பழசு - 9
அதிர்ஷ் டமும் கஷ் டமும் தனி யே வரா து என்ப து உண் மை. நமக் குச் சுடச் சுடப் பதிவு போட, நேரம் கி டைப் ப தில்லை; சுட்டுப் போட மனசு கிடைப் பதில் லை. ஆனால், பதிவு போடா மலிருக் கவும் கவுண் டர் கல்சர் டவு சர் வயப் பட்ட மனம் விடுவ தில்லை. இந்த நேரத் திலேயே மெய் யான பக்தர் களைக் காக்கப் பஹ வான் மனித உரு விலே அகிலத் திலும் இணையத் திலும் அவதாரம் எடுக் கின்றான் என் பது செயின் ஈ மெயில் களை ஏழு பேருக் கு அனுப் பா மலே உண் மையா கிறது.
எனக் காக ஒரு கோ னார் மொழி பெயர்ப் புப் பால் கறக்க தானே முன் வந்திருக் கிறார். அணிந் துரை, பணிந் துரை, கடிந் துரை, குரை எல்லா வற்றுக் கும் தாம் உபய காரராக நான் நீ என்று போட்டி. இது எழுத விஷய மில்லாத வனுக்கு முதல் அதிர்ஷ் டம்.
தஞ்சா வூரின் குக் கிராமத் திலும் து பாய் ஆப்பக் கடை யிலும் பங் களூர் பீர் பாரி லும் கொரியா வின் சக் கூரா மரத்துக் குக் கீழும் என் பெயர் ப்பு கள் வாசிக் கப் பட்டு விவாதிக் கப் படுவது சிவாஜி மேக் கப் உரு மாற்ற மெற்றா மோர் போஸிஸ் போல டிஜிட் டல் ட்ரீமாக விரி கிற து. ராஜ வேர் வை பூத்து கந் தக ரோ ஜா சுகந் தம் கரை ந்து வீசு கிற து. அலை யாக் கட லின் நுரை நுழைந் து அளைந் து கிளை த்த நீண்ட விரல் கூர்ந்த கூ னல் ஆதித் தாய் வந்து மொழி வேரிலே பூனைக் கடி கடித்து மெல் லிய சுகந் தத்தை நுகர்ந்து நகர் வதைப் பார்த் தாயா, டியூ ரோடா செல் லம்மா? ஓர் உடை ந்த யுகத் தின் ஈரா னிய சினி மா சேர் க்கிள் சிக ரெட் நாய கியாய் நீ யும் இங்கர் மேன் நா யக சது ரங்க மர ணமாய் நா னும் கறை படா த தென்ன மெரிக்க மழ லை ம ழைக் காடுக ளிலே தி ரேத கலி யுகக் கன வாய் அலை ந்து தலை கீழ் மாம் பழக் குரு ட்டு வவ் வாலாய் கு கை பிர ம்ம ராட்ச ஸாகி மு கம் அறை ந்து தி ரிய முளை த்த மெய் மை மறக்கப் படக் கூடிய காதல் புணர்ச் சியா, பெரு விரல் போன்ற அ தை த்த இதழ் ஈ ரம் பிரிந் தவளே? அக் காமம் சொட்டிப் பரவி நனைந் து மே லேறி சிலிர்ந் து மூழ்க் கும் ஸ்வாச நாளிலே உன்னை ஒரு 30% காட் டன் மீதி பொலிய ஸ்டரென்று செம் புரட் சி செய்ய சீனத் தின் சின்னக் கை கள் பிஞ்சுப் பசுங் கை கள் ஊதப் பறக் கும் உமிக் கூலி க்கு போர் வெம் மை பூக்க நெய்த வாசனைக் கட்ட விழ்ப்புத் துகி லாக பேரங் காடி கள் ஊடே வந்து ஒரு சுதந் திர தினத் தில் கழிவு விலை யில் உன் னைக் காண கட்ட மைத்துப் பின் நவீன மாக அணிந் து கொல் வேன். ஸகி என் பதிவு களின் மொழி பெயர்ப் பு களின் உரத்த ஸப்தம் மௌன மாக உனக்கு இந் தப் பூச் சிகள் சில் லிட்டுப் புணர் ந்து முயங் கும் நள் ளிர விற் கேட் கிறதா? ஒரு