Tuesday, May 31, 2005

பின்னல்- 24


Deal Sealed


மெயின் வீதி, மோல்டன்
'05 மே, 31 செவ். 18:51 கிநிநே.

கணம் - 468


'05 மே 27, வெள். 14:18 கிநிநே.

மாதம் ஆறேழாய்,
ஆளாளுக்கு முடுக்குகிற நேரத்திலே சந்தித்துக்கொண்டிருந்தோம்
- அவஸ்தையை இறக்குமுன்னோ, இறக்கிக்கொண்டோ, பின்னோ.

நீர் பிரிந்தால், ஒரு வரியிற் காலநிலை கதையாகும்;
பிரியாமற் தடங்கின், குழாயின் வேகங்கூடக் குறையாகும்.
கை கழுவி, காற்றில் நானும் கடதாசியில் அவரும் காய,
மீள வரும் காலநிலை மெல்ல எமக்குள்,
குளிராய், சூடாய், காற்றாய்,
நேற்றுக்காய், நாளைக்காய்.

நான் கதவு திறக்க, தட்டு மேலுக்குப் போவார்;
அவர் திறக்கக் கதவு, நான், கீழ்த்தட்டுக்கு.



சென்ற நாளது ஏழாய், என் முடுக்கில்,
நான் போய் வருகிறேன் தனியாய்.

ஆள் பேரைத்தான் விட்டோம்; எண்ணிப்
பேசு எண்ணையேனும் பெற்றிருக்கலாம்
-என் மேலே படுவது கூதலா கொளுத்தலா
என இனி வேறாரைப் போய்க் கேட்பதாம் நான்?

'05 மே, 31 செவ். 17:27 கிநிநே.

Friday, May 27, 2005

கந்தை - 27


Viagra's SIGHT Effect


இந்த விளம்பரத்தை உங்களுக்கு வழங்குபவர்கள் Pfizer நிறுவனத்தார் அல்லர்

சிதறல்-105


Hierarchy


மஸாஸூஸெட்ஸ் அவன்யூ நிலைய மேம்பாலத்திலிருந்து
'05 மே, 27 வெள். 11:40

Thursday, May 26, 2005

தெறிப்பு - 21


Eat, Drink & Die


பாதை விளம்பரம், பொஸ்ரன்
'05 மே, 26 வியா. 11:02 கிநிநே.


கணம் - 467


'05 மே 26, வியா. 11:36 கிநிநே.

மழைக்காலப்பெருவீதிகள் என்ன செய்யும்?
எழுதிக் களைத்தெரிந்த எழுத்தாளனைப்போல்,
எண்ணம் மிதக்கத் தூங்கும் இரைமீட்டி.

நிறுத்தின கார்கள் பற்றி நினைக்கும்;
நிமிர்ந்த நெடுவரிக்கட்டடங்கள்
நிலைக்கக் கண் வெறிக்கும்;
நிற்கும் மரம் விதைத்தது, முளைத்தது,
பூத்தது, காய்த்தது, பழுத்தது, பட்டது,
விட்ட விழுது, கொட்டின இலை,
இளமையில் புழு கொத்திச் செத்த முளை
அத்தனையும் அலையும் அதற்குள்;
தார் இளக்கிக் கொதிக்கத் தகிக்காது
தலை தொலைத்த சூரியனைக்கூட
கார் மேகத்தூடு கண்தேடிக் கலங்கும்.
தனிமை தரை பிளக்கும் வழி.

எப்போதேனும் வருமொரு கார், புகை,
ஆளிரண்டு, அவசர இலைச்சலசலப்பு.
கணமிரண்டு கழியும்; ஒன்று, இரண்டு,
இன்று நிற்க உள்ளக்கனிவிருந்தால்,
மேலோர் அரைக்கணமும் மேவலாம்.
அதன்பின், ஆள் போகும்; கூடக் கார்;
மெல்ல, மீளத் தொடங்கும் இரைமீட்பு.

காலம் காரென்றால்,
வீதிகளுக்கில்லை பேதம்,
பெரிதும் சிறிதும்.

'05 மே, 26 வியா. 13:58 கிநிநே.

Tuesday, May 24, 2005

துத்தம் - 5

சந்தனமேடை எம் இதயத்திலே... - 2



சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

இந்தக்காலகட்டத்திலே வெளிவந்த இலங்கைப்பாடல்கள், ஒன்று துள்ளிசைப்பாடல்களாக இருந்தன அல்லது மெல்லிசைப்பாடல்களாக இருந்தன. இலங்கைத்தமிழர் வேண்டிக் கேட்ட மூன்றாவது வகைப்பாடல்கள், பக்திப்பாடல்கள். அவற்றின் சில, பக்திப்பாடல்கள் என்பதற்கப்பாலும் பிரசித்தி பெற்றவை. அவற்றிலே ஒன்று. இணுவில் வீரமணி ஐயர் யாத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடிய, "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே." புலம்பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறைகளின் சங்கீத, நடன அரங்கேற்றங்களிலே இது பொதுவிலே புகுந்துவிடும். வீரமணி ஐயரின் இந்தப்பாட்டு 70~80 களிலே வெளிவந்ததா என்று தெரியாது. அநேகமாக, 77 இன் பின் ஜே ஆர். ஐயவர்த்தனா ஆட்சியின் திறந்த பொருளாதார ஆரம்பத்தின்போது, தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கோவில்களின் திருவிழாக்களுக்கு ஆடம்பரச்செலவு செய்து, தமிழ்நாட்டுப்பாடகர்களை அழைப்பது வழக்கமானபோது, உருவாகியிருக்கலாம். இப்படியாக, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அம்மன் பாடல்களும் இருக்கின்றன. அதேவகையிலே, "கோணேஸ்வரம் எனக்கு இராமேஸ்வரம்" என்ற பாடலுமிருந்தது. நிச்சயமாக, அகதியாகப் படகிலேறி ஓடி "இராமேஸ்வரம் எனக்குக் கோணேஸ்வரம்" என்று பாடும் நிலை வர முன்னாலே வந்த பாடல் இது.

இந்த ஈழத்துப்பாடல்கள் எனப்படும் மெல்லிசைப்பாடல்களை அவை இலங்கை வானொலியிலே தினமும் ஒலிபரப்பாகி நான் கேட்டிருக்கக்கூடிய என் பாடசாலைக்காலத்திலே விரும்பிக்கேட்கும் ஆர்வம் இருக்கவில்லை; அதற்கு அவை ஒலிபரப்பான, காலைச்செய்திக்கும் பொங்கும் பூம்புனலுக்கும் இடைப்பட பதினைந்து நிமிடங்களிலே காலை வகுப்பு-கோயில்-சாப்பாடு-பள்ளிக்கூடம் என்று ஓடும் நிலை இருந்தது மட்டும் காரணமல்ல; எல்லோரையும்போல தமிழ்த்திரைப்படப்பாடல்களின்மீது ஆர்வம் கவிந்திருந்ததுதான் முக்கியமாகும். ஆனால், இலங்கைப்பாடல்கள், ஒரு காலகட்டத்திலே வானொலியிலும் மக்களிடையேயும் இளையராஜாவினை ஒற்றியெடுத்த மோஹன்ராஜ்-ரங்கன் போன்ற இளம் இலங்கை இசையமைப்பாளர்களினாலே (மோஹன்ராஜின் தந்தை முத்துச்சாமி, முதன்முதலிலே, திருவனந்தபுரத்துக்கு அருகிலேயிருந்து, இலங்கையின் முதற்படத்துக்கு இசையமைப்பதிலே உதவ வந்து, இலங்கையிலேயே தங்கி இசையமைப்பாளர் ஆகிவிட்டவர். வி. பி. கணேசனின் படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர் என நினைக்கிறேன்) முழுக்க முழுக்கத் கோடம்பாக்கத்திரைப்படப்பாடல்களின் பதிவாகப் போனப்பிறகு, பழைய ஈழத்துப்பாடல்களிலே எண்பதின் பிற்பகுதியிலே ஒரு பிடித்தமுருவானது. சிலவேளை கடந்த காலத்திற்குரியதைப் பிடித்துக்கொள்வதால், அந்தக்காலத்தினை இரைமீட்டக்கூடிய ஓர் உளப்பாங்குதான் இதன் காரணமோ தெரியாது.

ஆனால், இப்பாடல்களிலே ஈடுபாடு உண்டான காலத்திலே அவற்றினைக் கேட்பதிலே சிக்கலுமிருந்தது; இப்படியாகப் பிடித்துப்போன, ஈழத்துப்பாடல்களை ஓர் இசைநாடாவாகவோ அல்லது இசைவட்டாகவோ பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒன்று இப்பாடல்கள் வானொலியிலே ஒலிபரப்பாகும்போது, ஒலிநாடாவிலே பதியவேண்டும்; அல்லது, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே யாரிடமாவது தொகுதியாகப் பெறவேண்டும். முதலாவது முறைப்படி, பாடலைப் பதியும்போது, பதிவுற்றதிலே விரும்பின பாடலைவிட மீதி அத்தனை சுற்றுப்புறச்சத்தங்களும் பதிந்ததால், வெறுத்துப்போனது; இரண்டாவது முறையிலே பெற வானொலிக்கூட்டுத்தாபனத்துக்குப் போனால், நாடிருந்த நிலையிலே வெலிக்கடை, பூஸா இராணுவமுகாங்களிலே கொண்டுபோய் அடைக்கப்படுவதுதான் குறைந்தபட்சத்தண்டனையாக இருக்கலாம் என்னுமாப்போன்ற நிலையிருந்தது.. ஆகவே, விரும்பிய பாடல்கள் கைவரப்பட முடியவில்லை. (இப்போது, இணையத்திலேகூட இவற்றிலே ஒரு பாடலையுங்கூடக் காணமுடியவில்லை.)

என்னைப் பொறுத்தமட்டிலே, ஈழத்துப்பாடல்கள் திருகோணமலையின் பரமேஸ்-கோணேஸ் சகோதரர்களுடன் ஆரம்பமாகின்றது. 1974 இலோ 1975 இலோ இவர்கள் தமது பாடல்களை ஒரு பாட்டுப்புத்தகமாக பெரிய அளவிலே வெளியிட்டார்கள்; ஆண்டு சரியாக ஞாபகமில்லை. இலங்கையின் துள்ளிசைப்பாடல்களும் அப்படியாக பாடற்புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரைப்படப்பாடற்புத்தங்கள் போல ஒரு படத்தின் பாடல்களும் அப்படக்காட்சிகள் அட்டையிலும் திரைக்கதைச்சுருக்கமும் "மீதி வெள்ளைத்திரையிலே காண்க" தொக்குநிற்றலுமில்லாமல், ஒரு தொகுப்பாக வந்திருந்தது. இதை எங்கள் வீதியும் + பரமேஸ்-கோணேஸ் ஆகியோரின் வீட்டுவீதியும் சந்திக்குமிடத்திலே அப்போதிருந்த வாணி புத்தகசாலையிலே காசு அங்குமிங்குமாகச் சேர்த்து வாங்கியிருந்தேன். பொதுவாக, பெண் குரலுக்கு, கோணேஸின் மனைவி, மாலினிதான் குரல் கொடுப்பாரென்று ஞாபகம். ஆனால், 1977~1979 இலே பரமேஸ்-கோணேஸ் இருவருக்கிடையிலும் பிளவு ஏற்பட்டு, அப்படியே இருவரும் வேறு வேறு திசைகளிலே போய்விட்டார்கள். நாங்கள் ஒரு நாள் தனியார் வகுப்பு முடிந்து வரும்போது, இசைக்கருவிகள் உடைபட்டு அவர்கள் வீட்டுவாசலிலே இருக்க, சண்டை நிகழ்வதைக் கண்டோம். அநியாயமான பிளவு அது. தற்போது, பரமேஸ் எங்கிருக்கின்றாரென்று தெரியவில்லை. ஆனால், கோணேஸ், கனடாவின் ITBC வானொலியினை நடத்திக்கொண்டிருப்பதாக இணையத்தினூடாக வாசித்தேன். பின்னால், இவர்களுடனிருந்த பஞ்சாட்சரம் போன்றோர் திருகோணமலையிலே மெல்லிசைக்குழுக்களை நடத்திக்கொண்டிருந்தாலுங்கூட, இவர்களினைப் போல, சுயமும் திறமையும் கொண்டிருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இக்காலகட்டத்திலே இக்குழுக்களிலே ரோபல் ராகல், தற்போது பொஸ்ரனிலே வதியும் லோகேஸ்வரன் போன்றோர் மெல்லிசைப்பாடகர்களாகவும் இருந்தார்கள்.

பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் பாடல்கள், தமிழ்நாட்டின் ஏ. எம். ராஜா, ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் முணுமுணுக்கும் குரல்களின் பாணியை ஒத்தும் சற்றே துள்ளிசைப்பாடல்களின் வேரினைக்கொண்டும் அமைந்த பாடல்களெனச் சொல்லலாம். துள்ளிசைப்பாடல்களின் ஆரம்பகாலச்சாயல் எனும்போது, பைலா வகையான பாடற்சாயல் கொண்டவை அல்ல; பைலா பாடல்களின் தாக்கமில்லாதவை என்றே கேட்கும்போது தோன்றுகிறது.

இவர்களின் பாடல்கள் என நான் எண்ணிக்கொண்ட பாடல்கள் (சிலவறறினை நிச்சயமாக இவர்களுடையதா எனச் சொல்லமுடியவில்லை)

1. உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது?
2. தங்கமேனி கன்னம் தாமரைப்பூ
3. என் ராஜா இது நியாயந்தானா? (தேனாடும் பூவில் தானாடும் வண்டு)
4. அழைக்கும் ஓசை கேக்கவில்லையா?
5. நீ வாழுமிடமெங்கே? எந்தன் பார்வை விழும் அங்கே
6. முத்துக்கிண்ணக் கன்னத்திமேல் பத்துப்பத்து முத்தங்கள்
7. நீ இன்றி நிலவு ஏன் வந்ததிங்கு?
8. பாடல் எனக்கிது முதற்றரந்தான்
9. போகாதே தூரப் போகாதே; தாங்காதே நெஞ்சம் தாங்காதே
10. சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம்
11. அன்று தேடினேன்; இன்று பாடினேன்
12. மனமாளிகை ரோஜா! மணம் வீசுது இலேசா
13. கொஞ்சிக்கூவும் சிட்டே என் சேதி சொல்வாயோ?
14. நெஞ்சைத் தொட்டுப் பேச வந்த கொஞ்சும் பாவையே
15. தக்காளிப்பழத்துக்கும் தளதள உடம்புக்கும் வித்தியாசம் இல்லையடி பாப்பா (??)
16. எழுதுகிறேன் பாட்டு; இனிய தமிழ் கேட்டு

பாடல்களை நேரே கேட்கின் இசையாது. பாடல்களைக் கேட்க, cybersist தளத்திலே சென்று, பயனர் பெயர் & கடவுசொல்லை சேர்த்து அங்கத்துவம் பெற்றுக்கொள்ளுங்கள். Groups இன் கீழே eelaththuppaadal குழுவிலே சேர்ந்துகொண்டால், Files பகுதியிலே இவற்றினைக் கீழிறக்கிக் கொள்ளலாம். கொஞ்சம் சுற்றி வளைத்த வேலைதான். ஆனாலும் வேறு வழி தோன்றவில்லை:( மன்னிக்கவேண்டும்

* இங்கே பரமேஸ்-கோணேஸின் பாடல்களுக்கு இணைப்பினைத் தந்திருப்பது, அவர்களின் திறமையும் சுயமும் ஈழத்துத்தமிழிசையிலே அவர்களுக்கான இடமும் பெரிதும் தெரியாமலே போய்விட்டது என்பதற்காக, அவர்களினைப் பற்றிய பதிவினை முழுமையடையச் செய்வதற்காகமட்டுமே. இப்பாடல்கள், தற்சமயம் இசைத்தட்டுகளிலே கிடைக்கின்றனவா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவ்வாறு அவை அவற்றின் பாடலுரிமை பெற்றோரினாலே விற்பனைக்கு இப்போது கிடைக்குமென்பது தெரியவரின், இப்பாடல்களை இணையத்திலிருந்து உடனடியே நீக்கி விடுவேன். கூடவே, அவை அவ்வாறு கிடைப்பின், அவ்விசைத்தட்டு குறித்த விபரம் தருகின்றவர்களுக்கும் நன்றியுடையோனாவேன்.

'05 மே 25, புத. 03:54

Sunday, May 22, 2005

படிமம் - 152


Vanishing Memories


மெய்: '74 இனைச் சுற்றி.
திரிபு: '05 மே, 22 ஞாயி. 13:35 கிநிநே.

கணம் - 466

கிரகணம்

மாலைப் பூங்காவில் ஆர்ப்பரிக்கும் ஒரு சிறுவன்:
"தெரிந்து கொள்! என் ஞானத்தந்தை தகியொளிச்சூரியன்,"
கை விரல் தூக்கி மேற்கு நிலம் முயங்கும் திசை நோக்கி,
காற்றை எதிர்த்துக் கதை சொல்லி, எரிசூட்டை மிதித்தான்போல்,
சுழல்வான்; சுழிப்பான்; அலைவான் கால் அங்கும் இங்கும்.

காதிலே குண்டலம் கண்டிலேன்; காததுவும் புண்டு தொங்கிலன்.
வாய் சொல்லுஞ் சொல் புரியாத சிறுபிள்ளையல்லோ இவன்!
"ஆர் சொன்னார்?" - அழுத்திக் கேட்டேன் - ஆனாலும்,
அடக்கிக் குரல் முடக்கி அவன் காதுக்கு மட்டும் எட்ட.
"அன்னை" என்பான், ஆள் காட்டினான், அருகொரு வாங்கில்.

குந்தி இருந்தாளைக் குறி வைத்துப் போனேன்; என்னதென்றாள்.
"நின் மகன் ஞானத்தந்தை ஞாயிறென்றான்" - நவின்றேன்.
கூசாமற் சொன்னாள், கூரான விரல், மேற்கைக் குறி வைக்க;
"ஞாயிறே ஞானமானவன்; ஞாயிறே ஞாலமானவன்;
ஞாயிறே நியாயமானவன்; ஞாயிறே நம்பகமானவன்;
ஞாயிறே விசாலமானவன்; ஞாயிறே நல்லொளியானவன்;
ஞாயிறே பீடமானவன்; ஞாயிறே நமக்கு...." சொல் விரித்தாள்,
வெறி மிதப்பாள், விழி சிவக்க, வரி புடைக்க, மயிர் சிலிர்த்து.
காலெடுத்துக் கடந்தேன்; கடி நகர்ந்தேன்; தாய் வேழம் இன்னும்
தடங்காமல் முழங்குமாம் என் நிழலும் தகிக்கத் தகிக்க,
வீசுவெயிலோன் விண்ணாணம் போமென் பிடரி பின்னால்.

கணத்தே, உள்ளிருந்து ஓங்கியடித்தாற்போல்,
உடனெழுந்தது சூழக் குவிந் திரவு குமிழ்ந்தது
போலோர் புறத்தோற்றம்; சூழல் திகைந்து திரிந்தது.
திகைத்துத் திரும்பி வான் பார்த்தேன்; கதிரோன்,
வீசு கற்றை விட்டான், வெறுங்கறை உற்றான்; சூழுங்
கரை மட்டுங் கொண்டான் கதிர், சுட்டுத் தின்றதார், சொல்?
வால் வளைத்துக் காலக்கேதோ? வயோதிபக் காலக்கேடோ?

ஆனாலும், மாறாத காட்சி சில மருட்டும்,
மங்கு இருளிலும் பொங்கு மகிமை பற்றி;
கிளியெனக் கூறும் சிறுவன்,
இன்னும் புகழ் கூவுகிறான், கேள்,
வெறுஞ்சூனியன் ஆனானை, ஞான
வெளிச்சூரியன் என்றே விடாமல்
,
கூடிப் பேசுகிறாள், பார், குந்தி,
பட்டொளி வீசும் பகலவன் வீரம்.

வெறும் பெருங்காயப்பெட்டியும்
திறந்தால் மணக்கும்; கறிக்காகுமா?

சூனியகிரகணம் ஒளிக்காகுமா?

'05 மே, 22 ஞாயி. 04:57 கிநிநே.

Saturday, May 21, 2005

படிமம் - 151


Dawn


மெய்: '05 மே, 21 சனி 11:07 கிநிநே.
திரிபு: '05 மே, 21 சனி 11:28 கிநிநே.

துத்தம் - 4

சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

இரண்டு கிழமைகளுக்கு முன்னோர் இரவு, ஒரு கலிப்ஸோ இசைவட்டினைக் கேட்டுக்கொண்டிருந்தேன்; மீண்டுமொரு முறை "அப்பனில்லாவிட்டால் தெரியும் அப்பன் அருமை; உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை" என்பது போல ஈழத்துப்பாடல்களின் தவனம் பிடரியிலே அடித்தது; அந்தக்காலத்திலே (1983 க்கு முன்னால்), இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே ஆசியசேவையை விட்டால், தமிழ்ச்சேவைகள் இரண்டு; சேவை ஒன்று, கர்நாடக சங்கீதம், சமயநிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்ச் போன்றவற்றினை நிரப்பிக்கொள்ளூம். சேவை இரண்டான வர்த்தகசேவையை பொதுவாகத் தமிழ்த்திரைப்படப்பாடல்களே ஏதோ விதத்திலே அடைத்துக்கொண்டிருக்கும்; சொல்லப்போனால், வார நாட்களிலே மத்தியானம், அரை மணிநேரம், ஹிந்திப்பாடல்கள் வேறு வர்த்தகசேவையிலுண்டு. இலங்கைப்பாடல்களென துள்ளிசைப்பாடல்கள் (இவை பைலாப்பாடல்களென்றும் பொப்பிசைப்பாடல்களென்றும் சுட்டப்பட்டன; Pop உம் Baila உம் வேவ்வேறு வகையென உணர்ந்தறியும் தன்மை எங்களிடம் இருக்கவில்லை) கிழமைக்கு ஓரிரு தடவைகள் கால்மணிநேரம் ஒலிபரப்பாகும். ஆனால், இவற்றினை ஒரு நாளும் நாங்கள் ஈழத்துப்பாடல்கள் என்ற உணர்வோடு பார்த்ததில்லை; இன்றைய காலகட்டத்தில், ஈழத்துப்பாடல்களென்றால், ஈழவிடுதலைப்பாடல்கள் என்ற அர்த்தத்திலே நோக்கப்படலாமென்றாலுங்கூட, ஈழத்துப்பாடல்களென்று எந்த முப்பத்தைந்து வயது தாண்டிய இலங்கையரையும் கேட்டாலும், 83 இற்கு முற்பட்ட காலகட்டத்திலே, காலை செய்தியறிக்கைக்குப் பின்னாலும், பொங்கும் பூம்புனலுக்கு முன்னாலும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வர்த்தகசேவையிலே ஒலிபரப்பான, இலங்கையிலே இசையமைக்கப்பட்டு, இலங்கையராலே பாடப்பட்ட துள்ளிசையல்லாத தமிழ்மெல்லிசைப்பாடல்கள் என்றுதான் சொல்லக்கூடும். இரண்டு கிழமைகளுக்கு முன்னான இரவிலே இல்லாத என் அப்பனும் உப்புமானவை இவ்வகைப்பாடல்களே.

முன் & மத்திய எழுபதுகளின் ஸ்ரீமாவின் அரசு, அன்றைய சீன அரசினை அடியொற்றி நடக்க முயன்ற அரசு; சுய உற்பத்தி முன்னிலைப்படுத்தப்பட்டு, இறக்குமதி கிட்டத்தட்ட இல்லாத நிலை என்றே சொல்லலாம்; பிள்ளைக்குப் பால்மா தொடக்கம், பார்ப்பதற்குப் படம்வரைக்கும் உள்ளூரிலேயே பண்ணிக்கொள் என்பதான சூழல். தமிழ்நாட்டுப்பத்திரிகை தொடக்கம் படம் வரைக்கும் இந்த இறக்குமதித்தடை இருந்தது. (இந்தப்புத்தகத்தடையைத்தான் ஜெயமோகன் சில மாதங்களுக்கு முன்னால், வ. அ. இராசரத்தினம் பற்றிய பதிவுகள் தளக்குறிப்பினை ஒட்டி எழுதிய உயிர்மைக்குறிப்பிலே, ஒரு திரிபு திரித்து, "தமிழ்நாட்டு இலக்கியங்களை வேண்டுமென்றே தடை செய்தார்கள்" என்பதான தொனி விழ எழுதினார். அப்படியாக இந்தியாவினைக் குறிவைத்தேதும் தடை செய்யவில்லை என்று பதிவுகள் விவாதக்களத்திலே, எழுதியதை அவர் ஏற்றுக்கொள்ளாமல், "நான் உன்னோடு பேசவிரும்பவில்லை" என்று முகத்திலே அடித்துச்சொல்லிவிட்டுப்போனார். "இந்தியாவிலே அச்சடிக்கப்படும் வேற்றுநாட்டவரின் புத்தகங்கள் அல்லாத, இலங்கைத்தமிழ்ப்புத்தகங்களையோ அல்லது வேறு நாட்டிலே அச்சடிக்கப்பட்ட எந்த மொழிப்புத்தகத்தினையோ இன்றைக்கும் இறக்குமதி செய்ய அரசு சம்மதிக்குமா?" என்று அவரிடம் கேட்கவேண்டுமென்பதென் அவா.). இப்படியான நேரத்திலே, தன்னிறைவு நோக்கி, தமிழ்நூல்கள், தமிழ்ச்சஞ்சிகைகள், தமிழ்ப்பாடல்கள், தமிழ்த்திரைப்படங்கள் ஆகியன வெளிவர முயற்சித்தன.

பதிப்புலகில், அம்புலிமாமாவினை ஒற்றாத குறையாக நட்சத்திரமாமா சிறுவர்க்கு வெளிவந்தது; வீரகேசரிப்பதிப்பகம் மண்ணின் மணம் வீசும் நூல்களை வெளியிட்டது. அருள்சுப்பிரமணியம் (பின்னாலே, ஆனந்தவிகடன் மர்மநாவல் போட்டியிலே வென்று போட்டிவிதிகளை மீறியதற்காக, விலத்தப்பட்ட "அக்கரைகள் பச்சையில்லை"), அருளர் என்ற அருட்பிரகாசம் (M.I.A. வின் தந்தை; விடுதலைப்புலிகளை முன்னிறுத்தாத, விடுதலைப்புரட்சியாளர்களை முன்னிறுத்த விரும்பிய ஈழவிடுதலையின் அவசியத்தினைச் சுட்டும் "லங்காராணி"), ஞானசேகரன் ("குருதிமலை"),நந்தி, ஜோன் ராஜன் ("போடியார் மாப்பிள்ளை"), செங்கை ஆழியான் ("வாடைக்காற்று", "காட்டாறு"), பாலமனோகரன் ("நிலக்கிளி", "குமாரபுரம்"), தெளிவத்தை ஜோஸப் ஆகியோர் உட்பட பலரின் நூல்கள் வெளிவந்தன. மறுபுறம் வீரகேசரியின் பதிப்பாளர், தனது பரபரப்புப்பத்திரிகையான மித்திரனின் சார்பான 'ஜனமித்திரன்' பதிப்பகமூடாக, "பட்லி" (அதே சம்பல் பள்ளத்தாக்குக்கொள்ளைக்காரி - பாராளுமன்ற உறுப்பினர்-சூடு-சா அவரேதான்), "ஜமேலா", கோவூரின் "கோர இரவுகள்" போன்ற நூல்களையும் வெளியிட்டது; 'சிரித்திரன்' சஞ்சிகை நகைச்சுவைக்கென்றே MAD சஞ்சிகை வகையிலே வெளிவந்தாலுங்கூட, நல்ல ஆழமான படைப்புகளைத் தந்திருக்கின்றது. வாழ்க்கைநடைமுறையினைப் பகிடியாக யாழ்ப்பாணச்சுடலைப்பேய்ச்சமூகத்தினை உருவாக்கிச் செங்கை ஆழியான் எழுதிய "கொத்தியின் காதல்" அருமையான எள்ளற்படைப்பு. சின்னக்குட்டி, மிஸஸ். டாமோடிரன், மெயில்வாகனத்தார், ஸ்ரீமான் செல்லக்கிளி போன்ற அருமையான கேலிச்சித்திரப்பாத்திரங்களை சிவஞானசுந்தரம் தந்தார். இடதுசாரி எழுத்தாளர்கள், செ. யோகநாதன், செ, கணேசலிங்கன் ஆகியோரும் எழுதினார்கள். (கணேசலிங்கனின் குமரன் பதிப்பகம் இவற்றினை வெளியிட்டதா என்று ஞாபகமில்லை). தவிர, டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை', அ. யேசுராசா, மு. புஸ்பராஜன் ஆகியோரின் ' அலை' போன்ற இதழ்களும் வந்துகொண்டிருந்தன.

இந்தக்காலத்திலே வந்த இலங்கைத்திரைப்படங்கள் வெவ்வேறு தரங்களிலேயிருந்தன. வானொலி நாடகங்களாக வந்த கோமாளிகள், ஏமாளிகள் போன்ற "carry on boys" வகையான நகைச்சு-வை-ப்படங்களைவிட்டால், மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதி கணேசன் (இவருடைய மகன் தற்போதைய கொழும்பு அரசியல்வாதி மனோ கணேசன்), எம்ஜிஆர் படங்களினை அப்படியே ஆடல், பாடல், கதை, காட்சியமைப்பு ஆகியவற்றிலே ஒற்றியெடுத்து, "நான் உங்கள் தோழன்", "நாடு போற்ற வாழ்க" ஆகிய படங்களை எடுத்தார். "யார் அவள்" போன்ற படங்கள் ஒரு புறம். கொஞ்சம் மாற்றத்தினைக் கொண்டு வர, பொன்மணி, தென்றலும் புயலும், வாடைக்காற்று ஆகிய படங்கள் வந்தன. பொன்மணி, சிங்கள இயக்குநர், தர்மசேன பத்திராஜாவின் இயத்திலே வந்தது; பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி நடித்துமிருந்தார். தென்றலும் புயலும் முழுக்க முழுக்க, திருகோணமலையிலேயே வேதநாயகம் என்பவராலே, வங்கியிலே வேலைசெய்த சிவபாதவிருதயர், அமரசிங்கம் நடிக்கத் தயாரிக்கப்பட்டது. வாடைக்காற்று, நெடுந்தீவு மீனவர்களின், அங்கு காற்றுக்காலத்துக்கேற்ப வந்துபோகும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட, செங்கை ஆழியானின் கதையை முன்வைத்து,ஏ. ஈ. மனோகரன், சந்திரகலா முதன்மைப்பாத்திரங்களிலும் இந்திரகுமார், தற்போது, இலண்டனிலே கணவர் பாலேந்திராவோடு அவைக்காற்றுக்கழகம் நாடக அமைப்பினை நடத்தும் ஆனந்தராணி, இப்போது கனடாவிலே நாடகங்கள்போடும் கே. எஸ். பாலச்சந்திரன், ஜவஹர் ஆகியோரைத் துணைப்பாத்திரங்களிலே கொண்டு வெளிவந்த படம். இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து, தம்பிஐயா தேவதாஸின் நூல் ஒன்று வெளிவந்திருப்பதாக அறிகிறேன். இணையத்திலும் தமிழ்ப்லிம் மன்றிலே ஓவியர் மூனா இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து நல்லதொரு வரலாற்றுப்பதிவொன்றைத் தந்திருக்கின்றார்.

05 மே, 21 சனி. 07:06 கிநிநே.

Friday, May 20, 2005

Thursday, May 19, 2005

படிமம் - 150


Light Weight


மெய்: '05 ஜன., 24
திரிவு: '05 மே, 19

கணம் - 465

புண்ணியபூமி

காலங்காலமாய்
ஈரங்காணா
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்:
-இரு சிறு விரற்றுண்டு
-கடிகாரம் ஓடுமொரு கைப்பாதி
-பொசுங்குமயிர் நாற்றம்
-உதிரந்தோய்கிழிசற்சீலை
-புண்டபானை ஒழுக்கும் பழஞ்சோறு
-எரியுங்கூரை உத்திரம்
-நல்லதில்லாத நள்ளிரவு, சுடுகிற நடுப்பகல்
-பயந்த முகத்துடன் இடம் பெயர்ந்த மனிதர்
-புதியதொரு மொழி, சனம், குடிசை, குழாய்நீர்
-ஆயுதம் தாங்கி, கமிஸாக்கி, தொப்பி, சப்பாத்து
-இடமெல்லாம் வளைத்துச்சுற்றிய முள்ளுவேலி.
-இரட்டை இலை பிளந்தோர் இளம் வெள்ளரசு.

அத்தனைக்கும் ஆதியில்
வேறு வயல் வித்திட்டுக் கிள்ளி
நட்டதோர் முற்றிய நாற்றென
நடுவீதியில், புலர்பொழுதிற்
சட்டென முளைத்த புத்தன்
-திறந்த கண் தெரு விறைக்க
வெறுங்கல்லாய்த் தரை அறைந்து.
போதி அத்தனைத் தொடரும்,
போகா அத்தனை துயரும்.

பசும்புல்லை,
பாடுபுள்ளைத் தவிர,
தறை வெடிக்கும்
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்,
மூடிக் கண் திறக்க முன்னோ,
முன் காலை பிறக்க முன்னோ.

05 மே, 19 வியா. 14:06 கிநிநே.

Tuesday, May 17, 2005

பின்னல் - 23


Panels and Ladders


மஸாசூஸெட்ஸ் அவென்யூ தொடர்வண்டிநிலையமருகே
'05 மே, 17 செவ். 17:47 கிநிநே.

துளிர் - 35


Silk & Smile


நோர்த்ஈஸ்ரேன் பல்கலைக்கழகம் நடைபாதையோரம், பொஸ்ரன்
'05 மே, 17 செவ். 15:21 கிநிநே.


துளிர் - 34


Color Contrast


பெயார்லோன் ஒழுங்கை, ஓக் குரோவ்
'05 மே, 17 செவ். 09:22 கிநிநே.


படிமம் - 149


Burnt Out


மெய்: '05 மே, 12
திரிவு: '05 மே, 17

சிதறல் - 103


silhouette


தொழிலகச்சாளரத்துக்கு வெளியே
'05 மே, 16 திங். 19:20 கிநிநே.


Monday, May 16, 2005

துளிர் - 33


Sensation


ஓக் க்ரோவ், பொஸ்ரன் புறநகர்
'05 மே, 11 புத.





கணம் - 464

சச் சச் சச்

சச்சரித்துக்கொண்டிருந்தன எலிகள் - விட்டால்,
பற்கள் பெருகிச் செத்திடுவோம் என்னுமாப்போல்,
தம் முலகிற் சஞ்சரித்து, தலை
தட்டுத் தடவெனத் தாளமிட்டுக்
கை கொட்டிக் கொட்டிக்
குதூகலமாய்க் கூட்டம்போட்டு.

வழவழத்தோடி, வழி சறுக்கி, சொற்சலம் பெருக்க, ஒட்டித் தூக்கினேன் கால்;
கொழகொழத்து வெளிக்கொட்டாமல், பல்லிடுக்கு ஒட்டிய துளிச் சொற்கள்
எகிறி, எட்டிக் குந்தின என்மீதும் குத்தின கூர்ந்தம்பால்.

சிற்றெலி சிதறப் பொறுக்கி வாய்
பேரெலி போட்டுப் போட்டதொரு பேரொலி கேட்டுப்
பார்த்தால், மிச்ச எலியெல்லாம் பேரொலி பிரித்துப்
பிளந்தன; பேசின; பின்னெல்லாம், பிய்த்த எச்ச சொச்ச
எதிரொலியிருந் தெழுந்தும் பிறந்தன பறந்தன பெரிதென,
பெயர், வினை, எச்சம்; எச்சத்துப் பிறவினை; வினையணை பெயர்...
... பல் தத்திடத் தடங்கிட, தாளம் சொல்......சச்சிட; சச் சச்;
சச் சச் சச்; சட சச்; சச் சச்; ச் ச் ச்; சச் சட் சட சட..

நிறுத்தம் வந்தது; இருக்கை வெளிக்க, எட்டினேன்; இறங்கினேன்.
தரித்தொரு கணம், முறித்து, தலை திருப்பிப் பார்த்தேன்;
முண்டியடித்துள் ஏறின மூவருள், சொல்லெலிச்சச்சரவால்
எட்டு வரியேனும் எவர் எழுதுவார் இனிக் கவி?

