Tuesday, March 14, 2006

Sunday, March 12, 2006

அள்ளல் - 3



இடையீடு

சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை.

எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்கப் பலவுண்டு,
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறி வைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலு, கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல; ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று.
(எழுத்து ஆகஸ்டு 62)


முகமூடி

பூச்சிக்கும் வரிப்புலிக்கும்
நச்சுக்கும் வழலைக்கும்
அகம்விட்டுப் புறமுற்றும்
நிரமாற்றம் விளைவித்து
முகமூடி களைந்தணிந்து
களைந்தணிந்து சலித்தோய்ந்து
மனைத்தலைவன் முகமூடி
எடுத்தணிந்து மனையேகி,
குறைபொழுதை நடித்தோட்டி
உடையுடனே முகமூடி
களைந்துவிட்டு வெறுமுகமாய்ப்
படுக்கையில் இருந்தபடி,
பெட்டியிலும் பரணையிலும்
தொட்டியிலும் ஒதுக்கியதைச்
சரிபார்த்துப் பிரித்தொட்டிச்
சுயஉருவை உருவாக்கும்
முயற்சியிலே தடுமாறி
வழிதேடி விழித்திருக்க:
மனைவி படுத்ததை
மேனி உணர்த்தவும்
என்னைச் சிதைக்கும்
பொழுதொரு கூத்தைச்
சொல்லியழ நான்திரும்ப
முந்தியவள் குறைபடிக்கக்
காதலூறும் கணவனின்
பாகமேற்று மயங்கினேன்,
தூக்கத்தில்; இப்படியே
ஆளுமை தேய்ந்துவிடும்
காண்கின்ற வான்நிற
மாய்
(எழுத்து ஜூன் 66)


நிழல்

கம்பி என்று காலிரண்டும்
எம்பி வீழ்ந்ததும், இளித்தது
கம்பி யதன்நிழல்
(எழுத்து அக். 66)


இரு தொழில்

குண்டு விதைத்தேன்
முளைக்க வில்லை

குண்டு விதையல்ல
விதைத்ததும் முளைப்பதற்கு
குண்டு விதையானால்
விதைத்ததும் முளைத்துவிடும்.

துப்பாக்கி நட்டேன்
தளிர்க்கவில்லை.

துப்பாக்கி கொம்பல்ல
நட்டதும் தளிர்ப்பதற்கு
துப்பாக்கி கொம்பானால்
நட்டதும் தளிர்த்துவிடும்.
(எழுத்து மார்ச் 67)


இலக்கியம்

இலக்கியம் என்றால் என்ன என்றேன்;
புலவர் ஒருவர், இதுகூடத் தெரியாதா
இலக்கு கூட்டல் இயந்தான் என்றார்.
(நடை ஏப். 69)


தீர்வு

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல், தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.
(கசடதபற மே 71)

-சி. மணி (1936)


இதுவரை
நூற்றுப்பதினாறு கவிதைகளின் தொகுப்பு
க்ரியா வெளியீடு
அக்டோபர், 1996
192 பக்கங்கள்
படியுரிமை: எஸ். பழனிசாமி

ஆசிரியர் அறிமுகக்குறிப்பு [1996 இல் எழுதப்பட்டது]

சி. மணி (எ) வே. மாலி (எ) எஸ். பழனிசாமி
(1936-)

தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறையும். கவிதைக்காக குமரன் ஆசான் நினைவுப்பரிசும் நிர்வாகம், தொழில்நுட்பத் துறைகளில் மொழிபெயர்ப்புக்காக் (இருமுறை) தமிழ்ப்பல்கலைக்கழகப்பரிசும் பெற்றிருக்கும் சி. மணி, கடந்த பத்து ஆண்டுகளாக அகராதியியலில் ஈடுபட்டிருக்கின்றார். தமிழ்வினைச்சொல் அகராதி ஒன்றை அமெரிக்கத்தமிழ் அறிஞர் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மனுடன் இணைந்து உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு இவருக்கு உண்டு.

பிற எழுத்துகள்: யாப்பும் கவிதையும், செல்வம் என்ற பெயரில்; அலசல் என்ற தலைப்பில் அபத்தநாடகம், ஓலூலூ என்கிற பெயரில் (நடை, ஜனவரி, 1970); தாண்டவநாயகம் என்ற தலைப்பில் நெடுங்கதை, ப. சாமி என்கிற பெயரில் (கணையாழி, மார்ச், ஏப்ரல், 1969).

Friday, March 10, 2006

புலம் - 18




கடந்த இரண்டாண்டுகளாக, குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றவர்களிலே நானும் ஒருவனாக முடிந்திருக்கின்றது; கற்றுக்கொண்டதையெல்லாம் நடைமுறைக்கு எவ்வகையிலே எத்துணை பயன்படுத்துகிறேன் என்பது வேறு விடயம். நண்பனுக்கு இரண்டு குழந்தைகள்; பத்து வயது & எட்டு வயது. சில வாரங்களுக்கு முன்னால், அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். சிறுவர்கள் படுக்கையறையினை ஒட்டிய வரவேற்பறையிலே அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கின்றோம். சிறுவர்களின் அறைக்குள்ளே நிகழும் குத்து வெட்டுக்கள் பாதி திறந்த கதவூடாகத் தெரிகின்றன. கதிரையிலே அமர்ந்திருக்கும் எட்டு வயது கட்டிலிலே படுத்துக்கொண்டிருக்கும் பத்து வயதின் உள்ளங்காலிலே தும்பொன்றை வைத்துச் சேட்டைவிட்டுக்கொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்கான ஆங்கிலக்கதைப்புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருக்கும் பத்து வயது புத்தகத்தின் மேலாகத் தலையை வெளியே எடுக்காமலே உதைந்து கொண்டு, எங்களையும் கடந்து சமையலறைக்குள்ளே வேலை செய்து கொண்டிருக்கும் தாயிடம் ஏனோதானோவென முறைப்பாடு சொல்லிக்கொண்டு வாசிப்பிலேயே ஈர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. வரவேற்பறையிலே இருக்கும் தந்தைக்கே இந்த கஜேந்திரனின் 'அபயம்!' கேட்க வாய்ப்பில்லை; அம்மாவினைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. தன்னை முழுக்க ஆழமாக எடுத்துக்கொள்ளாமல், புத்தகத்திலேயே மூழ்கியிருந்து, ஏனோ தானோவென வாசிக்கிறபோக்கிலே அவ்வப்போது ஒரு வரி முறைப்பாடிடும் அண்ணனின் அலட்சியம் தம்பியின் 'நான்' இனை நிறையத் தாக்கியிருக்கவேண்டும். சின்ன கம்பித்துண்டையெடுத்து, அண்ணனின் உள்ளங்காலிலே சுருக்கென்று குத்திவிட்டு, அவன் பதைத்து ஆத்திரத்தோடும் நோவோடும் எழமுன்னரே, தான் பாய்ந்து என்னையும் கடந்து தந்தையிடம் முறைப்பாடு சொல்லிக்கொண்டே தாயிடம் ஓடிப்போய்ப் பாதுகாப்பாக நின்று கொண்டு, "மேசையிலேயிருந்து படித்துக்கொண்டிருக்கும் என்னை அண்ணா பிடரியிலே தட்டுகிறான்" என்ற வகையிலே குற்றசாட்டினை முன்வைக்க, தாய் பின்னாலே ஆத்திரத்தோடு ஓடி வரும் அண்ணனுக்கு அவன் சமையலறையை வந்தடைய முன்னரே அவனுடைய தம்பியைத் தட்டும் அநியாயம் குறித்து ஏசத்தொடங்கினார். தந்தைக்கு இந்தக்கூத்தும் எவன் என்ன செய்திருப்பான் என்பதும் ஓரளவுக்குத் தெரியுமென்பதால், என்னைப் பார்த்துச் சிரிப்பொன்றை வீசுகிறான். பிறகு, நான் தாயிடம் விடயத்தைச் சொன்னதும் தம்பிக்காரன் என்னைப் பொய்யனென்றதும் பின்னால், இரண்டுநாட்கள் என்னைக் கண்டும் முகத்தினைத் திருப்பிக்கொண்டு திரிந்ததும் இங்கே தேவையில்லாத பின்கதைச்சுருக்கம். ஆனால், இந்த அண்ணன் நிலையிலே என்னைச் சிலர் தள்ளி தம்பிக்காரன்போல தாயிடம் ஓடியதுவரை இணையத்திலே நடந்தது கற்றுக்கொண்டால் மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தவேண்டுமென்பதையும் நினைவூட்டியிருக்கின்றது.

முச்சந்தி, நாற்சந்தியிலே நாலு கூட்டாளிகளோடு குந்திக்கொண்டு, நாவாற்கிளை நட்டு போகிற வருகின்றவர்களைச் சண்டைக்கிழுத்துக்கொண்டு, இவர்களோடு ஏன் வம்பு என்று போகின்றவர்களை "கிளையைச் சாய்க்கமுடியாது எம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓடுகின்றவர்களைக் கவனியுங்கள்" என்று யேசுகாலயூதக்குருக்கள்போல முச்சந்திப்பிரசங்கம் செய்கின்றவர்களுக்கு முன்னைச் சண்டித்தனத்தோடோ அல்லது நிதானமாகவோ நின்று பதில் சொல்லலாமா என்று எண்ணும்போது, "Just Ignore them; It's not worth your time and effort" என்று சொல்லும் நண்பர்கள் ஒரு பக்கம்; "இதுதான் கடைசிமுறை; இதுதான் கடைசிமுறை" என்று கூற்று வெளியிட்டுக்கொண்டு, ஏனோதானோவென ஓரிரு தடவைகள் எழுதியிருக்கவேண்டுமா என்ற சங்கடம் இன்னொரு புறம் இருக்கட்டும்; ஏனோதானோவென ஏன் எழுத வேண்டுமென்றால், ஏனோவுக்குக் காரணம் நேரக்குறை; தானோவுக்குக் காரணம் வீண்வம்புக்கிழுக்கும்போது, வராதுபோகின்றவர்களை இழுப்பதற்கு மிகவும் இலகுவான வழி, உண்மைக்குப் புறம்பானதொன்றை எழுதுதலும் உள்ளதைத் திரித்து எழுதுதலும். இப்படியான பொழுதிலே, சொல்லப்பட்டதை மற்றவர்கள் முன்னாலே மறுதலிக்கவேனும் வந்தாகவேண்டிய பின்தள்ளுதல்நிலை இருக்கின்றது. வராவிட்டால், இதுதான் எதிர்க்கட்சிக்காரர் சொல்வதே "மௌனம் சம்மதம்" என்பதான புளித்தகூற்றுபாற்பட்டு மெய் என்றாகிப்போம். வந்து பதில் சொன்னால், அதிலிருந்து இன்னும் மயில் இராவணர்கள் முளைப்பு. இது Catch 22 சிக்கலின் ஒருவகை நிலை.