மழை மின் னலை இடி அழு த்தி தீ யென அணை த் துப் புணர் ந்த வே தனை ஊடறு த்த இன் பக் கணத் தின் கனத் திலே நனையா மல் இரு பது அமெ ரிக்க ஏகாதி பத்திய டாலர் ஏசி பால் கனியி லிருந் து பார்ப் கோர்னு டன் டாபோ ரின் சின்னக் குழந் தையின் வெயிற் சோகங் களுக்காக என் அராஜக வேர் வைத் தோளிலே உன் அவ்லோன் உ தட்டுச் சா யம் பட்டு விடச் சாய் ந்து நீ மெல் லிய தாக "டா நா ன் உ ன் டீ டாபோர் டாப் டாப்பர் போர் bore" என்று ஆறு தலை முறைத் தாய் மையின் பிர ஸவ வே தனை வனம் நிலம் தாண்டிக் காவிக் கடத்தி முனகிய ஆபி ரிக்க ஆசி யாவின் அமெரி க்கப் பெருந் துக் கத்தை அண் டார்ட்டிக்கா உல கம் அறி யாது. பக்கத்து இருக் கைப் பார்ப் பான், பார்ப் கோன் ராம ஸேது பின் ஆமி புலி பாசி சிட்டு அறி லேது. ஆனால், என் யௌ வனக் கா துப் பறையைக் கிழித்த உன் வைர மூக் குத்தி அறி யும் ஸ்நே கீ! உன் கொப் புளித்த வேதனையை இரா மானு சனும் பெரி யாரும் பிரபா கரனும் புரிந்து துடித்த டெஸி பல்லிலே என் வீச்சம் ஒரு மச் சமாக தாய் வழி சமுதா யத்துச் சேது மண் மேட் டிலே வால சைய ஓடும் வ தையை உன் ஆயி ரம் காலத் து பெண் ணடிமை மீறும் பல் தேய் சீயப் புரட் சியினால் ஆத் மார் த்தமாக தத் துவம் ஸ்பரி சிக்க முடி கிறதா, அசினேகா? ......
..... மன்னிக்க வேண்டும். பெயர்ப்பாளர், பதிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியிலே எங்கோ போய் விட்டேன். அதாவது, பெயர்ப்புக்கு இன்னும் -/பெயரிலி.யின் அருஞ் சொற் பத ங்களைக் கொடு க்க வேண் டும். அது வும் சொல் பிரி த்துப் பெயர் ப்பாளாரும் புரி யச் சிறி தாகக் கொடு க்க வேண் டும். அதன் வழியேயே, கோனார் நோட்ஸ் முழுமை யடையும் என்பதால், பழைய அருங் கட்டுரை களைத் தேடிப் பதி வேற்ற இது நல்ல சந்தர்ப் பம். இது தொடரும் அதிர்ஷ் டம்.
அவ் வகையிலே, ஏற் கனவே இரண் டு முறை சுழற் சி செய்த பத் தாண்டு கள் பழு தான அற்புத மான பீன் நவீனக் கட்டு ரையை முன் வைக்கி றேன்.
(அப் பாடா, ஒன்று மே அடைப்புக் குறிக் குள்ளே இது வரை எழுத வில்லை. ஹையா!!)
----------------
பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry)ஓர் அறிமுகம்நவீனப் படைப்பு உலகில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திவரும் படைப்புத்தத்துவங்களில் பரந்த-அபத்தலியல்வாதமும் ஒன்று. ஓவியம், திரைப்படம், நாடகம், இசை, மற்றும் சகல படைப்பிலக்கியங்களிலும் இதன் தாக்கம் சமீப காலங்களில் மிகக் கணிசமாக வளர்ந்துவருவது மிகக் கண்கூடான உண்மையாக உள்ளது. இந்த அறிமுகத்தின் மிக முக்கியநோக்கம், இரண்டு அபத்தலியக் கவிதைகளை அறிமுகப்படுத்துவதே.
தனியே அபத்தலியம் என்பதிலும் பரந்த-அபத்தலியம் என்ற சொல்லினை இந்தக்கட்டுரையாளன் இங்கு முன்வைப்பதற்குக் காரணம், அதன் இயங்கு தளத்தின் வீச்சத்தினதும் ஆழத்தினதும் அகலத்தினதும் அளவினை முன் வைத்தே ஆகும். மார்ட்டின் எஸ்ஸிலின் (Martin Esslin) -நாடகத்தினைப் பொறுத்தமட்டில்,- "அபத்தலியலியத்தின் அரங்கு (the theatre of the absurd)" என்ற பதத்தினை முன் வைக்கையில், அல்பேர்ட் கமு (Albert Camus) இன் "மனிதன், அபத்தத்திற்கும் வலிமிகுந்த நினைவுக்குக் கொணரமுடியாத கடந்தகாலமும் நம்பிக்கை வைக்கமுடியாத எதிர்காலமும் கொண்ட சங்கடத்திற்கும் இடைப்பட்ட தீர்க்கமுடியாத இருப்பு அகல்தலில் உள்ள ஓர் அறிமுகமற்ற புதியவனினை" [A human being as a stranger, "an irremediable exile," caught in the absurd and painful predictament of having neither a past to remember nor a future to hope for] தன் அடிப்படை உருவாக எண்ணி ஏற்றுக்கொள்கிறார். (உ+ம்: இயூஜின் ஐயோனெஸ்கோவின் "(ஒரு/அந்தப்) பாடம்" நாடகம் [Eugene Ionesco's "The Lesson")
ஆனால், இங்கே கட்டுரையாளர் முன்வைக்கும் பரந்த-அபத்தலியம் மேற்கூறிய பார்வையிலிருந்து வேறுபட்டதும் விரிவுபட்டதுமாகும். பரந்த-அபத்தலியம், தான் கொள்ளும் வடிவத்திலோ, கருத்திலோ மட்டும் முழுக்கமுழுக்கச் சார்ந்ததல்ல; மேலாக, அது உற்பத்தியாளனினதும் நுகர்வோனினதும் கருத்து வெளிவிடுதற்திறனிலும் கருத்து உள்வாங்கற்றிறனிலும் சார்பாகத் தங்கியிருக்கிறது. இது நிகழ்த்தற்கலைகளுடனோ (performing arts) அல்லது நுண்கலைகளுடனோ (fine arts) சம்பந்தப்படுகையில், உற்பத்தியாளன் படைப்பாளியாகவும் நுகர்வோன் ஆர்வலனாகவும் அடையாளம் காணப்படுகிறான்.
பரந்த-அபத்தலியம் என்பது படைப்புலகில் நூற்றாண்டு காலமாக இருப்பினும், இதுவரை அதன் மூலவேர்த்தத்துவம் வரைவிலக்கணப்படாமலே இருந்துவந்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், இந்தத்தத்துவத்தின் விரிந்த பயன்படுதளமும் அநேக பரந்த-அபத்தவியற்படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் இந்த வகைப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்புத்தன்மையும் இதனை இதுவரை காலமும் ஒரு தத்துவவகைப்படுத்தலுக்கு, வரைவிலக்கணப்படுத்தலுக்கு உள்ளாவதினைத் தவிர்த்து வந்திருக்கிறது. இன்னமும் பரந்த-அபத்தலியவாதம் ஒரு முறையான வரைவிலக்கணக்கத்திற்குக் கூர்ப்படையாத வகையில், தற்போதைக்கு, இந்தக்கட்டுரையினைப் பொறுத்த அளவில் நாங்கள் அதனைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்திக் கொள்ளலாம்.
" படைப்பாளியின் எதுவிதமான கருத்துவெளிப்பாட்டினையும் தெளிவாகக் கலை நுகர்வோனுக்கு வழங்கமுடியாத அல்லது தானாகவே எதுவித தெளிவான கருத்துடனோ அல்லது ஏதுவித செய்தியினையும் தனக்குள் உள்ளடக்கி ஆக்கப்படாத எல்லாவகைப் படைப்புக்களும் பரந்த-அபத்தலியப்படைப்புக்கள் எனப்படும்."
பரந்த-அபத்தலியற்படைப்புக்கள் தமக்கெனத் தனியே ஒரு வகை வடிவத்தினைக் கொண்டு இருக்கலாம்; அல்லது பல வேறுவகைப்பட்ட ஆக்கற்தத்துவங்களினாலான படைப்புகளின் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களின் சேர்க்கையாக இருக்கலாம்; உதாரணத்திற்கு, ஒரு பரந்த-அபத்தலியவாதப்படைப்பு இயற்கையில் ஒரு கனவுத்துவப்படைப்பாக (Surrealistic product) இருக்கும் அதேநேரத்தில், இயற்கையாகவே அதன் பொருளினை வெளிப்படுத்தும் தெளிவின்மையிலோ, அல்லது அதனை உற்பத்தி செய்தோனின் சொந்தக் கருத்துத் தெளிவின்மையிலோ படைப்பாளியின் கோணத்தில் ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இன்னொரு வகையாக, அதன் நுகர்வோனின் பார்வைத்தளத்தில் (உ+ம்: ஒரு கவிதை எனப்படுகையில் வாசகனின்) உள்ள கருத்துத் தெளிவின்மையினால், அல்லது படைப்பாளியின் தளத்தினை அணுகமுடியாத வெளிநிலைப்பாட்டினால், உள்வாங்குவீச்சக்கூர்மை மழுங்குதலினால், அவனளவில் (படைப்பு உள்வாங்குவோனின்) அந்தப்படைப்பு ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இந்தவகையில், பரந்த-அபத்தலியல் தத்துவம் சார்தல் கொள்கை (Theory of Relativity) இன் அடிப்படையில் ஒழுகுகிறது. தவிர, மேலே குறிப்பிட்டதுபோல, பரந்த-அபத்தலியற் படைப்பு ஒன்று, ஒரு கனவுத்துவப்படைப்பினதும் ஓர் நவீனத்துவப்படைப்பினதும் (modernism) ஓர் உணர்த்தலியற்படைப்பினதும் (Expressionism) கூட்டாகவோ இருக்கலாம். இந்தக்கூட்டு பல விதமான விகிதங்களிலும் பண்பளவிலும் ஆக்கப்படலாம். இவற்றினை கீழ்க்கண்ட பிரதான வகைப்படுத்தல்களின்கீழ் நாங்கள் கொணரலாம்.
1. படைப்பின் கருத்து, புரிதலின் அடிப்படையில் //மட்டும்//; இது மேற்கூறிய, படைப்பாளி, பாவனையாளன் இருவரினது நிலைப்பாட்டுத்தள அடிப்படையிலும் ஒருவரை புரிந்து கொள்ளல் அடிப்படையிலும் மட்டுமே சார்ந்திருப்பது.
2. படைப்பின் வழங்கு வடிவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணமாக, அது தனியே ஒரு கவிதை வடிவத்திலே அமைந்திருக்கலாம்; அல்லது கட்டுரை வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது, ஓர் ஓவிய வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது ஓர் இசை வடிவக்குறிப்பு அடைப்படையில், நாடக வடிவில் அமைந்திருக்கலாம்; தவிர, இந்த அமைப்புகள் பல வேறு வேறாக ஒன்று சேருகையில், ஒரு கலந்த வழங்கு வடிவமையலாம். அதாவது, உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் ஒரு கவிதை வடிவிற் செல்லும் படைப்பு இடைப்பகுதியில் ஓர் ஓவியக்குறிப்பீடு வகைக்குத் தாவி முடிகையில் ஒரு சிறுகதை வடிவில் முடியலாம். ஆயினும், இந்த வகைப்படைப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறன. எதிர்காலத்தில், படைப்புத்துறை தன் சலித்துப்போன தேக்கத்திலிருந்து விடுபட்டு தன்னை முன்னெடுத்துச் செல்ல இந்த வகை கூட்டு மாற்றுப் படைப்புக்கள் அவசியப்படும் என்பது இந்தக் கட்டுரையாளனின் பார்வையாகும்.
3. படைப்பின் அடியோடும் படைப்புத்தத்துவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணம், அது தனியே எதிர்காலவியற்படைப்பாக (Futurism) இருக்கலாம். அல்லது, எதிர்காலவியலும் கனவுத்துவவியலும் உணர்த்தலியலும் நவீனத்துவவியலும் கலந்து மாறிமாறி வரும் ஒரு படைப்பாக இருக்கலாம்.
4. இந்த மேற்பட்ட மூன்று அடிப்படைகளும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து வரும் படைப்பாக ஆகலாம்.
அடிப்படையில், பரந்த-அபத்தலியம் என்பது, இந்தக்கட்டுரையாளனினால், படைப்பாளியின் மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படுகிறது; 'பிரதானமாக' என்ற சொற்பிரயோகம் 'முழுதாக' என்ற சொற்பிரயோகத்திலும்விட இங்கே பயன்படுத்தப்பட்ட காரணம், சூழல் என்பது அதன் அளவில், தூரவெளியிலிருந்து முற்றுமுற்றாகப் பிரிக்கப்படமுடியாததாகும் என்பதே ஆகும்; அதாவது, ஓரளவிற்கு அபத்தலியற்படைப்புக்கள் படைப்புக்கள் ஆக்கப்படும் இடத்தளத்திலும் தங்கியிருக்கிறன. இதுவே நுகர்வோனின் நிலைப்பாட்டிலிருந்து, அவனின் உள்வாங்கு மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படலாம். இந்தத் துணிபு, ஒரு படைப்பின் (அல்லது பொதுவில், பண்டத்தின்) பரந்த-அபத்தலியத்தன்மையினை சம்பந்தப்பட்ட படைப்பாளியினதோ நுகர்வோனினதோ காலம், இடம் சார்ந்த ஒரு சூத்திரமாக மாற்றிவிடுகிறது. அதாவது, இன்றைக்கணத்திற்கு ஒருவருக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகக் காணப்படும் பண்டம், இன்னொரு வேளைக்கு முழுதாகவே ஒரு கருத்து/செய்தி கடத்தும் படைப்பாக மாறிப்போகலாம்; இந்த நிலையில், அந்தப்படைப்பு, அந்தக்குறிப்பிட்ட மனிதனுக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ, அல்லது ஒரு செய்தி சொல்லும் ஆக்கமாகவோ மாறிப்போகிறது. இந்த ஆக்கு மூலக்கூறே பெரும்பாலாக எந்தவொரு படைப்பினையும் தன்னளவில் சுயமாக பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ அல்லாமலோ இருக்கவிடாது, வெறும் சார்புத்தன்மையினை மட்டும் அதற்குக் கொடுக்கிறது; இந்தத் தன்மை, சார்ந்ததின் வண்ணத்தன்மையினோடு ஒப்புநோக்கப்படலாம். மேலே பெரும்பாலாக என்ற சொற்றொடர் உட்பதிக்கப்பட்ட காரணம், வெறுமனே வெளிப்படையாக ஒரு கருத்தினை முன்வைக்கும் சொற்றொடர் (உ+ம்: "இன்றைக்கு சோதிடக்குறிப்பின்படி உனக்கு நல்லகாலம்" என்ற சொற்றொடர்) கருத்தளவில் தெளிவாக இருந்தாலும், அதனின் அடிப்படை, உள்வாங்குவோனின் விருப்பு வெறுப்பு, நம்பிக்கை (உ+ம்:சோதிடநம்பிக்கைக்கு) என்பதற்கேற்ப பரந்த-அபத்தலியச் சொற்றொடராகவோ, அல்லது இல்லாமலோ போகலாம். ஆனால், செய்தி வழங்கும் அடிப்படையில் எல்லோரும் (உ+ம்: சோதிடநம்பிக்கை உள்ளோனும், அற்றோனும்) காரண (உ+ம்: சோதிடக்குறிப்பின் அடிப்படையில்) காரிய(உ+ம்: உனக்கு நல்லகாலம்) ஒரு தெளிவான செய்தியினைப் பெற்றுக்கொள்கிறார்கள்; அந்த அளவில் இந்தச் சொற்றொடர் எல்லோருக்கும் தன்னளவில் பரந்த-அபத்தலியச் சொற்றொடர் அற்றே இருக்கிறது; ஆனால், இரண்டாவது (அல்லது இரண்டாவது கட்ட நம்பிக்கையின் அடிப்படைப்) பார்வையில், ஒருவருக்கு பரந்த-அபத்தலியச்சொற்றொடராகப்போகிற வேளையிலே, மற்றவருக்கு இன்னமும் ஒரு பொருள்பொதிந்த சொறொடராகவே இருக்கிறது. இதுவே "பெரும்பாலாக" என்ற சொற்றொடரின் அவசியத்தினை மேலே உட்பதிக்கும் அவசியத்தினை முன்வைக்கிறது. இதுவே, பரந்த-அபத்தலியத்திற்கு ஒரு தனியே கறுப்பு வெளுப்பு என்று கோடுவெட்டிப்பிரிக்கமுடியாத தன்மையினை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு சாம்பற்றன்மையினை ஏற்படுத்தி விடுகிறது; அதாவது, பிறிதொரு சொற்றொடரில், ஒரு படைப்பின்மீதான பரந்த-அபத்தலியப்பார்வை, "அபத்தம்/அபத்தமில்லை" என்ற 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' பார்வையினை, மிகுதி சீர்தூக்கு அலசற்பார்வைகளில் உள்ளது போலத்தரப்போகாது; வெறுமனே, பரந்த-அபத்தலியத்தின் முறிவற்ற தொடர் (not discrete, but continuous) வீச்சத்தின் காத்திரத்தின் கோணத்தின் அளவினையே தரக்கூடும்.
சீர்தூக்கி அலசுதற்துறையில் பரந்த-அபத்தத்தன்மைப்பார்வையின் தேவை மிகவும் அவசியமானதாகும். எந்த ஒரு மனிதனும் அடிப்படையில் ஒன்றானவனல்ல. மேலும் ஒரு தனி மனிதனே, அவனளவில் உடலளவிலும் சிந்தனையளவிலும் காலத்தோடும் புதிதாக மாறிப்போகிறனான், உயிரளவான நிலையில் மீண்டும் பிறக்காதபோதும். இந்த வகையில், ஒருவனின் படைப்பு வெளியீட்டினை இன்னொருவர் நல்லது கெட்டது என்று தன் கருத்து நிலைப்பாட்டில் மட்டும் வெறுமனே கூறுபோடுகை பண்ணிவிடமுடியாது; இந்த அளவில், பரந்த-அபத்தத்தன்மை விமர்சனத்திற்கு ஒரு படைப்பின் நிலைப்பாட்டினை படைப்பாளியளவில் ஏற்றுக்கொள்ளும் நியாயத்தினைப் பெற்றுத்தருகிறது. இன்னொரு விதத்தில், அது நுகர்வோனையே படைப்பினைப் புரிந்து கொள்ளும் கூட்டுப்படைப்பாளி (இதை விடச் சரியான சொற்பதத்தில், "இரண்டாம்படி/நிலைப்படைப்பாளி" அல்லது "நுகர்தற் படைப்பாளி") தரத்திற்கு ஏற்றி, இடையே விமர்சகர் எனும் இடைத்தரகரின் கூலியின் அளவினை மிகுந்த அளவிற் குறைத்துவிடுகிறது. இந்தக்குறைப்பு, இரண்டாம்நிலைப்படைப்பாளிக்குக் காலப்போக்கில், ஒரு "முதல்நிலை/படிப்படைப்பாளி" அல்லது, "ஆக்கற்படைப்பாளி" ஆகும் ஊக்கத்தினையும் அவனின் ஆக்கற்பண்பே பிறிதொரு காலத்தின் சிறந்த படைத்தற்போக்கு முன்னெடுப்புக்கு வழியமைக்கும் விளைவினையும் கொடுக்கிறது.
