Monday, July 14, 2008

அதிகாரபீடங்கள் மறுதலிக்கும் குருபீடங்கள்

நீட்ஷேயும் செத்தார்; பூக்கோவும் பொறிந்தார்;
நானும் போனேன்.
நுள்ளான் கடவுள் மட்டும்
மல்லாக்காய்
கவட்டைத் திறந்து காட்டிக் கிடந்தார்
எலும்பு மனுசருக்குத் தீனி
ஏதொரு புதுப்பொல்லாப்புமின்றி.
உமக்கென்ன, புண்ணியன் நீர்;
கிடப்பீர்; கிழிப்பீர்.
அனந்தசயனத்தும் ஆத்தாவை
அரவணைத்துப் படுப்பீர்
கீழே ஒடுங்கி
முடுக்கியவருக்கெல்லோ தெரியும்
வஸ்துள் மூத்திர அவஸ்தை.

- போமோதாசன் மாமூசமூகத்துக்காய்ப் புனைந்தளித்தது


அதிகாரபீடங்கள் மறுதலிக்கும் குருபீடங்கள் (அ) பம்மாத்துப்பேப்புடுக்குகளைப் புடுங்குவதெப்படி?

தலபூ மேல அதிருதில்ல.... அதுவும் நம்ம நாலேஜுக்கு ஹைக்கூபோமோதான்.


பரபரப்பினையும் தம்மை அடையாளப்படுத்துதலையும் முன்வைக்காத நிதானமுள்ள சுயசிந்தனை கொண்டவர்கள் என்று நான் கருதியவர்களே இப்போதெல்லாம் இணையத்திலே பதிவு விசேஷமாக வெகுஜன-மிடில்கிளாஸ் மாதவ -மக்களுக்காகப் புரியும்படி, பொதுப்புத்திக்கு மாறாகப் புதுப் பனித்திரை போடுகிறார்கள் என்பது செரித்துக்கொள்ளச் சங்கடப்படுத்தும் அதிர்ச்சிதான் என்றாலுங்கூட ஒரு வகையிலே நல்லதுதான். ஆடிக்காத்திலே இப்படியாக கனத்த பவுசர்களே இறக்கை கட்டிப் பறந்தால், கிழிந்த டவுசர்களை இனி நான் என்ன குறை சொல்லமுடியும்?!! [இவற்றினை வாசிக்கும்போது, "முகமது பின் துக்ளக்" படத்திலே வடிகட்டின வலதுசாரி சோ ராமசாமி, சுதந்திரா கட்சியை நக்கல் செய்து சொன்ன, "மக்களே, உங்களுக்கு ஒன்றும் தெரியாது; நாம் சொல்கிறோம்; துக்ளக்குக்கு வாக்குப் போடுங்கள்; பகவத் கீதா படியுங்கள்" என்பது யாருக்காவது ஞாபகம் வந்தால், நான் பொறுப்பல்ல] இவற்றையெல்லாம் இணைய வசதியுள்ள மிடில் கிளாஸ் மாதவர்கள் தேடி எடுத்து வாசிக்க மாட்டார்களா? அதற்கு எதற்கு "நாங்கள் சொல்லித்தருகிறோம்" என்பது போல விழிப்புணர்வு ஆட்டை போடும் ஓர் இடைநிலைப்பூசாரி? ஒருவேளை இவர்களின் (ஆளுமை) இருப்பே அப்படியான இடைநிலைப்பூசாரித்தொழிலினை மையப்படுத்தித்தான் இருக்கின்றதா?

மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி என்று எட்டி நின்று எச்சில் துப்பித் திட்டிக்கொண்டிருக்கின்றோம் (ஓமோம், நானுங்கூடத்தான்). எனக்கென்னவோ அப்படியான திட்டும் செயற்பாடும் ஒரு மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி - மத்தியதட்டு உளப்பாங்காக, சிந்தையாகவே தோன்றுகின்றது. இரண்டாம் உலகப்போரின் பின்னாலான, அல்ஜீரியவிடுதலைப்போரின் பின்னாலான் சிந்தைமாற்றத்தின் விளைவாகவும் சில புள்ளிகளிலே மார்க்ஸியத்தின் போதாமையும் உள்வாங்கி நாற்பது ஆண்டுகளின் முன்னாலே மேற்குச்சிந்தனையிலே விரிந்த ஒரு பரவலான கருத்துநிலைப்பாட்டினை பத்தாண்டுகளின் முன்னாகவே -ஓரிருவர் தவிர்த்து - தமிழ்பேசும் மிடில்கிளாஸ் புத்திசீவிகள் பொறுக்கி/ஒத்தி எடுத்து கடலை வறுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆரம்பத்திலே இக்கருத்துகளை உள்வாங்கி வாழும் சூழலுக்கேற்பவும் ஓரளவுக்கு ஏற்கனவே இருந்த சிந்தைப்போக்குடன் ஊடாடிப் பார்க்கவுங்கூட ஒரு முயற்சியிருந்தது - பெரியாரியம், தலித்தியம் என்பவற்றினையும் கவனத்திலே கொண்டு. ஆனால், தற்போது இணையத்திலே பார்க்கும்போது, பலரும் இந்த பின்நவீனத்துவம், கட்டுடைப்பு போன்ற சொற்களை சும்மா இட்லிக்கு சட்னி என்பதுமாதிரியாகப் பயன்படுத்திக்கொள்வதுதான் மிடில்கிளாஸ் மெண்டாலிட்டியை விட்டு நகர்ந்திருக்கும் நிலையா? உருப்படியாக, இணையத்திலே எமது பின்நவீனத்துவப்பிரபுகள் (ஓமோம், பிரபுக்களேதான்) முன்வைத்திருக்கும் சுயசிந்தனை என்ன?

சில வேளைகளிலே எம்மைப் பெரும்புரட்சிக்காரர்கள் (அதாவது, மாற்று ஏற்பாடின் மகாபுனிதர்கள், ஓல்றனேற்றிவ் அப்போஸ்தலர்கள்) ஆக்கிக்-காட்டிக்-கொள்ள எமக்கு நாம் சார்ந்தவற்றிலே நம் பங்கினை முழுக்க மறுதலித்துக் காட்டும் தேவை ஏற்பட்டுவிடுகின்றது. இதன் விளைவே மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி என்று திட்டித்தள்ளுவது. முன்னர் பார்த்திருந்தால், நானும் இதையே நிறையச் செய்திருக்கின்றேன். இணையத்தின் குழுசார்ந்த மிதக்கும் வெளிகளிலே குறுஞ்சாமிக்குரவையும் அய்யனார் வழிபாடும் என்னைத் தக்க வைக்கும் இருப்புக்கு இப்போது தேவையில்லாததால், இதைச் சொல்வதிலே ஏதும் வெட்கமேதுமில்லை. எங்காவது அப்பர்கிளாஸோ, லோவர்கிளாஸோ இந்த மிடில்கிளாஸ்மெண்டாலிட்டி பற்றிப் பிய்த்துமேய்ந்து பிளந்துகொட்டுவதைப் பார்த்திருக்கின்றீர்களா? இதே மிடில்கிளாஸ்தான் மேய்ந்துகொட்டிக்கரிக்கின்றது. நோம் ஸோம்ஸ்கியும் பூக்கோவும் முப்பது வருடங்களுக்கு முன்னாலே என்ன பேசினார்கள் என்பதை இன்றைக்குப் பிரித்தெடுத்து நடைமுறைத்தேவைக்கின்றி "who dunnit?" ஆய்வுக்குச் செய்யும் வேலை எம்மைப் போன்ற மிடில்கிளாசுகளுக்குத்தான் இருக்கின்றது. ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ நாமும் இந்த மிடில்கிளாஸின் கூறாகவே பிறந்து கூறாகவே வளர்ந்து அதை விமர்சிப்பதிலும் அதன் கூறாகவே கிடக்கிறோம்; நடக்கிறோம்; பிளக்கிறோம். அப்படியான ஒவ்வொரு கணத்திலும் - மிடில்கிளாஸை விமர்சிப்பதிலிருந்து - மிடில்கிளாஸின் மைக்ரோ எலிமெண்ட்ஸ் நாமென்பதையே உணர்த்திநிற்கிறோம்; என்ன எமது வார்த்தைகள் - ஆ! மந்திர வார்த்தைகள்... அதற்குப் பின்னால் வருகிறேன் - எம்மை நாம் யாரென்பதை ஒளித்து விடுகின்றன; அல்லது, நாம் மிகவும் கவனமெடுத்து ஒளிக்க முயற்சித்துவிடுகிறோம் - ஒரு பெரும்பான்மைச்சமூகத்தின் முன்னால், எமது அடையாளங்கள் எமக்கு எதிராகச் செயற்படுமென்றால், அதனை ஒளித்துவிடுவதுபோல (ஒழித்து விடுவதைமட்டும் ஏனோ ஒழுங்காகச் செய்வதில்லை).

இன்னும் இரண்டு விடயங்கள் சொல்ல வேண்டியிருக்கின்றன.

ஒன்று; அதிகாரபீடங்களுக்கெதிரான விளிம்புநிலைப்போராட்டங்களும் புரட்சிகளும் அவசியமாகின்றன. ஏனென்றால், இருக்கும் சூழலிலே வாழும் வசதிக்காக ஏற்படுத்திக்கொள்ளும், வகுத்துக்கொள்ளும் விதிகளும் வரைமுறைகளும் ஒரு சாராரைப் பொதிகழுதையாக்கையிலும் சிறுசாராருக்கு சவாரிக்குதிரையாகும்போதும், இயங்கியல் உலகில் விதிகளை முறித்து, நகர்ந்த கணத்து & களத்து நிலைக்கேற்ப, புதுவிதிகளை அமைத்துக்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. அப்படியாக, மாறிக்கொள்ளாத விளிம்புநிலைகள், தம்மை மையப்படுத்து அதிகாரபீடங்களாக - தாம் ஒப்புக்கொள்ளாவிடினும் - ஆகிவிடுகின்றன. பின்திரும்பி நகர்ந்திருக்கும் பொதுவுடமைப்புரட்சி பேசிய நாடுகள் காட்டும் உண்மை இதுதான். அப்படியாக ஒத்துக்கொள்ளாதிருப்பதும் பெரும் வெட்கமல்ல; ஆனால், புரட்சி முடுக்கிலே அச்சமின்றி மூத்திரம் விடுவதற்கும் ஆசனவாயை வைத்தழுத்தவும், எதிர்ப்பின்றி உதைவாங்க + பதிலுக்குக் கடிக்கவென்ன, குறைந்தபட்சம் குரைக்கக்கூடத் திராணியற்ற சங்கிலி கட்டிய அடையாள நொண்டிநாய் ஒன்றைத் பின்நவீனத் தமிழ்மணக்கத் தேடிக்கொண்டிருப்பது கோபமும் வெறுப்பும் தருகிறது.

(நொண்டி என்பதை politically correct ஆகச் சொன்னால், இங்கே சொல்லவந்ததின் அழுத்தம் கூர்/று கெட்டுப் பாசாங்கு ஆகிவிடும் & சொல்ல வந்ததின் வேகமும் உணர்வும் வாசிப்பவர்களுக்குக் கடத்தப்படாது. சோபா சக்தியின் கொரில்லாவிலே தூசணங்கள் என்று மஹாஜனங்கள் ஒதுக்கிக்கொள்பவை இடத்துக்கேற்ப யதார்த்தமாகிப் போகையிலே ஆபாசமாகத் தோன்றவேயில்லை. "fuck you" என்று ஆத்திரத்திலே திட்டும்போது, முன்னாலிருப்பது ஆணா பெண்ணா என்பதுகூட முக்கியமற்றுப்போகிறது; இந்த Fuck You இனையும் படச்சுருளினையுங்கூட அமெரிக்கப்பெருந்திரைப்படநிறுவனங்களின் சார்பிலியங்கும் அதிகாரம்மிக்க தணிக்கைக்குழு என்ன மாதிரியாக, சுயாதீன+சிறு படக்குழுவினர்.எதிர்.பெருந்திரைப்படக்குழுவினர் என்பதை நுணுக்கி நுணுக்கி இயக்கிய ஆளை, தயாரித்த நிறுவனத்தைப் பார்த்து மட்டுமே பல சந்தர்ப்பங்களிலே வெட்டுகின்றார்கள் என்பதை This Film Is Not Yet Rated சிறப்பாக உரித்திருந்தது.

ஆனால், "எனக்கும் புரட்சி முட்டிக் கலகம் முடுக்குகிறது" என்ற வகையிலே, 'பூல்', 'யோனி', 'மூத்திரம்' தீர்மானித்து இடம்<->வலம், மேல்|கீழ் பார்த்து, -வெட்டி(யாக) ஒட்டுவதிலுங்கூடப்- போட்டுக்கொள்ளும் சிலரின் பொய்மைத்தனம் தள்ளித் துருத்தி ஆபாசமாக இளிக்கிறது. சொல்சார்கலகக்குரலும் பேச்சதிர்ச்சியலையும் முதல் அறிமுகப்பதிவேற்படுத்துதல் போல; ஒரு முறை தாக்கத்தினை ஏற்படுத்தும். அவ்வளவுதான். அவை கவனத்திருப்பு பக்கவாட்டு உத்திகள் மட்டுமேயன்றி சிந்தைசார்ந்த முன்னேற்ற நகர்த்தலுக்கான முழுமையான செயற்பாடுகள் அல்ல; சொல்லப்போனால், பேரலைச்சிதைவுகளை எதிரொலிக்கும் பூமியதிர்ச்சிகளுமல்ல
).

முனைப்பற்ற, எதிர்வினையாற்றப் பலமற்ற அதிகாரமையங்களைத் (sic) தேடித்தாக்க - அதுவும் தங்களது எடுகோள்களின் அடிப்படையிலோ, போராடுவதற்கான கள+கணவசதிகளை ஏற்படுத்தித்தரும்படி - அதிகாரம் சிதைக்கும் விளிம்புநிலை மையமாக (sic) தங்களை எவ்வகையிலே அதிகாரபீடப்படுத்துகின்றார்கள் என்பதை இவர்கள் கொஞ்சம் விலகிநின்று பார்த்திருக்கின்றார்களா? இதிலும்விட மிகவும் வருத்தமும் அபாயமும் நிறைந்தது, போகிற போக்கிலே நின்று நிதானித்து நடப்பதை அவதானித்து, உணர்ந்து பேசாமல் தர்ம அடி கொடுப்பதனாலேமட்டும், தாம் புரட்சியாளர், கலகக்காரர்கள், போராளிகள் என்ற உணர்வினைத் தமக்கும் பிரமையைப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்துகின்ற பல பின்னூட்டிகளை இம்முன்னிலைப்போராளிக்கலகக்காரர்கள் எண்ணிக்கைக்காக ஊக்குவிக்கும் தன்மை. இவற்றிற்கு உதாரணங்கள் இங்கே தனிப்பட்ட போர்களாக நீண்டு விடுமென்பதாலே பட்டியலிடமுடியவில்லை.

"உண்மைக்கு மாறாகத் திரித்தல், வதந்திகளை அப்படியே நம்பிக்கொள்ளுதல், பெற்றவற்றை உருப்பெருக்கல், தாம் தவறு என்ற உணர்ந்தவிடத்தும் அதை ஒத்துக்கொள்ளாதிருத்தல், அதற்காகத் திசைதிருப்புதல், தமக்கொரு பீடம்-பிறர்க்கொரு தரை நிறுவி வைத்திருத்தல்; தன் கருத்துக்கு மாற்றான, தன் கருத்தினைத் தவறென்று நிரூபிக்கும் கருத்துகளை மறைத்தல்" - இவை அனைத்தும் அதிகாரபீடங்களின் ஆயுதங்கள் என்றுதான் எண்ணியிருந்ததால், அவற்றை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென்றாகியிருக்கிறேன். தன்னோடு முரண்படும் அடுத்தவன் கருத்தைப் பின்னூட்டத்திலே அனுமதிக்காத ஒருவர், தணிக்கையைப் பற்றிப் பேசத் தகுதி கொண்டிருக்கின்றாரா என்பதைக்கூட நின்று கேட்கவோ, பேசவோ நிதானிக்காத பின்னூட்டிகளும் பதினைந்து நிமிடத்து வலைப்பொரிபொறிக்கு அலைதலுமாகச் சுருங்கிய நவீனத்துவம் இது. அதிகாரத்துக்கு எதிரான விளிம்புநிலைக்கலகக்காரர்கள் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள ஆசைப்படுகின்றவர்களே இப்படியான பண்புக்கூறுகளுடன் நுடங்கும்போது என்ன செய்யலாம்? ஒன்றில், இப்பண்புத்தொகுதி ஆள், அதிகாரம் சாராத பொதுப்புத்தியின் வழிப்பட்டதென்று கொள்ளவேண்டும்; அன்றில், விளிம்புநிலைக்கலகக்காரர்கள் என்று அழைத்துக்கொள்கின்றவர்களும் தம்மை ஓர் அதிகாரமையமாக்கிவிட்டார்கள் என்று எண்ணவேண்டும்.

இவர்களிலே பொய்மைத்தன்மையானவர்கள் தம்மைத் தாம் சொல்லிக்கொள்ளும் அடையாளத்தன்மை கொண்டவர்களாக நிறுவ எடுத்துக்கொள்ளுவன, பின்நவீனப்போக்குகளின் கருத்துகள் அல்ல, வெறுமனே ஆரம்பகால பின்நவீனத்துவர்களின் அடையாளங்களையே (ஆரம்பகாலப்பின்நவீனத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது; திரை விமர்சனமாகட்டும், கருத்தாகட்டும்; இவர்கள் உதாரணத்துக்கு எடுத்துகொள்கின்ற முன்மாதிரிகளின் காலத்தினை வாசிப்பவர்கள் கவனத்திலே எடுத்துக்கொள்ளவேண்டுகிறேன்). பிற்போக்கான கட்டித்த மதவாதிகளின் சடங்குகளுக்கும் அடையாளங்களுக்கும் ஒப்பானவை இவர்களுடையவை. "மம்முட்டி மிக எளிமையானவர்; இன்னமும் பீடியே பிடிக்கின்றார்" என்ற பொதுப்புத்திச்சிங்கள்டீ சினிமாரசிக(மிடில்கிளாஸ்??)மகன் வகையிலேதான் இவர்களின் சடங்குகள் ஒடுங்குகிறன; பீடி, சாரம், வீதியோரத்திலே சாயம் காய்ந்த கிழிந்த டெனிம், சொல் மயக்கம் தரும் மாந்திரீக யதார்த்தம் (இதுவும் பின்நவீனத்துவமே), குறிப்பிட்ட வலையத்துவளையத்துட் தம்மை ஏற்றி அருட்பீடத்தில் (வேண்டுமானால், பின்நவீனத்துவமாக இருள்/மருள்/தெருள் போட்டுக்க ராசா) அமர்த்தும் தேர்ந்தெடுத்த கலகக்குரல், (திருப்பித் தாக்கமாட்டாத பிள்ளைப்பூச்சி) மொன்னைக்குறிகளிலே தாக்குதல், அட மறந்தால் எப்படி...? பியர்.... கொஞ்சக்காலம் கூட்டுக்கலவி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் (ஆனால், தமிழ்நாட்டுப்பின்நவீனத்துவிகள் இந்த அடையாளம் வரைக்கும் வேண்டவில்லை... இந்த சந்(தத்)தில் ஜால்ராத்தோழிகளும் தோழர்களும் "பார்றா வேறே ஆளை" என்று புத்திசாலித்தனமாக "ஜீபூம்பா" சொல்லாமலே காணாமற்போய்விடுவார்கள் என்று பகுத்தறியும் புத்திசீவித்தனம் இவர்களுக்கு உண்டு; இவர்கள் "உன் பூல்+என் கோல்-> கல்லாச்சார ரவுடி நான்+லீனியர்பதிவு காண்" என்ற சவாடல் செயின் சுழற்றல்களுடன் மிக அவதானமாக தம் எடுத்து நின்றாடிய பாதத்திற் பீ படாமல் மடிசஞ்சி மாமாக்களுக்கும் மடிசார் மாமிக்களுக்கும் மட்டும்(கடைசிப்பின்னூடமும் சலாமாகப் போடவிடாமல்)அதிர்ச்சி கொடுத்து அவ்விடத்தோடு நின்றுகொண்டதைக் கவனிக்கவேண்டும்). "எழுபது எண்பதுகளின் பஜாமா, தாடி, சிகிரட், கவிதை, தோழர், புரட்சி, சிங்கள் ரீ" இனை இடப்பெயர்ச்சி, காலப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி செய்தது மட்டுமே இவர்களின் உன்மத்த கலையின் உன்னதம் (அல்லது 'உன்னத கலையை உன்மத்தமாக்குதல்'. விரும்பிய வரிகளை அவர்களே கருத்துச்சுதந்திரத்துடன் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும்.)

இரண்டு; சொற்கள்.எதிர்.வரிகள் (இப்படியாக, "சொற்கள்.எதிர்.வரிகள்" என்று இடையிலே "Vs." போடுவதைத் தமிழிலே அறிமுகப்படுத்தியது நாமே/நானே என்று சில பின்நவீனத்துவப்பேச்சாளர்கள் எழுதிச் சண்டைபோட்டதை ஏழெட்டு ஆண்டுகளின் முன்னாலே வாசித்திருக்கின்றேன். இவ்வளவுதான் எமது மையம் சாராத, தன்னை முன்னிலைப்படுத்தாத மிடில்கிளாஸ் மெண்டாலிட்டியை மறுதலிக்கும் போராட்டக்கலகக்குரல்களா என்று தோன்றியது). பின்நவீனத்துவத்தின் தெரிதாவும் முன்நவீனத்துவமாக ஸோம்ஸ்கியும் என்ன சொன்னார்கள் என்பது முக்கியமல்ல; அவர் உதிர்த்த சொற்களைப் பிடித்துப் பரப்புவதே தொழிலாகிவிட்ட நிலை பரந்து பட இப்போது; கிட்டத்தட்ட 'எல்லா மொழிகளுக்கும் என் மொழியே வேர்' என்று வலிந்து மொழி காணுகின்றவர்களுக்கும் இவர்களிலே பலரின் கட்டுடைத்தல், பருப்புப்புடைத்தல் செயற்பாடுகளுக்கும் வித்தியாசமிருப்பதில்லை. முடிவுகளை வைத்துக் கொண்டு வழியை வரவழைப்பதுதான் இவர்கள் செய்துகொண்டிருப்பது. சொற்கள் தனியே சொற்கள் மட்டுமே; பயன்படுத்தும் சந்தர்ப்பத்தினைப் பொறுத்தே அவற்றின் தன்மை மாறுகிறது. இதைப் புரிவதற்குக் கட்டுமானமும் வேண்டாம்; கட்டுடைப்பும் வேண்டாம்; வெறும் பகுத்தறியும் தன்மையிருந்தாலே போதும்.

உதாரணத்துக்கு எட்டு வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம். 'ஆயா', 'சூரன்', 'கோயில்', 'ராசா', 'ராத்திரி', 'ரகசியம்', 'போ', 'படு' வார்த்தைகளாக இவற்றுக்கு எக்கேடுமில்லை. எவரையும் பாதிப்பதில்லை. ஆனால், கோர்த்துப் போடும் விதமேதான் வார்த்தைகளுக்கு முழு உருவததைத் தருகின்றது; "ராசாவின் ஆயா, ராத்திரியில் ரகசியமாகக் கோயில் சூரனிடம் படுக்கப்போனா" என்று எழுதுவதற்கும் "ரகசியமாகப் படுத்திருந்த ராசா ஆயாவுடன் ராத்திரி சூரன் கோயிலுக்கு போனான்" என்று எழுதுவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல இணையப்பின்நவீனர்கள்; மேலும் 'ராசா', 'சூரன்' என்பதெல்லாம் '-/பெயரிலி.', 'பேமானி', 'ஆட்டுக்குட்டி','புண்ணாக்கு','ராசாக்கண்ணு', 'மாதவன்' என்பன போல பொதுப்படையான பெயர்களே என்பதும் தெரியாதவர்களல்ல. ஆனாலும், இவர்களுக்கு ராசாவையும் சூரனையும் தங்களிலே கண்டுகொண்டால், அழுகையும் ஆத்திரமும் வந்துவிடும்; ஆனால், மற்றப்படிக்கு, படுத்தலும் நீட்டலும் கலாச்சாரததகர்ப்பு (அது 'கலாசாரம்' என்பதுதான் சரி என்பது ஒரு விடயம்; மொழியிலே கலகத்தனம் செய்வதென்பது 'க்' போடத்தான் வேண்டுமென்றால், பார்ப்பன வடமொழியான கலாசாரத்தைவிட்டுவிட்டு, 'பண்பாடு' என்று எழுதுவதே மேல் என்று எவரும் சொல்லமுடியாது; அப்படியாகச் சொல்கிறவர்கள் 'குறியை வெட்டிப் பூலைக் கிழிக்கவேண்டிய அதிகாரபீடங்களும் கலாச்சாரக்கமிசார்களும்' ஆகிவிடுவார்கள்). ஒரு நிறுவனப்படுத்தலை, அதிகாரப்படுத்துதலைக் கலை(லாய்)க்கும் கலகத்துக்கும், சொந்த ஈகோவின் அடிப்படையிலமைந்த வல்லடி வழக்குக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல இப்படியான பின்நவீனத்துவர்களும் அவர்களின் சொல் முலையூட்டிப்பிறந்த பின்னூட்டிகளும். மிஞ்சினால், முடிந்தது, "புரியல்ல; கிழியுது; கிழிஞ்சது; கழியுது" என்று நக்கலோடு ஓடுவதுதான்; உணர்ந்து கொள்ளுங்கள், நக்கல் என்பதும் பின்நவீனத்துவத்தின் ஒரு தவிர்க்கமுடியாத கூறு - பியருக்குத் தொட்டுக்கொள்ளும் காரவடைபோல.

சாதாரண மக்கள் என்பதை இவர்கள் பயன்படுத்தும் விதமே விந்தையானது(ம் முரணானதும்); பார்த்தால், தம் தேவைக்கான பகடைக்காயாக உருட்டுவதாகத்தான் தெரியும். விபரமானவர்களே "moronகளே உங்களுக்குத் தெரியுமா?" என்றபோதும் "பொதுப்புத்தியுள்ளவர்களே கேளுங்கள்" என்று கணிப்பிரசங்கிக்கும்போதும் கீழே குனிந்து பார்த்துக் காணவேண்டிய மக்கள், தடாலென்று, (இவர்களது) கருத்துச்சுதந்திரம் (அதாவது, இன்றைய கணத்துக்கான கருத்து வசதி) வேண்டிப் 'போராடும் போது' மட்டும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டிய சகதட்டு வாயிலே பூட்டுப்போட்ட அடைக்கோழிகளாகக் குந்தியிருக்கின்றனர். சில வேளைகளிலே இவர்கள் மக்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்; அப்போது, இவர்கள் தம் அடையாளங்களை அணிந்து கொண்டு சேரிக்குப் பக்கத்திலே (டிவிக்குப் பக்கத்திலே நின்றோ, கணனிக்குப் முன்னாலே அமர்ந்தோ அல்ல) அவதானமாகக் கிழித்த ('கிழிந்த' அல்ல) பாண்டும் சட்டையும் முறையாக ஹெயார் ட்ரையர் கொண்டு வாரிக் கலைந்த கேசமும் மறக்காமல் டிசைனர் போலோரைட் சன்க்ளாசும் கொண்டு, கோடம்பாக்கத்தின் ஏழை திருப்பாச்சி, அருவாமணைக் கதாநாயகர்கள்போல, தோழர்களுடன் பாடல், படக்காட்சிகளிலே தோன்றுவார்கள். மிடில்க்ளாஸ் நாயகிகள்/ நவீனதாரிகள்/ நாதாரிகள் (பின்நவீனவழி பிடித்த பதத்தைப் பொறுக்கி(ப்) பொருத்திக்கொள்க) கண்டு கொண்டு "லல்லலா" பின்னூட்டுக.

இந்த பொதுப்புத்தி மக்களுக்கு அறிவூட்டப் பதிவு தொடங்கி கட்டுரையும் விமர்சனங்களும் நீளும்; ஆனால், இந்தப்பொதுப்புத்தி மக்கள் இவற்றை வாசித்துத் திருந்த வேண்டுமானால், முதலிலே பதிவுகளிலே உள்நுழைவதற்குப் பயப்படாமல் இருக்கும்வகையிலே பொதுப்புத்திக்காளையை மிரளவைக்காத அமைப்பு சொற்களிலேயிருக்கவேண்டுமென்ற அடிப்படை அறிவினை மறந்(றைத்)துக்கொள்வார்கள். இவர்கள் கலக்காரர்கள் என்று எவர்களுக்குக் காட்ட முடியும் என்ற அடிப்படை அடையாள அட்டையைக்கூட மறந்து விடுகின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்விதமாக, பொதுப்புத்தி மக்களுக்குப் புதுப்புத்தி கிட்டும் இடத்துக்கு பயமின்றி வந்து புதுப்புத்தி வர வசதி செய்ய விரும்பும் எல்லோரும் அதிகாரபீடத்துக்கமிசார்களாகக் கட்டுடைக்கப்பட்டுவிடுவார்கள். "எம்மிடம் குறி தாங்கமுடியாக் கேள்விகளும் முக்கும் முறையீடுகளும் முட்டும் கலகமுடுக்கலும் மட்டுமேயுண்டு; எமக்குப் பிடிக்கக்கூடிய பம்பிளிமாஸ் பதில்களைத் தாருங்கள்."(..... ங்கொய்யால!!...பாரு பாரு போமோ பாரு; பக்கத்துல மாமூ பாரு; மாமூகூட போமோ தானுடா; பீரு போட்டா மாமூகூடா போமோ தானுடா... அஜக்குகுன்னா போமோடா; குஜக்குன்னாலும் போமோதா; நா போர்னோரோடு மாமூதானுடா!! கிழிஞ்சா மாமூ டவுசர்கூட போமோதானுடா!!...மாமூ டவுசர்கூட போமோதானுடா!!.......டவுசர்ன்னா போமோடா; பவுசர்ன்னா போமோடா; ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....)

பின்நவீனத்துவமென்பது கருத்திலே அரைகுறையாகப் போனநூற்றுப்பிற்பாதிப்பிரான்சையும் எழுத்திலே அரைக்கடியாக லத்தீன் அமெரிக்காவையும் நடிப்பிலே கோடம்பாக்கத்தையும் உரு அமைப்பிலே தமிழரையும் ஒத்திக்கொண்டு ஒற்றைக்காலிலே நிற்பதுதான் எனும்வரை மாமன் - மச்சானின் விசாலத்தைச் சொல்லும் இணையக் கேள்வி-பதில் தொடர்சங்கிலியோடு புரட்சியும் கலகமும் பந்தற்புடலங்காய்போல பாரக்கல்லிழுத்து முறிந்து முடிந்து போகும். பிறகு, முட்டிக்கொண்டு வந்தால், முடுக்கைப் பார்த்துக் குந்தவேண்டியது ஒன்றுதான் மாமூ போமோ சாய்ஸ்.

நெற்போமோவின் காமப்பூரிப்பு கதையாய் அந்தப்பக்கம் விரியட்டும்; இந்தப்பக்கம் நான் முற்போக்கு நாகராஜனின் முட்டின முடுக்கையோ, பிற்போக்குச்சுப்பையரின் சூப்புற புராணத்தையோ வாசிக்கலாம்.

"...பூப் பாயலின்மே லாடவரைப்
பொலிவோ டிருத்திப் பொருள் கவரக்
காப்பாங் கச்சுதனை நீக்கும்
கனகே! நடக்கு மனப் பெடையே!
பாப்பார் மிகவுந் தனைச் சூழப்
பங்கே ருகம்போல் வைகு மிவன்
கோப்பாய் முத்துக்குமாருவென்று
சொல்லுங் குமரர் போரேறே....

....செட்டித் தேர்தெருத் தேவடியார்களுள்
மெட்டுக்காரி கனகியை மேவியோர்
தட்டுப் பட்டுத் தலைவிரிகோலமாய்
முட்டுப் பட்டனர் (மூத்திரம்) பெய்யவே...."



வலைபின்னிய நவீனத்துவமொழிகள்:
1. எழுதியவுடன் எழுத்தாளனின் வேலைப்பணி களத்தில் முடிந்துவிடுகிறது.
பின்னூட்டிகளின் மூளைப்பனி மூக்கால் வசதிக்கேற்பக் கொட்டத்தொடங்குகிறது

2.if the public bus is not comfortable,
get down and get into your own car
- as you claim you like it the best


யாராவது பின்நவீனத்துவப்பெரும்பம்மாத்து 1995 இன் பின்னால் வந்த பின்நவீனத்துவக்கருத்தைப் பற்றி இணையத்திலே எங்காவது சொந்தமாக சுயசிந்தையிலிருந்து தான் வாழும் சூழலை மையப்படுத்தி எழுதியிருந்தால், அறியத்தாருங்கள்; பூக்கோவின் பழம்பெரும்புடுக்கை அருவாமணையிலே வைத்து கட் ஒன்று, காய் ரெண்டென்று அறுத்தெறிந்து இதை இடம்பெயர்த்து இருத்தி விடலாம்.


THIS POST SHOULD NOT BE COPIED ANYWHERE WITHOUT THE PERMISSION FROM THE WRITER

13 comments:

Jayakumar said...

பதிவு அலசும் பிரச்சனை குறித்து சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. நீங்கள் மீண்டும் எழுதியது குறித்து மகிழ்ச்சி.

Ayyanar Viswanath said...

Welcome Back :)

-/பெயரிலி. said...

once again, whoever s/sh/he was, thanks for taking time and effort posting my post in thamizmaNam.

I appreciate it

வளர்மதி said...

அன்புடன் பெயரிலி,

தங்களை வெகுவாக காயப்படுத்தி விட்டேனோ என்று தோன்றுகிறது.

வருந்துகிறேன்.

“மிடில் க்ளாஸ் மாதவன்” பதிவு தமிழ் மணம் நிர்வாகத்திற்கு எதிரான ”போராளிக் குரலாக” எழுதப்பட்டது அல்ல.

எழுத்து (அது காமம் குறித்ததாக இப்பிரச்சினையில் அமைந்து விட்டது) குறித்த வெகுஜன அபிப்பிராயத்திற்கு தமிழ் மண நிர்வாகம் செவிசாய்த்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்திலேயே எழுதப்பட்டது.

தங்களின் பொருட்டும் மற்றும் சில நண்பர்கள் பொருட்டும் ஒரு விளக்கம் தர கடமைப் பட்டுள்ளதாக உணர்கிறேன்.

மற்ற தங்களுடைய விமர்சனங்கள் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. நீங்கள் குறிப்பிடும் எதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

எந்த “இசத்திலும்” எனக்கு நம்பிக்கை இல்லை என்று சமீபத்திய பதிவொன்றிலும் குறிப்பிட்டிருந்தேன். ”அதிகாரத் தகர்ப்பு” “கலகம்” இவை குறித்தெல்லாம் வாயாடியதும் இல்லை. எதையும் சாதித்துவிட்ட நினைப்பும் எனக்கில்லை.

தங்களின் மீது எனக்குள்ள மரியாதை தங்களுடைய எழுத்தின் வழி உருவானதே. அது உங்களுடைய இப்பதிவால் சற்றும் குறையவில்லை. உங்களுடன் ஆரோக்கியமாக உரையாடவே விரும்புகிறேன்.

மற்ற விளக்கங்களை என் பதிவில் தர முயற்சிக்கிறேன்.

எப்படியோ நீங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அன்புடன்
வளர் ...

-/பெயரிலி. said...

அன்பின் வளர்மதி
இங்கே பதிவு உங்களின் மிடில்கிளாஸ் மாதவன் இடுகையையும் தொட்டிருந்தாலுங்கூட, அதையே மையப்படுத்தியதில்லை என்பதையும் உங்களை மையப்படுத்தியதில்லை என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். நான் நீங்கள் எழுதியதை உங்கள் வலைப்பதிவுக்கு முன்னாலும் பதிவு வந்தபின்னும் வாசித்த வரையிலே இந்த அடையாளங்களை உங்கள்மேல் சுமக்காத தன்மையினாலேயே உங்களிலே எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு. இந்த அடையாளங்கள் உங்களைக் குறித்ததே அல்ல: மிடில் கிளாஸ் மாதவன் குறித்த கருத்துமட்டுமே உங்கள் பதிவினை வாசித்த பின்னால், எழுதத்தோன்றியது. அங்கே தொடங்கியது, தன் வசத்திலே - எழுதக்கூடாதென்று கடந்த சில நாட்களாகக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த - அடுத்தவர்களின் அலம்பல்களின்மீதும் நகர்ந்துவிட்டது. அந்த அடையாளங்கள் பற்றிய கருத்துகள் உங்கள் மீது சொல்லப்பட்டவை என்ற தோற்றம் தந்தால், வருந்துகிறேன். மன்னிக்கவேண்டும்.

-/பெயரிலி. said...

