Saturday, September 22, 2007

வில்லுப்பாட்டு

அள்ளல் - 11






நன்றி: yarl.com

பள்ளிக்கூடக்காலங்களிலே கோயிற்பூங்காவனத்திருவிழாக்களுக்குப் போக மூன்று காரணங்கள்.
மூன்றாவது காரணம், சின்னமணியின் வில்லுப்பாட்டு. இன்றைய நிலையிலே பார்க்கும்போது, அவருடைய கதைகளினூடாக விழும் கருத்தாக்கங்கள் கொஞ்சம் இடறினாலும், சுவை குன்றித் தோன்றினாலுங்கூட ஆட்களை "எழும்பிப் போகவிடாது" இருத்திவைத்துக் கதை சொல்லும் நட்சத்திரவானத்துக்குளிர்காற்றுக்கச்சான்காலத்துப்பின்னிரவுக்கோயில்மணல்நாட்களைக் கைப்பிடித்துக்கொள்ள உதவுவது அக்கதைகள்தான்.

Friday, September 21, 2007

முயலுக்கு மூன்று கால்; நான்கென்றால், நான்காம் காலையுடைத்தவன் நீ

கரைவு 12

மாலன் தன் 'வசைவு'களைப் பொழிகின்றவர்களைப் பற்றிய இடுகையிலே எழுதியிருப்பது:

/இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுகள் அதை மெய்ப்பித்து வருகின்றன. அங்கு காந்தியை அடி முட்டாள் என்று எழுதலாம். இங்கிருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால்தான் அண்ணா(துரை) திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார் என்னும் பொருள்பட (மூலநூலைக் குறிப்பிடாமல்) மேற்கோளிடலாம். பாரதியை, வள்ளலாரை, இன்றுள்ள அரசியல் தலைவர்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளை மலத்தோடு ஒப்பிடும் மேற்கோளைப் பதிவு செய்யலாம்.எவரையும் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டலாம். பெண்களை மலினப்படுத்தும் பாலுறவுச் சொற்களை இறைக்கலாம். என் தாயைப் புணருவேன் என்று சொன்னது கூட எனக்கு வருத்தமில்லை, ஆனால் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டானே என்று அங்கலாய்க்கலாம். விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். வதந்தியின் அடிப்படையில் ஊகத்தின் பேரில் இன்னார் இந்தப் பட்டறையில் கலந்து கொள்கிறார் எனத் தனிமனிதத் தாக்குதல் நடத்தலாம். பெண்பதிவர்கள் படத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் பின்னூட்டம் போடலாம். ஆனால்-

ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!

வாழ்க பதிவுலகின் கட்டற்ற சுதந்திரம்!/


---

ஒரு மூத்த பத்திரிகையாளர், கல்லடி பட்டுக் கனிந்த மரம் என்று இளைப்பாறிய பேரா. தருமியாலே அழைக்கப்பட்டவர் இப்படியாக அரற்றுவதைப் பார்க்கும்போது, உண்மையாகவே அவர் அப்படியாகச் செய்கின்றாரோ என்று கருதுகையிலே, திகைப்பாகவும், பொய்யிற்கு நடந்தவற்றிலே அவர் மரவட்டையாகச் சுருண்டுபோகும் நிலை தொடர்ந்து ஏற்படுகின்றது என்பதாலே ஒரு போக்கினைக் காட்டுகின்றாரோ என்று எண்ணுகையிலே ஆத்திரமாகவும் வெறுப்பாகவுமிருக்கின்றது.

'காந்தியைப் பற்றி அடிமுட்டாள் என்று சொன்னவர்கள்', 'தாயினைப் பற்றி விமர்சித்தால் பரவாயில்லை; ஆனால், ஜாதியைப் பற்றி விமர்சித்தால் கோபம் கொள்வோம் என்று இவர் சுட்டுகின்றவர்கள்' வந்து அவரவர்க்கு இவர் தர்மம் தரும் சிலுவைகளைச் சுமந்துகொள்ளவோ கொல்லவோ செய்யட்டும். எனக்கு அவை குறித்த தனிப்பட்ட கருத்துகளிருப்பினும், அவை எனக்கான சிலுவையுத்தங்களைக் கிளப்பா.

பெயர் பெற்ற பத்திரிகையாளராகவிருந்தும் அநாமதேயர்கள் உலாவும் பதிவுகளிலே இறங்கிப் பேசுகின்றவர், கலந்துரையாடல்களிலே சரியாசனமிருந்து கலந்து கொள்கின்றவர் என்றளவிலே அவரிடம் எனக்கு மதிப்பு உண்டு. சுஜாதா போன்ற அம்பல அரட்டை மட்டுமே பண்ணி, "இணையம் ஒரு ஈகோ ட்ரிப்" என்பவர்களிடம் இதனை எம்மைப் போன்ற பதிவுலகின் 'முகமிலி பெயரிலி அறிவிலிகள்' இப்படியான பழகும் தன்மையை எதிர்பாக்கவேமுடியாது.

ஆனால், அவர் உலகத்தினைப் பார்க்கும் கோணத்திலே - குறிப்பாக, ஈழம் தொடர்பாக - அப்படியான சமநிலையிருந்து மற்றைய பதிவர்களுடன் பேசும், கேட்கும் பண்புகளைக் கொள்வதாகத் தெரியவில்லை.

இவரை இங்கே யார் விடுதலைப்புலிகளை விமர்சிக்கவேண்டாமென்று சொன்னார்கள்? இராமுக்கு மகள் இருக்கிறார் என்பதையே நாம் பேசக்கூடாதென்ற வகையிலே இடுகைக்கு இடுகை எழுதும் இவரைத் தவிர, விடுதலைப்புலிகளையோ வேறெந்த விடயத்தைப் பற்றியோ எவரும் விமர்சிக்கக்கூடாதென்று பதிவுகளிலே சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால், இவர் டைம்ஸ் ஒப் இந்தியாவின் கட்டுரையை எடுத்து இத்துணை நேரம் செலவு செய்து தமிழ்ப்படுத்தி வெளியிடுகின்றாரென்றால், அதன் உள்ளடக்கத்தின் போதாமை, தவறுகளைக் கண்டிருப்பார் என்றே நம்புகிறேன். அதுவும் பத்திரிகையுலகு சாராத என்னைப் போன்றவர்களே கவனிக்கும்போது, அனுபவம் பெற்ற பத்திரிகையாளரான இவர் கவனிக்காமலிருக்க முடியாது. வாரிசு அரசியலை, திராவிடக்கூத்து என்ற மாதிரியாக ஒடுக்கிச் சொல்வதன் அபத்தத்தை, இந்திய அரசியலிலே ஈடுபடும் அரசியல்வாரிசுகளைப் பெரும்பட்டியல் போட்ட இவருக்குத் தெரியாமலிருக்கமுடியாது. ஏனென்றால், மண்டபத்திலே வாரிசு அரசியலைப் பற்றி யாரோ புனைந்து சுருட்டிக்கொடுத்த கட்டுரையைத்தான் வாங்கி வந்து எமக்கு அவிழ்த்துவிட்டாரென்று நாம் எவருமே நம்பவில்லை. இந்நிலையிலேதான், த டைம்ஸ் ஒப் இந்தியாவின் கட்டுரை குறித்து ஆதாரங்களுடன் முரண்படுத்தி, அதன் "உண்மைகளை உற்பத்திசெய்யும்" தன்மையின் அடிப்படைவடிவத்தை (கட்டு) உடைத்துக் காட்டினேன்.

வெளிநாடுகளிலேயே இந்தியப்பத்திரிகைகளிலே அறியப்பட்ட பத்திரிகை The Times of Indiaதான் என்ற வாதத்தை வைக்கின்றார் (கார்டியன், இப்படியாகத்தான் இந்துவைச் சொல்கிறது :-)). சரி, அறியப்பட்ட பத்திரிகை என்பதற்காகமட்டும், ஸ்ரீனிவாஸ ராகவனின் கட்டுரையை அப்படியே கேள்வியின்றி நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமா? ஒரு பத்திரிகையாளர் வைக்கக்கூடிய வாதமா இது? ஒரு புலனாய்வுச்செய்திக்கான துப்பு வரும்போது, எதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களியேயிருந்து அச்செய்தியினை உறுதிப்படுத்த (மேற்கின்) பத்திரிகையாளர்கள் அலைகின்றார்கள் என்று புளோரிடாவிலே பத்திரிகையியல் மேற்படிப்பினைக் கற்று அனுபவமும் மிக்க மாலன் அறியமாட்டாரா? அப்படியாக, புலனாய்வுச்செய்திகள் குறித்துக் கேள்வி கேட்காமலிருப்பது, சந்தைப்படுத்தும் ஊடகங்கள் என்று இவர் எழுதிய கட்டுரையிலே சொல்லப்படும் "புலனாய்வுச்செய்தி"களாக முடிந்துவிடும் அபாயம் கொண்டவை என்பதை இவர் அறியாரா? அதற்கு மாறான செய்தி உருவாகும் வடிவத்தினை உரித்துக்காட்டினால், புலிகளை விமர்சிக்கவேண்டாமென்று சொல்வதாக எண்ணிக்கொள்கிறாரா?

நான் புலிகளினைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றவனில்லை என்பதை என் பதிவினைத் தொடர்ந்து வாசிக்கின்றவர்களுக்குத் தெரியும். ஆனால், அதே நேரத்திலே, அவர்களின்மீதான தவறான கருத்துகளை இந்து இராம், மாலன் போன்றோர் எதிர்வாதமின்றி முடிந்த முடிபாக, அறிவிக்கவும் விடமாட்டேன். அதற்காக, ஆதாரமின்றி 'நான் பிரபலம்', 'நான் ஈழத்தைச் சேர்ந்தவன்', 'எனது பிரபல பத்திரிகை' என்ற சட்டைக்கழுத்துகளைத் தூக்கிவிட்டுக்கொண்டு, "இரட்சகர் நாளை வருகிறார்! என் வார்த்தையை முழுக்க நம்புங்கள்" என்ற கோஷத்தினை எழுப்பி என்னையோ என் கருத்தினையோ நிலைநாட்ட முயலமாட்டேன்; அப்படியாக ஆதாரத்துடன் பேச முடியாவிட்டால், "என்னைப் பேச விடுகின்றார்களில்லை" என்று தோசைச்சட்டியைச் சுடச்சுடக் கவிழ்த்துப்போட்டு, இன்னொரு தோசை வார்க்கமாட்டேன்.

திரும்பத் திரும்ப, இராமின் மகளை விமர்சித்ததாகவே கோயாபல்ஸின் உருப்போட்டு உண்மையாக்கும் மந்திரத்தினைக் கைக்கொள்ளப்பார்க்கிறார். அதற்கு விளக்கம் சொல்லி, எனக்கு அலுத்துவிட்டது. சரி. அப்படியே இப்போதைக்குக் கிடக்கட்டும். இராமின் மகளைப் பற்றி "விமர்சித்ததாக" எடுத்துக்கொண்டு மூன்று கால் முயலாக, "ம்ஹூம்! கூடாது" என்று தொங்குகிறவருக்கு, அதே நேரத்திலே பிரபாகரனின் மகனைப் பற்றி இவர் டைம்ஸ் ஒப் இந்தியாவின் கட்டுரையை மொழிபெயர்த்துத் தருவதிலே எவ்விதமான அறமுரணோ கூச்சமோ இருப்பதில்லை. ஏனென்றால், பிரபாகரனின் மகனென்றால், எவ்விமர்சனமும் எவரும் செய்யலாம். இப்படியான 'காந்தி விமர்சனக்கு அப்பாற்பட்டவர்; வேறெந்த பூந்தி, ரவாலட்டுவையும் பிடித்துப் பினைத்தாலும் சரி; பிளந்தாலும் சரி' நிலைப்பாடுள்ள இந்தியப்பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளைப் பற்றி 1999 இலே நான் எழுதியதன் துண்டமொன்றை இங்கே சுட்டுவது பொருந்தும்.

......
எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.

உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.

புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.

கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.

கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.

........

"எமக்குப் பிடித்து இவருக்குப் பிடிக்காதவற்றை அவர் விமர்சிக்கலாம்; ஆனால், அவருக்குப் பிடித்து எமக்குப் பிடிக்காதவற்றை நாம் விமர்சிக்கூடாது" இதுதான் இவரது நிலைப்பாடோவென்று தோன்றுகின்றது :-(

"ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!" என்கிறார்

இதிலே எனக்குச் சிக்கல் நிறைய உண்டு

1. பிரபல நாளிதழோ பீ துடைக்கும் தாள்ரோலோ என்பது எனக்குக் கவலையில்லை; "எந்த நிறப்பூனையென்றால் என்றால் என்ன? எல்லாவகை எலிகளையும் பாரபட்சமின்றிப் பிடித்தால் சரி" என்பதே இவ்வூடகத்துறையைப் பொறுத்தமட்டிலே என் எதிர்பார்ப்பு; CBS இன் Dan Rather இற்கு நடந்த 60 Minutes - Bush_AWOL அவலம், New York Times இன் Jayson Blair திருவிளையாட்டு, Washington Post இன் Janet Cooke திருவிளையாட்டு, New Republic இன் Stephen Glass திருவிளையாடல், Boston Globe இன் Patricia Smith திருவிளையாடல் என்று எத்தனையோ புகழ்பெற்ற ஊடகங்களின் ஓரக்கிழிவுகளைப் பார்த்திருக்கின்றோம்; பிரபல நாளிதழ் என்ற பதாகை மட்டும் அது தரும் செய்தியின் ஆதாரம் தாங்கும் அத்திவாரமல்ல; சொல்லப்போனால், The Times of India என்று போட்டு இணையத்திலே தேடவே, விளம்பரத்தினைக் காசு கொடுத்து ஆசிரியர்தலையங்கம் போலச் செய்ய அப்பத்திரிகை இடம் கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கூட மக்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

2. ஆதாரத்துடன் மொழிபெயர்க்கின்றார் என்பதை அவர் இந்திய வாரிசு அரசியலைப் பற்றி அறிந்து கொண்டும் திராவிட வாரிசு அரசியலைக் குற்றம் சொல்கின்றார் என்பதாகவே கருத வேண்டும். அவருக்கே தெரியும், உண்மையும் பொய்யும். மீதியாக அச்செய்தி எவ்விதமாக உருவாக்கப்பட்டிருக்கலாமென்பதற்கு சில கீற்றுகளைச் சுட்டினேன். ஆதாரம் என்று அவர் சொல்ல அவருக்கு அக்கட்டுரையைத் தவிர எதுவுமில்லை. "ஆதாரங்களுடன் கண்டு நிரூபித்து"ச் சிறையிலே அடைக்கப்பட்ட டெல்கி கணித ஆசிரியையின் கதையைக் குறித்து மாலனே எழுதியிருக்கிறார். அவரின் குற்றமின்மை நிரூபிக்கப்படும்வரை, இந்திய ஊடகங்கள் ஆடிய, அவிழ்த்துப்போட்ட புனைகதைகளை இப்போதும் இணையத்திலே தேடினால், நாம் காணலாம். அவர் குற்றமற்றவர் ஆனபின்னால், கிஞ்சித்தும் தம் குற்றஞ்சாட்டலுக்கு, பத்திரிகாதர்மத்தின் அடிப்படையிலே உண்மையைத் தாமே தேடிக் கண்டுகொள்ளாத வெட்கக்கேட்டுக்க்கு ஒரு சொல் மன்னிப்பும் கேட்காது, புதிய சரசரப்பு மினுமினுப்புச்செய்திகளை மற்றத்திசையிலே திருப்பிச் சரமாரி பொழிய ஆரம்பித்திருக்கின்றன. இதனாலேயே பத்திரிகைகளிலே, ஊடகங்களிலே சொல்லப்படும் ஆதாரங்களின் தாரங்களெவையெனக் காணவேண்டும். விடுதலைப்புலிகளிலே பிளவென்று வந்த கட்டுரையின் ஆதாரங்களுக்கு எவை ஆதாரம், மூலமாகவிருக்கமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டமுயன்றேன். ஸ்ரீனிவாஸ ராகவன், இதுபோன்ற இலங்கையரசுசார் செய்திகளுக்கான மெய்நிகருட்பொதி பத்திரிகையாளராகவே (virtually-embedded journalist: இச்சொல்லை ஆங்கிலத்திலும் தமிழிலும் முதன் முறையாகப் பயன்படுத்தியது நானே என்று இத்தால் அறிவிக்கின்றேன் :-)) எனக்குத் தோன்றுகிறார். அதைச் சுட்டிக்காட்டுவது எவ்வகையிலே மாலனின் வலையுலக எழுத்துச்சுதந்திரத்தினைப் பறிப்பதாகுமென்று கருதுகிறாரெனப் புரியவில்லை. வேறெவருங்கூட, அவ்வகையிலே தோன்ற எழுதியதாகவும் தெரியவில்லை.

3. விடுதலைப்புலிகளைப் பற்றியது என்பதற்காக அவரைப் போடக்கூடாதென்று யாரேனும் பதிவிலே சொல்லியிருந்தால், அவரே அதைச் சுட்டிக்காட்டட்டும். ஒத்துக்கொள்வோம். அப்படியாகக் காட்ட முடியாவிட்டால், தான் பொய்யைக் கூறினேன் என்று அவர் ஒத்துக்கொள்வாரா? வலைப்பதிவொன்றும் ஜெயா ரிவி, சன் ரிவி செய்திகளல்லவே; ஒரு புறம் மட்டும் கறுப்பும் மறு புறம் மட்டும் வெளுப்புமாக நாம் ஆதாரங்களுடனான தகவல் கேட்டு நம்ப; ஒருவர் சொன்னால், மாற்றுக்கருத்துகளும் கேட்கத்தான் செய்யும். எத்துணை சரி பிழை என்பது, தரப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமையும். (சில மாதங்களுக்கு முன்னான) சன் தொலைக்காட்சியிலே ஜெயலலிதா பற்றிய நல்ல செய்தி எதுவேனும் பேசும் சுதந்திரம் இருந்திருக்கின்றதா என்று அவரைக் கேட்கிறேன். இதே மாதிரி, ஜெயலலிதாவுக்குப் பதில், கருணாநிதியின் பெயரைப் போட்டுச் சுதாங்கனையோ, வேறு யாரினது பெயரையும் போட்டு ரபி பேர்னாட்டினையும் எதிர்த்திசைகளிலும் நான் கேட்கலாம். இப்படியான செய்தித்தாபனத்திலே கறுப்பு-வெளுப்பு செய்திச்சுதந்'தீரம்' மட்டும் கொண்டிருந்ததாக வெளிப்பார்வையாளர்கள் எமக்குத் தோன்றும மாலனுக்கு, வலைப்பதிவிலே "இதைப் பேசு; இதைப் பேசாதே" என்று யாரேனும் சொல்லியிருக்கின்றோமா? சொல்லத்தான் எமக்கு ஏதும் உரிமையிருக்கின்றதா?

ஒரு மூத்த பத்திரிகையாளர், கல்லடி பட்டுக் கனிந்த மரம் என்று இளைப்பாறிய பேரா. தருமியாலே அழைக்கப்பட்டவர் இப்படியாக குழந்தைத்தனமாக அரற்றுவதைப் பார்க்கும்போது, உண்மையாகவே அவர் அப்படியாகச் செய்கின்றாரோ என்று கருதுகையிலே, திகைப்பாகவும், பொய்யிற்கு நடந்தவற்றிலே அவர் மரவட்டையாகச் சுருண்டுபோகும் நிலை தொடர்ந்து ஏற்படுகின்றது என்பதாலே ஒரு போக்கினைக் காட்டுகின்றாரோ என்று எண்ணுகையிலே ஆத்திரமாகவும் வெறுப்பாகவுமிருக்கின்றது. சொல்லப்போனால், சிலருக்கு, ஜாதியைச் சொன்னால், சிலருக்கு பெண்ணுறவினர்களினை அசிங்கமாகத் திட்டினால், சிலருக்கு பெண்களை அழுத்தினார்களென்று சொன்னால், உருகுநிலையும் கடந்த உடைநிலை ஏற்படுவதுபோல, மாலனுக்கு, அவரின் கருத்துக்கு முரணாக நாமேதும் சொல்கையிலே அந்நிலை ஏற்படுகின்றதாகத் தெரிகின்றது. நிறையவே தயக்கத்துடன் சொல்லப்போனால், எனது மூன்று வயது மகனே இவரைவிட இவ்விடயத்தினை ஒத்த அவனின் வயதுக்கான பிரச்சனையொன்றினை நிதானத்தோடும் சமநிலையோடும் அறிவுபூர்வமாக அணுகுவான் என்றே தோன்றுகின்றது.

இப்போது, மாலன் குறித்த எனது கவலை, இவரை இவரின் வாசகர்களே என்னவென்று எண்ணிக்கொள்வார்களென்பதும், இந்தியா குறித்த எனது கவலை, இப்படியானவர்களை முக்கியமாகக் கொண்ட இந்திய ஊடகங்களினைத் தகவல்களுக்காக நம்பியிருக்கும் மக்களின் அறிதலுமே. ஈழம் குறித்த ஈழத்தவரோடு பரிச்சயப்படாத பல இந்தியர்களின் கருத்துகளிலே இருக்கும் குழப்பத்துக்கான காரணம் எங்கே என்று இப்போது புரிகின்றது. ஆர்குட்டிலே புலிவாலைப் பிடித்துச் சுழற்றியடிக்கும் இந்தியர்களின் பலரிடம் கோபம் கொள்வதிலே அர்த்தமில்லை.

Thursday, September 20, 2007

காகத்துக்குக் கனவிலையும்.....

கரைவு 11

நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

மாலன், த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம்.

சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டதும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டதும் செய்திகளாக இணையத்திலும் அலைகின்றன. சன் தொலைக்காட்சியிலே இருக்கும்வரையிலும் கருணாநிதி கொடுக்கும் செவ்வியின்போதும் உடனிருந்து கருத்தினைத் தெரிவித்தவர் மாலன். கருணாநிதியின் மகள் கனிமொழி வாரிசு அரசியலுக்கு வரப்போகின்றார் என்றறிந்தபோது, தமிழ் இலக்கியம் (?) அவரை இழந்துவிடுமா என்று பதிவு போட்டவரும் மாலன். ஆனால், இப்போதோ உரோமாபுரிபாண்டியனைச் சுற்றி சேதுடைத்து வெள்ளமோடுகையிலே ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே ஸ்ரீனிவாஸ ராகவன் எழுதிய கதை...அதாவது கட்டுரையைத் தமிழாக்கப்புல்லாங்குழல் வாசித்திருக்கின்றார். தன்மாநில வெள்ளத்துக்குச் சேதுகட்டாமல் உதிர்ந்த ஈழப்புட்டுத் தின்று தூங்கியிருக்கட்டுமென்று விட்டுவிடலாமேதான். ஆனாலும், "இந்தியா எனது நாடு! என் நாட்டினைப் பற்றி எவராவது.." என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பின்னூட்ட நீரோட்டங்கள் எம்மூளைக்கலங்களிலிருந்து இன்னமும் ஆவியுயிர்ப்படைந்திடவில்லை என்பதாலே உசுப்பி எழுப்பவேண்டிய கடப்பாடுடைத்தோம்.

அதைவிடவும் இன்னொன்றுண்டு; விடுதலைப்புலிகளைவிடவும் மாற்றுத்தலைமைகளைக் கொண்ட ஈழத்தமிழர்களின் நலன்/நிலை குறித்த செய்திகளை, சொல்லப்போனால், இந்து ராம், மாலன் போன்றோர் ஆர்வமுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் ஸ்ரீலங்கா நலன் தொடர்பான கடந்த சில நாட்களின் செய்திகளைத் தேடினேன்; அகப்பட்டவற்றிலே சில இவை:

Asahi: Asia: Sri Lankan government suspected of kidnapping 1,000 people
BBC: Lanka abuse probe 'set to fail'
WSWS: Sri Lankan government imposes new taxes to fund war
Asia Times: Mgr Ranjith meets Tamil Tigers, urges them to join peace process
Reuters: Dozens die, disappear in Sri Lanka, UN must act: group
அவரின் 125 ஆண்டுக்காலப்பாரம்பரியத்திலே வெளிவந்த புத்தக அறிமுகம் Frontline: Shocking disclosures

["இதற்கு மட்டும் இந்துவினை நம்புவீர்களா?" என்று திருப்பிக் கேட்பார் என்பது மட்டும் நிச்சயமென்பதனை சுதேசமித்திரன் தொடங்கிய ஆண்டினைக் குறித்து (இலங்கையைச் சேர்ந்த) 'மட்ராஸ் ம்யூசிங்' முத்தையா இந்துவிலே எழுதிய கட்டுரையின் போது அவர் திருப்பிக்கேட்டிருந்தாலே தெரிவித்தது. நம்புவோம். நம்பக்கூடியவிதத்திலே ஆதாரமாக வேறெங்கும் சரி பார்க்கும்வகையிலே நூலாகவோ தரவாகவோ எம் கைவசமிருக்குமென்றால், நிச்சயமாக நம்புவோம். நவரத்தின ராஜாராமை இந்து வெளிக்காட்டியபோது, ஏற்கனவே வெளிக்காட்டியவர்களின் கட்டுரைகளை, விவாதங்களை நேரடியாகவே வாசித்திருந்தவர்களென்பதாலே நம்பினோம். அதுபோலவே, இங்கும் நம்புவோம். வேறு ஆதாரங்கள் இருக்கும்போதும், இந்துவையும் புரொண்ட்லைனையும் நாங்கள் ஆதாரம் இவ்விடங்களிலே காட்டுவது, அவை சொல்வதிலே எவ்விதத்தவறும் இருக்கமுடியாதென்று சொல்லும் மாலன் போன்றவர்களோடு வாதாடுவதிலிருந்து சிரமங்களைக் குறைக்கும் என்பதற்காகமட்டுமே]

இத்தகு இலங்கைச்செய்திகள் பற்றியும் அவர் பேசியதாகத் தெரியவில்லை. புலிவாலைப் பிடித்துத் தொங்குவேன் என்றிருக்கின்றார். சில வேளை, சில நாட்களின்முன்னால், கொழும்பிலே "பத்திரிகையாளர்கூட்டத்திலே" ஸ்ரீலங்கா அரசின் கோலோச்சலை விதந்தோதிய இந்து இராம் அவர்களை ஈழத்தமிழர்களும் அவர்களது ஆதரவாளர்களும் மேலோன் என்று நினைத்துக்கொள்ளவேண்டுமென்ற நன்நோக்குடன், "அப்பனாவது உமியைக் கொடுத்தான்; மகன் அதையும் பறித்தான்" கதை நிகழ்த்திக்காட்டும் உன்னத தியாகநோக்கு உள்ளே மறைந்திருக்கின்றதோ என்றும் அறியேன் நான்.

ஆக, தமிழகத்தின், இந்தியாவின் சேதுசமுத்திரக்கொந்தளிப்பு, இப்படியான ஈழ-ஸ்ரீலங்காவின் நலன்கள் குறித்த செய்திகள்கூட, இவருக்கு இந்நேரத்திலே முக்கியமில்லை. ஆனால், ஆங்கிலம் வாசிக்கத்தெரியாத, ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாசித்துப் புரிந்துக்கொள்ளவேண்டி, த ரைம்ஸ் ஒப் இந்தியா அரைவேக்காட்டுக்கட்டுரையைத் தமிழிலே பெயர்ப்பது முக்கியமாகின்றது என்றால், இதனை என்னவென்று சொல்வது? அதுவும் ஒரு பண்பட்ட பத்திரிகையாளர் என்ற மேலாடையை முழுக்கவே களையும் நடனம் ஆடிவிட்டு, நிர்வாணமாகவே நின்று ஓர் ஆரம்பநிலைப்பதின்மப்பருவப்பதிவர்போல பின்னூட்ட வார்ப்புருக்குஞ்சம் கட்டிப் பதிவு போடும் இவரின் இக்குறித்த இடுகையினை இவரது இந்து நண்பர் ராமே நாகரீகமானதென்று ஏற்றுக்கொள்வாரோ தெரியாது. இணையத்திலேகூட, அவரது ஈழம் தொடர்பான பதிவுகளை மதித்து வாசிக்கும் வகையினர் மூவர்; ஒரு பெரிய பத்திரிகையாளர் என்றளவிலே அவரை, என்ன எழுதினாலும் ஏற்றுக்கொள்ளும் வாசகர்கள், ஈழ/புலி எதிர்ப்பிலே அவரின் பதிவிலே அச்சொற்களைக் கண்டாலே அவற்றையொட்டிப் பதிவு போடுகின்றவர்கள், அவரை எதிர்கொள்வோர் பலரைப் போலல்லாது அனுபவமும் நிதானமும் கருத்துமுள்ள ஒருவர் என்றளவிலே வாசிப்பவர்கள். இவ்வகையினரிலே இந்த மூன்றாம் வகையினர் அவரின் அண்மைக்காலப்பதிவுகளுடன் அவரின் ஈழத்தமிழர்கள் தொடர்பான 'உரு'வினைத் தெட்டத்தெளிவாகக் கண்டு ஒதுங்கிக்கொண்டிருக்கக்கூடும். மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச அவர் குறித்த நற்கருத்துங்கூட, மேலே நான் சொன்ன அவர் இவ்விடுகை போட எடுத்துக்கொண்ட அவகாலம், நோக்கம் கண்டதுடன் அடிபட்டுப் போயிருக்குமென்றளவிலே அவரின் இவ்விடுகைக்கு நன்றி. வலரி ப்ளேம் குறித்த கேள்விகளின் உக்கிரம் தாங்காமல், சிஎன்என் நேரடி ஒலிபரப்பின்போது, நுண்ணொலிவாங்கியைச் சட்டையிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு, கோரமுகத்துடன் வெளியேறிய பொப் நோவாக் இவ்விடத்திலே ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்கமுடியவில்லை. [போலி அல்லக்கைத்திராவிடத்தமிழர்.எதிர். போலி ஆகாக்கை திராவிடத்தமிழர், சுகுணா திவாகர்.எதிர். வளர்மதி, தமிழச்சி.எதிர்.தமிழ்பித்தன் என்று கவனம் சிதறிய வலைச்சூழலிலே இவரின் இவ்விடுகை வந்திருப்பது அவகாலமென்று சொல்லமுடியுமா என்பதிலே எனக்குச் சந்தேகமுண்டு].

சுருக்கமாக, த ரைம்ஸ் ஒப் இந்தியா கட்டுரையைப் பார்ப்போம்; அதிலே இருக்கும் கதையை வேறொரு சமயமாயிருப்பின், பிய்த்துப்பிடுங்கி நார்நாராக்கியிருப்பேன். இணைப்புகள் தேடவோ, கோவையாக எழுதவோ கணணி, இணைய, நேரவசதி மிகவும் கொஞ்சமே என்பதாலே இச்சந்தர்ப்பத்திலே முடியாதிருக்கின்றது.

தமிழகத்திலிருக்கும் வாசகர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலேயிருக்கும் வாசகர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திலிருந்து இந்திய அரசியலை, தென்னாசிய அரசியலை (ஏன் அமெரிக்க அரசியலும் அடக்கம் :-)) காணும் எவருக்குமே இந்த வாரிசுக்கடத்தல் என்பது தெளிவாகவிருக்கும்; இஃது அரசியலிலேமட்டுமல்ல, திரைப்படத்துறை, எழுத்துத்துறை, வர்த்தகம், -அட பத்திரிகைத்துறையைக்கூடப் பாருங்கள் (இந்து, ஆனந்தவிகடன், கல்கி எல்லாம் வாரிசு இல்லாமலா கடத்தியிருக்கின்றார்கள்?)- எல்லாவிடத்திலும் பரவியிருக்கின்றது. சொல்லப்போனால், மாலன் அவர்களே இந்த வாரிசுவிளையாட்டினைப் பற்றி அகில இந்திய அரசியலினை மையப்படுத்தி எழுதியிருக்கின்றார்.

"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, முன்னாள் துணைப் பிரதமர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா, முன்னாள் துணைப்பிரதமர் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி, முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஷரத் பவாரின் மகள் சுப்ரியா, ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், பாரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா,ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அவரது சகோதரியும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான விஜயராஜே சிந்தியாவின் மகனுமான துஷ்யந் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப், மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த், மு·தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா, மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மறைந்த முன்னாள் அமைச்சர் சுனில்தத்தின் மகள் பிரியா, மறைந்த முன்னாள் அமைச்சர் பகுகுணாவின் மகன் விஜய் பகுகுணா,பா.ம.க.நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, திமுகவின் நிறுவனர்களில் ஒருவரான ஈவிகே சம்பத்தின் மகன் இளங்கோவன் என நாடாளுமன்றம் ஏற்கனவே ஏகப்பட்ட வாரிசுகளால் நிறைந்து கிடக்கிறது.

எனவே கனிமொழி நாடாளுமன்றத்திற்குள் நுழைவது பெரும் சலசலப்புக்களை ஏற்படுத்திவிடாது."

- மாலனின் கட்டுரையிலிருந்து

இப்படியாக, நிலை எல்லோருக்கும் புரிந்திருக்க, ஸ்ரீனிவாஸ ராகவன் இதை திராவிட அரசியலுக்கே உரித்தான வாரிசுப்பண்பு என்று காட்டி, அதையும் இன்னும் சேதுவையும் மேடுடுத்தி வீதி சமைத்துக் கொண்டுபோய் வன்னிக்காட்டிலே பிரபாகரனுக்கும் பிள்ளைக்கும் (அட, அவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும்!) பொருத்துவது கொஞ்சம் தெளிவான இந்திய வாசகர்களுக்கே கிச்சுக்கிச்சுமூட்டிவிடும். ஆனால், நமது மாலன் அவர்களுக்கு கிச்சுக்கிச்சுமூட்டவில்லை.

பொறுக்கி, இராம் பூனையென்றால், அவரின் மகள் பூனைக்குட்டியாகத்தான் இருக்கவேண்டுமா என்று, மாலன், என்னிடம் 26 வயது வித்யா இராம் பற்றிச் சொன்ன அதே தோரணையிலே எழுதியிருக்கின்றார். பிரபாகரனின் 22 வயது மகனின் கடவுச்சீட்டு ஸ்ரீலங்கா கடவுச்சீட்டாகத்தான் இருக்கவேண்டுமா என்று கிண்டலாகச் செய்தி வெளியிட்ட இந்துவிடம் கேட்காத கேள்வியைக் கேட்டுவிட்டதாகவே கொள்வோம். ஆனால், பிரபாகரன் விமானப்படைக்கல்வி அயர்லாந்திலே தன் மகனுக்குக் கற்பித்து மீண்டும் வரவழைத்துக்கொண்டது, குடும்பத்தொழிலான "பயங்கரவாதத்திலே" ஈடுபட என்று ஸ்ரீனிவாஸ ராகவன் எழுதி, மாலன் தமிழிலே ஆங்கிலம் தெரியாத நாட்டிலே குடியேறிய ஈழத்தமிழர்களுக்குச் சொல்லும்போது, சுப்பிரமணிய அய்யரிடம் வாங்கிக்கொண்ட இந்துவினை கஸ்தூரி ஐயங்கார் குடும்பம் தொடர்ந்து பாகம் பிரித்து வருவதும் குடும்பத்தொழிலாக மேற்கொள்வதும் பாகம் சரிவரப்பிரியாதபோது, அலுவலகத்துக்கு வரமாட்டேன் வீட்டிலிருந்தே வேலை செய்வேன் என்று அடம்பிடிப்பதையுங்கூட நான் தனியாள் தாக்குதலில்லையென்றும் குடும்பத்தொழில் சார்ந்து வரும் தொடர்பாகக் காட்டலாமென்றும் இங்கே சொல்கிறேன்.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இந்திய அமேதிப்படை ஈழத்திலிருந்த நேரத்திலும், சுனாமி நேரத்திலும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சூசை கொல்லப்பட்டார் என்றும் இரு தடவைகள் (2004, 2007) சூசை வெள்ளிக்காசுக்காக காட்டிக்கொடுப்பாரென்றும் சூசை வெளிநாடு போய்விட்டாரென்றும் சந்தர்ப்பங்களுக்கேற்பச் செய்திகள் தந்ததும் இவ்வூடகங்களே. பதுமன் கொல்லப்பட்டதும் இப்படியே சொல்லப்பட்டது. சொல்லப்போனால், சோதனை செய்விபத்தொன்றிலே சூசை காயமுற்றதும் அவரது மகன் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தபோது, புலிகள் சார்பான செய்தித்தளங்கள் கொஞ்சமேனும் அதைக் கசியவைத்ததைப் பார்க்கும்போது, அவற்றின் கருத்துச்சுதந்திரம் அவற்றினைக் குற்றம் சாட்டுகின்றவர்களிலும்விட மேலென்று தள்ளிநின்று பார்ப்பவர்களுக்குத் தோன்றக்கூடும். அண்மையிலே குமரன் பத்மநாபன், அகப்பட்டாரா இல்லையா என்றதிலே இலங்கை, இந்தியசெய்தித்தாபனங்கள் மட்டுமல்ல, உலகச்செய்தித்தாபனங்களே குழம்பிவிட்டன. அதனால், அவர்களைக் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், பி. ராமன், (அவருடைய விழைவாசையினாலோ என்னவோ), குமரன் பத்மநாபனை அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறை தாய்லாந்து அரசிடமிருந்து அல் ஹைடா தொடர்புகளுக்காகப் பிடித்துப்போயிருக்கலாமென்று திருவாய் மொழி பாடியிருக்கின்றார். இவர், கேர்ணல். ஹரிஹரன் ஆகியோர் நம்பிக்கைக்குரிய வெளியே சொல்லமுடியாத அறிக்கைகளை வைத்து, அல் ஹைடா-புலிகள் வாலை ஆட்டி, பலரைக் கிச்சுக்கிச்சு மூட்டவும் சிலரை கிருதியிலே ஆழ்த்தவும் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அதைவிடச் சிரிப்பானது, இந்தியப்பு(ல்)லன் ஆய்வு இணையத்தளம் (மற் ட்ரட்ஜின் ஸிலட்ஜே பரவாயில்லை :-)) politicsparty.com இன் நகைச்சுவையெல்லாம் நம்பி கேரளா.கொம் Thai police received 20-mln-dollar bribe to free LTTE's Padmanathan: Web site என்று செய்தி வெளியிடும் கூத்து.

இவர்களுக்கெல்லாம் ஸ்ரீனிவாச ராகவனுக்கும் ஆதாரமான சிங்கப்பூரிலே அமைந்த International Centre for Political Violence and Terrorism Research இன் ஆராய்ச்சியே காரணமென்றால், அதுவும் கிச்சுகிச்சுமூட்டும் சங்கதியே. இவ்வாராய்ச்சிநிலையத்தின் தலை(வர்) ரோஹான் குணரட்னவைப் பற்றி, மாலன் போன்ற பத்திரிகையாளர்களே இணையத்திலே தேடி அறிந்துகொள்வதும் அவருடைய ஈழத்தமிழர், விடுதலைப்புலிகள் குறித்த புத்தகங்கள் குறித்த பார்வைகளையும் பார்த்துக்கொள்வது நல்லது. வேறொரு சந்தர்ப்பமாயிருந்தால், கண்டி அடிப்படைக்கற்கை நிலையத்திலிருந்து அவரின் சொந்தக்கதையும் தெரியுமென்ற விலாசம் சொல்லித் தொடங்கி வலை இணைப்பு இணைப்பாக ஆளைப் பிய்த்து உதறியிருப்பேன். இப்போது வசதிப்படவில்லை. [இத்தனைக்கும் குணரட்ணவின் ஆய்வுநிறுவனம் கீழேயே, A Center of the S. Rajaratnam School of International Studies என்று போட்டுக்கொள்வது முரண்நகை. சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சராகவிருந்த இராஜரட்ணம் யாழ்ப்பாணத்திலே பிறந்தவர் :-(]. ரோஹான், அவுஸ்ரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு, 2001 செப்ரெம்பர் 11 இன் பின்னால், விடுதலைப்புலிகள்தான் உலகவர்த்தமையத்தினைத் தாக்கியிருக்கலாம் என்று கொடுத்த வல்லுநர் செவ்வி புகழ் வாய்ந்தது :-) இணையத்திலே sangam.org, tamilnation.org இவற்றிலே தேடினால் ரோஹான் குணரட்ன பற்றி, ஈழத்தமிழ்ச்சார்புள்ளவர்களின் கட்டுரைகளைக் காணலாம். சச்சி ஸ்ரீகாந்தா, பிரையன் செனவிரட்னா, தங்கவேலு (இவரின் கருத்துகளைக் கொஞ்சம் நிதானமாகத்தான் சரிபிழை பார்த்து ஆயவேண்டும்) ஆகியோரின் கட்டுரைகள்.

இதிலே சுவராஸ்யமான விடயமென்னவென்றால், International Centre for Political Violence and Terrorism Research இலே தேடியபோது, மேற்கண்ட செய்தியை இன்னமும் நான் காணவில்லை. சரியாகத் தேடவில்லையோ தெரியாது. ஆனால், சென்ற வாரத்து அறிக்கை ஸ்ரீலங்கா [Weekly Report - Sri lanka 10 – 16 September 2007]என்று ஒரு பகுதியிருக்கின்றது. அதிலே அவ்வாரப்புலனாய்வுச்செய்திகளைத் தயாரிக்க உதவியாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆறு ஆதாரங்களிலே, மூன்று, இந்துவின் முரளீதர ரெட்டிக்காரு சுட்ட கோதுமை ரொட்டி, இரண்டு, இலங்கையின் சண்டே ரைம்ஸ் செய்திகள், ஒன்று தேசியபாதுகாப்புக்கான ஊடகமையத்தின் செய்தி. இப்படியான ஆய்வறிக்கைக்கெல்லாம், ஓர் ஆய்வு மையம் ஒரு கேடு! (இணைய வசதியிருக்கையிலே இதைவிடச் சிறப்பாக, வலை அகழ்வாராய்ச்சி செய்து உன்னத ஆய்வறிக்கை நான் "I Can't Believe It's Not Butter" இலே சுட்டுத்தள்ளுவேனே!) இதிலே, முரளீதர ரெட்டிக்காருவுக்கு ரொட்டிக்கான மாவு யார் கொடுத்தார்கள் (சுடுவதற்கு அண்ணா சாலையிலே அடுப்பமைத்துக் கொடுத்தவரைத்தான் எமக்குத் தெரியுமே!! :-)) என்பதைக் கொஞ்சம் பார்த்தால், திரும்ப கொழும்பிலே பாதுகாப்பு அமைச்சரக, இராணுவ முகாம் வாசல்களிலே போய்நிற்போம். ஐயோ!

இப்படியான வடை ஊசிப்போகமுன்னால் அள்ளி ஸ்ரீனிவாஸ ராகவன், ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் கருத்தினையும் தூவி, வடைக்கறி, Power struggle surfaces in LTTE over successor செய்கிறார். அதை மாலன் தமிழ்ப்படுத்தி, அப்பாவி வேர்னாகுலத்தவர் எமக்கு தந்துகொண்டிருக்கும் அதேவேளையிலே, இன்னோர் நரியைப் பரியாக்கும் அதிசயமும் திருக்கொழும்புப்பெருந்துறையிலே நிகழ்கிறது. ஸ்ரீனிவாஸ ராகவனின் கட்டுரையை ஸ்ரீலங்காவின பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமே அப்படியே, Times of India see a rift in the LTTE Hierarchy என்று செய்தியாகப் போட்டு, வேலிக்கு ஓணானும் ஓணானுக்கு வேலியுமென்ற சுற்றினை முழுதாக்குகின்றது. இந்நகைச்சுவையிலே பெருஞ்சுவை என்னவென்றால், ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இத்தளம் உள்ளடக்கிய இந்த the times of india செய்தியிலே "The Sri Lankan defence ministry wrote on its website last month that eight LTTE tax collectors were executed by its leadership at Vattakachchi in Killinochchi. Pottu Amman, the LTTE intelligence chief and the second-most powerful man after Prabhakaran, had charged the officials with misappropriation of money" என்ற சுயம் சுட்டுஞ்செய்தி அடக்கம். ஆனால், செய்தி முடிந்தபின்னால், கீழே நீலத்திலே, ஓர் அருமையான கருத்து, The Ministry of Defence bears no responsibility for the ideas and opinion expressed by the numerous contributors to the “Opinion Page” of this web site.பாதுகாப்பு அமைச்சுக்கு நாம் என்ன குறைவோ என்று ஸ்ரீலங்கா இராணுவ(வலை)த்தளமும் Prabhakaran in Hot Water Over Son – Times of India அள்ளி அணைத்திருக்கின்றது. அதுவும் நேரடியாக இல்லை; இலங்கையின் சிங்களவலதுசாரித்தனம் கக்கும் The Island, Times of India இலே வந்ததை எடுத்துப்போட, அதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் நன்றி சொல்லி தன் வலைத்தளத்தில் எடுத்துபோட்டிருக்கின்றது. 'இதென்ன குலம் ஒன்று கோத்திரம் வேறென்று ஒன்றுக்குள் ஒன்று மணம் செய்து உறவு பாராட்டும் உத்திபோல?' என்று ஆச்சரியம் தோன்றவில்லை; 'இவர்களின் நகைச்சுவை உணர்ச்சிக்கும் மற்றவர்களை முட்டாள்களாகக் கருதும் திமிருக்கும் எல்லைகளில்லையா?' என்றுதான் தோன்றுகிறது? :-(

ஆக, சாரமாக, ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தரும் செய்திகளை வைத்து, இந்து, கொழும்புச்செய்தித்தாபனங்கள், ஸ்ரீலங்கா அரசுசாரூடகமையங்கள் தரும் செய்திகளை வைத்து ரோஹானின் மையம் வாரக்குறிப்பு வெளியிட, அதையும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சினையும் ஆதாரமாகவைத்து த ரைம்ஸ் ஒப் இந்தியாவுக்காக ஸ்ரீனிவாஸ ராகவன் நாட்குறிப்பு வரைய, அதைத் திரும்பவும் சொந்தப்படுத்துக்கொள்கிறது ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு என்பதாகத்தான் இருப்பை வைத்து, circular reference விளையாட்டு எனக்குத் தோன்றுகின்றது. இதிலே பக்கவாட்டுவிளைவு மாலனின் மொழிபெயர்ப்பு. ஊரை எரிக்கிற அனுமானின் வாலைப் பிடித்து அதிலே எமக்கு நாட்டுநடப்பு வெளிச்சம் காட்டுகிறார். என்னத்தைச் சொல்ல!!

இப்படியான செய்திகளை வாசித்துத் தமிழ்படுத்தும் மாலனுக்கு, வலைப்பதிவிலே மாலன் என்ற பதிவர் சில நாட்களின் முன்னாலே எழுதிய சந்தை தின்னும் ஊடகங்கள் என்ற அருமையான இடுகையைப் பரிந்துரைக்கின்றேன். மிகவும் தெளிவாக, இப்படியான உப்புக் கைக்கொண்டு வாசிக்கவேண்டிய புலனாய்வுச்செய்திகளை நம்புவதிலே (தமிழாக்கி, தமிழ்நாடு சேது மீறி அலையடைத்துப் பெருகும் வேளையென்றும் பாராது பதிவிலே இடுவதெல்லாம் பிறகு வருவது) இருக்கும் சிக்கல்களையும் ஆபத்துகளையும் சொல்லும் கட்டுரை.

மாலன் எதிர்பார்த்தபடியே அவரின் உயிரெழுத்து வார்ப்புருவின்பின்னால், சில ஈழத்தமிழ்க்குஞ்சுகளோ, அல்லது அவை என்று போலி செய்கின்றனவோ எழுதி அவருக்குக் 'கோரம்' சேர்த்திருக்கின்றன. இதைத்தானே எதிர்பார்த்தார், பாலகுமரன் நண்பர்? :-) [நிற்க, மாலனுக்கு ஈழத்தின் யாழ்ப்பாணப்பேச்சுவழக்கு மிகவும் இடறுவதாகவும் அவரவர் அவரவர் நடையிலே பயில்வதே அழகாயிருக்குமென்றும் யாரேனும் சொல்லக்கூடாதா? :-( எனக்கும் அறுபடை ஆறுமுகன் தொடக்கம், வீரபாண்டி ஆறுமுகம் ஊடாக, தீப்பொறி ஆறுமுகம் வரைக்கும் தெரியும். ஆனால், அவர்களைப் போல எல்லாம் சீரியஸா பேச முயற்சி செய்கிறேனா? :-)]

ஆனால், இலங்கையிலிருந்து மாயா போன்று "ஈழத்தமிழர்களும் தந்தை பெரியாரும்" போன்ற அப்பாவித்தனமான பதிவுகளை இடுகின்ற பெரும்பாலான (நானும் ஓரளவுக்கு அடக்கம்) ஈழத்தமிழர்களை காலப்போக்கிலே, இணையவசதிகள் பெற்றபின்னரோ, புலம்பெயர்ந்தபின்னரோ, "தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா நேரடியாக பேசாது என்ற இந்து "ரா"மின் கூற்று உண்மையா?" என்பது போன்ற கட்டுரைகளை எழுதத்தள்ளுவதிலே, மாலன், ராம், சோ, சுப்பிரமணியசுவாமி, இவர்களின் அலைவரிசைகளிலே தமிழ்ச்சேவை நிகழ்த்தும் சிலரே காரணமாகின்றனர் என்பதை இவர்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகின்றார்களோ? :-(

பின்னூட்டங்களைச் சந்தர்ப்பம் கிட்டும்போதுமட்டுமே, அனுமதிக்கமுடியும். எனக்கேதும் பதில் சொல்லத் தேவையிருப்பினுங்கூட, உடனடியாக சில வாரங்களுக்குச் சொல்ல முடியாதிருக்கும்.

- உயிர்முடிந்து மெய் தொடங்க எம் ஆயுத எழுத்தே முதல் :)

எம் வார்ப்புரு

றுளி வெள்ளத்தும் அகான எகென்றிரு(போம்)

Wednesday, September 05, 2007

அஞ்ஞாவாசம்

சில மாதங்கள் அஞ்ஞாவாசக்கட்டாயம். இணையத்தோடு தொடர்ந்து ஊடிழைய அவகாசம் கிடைப்பதரிதாகும் சூழ்நிலை.

யாருடைய பதிவுகளிலேனும் இடப்பட்ட பின்னூட்டங்களின் தொடர்ச்சியான வாதங்களிலே தொடர்ச்சியாக ஈடுபடமுடியாவிட்டுப் போவதற்கு மன்னிக்கவேண்டும். முடிந்தால், மீண்டு(ம்) வரும்போது, தேவைப்படின் தொடரலாம் - முடிக்கவேண்டிய மாலனுக்கான பதில்கள் கொண்ட பதிவுகள்போல.

தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் உடனுக்குடன் பதில் தரமுடியாதிருப்பின், தவறாக எண்ணவேண்டாம். காலம் தாழ்த்தியேனும் பதிலிறுப்பேன்.

புரிந்துகொள்வதற்கு நன்றி.

Monday, September 03, 2007

அடி, அழுகிறேன்; அழு, அடிக்கிறேன்

டோண்டுவின் பதிவிலேயிருந்த ஒரு வசனத்தைப் பிடுங்கிப் போட்ட பதிவு இது.

/இத்தனைக்கும் ரமணி அவர்களும் நானும் மசோகிஸ்ட் என்றுதான் எழுதியுள்ளார்/

பின்னே என்ன டோண்டு அவர்களே?
உங்களைக் குதறுகிறான் என்று சொன்ன நாளிலேயிருந்து எத்தனையோ பேருக்கு இந்தக்குதறல் விழுந்திருக்கின்றது.

இந்தாருங்கள் என் பழைய பதிவுகளிலேயே பாருங்கள்.

2005/06 இலே நீங்கள் அலறியபோது எழுதியது
முப்பது முகமூடிகளாகப் பன்னியன்

அதே காலகட்டத்திலே எனக்கு வந்தது (இதுபோல பலருக்கும்)

2005/05 இலே எனக்கு வந்ததைச் சுட்டி எழுதியவை

வானம், வடிவம், நிழல்
(நீங்கள் வேறு பின்னூட்டமிட்டிருக்கின்றீர்கள்)

டேய் முண்ட கோதி இது தமிழாடா?

-----
அண்மையிலே ச(ட்னி)வ(டை) பதிவு தொடக்கம் ஸ்பெசலு ஆப்பு பதிவுவரை அதே பாணியிலே அர்ச்சனை அவ்வப்போது எனக்கும் நடக்கின்றதுதான். இன்னும் பலருக்கும் நடக்கின்றதுதான். பெருமளவிலே "நாயே குலைத்துக்கொண்டு கிட" என்றிருப்பேன். ஆகமிஞ்சினால், நாய் மாதிரி இரண்டு கடி கொடுப்பேன்.

கீழே இருக்கும் இடுகைக்குமட்டும் 96 பின்னூட்டங்கள் "அன்போடு அழகுதமிழிலே" வந்திருந்தன

2007/07
சின்னப்பெண்ணான...
சிலவற்றை அனுமதித்திருந்தேன்.

அடுத்தும் ச.வ.ப்பதிவு தொல்லைதாங்கமுடியாததால், நேரே ஆள் பெயரும் படமும் போட்டு எழுதியிருந்தேன்; (ஆனால், இதிலே சம்பந்தப்படாத அவரின் மனைவியின் படம் இணையத்திலே வருவதை முற்றாகக் கண்டித்தும் செந்தழல் ரவியின் பதிவிலே எழுதியிருந்தேன்)

2007/08
me, myself & my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கிறீர்கள்?

மேலும், நீங்கள் சொல்வதைக் கேட்டுத்தான் நான் நடக்கின்றேன் என்றும் விழுந்தது அடி பாருங்கள். அதுதான் பெரிய அடி :-)

ராதா ராகவன் பதிவு போனாலும் அதுதான், சட்னிவடை, சதுர்வேதி, அநாநிமஸ் பதிவு போனாலும் அதே அடிதான்.

இப்படியாக ஏதாவது ஒரு மாயாவியின் ங்கொம்மா..பதிவினைத் தமிழ்மணத்திலேயிருந்து அதன் உள்ளடக்கத்துக்காகத் தூக்கினால், அடுத்தநாள் நீங்கள் வேறு ஏதோ நீங்கள் சொன்னதாலேயே அப்படியாக நடந்தது என்பது மாதிரியாகத் தோன்றும்படி பதிவு போட்டுவிடுவீர்கள். அதற்கும் சேர்த்து நான் (இன்னமும் தமிழ்மணத்திலே இருக்கின்றவர்கள் எல்லோரும்) & எங்கம்மா எல்லோரும் அகதி முதல் *தி வரை விலாவாரியாக வாங்கிக்கட்டுவோம். நீங்களும் பங்குக்கு ரெண்டு வாங்கிவிட்டு, அய்யோ பாவமே என்பது மாதிரியாக உங்கள் பதிவுக்கு வருகை தருகின்றவர்களுக்குத் தோன்றப் பதிவினைப் போட்டுவிடுவீர்கள். :-) இதெல்லாம் கொஞ்சமில்லை, மிகவும் ஓவரான பாதிக்கப்பட்டவன் என்ற படமோ .... இல்லை இல்லை... தொலைக்காட்சித் தொடர்காட்சியாகத் தோன்றவில்லையா?)

டோண்டு அவர்களே, மூர்த்தி (மூர்த்திதான்) ச.வ. ஆகப் பின்னூட்டம் எனக்குத் திட்டியபோதும் எவரும் என் ஆதரவுக்கு வந்து "அடிடா நாயை" என்று சொல்லவில்லை; இரவுக்கழுகார் என்பவர்(கள்) தமிழ்மணத்திலேயிருந்து இருவர் விலகியதற்காக நானே காரணமென்று இழிவாக, பொய்யாகத் தாக்கியபோதும், குறிப்பிட்ட இருவரும் "ஆமாம் நண்பர்களே, அதுதான் நடந்தது" என்ற மாதிரி அதுவே உண்மைபோல சத்தமின்றியிருந்தபோதும் (உங்களை மாதிரியான பாதிக்கப்பட்டவன் நான் என்ற நளினமோ தெரியவில்லை :-)) எவருமே என் ஆதரவுக்கு வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் யாரென்று தெரிந்த பெருந்தலகளும் இருக்கின்றார்கள். இப்போது, போலி - டூண்டு screenshots ஆக அவிழ்த்துவிடுவதைப் பார்த்தால், அவை உண்மையானால், இன்னமும் பகிடியாகத்தான் இருக்கும். தனியாளாகத்தான் நின்று தேவைப்பட்ட நேரத்திலே நாய்க்கு நாயென்றும் பேய்க்குப் பேயென்றும் அதே பாணிகளிலிலேயே திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போனேன். அவரரவர்க்குப் பாதித்தபோது, 'அடிடா, புடிடா பெயரிலி.யை' என்றால், சரியான எல்லைக்குள்ளே நின்றுகொண்டே, "புடிடா, அடிடா முருகேசா" என்பேன் முடிந்தது கதை. பொதுவாக யாராவது என்ன நடந்ததென்று தீர்க்கமுயன்றிருந்தால், "தீருங்கள், முடியட்டும்" என்று போயிருந்திருப்பேன். அதைவிட்டுவிட்டு, உங்களை மாதிரி, "பாதிக்கப்பட்டவன் நான்; பாதிக்கப்பட்டவன் நான்" என்றபடியே ஒரு பதிவும் "படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவன் நான்" என்று அடுத்த பதிவும் போட்டு, ஒரே நேரத்திலே வெள்ளநிவாரணமும் வரட்சிநிவாரணமும் எடுக்கமுயன்றால், அதை மாச்சோயிஸ்ட் தந்திரமென்று சொல்லாமல் என்ன செய்வது?