ஆக்கப்படைப்புகளில் தமிழில் தற்போது பரந்த-அபத்தலியத்தினை வெவ்வேறு படைப்பு ஊடகங்களின் உதாரணத்துடன் பார்வையிட்டு பின்னே ஒரு கட்டுரையில் முன்வைக்கக் கட்டுரையாளர் எண்ணியிருப்பதால், இங்கே அவற்றினைப் பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை.
கீழே உள்ள 'படைப்பு' தற்போதைக்கு அநேக வாசகர்களுக்கு, அபத்தலியப்படைப்பாக இருக்கும் என்ற அளவில், அது முன்னே வைக்கப்படுகிறது. வெளியீட்டளவில் ஒரு கனவுத்துவப்படைப்பாகப் பார்வைக்குப் படுவோருக்கு, அதன் பரந்த-அபத்தத்தன்மை அவரளவில் காத்திரவீச்சக்கோணம் குறைந்துபோகும்; மற்றையோருக்கு அதன் பரந்த-அபத்தத்தன்மை தவிர்க்கமுடியாததாகும்.
எழுது இடம் + நேரம் கருதி பரந்த-அபத்தலியத்தின் மீதான மிக மிக அடிப்படை முன்வைப்புக்களுடன் இங்கே நிறுத்திக் கொண்டாலும், அது பற்றி மேலும் விரிவான கருத்துக்கள் முன்வைக்க வேறு விரிவான சந்தர்ப்பங்களும் விவாதமேடைகளும் அமையும் என்று கருதுகிறேன்.
இந்தக்கட்டுரையும் தானே ஒரு செவ்விய (classic) பரந்த-அபத்தத்தன்மை படைப்பிற்கான உதாரணம் ஆகலாம் என்ற நம்பிக்கையுடன்,
தமிழ் ஆசான்(கண் கோளாற்றால், அப்பாவித் தமிழ் அரசன் மீது பழியைப் போடுகிறவர்களை பசியாத புலியும் பசித்துப் புசிக்கட்டும்)
_______________________________________________________________________
கடவுள் தன் வலக்கைக்கட்டைவிரலாகிப் போனார்;
போனார் கடவுள் கட்டைவிரலாகி,
தன் கட்டைவிரலான உடலின் சிறு கட்டைவிரல் அசைத்து வினை செய்யமுடியா அளவிற்கு.
கடவுளின் விரல்கள் தேய்வதில்லை;
ஆனால், அவர் அவை சிறிதாகிப் போகும்,
அவரின் உடலோடு, உடலின் அளவு சம்பந்தப்படா மனதோடு.
வினை செய்யமுடியா கடவுள் என்னவாவார்?
படைத்தல் அற்றவை தம் இருப்புச் செத்துப்போகும்.
கடவுளும் அவ்விதமே செத்துப்போவார்.
கூடவே, கடவுள் என்ற பெயரும்.
பிறகொருமுறை,
புதிதாய் ஒரு கடவுள் பிறப்பார்,
தன் கட்டை விரற் கரு செத்த கடவுள் உருவம் எழ விரிந்து வைக்க.
நேரம் படைத்துச் செத்தக்கால்,
அக்கடவுளும் கடவுள் தன் கைக்கட்டைவிரலாகிப் போவார்,
இடதோ, வலதோ,
தன் வினை செத்துவைக்கும் அளவிற்கு,
கட்டைவிரற் கட்டைவிரல் குட்டித்துப்போயிருக்க
-----------------------------------------------------