Thursday, August 09, 2007

me, myself & my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கிறீர்கள்?


படம் நன்றி: sangam.org

இவ்விடுகை நான், எனது, என் 'தான்' எந்திரத்தைப் பற்றிய புகைபோக்கல் மட்டுமே. வேறில்லை. ஈழம், டிஎம்ஐ, வேழம், டிஎம்எஸ் பற்றி வா சிக்கவென்று எவரையும் நான் அழைக்கவில்லை. வந்து சிக்குவதும் செருகுவது அவரவர் உத்தம, உன்மத்த மத்தளமனதைப் பொறுத்தே என்றாகுக.

வலைப்பட்டறையிலே நான் 'கலந்து' கொண்டிருந்தாலும், என் படம் எப்பதிவிலுமே தோன்றாததாலும் சித்தஞ்சிதறிச்சட்னிவடை எல்லோருக்கும் படம்போட்டுப் பதிவு போட்டாலும் எனக்குப் படம் போடாமலே பதிவு போடுவதாலும், இங்கே என் படமும் பட்டறை/றிந்தார்படப்பட்டியலிலே இணைக்கப்பட்டிருக்கின்றது. இது, இவ்விடுகையை, என் ஈகோவை, சட்னிவடையை, வலைப்பதிவர்பட்டறையை முழுமைப்படுத்துமென்பதிலே மகிழ்ச்சியடைகிறேன்.


காலச்சுவடு 1996 செப்ரெம்பரிலே சிவசேகரம் அளித்த நேர்காணலுக்கான அ. யேசுராசாவின் எதிர்வினையிலே ஒரு பகுதி:
1. "தமிழ்த்தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களைவிடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல" என்கிறார்.

சிங்களப்பேரினவாதிகளால் நீண்ட காலமாகவே உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படும் தமிழ்மக்கள், தமது உரிமைகளை மீட்டெடுக்கப்போராடுகின்றனரே தவிர, சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கப் போராடவில்லை; ஆனால், தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போராடும்போது, "தமது நலன்கள் பறிபோகப்போவதாக" சிங்களப்பேரினவாதிகள் தவறாக ஓலமெழுப்புகின்றனர்.

2. "'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை" என்று சொல்லும் சிவசேகரம், அதன் பின்னணியைச் சரியாகப் பார்க்கவேண்டும். தம்ழிஅர்களின் 'பாரம்பரியத் தாயக'க்கோட்பாட்டை நிராகரிக்கும் பேரினவாதிகள் எப்போதுமே, தமிழர்களை "வந்தேறு குடிகளாகவும்", சொந்த அரசொன்றை ஒருபோதுமே இலங்கையில் கொண்டிராதவர்களாகவுமே சித்தரித்து வந்துள்ளனர். இச்சித்தரிப்பை இலங்கையின் பொதுவான வரலாறும், குறிப்பாக 'யாழ்ப்பாண இராச்சியம்' பற்றிய வரலாறும் பொய்ப்பிக்கின்றன. பேரினவாதத்தை எதிர்கொள்ளவே "ஆண்ட பரம்பரை" என்ற தொடர் சிலரால் கையாளப்பட்டது. தமிழர்கள் தம்மைத்தாமே ஆளவேண்டுமென்கின்றனரே தவிர, சிங்களவர்களையும் தாம் ஆள வேண்டுமென என்றுமே சொல்லவில்லை. 'ஆண்ட பரம்பரை' என்பதைச் 'சாதி மேலாண்மை உடையோர்' என்பதாகத் திரித்து, சிவசேகரமும் அவரைப் போன்ற இடதுசாரிகள் பலரும் முன்னர் கருத்துகளைப் பரப்பியமையையும் சுட்டுதல் இங்கு பொருத்தமானது.


=========================================

மாலனின் வலைப்பதிவர்பட்டறையின் பேச்சுக்கும் தொடர்ந்த கேள்வி-பதில்களையும் ஒலிக்கோவையாக இணையத்திலே இட்ட பத்ரிக்கு நன்றி. மேலும், அதிலே எனக்குத் தேவையான மாலன், -/பெயரிலி.+இராம்+மகள்+ஈழம்+ஸ்ரீலங்கா+இந்தியா பற்றிப் பேசிய துண்டத்தினைப் பிரித்தெடுத்து ஒலிக்கோப்பேற்ற கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தினைக் கைக்கொள்வதற்கும் நன்றி.

குறிப்பிட்ட ஒலித்துண்டம் இங்கே இணைத்திருக்கின்றேன்



முழுதாக மாலன் என்ன பேசியிருக்கின்றார் என்று இப்போது (இரைச்சலூகவேனும் ஓரளவுக்குத் ) தெரிகின்றபோதிலே, மாலனின் இப்பேச்சுமேலே ஈழம்_இந்தியா_ஸ்ரீலங்கா பற்றி விபரமாகப் பின்னால்.

இப்போதைக்கு, வெறுமனே நான் இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதைச் சொன்னதை, தன் வலைநெறி பிறந்து எழுதுவதற்கு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டதைப் பற்றி. முதலாவது ஒரு வரி, நான் பெரியாரும், இராம் இராஜாஜியும் அல்ல; நான் டேவிட்டும் இராம் கோலியாத்தும் அல்ல; நான் ஈழத்திலே என் குடும்பத்தைக் கொண்ட தமிழ் அடையாளத்தோடிருப்பவனும், இராம் இலங்கா இரத்னா என்ற ஸ்ரீலங்கா அரசின் நன்னடத்தைப் பதக்கத்தைப் பெற்று ஸ்ரீலங்கா அரசுசார் "சமாதானக்"கூட்டங்களை இந்தியாவிலே நடத்திக்கொண்டிருக்கும் அரசியற்பலமும் பொருந்திய மாலனின் நண்பயுமாவார். குறைந்தபட்சம் ஒற்றுமையென்பதும் நானும் இராமும் நாற்பது வயதுதாண்டிய ஆண்கள் என்பதுமட்டுமே (இருவருக்கும் பேசுமொழி 'தமிழே' என்ற ஒற்றுமையைக் கொண்டு வராதீர்கள். குறைந்தபட்சம் இரண்டுபேர் ஒரே மொழியிலே ஆளையாள் புரிந்துகொள்ளும்போதுதான், ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று நான் கருதுகிறேன். நீங்கள் அப்படியாகக் கருதாவிட்டால், நான் ஒன்றும் செய்யமுடியாது)

இனி, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற செல்வநாயகியின் பதிவின்பின்னான என் ஒரு வரி எப்படியாக, அதே பதிவுப்பின்னூட்டத்திலே மாலனினால், ""உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று பெயர் சொல்லிப் பொருள் விரிக்கப்பட்டு, பின்னால், சென்னைப்பட்டறையிலே வலைநெறி பிறழ்ந்தற்கு உதாரணமாகப் போய் நிற்கின்றது.

(என் பின்னூட்டத்திலே குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகள் என்று சொன்னதை இந்து இராம் என்று நேராகவே போட்டெழுதுவதிலேகூட எனக்கேதும் தடையிருந்திருக்காது. ஆனால், அவ்வரிகளிலே அந்நேரத்திலே தோன்றவில்லை. அதனால், அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்றே வாசித்துக்கொள்வதிலேதும் எனக்குத் தடையில்லை - மாலன்தான் 'அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்று முதலிலே அடையாளம் கண்டு குறிப்பாக அதே வலைப்பதிவின்பின்னூட்டத்திலே பெயர் சொல்லி எழுதினார், அதனாலேயே "சாதாரண மாலன் வாசகர்களுக்கு " நான் பேசுவது இந்து இராம் + மகள் பற்றி என்று புரிந்திருக்கலாம்' என்று சொல்லி ஒரு தார்மீகமற்ற, ஆனால் தர்க்களவிலே எனக்குப் பாதுகாப்பான கவசத்தின்கீழே நான் மறையலாம் என்றானாலுங்கூட, தார்மீகமற்றதும் கோழைத்தனமானதுமான வாதமாகவே அஃதமையும்)

நான் எழுதிய அந்த ஒரு வரி எங்கே எதற்காகப் பயன்பட்டிருக்கின்றதென்று புரிந்துகொள்ளாதவர் அல்லர் பத்திரிகையாளர் மாலன். ஜீன் அரசநாயகத்துக்கு "தேவசுந்தரி, பார்வதி என்ற இரு பெண்களின் தாய்." என்ற இரு வரிகள் எதற்காக ஜீன் அரசநாயகத்தின் நூல் பற்றிய "அடையாளங்களுக்கு அப்பால்.. " என்ற கட்டுரையிலே எதற்கு எழுதினாரோ, அதற்கும் மேலான ஒரு தேவையுடனேதான் இந்து இராமின் மகள் பற்றி நான் சொன்ன கருத்தின் தேவை அமைந்தது. நான் பேராதனையிலே படிக்கும் காலத்திலே, ("தஸ்புஸ்கிஸ்" மேல்மட்ட நுனிநாக்கு ஆங்கிலம் வாசமேயற்ற) எங்களையறியாத பார்வதியிலே பொழுதுபோக்காக ஒரு வயதுக்கோளாற்றுத்தூரத்துப்பார்வை வைத்திருந்த நண்பனோடு மதிய உணவுக்கு கலைப்பீட உணவகத்துக்குச் சாப்பிடப்போனதுபற்றியோ, அரசநாயகம் அவர்களிடம் அந்நேரத்திலே MIRJE பாலகிருஷ்ணனின் கட்டுக்கல பேராதனைவீதி அலுவலகத்திலே வேறு சில நண்பர்களோடு இரண்டு மாதங்கள் வாரம் மூன்றுமுறை மாலையிலே தடவைக்கு ஒன்றரை மணிநேரம் ஆங்கிலம் கற்றது பற்றியோ அர்த்தமற்ற தனிப்பட்ட விபரங்களையெல்லாம் சேர்த்து எழுதினாலேதான், பேச்சுக்குச் சம்பந்தமில்லாத அநாவசியமாகியிருக்கும். ஆனால், நான் சொன்னது மிகவும் தெளிவான வாதம்.

நான் இந்து இராமின் மகளைப் பற்றி எதற்குச் சொன்னேன் என்று சென்ற இடுகையிலே விளக்குமாறு கொண்டு விளக்கிவிட்டேன். அதனால், சொன்னதை மீண்டும் "ஓர் ஒன்று ஒன்று; ஈர் ஒன்று இரண்டு" சொல்ல எவ்வகையிலும் எனக்குத் தெம்பில்லை; இதுவரை சொன்னதையே வாசித்துப் புரிந்துகொள்ளமறுக்கும் மாலனுக்கு அதற்காக நேரம் செலவு செய்யவும் விருப்பமில்லை. வேண்டுமானால், மீண்டும் வலைநெறி வளைநெறி பின்புலத்தையும் முதலாவது காரணத்தையும் வாசித்துப்பார்க்கவும். வேண்டுமானால், நான் எழுதியதினை மிகவும் பரந்துபட்ட, விரிந்த அதற்கு ஒத்தமை உதாரணமாக நான் சொல்லக்கூடியது கீழே வரும் நிகழ்வு.

சில வாரங்களுக்கு முன்னால் நடந்த அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதிவேட்பாளர்களின் விவாதமேடையிலே "பிள்ளைகள் தனியார் பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா? பொதுப்பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா?" என்று விவாதமட்டுறுத்துனர் ஒவ்வொரு வேட்பாளரிடமும் கேட்டார். அவர்களுக்கும் ஆறுதலாகப் பதில் சொன்னார்கள். விவாதமட்டுறுத்துனர் என்ன நெறியோடு வேட்பாளர்களின் தேர்தலிலே சம்பந்தப்படாத பிள்ளைகளைப் பற்றிக் கேட்கிறார் என்று அவரிடம் எவருமே கேட்பதில்லை. அது வெறுமனே வேட்பாளரின் சொல்லுக்கும் செயலுக்குமான ஒத்துப்போகும் தன்மையைக் காணவே கேட்கின்றார் என்று புரிகின்றது.

அவ்விவாதத்தின் எமக்குத்தேவையான உரைப்படி இங்கே கீழே:
---- சிஎன்என் யூரியூப் விவாத உரை உட்செருகல் -------
QUESTION: Hey, I'm Mike Green from Lexington, South Carolina. And I was wanting to ask all the nominees whether they would send their kids to public school or private school.
(APPLAUSE)
COOPER: The question is public school or private school. We know, Senator Clinton, you sent your daughter to private school. Senator Edwards, Obama and Biden also send your kids to private school. Is that correct?
CLINTON: No.
COOPER: No?
CLINTON: No, it's not correct.
COOPER: OK.
(LAUGHTER)
(CROSSTALK)
EDWARDS: I've had four children, and all of them have gone to public school. I've got two kids...
(APPLAUSE)
... who are actually here with me in Charleston tonight, two kids, Emma Claire and Jack, just finished the third grade in public school in North Carolina, and Jack just finished the first grade in public school in North Carolina.
COOPER: Senator Clinton?
CLINTON: And Chelsea went to public schools, kindergarten through eighth grade, until we moved to Washington. And then I was advised, and it was, unfortunately, good advice, that if she were to go to a public school, the press would never leave her alone, because it's a public school. So I had to make a very difficult decision.
COOPER: Senator Obama?
CLINTON: But we were very pleased she was in public schools in Little Rock.
COOPER: Senator Obama?
OBAMA: My kids have gone to the University of Chicago Lab School, a private school, because I taught there, and it was five minutes from our house. So it was the best option for our kids. But the fact is that there are some terrific public schools in Chicago that they could be going to. The problem is, is that we don't have good schools, public schools, for all kids. A U.S. senator can get his kid into a terrific public school. That's not the question. The question is whether or not ordinary parents, who can't work the system, are able to get their kids into a decent school, and that's what I need to fight for and will fight for as president of the United States.
(APPLAUSE)
COOPER: I want to ask this question of everyone.
Senator Biden?
BIDEN: My kids did go to private schools, because right after I got elected, my wife and daughter were killed. I had two sons who survived. My sister was the head of the history department. She was helping me raise my children at Wilmington Friends School.
BIDEN: When it came time to go to high school when they had come through their difficulties — I'm a practicing Catholic — it was very important to me they go to a Catholic school, and they went to a Catholic school. My kids would not have gone to that school were it not for the fact that my wife and daughter were killed and my two children were under the care of my sister who drove them to school every morning.
COOPER: Congressman Kucinich?
KUCINICH: My daughter, Jackie, went to the Columbus public schools and got a great education. And I want to make sure that that commitment that sent her to public school is a commitment that will cause all American children to be able to go to great public schools.
(APPLAUSE)
COOPER: Senator Gravel?
GRAVEL: My children went to public school and private school, and I'm recommend that we need a little bit of competition in our system of education. Right now, we have 30% of our children do not graduate from high school. That is abominable, and that is the problem of both parties.
(APPLAUSE)
COOPER: Senator Dodd?
DODD: My daughter goes to the public school as a pre-school — kindergarten. But I want to come back to the No Child Left Behind.
DODD: Because I think remedying this — and I understand the applause here — accountability is very important. This is one country — we've got to have the best prepared generation of Americans that we've ever produced in our educational system. No other issue, in my view, is as important as this one here. And getting the No Child Left Behind law right is where we ought to focus our attention here so that we have resources coming back to our states. You measure growth in a child. You invest in failing schools. But I would not scrap it entirely. Accountability is very important in this country. We ought not to abandon that idea.
COOPER: Let's try to stay on the topic.
The next question comes from Pennsylvania.
QUESTION: Hi. My name is Anne, and I work at a Planned Parenthood in Pennsylvania. My question is, we here at Planned Parenthood support comprehensive sex education and I'd like to know if any of you as candidates have talked to your children about sex and used medically accurate and age-appropriate information?
COOPER: Senator Edwards?
EDWARDS: Well, Elizabeth and I have had sort of an unusual experience for parents, because Elizabeth likes to say that was made a member of AARP when she was pregnant with Jack, our last child.
EDWARDS: We have had four children. Our two youngest children are now nine and seven. So we have been through the whole experience, including kids who have grown up. Yes, the answer is we have taught our younger children when they were young how to look for the signs of wrong touching, any kind of what would be sexual abuse, inappropriate touchng. And we have taught our children as they got older, all — I think, using medically appropriate terms — all that they needed to know to be properly educated.
COOPER: Senator Obama, Mitt Romney has accused you this week of saying that 5-year-old children should be getting sex education. Was he right?
OBAMA: Ironically, this was actually a proposal that he himself said he supported when he was running for governor of Massachusetts.
OBAMA: Apparently, he forgot.
(LAUGHTER)
And it makes the exact point that John made. I've got a 9-year-old daughter and a 6-year-old daughter. And I want them to know if somebody is doing something wrong to them, encroaching on their privacy, that they should come talk to me or my wife. And we've had that conversation, but not every parent is going to have that conversation with their child, and I think it's important that every child does, to make sure that they're not subject to the sexual predators.
COOPER: All right.
---- முற்று------
மேலும், கனிமொழி குறித்து இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு...... என்ற நீண்ட பத்தியைச் சிங்கப்பூர்த்தமிழ்முரசுக்கு எழுதியவர், குடும்பங்களை அளை/ழையாமலா, அப்பத்தியினைப் பொதுவாசகர்களுக்குத் தந்திருக்கின்றீர்களென்று நினைக்கின்றீர்கள்? நான் குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் கொலம்பியாவிலே மின்னுதல்' என்ற அர்த்தப்பட நான் எழுதியதை, முதலிலே தனிப்பட்டவரின் குடும்பம் மீதான ஏகடியம் என்று அதே பதிவுப்பின்னூட்டத்திலே பேசிவிட்டு, அதன் பின்னால், மூன்றிடங்களிலே நான் விளக்கியபின்னாலும், சென்னைப்பட்டறையிலே போய் சம்பந்தமில்லாததைப் பேசுதல் என்பதற்கு உதாரணம் எடுப்பதென்பது ஒன்று புரிந்துகொள்ளும் திறனில்லாததால் நிகழக்கூடியது; இரண்டாவது, மற்றவர்களின் கருத்தினை வாசிக்கவோ செவிமடுக்கவோ செய்யாமல், வெறுமனே தான் மற்றவர் என்ன சொன்னார் என்று நினைக்கின்றாரோ அவ்வர்த்தத்திலேயே மற்றவர் சொன்னார் என்று சொல்லும் திமிர்த்தனத்தின் (வார்த்தைக்கு மன்னிக்கவேண்டும்;அதுதான் உள்ளவற்றிலே நெறியானதும் பொருத்தமானதுமாகத் தெரிகின்றது) விளைவாகத் தோன்றக்கூடியது; மூன்றாவது, வேண்டுமென்றே ஒருவரைப் பற்றிய தவறான கருத்தினைக் குறிப்பிட்ட குழுவிடையே ஏற்படுத்தவேண்டுமெனச் சொல்லக்கூடியது (அது யார் "ஆமாம் சார்"" மாலனுக்குப் போட்டதென்று இன்னமும் தெரியவில்லை :-)). மாலன், நிச்சயமாகப் புரிந்துகொள்ளும் திறனற்றவர் அல்லர். அப்படியானால், எதற்குத் தொடர்ந்துமே வலைப்பட்டறைக்கூட்டமொன்றிலே வலைநெறிக்கு ஒவ்வாதது என்பதற்கான விளக்கமாக என் கூற்றினை எடுத்துச் சொல்லி, மேலும் பேசிக்க்கொண்டிருக்கும் நெறிபிறழ்வுக்கருத்துக்குச் சம்பந்தமில்லாத விளக்கமாக/வில்லங்கமாக, இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்தும்விதமாக, ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பதுவரைக்கும் இரண்டரை நிமிடங்களை எடுத்துக்கொண்டு, கடைசியிலே மட்டுறுத்துனருக்கு மற்றவர்கள் அவரிடம் கேள்வி கேட்க வழங்க நேரத்தினைத் தராமற் போகின்றாரென்று புரியவில்லை.

இதற்குமேலும் புரிந்துகொள்ளமுடியாவிட்டால், இக்குறிப்பிட்ட ஒரு வரி தொடர்பான (விதண்டா)வாதத்திலே எனக்குச் சொல்ல ஏதுமில்லை. இந்துவிலே வெளியான கொலம்பியா பல்கலைக்கழகத்திலே சிறந்து விளங்கும் மாணவி பற்றிய செய்தியின் அடிப்படையிலே வாதத்துக்குச் சுட்டிய என்னை வலைநெறிபிறழ்ந்ததாகக் கண்டிக்கும் நீங்கள், பிரபாகரனின் மகன் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் போகின்றார் என்று "அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி" உலகமே நம்பும் India's National Newspaper இந்து இட்ட பத்திரிகைச்செய்தியையும் பத்திரிகைநெறிப்படி தவறு என்று பத்திரிகை நெறியிலே மேற்படிப்பும் பட்டறிவும் பெற்று வலைப்பட்டறைகளிலே வலைநெறி பற்றி (ஆளில்லாதபோது, உதார் ரணம் காட்டும்) பத்திரிகையாளர் நீங்கள் அச்செய்தி வெளியான நேரத்திலேயே கண்டித்திருப்பீர்களென்று இவ்விடுகையை வாசிக்கும் எல்லா வாசகர்களையும்போல நானும் நிச்சயமாக நம்புகிறேன். இத்தோடு, அடுத்துவரும் மாலடியார் அஞ்ஞானக்கும்பி மறுப்பு 1ஆ பகுதியிலே என் கூற்று நான்குக்கு இங்கே சொன்னதையும் முழுமைக்காகச் சேர்த்துக்கொள்வதைத் தவிர, வேறெங்கும் *தனிப்படத் தொட்டதன்* அளவிலே உங்கள் வலைப்பட்டறைப்பேச்சினைப் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. மேலும் பேசுவது வெறும் சோர்வைத்தான் தருகின்றது. மாலனைப் போன்றும் புரிந்தும் புரியாததுபோலவே பேசிக்கொண்டு போகின்றவர்களுக்குத் தனிப்பட விளக்கம் கொடுக்கும் இந்நேரத்துக்கு யாரேனும் புத்தாலோ புல்வீனோ நளினத்திலே ஒரு சிறுகதையெழுத முயற்சித்திருந்தாலுங்கூட, என் சட்டைப்பதக்கம்போல, நானே குத்திக்கொண்டிருந்திருக்கலாம் :-(

====================================================

சிந்தாநதி, வெற்றி:
மிகவும் அன்புடன் என் முன்னைய பதிவின் பின்னூட்டங்களிலே சொல்லியிருக்கும் நண்பர்கள் நீங்கள். பொதுவிலேயே பல விடயங்களிலே உடன்பாடு கொண்டுள்ளவர்கள் நாம் (வெற்றியின் ஆறுமுகநாவலர் இடுகைக்கருத்தினைக் குறித்துப் பிறகொரு முறை சண்டை போட்டுக்கொள்ளலாம் :-)). அதனால், நான் நீங்கள் சொன்னதிலேயிருக்கும் கருத்துகளோடு உங்களுடன் நான் முரண்பட்டால் புரிந்துகொள்வீர்களென்று நிச்சயமாக நம்புகிறேன். ஏற்கனவே சொன்னதை விரிவாக, எழுதத் தெம்போ விருப்பமோ இல்லை.

வேண்டுமானால், சில கேள்விகளை மட்டும் இப்போதைக்குக் கேட்கிறேன்; பொதுவாக, இப்போதெல்லாம் எதைப் பற்றி நான் *தனிப்பட்ட என் கருத்தை என் பதிவிலே* பேசினாலுங்கூட, வேண்டுமென்றே ஈழத்தவரின் கருத்தென விரிப்பதுவும் தமிழ்மணம்/பூங்காவினைக் குறிவைத்துத் தாக்கி அடக்கமுயல்வதும் நிகழ்கின்றதைக் கண்டிருப்பீர்கள். ஈழத்தவருக்கு விரிப்பதைப் பற்றிக்கூட எனக்குப் பெரிய கவலையில்லை. ஈழம் என்பது எவராலும் இன்னமுறைப்படி இருப்பவர் இன்னார் என்று, பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பல்ல (வலைப்பதிவர்களின் நாடுகளில் ஒன்று என்று பதிவாளர்கள்கூட்டமைப்பொன்று பதிவு செய்ததைச் சொல்லவில்லை :-)); அதனாலே, எதையும் சேதப்படுத்தாது.

ஆனால், தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றிலே வைக்கும் தாக்குதல்கள் அப்படியானவை அல்ல; அதனாலேயே நான் கருத்தளவிலே என் *சொந்தக்*கருத்தினை. *என் தனிப்பட்ட ப்ளொக்ஸ்பொட்" பதிவிலே சொல்லத் தயங்கத்தேவையில்லையென்றபோதிலுங்கூட, நடைமுறையிலே என்னையும் தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றினையும் சேர்த்து எழுதி வாசிப்பவர்களுக்கு என் கருத்து இவ்வமைப்பின் கருத்து என்பதாக மயக்கம் ஏற்படுத்தி அவற்றுக்கெதிராகச் செயற்படத்தூண்டும் சிலரின் அடாவடித்தனம் என்ற மறைமுகமான தாக்குதலுக்கு - வெட்கமின்றி வெளிப்படையாகச் சொன்னால் - ஓரளவுக்கு -இவற்றின் நன்நோக்கங்கள் நிலைத்து இலக்குகள் எய்யப்படவேண்டுமென்பதற்காக-அஞ்சுகிறேன். இத்தனைக்கும் இந்துவைப் போல அதன் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தும் பத்திரிகையின் உத்தியோக பூர்வமான கருத்தும் ஒன்றே என்பதுபோல (..The Tigers' turning on the Indian Peace Keeping Force, the heavy casualties suffered by the Indian soldiers in the North and East of Sri Lanka, the withdrawal of the IPKF from the island in early 1990 and the Tigers' policy of assassinating any leaders opposed to it, resulting in Rajiv Gandhi's calamitous death in a suicide bomb blast near Madras in 1991, all made not only Ram, but also The Hindu take a strong anti-LTTE line. In this sense, the newspaper mirrored official India's policy course and turns...-The Hindu, Saturday, Sep 13, 2003) எங்குமே பூங்காவோ/தமிழ்மணமோ/டி எம்ஐஓ அதனோடு சம்பந்தப்பட்டவர்களின் பதிவுகளையும் தமதென்று சொல்வதில்லை. இல்லை, தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ இவற்றைத் தாக்கியே என்னைப் பயமுறுத்துவீர்களென்றால் (சித்தம் சிதறிய சட்னிவடைக்கு அல்ல இந்த அறிவிப்பு; அதனால், தொடர்ந்து நீர் பதிவும் நானே, பின்னூட்டமும் நானே என்று விளையாடலாம் :-)), சில மாத அவகாசம் தாருங்கள். என் சொந்தக்கருத்தினை, என் சொந்தப்பதிவிலே சொல்ல நான் டிஎம்ஐ இலிருந்து விலகிக்கொள்ளவேண்டுமா என்று தீர்மானித்து முடிவெடுத்துக்கொள்ள அவகாசமுடனான வாய்ப்பாகவிருக்கும். I do not have to endure some people's nonsenses and slurs personally towards me only because I do some voluntary tasks for TMI. My ego is important to me more than anything I see, encounter and mix in the net. (இலங்கைத்தமிழ்தான் புரியாது; இதுவேனும் -நான் எழுதியிருக்கும் english grammer ரைட்டா? :-(- புரிந்தால் சரி) இதனைப் புரிந்துகொண்டு, மேலே நீங்களும் வாசிக்கின்றவர்கள் எல்லோரும் என் கேள்விகளை வாசிப்பீர்களென்று நம்புகிறேன்.


வலைப்பதிவர்பட்டறையிலே அக்கணத்திலே சொல்லப்பட்டதையோ தடுக்கமுடியாத மட்டுறுத்துனர் மற்றவர்கள் குறித்தோ எனக்கேதும் வருத்தமில்லையென்றே நீங்கள் கொள்ளலாம். நான் வருத்தப்படுவேனா என்பது பற்றி வலைப்பட்டறை அமைப்பாளர்கள் மெய்யாகவே கவலைப்படுகின்றவர் அல்லர் என்றுதான் எனது எதிர்பார்ப்பு. இதற்கான காரணங்களை வலைப்பதிவு அமைப்பாளர்களிலே சிலருக்கும் எனக்குமிடையே வலைப்பதிவிலே ஏதோ ஒரு புள்ளியிலே தொட்டுக்கொண்டு விட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களை நான் சுட்டிக்காட்டலாம். வலைப்பதிவு ஆட்களையும் அரசியலையும் கையாளும் திறன் கொண்ட அதிமேற்றிராணிகளும் சந்திரசுவாமிணிகளும் கணித்திரைமறைவிலே செயற்படும்வரை அப்படியான வருத்தங்கள் மெய்யாகவே அவர்களிடம் தோன்ற வாய்ப்பில்லை என்றே நிச்சயமாக நான் நம்புகிறேன். அப்படியல்ல என்று அவர்கள் சொல்லவேண்டிய அவசியமுமில்லை; எவரது நம்பிக்கையும் தவறு என்று இன்னொருவர் நிறுவுவதும் கடினம். ஆனால், அதுவல்ல இங்கேயுள்ள பிரச்சனை. வேண்டுமென்றே மட்டுறுத்தும் நிலையிலிருந்த சிவக்குமார் மாலனைப் பேசச்சொல்லியிருப்பார் என்றோ அல்லது அப்பட்டறைக்கூடத்திலேயில்லாத (இன்னமும் சென்னையிலேயே இல்லாத நீங்கள் உட்பட) மற்றைய பட்டறை அமைப்பாளர்களும் வேண்டுமென்றே இதைச் செய்ததாகவோ கேள்வி எழுப்பமுடியாது. அப்படியான கேள்வி எழும்பினால், அது கேட்பவரின் தன் தேவைக்காகத் திரிக்கின்ற போக்கினைத்தான் காட்டும். தவிர, தனிப்பட்ட அளவிலே, என்னை மாலன் அங்கே இப்படியாகக் குத்தினாரென்றால், அதற்கு எங்கே அவருக்குக் குத்தும்படி குத்தவேண்டுமென்று எனக்குத் தெரியும். அப்படியாகத்தான் இணையத்திலே என் செயற்பாடுகள் இதுவரையிருக்கின்றன. அதனால், எதிராளியின் அதே சண்டித்தனத்தோடு கோதாவிலே இறங்கும் என்னைப் பற்றியதல்ல எவ்வகையிலும் இப்பிரச்சனை. என் "பெண்களைத் தமிழ்மணத்திலிருந்து பெண்கள் வாரத்திலே துரத்தி அவர்களின் சேவைகளையெல்லாம் எனதென்று காட்டிக்கொள்ளும் ஆணாதிக்கத்தன்மை பொருந்திய, விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அதேநேரத்திலே திராவிடத்தமிழர்களையும் அய்யங்கார்களையும் ஒரே நேரத்திலே எதிர்க்கும், புரியாமலே இலங்கைதமிழ் எழுதும், எழுத்தாளர் சல்மாவுக்கும் சல்மா அயூப்புக்கும் வித்தியாசம் தெரியாத" வானவிற்பண்புகளைத் தாமாக உணர்ந்தவர்களோ இடைத்தரகிகள் ஊடாகப் பாடங்கேட்டவர்களோ பாதிப்பேர், என்னையே அறியாத புதுப்பதிவர்களாக ஆகக்கூடியவர்கள் மீதிப்பேர் கொண்ட நான் போயேயிருக்காத சென்னையிலே மாலன் போகிறபோக்கிலே வைக்கும் மூன்றரை நிமிட நுண்ணரசியல் எவ்விதத்திலும் என்னைத் தனியாளாகப் பாதிக்கப்போவதில்லை. அதனால், இங்கே வாதம் என்னைப் பற்றியதல்ல; ஆனால், பட்டறையினர் -குறிப்பாக, மா. சிவக்குமார் - அதற்குப் பின்னாலே, இந்தக் குறிப்பிட்ட ஒரு விடயத்தை எப்படியாகக் கையாண்டார்கள் என்பதுதான் *எனது தனிப்பட்ட, வலைநெறிப்பட்ட பார்வையிலான* கேள்வி.

இக்கேள்வியினை நான் மிகவும் தெளிவாக என் முன்னைய பதிவிலும் பின்னூட்டங்களிலும் பிரித்துக்காட்டிய, வலைப்பதிவுப்பட்டறை குறித்த என் மதிப்பிலிருந்தும் அதன் அமைப்பாளர்களின் உழைப்பு குறித்த என் மதிப்பிலிருந்தும் வேறாகப் பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டுமென மீண்டும் இங்கே அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், மாலன் பற்றி என்னைப் போன்றவர்கள் கேட்பதையெல்லாம், வலைப்பட்டறைக்கு எதிரானது போலவே திரும்பத்திரும்பப் பேசும் வகையிலே ஓரிருவர் கிளம்பியிருக்கின்றரோ என்று தோன்றுகின்றது. அப்படியல்ல; வலைப்பதிவர்பட்டறைகள் அவற்றின் உடனடி விளைவுகள் எவையாக ஆரம்பத்திலேயிருந்தாலுங்கூட, தொடர்ந்தும் சென்னை வலைப்பதிவுப்பட்டறை அமைப்பாளர்களின் நோக்கினதும் உழைப்பினதும் பாதையிலே விரிந்தெங்கும் நடக்க, பேரளவு வலைப்பதிவர்கள்போலவே பார்வையாளனாக நானும் மிகவும் ஆவல்கொண்டிருக்கின்றேன்; அப்பட்டறை அமைப்பாளர்களின் நற்செயற்பாடுகளுக்குக் வலைப்பதிவுப்பார்வையாளனாக கடப்பாடும் கொண்டிருக்கின்றேன்" இதைப் புரிந்துகொண்டு மேலே வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.

என் கேள்விகள் சில:

1. மாலனின் இடத்திலே நானும் என்னிடத்திலே மாலனுமிருந்திருந்தால், மா. சிவக்குமாரோ மற்றைய அன்றைய நாள் அங்கேயிருந்த வலைப்பதிவு அமைப்பாளர்களோ என்ன செய்திருப்பார்கள்?

கேள்வி கேட்கும் விவாதங்களிலே புல் முளைக்கின்ற விளைவுமில்லாதபோது, எதற்காகப் பட்டறையிலே "கேள்வி நேரம்" என்ற என் சிறுபிள்ளைத்தனமான வாதத்தை இங்கே விட்டுவிடுகிறேன். "ஆமாம் சார்" என்று மாலன் சொல்வதற்குத் தலையாட்டுகின்றவர் கேட்கும் மாலனின் பேச்சின் போதான ஒலிப்பதிவிலே, பட்டறை முடிந்தபின்னால், அமைப்பாளர்களோ மா. சிவக்குமாரோ மாலனிடம் இதைப் பற்றிச் சுட்டிக் காட்டினார்களா என்பது கேட்காதென்ற நிதர்சனநிலையையும் ஒத்துக்கொள்கிறேன்.

2. மாலனின் பேச்சினைக் குறித்து மோகன்தாஸ் கேள்வி எழுப்பாவிட்டால், அதன் பின்னால், அதைக் குறித்து ஓரிரு இடுகைகள் வந்திராவிட்டால், மாலன் விவாதத்துக்குரியதாகப் பேசியது "தணிக்கை செய்யப்பட்டே" வந்ததுபோலவே எல்லாம் முடிந்திருக்குமா? மற்றைய வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இதற்காக ஓர் இடுகை எழுதியிருப்பார்களா?

3. திருவின் பத்திரிகையாளர் மாலனுக்கு... பதிவுக்கு ஈழத்தவனாக நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்; அதே நேரத்திலே, தனிப்பட்ட ஆளாக ஒரு கேள்வி, அங்கே வந்திருக்கும் பின்னூட்டத்தின்பின்னான பின்னூட்டம் இது,

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
//இதோ தாய் தமிழகத்தில் இருந்து முழங்குகிறோம்

"ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம் எங்கள் ரத்தம் "

எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயர் கண்டு கலங்கக்கூட உரிமையில்லையா ?
//

ரிப்பிட்டேய்..
8/09/2007 02:17:00 PM


யெஸ். பாலபாரதி வலைப்பதிவு பட்டறையின் 'தல'யான ஓர் அமைப்பாளர்; இங்கே ரிப்பிட்டேய் என்று குரல் தருவதை ஈழத்தவனாக நன்றியுடன் ஏற்றுக்கொள்கையிலே, பட்டறை முடிந்தபின்னால், மாலனிடம் அவரின் ஈழத்தவரும் ஸ்ரீலங்கா பாஸ்போர்டும் என்பது நெறிக்கு அப்பாலான பேச்சாக அலைந்தது பற்றிய கருத்துப்பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை (ஆட்சேபமென்று அல்ல) கேட்டாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்; நிச்சயமாக, -/பெயரிலி.யின் பெயர் சொன்னதைப் பற்றித் தனிப்பட்ட அக்கறைப்படவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஐந்து மாதங்களிலே நிகழ்ந்தவற்றினை உணர்ந்திருக்குமளவிலே அப்படி அவர் கேட்டிருந்தால்மட்டுமே எனக்கு சில நிகழ்வுகளைத் திரும்பி மீள்பார்வை பார்க்கும் தேவையை வைத்திருந்திருக்கும்.


4. புதியவலைப்பதிவர்கள் (ஆகப் போகின்றவர்கள்) என்ன நினைப்பார்களோ, வலையிலே இதைத்தான் முதலிலே வாசித்துவிடப்போகின்றார்களோ என்று கவலைப்படுகின்றீர்கள்; மாலன் பேசியதை வைத்து, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கே கவலையில்லாதபோது (முதலாவது, இதையெல்லாம் அவர்கள் கவனித்தார்களா என்பது பெரியதொரு விடயம்; நாங்கள் அதைக் கவனிக்கவில்லை; கவனித்தார்கள் என்றே கொண்டு பேசுகின்றோம் :-)), நீங்களும் என் "பெயரை"ப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. ஆனால், வலைநெறி என்பது தவறான கருத்தினை ஒருவர் பரப்பியபின்னால், வலைப்பட்டறை அமைப்பாளர்கள் (எதிர்ப்பென்று அதற்கு ஏற்படாவிடத்து, அதைப் பெரிதுபடுத்தாததுகூடப் பெரியவிடயமில்லை; ஆனால்,) எதிர்க்கருத்தென்று ஒன்று வலையிலே எழுப்பப்படும்போது, அதைப் பேசாதிருத்தலே வலைநெறி என்று கற்றுக்கொள்வதுதான் இதனால் ஆகுமென்பதிலே உங்களுக்குச் சம்மதமென்றால், சொல்ல ஏதுமில்லை.

5. சிவக்குமார், பூர்ணாவின் இடுகையிலேதமிழ்புளோக்கர்ஸ்.ஆர்க்கின் பதிவுகள் அல்லது தளத்தில் வருவன அனைத்தும், பட்டறை அமைப்பாளர்கள் அனைவரின் மொத்த கருத்தே.. சிவகுமாரின், பாலபாரதியின், ரவிசங்கரின், சிந்தாநதியின், விக்கியின், லக்கிலுக்கின் மற்றும் பூர்ணாவின் இடுகை அது என்ற இடுகையிலே..


நான் மோகன்தாசுக்குச் சொன்னது
“அத்தகைய விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து.”
இத்தகைய விவாதங்களை இந்தப் பட்டறையில் நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பொருளில்தான். அதில் எனது சொற்பயன்பாடு அடாவடியாக தவறாகப் பொருள் படும்படி இருந்து விட்டதை உணர்ந்து வருந்துகிறேன்.


இங்கே சொல்லப்பட்டிருக்கும் விதத்திலே அவரின் வரிகளோடு எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மாலனிடம் அவர் இதைப் பற்றி ஏதாவது சொன்னாரா? பதிவர் பட்டறைவின் நிகழ்வுகளென்று அவர் "தணிக்கை" செய்து எழுதிவைப்பதுதான் சரியான முன் மாதிரியா? சிவக்குமார் மன்னிக்கவேண்டும்; ஏனென்றால், அவர் எப்போதுமே எவரிடத்திலுமே அவரைப் பற்றிய தவறான கருத்து ஏற்படாதிருக்க மிகுந்த கவனத்தோடு செயற்படுகின்றவர் என்பதே தமிழ்நெற் காலத்திலிருந்து எனது புரிதல் (அரவிந்தன் நீலகண்டனுடனான விவாதம் போன விதங்கூட அதை உறுதிப்படுத்தியது); இப்படியாக, isolationists ஆக இல்லாமலே Mixing with crowd ஆக இருக்கும் நேரத்திலேயே தங்களைப் பற்றிய நல்ல கருத்தினை எல்லோரிடத்திலும் தக்கித்துவைத்துக்கொள்கின்ற வலைப்பதிவிலிருக்கும் சிலரிலே எனக்கு உள்ளூர மிகப்பொறாமையுண்டு என்பதையும் நான் சொல்லிவிடவேண்டும். [அட, நம் சித்தஞ்சிதறிச்சட்னிவடை என்னையும் இன்னும் சிலரையும் அன்போடு அ தட்டியெழுதிய பின்னூட்டத்தைக்கூட, சட்னிவடை கோச்சுக்கக்கூடாதென்று கொஞ்ச நேரம் நேற்றிரவு தன் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் இடுகையின்பின்னாலே, 'me'தக்கவிட்டிருந்தாரென்றால் பாருங்கள் :-)]


6. இந்து இராம்_அவர் மகள் பற்றி நான் & மாலன் எழுதிய குறிப்புகளையும் விளக்கங்களையும் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் வாசித்தவர்களோ (புரிந்துகொண்டவர்களோ) - மோகன்தாஸ் பொதுவிலே வேறுகோணத்திலே தொட்டுக் கேள்வியெழுப்பியிருந்தாலுங்கூட - அப்பட்டறைக்கூ(ட்)டத்திலே இருக்கவில்லையா? இதுதான் தனிப்பட எனக்குப் பெரிய தாக்கமாகின்றது :-( மாய்ந்துமாய்ந்து மாலனின் தாமே பொலபொலக்கும் வாதங்களைப் பிய்த்துவைத்துக்கொண்டிருக்கின்றேன் என்று எண்ணிக்கொண்டு அரைமைல் நீள இடுகைகளை நேரம், சத்தி (இன்னும் வெளியே சொல்லமுடியாத, தேவையற்ற சில) விட்டு பதிவிலே இட்டுக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் அத்தனை பதிவர்களும் வாசிக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையிலே... அங்கே போய் மாலன் ராம் பொண்ணை அநாவசியத்துக்கு -/பெயரிலி. இழுக்கின்றார் என்று வலைநெறி புகட்ட, "ஆமாம் சார்", 'மௌனமே சம்மதம் சாமி' என்று இருந்தால், மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு எழுதுவதைவிட்டுவிட்டு, அய்யனார், தமிழ்நதி வழியிலேயே "கதை, கவிதை" என்றோ அல்லது சிவபாலன், குமரன், வடுவூர் குமார் வழியிலே, "மினியாபொலிஸ் பாலம் உடைந்ததின் பின்னான தொழில்நுட்ப & நிர்வாகக்கோளாறு" & "கத்தரினா புயலிலே அணைக்கட்டு உடைந்த மண்மர்மம்" என்றோ, டிசே, சன்னாசி வழியிலே "அண்டார்ட்டிக்கா திரைப்படவிழாவிலே பார்த்த ஆபிரிக்கத்திரைப்படம் திருடிய ஆர்ஜெண்டீனியச்சிறுகதை" என்றோ எனக்கேனும் என்ன பேசுகின்றேனென ஓரளவு தெரிந்தார்தீவிலே இறங்கித் துன்புறுத்துவேன். அந்த வேதனை வலைப்பதிவுக்கு வேண்டுமா? :-) (இதையாவது நீங்கள் புரிந்து வாசிக்கும்படி புரிந்து எழுதுகின்றேனா?) :-( அல்லது மாலன் போன்ற வலைப்பதிவைக் கண்டெடுத்து வழி நடத்திய முன்னோடிகளிலே அடங்காத சாதா ரண சகபதிவர் என்றுகூட பதிவுகளிலே ஓரிருவர் துளைக்கும்வரை தோன்றாத உங்களுக்கும் உங்கள்
பட்டறைக்கு ஊடகவிளம்பரம் கிடைக்கச்செய்யும் மாலன் சாருக்கும் (லக்கி லுக், நெஜமாலுமே உண்மை மாலன் சாரை பேட்டி கண்டாங்களா? மாலன் சார் பட்டறையிலே தான் என்ன சொன்னார் என்று பட்டறையிலே மாலன் பேசியபோது இல்லாத நீங்கள் ஏதாவது அறிந்துகொண்டீர்களா? :-)) தொல்லையில்லாமல் வலைப்பதிவை விட்டுப்போய்விடட்டுமா? அது வலைநெறிக்குள்ளே ஓக்கேயாகுமா?


