும் பதிவு இந்த வீரருடையதன்றி வேறில்லை. ஈழத்துப்பதிவர்களிலே இவ்வீரரின் இணையமூலம் தெரியாமல், தூண்டிலைக் கௌவிக்கொள்ளும் நுணல்களினூடாக தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ளும் இப்பதிவர்,இந்தியமுஸ்லீங்களின் பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

பிறகு ஏன் இப்போது நான் இவரது தூண்டிலைக் கௌவிக்கொள்ளவேண்டுமென்று கேட்டால் மூன்று காரணங்கள்:

1. முன்னராவது என்னைக் கண்டுகொண்டு, நான் எழுதாவிட்டாலும் என்னைப் பற்றி வம்பாகவேனும் தமிழ்மணத்திலே தோன்றாமல் 'நண்பர்கள்' பதிவு போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது, அதையும் விட்டுவிட்டார்கள். டேய் தம்பிமார் கண்டுகொள்ளுங்களனடாப்பா. பார்த்துக்கொண்டேயிருங்கள்; குறைந்தது மூன்று பதிவுகளாவது இரண்டு பேர்களாலே போடப்பட்டு வருமென்கிறேன். பந்தயம் பிடிக்கிறீர்களா?

2. அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்சுதந்திரத்துக்கும் மேலாக வேண்டாத ஆட்டம் ஆடிய சந்தேகத்திலே உள்ளே வைக்கப்பட்டிருப்பதை வைத்துக்கொண்டு, ஈழம் என்றே பேச்சை எவரும் எடுக்காமல் அமுக்கும்வண்ணம் பயமுறுத்தற்பதிவா(ட்)டும் வேட்டையாடு விளையாட்டுகள் தவறான கணிப்புகள் என்று சுட்டவேண்டாமா? (இரண்டு வாரங்களுக்கு முன்னால், வோஷிங்டன் டிஸியிலே அரபுஅமெரிக்கர்கள், லெபனான், பலஸ்தீனிய மக்களின் விடுதலைக்கு ஆதரவாகக் கூட்டம் போட்டுக் கத்தியதை யாரேனும் சி-ஸ்பான் இலே பார்த்தீர்களா? லிண்டன் ஜோன்ஸன் காலத்து அமெரிக்க சட்டமாவதிபர் இராம்ஸி கிளார்க் வேறு அந்தக்கூட்டத்திலே பேசினார் பாருங்கள். தட்டோ தட்டென்று கை தட்டினார்கள்)

3. இம்மூன்றாவதுதான் முக்கிய காரணம்; பெட்னா குறித்த வீரரின் பதிவிலே வெளிப்பட்டிருக்கும் பின்னூட்டங்களின்போக்கு, நான் அறிந்த சில நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் இழுத்து பெட்னாவின் இருக்கும் ஒருவரின் மீதான தற்போதைய அமெரிக்கவழக்கினை இணைத்து இழுத்து எழுதியிருக்கின்றது. இப்படியான பதிவுகளின் நோக்கம் என்னவென்று அறிந்து ஆரம்பத்திலேயே இந்நண்பர்கள் இது குறித்த தீர்மானமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வகையான பதிவுகள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொண்டு திட்டமிட்டே வெளிவருவதாகத் தெரிகின்றது.

(பெட்னாவினை எதிர்க்கும் அமெரிக்காவாழ் தமிழர்கள் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. தமிழோவியம் என்ற வலைஞ்சிகையிலே பெட்னாவின் குட்டு பற்றி முன்னமே எழுதியிருப்பதாக, இதே பதிவிலே குறிக்கப்பட்டிருக்கின்றது. பெட்னா குறித்து தமிழோவியம் சஞ்சிகையிலே குட்டை வெளிப்படுத்தி எழுதியிருக்கும் கட்டுரையினையும் அதற்குச் சார்பாகவும் எதிராகவும் எழுதியிருக்கும் பின்னூட்டங்களையும் பார்த்தால் பிடித்துக்கொள்ளமாட்டீர்களா என்ன?

பெட்னாவினை வைத்துப் பயமுறுத்த ஆட்கள் பெயர்களை இழுத்துப்பார்க்கவேண்டுமானால், பெட்னா அழைப்பினை ஏற்றுவந்துபோன ஜெயகாந்தன், சிவசங்கரி, குமரி அனந்தன் பெயர்களையும் இழுத்திருக்கலாம். "ம்ஹூம்! நாங்கள் பிரபஞ்சனைமட்டும் வேண்டுமானால், அடித்துத்தள்ளுவோம்; கூடவே, மணிவண்ணன், கஸ்பர் ராஜையும் இழுத்துக்கொல்வோம்" என்றால் சொல்ல எதுவுமில்லை :))

Wednesday, August 16, 2006

நிகழ்வு

பொஸ்ரன்: செஞ்சோலை குறித்த வெளிப்பாடு

ஈழம்-செஞ்சோலையிலே பாதிப்புற்ற சிறார்களைப் பற்றி உலகறியச் செய்ய பரந்துபட்டு நிகழும் செயற்பாடுகளின் பகுதியாக பொஸ்ரனிலே 17 ஓகஸ்ற், வியாழன் அன்று விபரநறுக்குகள் விநியோகிக்கப்படவிருக்கின்றன. பங்கு கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு அது குறித்த விபரம்:

Dear All,

Thamil children all over the US and the world are distributing flyers highlighting the death of 61 innocent children at Sencholai Orphanage, Mullaithivu. The UNICEF and SLMM officers have all stated that these children were innocent victims of violence.

This will be a great opportunity for our children to understand and take part and show solidarity with the 129 wounded children in the hospital.

Let us plan to meet at Government Centre T Station at 11.30 AM, Thursday August 17, and distribute the flyers during the lunch break till 1.30 PM.

Please distribute this email to your friends and ask them to participate in this show of support to the innocent victims.

Thank you