Wednesday, January 12, 2005

புலம்



ரஜனி ராம்கி தத்தினைக் குறித்து எழுதியதன்பின்னே கடந்த இரு வாரங்களாக இதன்மேலே தோன்றியதை இங்கே குறிக்கிறேன்.

கடற்கோளினாலே பாதிக்கப்பட்டு, பெற்றோரினையோ அல்லது பாதுகாவலர்களையோ இழந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பேசப்படுவது மிகவும் மகிழ்ச்சியினைத் தருகின்றது. இவர்களின் எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும் ஒரு நடைமுறைச்சாத்தியமாக, தத்து எடுப்பது முன் வைக்கப்பட்டிருக்கின்றது. தத்துக்கொள்ளுதல் என்பது சிறந்ததே என்றபோதுங்கூட, இந்தக்கடற்கோளினாலே பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாகத் (ஆறுமாத காலம் என்பதையும் அப்படியான காலவெல்லை என்றுதான் கருதுகின்றேன்) தத்தெடுத்தல் என்பதிலேயிருக்கும் சில நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைத் தத்தெடுக்க விரும்புகின்றவர்கள் கவனிக்கவேண்டுமென்று தோன்றுகின்றது. சட்டரீதியான சிக்கல்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.; அதனாலேயே, அண்மைய நிலவரத்தினை அவதானித்ததின் விளைவாகத் தோன்றிய நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைமட்டும் குறிக்கின்றேன். எம்மிலே பலருக்கு இந்த எண்ணங்கள் தோன்றியிருந்திருக்குமென்றாலும், அவற்றினை மேலே பேசுதல் குறித்து, இங்கே பொதுவிலே குறித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

No comments: