Sunday, May 06, 2012

இழவு முடிந்தபின் உலர்ந்துதிரும் கவிதை

கல்முறித்துக் காலெழுப்பிப் புல்முளைத்த பூமி
வாங்கிக்கொடுக்கும் பொலிவிருது
ஒரு புள்ளுக்கு - பொய்யேனும் சிறுபொருந்து-
சிறகு நெய்யக்கூடுமா?
காற்றின்னும் காதருகே வீசி உரசிப்பேசும்
நிணக்கூற்று
ஓயா ஊற்று...
கள்ளூறிக் கடைவிரிக்கும் சப்பாத்தி
விருதைக் கக்கத்தில் வையாமல்
கைவீசிச் சுழட்டி எறிவாயா,
துப்பற்ற வேளை தூங்கினவனும்
தூக்கினவனும் சேர்த்துத் தந்தென
......................- உள்ளகத்திலே
உண்மைத்துப்பிருந்தால்?

நீயென் செய்வாய்?
பூக்கொத்தாலானது

உன் போம்பொழுது!

~~~~~

வடக்கும் தெற்குமாய் உழலும் உலகுக்குள்
கிழக்கும் மேற்குமாய் என்ன மயிரைப் போய்!
சடங்கு!
சங்கு!
கூ!!!!!!


~~~~~


வாசிப்பு
மறுவாசிப்பு
மறுகா
சிப்பு சீப்பா
சிரிப்பு!
பூ!
வாசிப்பு & மறுவாசிப்பு


~~~~~


நடக்கின்றபோது மண் தலை ஒளிக்கின்றது
ஒளி பிடிக்கின்றபோது மண் தலை கொடுக்கின்றது.
விருதும் விருந்தும்!
உனக்குத் தும்மல்
என் எச்சம்!
அம்மணி,
அவம்!
சவம்!

~~~~~

இழவு முடிந்தபின்
உலவும் உழவாய்
உலர்ந்த மொழியில்
நடை பிறழ்ந்து வரும்
கவிதையை
நான் எழுதினால் என்ன?
நாய் எகிறினால் என்ன?
வாழ்வலர்ந்தது
வெறும்
வள்!

No comments: