Friday, December 11, 2015

போலித்தமிழ்த்தேசியவாதிப்பூச்சாண்டி

"எல்லாரும் ஆளுக்காள் அஞ்சு நிமிசத்துக்கொருக்கால், திட்டித்திட்டிக்கதைக்கிறாங்களே அந்தப்புலம்பெயர் போலித்தமிழ்த்தேசியவாதி நாய் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமே? வடுவா ராஸ்கல் என்னவெல்லாம் பண்ணியிருக்கிறானெண்டு வாயாலை சொல்லவுமேலாது ரைப் பண்ணிப் போஸ்ற் பண்ணவுமேலாது. அத்தினை பொய்பிரட்டும் சூதுவாதும்!" எண்டு இண்டைக்கு ஒருவர் மினக்கெட்டு இலண்டனிலை இருந்து போனடிச்சு என்னட்டைக் கேட்டார்.
"உந்தப் புலன்பெயரிற அரசியல் இடியம் தெரியாமல், நாளையான் இடியப்பத்துக்கு மாவாட்ட வேலைக்கு ஓடிக்கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கத்துக் கனவான் நான் எங்கையப்பனே தெரிஞ்சு எதையணை உங்களைப் போல அறிஞ்ச தலையளுக்குச் சொல்லுறது?" எண்டன்.

"நீங்கதான் எப்பவுமே குண்டியைக் கதிரைக்குள்ளை குத்திவச்சுக்கொண்டு பேச்சுப்புக்குக்குள்ளை மேஞ்சு மேஞ்சு வாசிச்சு ஒண்டுமில்லாத துண்டுச்சார ஊர்த்துழவாரங்களுக்கெல்லாம் ஒண்டரை லைனிலை லைவ் கொமென்றி மாஞ்சு மாஞ்சு குடுத்துக்கொண்டிருக்கிறியள் . உங்களுக்குத் தெரியாதே?" எண்டார்.

சும்மா வாற விருதையும் எருதையும் மெடலையும் மடலையும் வேண்டாமெண்டு திருப்பிக் குடுக்கிறதே எண்டு, அப்போதைக்கு, "புலம்பெயர் தமிழ்த்தேசியவாதிகள் ஆரெண்டு சொல்லுறது கஷ்டம்; ஆரில்லை எண்டு சொல்லுறது சுகம், ஆரில்லையெண்டால், அசலிலும் அசலான இடதுசாரிப்பேரியக்கம் ரெலோவிலையிருந்து உடைஞ்சுபோய் ஆளுக்காள் பேனையோ போனையோ தூக்கிக்காட்டிற எட்டுப்பேரையும் சுமந்திரன்ரை விசிலடிச்சான் குஞ்சுகளையும் எந்த இயக்கமுமில்லையெண்டு கொண்டு, கட்டுறவளின்ரை சீலைக்கலர் இயக்கத்துக்கு எதிரான சொந்தப்புத்தகம் புரமோட் பண்ணுற ஒற்றைப்புத்தக எழுத்தாளர்களும் பழைய வரிப்புலிப்புதுச்சிங்கங்களும் தேசியப்போராட்ட பஸ்ஸை ஓட்டோ ஓட்டெண்டு பருத்துறை யாப்பாணம் தட்டிவான்போல புட்போட் தட்டி பெட்டி எல்லாத்திலையும் ஏத்தியோட்டிக் களைச்சுப்போய்ப் பிரேக் டவுனாக்கிப்போட்டு குதிச்சிறங்கி அங்கேயே பொத்தெண்டு விட்டுப்போட்டு வர்க்கப்போராட்ட இன்ரர்சிற்றியிலையும் தலித்தியப்போராட்டசேனா ரயிலிலையும் புதுசாத் தொத்திக்கொண்டவையும்..." எண்டு பந்தி பந்தியா இழுக்க, அவருக்கு விசர் பத்திப்போட்டுது.


"இதென்ன உங்கடை ஒண்டரைப்பக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளிச் சிறுகதையே? சுருக்கமாச் சொல்லுங்கோண்ணை" எண்டு பொடியர் கடுப்பேறினாரோ, "உன்னையும் என்னையும் மாசத்துக்கொரு மதுச்சந்திப்புச் செய்யாதவையையும் பேஸ்புக்பத்திப்பந்தி, கைச்சஞ்சிகைப்போராட்டம் நடாத்தாத புலம்பெயர்ந்தவையையும் விட்டு மிஞ்சின புலம்பெயர்ந்த குஞ்சு குருமான் கருமுட்டை சூலுள்ளிட்ட அத்தனையுமேதான்" எண்டுபோட்டுப் பொக்கெண்டு போனை வச்சிட்டன்.


இனி நம்பரைப் பாத்துத்தான் போனை எடுத்து, "கல்லோ" சொல்லோணும். அறுவாங்கள்; என்ரை இடியப்ப நேரத்திலை அவனுகளின்ரை ரைம்பாசுக்கு மண்ணைப்போடுறாங்கள். போய் ஜோன் ஒலிவற்றை ரண்டம் குவோட் ஜெனரேட்டரிலை ஒண்டைத் தேடிப் புடுங்கிப் புலம்பெயர் போலித்தமிழ்த்தேசியவாதிக்குப் பூருதோண்டு பாருங்களனடா! உங்கட பில் இந்த பிளாங்க்ஸ் கட்டுரைக்குச் சொல்லுத் தேட என்ரை போன் நம்பரே அத்திலாந்திக்குச் சமுத்திரம் கடந்து உங்களுக்குக் கிடைச்சுது? இவனுகளுக்கு தங்கடை "லைக்" அரசியல்செய்யிற புத்திசீவிகள் எத்தனையோ மேலை! ம்ற்றவைக்கு அலுப்புத்தராமல், வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் நல்லபிள்ளைப்பரிசை வாங்கிக்கொண்டு போயிடுவாங்கள்.

No comments: