Sunday, May 27, 2012

குண்டலகேசி

மண்டியிட்டுக் குந்தி
நிலைக்குத்தாய் நாட்டுகிறாள்
பத்தா தீசா
-சிறுநாவற்கிளை.
ஒவ்வொரு நீள்கேசமும்
தனித்தெடுத்துப் பிடுங்குவாள்...
கேட்பு |
காட்சி |
வாசிப்பு |
எழுத்து...

முடிக்க,
மழிக்கும் கருக்குமட்டைக்காய்க்
காத்திருக்கின்றாள்.

புறப்பூச்சாய்
பேச்சுமட்டும் இன்னும் பிரிந்து
தொங்கிக்கொண்டிருக்கின்றது.

No comments: