Sunday, December 31, 2006

விழியம் -1

ஒளிமாற்றம்
Metamorphosis of Light

'06 டிச, 31 ஞாயிறு 02:16:41 கிநிநே

விழியம்

Friday, December 29, 2006

படிவு - 15



The Big Sleep by Murder By Death

At the end of the road he calls everyone home
And the fire will consume us
Striking through to the bone
At the end of the road you will soon hear him call
As the congregations crumble and the chapels will fall

And the taste on your tongue
Well it comes yeah it comes
With the bittersweet pang of remorse and pain
Till the judgment is made
The prosecution's won
The gavel has won and justice is done

The courtroom clears and I'm left alone on the bench
My wife and children gone along with my defense
The bailiff leads me back to my cell
Like the riverman ferrying me to hell
I can't blame them, no
To hate me for what I've done
I hear them whispering in the hall
You live and die by the gun
All I can do is sit here and pray
I'll be forgiven on judgment day

Tell my wife in our yard buried underneath the pine
Theres a shoebox full of money of which I never earned a dime
Use it to start over the way things should have been
Live honest, and love again
Tell my wife, tell my kids
I never meant for this to happen

When they flip the switch please do not stay
I couldn't bear for you to remember me this way

விளக்கு - 5


Club


'06 டிச, 29 வெள்ளி. 00:12 கிநிநே

Thursday, December 21, 2006

தெறிப்பு - 26


Farm Fish





கடை விளம்பரம், பாமிங்டன், கனடிகட்
'06 ஒக், 22 வியா. 10:02 கிநிநே.

புலம்-20


"..... and when experience is not retained, as among savages, infancy is perpetual.
Those who cannot remember the past are condemned to repeat it...."
- George Santayana in "The Life of Reason"



எல்லோருக்கும் இன்னல் தீர்க்கும்படி எல்லோரும் வாழ்த்துச் சொல்லி வந்த இன்னோர் ஆண்டும் "வருமாண்டும் மற்றோர் ஆண்டே" என்று சாக்குருவி இராக்கூவல் கூறிப் பறக்கக் கடக்கிறது. ஈழத்துத்தமிழ்ப்பேசும் சமூகம் சுட்டிச் சொல்லும்வண்ணம் முகமறியாத, வயதறியாத பலரை எண்ணிக்கையறியா நிலையிலே தொலைத்துக்கழிகிறது. துயர்களைக் கழிக்கும் புதிதான கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் செய்திகளுமே மீண்டும் மீண்டும் வாசித்ததைப் படிக்கும் அலுப்போடு மூடவைக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியிலே ஜோசப் பரராஜசிங்கம், தன் தொடக்கத்தில் விக்கினேஸ்வரன், சி. புஷ்பராஜா என்ற அரசியல் முகங்களையும் நற்பிட்டிமுனை ஏ. எல். எம். பளீல் என்ற எழுத்துமுகத்தினையும் குண்டும் நோயும் காவு கொண்டபின்னால், இவ்வாண்டு ஈழத்தமிழரசியலின் சிந்தைப்போக்கிலும் இலக்கியப்போக்கிலும் - அவர்களுடன் ஒத்துப்போகிறோமோ இல்லையோ - குறிப்பிடத்தக்க ஆளுமையான இடங்களை ஏதோவொரு காலகட்டத்திலே கொண்டிருந்த பொதுமுகங்கள் சிலவற்றினை படபடவெனக் கடைசி நான்கு மாதங்களிலே சாயக் கண்டிருக்கின்றது.

உலோகநாதன் கேதீஸ்வரன்; கேதீஸ் என அறியப்பட்ட கேதீஸ்வரன் செப்ரெம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திய அரசினாலே நெம்பி திம்புவுக்குத் தள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, ஈபிஆர்எல்எப் சார்பாகச் சென்றிருந்தவர். ஈழ அரசியலிலே ஆயுதம் தாங்காமல், அரசியல்சார் சித்தாந்தரீதியான பார்வையோடு மட்டும் தான் சார்ந்த இயக்கத்திலே இருந்தவர். பின்னாளிலே, அதிலிருந்து விலகி, சமூக ஆய்வுநிறுவனமான மார்க்காவிலே இருந்தபோதுங்கூட, தமிழ்த்தேசியவாதியாகவே இருந்தாரெனச் செய்திகளும் அலசல்களும் சுட்டின. பிறகு, அதிலிருந்து விலகி, மஹிந்த இராஜபக்க்ஷவின் அரசின் (அ)சமாதானச்செயலகத்திலே துணைத்தலைமைப்பதவியிலே அவரை என்ன செல்லத் தூண்டியதென்பது புரியாத ஒன்றுதான்; அத்தெளிவின்மையே அவரைக் கொன்றவர்கள் யாரென்பதையும் இன்னும் தெளிவாகச் சுட்ட முடியாத நிலையினை வைத்திருக்கின்றது. எக்காரணம் கொண்டு கொல்லப்பட்டாலுங்கூட, தமிழ்த்தேசியத்திற்கு அவரது கருத்தாளுமை "இடித்துச் சொல்ல எவருமில்லா" நிலையை இன்னும் அண்மைப்படுத்துகிறது. ஆனால், அவரது மரணத்தினை ஈழத்தேசியத்துக்கு எதிரான சக்திகள் அவரைத் தமது நட்புசக்தி எனக் காட்டப்பயன்படுத்திக்கொள்வதால், அவர் அவருக்கு நியாயமாக ஈழத்தமிழர்கள் கொடுக்கவேண்டிய மரியாதையையும் பெறாமலே போய்விட்டிருக்கின்றாரெனச் சொல்லலாம்.

நடராஜா ரவிராஜ்; ஒக்ரோபர் மாதத்திலே கொல்லப்பட்டார். ஈழத்தேசியத்தை அழித்தொழிக்கவே உருப்பெரிதாக்கி ஈழ எதிர்ப்புச்சக்திகளாலே காட்டப்படும் ஆனந்தசங்கரியினாலே வளர்த்தெடுக்கப்பட்ட ரவிராஜ் பின்னால், தமிழர் தேசியகட்டமைப்பிலே ஒரு மிதவாதி என்றே கருதப்பட்டார். அரசியல்சார்ந்த நெடுங்காலச்சிந்தனையோ பார்வையோ அதிகம் அவரிலே தென்படாதபோதுங்கூட, நடைமுறைசார் நாளாந்த வாழ்க்கைக்கு அவரின் அரசியல் ஓரளவுக்கு பெரும்பான்மையினத்தவரிடத்தே சிலரிடமாவது தமிழ்மக்களின் ஆதங்கங்கள் வெளிப்படக் காரணமாகவிருந்தது. அவருக்கும் அகாலமரணமே வந்தது.

இளையதம்பி இரத்தினசபாபதி; ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்ப அமைப்பாளரும் ஏனைய இயக்கங்களுக்கு ஆயுதம் சார் போராட்டத்துக்கான பிறநாட்டு விடுதலையியக்கங்களுடனான தொடர்புகளும் இந்திய அரசு சில இயக்கங்களைத் தான் ஆளும்வண்ணம் ஆயுதம் கொடுத்து வளர்க்க முன்னமே ஏற்படவும் பெருமளவிலே காரணமாகவிருந்தவர். திம்பு பேச்சுவார்த்தையிலே ஈரோஸ் சார்பாகக் கலந்து கொண்டவர்களிலே இவரும் ஒருவர். இறுதிக்காலகட்டத்திலே அரசியலிருந்து விலகிப்போனாலும், இவர் போன்ற சிலரின் முன்மாதிரியே ஈழப்போராட்டத்திலே தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் சார் சத்தம்மிகு தேசியத்தினையும் தேசியத்தை மறுதலித்த இடதுசாரிச்சிந்தனையும் ஒருங்கிணைத்து ஈழத்தேசியபோராட்டம் வளர வாய்ப்பேற்பட்டது.

அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம்; ஜோசப் பரராஜசிங்கம், சிங்கள இனவாதச்சக்திகளின் குரலாக வெளிப்படும் ஏசியா ரிபியூனின் ஆசிரியரெனக் கருதப்படும் கே. ரி. ராஜசிங்கம் ஆகியோரைப் போலவே தமிழ்ப்பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இரத்தினசபாபதிகூட இடதுசாரித்தமிழ்த்தேசியத்தின்பால் நடைப்பட்டு, இறுதியிலே வலதுசாரித்தமிழ்த்தேசியத்தின் குரலாக மறைந்துபோனவர். எதிரிகளாலே குறைகூறப்பட்டாலுங்கூட, ஈழத்தேசியத்தினைப் பொறுத்தமட்டிலே அவரின் பங்களிப்பு புறக்கணிக்கமுடியாதது.

வி. நவரத்தினம்; தமிழரசுக்கட்சியின் ஆரம்ப அமைப்பாளர்களிலே ஒருவரான காவலூர். வி. நவரத்தினம் ஆண்டின் இறுதியிலே மொன்றியலிலே சரிந்திருக்கின்றார். தமிழரசுக்கட்சியின் இலங்கை அரசியல் தொடர்பான விட்டுக்கொடுப்புகளுக்கு உள்ளாகாமல் விலகி நின்றே செயற்பட்டவர்களிலே ஒருவர். நாற்பதாண்டு இடைவெளிகளிலே ஈழத்தமிழரின் அரசுநிலை குறித்த இரு நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். - பிற்சேர்க்கை 20061222

இங்கே ஒவ்வொருவரின் இறப்பும் அவர் இறந்த காலகட்டத்திலே ஈழத்தமிழ்ச்சமூகத்திலே அவருக்கிருந்த் பெயருக்கேற்ப வாழ்த்தவோ தாழ்த்தவோ இனம் காணப்படவோ செய்யப்பட்டிருக்கின்றது. ரவிராஜும் பாலசிங்கமும் சரியான வகையிலே கௌரவிக்கப்படும்போது, எண்பதுகளிலே ஈழத்தின் தமிழ் இளைஞர்களில் கணிசமானோரைப் பிரதிநிதிப்படுத்திய கேதீஸ்வரன், இரத்தினசபாபதி போன்றோர் இன்றைய ஈழத்தமிழ்த்தலைமுறையினாலே சரி வர அவர்களின் இலக்குகளும் இழப்புகளும் அறியப்படாதோ, கண்டுகொள்ளப்படாதுபோயிருப்பது வருந்தத்தக்கதாகவே தோன்றுகிறது; அவர்கள், அவர்களின் இழப்புகளுக்கு நாம் தரும் குரல்களுக்கும் மேலான மதிப்பினைப் பெறவேண்டியவர்கள்.



ஈழத்தமிழிலக்கியத்திலேயும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க, ஏ. ஜே.. கனகரத்தினா, சு. வில்வரத்தினம், வரதர் ஆகிய மூவரை அடுத்தடுத்து விரல்சொடுக்கும் நேரத்துள்ளே இழந்திருக்கின்ற உணர்வு சூழ்கிறது. எழுபதுகளின் இறுதியிலே என ஞாபகம்; ஒரு வாசிகசாலை; கல்கி, சாண்டில்யன், தேவன், நா. பார்த்தசாரதி மட்டுமல்லாது, 'வாசகர்வட்டம்' நூல்கள், சிங்காரத்தின் 'புயலில் ஒரு தோணி' போன்ற நூல்களையும் கொண்டிருந்தது. அவற்றினைச் சேகரித்ததோடு கூடவே இன்னும் ஒரு நல்ல வேலை செய்திருந்தது; ஈழத்துநூல்களுக்கென ஒரு தனியடுக்கு வைத்திருந்தது. (இளம்பிறை ரஹ்மான் வெளியிட்ட ?) ஏஜே இன் 'மத்து', தளையசிங்கத்தின் 'போர்ப்பறை', வீரகேசரி பதிப்பக நூல்கள், சிரித்திரன் நூல்கள், அங்குமிங்கும் தனித்தனியார் தாமே வெளியிட்ட ஈழத்துநூல்கள் (தாழையடி சபாரத்தினம் போன்றோர்) என்பனவும் கையிலே கிடைக்க வசதி செய்தது.

ஏ.ஜே. கனகரத்தினா; முதலிலே அவரது நூல் கிடைத்தபோது, "அட ஒரு சிங்களவர் எப்படியாகத் தமிழிலே எழுதுகிறார்!" என்றுதான் நினைத்தேன். உள்ளே எழுதியிருந்த விடயங்கள் எனக்குப் புரியக்கூடிய அளவுக்கோ சுவை தருமளவுக்கோ அப்போது இல்லை. பின்னாட்களிலே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து "வாசிப்பதனாலேயே ஒருவன் முழுமையடைகின்றான்" என்பதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தவரோ ஏ. ஜே. என்று தோன்றினால், கூடவே இன்னொரு வரியினையும் சேர்த்துக்கொள்ளலாம்; "'அறிந்தவற்றை அலசி எழுதினால், வாசிக்கும் நேரம் வீணாகிப்போய்விடும்' என்றும் யோசித்திருப்பார் போலும்." அந்தளவுக்கு ஈழத்தமிழ்த்திறனாய்வாளர்களிலே ஆங்கிலப்புலமையும் பரந்தபட்ட வாசிப்பும் கொண்டு விளங்கிய அவர், எழுதியது மிகக்குறைவு. எடுத்தது அத்தனையையும் அப்படியே கொண்டு போய்விட்டாரோ என்ற உணர்வுதான் இறப்பினைக் கேட்டவுடன் தோன்றியது. வேறுமொழி இலக்கியப்பார்வையையும் வரட்டுத்தனமாக கல்விக்கூடப்பார்வையின்றி தமிழிலே குறித்துத் தர ஒரு பாலமாக இருந்தாரென்றே சொல்லவேண்டும்.

சு. வில்வரத்தினம்; தளையசிங்கத்தின் போர்ப்பறையிலே வில்வரத்தினம் குறித்து "இளங்கவிஞன்" என, தளையசிங்கம் குறிப்பிடுவதாகவே முதலிலே வாசித்த ஞாபகம். பிறகு, வில்வரத்தினம் "ஓ வண்டிக்காரா" பாட்டு பாடுவது குறித்து தளையசிங்கத்தின் தம்பி பொன்னம்பலம் ஒரு கவிதையிலே குறிப்பிட்டிருந்தார் என்றும் நினைவு. அவருடைய கவிதைகளிலே மற்றைய சமகாலத்து ஈழத்துக்கவிஞர்களிலேயிருந்து மாறுபட்டதாகத் தோன்றுவது, இழப்புகளை தான், தன்னைச் சார்ந்தோர், ஊர், இனம் எனும் தனிமனிதனின் இழப்புகளாகவே கண்டு, கொள்கைசார் போராட்ட அரைகூவல்களை மேற்கொள்ளாது, தன்னுட் பாயும் ஒரு தேடலைக் கொள்வதாக ஒலிப்பது. இவ்வகையிலே ஈழத்திலே இருந்து கவிதைகள் புனைகிறவர்கள் மிகக்குறைவு.

வரதராஜன்; வரதரையும் அகஸ்தியரையும் குழப்பிக்கொண்டதுதான் அவர் குறித்த எனக்கான முதல் அனுபவம். அடிப்படையிலே எழுத்துப்போக்கிலே கொஞ்சம் பழங்காலத்தவர் என்ற அபிப்பிராயமேயிருந்தது. ஆனால், அவர் வெளியிட்ட "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது" அது வந்த காலகட்டத்திலே ஒரு துணிச்சலான வெளியீடு. அவரின் இழப்பிலே ஒரு முன்னைய தலைமுறை எழுத்தாளருடனான இறுதி இழைகளிலே ஒன்று அறுந்திருக்கிறது.

*படங்களுக்கு நன்றி: ஏசியா ரிபியூன், தமிழ்நெற், தேனி, விம்பம், ஈழக்கலையிலக்கியச்சுவடி, பதிவுகள்

'2006 டிசம்பர் 21, வியாழன் 05;8 கிநிநே.



Wednesday, December 13, 2006

புலம்-19






இரவிசங்கரின் "தமிழ்மணம் தேவையா?" இடுகையோடு முழுமையாக ஒத்துப்போகமுடியாதெனினும், நல்ல அலசல். தமிழ்மணம் வருவதற்கு முன்னர் இதே மாதிரியான வாசிப்பிகளை (readers) வைத்துக்கொண்டுதான் ஓடைகளூடாக வாசித்துக்கொண்டிருந்தோம். தமிழ்மணம், இப்படியாக எந்தெந்தப் பதிவுகள் புதிதாக வருகின்றன என்று தேடிக்கண்டு வாசிப்பியிலே சேர்த்துக்கொள்ளும் தேடுதல்நேரத்தினையும் செயற்பாடுகளையும் அநாவசியமாகக் குறைத்தது. பதிவுகள் பெருகப்பெருக இதே சூழல் தொடர்ந்து இருக்கவே போகிறது. இந்நிலையிலே சந்தைப்படுத்தலின் உச்சப்பயனைப் பெற, தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும். இது, ஒருங்குபடுத்தப்பட்ட பல்லங்காடி (Mall) இன் தேவை, ஊசி தேடி வீடுவீடாகப் போய், "இருக்கிறதா? இருக்கிறதா?" என விசாரித்து வாங்கவேண்டிய நிலையிலும்விட ஏன் முக்கியப்படுகிறதெனப் பார்த்தாலே விளங்கிவிடும். ஆனால், காலப்போக்கிற்கேற்ப தமிழ்மணத்தின் தற்போதைய சேவைகளிலே சில பயனற்றதென்பதால் அகற்றப்பட்டும், புதிதாகத் தேவைப்படும் சேவைகள் வசதிப்படுத்தப்படவும் வேண்டி வரும். இரவிசங்கர் தலைப்பிலே தமிழ்மணம் என்பதற்கு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி என்ற அர்த்தத்திலே படியெடுத்தலுக்கு ஸீரோக்ஸ் என்று பயன்படுவதுபோலப் பயன்படுத்தியிருக்கின்றார். அதைவிட, பல பதிவர்கள், ஒருவரின் பதிவிலே வரும் இடுகைகளின் கருத்துக்கும் பின்னூட்டங்களுக்கும் தமிழ்மணமே காரணம் எனக் குழப்பிக்கொள்ளும் அமைப்பிலே, இப்படியான பதிவர்கள் இருக்கும்வரை, தமிழ்மணத்தின் தேவை இருந்துகொண்டேயிருக்குமென்றே தோன்றுகிறது.

தமிழ்மணம் ஆரம்பிக்கப்பட்டபோது இப்போதிருக்கும் வசதிகள் பல இருக்கவில்லை; புளொக்கர் பதிவுகள் இந்தியாவிலே வாசிக்கத் தடையேற்பட்டபோது, அவற்றினைச் சுற்றிச் சென்று அணுகும்வண்ணம் பதிவு முகப்பிலேயே PK இடைமுகத்தினைக் கொடுக்கும் வசதி தமிழ்மணத்திலே இணைக்கப்பட்டது, காலத்தின் தேவை. தமிழ்மணத்தின் இன்றைய வடிவம் கொண்டிராத சில வசதிகளை முன்னைய வடிவம் கொண்டிருந்தது (நேராகவே தமிழ்மணம் தளத்திலிருந்து இடுகைகளுக்கு நட்சத்திரம் குத்துதல் போல); ஆனால், அதனாலான பக்கவிளைவுக்கெடுதல் (வாசிக்காமலே ஆளைப் பார்த்து உடுவைக் குத்துதல்) காரணமாக விலக்கப்பட்டன. பூங்கா தமிழ்மணத்தின் -சரியான போக்கோ என்று தெரியாவிடினுமங்கூட - இன்னொரு முயற்சி; குறிப்பாக இவ்வாரம் சிறப்புச்செவ்வியும் தொடக்கப்பட்டிருக்கிறது. தமிழ்மணத்தின் விவாதக்களம், வாசகர்களின் தேவைக்காக அமைக்கப்படுமென அறியத் தந்திருக்கின்றது. அதனால், தமிழ்மணம் காலத்துக்கேற்றவாறு வழங்கும் சேவைகளை விரிக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றதென நம்புவோம்.

ஒருவர் தான் எழுதும் இடுகையொன்று தமிழ்மணத்துக்குப் பொருந்தாதெனக் கண்டால், தானே அந்த இடுகையைத் தமிழ்மணத்துக்குப் பதிவு பட்டையூடாக அனுப்பாமல் விடலாம். அப்படியல்லாது விதிகளுக்குப் பொருந்துமெனத் தோன்றும் இடுகைகளை அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பிவைக்கலாம். அதனால், தமிழ்மணத்திற்கும் விரும்பாத இடுகைகள் வந்து சேரும் வில்லங்கம் இருக்காது; பதிவரின் பதிவுக்கு அவர் விதிகளுக்குப் பொருந்தியிட்ட இடுகைகளூடாகப் போகும் வாகசர்கள், அவருடைய முன்னைய - ஆனால், தமிழ்மணத்திலே தோன்றாத, விதிக்கு முரண்படுமோ எனத் தோன்றும்- இடுகைகளையும் சென்று காணலாம். தமிழ்மணமும் வேண்டாத பஞ்சாயத்திலே "விடுக்கவோ? கோக்கவோ?" தீர்ப்புச் சொல்லிக்கொண்டு நேரம் செலவு செய்யத் தேவையில்லை. அப்படியேதும் இடுகை இன்னமும் தனக்குப் பொருந்தாதெனத் தோன்றினால், தமிழ்மணம் விலக்கிவிடலாம். தமிழ்மணத்திலே இணைக்காத இடுகைகள் தமிழ்மணத்துக்குச் சட்டச்சிக்கல்களைக் கொண்டு வராதென்ற சூழலிலே, தமிழ்மணமும் எடுத்ததற்கெல்லாம் சட்டச்சிக்கலின் பின்னாலே மறைந்திருந்து மோகனாவைப் பார்க்கும் 'சிக்கல்' சண்முகசுந்தரத்தின் மர்மநிலையிலே இருக்கத்தேவையில்லை. இப்படியாக, பெற்ற ஒவ்வொரு பட்டறிவுடனும் தமிழ்மணம் பொருந்தும் தொழில்நுட்பத்தினைச் சேர்த்து, தன்னைக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சிப்படுத்திக்கொள்ளுமென நம்புகிறேன். இப்படியாக, தமிழ்மணம் என்னவென்ன செய்யவேண்டுமென எல்லோருக்கும் இருப்பதுபோல எனக்கும் விருப்பங்கள் சில உள்ளன. தமிழ்மணத்துக்கே தனிப்பட எழுதிவிட எண்ணம்.

ஆனால், இரவிசங்கர் குறிப்பிட்டதுபோல, நிச்சயமாக, தமிழ்மணம், தேன்கூடு ஆகிய திரட்டிகளின் வசதிகளின் போதாமையினால், அப்போதாமையை நிவர்த்தி செய்யும் புதுத்திரட்டிகள் வரும்; வரத்தொடங்கிவிட்டன. அவை வழங்கும் வசதிகள் முக்கியமாகப் படுகிறவர்கள் அவற்றினைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். பூங்கா போன்ற வலைஞ்சிகளிலே (e-zines) குறைகளைக் காணுகிறவர்களைப் போல வாசகர்கள் முன்னரும் "திண்ணை போன்ற இதழ்கள் குறிப்பிட்ட ஒரு சிலரின் பக்கச்சார்பான படைப்புகளைத்தான் தருகின்றன" என்று குற்றம் சாட்டியிருக்கின்றார்கள். இனியும் புதிதாக வரும் வலைஞ்சிகைகளிலும் இதுபோன்ற பழிகள் சுமத்தப்படவே செய்யும். மனித இயல்பின் காரணமாக, இந்நிலை எக்காலத்திலும் எவ்வலைஞ்சிகை, சஞ்சிகையென்றாலுங்கூடத் தவிர்க்கமுடியாதது. திண்ணை, துக்ளக் குறித்து ஒருவருக்கு முன்னமே ஒரு தனிப்பட விரும்பாத காரணமேதும் விழுந்திருப்பின், திண்ணை, துக்ளக்கிலே ஒருவருக்கு விரும்பிய படைப்பு வருவதில்லையென்ற தோற்றமே அது பற்றி அவருக்கு ஏற்படும். அது சரியா தவறா என்று காலம் முழுவதும் தீர்வேதுமின்றி வாதாடிக்கொண்டிருக்கலாம். அதனால், இப்படியான நிலை திரட்டிகளின் வளர்ச்சியைப் பாதிக்குமெனத் தோன்றவில்லை.

விக்கிபீடியா, திறவூற்று என்பன குறித்து 2004 இலே தமிழ்ப்பதிவுகள் சூடுபிடித்த நேரத்திலே வெங்கட்ரமணன் உட்பட இன்னும் பலர் முனைப்புடன் செயற்பட்டுத் தமிழிலே விரிக்க முனைந்தனர். அவர்கள் சிலவற்றினைச் சாதிக்கவும் செய்தனர். ஆனால், சராசரி பயனர் என்ற வகையிலும் பதிவர் என்ற நிலையிலும் பெரும்பான்மையானோர் முடிவுநிலையிலே தங்கள் வசதிகளையே கண்டுகொண்டார்கள். ஆக, லீனெக்ஸ், ஃபயர்பொக்ஸ் போன்றவை நெடுக்க வளர்ந்து பேரோடையிலே கலக்கும்போதுதான், அவர்கள் தமக்குச் சாதகமென இணைந்து கொள்வார்கள். தமிழ்மணத்தின் பயன்பாடும் அவர்களுக்கு வாசிப்பிகளிலிருந்து விலகிவர இவ்வகையிலேயே உதவியது. பாஸ்டன் பாலாஜி சொன்ன 2006 கூட்டுப்பதிவுகளின் ஆண்டு என்பது முழுமையல்ல. 2003 இலே வலைப்பூ என்ற தமிழ்மணத்துக்கு முன்னோடியான (அல்லது கூர்ப்படைய முன்னான தமிழ்மணம் என்றும் ஒரு வகையிலே சொன்னால்) ஆளியக்கு திரட்டியினைப் பார்த்தோமென்றால், துறைசார்கூட்டுப்பதிவுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டனவெனத் தெரியவரும். இங்கே பாலாஜி சொல்லி பொன்ஸ் வழிமொழிந்திருக்கும் கருத்து, கிட்டத்தட்ட செய்திகளிலே ஒரு விமானவிபத்தோ அல்லது ஒரு பாடசாலைச்சூட்டுச்சம்பவமோ நிகழ்ந்தபின்னால், ஓரிரு வாரங்களுக்கு அதேபோன்ற செய்திகளே தொடர்ந்து தொலைக்காட்சி, பத்திரிகைகளிலே ஓட்டமாக வரும் பாங்கிலேயே அமைந்திருப்பதாகத் தெரிகிறது. கூட்டுப்பதிவு என்பது ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தேவை; இல்லாவிட்டால், புளொக்கரிலே அதற்கான வசதி தொடக்கத்திலேயே இருந்திருக்குமென்று சொல்லமுடியாது. திறவூற்று, விக்கிபீடியா, விக்சனரி என்பன -வேண்டுமானால் பாருங்கள் - செயற்படுகிறவர்கள் தன்னார்வத்துக்குத் தீனி போட்டு, சமூகம் குறித்த தங்கள் பங்களிப்பிலே திருப்தியடைய உதவும் அதே நேரத்திலே, பெரும்பான்மையான பதிவர்கள் அவற்றின் வெற்றியிலே பயனர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆக, மிஞ்சி அவர்களது பங்களிப்புகள் இரண்டாகவிருக்கும்; ஒன்று உற்பத்தியிலே இருக்கும் பயனருக்கான குறைகள், நிறைகளைச் சுட்டிக்காட்டும் சோதிப்பார்களாகவிருப்பார்கள்; அடுத்ததாக, தமக்குப் பிடித்திருந்தால், மற்றோருக்கும் அறிமுகப்படுத்துகிறோமென்ற விளம்பரதாரர்களாக, சந்தைப்படுத்திகளாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

'வெட்டி, ஒத்தி, ஒட்டிப்போடுதலுக்கு இனி மதிப்பு இருக்காது; ஆனால், பதிவரின் நேர்மை, எழுத்துத்திறன் போன்றவற்றுக்கே மதிப்பிருக்கும்' என இரவிசங்கர் நினைக்கிறார். நல்ல விழைவுள்ள சிந்தை; ஆனால், நடைமுறை அப்படியாகத் தோன்றவில்லை. பின்னூட்டக்கயமை என்று சொல்லப்படும் எத்தனை பின்னூட்டங்கள் கிடைத்தன என்று காணும் ஆர்வமும் பரபரப்பான பதிவிட்டுக் கவனிக்கப்படவேண்டுமென்ற விழைவும் ஐம்பது இடுகைகளை இட்டவுடனேயே ஆள்மறைக்கும் பின்னூட்ட வாழ்த்துமாலைகளுடன் "வெற்றிகரமான ஐம்பதாம் பதிவு" நோக்கும் திரைநடிகன் உளநிலையை ஒத்திக் கடத்திவந்திருக்கும் மயக்கமும் இருக்கும் இச்சூழலிலே இரவிசங்கரின் விழைவுச்சிந்தை விரைவிலே சாத்தியப்படுமெனத் தெரியவில்லை; ஆனால், நிச்சயமாக, அச்சுப்பத்திரிகைகள் வலைப்பதிவுகளின் முக்கியத்துவதை, தம்மீதான அவற்றின் சூட்டினை உணர்வதற்கு ஏற்பட்ட பாய்ச்சல் தமிழ்ப்பதிவுகளிலே ஒரு பொதுச்சிந்தையாக உருவாகும்போது, இரவிசங்கர் சுட்டும் பாய்ச்சல் ஏற்படும். எனினும், "எனது ஐம்பதாம் பதிவு" என்ற களிப்பும் "நான் போகிறேன்; போகிறேன்; மனமின்றியும் மார்க்கமின்றிப் போகிறேன்; விடை கொடு தமிழ்மணமே; மணமே நீ கலங்காதே; சயனோரா!" என்ற கண்ணீர்மல்கலும் ஒருக்கிக் குழைத்த தமிழ்த்தொலைக்காட்சித்தொடர் உளப்பாங்கு வலைப்பதிவிலே இருக்கும்வரை இதன் சாத்தியம் உடனடிக்கில்லை என்றே சொல்வேன்.

தனித்தனி வாசிப்பிகள் வந்தால், வலைச்சண்டைகள் குறைந்துவிடுமென்பது நடைமுறையில்லை; வலைப்பதிவுகள் வருமுன்னால், யாஹூ குழுமங்கள், அதற்கு முன்னால், மின்னஞ்சற்குழுமங்கள், அதற்கு முன்னால், பயனர்வலைக்குழுமங்கள் என, தேடி இணைந்துகொள்ளும் படிநிலைகள்தான் இருந்தன; ஆனால், அப்போதும் இதே - சொல்லப்போனால், இதைவிட மோசமான - சண்டைகளும் மண்டையுடைப்புகளுமிருந்தன. இந்நிலை திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டையொழிக்க முடியாதென்ற நிலைதான்; தனியார் வாசிப்பிகள், பின்னூட்ட வசதிகளைத் தந்தால், இந்தச்சண்டைக்கும் சந்தோஷத்துக்கும் திறவுகோலையும் சேர்த்துக்கொடுக்கிறதென்றே அர்த்தப்படும்.

பெரும்பாலும், இரவிசங்கர் சொல்லும் - வாசிப்பி, கூட்டுப்பதிவு, தனிப்பட்ட துறைப்பதிவு என்பன உள்ளடக்கிய - எதிர்கால வலைப்பதிவுலகு, ஒரு மீள்-முன்னைக்காலம் (Retro-Pre '04) நளினப்படுத்திய உலகாகவே தோன்றுகிறதேயொழிய, பயனர்நிலைப்பதிவர்களின் தொழில்நுட்பத்திறனும் தேடுமுனைப்பும் உயராத நிலையிலே தமிழ்மணம் இன்னும் நெடுங்காலத்துக்குத் தேவைதான் என்றே உறுதியாகச் சொல்லமுடியும். இங்கே தமிழ்மணம் என்பதை அதுபோன்ற திரட்டிகளின் தேவை என்ற வகையிலே குறிப்பிட்டிருக்கிறேன். (தனிப்பட்ட, இரவிசங்கரினது அவரது நண்பர்களினது கணிச்சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் குறித்த விக்சனெறியும் கடந்த பத்தாண்டுகளாக எத்தனை கணிச்சொல்லாக்கம் குறித்த முயற்சிகள் ஏற்பட்டிருந்தன என்பதைப் பார்க்கும்போது, சோர்வினை ஏற்படுத்தினாலும், அதிலே அவர்கள் காட்டும் ஆய்திறனும் ஒருமித்த முடிவுக்கு வரும் வழிமுறையும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது)

இச்சூழலிலே வலைத்திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்றே தோன்றுகிறது. இடுகையின் தலைப்பினை "தமிழ்மணம் தேவைப்படுமேதான்" என்றுதான் வைத்திருக்கிறேன்; "தமிழ்மணம் தேவைதான்" என்றல்ல.

'06 டிசம்பர், 13 புதன் 11:37 கிநிநே.


Tuesday, December 12, 2006

விளக்கு - 4


Eclipse


'06 டிச, 12 செவ். 17:14 கிநிநே.



நிகழ்வுகள் - 15



களம்: சார்ச்சில் நகர், பிரான்சு
காலம்: 14, ஜனவரி 2007 14:00 முதல் 19:00 மணி




தகவல்: கி. பி. அரவிந்தன்


நிகழ்வுகளிலே தரப்பட்டிருக்கும் அறிவிப்புகளின் உள்ளடக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அலைஞனின் அலைகள் பதிவுகள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

....

Saturday, December 09, 2006

கரைவு - 7




படம்: ஈழத்துக்கலையிலக்கியச்சுவடி



ஈழத்துக்கவிஞர் சு. வில்வரத்தினம் இன்று கொழும்பிலே சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து காலமானார்.

பதிவுகள் ஈழச்சிறப்பிதழ் இதழுக்காக 2003 இலே எழுதிய அறிமுகக்குறிப்பினை உள்ளடக்கி அவர் பற்றிய விபரம்


சு. வில்வரத்தினம் (1950-2006)
யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர், 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். இவரது முன்னைய கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும் முகங்களும் (1985), காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர். நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட. ‘Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka’ தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கிலவடிவிலே வெளிவந்துள்ளது. இறக்கும்வரை திருகோணமலையிலே தொழிலாற்றினார்.


இணையத்திலே கிடைக்கும் அவரது நூல்கள்

அகங்களும் முகங்களும்
காற்றுவழிக்கிராமம்
உயிர்த்தெழும் காலத்திற்காக
மரணத்துள் வாழ்வோம் (சில கவிதைகள்)

அவர் குறித்த சந்திரமதி கந்தசாமியின் இடுகை இங்கே

தகவல்: பத்மநாப ஐயர்

கரைவு~

Friday, November 03, 2006

நிகழ்வுகள் - 14


லூஷியம் சிவன்கோவிமண்டபம்
4 A Clarendon Rise
Lewisham
London SE13 5ES






நிகழ்வுகளிலே தரப்பட்டிருக்கும் அறிவிப்புகளின் உள்ளடக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அலைஞனின் அலைகள் பதிவுகள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

....

Wednesday, October 25, 2006

கணம் - 486




ஆற்றைக் கடப்பாருக்காய் அப்பத்துடன் காத்திருப்பேன்
- அன்றலர்ந்த அரைத்துண்டு அப்பம்
உடன் தேங்கு துளி பருகுநீரும் வரளும் வெயில்.

அக்கரையிருந்து அவர் வருவார்; ஆறு பிரிய
அலை ஒழுக, மச்சம் மருண்டு வழி விழி அலைய,
வண்டல் விரல் வேர் விழுத்தி வருவார் தலை
ஒளிய ஒளி காலும் முகபாவம்,
முதிர்ந்திழிந்து கணம் குழவி முறுவல் படர்ந்தொழிந்து
களை பெருகிக் களைத்திளைத்து அழிய எழில் துளிர்போடும்.

அவர் வருவார்; முகம் சோர்ந்து கை நீண்டு
தொங்குமெனைக் காண்பார்; அப்பம் கேட்பார்.
வேர்வைக்கை பொத்தி வைத்த துண்டு வைப்பேன் பாதம்.
தொட்டெடுப்பார். தட்டுத்தட்டாய்ப் பெருகும் ரொட்டி.
ஒன்றுண்பார்; மீதி உன்னதென்பார்;
தாகத்துக்கொரு துளி தாவென்பார்; நானளிக்க
நனைத்து நா தடவ நீர் ஊறும் கலயம்.

வழி பார்த்து மேல் நடப்பார்; வாழ்த்தியிருப்பேன்,
"வழங்கினை வாழி நீ! வளர்த்தனை வாழி நீ!!"

என்னிடத்தை எப்போது எவரெடுத்து ஒப்பென
உம்மிடத்தே தந்தாரென்றெண்ணியெண்ணி
மாய்வேன்; எதுவுங் காணாராய் எட்டிப் போவார்
துல்லியமாய்த் தொட்டு வைத்த பொட்டாய்
தொலைதூர முற்று வைப்பார்.

எனதான
அரைத்துண்டு அப்பமும் சொட்டு அத்துளி நீரும்
மட்டுமே இப்போதும்
சப்ப ஒட்டும் நான்.

'06 அக்., 25 புதன் 16:30 கிநிநே.



-/சித்தார்த்த 'சே' குவேரா.

நிகழ்வுகள் - 13


YMCA Hall
642 Forest Road
Walthamstow, London E17 3EF






நிகழ்வுகளிலே தரப்பட்டிருக்கும் அறிவிப்புகளின் உள்ளடக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அலைஞனின் அலைகள் பதிவுகள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

....

Thursday, September 21, 2006

துளிர் - 60


Not for Eating


'06 செப் 21 வியாழன் காலை



துளிர் - 59


Truth is ugly is the beauty of nudity


எல்லை மீறினாலுங்கூட அரசரின் அம்மணத்தைச் சுட்டிய சூலருக்குச் சமர்ப்பணம்
'06 செப் 21 வியாழன் காலை