Friday, December 11, 2015

பொருந்துகையை மீறிய பொருத்துகை


ஒன்றுதான் சொல்லத்தோன்றுகின்றது; 'இந்து'ப்பெண்களே, அடுத்தவர் சொல்லி நீங்கள் கேட்க உங்களுக்கு அறிவேதும் மங்கலில்லை என்றபோதும் சுட்டச் சொல்லவேண்டியதாய்க் கிடக்கிறது. முதலிலே ஶ்ரீனிவாஸன் ஶ்ரீனிவாஸன் போன்ற இந்துத்துவாக்களின் இலங்கை ஏஜென்றுகளிடம் உஷாராகவிருங்கள். 

சுயத்திலே பாதியை அஜித், விஜய்க்கும் மீதியை அனுமான், ஐயப்பனுக்கும் இறக்குமதிக்கும் சேர்த்து வரிகட்டிவிட்டு மற்றவர்களைப் பிழை சொல்லி என்ன பயன்?

எப்போதுமே இந்தியாவின் அடியைத் தண்ணீராலோ கண்ணீராலோ கழுவிக்கொண்டேயிருக்க, வாழைப்பழத்திலே ஊசி நுழைக்கும் இந்துயாவின் அடுத்த கட்டமே பாலாபிஷேகமும் புதுத்திரைப்படமும் புதுச்சாமிப்பாடமும். அடுத்தவீட்டுக்காரர் தன்வீட்டு நாய் மலம் கழிக்க ஏன் உங்கள் வீட்டுப்புற்றரை முன்றலைக் கேட்கின்றார் என்று எண்ணக்கூடாதா?

திருகோணமலை இந்து இளைஞர் அமைப்பு இந்துயாவின் புரட்சிப்படைக்கு ஆட்சேர்க்கவா இயங்குகின்றது? மத்தியகிழக்கிலே போராட ஐஎஸ்ஐஎஸ் இற்கு ஶ்ரீலங்காவிலே ஆட்சேர்க்கின்றவர்களுக்கும் இலங்கையிலே இந்துப்புரட்சிப்படைக்கு இந்திய தொலைபேசி இலக்கங்களோடு துண்டறிக்கை பேஸ்புக்கிலே பகிரும் உங்களுக்கும் என்னதான் வேறுபாடு? 
-/.
நவம்பர் 18, 2015

No comments: