Sunday, May 21, 2017

வசவுகளே கருத்து

ஸர்மிளா ஸையத் மீது மத அடிப்படைவாதிகள் திரும்ப எழுத்துவன்முறையைத் தொடங்கியிருக்கின்றார்கள். (1)

ஸர்மிளா பிபிசி- தமிழ்ச்சேவைக்குப் பாலியற்றொழில் குறித்துக் கொடுத்த செவ்வி மிகவும் தீர்க்கமானதாக இருந்தபோது, இணையத்திலே அவருக்கு இதுமாதிரியான எழுத்துவன்முறைத்தாக்குதல் முதலிலே விழுந்தது.

ஸர்மிளா 200% சிறப்பாக வலைச்செவ்விக்கான கேள்விக்கொத்தினைத் தயாரிக்கக்கூடிய ஷோபா சக்தி என்ற அற்புதமான நடிகரின் வலைப்பக்கத்திலே 2014 இலே கொடுத்திருந்த செவ்வியிலே கிழக்கிலே "தமிழர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது அரச படைகளுடன் சேர்ந்திருந்த சில முஸ்லிம் நபர்களே! பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த புலிகளைப் போன்று பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய அமைப்பெதுவும் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கவில்லை. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் நபர்களின் தாக்குதல் அரசின் தாக்குதலே என்ற புரிதலே இஸ்லாமிய முற்போக்காளர்களிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணம் என்று நினைக்கிறேன்." என்ற வௌவாற்பதில் அவரும் இரட்டை அளவுகோல்களை வைத்திருக்கக்கூடியவர் என்று எண்ணவைத்தது. இதுபோலவேதான், இருபத்தைந்தாண்டு நண்பராகவிருந்த ஒருத்தரும் பேஸ்புக்கிலே பக்கத்து மாநிலத்திலிருந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டினேன். தற்போது பேஸ்புக்கிலே என்னைத் தடை பண்ணி வைத்திருக்கின்றார் அந்த வஹாபிகொம்யூனிஸ்ட்😁 ஆனால், அஃது இவர்களைப் போன்றவர்களின் மற்றைய சமூக கருத்துகளோடு உடன்பாடு கொள்வதிலே ஏதும் தயக்கத்தைத் தருவதில்லை.

இப்போது மீண்டும் ஸர்மிளா ஸெய்யத் மீது வசவுகளை மேற்கொண்டு மத அடிப்படைவாதிகள் தாக்குகின்றனர். இதனைக் கண்டித்துவிட்டுப்போவது இலகு (அதையும் செய்யாமலிருக்கும் சிலரின் இலக்கியச்சந்தி, முன்னணி, அமைப்பு அரசியல்களுக்கு வலுவான காரணங்களிருக்கலாம்). ஆனால், அதற்குமேலே அவர் வாழும்நாட்டின் சட்டமொன்றும் செய்யாதா? இவ்வகையிலே சின்மயி தும்மவே தூக்கிப்போட்ட சென்னையின் ஜார்ஜுவைச் சொல்லவேண்டும். மஹானுபாவன்!

(1) https://www.facebook.com/photo.php?fbid=539756329713725&set=a.183927345296627.1073741829.100010380886839&type=3

No comments: