Tuesday, February 23, 2010

பக்கங்களைப் புரட்டப் புரட்ட, புரட்டு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கனல் எரிகிறது

Layers of Lies & lairs who lay them

"புரட்டுலைன் சிறப்பிதழின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, புரட்டு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கனல் எரிகிறது. என்ன மாதிரியான ஒரு காலனை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்."
பொதுமக்கள், சொந்தப்பிழைப்புதன் நாளாந்த வாழ்போக்கிலே சங்கம் வைத்துத் தம்பிழைப்பு நடத்த நேரமில்லாதவர்கள்

Friday, February 19, 2010

மாதவராஜ் என்ற சிபிஐ(எம்) பாசிச வலையடியானுக்கு

வழக்கம்போல தீராதபக்கவாதம் என்ற பதிவினை வைத்திருக்கும் சிபிஎம் பாசிசவாதி இலவச ஆலோசனை சாத்தூர் முகாம் குந்திலிருந்து கொண்டு தருகிறார்.

/ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும்./

கடலுக்கு அந்தப்புறம் சில நாய்கள் வண்டியேறி, கல்லடிபட்டுச் செத்ததிலே உமக்கென்ன தீடீர் கரிசனை தோழர்? இன்றைக்கு நீர் சார்ந்த மார்க்ஸிசப்போர்வை போ(ர்)த்த பாசிசவலதுசாரிக்கட்சி மேலிடம் இரண்டு வரி போடச் சொல்லி அனுமதி தந்ததா? அதிகாரத்துடன் கட்டளையிட்டதா?

ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்புக்குக் கொண்டு வரப்படும்போது, எங்கே இந்த மயிராண்டிகளும் அவர்களின் கட்சிக்குண்டர்களும் தமிழ்மணத்திலே + குத்திடும் அக்கா பொண்ணு, அண்ணா பையன்களுக்கும் போனார்கள்? மிஞ்சிப்போனால், மூணுமாசத்துக்கொரு தடவை விலக்கு வந்து வழவழாவென்று "அஹோ! கேளும் பிள்ளைகாள், ஈழத்தமிழர்களே!" என்று தொடங்கி இனவாதத்தை அடக்குமுறையை ஒத்துக்கொண்டிருங்களென்றோ, ஸ்ரீலங்காவிலே அனைவரும் இரவுபகலாய் மகிழ்வாய் *த்துக்கொண்டிருங்களென்றோ இலவச அட்வைசு வினைல் ரெக்காட்டு (உ)டான்சு ஆடிக்காட்டிக்கொண்டிருந்தீர்கள்.

வழக்கம்போல, சிங்களத்தோழர் ஜேவிபி வாழ்க என்றோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ராஜபக்ஷ தோழர் வாழ்கவென்றோ கூவிவிட்டு அடங்காமல், இன்றைக்கு எதற்காக ஈழத்தமிழருக்காக அழுது உருகி நாடகம் காட்டுகின்றீர்கள்? நந்திக்ராம் மக்களுக்காக ஒரு சொட்டு உதிர்க்காத உங்களுக்கு எதற்கு இன்றைக்குத் திடீரென்று ஈழத்தமிழனின் பிரதிநிதித்துவம் பற்றிக் கவலை? அதே அரிதாரக்கவலையைத்தானே முந்தநாள் நீங்கள் கேள்வி கேட்கும் திருக்குவளை முத்துவேல் கருணைநிதி முகம் பொங்க 10^10ஆம் தடவை ராஜபக்சவுக்கு விசிலடித்து வேண்டி கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைக்காமலே கேட்கிறார்! கேட்கிறவனையும் பார்க்கிறவனையும் எத்தனை நாட்களுக்குத்தான் நீங்களெல்லோரும் கேனையர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள்?

இத்தனைநாள் வாயை மூடிக்கொண்டு எல்லோரும் ஒன்றாயிருக்கத் தத்துவம் பேசிவிட்டு இப்பொய்க்கண்-நீரெல்லாம் இப்போது ஈழத்தமிழருக்காக உதிர்க்காமலிருந்தாலே போதுமானது. சி பி ஐ (எம்) குண்டர்கள் (அதிகாரமமைக்கும் தோழர்கள் என்று வாசிக்கவும்) இதே கருணாநிதியுடன் தேர்தலிலே கூட்டாடவில்லையா? ஈழத்தமிழர்கள் சாகும்போது கூத்தாடவில்லையா?

ஈழத்தமிழருக்கெதிரான ஸ்ரீலங்கா ஆதரவு இந்தியாவின் செயற்பாடுகளை நீர், தமிழ்ச்செல்வன், இந்து ராம், ஆதவன் தீட்சண்யா எல்லோரும் எதுநாளும் விமர்சித்ததில்லை - நியாயப்படுத்துதலன்றி; இதற்குப் பின்னாலும் எந்தப்புலியைக் காட்டிக்கொண்டு பின்னாலே பதுங்கப்போகின்றீர்கள்? பாசிசத்தின் உச்சத்திலே இணையத்திலே கைதட்டல்களுக்காகப் பேசுங்கள். உங்கள் மனைவியின் தங்கையும் தம்பியரும் கட்சித்தோழர்களும் உச் கொட்டி மகிழ்ந்துவிட்டு சாத்தூரின் தோழர்தான் மானிடத்தைச் சாகாது காக்கும் மகாத்மா என்று சொல்லிவிட்டுப் போகட்டும். மானிடத்தைத் தீராது சீரழிக்கும் பக்கவாதங்களின் உதிரும் சிறகுகள் + மயிருகள் + சருகுகள் சிலவே நீரெல்லாம்.

ஈழத்தமிழர்களை இதுவரைநாள் நீங்கள் காக்கவில்லை; இனியும் காப்பதுபோல அவிழ்த்துப்போட்டு ஆடவும் வேண்டாம். வாயை மூடிக்கொண்டிருந்தாலே கொஞ்சமேனும் தார்மீகம் மிஞ்சும். வேண்டுமானால், உங்களின் பொங்கலிடும் குழந்தைகள், யாரேனும் மூக்குமுட்டக் குடித்தவன் கண்மூடி ஓட்டும் வாகன்விபத்திலோ வேட்டைநாய்களின் கடிகளிலோ சாகும்போது வேண்டுமானால், என்னிடம் வாருங்கள். வேட்டையாடுதலை விளையாடுதலென்று அச்சிடுவதாலேமட்டும் நிரூபிக்க அலையும் வெறிநாய்களுடன் வெகுவாகக் கூடி எவர் தெருவினதோ விளக்குக்கம்பத்தில் ஒன்றாக ஒண்டுக்கடிப்பது எப்படி என்று இலவச ஆலோசனைமுகாமிட்டு ஒரு நாள் முழுக்க அறிவுரைக்கிறேன்.


நேற்றுவரை வாயை மூடிக்கொண்டு ஸ்ரீலங்கா அரசுசார் புலம்பெயர் இலங்கைத்தமிழர்கையிருப்பிலே உலகம் சுற்றிய ஜெயமோகன் என்ற வலதுசாரிபாசிசநார்சிசவாதி உலோகம் எழுதுவதற்கும் ஈழத்திலே செத்தவர்கள் கதையை விற்பதற்காக எழுதிய என்டிரிவி நிருபரை பத்ரிகாத(க)ர்மத்தின் தலைவன் என்பதாக உலம்பிப் பதிவிடுவதற்கும் உங்களின் சிறுவரிப்பெருங்கருத்தா(ட்)டல்களுக்கும் எவ்விதமான வேறுபாடுமில்லை.


உங்களுக்கெல்லாம் நீங்கள் சாணி உருண்டையாக உருட்டி விவாதிக்க ஏதேனும் கருப்பொருள் உருப்படியாக வேண்டுமென்றால், உங்கள் குடும்பங்களிலே கருக்கட்டியிருக்கும் பிரச்சனைகளிலே விவாதித்துக் கொள்ளுங்கள்; அல்லது கருக்கட்டவைத்துக் கொல்லுங்கள். எதுக்கு இன்றைக்கு மட்டும், உங்களுக்குக் கொம்பு முளைக்க நாம்? இதற்கான நேரத்தைக் குடும்பத்தை விட்டு ஓடிப் போய் ஒளித்துக்கொண்ட கட்சியின் மத்தியகுழுத்தோழர்களைத் தேடுவதிலே செலவழிக்கவேண்டுமென்று பரஸ்பர நலம் கருதி நாமும் உமக்கும் உம்மைச் சார்ந்து வாசிக்காமலே தமிழ்மணத்திலே + குத்தும் இந்துவின் வளர்ச்சி கண்டு கண் துளிர்க்கும் நீர்(த்த)கட்சித்தோழர்களுக்கும் கருத்தினைச் சொன்னவர் சிங்களப்பெண்ணா, முஸ்லீம் பெண்ணா என்றுகூட வித்தியாசம் தெரியாமல் மாமா சொன்னாரே என்று தமிழாக்கி ஈழத்தமிழர்களுக்கு ஒற்றுமை அறிக்கை விடும் நும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

கைதட்டுத்தான் உமக்கெல்லாம் முக்கியமென்றால், சந்துமுக்கிலே சராயைக் கழற்றி விட்டுக்கூட ஆ(ட்)டலாமே? எதுக்கு ஈழத்தமிழன் தோலிலே இன்னொரு தடவை செருப்பினைத் தைத்து உலாவரும் எண்ணம்?

"நீரு யாருய்யா எவனுக்கு எவர் பிரதிநிதித்துவம் பண்ணுவது படுத்துவதென்று திறந்த விவாதம் நடத்த அறிக்கைவிடுவதற்கு? மாமனா? மச்சானா? தோழனா? ஆண்டையேதானா? தண்டத்தே தம்தொழிலாய் தத்துவ வித்துவ தகவற்ற ஆலோசனை மொத்த விற்பனையிலே தர ஆஜராகி லைனுல மொதலுல வந்துட்டானுங்க. முதலிலே ஒழுங்காக உமது கட்டுக்'கோப்பு'க்கட்சிக்குள்ளே, உமது பதிவுப்பின்னூட்டத்திலே திறந்த விவாதத்துக்கும் வெறுங்காற்றுக்குமாவது இடமிருக்கின்றதா என்பதைப் பாரும்" என்று, -என்னைக் கேட்டால்- இலவச சவப்பரிசோதனையாலோசனை சொல்வேன்.

இதையும் வழக்கம்போலவே கட்சிசார்பிலே விடாமல் பின்னூட்டத்திலே அமுக்கிவிடுவீரென்பதாலேயே, இங்கே போட்டுத் தொலைக்கவேண்டியிருக்கின்றது.

கட்சி நமக்குச் சாப்பாடு போடுவதில்லையாதலால், வேலை அனுமதிக்கும் நேரம் கிடைக்கும்போது, இவ்விடுகை தொடரும்.

இவண் இவன்
..... காலங்காலத்தாலே சவுண்டு வுடும் சாவு கெராக்கி(ங்க)

பிகு: (இழவு, தமிழ்ப்பதிவர்களுக்கு கூற்றுமறுப்பினைப் போட்டால் மட்டுமே இடுகை சரிவரச் சமித்துக் கழிறது) இது தனிப்பட்ட தாக்குதலென்று காந்தீயவாதிகள், கருணாநிதிநேயர்கள், தான்தோன்றிமனிதநேயர்கள், வரட்டுக்கம்யூனிச+கம்யூனிட்டிசக்காவலர்கள், கூகுள்_சுப்பன்கள் கருதினால், அதே. அவ்வளவுதான்; பசப்பும் பசலையும் நீங்கி நீங்கள் சுகமும் சுகரும் பெற என் உளம் கடிந்த வாட்டு.