'05 மே, 16 திங். 15:20 கிநிநே.

சிதறல் - 102


Settling in a City

photostuffed
செல்ஸி-எவரெட், பொஸ்ரன் புறநகர்
'05 மே, 14 சனி.


Sunday, May 15, 2005

கரைவு - 4

உறுத்தல் ஒன்று

இந்தக்குறிப்பினை, மீள வாசித்துத் திருத்திக்கொண்டு போடலாமென்று எண்ணி, இரண்டு நாட்கள்; சனி-ஞாயிறுகளே மிகவும் வேலை நிறைந்த நாட்களாகிப் போனதிலே, திருத்துவது சாத்தியமாகத் தெரியவில்லை. பிந்திப்போடினும், வழக்கம்போல, படம்போடவும் மற்றவர் பதிவுகளிலே பின்னூட்டத்துக்கும் மட்டுமே சிற்றிடைப்பொழுதுகளே கிடைக்குமென்பதாலே, அப்படியே இங்கே.

'05 மே, 15 ஞாயி. 15:15 கிநிநே.
=========================


[படம் நன்றி: சாந்தகுணம்]

மே 2005 காலச்சுவடு; காலச்சுவட்டின் ஆசிரியர் கண்ணன், தன் வழக்கமான 'மௌனத்தின் சிறகடிப்பு' பத்தியின்கீழ் "குமுதம் தீராநதியின் இதழியல் திருட்டு"என்ற குறிப்பினை எழுதியிருக்கின்றார். கட்டுரையின் அடிக்கருத்தைப் பத்தித்தலைப்பே சொல்லிவிடுகின்றது. கொஞ்சம் விரித்துச் சொன்னால், ஐங்கரநேசன் என்பவர் இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் என்ற பத்திரிகைக்காக இலண்டன் பத்மநாபஐயரினைச் செவ்வி கண்டிருக்கின்றார். 2003 ஓகஸ்ற்-செப்ரம்பரிலே இச்செவ்வி வெளிவந்தது. இதனை குமுதம்-தீராநதி அண்மையிலே (மார்ச் 2005) எடுத்துப்போட்டிருக்கின்றது. அது எப்படியாக, ஐங்கரநேசன் & தினக்குரல் இலிருந்து தளவாய் சுந்தரம் & தீராநதிக்கு வந்தடைந்தது என்பது பற்றியும் அதிலே சம்பந்தப்பட்டவர்கள் பற்றியதுமான கண்ணனின் 2005 - மே காலச்சுவடு பத்தி. ஏற்கனவே பத்திரிகைசார்ந்தும் தனிப்பட்ட ஆட்கள் சார்ந்ததுமாக இருந்துவரும் நிலைகளையும் கண்ணனின் விருப்புவெறுப்புகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. அவற்றினைப் பற்றிக் கருத்தினைச் சொல்ல, எனக்கு விபரம் போதாது; ஈடுபாடில்லை.

வேண்டுமானால், எனக்கு உறுத்தியதைத் தவிர்த்து ஒரு விடயத்தினை மட்டும் இது குறித்துச் சொல்லலாம்; ஆக, குமுதம் குடும்பத்திலிருந்து வரும் சஞ்சிகைகளின் விற்பனை குறித்த வேட்கையிலே சட்டமீறலாகவும் நெறிமீறலாகவும் நிகழ்கின்றவற்றின் தடயங்கள் கவனிக்காமல் விடப்பட்டும் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் போவது வழமை. பொதுவிலே, குமுதத்தின் இவ்வகைச்செயற்பாடு, பெரும்பாலான பெருவிற்பனை, இடைநிலைப்பத்திரிகைகளிலே அளவிலே பெரிதாகவோ சிறிதாகவோ நிகழ்கின்றனவையே. அதனாலேயே, இப்படியான எல்லைமீறல்கள்தான் நடைமுறை என்ற அளவிலே எந்த இவ்வகையான பதிப்பூடகங்களினாலும் பேசப்படுவதில்லை. ஆனால், இப்போது, பெருவிற்பனைப்பத்திரிகைகளினை எதிர்த்து ஓரளவுக்குச் செயற்படவும் அவற்றின் வாசகர்களிலே ஒரு சிறுபங்கினையேனும் தன்பக்கம் இழுத்துக்கொள்ளவுங்கூடிய பொருட்பலம், விசுவாசகர்களை இடைநிலைப்பத்திரிகைகள் கொண்டிருக்கின்றன. இந்த வகையிலேயே காலச்சுவட்டின் குமுதம் மீதான தீராக்கருத்துமோதல் படுகின்றது.

எதேச்சையான சமகாலப்பதிவாக, உயிர்மை மே-2005 இலே குமுதத்தின் தான்தோன்றித்தனமான போக்கினைச் சுகுமாரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஓ.வி. விஜயனின் "காஸாக்கின் இதிகாசம்" கட்டுரையைத் தான் குமுதத்துக்காக மொழிபெயர்க்கப்போய், இடையிலே அனுமதி முதலிலே கொடுத்த ஓ. வி. விஜயன் வேண்டாமென்றபின், தான் குமுதத்திடம் அதுபற்றிக்கூறி நிறுத்தும்படி சொன்னதாகவும், ஆனால், குமுதம் தொடர்ந்து அடுத்த பகுதியினை வெளியிட்டதாகவும், பின்னர், ஓ.வி.விஜயன் தன்மீது சட்டரீதியாக வழக்குத் தொடர, குமுதம், அதற்கு அடுத்த வெளியீட்டிலே, பழியினைத் தன்மீது போட்டுவிட்டதாகவும் தன் "குற்றமும் விடுதலையும்" கட்டுரையிலே சுட்டியிருக்கின்றார். குமுதத்தின் யாழ்மணம் முன்னர் இலங்கையிலிருந்து வெளிவந்த மூன்றாவது மனிதன் இதழ்களிலிருந்தும் நேர்காணல்களை அள்ளியெடுத்துப்போட்டிருக்கின்றது. அதுபோன்றும் புலம்பெயர்ந்தார்தமிழ்ச்சஞ்சிகைகளிருந்தும் எடுத்துப்போட்டுமே, யாழ்மணம் நடந்திருக்கின்றதாக, அவற்றினைத் தொடந்து வாசிக்கின்ற பலர் உணர்ந்திருப்பார்கள். ஆனால், யாழ்மணம் என்ற இணையத்தூண்டிலினைக் குமுதம் எதிர்பார்த்த மீன்கள் கௌவாததால், பின்னொரு முறை அஃது அச்சுப்பதிப்பாக வரும் நோக்கிலே போடப்பட்டிருப்பின், அந்தத்திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் (ஆனால், இதேநோக்கினை ஓரளவுக்குக் கொண்டிருந்த் கோடம்பாக்கச்சமாந்திரங்களான தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால், நளதமயந்தி வெற்றி பெற்றது வேதனைக்குரிய விடயம்); யாழ்மணம் இணையத்திலேகூட, யாழ் மணப்பதாகத் தெரியவில்லை.

அதேநேரத்திலே, இங்கே இன்னொன்றையும் நாங்கள் பார்க்கவேண்டும் - குறிப்பாக, கண்ணன்; இடைநிலைப்பத்திரிகைகள் தொடக்கம், சிறுபத்திரிகைகள் வரைக்கும் நிறைய பிறமொழி ஆக்கங்களை மொழிபெயர்த்துப்போடுகின்றன - சில, மூலமொழி, இடைமொழியாளர்களுக்கு நன்றியுடன், சில அதுவுமேயில்லாமல். ஆனால், இப்படைப்புகளிலே எத்தனை இந்த மூலமொழி, இடைமொழிப்படைப்பாளி-மொழிபெயர்ப்பாளர்களின் அனுமதி பெற்று வருகின்றன என்பது எனக்குத் தெரியாது. தமிழிலே ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு சஞ்சிகை அள்ளிப்போடுவதோ, அல்லது சரியான அங்கீகாரத்தைக் கொடுக்காமலோ, அல்லது தனக்குத் தேவையானதை மட்டும் அள்ளிப்போடுவதோமட்டுமே தவறானது, மற்றைய மொழிப்படைப்புகளினை எப்போதும் நாங்கள் எடுத்துப் பெயர்த்து, விற்பனைக்காகப் போட உரித்துடையோம் என்ற ஒரு சிந்தைப்போக்கு இருப்பதாக எண்ணுகிறேன். பிடித்த மூலப்படைப்பாளி, பதிப்பாளர், பத்திரிகை தொடங்கி, அதைத் தமிழிலே கொண்டு வந்து அச்சடிக்கும்வரைக்குமுள்ள, ஆள் அணுகுதல், உரித்துப்பெறுதல், கொடுக்கவேண்டிய சன்மானம், இதற்கான காலத்தேவை, ஆள்வேலைச்செலவு என்பன (இடைநிலை &) சிறுபத்திரிகைகளுக்குக் கட்டுப்படியாகாதென்பதையும் நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அப்படியாக இருக்கும்போது, தீராநதி திரும்ப காலச்சுவட்டினைப் பார்த்து, தகுந்த ஆதாரங்களுடன் "கேட்டா எடுத்துப்போட்டாய்?" என்றொரு கேள்வியினை ஏதாவதொரு காலச்சுவட்டின் கவிதை, கதை, கட்டுரை குறித்துக் கேட்குமானால், மறுபேச்சுப் பேசமுடியாத நிலை காலச்சுவட்டுக்கு வரலாம்.

தீராநதியின் காலச்சுவடு குறித்த கண்ணனின் கவலை பின்வருவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது; "ஈழத்தமிழர்தேசியம் குறித்து காலச்சுவடு போன்ற சஞ்சிகைகளும் எதிர்நிலையான கருத்தை வெளியிடுகின்றது" என்று பத்மநாப ஐயர் சொன்ன கருத்தினைப் பெருப்பித்து, தீராநதி போட்டுவிட்டதைச் சுட்டி, காலச்சுவடோ தானோ அப்படியாக இல்லை என்பதை நிரூபிக்கும்விதமாக சில நிகழ்வுகளை ஆதாரங்களாக முன் வைத்திருந்தார் - அண்மையிலே ஈழநாதன் குறிப்பிட்ட, சிங்கப்பூரிலே கண்ணன் வந்தபோது நிகழ்ந்த நிகழ்வு உட்பட; ஆனால், இதுமட்டும், காலச்சுவட்டினை ஈழத்தேசியத்துக்கு எதிரான சஞ்சிகையாக தீராநதி இந்தச்செவ்வியினை வைத்துக்கொண்டு நிறுத்த முயலாதிருந்தால், கண்ணன் இந்தக்கட்டுரை தீராநதியிலே வந்திருப்பது குறித்துப் பத்தியெழுதியிருப்பாரா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இனி நான் எனக்கு உறுத்தியதைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இரு குழுவினரின் இந்த உதைபந்தாட்டத்துக்குப் பத்மநாப ஐயரின் தலை பந்தாக உருண்டது எனக்குக் கவலை; ஏற்கனவே, ஐயர் என்ற பின்னொட்டினைக் கொண்டிருப்பதற்காக, தமிழகத்தின் பிராமணர்-அல்லார் சிக்கலினை இலங்கைக்கு அப்படியே களம், காலம், "ஆதிக்கம் ஆர் கையில்" என்பன பார்க்காது பெயர்க்கமுயல்கையிலே பிராமணர் என்ற முகம் தேடுகின்றவர்களுக்கு அவர் சில இடங்களிலே அநியாயத்துக்கு இலக்காகியிருக்கின்றார் என்பதைக் கண்டபோது, ஏற்பட்டதுபோன்ற கவலை. அவர் என் மிக மரியாதைக்குரியவர் என்பதற்காக பின்வரும் கருத்தினை எழுதவில்லை; கண்ணனின் பத்தி, காலச்சுவடு-ஈழத்தேசியம்-தீராநதி என்பவற்றின் நிலைப்பாட்டினை விளக்குவதாகப் போய், பொதுவிலே தன் அரசியல் சார்ந்த கருத்தினை எங்கும் திணிக்காத, தானும் தன் ஈழ இலக்கியப்பதிப்பும் என்று செயற்பட்டிருக்கின்ற பத்மநாப ஐயருக்கு வீணே நண்பர்கள் முறித்துக்கொள்ளும் + விரோதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிலையைமட்டுமே உருவாக்கக்கூடும்.

தீராநதியின் காலச்சுவடு மேலான குறிப்பு அடங்கிய கட்டுரையை முன்னிட்டு, கண்ணனுக்கு தன் பத்தியிலே எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமிருப்பதை மறுக்கவில்லை. ஆனால், அந்தக்குறிப்பினை, தீராநதி எப்படியாகத் தினக்குரல் செவ்வியைப் போட்டது என்பதோடு சேர்த்து, ஒரே பத்தியிலே, இரண்டு விடயங்களையும் வேறாகப் பிரிக்காது போட்டிருப்பது, ஒரு விதத்திலே அநீதியானது; குறிப்பாக, தினக்குரல் முதல் தீராநதிவரையான கட்டுரைப்பயணத்திலே குறிப்பிட்ட சம்பவங்கள் தனிப்பட்டவர்களிடையே நிகழ்ந்த சம்பவங்கள்; அவை அச்சிலே பொதுவிலே வரமுன்னாலே, சம்பந்தப்பட்டவர்களின் சம்மதம் கேட்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியாகக் கேட்கப்படாதபோது, தனிப்படக்கூறியதை அச்சிலே போடுவது முறையான செய்கையல்ல; வெறும் நம்பிக்கைக்கேடாக மட்டுமே முடிவடையும். இதைக் குறித்து ஐயரோடு பேச இதை எழுதும்வரைக்கும் எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிய விருப்பம்; என்னவென்று விடுப்பு கேட்காமல், அவராகச் சொல்லபோகிறவர் இல்லை. ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்பதை மீளப் பதிந்து, இன்னும் இந்த உதைபந்து விளையாட்டினை மேலதிக நேரத்திலே, அவர் தலைக்குத் தண்ட உதை கொடுத்து வெற்றி பெற்றாரைத் தீர்மானிக்க விருப்பமில்லை. இவர் பேசாமல், இயல் விருது பெறாமலே இருந்திருக்கலாம். தனிப்பட்ட அளவிலேனும் வேண்டாத பிரச்சனைகள் திணிக்கப்படாமலிருந்திருக்கலாம்.

'05 மே 13 வெள். 18:10 கிநிநே.


துளிர் - 31


Spiral Sisters - I


வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 17:12 கிநிநே.




Spiral Sisters - II


வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 17:12 கிநிநே.


Saturday, May 14, 2005

துளிர் - 30


CrimsoOn- I


வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 16:52 கிநிநே.




CrimsoOn - II


வீட்டுவாசல், மோல்டன்
'05 மே, 14 சனி. 16:53 கிநிநே.




இரண்டு படங்கள்; ஒன்றிலே, பக்கவாட்டிலே பாதி இ(ல்)லை; மற்றதிலே மேலே பாதி இ(லை)லை. நித்திரை கொள்ளமாட்டேன் என்று நின்றவனைக் கையிலே தூக்கி வைத்துக்கொண்டு வீட்டு வாசலிலே போய் நிற்கும்போது, படங்களை எடுத்திருக்கக்கூடாது; குறிப்பாக, தூக்கிக்கொள்ள(வோ இழுக்கவோ வசதியான) சின்ன வளையம் போட்ட புகைப்படக்கருவியினால்.

Friday, May 13, 2005

தெறிப்பு - 20


Knowing is beatifying


பொஸ்ரன் சுவர் விளம்பரம்
'05 மே, 12 வியா. 11:44 கிநிநே.


துளிர் - 29


Yellow Fever - I


பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.




Yellow Fever - I


பொஸ்ரன் நகர் வீதி
'05 மே, 11 புத. 14:55 கிநிநே.




தலைப்புகள் பொருந்தவில்லையெனத் தோன்றினால்,மஞ்சள் மகிமை, மஞ்சட்பூமர்மம், மஞ்சுளா, மஞ்சள் சரக்கு எப்படியேனும் மாற்றிப் போட்டுக்கொள்ளவும்

படிமம் - 148


Refraction of Light


'05 மே, 12 புத. 17:24 கிநிநே.

உயரம் - 12


Shapes


'05 மே, 12 வியா. 19:20 கிநிநே.

Thursday, May 12, 2005

விளக்கு - 3


Globall


'05 மே, 12 வியா. 18:44 கிநிநே.


A Street Car Named Desire

"இன்றிரவுக்கேதுணவு?" என்றாள்.

"ஆசை" என்றான் அவன்.

"தினசரி
ஒன்றையே
தின்று தின்று
ஜீரணிக்க முடியவதில்லை"
-நிலம் நோக்கி அவள் சொன்னாள்.

சோடிய ஆவித் தெரு விளக்கு
மெல்லச் சிரித்திருக்கும்
ஒளி பரப்பி.

"என்ன செய்ய?
என்னிடம் எஞ்சியிருத்தல்
எல்லாம் இது ஒன்றே
இன்றைக்கு...
என் அன்பே,
என்ன செய்ய? - இந்நிலையில்
நான்
என்ன செய்ய?"
-துளி வியர்த்து துயர் பரப்புவான்.

தூரத்து நிலவொளி எறிக்கும்
அவள் வதனத்தில்.
வேதனைக்கிரகணம் மறைக்கும்
அவன் விழிகளை.

"ஏது செய்ய?
நிதம் தினம்
தின்னத் தின்ன
அடங்கலில்லை
பசி;
தின்றதும்,
ஆகிச் செரிதலில்லை.
ஆதலினால்,
இன்றிரவு எனக்கு வேண்டா
உன் மண்டிய ஆசை.
கொண்டு போ;
வேண்டிக் கிடப்பாருக்கு
விற்றேதும் வேறு பெற்று
வாங்கி வா
நாமுண்ண
பொருள் கொண்டு."
-நிலம் நோக்கிச் சோர்ந்தனள்,
அவலம் சேர் இளமாது.

வீதி விளக்கு,
தகித்தது.
விம்மியது அதன் ஆவி
வெடிப்புற்று
ஒளித்துமி தும்மி.
விரகம் அதனோடு
வெளிப் பரவி
வியாபித்தது.

