Thursday, October 20, 2011

செய்தி: கடாபி இறந்திருக்கலாம்

எழுபதுகளின் மத்தியிலே இலங்கையிலே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசின்போது நிகழ்ந்த அணிசேராநாடுகளின்(?) உச்சிமகாநாட்டுக்கு கடாபி வந்தபோதே முதலிலே அவர் பற்றிய எனது பதிதல்; அந்நேரத்திலே பிடல் காஸ்ரோவினைப்போல இவரும் வெகுகாலம் வல்லரசுகளுக்கு அடிபணியாத போராளியாக என்னுள்ளே ஒரு படம். ஆனால், கடைசிக்காலத்திலே ஸ்ரீலங்கா அரசின் எதேச்சதிகார அரசின் செயற்பாடுகளுக்கு விமர்சனமின்றி, "பயங்கரவாதத்தினை ஒழிப்பதாக/ஒழித்ததாக" அறிக்கைவிட்டபோது, காஸ்ட்ரோ, சவாஷ் போன்றோருடன் இவர் குறித்த மரியாதையும் மண்ணாகிப்போனது. ஆனாலும், இலிபியாவின் உள்நாட்டுப்போரிலே மேற்குநாடுகள்மட்டும் நேர்மையானவையாக நடந்துகொள்ளவில்லை.இலிபியாவுக்கும் பஹ்ரேயினுக்கும் அரசுகளைப் பார்த்தால் என்னளவிலே பெருமளவிலே வேறுபாடிருந்ததாகத் தெரியவில்லை; ஆனால், மேற்குநாடுகள், பஹ்ரேன் அரசின் வன்கைகளைக் கண்டுகொள்ளாமல், இலிபியாவிலேமட்டும் "மக்கள்குரல்" எழட்டுமென்பது, தமக்கான இரட்டை அரசியல்நிலைப்பாடுமட்டுமே

2 comments:

சுந்தரவடிவேல் said...

எண்ண சாரே!

-/பெயரிலி. said...

ஆழாக்கு எவ்வளவோ? ;-)