உண்மையிலேயே ஆளை அமுக்கவேண்டுமென்றால், அவனைத் தெரியும் இவனைத் தெரியும் என்று சென்னையிலிருந்து புடுங்கும் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் ஓர் அரசியல்வாதி, ஆட்டுக்குட்டி, அதிகாரவாதி என்று பிடித்து, மடக்குகிற மாதிரியாக மடக்கியிருக்கமுடியாதா? இத்தனை சக்தி வாய்ந்த பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளோடு நேற்றைக்குப் பேசினேன் ஆசாமிகளிரூக்கும் பதிவுலகிலே அவர்களோடு பழக்கம் உள்ள நீங்கள் இதை மனம் வைத்தால், செய்திருக்கமாட்டீர்களா? சும்மா, "பிராது கொடுத்தேன் வாங்குவாரில்லை; பேட்டி கொடுத்தேன் கேட்பாரில்லை" என்றமாதிரி அவ்வப்போது பசியிலே குலைத்துக் கலைக்கும் நாய்க்கு ரொட்டிக்கருகலைக் காட்டி ஏமாற்றினால், இன்னும் பசியோடு கடித்துக்குதறத்தான் செய்யும். :-(

இப்போது செல்லா, குழலி, ரவி ஆகியோரின் வெளிப்படையான காரமான பதிவின்பின்னாலே, ஓரளவு தொல்லை குறையுமென்று பார்த்தால், நீங்கள், "படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்" எம்ஜிஆராக வாய்வீச்சுப் போடுகின்றீர்கள். நிச்சயமாக அடுத்து என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியும். பதிலுக்கு செல்லா, குழலி, ரவி உங்களைக் கண்டிக்க, இப்போது தமிழ்மணத்திலிருந்து நீக்கச் சொல்கிறார்கள். "உங்களுக்கு நீக்கினாலும் வெற்றிதான்; நீக்காவிட்டாலும் வெற்றிதான்" என்று வாதிடக்கூடிய நிலைமை என்று தெரியும். நீக்கினால், "அய்யோ நீக்கிவிட்டார்கள்" என்று அலறுவீர்கள்; நிச்சயமாக, இதனால், தமிழ்மணத்துக்கு ஹிட்லரின் பாசிசசலூட்டும் ஸ்வஸ்திக்காவும் கொடுத்த அன்பர்கள், பார்ப்பனர்/திராவிடர், தேசபக்தர்/தேசவிரோதி பாயாசம், சாம்பார் எல்லாம் கலந்து பையிலே அடைத்து விற்பனை பண்ண, நீங்கள் அமர்ந்து "சண்டையை முடியுங்களடாப்பா, அதுக்கொரு post-war warplan(e) போடுகின்றேன்" என்று அமைதியாக மகரநெடுங்குழைநாதனோடு மகிழ்ச்சியாகத் தானடங்கியிருப்பீர்கள். சரி உங்களைத் தமிழ்மணம் நீக்கவில்லையென்றால், "தமிழ்மணம் என்னைப் புரிந்துகொண்டு, செல்லா/ரவி/குழலி போன்றவர்களின் கருத்துகளை ஏற்காததற்கு நன்றி" என்று ஓர் இஸ்ரேல்-அமெரிக்கா-அரபுநாடு அறிக்கைவிட்டுவிட்டு, ஒரு dickclaimer உம் அடியிலே குஞ்சம் கட்டிவிடுவீர்கள். அப்போது, மற்றப்பக்கத்து அன்பர்கள் உங்களின் விளையாட்டுகளைக் கண்டுகொள்ள நேரமின்றி உணர்ச்சிவசப்பட்டுத்தொடங்குவார்கள். கொஞ்சம் நிதானமாக வாசித்திருந்தால், செல்லாவுக்கு நான் சொன்னது புரிந்திருக்காதா? :-( அவர்களின் உணர்ச்சிவசப்படுதலின் தன்மை உங்களுக்குத் தெரியும். இப்படியாக எந்தப்பக்கத்தாலும் மத்தளத்துக்கு அடி என்பதுபோல, விடாது கருப்பை விலக்கினாலும் அடி நமக்குத்தான், விட்டது சிகப்பை நீக்கினாலும் அடி நமக்குத்தான். இஃதெல்லாம் உங்களுக்குப் புரியாததா?

ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்னவென்று மிகவும் தெளிவாக சில ஆண்டுகளாகப் பதிகின்ற பதிவர்களுக்குத் தெரியும். (தனிப்பட, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நீங்கள் எதையும் சொல்லவில்லை என்பதையும் நான் சொல்லிவிடவேண்டும்). ஆனால், இன்று மிகவும் சரியான நேரம் பார்த்துத்தான் ஸ்விஸிலிருந்து வந்த ஈழத்தமிழர்களின் பெயர்ப்பினைப் பற்றிய இடுகையை இட்டீர்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு (இல்லாமல், எதேச்சையாகவும் நடந்திருக்கலாம்). பார்த்தீர்களானால், ஈழக்குஞ்சுகுருமான்களெல்லாம் தொடர்ச்சியாக, வேலுப்பிள்ளை பிரபாகரனை விலத்திவிட்டு நரசிம்மன் ராகவனைத் தேசியத்தலைவர் ஆக்குகின்ற உச்சக்க்ருதியிலே பின்னூட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன. இஃது உளரீதியிலே மறைமுகமாக செல்லா, குழலி போன்ற இத்தனை நாள் ஈழத்தமிழர்களின் அசைக்கமுடியாத ஆதரவாளர்களானவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் ஈழத்தவர் செய்த ஒரு காயமாக்கும் திட்டமிட்ட நடவடிக்கைதான் என்றே நம்புகிறேன். அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கின்றீர்கள். இதைப் புரிந்துகொள்ள, உங்களைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு அதிக நேரம் தேவையில்லை.

இதனாலேதான் உங்கள் "பாதிக்கப்பட்டவன் நான்" என்ற கவசத்தை - அது பலவீனமல்ல, உங்களுக்கு அது கர்ணகாதுக்குண்டலமேதான்- எண்ணிப் பயமாகவிருக்கின்றது. அதனாலேதான் உங்கள் "மாச்சோயிஸ்ட்" மகிழ்ச்சியை எண்ணி, அதற்கு உணர்ச்சியின் அடிப்படையிலே இடம் கொடுக்கவேண்டாமென்று குழலி, செல்லாவைக் கேட்கின்றேன்/கேட்டேன். மிகுதிப்படி, உங்களின் எழுத்தின் உள்ளடக்கத்தோடு எனக்குப் பொதுவாக ஒப்பில்லாதபோதுங்கூட, உங்கள் பதிவு எவ்விதமான திரட்டியினதும் விதிமுறைகளை மீறியதாக எனக்குத் தோன்றாததால், அது தேன்கூடோ, தமிழ்மணமோ எதுவோ விலக்கப்படக்கூடாதென்பதிலே தனிமனிதனாக என் கருத்து உறுதியாகவிருக்கின்றது. தமிழ்த்திரட்டிகளோ, ஆங்கிலத்திரட்டிகளோ வசைக்கதையைத் தவிர்க்கவென வரையறுத்து எழுதப்பட்டிருக்கின்றனவேயொழிய, வஞ்சகக்கருத்துகளையல்ல என்பதே அடிப்படையான வாதம்.

அவ்வளவுதான். டோண்டு அவர்களே; எனக்கு வேலையிருக்கு; வரட்டா?