அவன் துன்பமுற்றான்;
அவள் துவளல் கண்டு
காதல் மனம்,
கனத்து
நிலை
தொய்வுற்றான்.

"என்னிடத்தே
நீ விற்ற
உன் ஆசைகளை
எத்தெருவில்
எவளிடத்தில்
எவ்வண்ணம்
யான் விற்றுவைப்பேன்?
வேண்டுமானால்,
மீண்டும்
நீயே வாங்கி கொள்."


"விலை குறைத்து, பொருள் குறைத்து
விற்றதனை வாங்கி வைத்தல்
வியாபாரத்தே கண்டதுண்டோ?
வேண்டுமானால்,
வீதி மருங்கு விளக்கடியே
குவித்துக் கொட்டிவை;
வேண்டியோர்கள்,
கை அகழ்ந்து ஏந்திப் போகட்டும்;
செயல் நிகழ்த்த
இருப்புடையார்
இல்லம்
எங்கேனும்
தாமேனும்
வாழ்ந்திருக்கட்டும்
இன்பமாய்
எம் இள ஆசைகள்."

பழையன தொலைத்து
அடுத்த நாளைக்கு
புது ஆசைகள்
வாங்கிப் போனார்,
மனக்கடல்
இன்றைக்குக்
கைவிலக்கி
அவரவர் திசை
வழி கண்டு
இளம் காதலர்கள்.

விரயமான
வீதி நிலத்து ஆசைகளை
விளக்கு விழுங்கிற்று.
பிறர் மனத்தே
தேங்கிய ஆசைகளைத்
தின்றிருத்தல் மட்டுமே
அதன் தூணைத்
துணையாய்த்
தாங்கிக் கிடத்தலாயிற்று;
அதன் ஆவி
அவ்வப்போது ஓங்கி எரியும்,
மோகத்தால்,
முடியாத்தனத்தால்.

வீதி விளக்கடியில்
ஆசை மொட்டுக்கள் என்றும்
அநாதையானதில்லை.
காதலர்
தொலைத்துப்போன துயர் தொட்டு
விலக்கிப்போன வினாக்கள் வரையிட்டு
தான் தின்று
ஒளிக் கதிரூடே
பின் வரு
பெண் ஆண்,
துருத்து
மனத்தே
துளைத்திருக்கக்
காத்திருக்கும்
சாலையோரச் சோடிய விளக்கு.

சார்ல்ஸ்
வீதிக்கார் வரும்,
விளக்குத்தூண் விலக்கி,
நான் ஏறுவேன்....
................புதிதாய் எனக்கென்று
.......................சில கனவேந்தி
- இவ் வொருத்தன் தனி இரவுக்கு,
மேலும் சில,
என்றேனும் வரப்போகும்
அல்லது என்றைக்குமே
வராமலே போகக்கூடும்
என்றான
அவளுக்கு,
எனக்கியன்ற என் பங்குச் சேகரிப்பாய்.

98/12/14 23:25 CST

துளிர் - 28


Fear


நகரத்து மரமொன்று
'05 மே 11, புத. 18:56 கிநிநே.




Hesitation


நகரத்து மரமொன்று
'05 மே 11, புத. 18:57 கிநிநே


சிதறல் - 101


City Lives


பொஸ்ரன்
'05 மே, 12, வியா. 12:21 கிநிநே.


படிமம் - 147


Desert


'05 மே, 11 புத. 19:02 கிநிநே.

பின்னல் - 22


Mushroom Metropolis


ஃப்யார்லோன் ஒழுங்கையில் ஒரு மரத்தடியில்
'05 மே, 11 புத. 10:25 கிநிநே..

காளான் தேசம்

நிழலும் மழையும் முலைப்பாலாய்க்
குடித்து வளரும் நிலம்சூழ்தேசத்தே
நாளுக்கு நாள் நசிந்து போகும்
காளான் வீடுகளில் என் குடியிருப்பு.

மழை தரை விட்டுவிட்டுத் தட்டும்
காற்றுத்தடம் பார்த்து நடக்கும்
குடைக்காளான் மூக்கு.
அற்றதில் பிறக்கும் தேகம்;
கூரையாய்க் கூம்பிச் சடைக்கும் கொண்டைத்தலை;
இற்றுச் சமாதி பட்ட மரம் சுற்றிச் சுற்றி வட்டத்துளிர்ப்பு,
செத்தவுடல் கொள்ளியிட்டு எரித்துவந்து,
மனைவி சட்டைத்துணி விலக்கிச் சரசமிட்டு ஒட்டித் தழுவு
சுடலைவாழ் வெட்டியின் ஞானக்கற்றைவீச்சு.

குடை பிடித்து வழுகி நனையும் விம்மி, மீன்பூச்சுவாசம்;
விரியும்; சுருங்கும்; வளையும்; வளரும்.
கம்பளிப்பூச்சிகளின் காதலோட்டங்கள்,
கால்களைச் சுற்றிச் சுற்றி ஊறிச் சுனைக்கும்.
இந்த இருப்பில் பிறக்கும் நம்பிக்கை.

மழை மறையப் பிடிக்கும் சோகை;
படியும் பசலை; ஒசியும் உடல்;
காயும்; கசங்கி உதிர்த்திறக்கும் இரப்பை.
சுவாசப்புற்றுமானுடன் வாழ்க்கை.
பட்டமரத்துள் ஊரும் நிழற்படிமம்,
கொட்டும் காளான் துகள் தேசம்.

ஒரு நாள் காளான் தேசம் விரிந்ததெம் உலகாய்.
பட்டமரங்கள் ஆகின வாழ்களங்கள்.
நிழலும் மழையும் தேடி நிமிர்வதாய் எம் வாழ்க்கை.
செத்தமரம் கண்ட தேசமெல்லாம்
செவ்விச் சிறக்கும் எம்பரம்பலின் சிறகு.
விருட்சப்பசுமை இளமை வற்றிப் பட்டாலும் சேதமில்லை,
தன் பிருஷ்டம் ஒரு போகம் ஒட்டி வாழும் உயிர்ப்புக்கேனும்,
உடல் உளுத்து வண்டு செத்த மாவற்றல் தூளாய்ப்
பெருகிப் போகாதிருக்க விட்டுவிடா யாசிப்போடு
காளான் தேசத்துக் குடைகள்,
விரியும்; சுருங்கும்; வளையும்; வளரும்; மடியும்;
மடிதலும் மறைதலும் வேறு வேறு,
இற்றலும் இடைக்கிடைத் தோன்றலும்போலே.
மீளக் கனியும்.
மழையும் கூட நிழல் நீளச் சொட்டும் நிலம்.

'99 ஓகஸ்ட், 30


Wednesday, May 11, 2005

சிதறல்-100


An Evening After the School



கொலம்பஸ் அவன்யூ மைதானம், பொஸ்ரன்
'05 மே, 11 புத. 18:54 கிநிநே.


அரைகுறை - 3

செம்மஞ்சட்சரக்கின் விளைவு

சுந்தரவடிவேலின் செம்மஞ்சள் சரக்கு பதிவிலே வாசனுக்குப் பதிலாகக் கொடுத்த பின்னூட்டம் போக மறுப்பதால் (நீண்டுவிட்டதோ?), இங்கே.

இப்பதில் அவசரமாக எழுதப்பட்டதால், இலக்கணத்திருத்தங்களும் மேலதிக இணைப்புகளும் கொடுக்கப்படவில்லை. பின்னொரு முறை விரிவாக எழுத முடியுமென நம்புகிறேன்.


=================================

லூயிஸியானா, மிஸிஸிப்பி, அலபாமா மாநிலங்களிலே இந்த வியட்நாம் போர் காலத்து மாசு வேதியலாயுதங்கள் மூடித் தாழ்க்கும் இடங்களாப் பயன்படுவதையிட்டு இன்னமும் சின்னச் சின்ன சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பெரிதும் வெளியே பேசப்படுவதில்லை. இதிலே இனஞ்சார் நச்சுத்தன்மை (racial toxicity) உம் ஒரு பெரிய விடயம். இது தனியே இப்படியான செம்மஞ்சட்சரக்குகளாலே மட்டுமல்ல, மருந்து தொடக்கம் வேறுபல வேதியல் உபவிளைவுகளினான உபாதையுங்கூட. உலூஸியானாவிலே நியூ ஓர்லியன்ஸுக்கும் மாநிலத்தலைநகர், பட்டன் உரூச்சுக்குமிடையே இருக்கும் இப்படியான தொழிற்சாலைப்பிரதேச நெடுஞ்சாலையை, Cancer alley என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், இதிலே பாதிக்கப்படுகின்றவர்களைப் பார்த்தால், கறுப்பினத்தவர்களும் வருவாய் குறைந்தவர்களுமே அதிகம். அப்படியாகத்தான் இடம் பார்த்துச் செயல் நடக்கின்றன. ஆனால், மூன்றாம் உலகநாடுகளும் ஏன் இந்தியா சீனா போன்ற தொழில்நுட்பத்தின் எதிர்காலமெனச் சொல்லப்படும் நாடுகளுங்கூட, இதே மாதிரியான அபிவிருத்தியடைந்த நாடுகளின் கழிவுகூடங்களாகச் சத்தமின்றி மாறிவருகின்றன. மற்றும்படி, அமெரிக்காவிலே, ஹட்சன் ஆற்றின் படுக்கை வண்டலிலே dioxin தொடக்கம் பல குளோரினேற்றப்பட்ட நச்சுக்கள் விதைக்கப்பட்டிருந்தன. ஆனால், அமெரிக்காவின் Superfund திட்டத்தின்கீழே பெருமளவிலே இவையெல்லாம் நீக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், டயோக்ஸின் நச்சு அண்மையிலே பெரிமளவு பேசப்பட்டது தனிமனிதர் ஒருவருக்காக; உக்ரேனினின் விக்ரர் உயூசெங்கோவிற்கு ஊட்டப்பட்டிருக்கலாமென்பதற்காக.... எத்தனையோ மனிதர்கள் பிற இடங்களிலே சத்தமின்றி இறந்து கொண்டிருக்கின்றார்கள் :-(

=============================

1. Chemical Weapons Disposal and Environmental Justice

2. Beyond the Chemical Weapons Stockpile: The Challenge of Non-Stockpile Materiel

3.Alabama town wants chemical "hoods" Army's incineration of deadly gases creates national debate

4. Army begins chemical weapons burn

5. cancer Alley

6. PBS: Point Of View: http://www.pbs.org/pov/pov2002/fenceline/index.html இந்த விவரணத்தினை நான் பார்த்திருந்தேன். மிகவும் விரிவாக வறுமைக்கோடு/இனஞ்சார் நச்சுப்பரவல் குறித்து சிறப்பான நேர்முகத்தோடான விவரணம்

7. GE's Hudson River PCB (Arochor) dumping is an well known issue. A sort of informative link can be EPA's Hudson clean up site. ஹட்சன் குறித்து ஒரு விவரணமும் PBS இலே இருந்தது; அதிலே பழைய GE தலைவர் Jack Welch தங்களிலே பிழை என்பதை முழுக்க மறுப்பார் (இத்தனைக்கும் அவர் வேதியற்பொறியியலிலே கலாநிதிப்பட்டம் பெற்றவர்). கூடவே, நாடோடிப்பாடகர்(!), பீற் ஸீகர் (அண்ணாத்தைக்கு இங்கே ஒரு சலூட்டு), ஹட்ஸனைக் காப்பாற்றுவது குறித்த ஓர் அமைப்பே வைத்திருப்பவர், அது குறித்து, ஹட்ஸனிலே ஓடத்திலே சென்று குறித்துக் காட்டுவார். AMERICA'S FIRST RIVER தனிப்பட்ட அளவிலே, ஹட்ஸன் ஆற்றுப்படுக்கையிலே குளோரினேற்றப்பட்ட பல்பகுதிய மாசுக்களின் (Aroclor என்ற வணிகப்பெயர் கொண்ட PCB) பரம்பல் குறித்ச் சில ஆண்டுகள் வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இருந்ததால், அது குறித்த கணிசமான உசாத்துணைக்கட்டுரைகளைச் சேகரிக்கவேண்டி வந்தது. அவற்றிலே, சுருக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கும் பகுதியை எடுத்து சமயம் கிடைத்தால் இடுகிறேன். [ஆனால், நான் முன்னர் குறிப்பிட்டதிலே தெளிவாகப் பிரித்துச் சொல்லியிருப்பதுபோல, ஹட்ஸன் பல்பகுதியங்களுக்கும் வேதியலாயுதங்களுக்கும் ஏதும் சம்பந்தமில்லை]

8. பிற நாடுகளுக்கு முன்னேறியநாடுகள் அணு/வேதியற்கழிவினை அனுப்புவது குறித்து, நிறைய இணையத்திலே இருக்கின்றது.

ஒரு விடயமென்னவென்றால், அமெரிக்காவிலே Love Cannel சிக்கலுடனும் 1967 Rachel Carson இன் Silent Spring என்ற புத்தகம் (பறவை முட்டைகளின் கோது மெலிதாதல் குறித்தது) வெளிவந்ததோடும் (கூடவே 60 & 70 களின் நாட்டுநிலைகளோடும்) சூழல் குறித்தொரு விழிப்புணர்வு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த SUPERFUND என்ற CERCLA வரைவு, நச்சு, அதிசேதமான சூழலைச் சீர்திருத்தவும் தடுக்கவும் முயன்றதால், கடந்த இருபதாண்டுகளாக நாட்டிலே சூழல் சரியான திசையிலேதான் சென்று கொண்டிருந்தது. மேற்கூறிய CERCLA இலே பின்னாலே கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்கள், SARA போன்றவை அதிகேடான நச்சுக்களும் வேதிமப்பொருட்களும் தயாரிப்பது தொடக்கம், அதை அழிப்பதுவரையும் சரியான கணக்கு (காசிலே என்பதல்ல, இரசாயன, பௌதீகப்பண்புகளிலும் அளவீடுகளிலும்) அரசுக்குக் காட்டும் தேவையைக் கொண்டு வந்தன. ஆனால், புஷ் இளவல் வந்ததுடன், அறிவியலும் அரசியலும் முன்னைக்கு அதிதீவிரமாகக் கலந்துபோய்விட்டன. (ஐதரசன் வண்டி எல்லாம் கூட்டத்துக்கு நன்றாக இருக்கும்; செயற்படுத்த??) பாரமூலங்கள் நீரிலே இருக்கும் எல்லை தொடக்கம் எல்லாவற்றினையும் கிட்டத்தட்ட இச்சைப்படி அரசியற்பலமுள்ளவர்கள் மாற்றுகின்ற நிலை வந்தது. அம்மணி Christie Whitman னே அண்மையிலே தன் EPA வேலை தொடர்பாக தன் கட்சிக்காரர்களை NOW நிகழ்ச்சியிலே குறை சொன்னார் (அலாஸ்கா எரிபொருள் தொடர்பாக). ஆனால், ஐரோப்பா &கனடா, அமெரிக்காவிலும்விடக் கூடுதலான சூழலுணர்தலைக் கொண்டிருக்கின்றதென்பது என் உணர்தல்.


'05 மே, 11 புத். 18:24 கிநிநே.

துளிர் - 27


Green: Spiral & Spread I


நோர்த்ஈஸ்ரேன் பல்கலைக்கழகம்
'05 மே 11, புத. 14:54 கிநிநே.




Green: Spiral & Spread II


நோர்த்ஈஸ்ரேன் பல்கலைக்கழகம்
'05 மே 11, புத. 14:54 கிநிநே.


பின்னல் - 21


Neural Network


ப்யார்லோன் ஒழுங்கை, மோல்டன்
'05 மே 10, செவ். 19:17 கிநிநே.

துளிர் - 26


Ball Bearer


கொலம்பஸ் வீதி, பொஸ்ரன்
'05 மே 10, செவ். 13:35 கிநிநே.





பின்னல் - 20


Sky Lace


அந்திவானத்தில் விமானப்புகை
'05 மே 10, செவ். 19:13 கிநிநே.

Tuesday, May 10, 2005

கணம் - 463

செய்தி

நேரே கிடைத்ததென்கிறாய் நீ - கடைக்கண்
கதைக்குறிப்பு கறுத்துச் சுருங்கிக் மறுக்கிறது.

சிறு கருவட்ட மயிலிறகு போலோர்
காற்றேகும் இலேசான பொருட்செய்தி.
ஒற்றை வரி - எட்டுச்சொல் - முற்றுப்புள்ளி

எப்படித்தான் தொலைந்திருக்கும்?
எங்கேதான் தொலைந்திருக்கும்?
இத்தனை கொத்து விளக்கத்துக்கான
விளக்கத்துக்கான விலக்கற்ற விளக்கு
வில்லங்கங்கள் சடைத்து முளைக்கமுன்,
சரியாய் எண்ணிப்பார்த்தோமா?

எட்டுநடைத்தூர இடுக்கெல்லாம் தேடலாம் வா.
பாறைமனிதர் எம் போதைக்குப் பயந்து
பாதை இடையிற்றான் எங்கோ - பல் கிடுக்கிப்
பதுங்கியிருக்கிற தென் செய்தி.

'05 மே 10, செவ். 18:13 கிநிநே.

துளிர் - 25


Greenland


கொலம்பஸ் வீதி, பொஸ்ரன் மாநகர்
'05 மே, 10 செவ். 13:37 கிநிநே.





உணர்வு - 32


Light Reading

செம்மஞ்சள்வண்டியிலிருந்து..

'05, மே. 10 செவ். 13:04 கிநிநே.


Monday, May 09, 2005

ஆழமான பதிவு

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி, விழுமியம்,தட்டையான பார்வை,கற்பிதம், ஜெயமோகன், திண்ணை, கார்ஸியா

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

தமிழ், பின்னவீனத்துவம், கோதண்டம், தண்டம், ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், புஷ், புல், காளை, கயிறு, கவிதை, விதை, தை, கதை, சூலம், கலம், களம், பெண்ணியம், பித்தளை, பூர்ஷுவா, புத்திஜீவி, புகைப்படம், முகமூடி, கோமாளி, கோலி, கோடி, தீநரி, நெருப்புக்கோழி

Moral: Extensive Logging is harmful for the environment; So is Continuous Webbing.

Sunday, May 08, 2005

தெறிப்பு - 19


Malden's Big Fat Dipped Dunkin'


ஸ்ரொப் அண்ட் ஸொப், மோல்டன்
'05 மே, 08, ஞாயி 18:36 கிநிநே.