இது ஜ்யோராம் சுந்தரின் பதிவின் பின்னான பின்னூட்டம்; காணாமற்போகவில்லை என்பதை உறுதி செய்ய இங்கே ஒரு முறை சம்பந்த சம்பந்தமில்லாமலே போட்டுக்கொள்கிறேன்

====
/நாங்க பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லாட்டா எங்க வயிறுக்குக் கீழே முடி மொளைக்கறதுக்கு முன்னாடியே பின் நவீனத்துவம் எல்லாம் அவருக்கு அத்துப்படியாம். (அதுதான் இப்படியெல்லாம் எழுதறாரு போல src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif"> ). ஆனா பாருங்க, இந்த ‘கெட்ட' வார்த்தைங்கள எழுதும்போது ஆங்கிலத்துக்குத் தாவிடறாரு. பின்நவீன முன்னோடி வாழ்க வாழ்கவே.!/

அது சரி. இதுக்கெல்லாம் பொத்துக்கிட்டு வருதே. எடுத்ததுக்கெல்லாம் அதிகாரவர்க்கத்துக்கெதிரான கனமாக பதிவுகளாக நீங்களும் உங்கள் பின்னூட்ட ஜால்ராக்களும் அடிக்கும் "நாமேதான் தமிழிலே காமம் உடைத்தெறிய முதலிலே எழுதுகிறோம்" அலட்டலுக்கு அப்படியாகத்தான் பதில் எழுதமுடியும். ஜி. நாகராஜன் உடைக்காத யாதார்த்தத்தினையா நீங்கள் உடைத்துப் பருப்பினைக் காட்டிவிட்டீர்கள்?

வேண்டுமானால், மேலே எழுதியது, பின்நவீனத்துவத்தினைப் -/பெயரிலி. தன் அதிகாரமையப்படுத்தும் வேலை என்று வைத்துக்கொள்ளுங்கள். அடாவடித்தனம் பண்ணுவதென்பது உங்களுக்கும் உங்கள் பருப்புகளுக்கும் மட்டுமா சொந்தம்?

ஜாங்கிரி எழுத்தானால் ஒன்றும் குறையவில்லை; அதுவாச்சும் சொந்தமான ஜாங்கிரி; would be saru, would be ramesh-prem கூத்துகளுக்கு அதுவே பரவாயில்லை.

/அவர் பதிவில் எழுதுவது போல் ஜாங்கிரி எல்லாம் சுத்தாமல், புரியும்படியான மொழியில் அவர் சொல்லிய அபாண்டமான அவதூறைத் திரும்பப் பெற வேண்டும். இதுவே குறைந்தபட்ச நேர்மை. செய்வாரா பெயரிலி?/

எதற்கு? முடியவே முடியாது. தொழில்நுட்பம் குறித்து சசி இட்ட பின்னூட்டத்துக்கு அவரே விளக்கம் தருவதே சிறப்பு. அவர் இவ்வாரம் ந்தியாவிலிருந்து அமெரிக்கா வருவதால், ஓரிருநாள் பதில் தாமதமாகலாம் என்ரு நம்புகிறேன். வேண்டுமானால், அவர் தனிப்பட அனுப்பிய அஞ்சலின் ஒரு குறிப்பினைக் கீழே தருகிறேன்.

"
http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_1830.html

ஜ்யோவ்ராம் சுந்தரின் இந்தப் பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். உங்கள் அனைத்து இடுகையிலும் தமிழ்மணத்தின் பதிவுப்பட்டை தெரிகிறது. இதில் இருந்தே உங்கள் எந்த இடுகையும் நீக்கப்படவில்லை என்பது தமிழ்மணத்தின் டெக்னிக்ல் விஷயம் என கூறியிருந்தேன்.

ஆனால் அந்த பின்னூட்டம் இது வரையில் வெளியாக வில்லை...."



இதை என் ஏதாவது ஒரு பதிவின் கீழும் போட்டால் போச்சு; நான் அநாமதேயமாகப் போட்ட பின்னூட்டத்தையே விடாமல், போடவில்லை என்று சொல்லும் உங்களையெல்லாம் நம்பிப் பின்னூட்டத்தைவிட்டால், அவ்வளவுதான். உங்களிலே ஒரு குறைந்த பட்ச நம்பிக்கையாவது இருந்தது. அதையும் வேண்டாம் என்று சொல்லாமலே சொல்லியிருக்கின்றீர்கள். உன் நம்பிக்கைபிசாத்து யாருக்கு வேண்டும் என்று உங்களிடமிருந்துவரக்கூடிய நியாயத்தையும் ஒத்துக்கொள்கிறேன்.




இன்னும் தமிழரசி என்ற பம்மாத்து எதுக்கு? அவரேதான் நான்தான் இரைச்சல் செல்லா என்று வெளியே வந்து விட்டாரே? இதுவும் நீங்கள் புரிந்துகொண்டபடி பின்நவீனத்துவமோ?

அவ்வளவுதான் பிஸ்தா சொல்லுவேன்; இனி பிய்த்துப் பிடுங்குவதெல்லாம் உங்கள் தனி ஆட்டம்.

-/பெயரிலி. said...

செல்லா என்ற தமிழரசி என்ற கூத்தின்பின்னாலே போட்ட பின்னூடம்
==============

அப்படியா?


உங்கள் அஞ்சல்களும் விலக்கல்களும் காலவாரியாக விட்டாலேதான் சாத்தியப்படும்.

நீங்கள் தமிழ்மணத்துக்கு அனுப்பிய அஞ்சல்களை வெளியிட அனுமதி தருவதாக நீங்கள் தமிழ்மணத்துக்கு உங்கள் தரவுகளை ஓர் அஞ்சல் அனுப்புங்கள். அதன் பிறகு தமிழ்மணம்நிர்வாகமும் அனுமதித்தால், போடுகிறேன். -/பெயரிலி., சுந்தரமூர்த்தி சொல்வதிலே உள்ள காலவாரியான தெளிவு உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் கிடைக்கும். அதற்கு அனுமதியில்லாவில்லால், நீங்களே தமிழ்மணத்துக்கு உங்களை விலக்கக்கேட்ட அஞ்சலின் பிரதியை இங்கே போட்டுவிட்டு, என்னைத் தாராளமாகக் குற்றம் சாட்டலாம்.

நிற்க, உங்களின் அடுத்த இடுகையிலே (http://tamilmanam.net/forward_url.php?url=http://thenukegirl.blogspot.com/2008/07/blog-post_15.html&id=161484) ஓர் அநாநிப்பின்னூட்டம் - உங்களின் தனிப்பட்ட "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை"க்காக வெட்கப்படவே வெட்கப்படாத தன்மைக்காக விட்டிருந்தேனே? அதற்குப் பிறகு உங்கள் ஜால்ராக்களின் பின்னூட்டங்களினை அனுமதித்திருக்கின்றீர்கள். நான் போட்டவற்றை விடவில்லையே? இதுவும் நேற்றினைப் போலத் தற்செயல்தானா? ;-) என்ன இனி நாளைக்கு அனுமதித்தாலுங்கூட, blogger வசதியின்படி, பின்னூட்டம் வந்த அன்றைய காலவரிசைப்படியே நிற்கப்போகிறது. நீங்கள் நான் அனுமதித்திருக்கிறேனே என்று சொல்லிவிடலாம். இந்த இடுகையின் சீத்துவத்துக்கு ஒவ்வொரு நிமிடத்துக்குமென்ன screen shot எடுத்துச் சேகரிக்கவா முடியும்?

முழுலூசுத்தனமான என் பின்னூட்டங்களை விடமுடியாது; அரைலூசுத்தனமான தோழர்களின் பின்னூட்டங்களை விடமுடியுமாக்கும்.

==============

இனி அடிச்சு ஆடுங்க.


ஒரே ஒரு வருத்தம்; உம்மைப்போல ஒருவரையும் பாலா பிள்ளையின் காரணமாக பூலா+ஒம்லா விடயத்திலே தாங்கிப்பிடித்துப் போன ஆண்டு ஓர்குட் குழுமங்களிலே அந்தப்பயல்களுடன் சண்டை போட்டு நேரத்தை வீணாக்கவேண்டியதாகப் போயிற்றே என்பதுதான். விதீஇ வலியது :-)

==========

இதுதான் தொடங்கவே வேணாம் என்பது;-) இவர்களுக்கு அடிக்கவென்றே ஒரு கல்மரம் தேவை. அடித்து ஆடுங்க ராசா.

-/பெயரிலி. said...

சஞ்சய் என்ற wannabe 15-sec பதிலே
போட்டபின்னூட்டம்

=================
சஞ்சய்
வேண்டுமானால், தமிழ்மணத்துக்கு நீக்கும்படி ஓர் அஞ்சலைப் போடுங்கள். உங்கள் பதிவினை நீக்கிவிடலாம்.உங்களுக்குத் தொல்லையில்லாமல், தமிழ்மணத்துக்கும் தொல்லையில்லாமல் நீக்கிவிடலாம். நீங்கள் எவர் ஆணையையோ ஏற்கும் தமிழ்மணத்தின் ஆணையை ஏற்கத்தேவையில்லை.
எவ்வளவு விரைவிலே கீழ்க்கண்ட
admin@thamizmaNam.com முகவரிக்கு நீக்கும்படி கேட்டு அஞ்சலை அனுப்புகின்றீர்களோ அவ்வளவு விரைவாக நீக்கிவிடலாம்.

இல்லை, இப்படியாக பரபரப்புக்கு எங்கவீட்டுக்கோழியும் முட்டைபோடும், எங்க வூட்டுக்காரரும் நெட்டுல ப்ளாக்கு வாங்கியீருக்கார் ரேஞ்சுல உங்கள் இருப்பைக் காட்ட விரும்பினால், அதை இந்த லெவலுல இதே கிண்டலுடன் அனுமதிக்க தமிழ்மணம் எவரின் ஆணையையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இதைப் போடாவிட்டாலும் பரவாயில்லை. என்பதிவிலே பின்னூட்டி வைத்துக்கொள்கிறேன்.

-/பெயரிலி. said...

இவ்ளோதான், இந்த போலித்தனமான சஞ்சய் வீரம்;
மேலே போட என் பின்னூட்டத்தினை விடவில்லை; ஆனால், அதற்குப் பிறகு நான் அநாமதேயமாக காப்பரேட் குறித்துப் போட்ட பின்னூட்டத்தினை விட்டிருக்கிறார்.
நாளைக்கு காலவரிசைப்படி, நான் போட்ட பின்னூட்டம் பொருந்தி அங்கே இருந்தால், அவருடைய நான் அனுமதித்தேனே க்ளெய்ம் சரியென்று படாமலிருக்க எதற்கும் ஒரு திரைச்சொட்டு இப்போது எடுத்திருக்கிறேன். வர வர எவரையுமே நம்பமுடிவதில்லை

அது இங்கே

Sanjai Gandhi said...

பெயரிலி அவர்களுக்கு.. ஒரு நண்பர் சொல்லக் கேட்டு இந்த பின்னூட்டத்தை இப்போது தான் பார்த்தேன்.

உங்களின் பித்தலாட்டங்களுக்கு ஒரு அளவே இல்லையா? எனது பதிவில் நீங்கள் உளரியது போன்ற ஒரு பின்னூட்டமே வரவில்லை.
//மேலே போட என் பின்னூட்டத்தினை விடவில்லை; ஆனால், அதற்குப் பிறகு நான் அநாமதேயமாக காப்பரேட் குறித்துப் போட்ட பின்னூட்டத்தினை விட்டிருக்கிறார்.//

என் வலைப்பூவில் பின்னூட்ட மட்டுறுத்தலே இல்லை என்பது பின்னூட்டம் போடும் போது நீங்கள் கவனிக்க வில்லையோ.. அது தெரியாமல் இந்த பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள் போலும்.

மட்டுறுத்தலே இல்லாத நிலையில் நான் எந்த பின்னூட்டத்தையும் நிறுத்திவைக்கவோ அனுமதிக்காமல் இருக்கவோ முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா உங்களுக்கு?

இதை தெளிவு படுத்தாத பட்சத்தில் இது குறித்து தனி பதிவு போட்டு உங்கள் பித்தலாட்டத்தை அம்பலமாக வேண்டி இருக்கும்.

-/பெயரிலி. said...

My comment is here from Wed Jul 16, 07:18:00 AM 2008. After one month, you want to refute.


if you want to put a post, go on. I damn care what you are going to see.

keep this 'pittalaattam' cinema scenes for your ilks.

தமிழன்-கறுப்பி... said...

மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி...

-/பெயரிலி. said...

/இதை தெளிவு படுத்தாத பட்சத்தில் இது குறித்து தனி பதிவு போட்டு உங்கள் பித்தலாட்டத்தை அம்பலமாக வேண்டி இருக்கும்./

தனிப்பதிவு போட்டு ஓசையிட விஷ(ய)மானதிலே மகிழ்ச்சி. சப்ளாக்கட்டைகளும் வந்திருப்பதையிட்டும் இன்னொரு படை மகிழ்ச்சி. ஆனால், 1+1=2 என்று நிறுவுவது எப்படி 1-1 என்பதைத் தீர்க்கும் என்று எனக்கும் இன்னும் புரியவில்லை. ஓசை போடும் ஆட்களிடம் தீரென்று எதிர்பார்க்கவுமில்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!வளவேதான்.

ஜ்யோதிராம் சுந்தருக்கு, உமது பின்னூட்டத்துக்குத் தனியே உமக்கு அஞ்சல் போட்டிருக்கிறேன்.