அதனால், கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படுகின்றது; குறிப்பாக, கணிசமான மக்கள் நிகழ்வுகளைக் அரைகுறையாகப் புரிந்துகொண்ட நிலையிலே - குறிப்பாக, காலவொழுங்கிலே புரிந்து கொளளமுடியாத அவசரத்திலே- "சட்டம், நீதி, நெறி, நாட்டுப்பற்று, பாதுகாப்பு" போன்ற பதங்களையும் "பெரியார்களின் சகவாசம்" போன்ற உசாத்துணைகளையும் கண்டவுடன் புல்லரித்துப் போய், அப்பதங்களைப் பயன்படுத்தி உசாத்துணை அஸ்திரங்களை செலுத்துவார்க்குத் தம் வாக்குகளை இட்டுவிடும் அபாயநிலை இருக்கின்றது. அந்நிலையிலே கடைசிக்கும் கடைசி கடைத்தேற வேண்டியதாகின்றது. "அரசுவன்முறைக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டுகிறவன் எல்லாம் பயங்கரவாதி" என்ற ஆட்சித்தலைவர் கருத்தை நெறிநம்பிக்கையிலே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, தர்ம அடி போடும் காலமும் களமும் சூழலும் நமது. நமக்குப் பிடித்த உன்னத இலக்கியவாதியினை தம் நண்பராய் மேற்கோள் காட்டிச் சின்னதாய்க் குளறும் (குறளும்?) சொல்கிறவர் சொல்வதுதான் உண்மையாகலாமென்ற ஊக்கி வேறு இந்தக் கரைசலுள்ளே ஊற்றப்படும். இந்நிலையிலே, கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படுகின்றது - கிண்டல் தவிர்த்து கொஞ்சம் நிதானமாகவும் ஆனால், சுருக்கமாகவும்.

[என்னோடு சேர்த்து சுழற்றி இன்னும் என் சீடர்கள் குருமார்கள் என்று அவர்கள் சாத்தியிருக்கும் நண்பர்கள் தாம் பதில் தர வேண்டிய அவசியம் இருக்கின்றதென எண்ணினால், வேண்டியவற்றினைத் தரும் சிந்தையும் ஆற்றலும் சுயமும் உள்ளவர்களென்று எனக்குத் தெரியும். அதனால், அவர்களுக்காக நானும் எனக்காக அவர்களும் பதில் தர வேண்டிய ஆட்டுமந்தைத்தனம் இங்கே அவசியப்படவில்லை. மேலும், பி.கே.சிவகுமார், முகமூடி, குசும்பன் ஆகிய மும்மூர்த்திகளின் உரைகளுக்கான இணைப்புகளை நான் தரப்போவதில்லை. பி.கே.சிவகுமார், குசும்பன் குறித்து கிஞ்சித்த மரியாதையும் எனக்கில்லை - இவர்களுக்கு முகமூடி பரவாயில்லை; அவர்களுக்கும் அப்படியே என்னைக் குறித்த 'சிறப்பான மரியாதை' இருக்குமென முழுநம்பிக்கை உண்டு. இந்தப் பதிலெழுதுகை மீதிப்பதிவர்களுக்கு என் பக்கத்தினைத் தெளிவு படுத்த வேண்டிய நிலைக்கு அநாவசியத்துக்கு என்னைத் தள்ளி இவர்களால் என் மீது திணிக்கப்பட்டதொன்று. அதனால், மீதிப்பதிவர்களினைக் கனம் பண்ணும் விதமாக இப்பிரச்சனை குறித்து அவர்களுக்கு என்னைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையாக இப்பதிவிருப்பினுங்கூட, இம்மும்மூர்த்திகளின் இணைப்புகளை நானாக என் பதிவிலே சேர்த்துக்கொண்டு இம்மூவர்க்கென எதுவித அங்கீகாரத்தினையும் தரப்போவதில்லை. உசாத்துணைக்குப் பயன்படும் மீதியான இணைப்புகளை நேரம் கிடைக்கும்போது, தேடி வேண்டியவிடங்களிலே இணைத்துக்கொள்வேன்]

இப்போது என் மீது பி.கே.சிவக்குமார், முகமூடி, குசும்பன் ஆகிய மூவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளாக எனக்குத் தென்படுகின்றவற்றினை இங்கே தந்துவிடுகின்றேன். இத்தாலிக்கிலே இருப்பவை அவரவர் வார்த்தைகள். இவற்றினைத் தவிர, மேற்கூறிய பதிவுகளில் ஆங்கங்காங்கே பெயரில்லாமலே பெயரிலியைத் தாக்கிய உள்ளீடுகளை விட்டுவிட்டேன்.

பி. கே. சிவக்குமார்:
1. சும்மா இருக்கும் என்னையும் என் கருத்துகளையும் வரம்பு மீறித் தாக்குகின்றார்கள். பெயரிலி உள்ளடங்கித் திரித்து வெளியிடுகின்றார்கள். நான் சட்டரீதியிலே நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"பொதுமக்களுக்கு. இது ஒரு தொடக்கம்தான். இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. நானும் என் கருத்துகளும் எப்படித் தாக்கப்படுகின்றன என்பதை முன்வைத்து அந்த ஆதாரங்கள் வெளிவருவதோ, சட்டத்தின் துணையை நான் நாடுவதோ நடக்கும். என்னைப் போன்ற எதிலும் சட்டத்துக்குட்பட்டு நடக்க விரும்புகிறவர்களுக்கு ஆபத்து என்று வரும்போது சட்டத்தின் துணையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதைப் பற்றி விமர்சிக்கிற வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கட்டும்."

ஆதாரமே இல்லாமல், சிவகுமாரைப் பற்றிச் பெயரிலிகளும் என்னால் நீக்கப்பட்ட பெயர்களும்! வரம்புமீறி எழுதுவதைப் பற்றியெல்லாம் "திரிக்காதீர்கள்" என்று நீங்கள் எங்கும் எழுதியிருந்தால் தயவுசெய்து என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.


2. பெயரில்லாமல் / வேறுபெயர்களிலே எழுதுகின்றவர்கள் குறித்து அவருடைய கருத்து

3. ராம்வோச்சர் என்ற பெயரிலே களவும் கையுமாகப் பிடிபட்ட பெயரிலி +

"வாசகர்களே, ஈழநாதனின் அடுத்த பதிலில் மேலே இருக்கிற கருத்துகளில் ஒன்றோ, அல்லது மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் தலையும் புரியாத வாலும் புரியாத ஓர் ஆயிரம் விஷயங்கள், சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், எதிராளி எழுதுகிற பத்திரிகைகள் ஆகியவற்றைக் பிசைந்து கலந்தடித்து வறட்டி ஒட்டிப் பின் வறட்டிக் காய்ந்துபோனதும் (சிலமணி நேரங்களில் அல்லது சில நாட்களில் என்று வறட்டி காய்வது பாஸ்டனின் அன்றைய தட்பவெப்பத்தைப் பொருத்தது. :-) ), நீக்கிவிட்டு அதன்மூலம் வாசகரைத் தன்வயப்படுத்தி விட்டோ ம் என்று நம்பிவிடுகிற அண்ணன் பெயரிலியின் டெக்னிக்குடனோ ஈழநாதன் எழுதினால், நம் அனைவரையும் அந்த இறைவன் காப்பாற்றட்டும்!

4. கணியிணைமுகவரி எடுத்துப்போட்டது பற்றிக் கடிந்தோ கிண்டலாகவோ பேசியிருக்கின்றார்

"விழுமியக் காவலர்கள் (நீங்கள் இல்லை), பெயரிலி ஐ.பி.களை எடுத்துப் போட்டு (சம்பந்தமே இல்லாமல்) படம் காட்டியபோது, பெயரிலி பழைய பூதங்களைத் தோண்டியெடுத்திருக்கிறார் என்று புளகாங்கிதமடைந்தவர்கள் மீண்டு வருகிறார்கள். :-) "

கடந்த ஆறேழு மாதங்களாக நான் எழுதிப் பதிவுகளே போட்டதில்லையெனலாம். இச்சிக்கல்களெல்லாம் தொடங்கமுன்னால், கடைசியாக தை பிறந்தபோது அது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதன் முன்னால், இந்து ராமுக்கு விருது கிட்டியது குறித்து நவம்பர் 19, 2005 இலே பதிவிட்டிருக்கின்றேன். ராம்வோச்சரிலே மீண்டும் வலுக்கட்டாயத்தின்பேரிலே பி. கே. சிவக்குமார், குசும்பன் இட்ட பதிவுகளின் விளைவாகவும் ஒக்ரோபர் மூன்றாம் வாரத்திலே பதிவுகள் போட்டிருக்கிறேன் (ராம்வோச்சர் = -/பெயரிலி. என்று தெரியாதவர்கள் கண்டுகொள்ளவும் ;-)) மிகுதிப்படி படங்களை அனுப்புதல்களும் பழையனவற்றினை மீள்சுழற்சி செய்தலுமாகவே நேரநெருக்கடியினால் இருந்திருக்கின்றேன். இப்படியாக இருந்த நான் பெப்ருவரி மாதத்திலேதான் (இப்படியாக ஒதுங்கியிருந்ததையும்சுட்டிக் காட்டி) பதிவு போட வேண்டிய தேவையை குசும்பன் ஏற்படுத்தினார். குசும்பனின் என் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களும் அவருடைய பதிவுகளின் நாகரீகமும் பி. கே. சிவகுமாரை "இன்றைக்கு இணையத்தில் - உங்கள் பாஷையில் உங்களுக்குப் புரியும்படி பேசவும் உங்கள் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி உங்களுக்குப் பதில் சொல்லவும், ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பி அடித்தார்களே - அப்படித் திருப்பி அடிக்கவும் பலர் வந்துவிட்டனர். முகமூடி, குசும்பன், இட்லி வடை, ரஜினி ராம்கி, ஞானபீடம் உள்ளிட்ட மிகப் பலர். அவர்கள் உங்களைப் போன்ற கருத்துடையோரை வறுத்தெடுப்பதை நானும் வேடிக்கைப் (தங்கமணி KGP என்றெழுதியது வேடிக்கைப் பார்க்கப்பட்டதா வேடிக்கை பார்க்கப்பட்டதாவெனத் தெரியவில்லை :-() பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் தம்பி. அப்படிப் பலரும் இப்போது உங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்திருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பொருமுகிறது. எனக்கோ, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற இயற்கையின் நியதையைச் சொல்கிறது" என்று சொல்ல வைத்திருப்பின், மற்றைய நாகரீகமில்லாத பதிவர்களை மட்டும் ஏன் சுட்டவேண்டுமென நான் கேட்கப்போவதில்லை. ஏனெனில், எனக்கும் சிவக்குமாருக்குமான தனிப்பட்ட தகராறுகள் 2004 இலேயே இருக்கின்றன என்றுதான் என் பழைய பதிவுகள் சுட்டுகிறன. திண்ணையிலே இந்துத்துவா குறித்த எதிர்ப்பினைச் சுட்ட ஆசாரகீனன் என்பவரோடு சேரச் சுட்டியதற்குச் சிவக்குமார் அளித்த பதில் "Thats a good point Aachara Kiinan. I wont be surprised if Salman Rushdie, Thaslima Nasreen, Irshad Manji, Asra Nomani and Tariq Ali etc were branded as "Hindutuvaists" by our friend Ramanitharan who looks things at its entirety I am just praying people (i am neither agnostic nor athiest) wont interpret him based on everything he says becos then he will be in deep trouble. Becos people can easily brand him as 1.) Anti Brahmin, 2.) Anti India, 3.) Pro LTTE, 4) Anti Women, 5) Pro Taliban, 6) Anti Democratic and in so many other categories if we take into entirety whatever he says. AK, I think your efforts and time are better spent on your other works than answering such remarks.PK Sivakumar Homepage 05.03.04 - 6:09 pm " இதற்கு நான் எழுதிய விளக்கங்கள் ஒருபுறமிருக்கட்டும்.

தவிர, 'என் மூக்கு' சுந்தரராஜனின் (தற்போது) நீக்கப்பட்ட பதிவிலே, பலருடன் குறிப்பாக இவருடனும் வந்தியத்தேவன் என்பவருடனும் (இவருடைய பெயர் ஏன் இங்கே என்று பார்த்திபன் கனவு வாசித்தவர்கள், படத்திலே ரங்கராவைப் பார்த்தவர்கள் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள்) "கோழிக்குப் பின் முட்டையா? முட்டைக்குப் பின் கோழியா?" வகையிலே நடைபெற்ற "ஐபிகேஎப் அட்டூழியங்கள் முன்னாலா? ராஜீவ் கொலை முன்னாலா?" வாக்குவாதங்கள் குறித்தும் வாசித்தவர்களுக்கு இப்போது சிவக்குமார், குசும்பன் ஆகியோரின் கருத்துகள் ஏன் என் மீது திட்டமாக நடக்கின்றதென்பது குறித்து ஆச்சரியமிருக்கப்போவதில்லை. இந்த கோழி-முட்டை விவாதத்தின்பின்னால், விடுதலைப்புலிகள் செய்ததாகக் கருதிக்கொண்டதெல்லாவற்றுக்கும் என்னைக் குற்றஞ்சாட்டி என் பதிவுகளிலே வந்த முகமற்ற பின்னூட்டங்களை இட்டார்தம் முக வரி தெரியாதலால் விட்டுவிடுவோம். ஈழ ஆதரவாளன் என்பதைப் புலியாதரவாளன் என்பதாக இணைத்துக் காட்டுவதிலே "சட்டம், ஒழுங்கு" குறித்து சட்டமிடப்பட்ட நெறிக்கோவைக்குள்ளே மூளையைக் கட்டிக் கவலைப்படும் வாசகர்களிடம் பொதுமக்களிடம் இலகுவிலே வெற்றி பெற்றுவிடலாம்.

வேறுபெயரிலேயெழுதுகின்றவர்கள் தொடக்கம் பெயரில்லாமலே எழுதுகின்றவர்கள் குறித்து எனக்கேதும் ஆட்சேபணையில்லை. பத்துப்பதினொரு ஆண்டுகளாக soc.culture.tamil, தமிழிணையம் காலம் தொடக்கம் நிறையப்பேரிலே எழுதியிருக்கின்றேன். ஒன்று, இலங்கை அரசியல் குறித்து அமெரிக்கா வாழும் இந்தியர்கள் மிக இலகுவாக இலங்கை-இந்திய அரசு நிலைப்பாட்டினை ஒட்டிச் சொந்தப்பெயரிலே எழுதலாம். ஆனால், வெட்டி எந்தத்தமிழரும் எந்தநாட்டிலிருந்தாலும் எழுதமுடியாது. அந்தவகையிலே, -/பெயரிலி. போன்றோர் அரசியல் குறித்து எந்தவகையிலே எழுதினாலும் அதற்கும் ஆளைச் சொன்னால் உயிர்போவதால் ஆசாரகீனனாய் எழுதுகின்றவருக்குமிடையே என்ன வித்தியாசமென்ற வினா இதுவரை பி. கே. சிவக்குமார் எழுப்பினாரா எனத் தெரியவில்லை. அடுத்தது, படைப்புகள், விமர்சனங்களைச் சொந்தப்பெயரிலே வைக்கும்போது, ஏற்படும் நடைமுறைச்சிக்கல்கள் (உ+ம்: ஹரன்பிரசன்னாவின் 'இறங்குமுகம்' கதையினை அவர் இவர்தான் என்று தெரியாதிருப்பின், அஃது ஈழத்தவர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும்). குசும்பன், முகமூடி தொடக்கம் எவர் எதையெழுதினாலும் ஆட்சேபிக்காத சிவக்குமார் This-is-not-a spam என்று எழுதினால் ஆட்சேபணை செய்ததும் கணியிணைமுகவரியை எடுத்துப்போட்டு ராம்வோச்சர்தான் This-is-not-a-spam என்று பெருங்கட்டுரை வடித்ததும் நிகழ்ந்தது.

தமிழ்மணத்திலிருந்து குசும்பன் விலக்கப்பட்டபோது, தன் பதிவு ஏன் விலக்கப்பட்டது என தன் பதிவிலே கேட்டிருந்தார். அதையே முகமூடியும் தொடர்ச்சியாகக் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து "ஏன் சில பதிவுகள் விலக்கப்பட்டன?" என்ற கேள்வியைப் பி. கே. சிவக்குமார் காசியிடமும் கேட்டிருந்தார். அதற்கு This-is-not-a-spam என்ற பெயரிலே கேட்டதும் தொடர்ந்ததும் நிகழ்ந்தது. this-is-not-a-spam கேட்ட சில வரிகள் இவை: "காசி. குசும்பனுடைய கடைசி பதிவு சந்திரமதியினுடைய பதிவுகளைக் கிண்டல் செய்வதாக இருந்தது. அதன்பின்னாலேயே இது நீக்குப்பட்டதோ என்ற எண்ணத்திலேயே மேற்கட்ட கேள்வி வந்திருக்கின்றதெனத் தோன்றுகின்றது. சந்திரமதி ஓர் ஆரம்ப உறுப்பினராக இருந்து தொடக்கிய மரத்தடியிலிருந்து அவரை விலகும்வண்ணம் உள்நுழைந்த அமீனாக்களுக்கு இப்படியான சந்தேகங்கள் வழக்கம்போல நியாயம் தர்மம் நீதிப்போர்வைகளின் அடிப்படையிலே எழுவது வியப்பில்லை. நீதியின் பெயரினாலே நானும் முகமூடியும் கேட்கிறோம்: "எதற்காக குசும்பனின் பதிவு நீக்கப்பட்டது?". இடையிலே நுழைந்த மூன்றாம் ஆள் ஒருவர் this-is-not-a-spam இன் பெயரைத் தான் பயன்படுத்திக்கொண்டு பி. கே. சிவக்குமாரோடு தனது துவந்த அசரீரியுத்தத்தைத் நடத்திக்கொண்டார். அவர் அப்படியாகப் பயன்படுத்துகின்றார் என்று original this-is-not-a-spam என்றபெயரிலே சுட்டிக்காட்டவேண்டியதாகவும் வந்துமுடிந்தது. மரத்தடியிலே நிகழ்ந்தவை குறித்து கட்டங்கட்டமாக நான் அறிந்தது குறித்து விபரிப்பது இங்கே அநாவசியம் (ஆரம்பக்கட்டத்திலே, இகாரஸ் பிரகாஷிடம் விஷயம் தெரியாமல், இரு கூட்டணிகள் குறித்து எழுதி நான் வாங்கிக்கட்டிக்கொண்டதும் இதில் அடக்கம். இந்த மரத்தடி-திண்ணை-ராயர் க்ளப் புழுப்பேணியைத் திறந்து ஊர விடுவதுதான், கடைசியாக நான் விரும்புவது என்பதால், அதை விட்டுவிடுகிறேன்). ஆனால், எத்தனையோ பதிவுகள் நீக்கப்பட்டபோது (என்னுடைய ஒரு பதிவும் உட்பட்டு) பேசாத பி. கே. சிவக்குமார், குசும்பனின் பதிவு சந்திரமதியினைக் கிண்டல் செய்து வந்த காலகட்டத்திலே நீக்கப்பட்டவுடன் கேள்வி கேட்டது வியப்புக்குரியதல்ல. சொந்தப்பெயரிலே இது பற்றிக் குறிக்கப்பட்டிருந்தால், கேட்கப்பட்டிருந்தால், சிவக்குமாருடனான கேள்வி இலகுவாக கேட்டவரின் மீது திருப்பப்பட்டிருக்கும்

அதனாலேயே this-is-not-a-spam பயன்படுத்தவேண்டிய அவசியமேற்பட்டது. காசி அவருடைய பதிவினை அமைத்திருந்தவிதத்திலே கொஞ்சம் கணணி-இணையத்தோடு நாளாந்தம் இயங்கும் எவர்க்கும் (குசும்பன் குறிப்பிட்டு முகமூடி சின்னவன் போன்றோர் பின்னூட்டமிட்ட பதிவிலே சொல்லியிருக்கும், "மோப்பசக்தியில்லாத மாஸாஸூஸெட்ஸ் வாசி" உட்பட்டு) கணியிணைமுகவரி அறிந்து கொள்வது மிகவும் எளிதானது என்பது தெரியாததல்ல. "anti-democratic, anti-brahmin, anti-indian, anti-women, pro-ltte, pro-taleban" குற்றச்சாட்டுகள் முன்வைப்பது முதல், என் பதிவிலே சில பெண்பதிவாளர்கள் உட்பட சிலரைக் குறிவைத்து "நாய்" என்பதை விடவும் மோசமாக உறுப்புகள் சொல்லிப் பெயரில்லாதவர்கள் பின்னூட்டமிட்டபோது கண்டிக்காத/கண்டுகொள்ளாதவர்களுக்கு மேற்படியான வரிகள் மிகவும் குற்றச்சாட்டுகளாகத் தெரிந்தது வியப்புத்தான்.

இங்கே சுட்டவேண்டியதொன்று. காசி தமிழ்மணத்திலே பதிவுகள் நீக்குவது குறித்து -குசும்பனின் பதிவு உட்பட நான் சார்பு-மாற்றுக்கருத்துகளோடு இட்ட பதிவினை முகமூடி வந்து என் பதிவிலே பாராட்டிப் போனது நிகழ்ந்ததும் இதே சமயத்திலேதான்.

இத்தனைக்கும் பிறகு ராம்வோச்சரின் கணியிணைமுகவரியென பி. கே. சிவகுமார் வெளிட்டபின், இப்படியான மோப்பசக்திவல்லமை சுட்டிக்காட்ட, மோப்பசக்தி குறித்த பதிவிலே ஒப்பமிட்டார் உட்பட ஐபி விவகாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு குசும்பன், முகமூடி, பி. கே. சிவக்குமார், சின்னவன் ஆகியோருடைய கணியிணைமுகவரி சுட்டவேண்டியதாகிற்று. பாய்ந்தடித்து முகமூடி "இது முறையல்ல; விலக்குவீர்" என்றார். அவர் முறையல்ல என்றது மாசாசூசெட்டு மோப்பசக்தியை அல்ல என்பதைக் கண்டுகொள்ளவேண்டும். அப்பதிவு விலக்கப்பட்டது மட்டுமல்ல, அது சம்பந்தப்பட்ட நான்கு பதிவுகளுமே விலக்கப்பட்டன. இதையெல்லாம் புதைத்துவிட்டு அண்மையிலே, "வழக்கம்போல போட்ட பதிவினை விலக்கிவிட்டதாக" முகமூடி ஒரு பதிவு போட்டார். அந்நுணல்நாக்குறிப்பின் காரணமாக, மீண்டும் அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேலே கூறியதுபோல அண்மைக்காலத்திலே நான் ஏதும் எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு திரும்ப எழுதத்தொடங்கிய குசும்பன் நகைச்சுவை என்ற பெயரிலே தொடர்ந்து என்னைத் தாக்கிக்கொண்டே வருகின்றார். அது குறித்து நான் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமென எவரும் இதுவரை (இலவச)ஆலோசனை சொல்லவில்லை. மேலும், குசும்பன் அவ்வாறு தாக்குவதிலே எனக்கும் ஏதும் ஆட்சேபணையில்லை. பன்னிரண்டு ஆண்டுத்தடிப்பு எருமைத்தோல் இணையத்திலே எனக்குப் பூத்திருக்கின்றது. நானும் தாக்குதல் என்ற பெயரிலே கிண்டலைச் செய்திருக்கிறேன்; கிண்டல் என்ற பெயரிலே தாக்குதலையும் செய்திருக்கிறேன். ஆனால், குசும்பனுக்கும் எனக்கும் பொதுவான நண்பரோடு போகிற போக்கிலே சொன்ன விஷயத்தினை கிண்டல் நீட்டி அவர் முழக்கிச் செய்திருந்தார். அதே நேரத்திலே, முகமூடி எதுவும் அவரோடு அவர் பதிவிலே பேசாத என்னைக் குறித்து மோடி என்றொரு பதத்தினை முன்னிட்டு, மோடியைப் பயன்படுத்துகின்றவர்கள், ராம்வோச்சர், மார்டன்கேர்ள், அப்டிப்போடு என்ற தோரணையிலே பேசி ஆகவே மூவரும் ஒருவரோ என்ற வகையிலே ஒரு பதிவிட்டிருந்தார். (இடையிலே சன்னாசியும் பெயரிலியும் டெம்ப்ளேட் கவிதைகள், கார்பன்காப்பி கதைகள் எழுதாமல் தமக்கும் புரியாமல் எழுதுவதால், இவரே அவரு அவரே சுவரு என்ற ரேஞ்சிலே சில முன்வைப்புகளும் கூடவே சன்னாசி, பெயரிலி இருவருடைய தொழிற்றளங்களின் இணைப்புகளும் சின்னவன் உட்பட ஓரிருவரின் பதிவுகளிலே பெயரின்றி இணைக்கப்பட்டிருந்தன). இவை எல்லாவற்றுமாக ஒரு பதிவினை பெப்ருவரி 24 இலே இட்டிருந்தேன். அதிலே குறிப்பிட்டிருந்தவை இவை:

முகமூடிக்கு
"இப்ப முகமூடி பதிவிலை காலங்காலத்தாலை இழுபட்டதால, ஒரு மணத்தியாலம் இங்கை அநியாயமாப் போச்சு. மொடேர்ன் கேள் வேற அப்பப்ப புளொக்க ஆளுக்காள் நான்தான் மூக்கிலை சளி ஒழுகிறதைப் பதிவு செய்யிறனெண்டு சீறிக்கொண்டு நிக்கினம். ஒருக்கால் ரெண்டு தரக்கா, நானில்லையெண்டு சொல்லலாம். அதுக்குமேலை உதுக்கு ஒண்டும் நான் செய்ய ஏலாது. நானெண்டால், புரூப்பை காட்டு இல்லையெண்டால், என்ரை பெயரிலை உன்ரை மூக்கைத் தயவு செய்து நுழைக்காதையெண்டு மட்டும் கேக்கலாம். அதுக்குமேலை நானென்ன செய்யலாம்? மொடேன்கேளோட ஒத்தியெடுப்பு எழுத்தைப் பாராட்டலாம். சன்னாசியையே பேரி/குத்து எண்டு மயங்கின ஒண்டு ரெண்டு ஆக்களுமிருக்கினம். அது சன்னாசி பேரி/குத்துக்குத் தந்த பெருமையெண்டு நன்றி தெரிவிச்சுக்கொள்ளலாம். ஆனா, உதெல்லாம் முகமூடி போட்டு எழுதைக்குள்ளை பெயரில்லாம எழுதேக்குள்ளை குடுக்கவேண்டின விலையெண்டதைக் கண்டு கொண்டு, ஒதுக்கித்தள்ளிக்கொண்டு போகோணும்."

குசும்பனுக்கு
"ராம்வோச்சர் அவற்றை அய்பீ அட்ரசை ஒருக்கால் குடுத்துப்போட்டாரெண்டு (அவற்றை மட்டுமில்லை சைட்கிக், சும்பர்நிசும்பர் எல்லாரிண்டையும்தான் குடுத்தார்). பத்து மைல் தூரத்தில நிக்கிறதைக் குடுக்கோணுமோ எண்டு பரதேசியாருக்குக் கவலை. அய்பீ போட்ட ஞாயித்துக்கிழமை அண்டைக்குக் காலம்பிறயே நோதர்ன் காளிபோனியாவிலயிருக்கிற என்ரை கும்பனி பேரை எடுத்து எப்பிடி நீ திருப்பதியான் நாமம் போடலாமெண்டு ராஜன்ஜீ கூக்குரல் இட்டதாகத் தெரியுது. பிறகு அந்தப்பதிவையே காணம். பிரச்சனை என்னவெண்டால், அல்லது நீதி என்னவெண்டால், வேலியிலை போற பாம்பைப் பிடிச்சு வெறுமன லங்கோட்டுக்குள்ளை போட்டுப்போட்டு குத்துது குடையுது எண்டு குழறக்கூடாது. பொஸ்ரனுக்கு மோப்பசக்தியோ சகதியோ இருக்காவெண்டு பின் ஊட்டடேக்குள்ளை இந்தப்பிரச்சனையை எல்லாம் சகோக்கள் எதிர்பாக்கோணும். பிறகு பத்துமைல் நூறுமைல் டிஸ்ரன்ஸ் குறிச்செல்லாம் ஸ்பேசியல் அனலிசிஸ் நெற்வேர்க் அனலிஸிஸ் செய்யக்கூடாது. முகமூடி திருவண்ணாமலையாகவோ திருமலையாகவோ இருந்தாலுங்கூட எனக்குக் கவலையில்லை. ஆனால், சும்மா இருக்கிறவங்களோட தனகாதையுங்கோ. அவ்வளவுதான் நான் சொல்லுறது. போலி டோண்டு எண்ட பேரிலை ஒருக்கால் காசியின்ரை பதிவிலை எழுதினவர் சும்பர் எண்டு ராம்வோச்சர் அய்பீயோட ஒருக்கால் நிறுவினவர். வேணுமெண்டால், படமாயே அவர் அதைக் காட்டினால், இண்டைக்கு சிங்கப்பூரில மலேசியாவில போலி டோண்டு எண்டு குழறுகிறவை குழம்பிப்போவினம். இது இன்னொரு போலி டோண்டுவோ இல்லை இதுதான் அந்த ரெண்டாவது வாழைப்பழமுமோவெண்டு. வேணுமெண்டால், ஆள் அடையாளத்துக்கு சகோ சென்னை புத்தக்கக்கண்காட்சியில எடுத்த தாடி ஸ்போட்டிங் படம் கூடப் போடலாம். இதெல்லாம் பேரி/குத்துக்கு அநாவசியமும் அநாகரீகமுமாக இருக்குமெண்டு நினைக்கிறன். முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். ஆனால், உதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனம். நாப்பது வயசு கடந்தபிறகு அப்பப்ப அப்பாடா எண்டு கிடக்கிறவனோடை சும்மா சொருகாமல் இருந்தால், நடக்காது."

இங்கே போலி டோண்டு என்ற பெயரிலும் குசும்பன் என்ற பெயரிலும் ஒரே கணியிணைமுகவரியிலிருந்து அஞ்சல்கள் எதிர்மாறான கருத்துகளோடு வந்ததைச் (வார இடைவெளியிலே) சுட்டியிருந்தேன். இதற்குப் பதிலாக, குசும்பன், proxy பயன்படுத்தினால், ஒரே முகவரியோடு வேறு வேறு ஆட்கள் பின்னூட்டமிடலாமென வாதிட்டார். ப்ரொக்ஸி வழங்கிகளுக்கு மேயச் செலவில்லாதபோதும், உள்ளிடும் சேவைக்குப் பணம் கட்டுகிறோமென்றே வைத்துக்கொள்வோம். அப்படியானாலுங்கூட, ஒரே சேவையை தமிழ்ப்பதிவுகளை மேயவும் உள்ளிடவும் எத்தனை பேர் பயன்படுத்துகின்றார்கள்? அவர்களிலே எத்தனை பேருக்கு ஒரே வலைப்பதிவிலே ஒரே முகவரியோடு போடும் வல்லமை வாய்க்கின்றதென நான் நிகழ்தகவின் அடிப்படையிலே எண்ணி வியந்து முடிவினை வாசகர்கள், பொதுமக்கள் எடுத்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். [கவனிக்க: இவர்கள் வசதிக்கே போலி டோண்டு ஒண்டோ இரண்டோ என்று சொன்னதைக்கூட இவர்கள் அ/வசதியாக விட்டுவிடுகின்றார்கள்]

இக்குறிப்பிட்ட என் பதிவின் பின்னூட்டத்திலே ஒரு முகமற்ற நண்பர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படி ஆலோசனை கூறியிருந்தார். அதற்கு "ஆனி வெயிலிலே மாதத்திலே வெக்கையிலும் வேட்கையிலும் பின்புறம் தாளாமற் திரியும் நாய்களின் செயற்பாடுகள்" குறித்துச் சொன்னதும் அப்பின்னூட்டத்தைக் கழற்றிக்கொண்டதும் தொடர்ச்சியாக இவர்களுக்கு குறிப்பாக குசும்பருக்கு தைத்திருக்கின்றது. மாசி மாதத்திலேயே அதை ஆபாசபின்னூட்டமென்று அறிக்கைவிட்டு ஒரு பதிவு. அது சரி "மோப்பசக்தி இல்லாதது", "தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்" என்பதெல்லாம் பாசம்; இது ஆபாசம். அப்படியாகப் பார்த்தால், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, பிரமிள் எல்லோருமே ஆபாசம் பேசுகின்றவர்களே.

அதன் பிறகான பதிவிலே "பத்து மைல்" தொலைவு வந்ததை முகமூடியும் குசும்பனும் பயன்படுத்தியிருந்ததை ஒன்றாக எடுத்துப் போட்டிருந்தேன். வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை. அன்றிலிருந்து இன்றைக்கு வரை எப்படியாக நீ இருவரும் ஒருவரே எனச் சொல்லலாமென இவர்கள் உட்பட இவர்கள் பதிவுகளிலே பின்னூட்டமிடும் வேறு சிலரும் கேட்டபடியேயிருக்கின்றார்கள். ஆச்சரியமென்னவென்றால், இவர் எவருமே தாம் "மோடி" என்ற சொல்லை வைத்து "வோச்சர்=மார்டன்கேர்ள்=அப்டிபோடு" என்றோ அல்லது 'புரியாமல் எழுதுவதை வைத்து' "சன்னாசி=பெயரிலி" என்றோ முடிவு கட்டி அறிக்கைகள் விடும்போதும் அவ்வறிக்கைகளை ஆதரிக்கும்போதும், ஏன் 'பத்து மைல்' என்ற ஒற்றுமைகொண்ட இரு பந்திகளை இணைத்து ஒரு படத்தின்கீழே போட வாசகர்கள்/பொதுமக்கள் முடிவு கட்டுகின்றார்கள் என்று நினைத்துப் பார்த்தார்களா? 'மோடி'யை வாசித்த பொதுமக்கள் 'பத்து மைல்' இனை வேறு எப்படியாகப் புரிந்துகொள்ளச்சொல்கிறீர்கள்? எதிர்பார்க்கின்றீர்கள்?

இடையிலே குசும்பன் என்னோடு பேச வர நான் மறுத்துவிட்டதாக வேறு சொல்லியிருக்கின்றார். இது செய்தி. இவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர், சில மாதங்களுக்கு முன்னால், முன்னொரு முறை இவர் பேச வேண்டுமெனச் சொன்னதாகவும் தான் இடையிலே தலையைக் கொடுக்கவிரும்பவில்லை என்பதாகவும் சொன்னதாகச் சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. வேண்டுமானால், அவரே தெளிவு படுத்திக்கொள்ளலாம்; கொள்ளட்டும்; தெளிந்தால், சொல்லட்டும். தவிர, இவருடன் பேச எனக்கு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. "நீர் உமக்கு WWF ஆட்டத்தின் சமனெனப்படும் அடிப்படை விதி எதுவெனக் கொள்ள விரும்புகின்றீரோ, அதையே எனக்குமான பங்காகப் பிரித்துத் தாரும். எதுவாயினும் ஏற்றுக்கொள்வேன்."

இதுவெல்லாம் இப்படியாக ஓடிக்கொண்டிருக்க, இப்போது என்னவென்றால், பி. கே. சிவகுமார் முகமூடியின் பதிவிலே வருகிறார். இவரைப் பற்றி நான் எதையுமே பதிந்து பேசாத போதிலே, நான் எதுவுமே எழுதாத முகமூடியின் பதிவிலே, ஈழநாதன், (சன்னாசி ஆகியோரிடம்) என் மேலான தன் எழுத்துவன்முறையை இஷ்டப்படி உளறாவாயாய் கட்டவிழ்த்துவிட்டபின்னர், தன் பெயர் கெடுவது திரித்துச் சொல்வதும் பேசி, "சட்டம், ஒழுங்கு"க்குக் கட்டுப்படும் அவரின் தன்மை குறித்தும் மற்றவர்களின் எழுத்து வன்முறை குறித்தும் விரிவுரை ஆற்றியிருக்கின்றார். [அமெரிக்காவிலே திடீர் இலக்கியவாதிகள் ஆவது குறித்து, "முப்பதுநாளிலே இலக்கியவாதம்", "Becoming Tamil Literary Figures for Dummies" என பின்னாலே ஒரு முறை ஆறுதலாக எழுதுகிறேன். இப்போதைக்கு வேண்டாம்.] அவர் விரிவுரையிலே மனுஷ்யபுத்ரன் பெயரிலே நான் பதிவிட்டதாக "அடித்து, மனுஷ்ய புத்திரன் எழுதினதுபோல "சண்டையின் நடுவே துணியைத் தூக்கிக் காட்டுகிற" காரியத்தைச் செய்தது நான் அல்ல தம்பி. பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா" என்று வேறு இல்லாத குற்றச்சாட்டு. இதை நிரூபிக்கட்டும் பார்ப்போம். நிரூபிக்க இயலாதபோது, வேறேதும் விதமாகத் திரித்து அர்த்தம் சொல்லுவாரென நினைக்கிறேன். இந்தப்பதிவில் மட்டுமல்ல, அண்மையில், இதற்கு முன்னரும் ராம்வோச்சரை இழுத்து இன்னொரு பதிவிலே பின்னூட்டியிருந்தார். எதையுமே நான் பேசாதவிடத்து, எனக்குச் அவ_சரமாரி பொழிந்துவிட்டு இவர் நிற்கும் இந்நிலையில், இப்போது சட்டம் ஒழுங்கு பற்றி வாசகர் பொதுமக்களிடம் விரிவுரை ஆற்றவேண்டியது நானா இவரா என்பது குறித்து வாசகர்களும் அவர்கள் அல்லாத பொதுமக்களுமே தீர்மானித்துக்கொள்ளவிட்டுவிடுகிறேன். [இவர் மாலனுடன் ஜெயகாந்தன் குறித்துப் பட்ட பிரச்சனையில், இவர் சார்பாகப் பேசிய சிலரிலே நானும் ரோசாவசந்தும் அடக்கம் என்பது ஒரு புறமிருக்கட்டும், மறுபுறம் கடந்த காலத்தமிழ்ப்பதிவுகளை வாசிக்கும் எவருமே இவர் ரோசாவசந்தினை இத்துணை மதிப்பாகப் பேசுவது குறித்து ரோசாவசந்துடன்கூடி வியந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், ஈழப்பிரச்சனை குறித்து வரும்போது, இவரும் மாலனும் வடக்கும் தெற்குமான ஈழத்தில் நின்று வந்திறங்கும் அனுமார்வாலுக்குக் கூடி நெருப்பு வைத்தால் நான் இவர்களை வாசித்தறிந்தவரையிலே வியப்படையமாட்டேன். இன்னொரு பக்கம், முகமூடி பதிவிலே சன்னாசிக்கு ஆரம்பத்திலே கொடுத்த அர்ச்சனையும் கடைசியிலே முடித்த மங்களமும் அக்மார்க் அவரது தொடுகை. பத்ரியையும் கௌரவித்திருக்கின்றார். "anyinidan Vs. Kamadenu குறித்து சின்னதாக எண்ணிக்கொண்டு என் லெவலிலே இருந்து கொண்டு சிரித்துக்கொண்டிருக்கின்றேன்" என்று நான் எழுதினால் ஆச்சு].

அடுத்ததாக, அவருடைய "...சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், எதிராளி எழுதுகிற பத்திரிகைகள் ஆகியவற்றைக் பிசைந்து கலந்தடித்து வறட்டி ஒட்டிப் பின் வறட்டிக் காய்ந்துபோனதும் (சிலமணி நேரங்களில் அல்லது சில நாட்களில் என்று வறட்டி காய்வது பாஸ்டனின் அன்றைய தட்பவெப்பத்தைப் பொருத்தது. :-) ), நீக்கிவிட்டு அதன்மூலம் வாசகரைத் தன்வயப்படுத்தி விட்டோ ம் என்று நம்பிவிடுகிற அண்ணன் பெயரிலியின் டெக்னிக்குடனோ..." அன்னாரின் இரட்டைத்தன்மைக்கு செவ்வியல் உதாரணம். பிரசன்னாவுக்குப் பதில் சொன்னதுக்கு பாய்ந்து வந்து குத்தியிருக்கின்றாரோ என்று படுகிறது. ஈழநாதனைப் போலச் சுயமாகச் சிந்தித்துச் சுயமாய்ப் பேசும் தம்பியைத் தந்ததற்கு (என் சொல்லைக் கேட்டிருக்கக்கூடிய தம்பியென்றால், பழையன கழிக்க பதிவது தேடி அலையும் அன்னாரைப் போன்றவர்களின் பதிவுகளிலே அதுவும் இன்னார் பின்னூட்டத்தின் பின்னால் பின்னூட்டம் இட்டிருக்கமாட்டார் :-() நன்றி. ஆனால், ஈழநாதனும் சன்னாசியும் பேசியதற்கு குருநாதராக எதையுமே பேசாத என்னைக் காட்டிவிடுகிறவர், ஆரம்பத்திலிருந்தே குருநாதரான (ஒற்றைக்கண் சுக்கிராச்சாரியார் என்றுதான் என்னை இதுவரை நினைத்திருந்தேன்; குரு ஆக்கியிருக்கின்றார்கள். நன்றி) என்னைப் போட்டு அடிக்கும்போது, "சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள்" கொஞ்சம் யோசித்தாரா என்று எனக்கேதும் எதிர்பார்ப்பில்லை. பி. கே. சிவக்குமார் அவர்களை அவர் இணையத்திலே பேசத்தொடங்கிய காலத்திலிருந்து என்னைப்போல உளறுவாயன் இல்லாத உருப்படியான பலருங்கூட அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆக, இவர்கள் மூவரையும் காணும்போது, என் நண்பனின் எட்டுவயதுக்குழந்தை ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. தாய்மார்களே உங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளித்து மகிழுங்கள். தந்தைமார்களே உங்களுக்குட் சிரித்துக்கொண்டிருங்கள். வீட்டுக்கு விருந்தாளிகளாகச் சென்று நடந்ததைக் கண்டவர்களே, நீங்களாச்சு உங்கள் தலைகளாச்சு (ஆனாலும், என்னைச் சிரஸ் சிரைக்கும் கேடிகளாகாமல் என் சிஷ்யகோடிகளாகச் சங்கமிப்பதை வரவேற்கிறேன். அனுமதி இலவசம் :-)).

வாசகர்கள், பொதுமக்களிடம் சுற்றி வாக்கு கேட்பதல்ல என் நோக்கு. குறிப்பிட்ட மிகச்சிலர் தவிர்த்து மீதியானோர் என்னை இன்னார் இப்படிப்பட்டவர் என்று நினைப்பதினால் எனக்கேதும் ஆகப்போவதில்லை. ஆகவே, இங்கே புகழ்பெறும்போட்டிக்கு நான் இவற்றை எழுதவில்லை. ஆனால், எனது பக்கக்கதை ஏற்கனவே என்னை அறிந்து தனிப்பட்டத் தெரிந்த சிலருக்குத் தெரியவேண்டுமென்பதாலும் இனியும் கிடைக்கக்கூடிய சில கருத்தொத்த நண்பர்கள் கிடைக்காமலே போய்விடக்கூடுமென்ற அச்சத்தாலுமே இதைப் பதிவு செய்கிறேன்.

என்னால், இயன்றவரை சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டதால், இந்தப்பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் அப்பால், எதையுமே நான் பேசப்போவதில்லை. ஆனால், வரப்போகும் பதிவுகள் இப்பதிவிலே எங்கே வெட்டி எங்கே ஒட்டித் தொடங்குமென்பதை உணர்வேன்.

உண்மையிலேயே ஆறுமணித்தியாலங்களுக்குமேலாக அநாவசியச்செலவு. அதற்கு இது பயனாகவிருக்க வேண்டுமென்பது விழைவு.


'06 மார்ச், 11 சனி 11:01 கிநிநே.

படம்: வெள்ளைக்காக்கா மல்லாக்கப் பறக்குது

அள்ளல் - 2



என்று

"உங்கள் இலக்கிய எழவெடுப்பு
எப்படி இருக்கு?" என்று
கவிஞரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
"எப்படி எழுதிப்பேர்த்தும்
வரவில்லை வரவில்லை
வரவே இல்லை
என் கவிதையில் கவிதை.
எனவே வருவது வரட்டும் என்று
நடத்திக் கொண்டிருக்கிறேன்
கவிதைக்கு என்று
ஒரு சிறு பத்திரிகை"

"உங்கள் விமர்சனக்கழுத்தறுப்பு
எப்படிப் போகுது?" என்று
விமர்சகரைக் கேட்டேன்.
"எப்படி எழுதிப் பார்த்தும்
வரவில்லை வரவில்லை
வரவே இல்லை
என் விமர்சனத்தில் விமர்சனம்.
எனவே வருவது வரட்டும் என்று
எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஸ்ட்ரக்சுரலிஸத்துக்கு
விளக்கம்"


பிரசுரம்

விலை ரூபாய் 30.
வெளிநாட்டுக்கார
முகமூடி எழுதியது.
உள்நாட்டில் தலை
இல்லாமல் அலையும்
முண்டத்தின் மொழிபெயர்ப்பு.
நூலின் பெயர்:
"இருப்பின் அமைப்பு முதல்
தலையின் இன்மை வரை"


இண்டியன் ரைட்டர் பேட்டி

"இந்தியாவுக்கு இன்று
எது தேவை?
ஹிந்து மதத்தின்
ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதியத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
மதச்சர்பின்மைப்
பிரக்ஞையின் வளர்ச்சியா?
அதுவும் க்ஷீணித்து
உப்புச் சப்பற்ற
லௌகீகம் ஆகிவிடும்
ஆத்மீக ஆபத்தா?
மனசின் மர்மத்தை
ஆராயும் புத்தரின்
பேராழம் போன்று
ஒரு புதுமுக அகமுக
விஞ்ஞான நோக்கா?
எது?" இதைக் கேட்டு
அக்கமும் பக்கமும்
பார்த்து விட்டு
நடுங்கும் குரலில்
பதிலைச் சொன்னார்
இண்டியன் ரைட்டர்:

"எனது தத்துவம்
என்ன என்கிறீர்கள்?
குதிரை கனைக்கிறது
கொசு ங்ய் என்கிறது
மோட்டெருமை போடுகிறது
முக்காரம் இதில்
சத்தம் எது
புத்தம் எது என்று
மண்டையைக் குழப்பாமல்
ஒவ்வொன்றாய் டேப் பண்ணி
ஒழுங்காய் விற்றால் நல்ல
யாவாரம்!"


வைரவர்

இடம் போவதா இந்த நாய்க்கு வலம் போவதா என்று
சகுனம் பார்த்த சில பழைய சாமிகளின்
கெண்டைக் கால்களை கிழித்தது நாய்.
கண்டார் இதனை ஒரு புதிய ஆசாமியார்.
நமக்கேற்ற நாயென்று தமது முன்றலில்
நாயைக் கட்டிப்போட மந்திர தந்திர
வசிய முறைகளைப் பிரயோகிக்கலானார்.
"சுபமங்கொழகொழா" உச்சாடனம் எடுத்தார்.
"பாய்ந்து அதன் பேட்டைத் தொட்டிலே
விழுவிழு" என்றார். நாய் அசையவில்லை.
"ஹிந்து வாராந்தரிக்கு ஆள் புடிப்பவன் நான்
எழுதெழுது" என்றார். உசும்பலை நாய்.
லைட்ரீடிங் லெவலைவிட்டுக் கிளம்பாத இந்த
சைட்பிஸினஸ் பத்திரிகை சண்டே இதழெல்லாம்
நாய்ப்பல்லுக்குதவாத வரட்டு வெள்ளெழும்புத்
துண்டே என அறியா மண்டை அவருக்கு.
எதுகைமோனையிலே நாயைப் புகழ்ந்து
எடுத்துக்கட்டி முடித்தார் ஒரு வெண்பா.
ருசிபார்த்துக் கறி தின்னும் நாய்க்குதவாத
வரட்டு வைக்கோல் கட்டு அது.
மசியாதோ இந்த நாய் ஆசுகவிக்குக்
கூட என்று ஆசாமிப் பெருமகனார்
யோசித்துப் பின்பு பொறுமை கடைப்பிடித்து
தமிழை விடுத்து இங்க்லீஷுக்குள் இறங்கி
"விளடீமர் நபக்கவுக்கு ஆங்கிலம் தெரியாது" என்றார்.
"அப்டைக் சுமார்" என்று சொடுக்கு விட்டார்.
"எப்பேர்ப்பட்ட கிரிட்டிக் நான் நாயே
உனக்கு நானே எஜமான், கமான்" என்றார்.

தெருப்புழுதியிலே அசுவராஸ்யமாய்
அரைத்தூக்கத்தில் கிடந்த நாய் சிலிர்த்து
எழுந்து உறுமியது. உடனே ஆ சாமியார்
வேட்டியை உதறித் தூக்கிமடித்துக்கட்டி
அகலக் கால்வைத்து ஆராய்ச்சித்தொடை தட்டி
"இருள்" என்றார் "ஒளி" என்றார்
ஜபர்தஸ்தாய் இதற்கெல்லாம்
அரிச்சுவடிப் பொருள் சொன்னார்
பொல்லென்றார் பொல்லனொரு பொலன் என்றார்
தமிழின் ஆன்மீகப் பொருளில் பதில் தந்து
"வள்" என்றது நாய். "வள்" எனில் குரைப்பல்ல.

"இந்த நாய் 'வள்' எனில் சிந்தனை கண்டுகொள்
இந்த நாய் வள்ளு என்றபோ தெல்லாம்
உம்முடையோர்க்கு வாயிலே இருந்து
வடிந்தது ஜொள்ளு இந்த நாய் எந்த நாய்?
இந்தியா சிந்துவாய் ஆரிய திராவிடப்
பிரிவினைகளுக்கெல்லாம் முந்திய ஒன்றதாய்
நின்ற காலத்து நாய். இந்த வாய் எந்த வாய்?
பன்றிகளுக்கிடும் முன்றிலின் வேலிகள்
என்றெதும் இல்லதாய் எங்கணும் யாவரும்
வாங்கி உயிர்க்கும் காற்றை விரிக்கும்
பிராண சக்தியின் அக்ஷரம் சுழல்கிற
அச்சடா இந்தவாய்!" என்றது நாய்.

இது கேட்டு "ஆ ஊ! அடாவாம் புடாவாம்
அன்னிக்குக்கூட அவாளைப் பார்த்து
அடா இன்னுப்புட்டான்!" என்றெடுத்தார் ஆசாமி
அவருக்கே பொருந்தாத ஜெண்டில்மேன் ஒப்பாரி!
"அடி" என்று தன்னை விளித்த கம்பனை
"ஆரைஅடா சொன்னாய் அது?" என்றாள் ஔவை.
கம்பனின் கதையே அப்படி என்றால்
அறிஞன் ஒருவனை அடிமை பிடிக்கவரும்
மடையனைப் பார்த்து 'அடா' என்று விளிப்பது
மரியாதை என்றே கருதிட வேண்டும்.
ஆசாமி உடனே மந்திரம் தந்திரம்
இங்கிலீஷ் எஜமான் வேலை எல்லாம்
விடுத்து எடுத்தார் கடவுள் வடிவம்.
"நீ நாய் நான் யார்? கடுகடு வடுக வைரவனார்
நாய் என் வாகனம் உன் இடம் எனக்குப்
பின்புறம் முன்புறம் வந்தாய் என்றால்
கிடைக்கும் உனக்குக் கல்லெறி எனவே
கம் கம்" என்றபடி தம்பின் புறத்தை
நாய்க்குக் காட்டினார். தெருநாய்க்குப் பின்புறப்
பொறியைக் காட்டும் இப் புதுமாடல் வைரவர்
சரியான இடியட் என்று சும்மா நின்ற நாய்
எகிறிப் பாய்ந்து இழுத்தது எட்டி
உரிந்தது வைரவ சாமியின் வேட்டி.
அதுசரி அம்மணம் இல்லாமல் என்ன வைரவ வேஷம்?
அம்பலம் ஆயின அவாளுக்கும் இவாளுக்கும்
ஏற்றபடி பேசும் ஆசாமியின் டபுள்
மர்ம விபரங்கள், மறைமுக ரோகங்கள்
வைரவர் வாய்தனில் இருந்து எழுந்தது
வாள்வாள் சப்தம், கண்டது ரத்தம்-
அன்று அவாளுக்குக் கெண்டைச்சதையில்
இன்று இவாளுக்குக் குண்டிச்சதையில்


-பிரமிள் (1939-1997)


பிரமிள் கவிதைகள்
தொகுப்பு: கால சுப்ரமணியம்
லயம் வெளியீடு
அக்டோபர், 1998
327 பக்கங்கள்


Thursday, March 09, 2006

Wednesday, March 08, 2006

அள்ளல் - 1


ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும்போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்

உலக மகா யுத்தம்

ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை

இந்த நகரத்தை எரிப்பது

இந்த நகரத்தை எரிப்பது
மிகச் சுலபம்
ஒரு தீப்பெட்டி போதும்
தீப்பெட்டி விலை மிக மலிவு
ரொட்டியின் விலையைவிட மிகமிக
ஒரு லிட்டர் கிரஸினும் வேண்டும்
அதுவும் கிடைக்கும்
அரசின் சீரிய வினியோகிப்பில்
ஓசைகள் குறைந்த நள்ளிரவில்
எங்கேனும் துவங்கலாம்
துணிவுள்ளவன் விழித்திருந்து
அனுமான் எரித்தான் லங்கையை
வாலில் தீ வைத்தபோது
வானைத் தொட்ட தீ தணிந்தது
எழுந்தது புது லங்கை
அழிந்தானா ராவணன்
போராடினான் நாட்கணக்கில்
மடிந்தான் குருதி வெள்ளத்தில்
இன்றும்
அனுமான்கள் உண்டு வாலின்றி
ராவணர்களும் உண்டு
தீயுண்டு நகரங்கள் உண்டு
தனியொருவன் எரித்தால் வன்முறை
அரசாங்கம் எரித்தால் போர்முறை

-ஆத்மாநாம் (1951-1984)


ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு; 2002 டிசெம்பர்
294 பக்கங்கள்

Monday, March 06, 2006

ம(ழ)லைப்ப(ட்டா)ளம்

Fractal Enlightment - Version X © Pay A Reeli நொந்துபோன பட்டாளம் ஒன்று வலைப்பதிவிலே அலைந்து கொண்டு திரிகின்றது; இதைக் கண்டு கொள்ளாதது குறித்து கவலை வேறு. ஆளாளுக்கு இருக்கும் வேலைக்குள்ளே இந்தத் தொட்டாட்டு வந்த எலக்கியப்பயம் பொறுக்கும் பட்டாளத்துக்குக் கண்டு கொள்ளவேண்டுமென்ற கவலை.

இந்த நவ-இழக்கியக்கா(வ)லர்களென தம்மைத்தாமே முன்னிறுத்துகின்றவர்களின் லெவலுக்கு இறங்கியோ, ஏறியோ, தாவியோ, குரைத்தோ, குதறியோ சண்டை பிடிக்க முடியாது என்பதில்லை; ஆனால், வர வார வர்ற பொழுதினை அநாவசியத்துக்குச் செலவு செய்ய முடியாத நிலையாகிப் போச்சு. மிடில் க்ளாஸ், மிடில் ஏஜ், மொடரேட் ரேஜ், அன்லிமிட்டட் லேச்.

குரைத்தது..,. அடச்சீ... குறைந்தது.. சிலர் பதிவுகளுக்கு விஷ(ய)தானம் செய்யவேனும் நான் பயனாக இருப்பது குறித்து மகிழ்ச்சியே. கிழமைக்கொன்றென்று ஒரு பதிவு நான் போடாதுபோனாலுங்கூட, சிலருக்கு மாதம் மும்மாரிக்கும் கோடைக்கும் விஷ(ய)கொடை செய்யவேனும் நான் பயனாக இருப்பது குறித்து மகிழ்ச்சியே. ஆனால், அதுக்காக, "அடித்து, மனுஷ்ய புத்திரன் எழுதினதுபோல "சண்டையின் நடுவே துணியைத் தூக்கிக் காட்டுகிற" காரியத்தைச் செய்தது நான் அல்ல தம்பி. பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா" என்று சொல்ல வந்தால், இதுபோல பொய் ஏதும் கிடையாது என்றே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மனுஷ்யபுத்திரனின் பதிவிலே அவரோடு தர்க்கம் செய்ததை மறுக்கமாட்டேன். மணிகண்டன் உட்பட சில மனுஷ்யபேரர்கள் பாய்ந்தது உட்பட. ஆனால், மனுஷ்யபுத்திரன் எழுதியதுபோல நான் எழுதியதாகச் சொல்வது முறையா என மனுஷ்யபுத்திரரோ பேரர்களோ நிரூபித்தால் வசதி; இல்லாவிட்டாலும், "நிரூபீ" என்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கமாட்டேன். என்னையும் நாய்ச்சண்டைக்கிழுக்க, எனக்கும் நான்கு குருவுக்கு மிக மிஞ்சிய சீடப்பிள்ளைகளைத் தந்து, சண்டைக்கு இழ(ற)க்கிய குழாம் அலைந்துகொண்டிருப்பதினையிட்டு மகிழ்ச்சி. ஆனால், அதற்காக, மனுஷ்யபுத்திரன் எழுதியதாக நான் எழுதியதாகவெல்லாம் பொய் சொல்ல வேண்டியதில்லை. நேராகவே சண்டைக்கு வரலாம்; அல்லது, "இலக்கியம் முற்போக்கு பேசிவிட்டு, பெண்களை இரவுக்கான மாதர்களாக அரபுநாட்டிலே வைத்துக்கொள்ளும் இலங்கைத்தமிழன்" எனக் கதையை எழுதிவிட்டு அடுத்தநாள் ஏதுவுமே நடவாததுபோல நாம் பேசிவிட்டேனும் போகலாம். குறைந்தது, நல்ல ஸ்டெலா புரூஸ் நடைக்கதை என்றாவது மகிழ்ச்சியடையலாம். ;-)

என்ன.... போச்சுடா!! கலர் கலரா பினாத்த வேணுமா? இனியுமா? என்னோட மெச்சூரிட்டி க்ளெய்ம், ரிட்டயர்டு பென்சன்லாம் என்னாவுறது? ;-) அன்னிக்குப் போட்ட பழசு வவுத்துக்கு ஆவாமத்தான் இன்னிக்கும் என்னிய பாத்து கொமட்டிக்கிட்டும் கழிச்சுக்கிட்டும் இருங்கானுங்க. திரும்பவுமா? சரி சரி...

ஏம்பா, காந்தஈயவாலிகளே, உங்களுக்கு நேரமிருக்கின்றதென்றால், சந்தர்ப்பவசமாக, ப்ரொக்ஸி(.கொம்மு)க்கும் இலவசமாக மேய்வதற்கு மேலாக, பின்னூட்டும் வசதிக்கும் பணம் செலவழித்தும் ஐபியிலே புள்ளிவிபரக்கணக்கிலேயும் பிழைக்காத ஒரே ஐபியோடு மாட்டிக்கொண்டீர்களென்றால், யாருக்கு யார் துணையென்பது என்னிடம் நேருக்கு நேர்கேட்டால், நானென்ன சொல்வது? அதற்காக, மனுஷ்யபுத்திரன் போல பெயரிலி எழுதினானென போகிறபோக்கிலேயா காலைத் தூக்கிக் கழிப்பீர்கள்? ஒரு சொற்றொடர் ஒற்றுமையே ஆள் மயக்கும் மடக்கும் நேரத்திலே, இப்படியாகவா மனுஷ்யபுத்திரனோடு என்னை இறக்கி வைப்பீர்கள்? நான் தாவும் உச்சாணிக்கொப்பென்ன கிளையென்ன? குறைந்தது, பதிப்புத்துறையிலே எழுதியெழுதிக் குவித்த ஜெயமோகன், ஜெயகாந்தனோடாச்சும் சரியாசனம் வைத்து மரியாதை தந்திருக்கமாட்டீர்களா? வேதசகாயகுமாரின் நாற்சார்மடத்திலே மனுஷ்யருக்காக நொந்து நானிட்ட கையொப்பத்துக்குப் பலன் இதுதானா? ச்சோ... அடச்சே... ச்சொ ச்சொ.. அனே புத்தா (அய்யோ மவனே)

வைரவசாமி வாய்மொழியிலே மயங்கி பொய்யாமொழி எல்லாம் படித்து, பொறாமை, அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் எல்லாம் நீங்கி வலைப்பதிவை விட்டு ஏழாமிடத்திலேயிருந்து நீங்கி, பதிப்புலகத்திலே ஆழமாகக் காலைவிட்டாரின் சேற்றைத் தோண்டித் துடைத்தேனும் கால்பிடித்து அவியல் படைப்போம் என்றுதான் யோசித்தேன். ஆனால், அ. மார்க்ஸ் நான் எழுதிய படைப்பிருக்கும் பக்கத்தைக் கிழித்து மலம் துடைத்தால், என்னவாகும் என் கதி? நாளைக்கு சிறில் போன்ற மீன்வாசனை பிடித்தவர்கள்கூட என் படைப்பின் வாசனை குறித்து விலகியோடி விடுவார்களே?! ஐயகோ அதுதான் விடுத்தேன். என் சீடப்பிள்ளைகளுக்கும் (எத்தனை பேர்? எனது எதிர்க்குருநாதருக்கு மட்டி மடையன், பேதை, மிலேச்சன் என்று இலகுவிலே விரலைவிட்டு எண்ணி, ஆறு நித்திரையா என்று பார்க்க தீவட்டித்தடியரோடு... அதாவது தீவட்டித்தடியோடு அனுப்பிவிட்டு,மோனமயக்கத்திலே மூன்று கிழமை அட்லாண்டிக்குக்கு அப்பாலே ஜெர்ஸி பசுவோட்டலாம். அப்படியான வாயாட்டாமல், வாலாட்டும் சீடப்பிள்ளைகள் கிடைக்காத என் கதியை யாரரிவார்? :-() "வலைப் பதி; வாலைப் பதியாதே" என்று சொல்லிக்கொடுத்தேன். அதற்கான எதிர்வினையா இந்த சிலம்பெடுத்து நிரூபிக்கும் நிலை? கொற்றவைத்தெய்வமே? "யானோ மனுஷ்யபுத்திரன்? யானோ சுசாதாதாசன்? யானோ ஜெயமோஹனன்? யானோ யாரேனும் நீ வேண்டினவனோ? யானோ வீணோ?" ;-)



பி.கு.:

1. மனுஷ்யபுத்திரனுக்காக, அவருக்கு பதிவு அமைத்துத் தந்தவர்கள் கேள்விகேட்டால் பதில் சொல்லவேண்டுமா என்பது ஒரு புறமிருக்கட்டும். குறைந்தது, மனுஷ்யபுத்திரனுடனான சண்டைக்குப் பின்னால், இலக்கியவாதி பதிப்பியலாளராக ஆகும்போது செய்யும் சமரசம் பற்றி மனுஷ்யபுத்திரன் எமது லெவலுக்கு(ம் கீழே) இறங்கி வந்து தன் பதிவிலே எழுதியது பற்றியும் ஒரு வரி குறித்திருக்கலாம்

2. கவலைப்படாதே சோதரா, இந்த அபாண்டமான லூஸ் குற்றச்சாட்டுக்கெல்லாம் கேஸ் போடமாட்டேன். சரியாக அய் பீ மோப்பம் பிடிக்கத்தெரியாத வைரவரென்று விட்டுவிட்டுப்போகிறேன் ;-)

3. என்னோட மூணு அவர்ஸை வேஸ்டடிச்ச இந்தப்பதிவை வெச்சே மூணு மாசத்துக்கு படம் பாடமுன்னு மேய்ப்பர் பின்னாடி மேன்னு போய்க்கின்னே பதிவோட்டுங்க கண்ணுங்களா. அதுக்கு பிறகு வந்து ஒடம்பு நமைச்சலுக்கு வேணுன்னா ரெண்டு திரும்ப தர்றேன். (அதது லாங்விஜ்லே சாண்ட்விட்ச் போட்டாத்த்தான் தின்னுமுன்னு சும்மாவா சொன்னாங்க?)

4. ஒரு பதிவென்றால், ஒரு நீதி, மெசேஜு இருக்கவேணாமா? அதனாலே,
மன்னன்/மகேசன்/மனுநீதி: மோடியிலே அப்டிபோடு= வோச்சர்= மொடேர்ன்கேர்ள்
மனுசன்/மக்கள்நீதி: "பத்துமைல்"லே சுகு=டிமூ
=>பொதுநீதி: ஆட்டத்தின் நடுவிலே அந்த ஆண்டவனே வந்தாலும் விதியை மாற்றமுடியாது

5. பாட்ஷாவை பாட்ஷா லெவல்லே வாழவிடுங்கள்; மாணிக்கத்தை மாணிக்கம் லெவல்லே வாழவிடுங்கள்; ஏத்தாதீங்க; இறக்காதீங்க; கடிக்காதீங்க; குரைக்காதீங்க;கூக்குரலிடாதீங்க

6. இப்பதிவுக்கு ஏன் "வைரவமூர்த்தியும் வால்களும்" என்றோ "பரமார்த்தகுருவும் பரமசீடர்களும்" என்றோ தலைப்பிடவில்லை என்று பேக்கேள்வி கேக்கக்கூடாது. என் பதிவு என் இஷ்டம் என் சட்டம். நானே ராஜா நானே மந்தி(ரி) நானே பொண்ட் கலர் சைஸ் ஸ்ரைல் செலக்டர்

7. சன்னாசியை முதலிலே கண்டு பார் ஆட்டியவர் பைரவமூர்த்தியென்றால், பைரவமூர்த்தியை முதலிலே கண்டு bar ஆடு காட்டி சின்முத்திரை பிடித்தவரைக் காண வயோதிகனின் tscii பதிவுகளை அணுகவும்

8. இந்தப்பதிவினை வழக்கம்போலவே பாசம் என்று மூண்டரை நிமிசத்துக்குப் பிறகு வெக்கத்தோட கழட்டிப்போடுவன் எண்டதாலை இப்பவே ஸ்கிரீன்ஸொட் ஒண்டு எடுத்துப் பத்திரப்படுத்திக் குலைக்கவும்.. சீ.. குடுக்கவும்.

9. வழவழவெண்டு ஜெயமோகனன், மனுசப்புத்திரன், ஜெயக்கந்தன், சுசாதா பெயரைப் போட்டு நீட்டுக்கு எழுதினதால இதுவும் ஒரு கொல்லைப்புற இலந்தையப்பதிவு. ஆராச்சும் பிளீஸ் தயவு செய்து இதை உடல்மெய்யிலே அச்சேற உதவி செய்யுங்கள். தினமலருக்குத் தந்தி ரெக்ஸ் மெஸேஜ் குடுத்தாலும் கோடி புண் ஈயம். வேணுமெண்டால் ஜெயேந்திரர், ஜெ, ஜேஜே, ஜேகே, ஜிகே, எஸ்கே பேர்களையும் சொருகித்தாறன்.

10. இப்ப சின்னப்பிள்ளையள் போய்ப்படுத்து நித்திரையாகிப் போட்டு, நாளையிலையிருந்து அடுத்த இலச்சார்ச்சினை ரமணீகரமாகவோ காலாகவோ வாலாகவோ கலர்கலரா துடங்குவியளாம். என்ன சரியோ? அடுத்த ஒளிஒலிபரப்பு இந்த அலைவரிசையிலே இன்னும் ஒண்டு ரெண்டு மாதத்துக்குத் தர ஏலாதெண்டு மிக மன வருத்தத்துடன் தடங்கலுக்கு விரல் குறித்து விராண்டுகிறோம். சோளக்கொல்லைக்குள்ளை பொம்மையில்லையெண்டு இஷ்டப்படி பூந்து விளையாடுங்கோ மக்காள்.

11. அப்பூ.... திரிப்பு எண்டால் இதுதான் திரிப்பூ. பாத்தியளோ? ;-)

technoimpressinist fainting: Fractal Enlightment - Version X © Pay A Reeli
© stands for coffee heist

தெறிப்பு - 25


NEO-Napster





'06 மார்ச் 06 திங்கள் 10:35 கிநிநே.
ஓக் க்ரோவ் தொடர்வண்டிநிலையம், அ.ஐ.நா.

...