செய்விதி

பின்னால்,
"சிந்தாதீர் கண்ணீர், தோழர்களே"
என வந்ததொரு சலன விவரணம்.
இடைப்போதில்,
கன(க) விருதுகள் சொரிந்தன,
உள்ளூரிலும் உலகளாவியும்.
அதற்கும் முன்னாலிருந்து,
அவனுக்கும் ஒரு குடும்பம்;
அவன் காண, கதைக்க,
அவன்போல் பேனை சில
இருந்தன; இருந்தாற்போல்,
இறந்தன.
ஆதியிலிருந்து
அடித்துக்கொண்டே
எமதலை ~ எதிரலை.
எந்நாளும்
எல்லாம் கண்டு
எதிர்க்கரையில்
இருந்தோம் நாம்
முன்னொரு விதி செய்தோம்;
அஃது எந்நாளும் எமை
இடறி முறிக்கக்கண்டோம்.
பேசி முடிந்த
பின்னாளும் வரும் - பார்,
பிறனொருவனுக்கு
இப்பேய்ப்பொழுது
-'பின்னால்,
"சிந்தா......
'05 ஏப், 29 வெள் 11:32 கிநிநே.

பின்னால்,
"சிந்தாதீர் கண்ணீர், தோழர்களே"
என வந்ததொரு சலன விவரணம்.
இடைப்போதில்,
கன(க) விருதுகள் சொரிந்தன,
உள்ளூரிலும் உலகளாவியும்.
அதற்கும் முன்னாலிருந்து,
அவனுக்கும் ஒரு குடும்பம்;
அவன் காண, கதைக்க,
அவன்போல் பேனை சில
இருந்தன; இருந்தாற்போல்,
இறந்தன.
ஆதியிலிருந்து
அடித்துக்கொண்டே
எமதலை ~ எதிரலை.
எந்நாளும்
எல்லாம் கண்டு
எதிர்க்கரையில்
இருந்தோம் நாம்
முன்னொரு விதி செய்தோம்;
அஃது எந்நாளும் எமை
இடறி முறிக்கக்கண்டோம்.
பேசி முடிந்த
பின்னாளும் வரும் - பார்,
பிறனொருவனுக்கு
இப்பேய்ப்பொழுது
-'பின்னால்,
"சிந்தா......
'05 ஏப், 29 வெள் 11:32 கிநிநே.
கணம்~