வலைநெறி பேசிய மாலனிடம் யாரேனும் "சார், சல்மா அயூப், போலி டோண்டு, இரவுக்கழுகார் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? வலைப்பதிவு நெறியிலே இதன் விளைவைவிடவா, இராம் பொண்ணு பேரை நீங்களேதான் உடைத்துச் சொன்னது பெரிதாகிவிட்டது?" என்று ஏன் கேட்கவில்லை என்ற கேள்வியும் என்னிடமிருந்தாலுங்கூட, அதை unconference வலைப்பட்டறை அமைப்பாளர்களிடம் நான் கேட்பது கேட்பது முற்றிலும் பொருந்தாது என்பதாலும், அந்நேரம் வலைப்பட்டறையிலே அமர்ந்திருந்து கேட்டிருக்கக்கூடிய பங்காளிகள் யார் என்று தெரியாததாலும் இங்கே நான் ஏழாவது கேள்வியாக எழுப்பவில்லை


ஆனால், இங்கே இக்கேள்விகளைக் கேட்கவேண்டுமென்று தோன்றியது. கேட்டுவிட்டேன். பதிலினை எவரிடமும் நான் எதிர்பார்க்கவில்லை. இதற்காக எக்காரணம் கொண்டும் தம் நேரத்தினைச் செலவு செய்து பெரிய இடுகைகளை, பட்டறை தன்னார்வத்தோடும் நன்னோக்கோடும் நடத்திய "குற்றத்"துக்காகத் தரவேண்டாமென்றே தாழ்மையுடனும் மெய்யான அன்புடனும் கேட்டுக்கொள்கிறேன்.......

........... ஆனால், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், ஆம், இல்லை என்று வலைப்பட்டறை அமைப்பாளர்கள் பதில் தந்தால் நன்றியுடையவனாவேன்...

"இத்தனைக்கும் பின்னால், மாலனிடம் நேரடியாக மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ அவர் பதிவிலோ அவரின் பேச்சின் இப்பகுதியைக் குறித்து கண்டனவரி ஒன்றையேனும் எந்த அமைப்பாளரானாலும் இதுவரை தெரிவித்திருக்கிறாரா?"


இவையெல்லாம் நான் மண்துகளை வைத்து மலையாகக் காட்டும் ஒரு குரூரக்கோணங்கிநிகழ்வு காட்டுவதாகத் தோன்றுமென்ற அச்சத்திலேயே அடக்கி வாசிக்கவேண்டியிருக்கின்றது. ஆனால், எனது கருத்து என் தனிப்பட்ட, மாலனின் -/பெயரிலி. என்ற பெயர் பயன்பட்டதன் பின்னான, கேட்க வேண்டுமென்று தோன்றாத, ஆனால், வெற்றி, சிந்தாநதி ஆகியோரின் பின்னூட்டங்களினாலே வெளிப்படையாகக் கேட்டாக வேண்டிப்போன கேள்விகள் மட்டுமே. ராமின் மகளைப் பற்றிய நான் பேசியது வலைநெறி பிறழ்ந்தாக வலைப்பட்டறையிலே சிலாகித்துப்பேசவேண்டிய பெரியவிடயமென்றால், நான் இந்த மேட்டிலே ஏறி நின்று மலைப்பிரசங்கம் செய்வதும் தவறில்லை என்று நண்பர்கள் உணர்வார்களென்று நிச்சயமாக நம்புகிறேன். ஈழம் குறித்த மாலனின் கருத்தினை (ப் புலம்பெயர்ந்த) ஈழப்பதிவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பார்த்துக்கொள்ளட்டும். புலம் பெயர்ந்த ஈழப்பதிவர்களிலே நானும் அடக்கம் :-))

கடைசியாக, திரு அற்புதனின் வலையிடுகையிலே சுட்டிக்காட்டிய ஒரு வரியோடு இவ்விடுகையை முடிக்கிறேன் (வரிகள் அப்படியே ஞாபகமில்லாததால், கருத்து அப்படியே வரும்படி மட்டுமே தந்திருக்கின்றேன்): "இலங்கைத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களுக்கும் இடையே பிரித்தாளும் "அரசியல்" இனை நடத்துகின்றதைப் புரிந்து" கொண்டு நாம் செயற்படவேண்டும். இவ்விடுகையை வாசித்தவர்களிடமும் இவ்விடுகையை அப்படியான பார்வையோடு மட்டுமே பார்க்கும்படி கேட்டிருந்தேன்; கேட்கிறேன். இது சென்னை வலைப்பதிவர் பட்டறை மீதானதோ, அதன் அமைப்பாளர்களின் உழைப்பின் மீதானதோ விமர்சனம் அல்ல; அப்பட்டறையிலே மாலனின் கருத்துவெளிப்பாட்டோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்த விமர்சனம் மட்டுமே.

இவ்விடுகைக்கான ஆனந்தக்கும்மிகள் இடுகையின் நோக்கத்தினைத் திசைதிருப்ப மற்றோருக்கு வசதிப்பட்டுவிடுமென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா; கும்பியிலே அடிக்கிறகும்மிகள் வலைநெறியோடிருப்பின் வருக வருகவென்று வரவேற்கப்படுகின்றன.

"எல்லோரும் in புற்றிருப்பதன்றி வேறேதும் yam அறியோம் பராபரமே!!"



நான் வலைப்பதிவிலிருந்து குறைந்தது சில மாதங்களுக்கேனும் விலகியிருக்கவேண்டியதாக தனிப்பட்ட வாழ்க்கைச்சூழல் நிர்ப்பந்திப்பதால், இங்கே பதிவிடச் சாத்தியங்கள் மிகக்குறைவு.

எல்லோருக்கும் இவ்வாண்டு முடியும்வரைக்குமான பண்டிகைகள் அனைத்துக்கும் சேர்த்து முன்கூட்டிய வாழ்த்து.

17 comments:

அற்புதன் said...

பெயரிலி,

இதற்குள் இவ்வளவு அரசியலா?:-(

//"அண்டார்ட்டிக்கா திரைப்படவிழாவிலே பார்த்த ஆபிரிக்கத்திரைப்படம் திருடிய ஆர்ஜெண்டீனியச்சிறுகதை//

நானும் இது பற்றி யோசித்திருகிறேன்:-),

எழுதக் கூடியவர்கள் எல்லாம் ஏதேதோ எழுதிக் கொண்டிருகிறார்கள் என்று.அது அவர் அவர் விருப்பம்.ம்...

//நான் வலைப்பதிவிலிருந்து குறைந்தது சில மாதங்களுக்கேனும் விலகியிருக்கவேண்டியதாக தனிப்பட்ட வாழ்க்கைச்சூழல் நிர்ப்பந்திப்பதால், இங்கே பதிவிடச் சாத்தியங்கள் மிகக்குறைவு.//

இந்தச் சம்பவங்களால் இப்படியான முடிவை எடுப்பது உங்கள் தெரிவாயினும் , இணயத்தை தம் நன் நடத்தையின் பாற்பட்டு வழி நடாத்த விரும்புவர்களின் நோக்கம் இதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பற்றியும் சற்றுச் சிந்தியுங்கள்.எதற்கும் ஆறுதலாக யோசித்து விட்டுச் செய்யுங்கள்.

வெற்றி said...

பெயரிலி,
உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
இன்னும் உங்களின் பதிவை முழுமையாக வாசிக்கவில்லை. இப்போது சும்மா மேலோட்டமாகத்தான் வாசித்தேன் [சில பந்திகளை]. இவ்வார இறுதியில் வாசித்துவிட்டு பின்னர் கருத்துச் சொல்கிறேன்.

/* (வெற்றியின் ஆறுமுகநாவலர் இடுகைக்கருத்தினைக் குறித்துப் பிறகொரு முறை சண்டை போட்டுக்கொள்ளலாம் :-)). */

ஹிஹிஹி... சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. நான் நாவலரைப் பற்றி சில இடங்களில் எழுதிய போது உங்களைத்தான் நினைத்தேன். :-))

கட்டாயம் நாவலர் பற்றிய மாற்றுக்கருத்தோடு வருவீர்கள் என நினைத்திருந்தேன். ஏனெனில் உங்களின் சில பின்னூட்டங்கள்/பதிவுகளில் நாவலர் பற்றிய உங்களின் கருத்துக்களை வாசித்திருக்கிறேன். :-))

/* பிறகொரு முறை சண்டை போட்டுக்கொள்ளலாம் :-)). */

:-)). நல்ல விடயம். நாவலர் பற்றி உங்களின் மூலம் மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன். நாவலர் இறந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பின்னும் அவர் பற்றிக் கதைக்கிறோம் என்றால் அவர் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் [நல்லதோ/கெட்டதோ] எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை எண்ணி வியப்பாக இருக்கிறது. நாவலர் கருத்துப் பரிமாற்றத்துக்கு முன்னர் அறிவிப்புத் தாருங்கள். ஏனெனில் நூல்நிலையத்தில் நான் அவர்பற்றிப் படித்த நூல்களை எல்லாம் திருப்பிப் பார்க்க வேணும். :-))

மார்கழியில் அவரின் நினைவு தினத்திற்கு அவர் பற்றி ஒரு பதிவு எழுத வேணும் என ஆசை உள்ளது. நேரம் அனுமதித்தால் பார்ப்போம். துவங்கியாச்சு. இன்னும் முடிக்கவில்லை.

நிற்க.

/* நான் வலைப்பதிவிலிருந்து குறைந்தது சில மாதங்களுக்கேனும் விலகியிருக்கவேண்டியதாக தனிப்பட்ட வாழ்க்கைச்சூழல் நிர்ப்பந்திப்பதால், இங்கே பதிவிடச் சாத்தியங்கள் மிகக்குறைவு. */

முழுமையாக விலகிவிடாமல் கிழமைக்கு ஒருக்காலாவது தலையைக் காட்டப் பாருங்கள் என எனது அன்புக் கோரிக்கையையும் உங்கள் முன் வைக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

பெயரிலி,
பூர்ணாவின் இடுகையை எனறு ஒரு இடத்தில் குறித்திருக்கிறீர்கள்.. தமிழ்புளோக்கர்ஸ்.ஆர்க்கின் பதிவுகள் அல்லது தளத்தில் வருவன அனைத்தும், பட்டறை அமைப்பாளர்கள் அனைவரின் மொத்த கருத்தே.. சிவகுமாரின், பாலபாரதியின், ரவிசங்கரின், சிந்தாநதியின், விக்கியின், லக்கிலுக்கின் மற்றும் பூர்ணாவின் இடுகை அது..

மற்றபடி, உங்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஜூட்..

- யெஸ்.பாலபாரதி said...

/மற்றபடி, உங்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஜூட்..
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

பொன்ஸ், இடுகையை ஒழுங்க படிச்சு பின்னூட்டம் போடுங்க!

- யெஸ்.பாலபாரதி said...

//யெஸ். பாலபாரதி வலைப்பதிவு பட்டறையின் 'தல'யான ஓர் அமைப்பாளர்; இங்கே ரிப்பிட்டேய் என்று குரல் தருவதை ஈழத்தவனாக நன்றியுடன் ஏற்றுக்கொள்கையிலே, பட்டறை முடிந்தபின்னால், மாலனிடம் அவரின் ஈழத்தவரும் ஸ்ரீலங்கா பாஸ்போர்டும் என்பது நெறிக்கு அப்பாலான பேச்சாக அலைந்தது பற்றிய கருத்துப்பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை (ஆட்சேபமென்று அல்ல்) கேட்டாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்; நிச்சயமாக, -/பெயரிலி.யின் பெயர் சொன்னதைப் பற்றித் தனிப்பட்ட அக்கறைப்படவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஐந்து மாதங்களிலே நிகழ்ந்தவற்றினை உணர்ந்திருக்குமளவிலே அப்படி அவர் கேட்டிருந்தால்மட்டுமே எனக்கு சில நிகழ்வுகளைத் திரும்பி மீள்பாவை பார்க்கும் தேவையை வைத்திருந்திருக்கும்.
//

பெயரிலி,
பட்டறையின் வெளி வேலைகளை நான் எடுத்துக்கொண்டதால்.. ஓடிக்கொண்டே இருந்தேன் என்பது அங்கு வந்திருந்த எல்லோருக்கும் தெரியும். மேலும் நான் இருந்து வேடிக்கை பார்த்த ஒரே நிகழ்வு எனில் அது "ப்ளாஷ்" பற்றிய வகுப்பு மட்டும் தான். (அதிக படங்களில் கூட நான் இல்லை. :( )

எதற் எதற்கோவெல்லாம் எஸ்.டி.டி போட்டு மணிக்கணக்கில் என்னிடம் பேசும் மோகன் தாஸ் இப்படி ஒரு, விரும்பத்தகாத விசயம் நடந்ததை அங்கே வைத்து என்னிடம் சொல்லி இருக்கலாம். ஆனால்.. அவரும் சொல்லவில்லை. நிகழ்வுகள் குறித்தும் நான் யாரிடமும் எந்த விசாரனையும் வைக்கவில்லை.

காலையில் வெளியிளிருந்து கொண்டு வந்த பொருட்களை அனுப்பும் வேலைகளிலேயே இருந்துவிட்டதால் சக அமைப்பாளர்களிடமும் பேச முடியாமல் போனது.

அடுத்த நாள் பதிவுலகிற்கு திரும்பிய பின் தான் விசயமே எனக்கு தெரிய வந்தது. அதனால் கையறு நிலைக்கு ஆளாளேன் என்பது தான் நிஜம்.

அமைப்பளர்களை நோக்கிய கேள்விக்கு, அவர்களிடம் பேசிய பின் திருப்ப வருகிறோம்.

புரிதலுக்கு நன்றி!

பொன்ஸ்~~Poorna said...

பதிவு முழுக்க படிக்க தவறிவிட்டேன்.. பாலா சொன்ன பின்னர் தான் கவனித்தேன்... கலந்து பேசிவிட்டு வருகிறோம்..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பெயரிலி,

பட்டறை ஏற்பாட்டாளர்களின் ஒட்டு மொத்தக் கருத்தை வெளிப்படுத்தும் இந்த இடுகையை மாலனின் சென்னை பதிவர் express கட்டுரையில் பின்னூட்டமாக இட்டிருக்கிறோம். ஒவ்வொரு பட்டறை ஏற்பாட்டாளரும் தனித்தனியாக அவருக்கு மின்மடலிடுவதைக் காட்டிலும் அழைத்துப் பேசுவதைக் காட்டிலும் பொதுவில் மறுப்பை வெளிப்படுத்துவதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் இது உகந்த வழி என்று நினைக்கிறோம். வலை நன்னடத்தையை வலியுறுத்தும் மாலன் அதற்கு பதில் அளிப்பார் அல்லது குறைந்த பட்சம் பின்னூட்டத்தை வெளியிடவாவது செய்வார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

லக்கிலுக் said...

//லக்கி லுக், நெஜமாலுமே உண்மை மாலன் சாரை பேட்டி கண்டாங்களா? மாலன் சார் பட்டறையிலே தான் என்ன சொன்னார் என்று பட்டறையிலே மாலன் பேசியபோது இல்லாத நீங்கள் ஏதாவது அறிந்துகொண்டீர்களா? :-)) //

மாலன் பேசியபோது இல்லாத நான் உங்கள் பதிவுகளையெல்லாம் படித்து என்ன பேசியிருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். மாலன் மிக டெக்னிக்கலாக பேசியிருக்கிறார். அவர் பேசுவதை உடனடியாக எத்தனை பேர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பது கேள்விக்குரிய விஷயமே.

மாலன் பட்டறையிலிருந்து வெளியே வந்தபோது "பெரியார் திடலில் இருந்து வருகிறேன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உண்மை பத்திரிகையின் நிருபர் பேட்டி கண்டது உண்மை தான். பட்டறை பற்றிய Formal ஆன கேள்விகள் கேட்கப்பட்டது. மாலனும் பட்டறை குறித்த Formal ஆன பதில்களையே அளித்தார்!

அன்புடன்
லக்கிலுக்

மா சிவகுமார் said...

பெயரிலி,

மாலன் பேசியது தொடர்பாக என்னுடைய பதிவிலும் அதிகார பதிவிலும் விளக்கம் கொடுத்து விட்டோம்.

முற்பகல் ஒரு மணி வாக்கில் மாலன் பேசியதன் விளைவு மதியம் கூட உறைக்கவில்லை, தேவையில்லாத வலைப்பதிவு அரசியல் விவாதத்தை அவர் ஆரம்பிக்க நினைக்கிறார், அதை நீள விடுவதால் எந்தப் பலனும் இல்லை என்றே மேல் விவாதத்தை நிறுத்தினேன்.

//மாலன் விவாதத்துக்குரியதாகப் பேசியது "தணிக்கை செய்யப்பட்டே" வந்ததுபோலவே எல்லாம் முடிந்திருக்குமா?//
//பதிவர் பட்டறைவின் நிகழ்வுகளென்று அவர் "தணிக்கை" செய்து எழுதிவைப்பதுதான் சரியான முன் மாதிரியா? //

உண்மையில் அடுத்த நாள் காலையில் விபரங்களை பதிவுக்காக எழுதும் போது இந்த விவாதம் நினைவுக்கு வரவேயில்லை. பட்டறை நோக்கத்துக்கு ஒத்த நடப்புகளை மட்டும் எழுதிப் போனேன்.

நானும், நீங்களும் பட்டறை கருத்தரங்கில் இருந்த 150 பேரும் பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல இது என்பதால் மாலன் இடம் தவறிப் பேசியதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

நீங்கள் சொல்வது போல மோகன் தாஸ் இந்த விபரங்களைப் பதிவு செய்திருக்கா விட்டால் எனக்கு மாலனின் அந்த பேச்சு முற்றிலும் மறந்தே போயிருக்கும். அந்த அரங்கில் இருந்த பெரும்பாலானோருக்கும் அதுதான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

//அவர் எப்போதுமே எவரிடத்திலுமே அவரைப் பற்றிய தவறான கருத்து ஏற்படாதிருக்க மிகுந்த கவனத்தோடு செயற்படுகின்றவர் என்பதே தமிழ்நெற் காலத்திலிருந்து எனது புரிதல்//

ஆகா, இதில் இப்படி ஒரு பார்வை இருக்கா :-). எந்த ஒரு மனிதரையும் முத்திரை குத்தி வில்லன், ஹீரோ என்று ஒதுக்கி வைக்க முடிவதில்லை பெயரிலி. அதனால் வளைத்து வளைத்து எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக ஆகி விடுகிறேனோ என்னவோ.

நீங்கள் சொல்வது போல திட்டமிட்டுக் கவனமாகச் செயல்படுவதில்லை, உள்ளே
இருப்பதைத்தான் சொல்ல முயல்கிறேன்.

//நம் சித்தஞ்சிதறிச்சட்னிவடை என்னையும் இன்னும் சிலரையும் அன்போடு அ தட்டியெழுதிய பின்னூட்டத்தைக்கூட, சட்னிவடை கோச்சுக்கக்கூடாதென்று கொஞ்ச நேரம் நேற்றிரவு தன் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் இடுகையின்பின்னாலே, 'me'தக்கவிட்டிருந்தாரென்றால் பாருங்கள் :-)//

அந்தப் பின்னூட்டத்தில் எந்த தவறும் இல்லை. அவரது சுட்டியைக் கிளிக்கிப் போகும் போதுதான் உங்களைத் தாக்கிய பதிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அதை ஒரு நண்பர் சுட்டிக் காட்டி பின்னூட்டத்தையும் நீக்க வைத்தார். அந்தப் பின்னூட்டம், உங்கள் பார்வைக்காக இங்கே:
=============================
சட்னிவடை said...
என்ன பேசினார் என்ற முழுப்பேச்சை எழுத முடியுமா சிவகுமார்?
படித்துப் பாருங்கள் என் பதிவை
(+++++சுட்டி++++)
Wed Aug 08, 08:15:00 AM IST
===================================
(பாருங்க, உங்களுக்கும் நல்ல பிள்ளையாக முயற்சிக்கிறேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

-/பெயரிலி. said...

அற்புதன், வெற்றி,
வலைப்பதிவுகளையும் பெருமளவுக்கு இணையத்தினையும் விட்டு சில மாதகாலம் விலகியிருக்க எண்ணியதன் முதன்மைக்காரணம் இவ்வாரத்திலே தொழில்சார்ந்த எதிர்காலமாற்றங்களுக்கும் இடமாற்றத்துக்கும் என்னைத் தயார்செய்வதிலே கவனத்தைச் செலுத்தவேண்டிய நிலையிலிருப்பதால்; மூன்றாண்டுகளாகத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்த தொழிற்பரீட்சை ஒன்றை வரும் ஒக்ரோபர் மாதத்திலே எடுத்தே ஆகவேண்டுமென்ற நிர்ப்பந்தம் நேற்று வந்துசேர்ந்ததால்மட்டுமே. இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்னாலே படித்த சேதன இரசாயனம், இயக்கவியல், நிலையியல் எல்லாம் திரும்பத் தூசு தட்டிக்கொள்வதென்பது கொஞ்சம் நாட்கள் தேவைப்படும் காரியங்கள். வலைப்பதிவிலே, மெய்யாகவே ஓர் ஆழமான வாதமென்று தொடங்கினால், அதை முழுக்கமுழுக்க ஒழுங்கான சுட்டி, இணைப்பு, தரவுகளுடன் ஏழு மைல் நீளத்துக்கு - எவரும் வாசிக்கின்றார்களோ இல்லையோ - கொடுக்காத வரைக்கும் நான் அடங்கும் ஆளில்லை; இதைத் தற்பெருமையாகச் சொல்லவில்லை; செய்தால், மாற்றுக்கருத்திருக்கின்றவருக்கு இயன்றவரை நான் சொல்லும் தரவுகளிலே, விளக்கங்களிலே பிழை பிடிக்கும்வகையிலே இருக்காத வண்ணம் செய்யவேண்டுமென்று எண்ணுகிறேன். அதற்கு நேரமும் முயற்சியும் தெம்பும் தேவை; கடந்த இரு வாரங்களிலே நான் வீட்டிலிருந்து துரத்தப்படாதிருப்பதே பெரிய விடயம் :-)

வாழ்க்கையிலே ஒரு நிலையிலே அமைந்து அமர்ந்துவிட்டவர்களின் பொழுதுபோக்குவாதங்களுக்கு எதிரான எம்மைப் போன்றவர்களின் உணர்வுகளினாலே அடித்துச்செல்லப்படும் வாதங்களுக்கு எமது அரசியல், சூழல், பின்புலம் சார்ந்து ஒரு தேவையிருக்கின்றதென்று நிச்சயமாக நம்புகின்றேன். ஆனால், ஈழத்திலிருக்கும் ஆயிரம் குழந்தைகளின் வாழ்க்கை பற்றிக் கவலைப்படுவதாக வாதம் நீட்டி முழக்கும்போது, அதே வயதுள்ள என் மகனின் எதிர்காலத்திற்கான எவ்வித வசதிகளையும் செய்யாமலிருப்பது, என்னை மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆக்கமட்டுமே உதவும் :-( இவை பற்றிப் பலமுறை பல நண்பர்கள் இணையத்துக்கும் வெளியேயும் சுட்டிக்காட்டியிருந்தாலுங்கூட, அதை உணர ஒரு சரியான போதிமரத்துப்பொறிக்கணம் அவசியப்படுகின்றது. இரவுக்கழுகார் தொடக்கிவைத்ததிலிருந்து வலைப்பதிவர்பட்டறைவரையான தொடர்நிகழ்வுகள் அக்கணம் முகிழ்ப்பதற்கான பக்குவத்தினை எனக்குள்ளே தந்திருக்கின்றது. இராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், மாலன், சுஜாதா, ஜெயமோகன் இவர்களிலும்விட உங்களுக்கோ வேறெந்த வலைப்பதிவர்களுக்கோ எத்துணை விஷயஞானம் இருக்கின்றதென்பது முக்கியமல்ல, யார் எவர் முன்னிலையிலே பேசுகின்றார் என்பதே முக்கியமாகின்றது. மாலனின் வரிக்குவரி தவறுகளும் தரவு வீரியம் இழிந்த அதீத பொதுமைப்படுத்தலும் ஆதாரச்சேதாரமும் நிறைந்த இடுகைகளை வாசித்துவிட்டு, "WoW!" என்றோ "இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் காலத்தினை நீங்கள் வீணாக்கவேண்டுமா, சார்?" என்றோ கேட்கும் நிலையையும் அவர் திரிபுபடுத்துவதை மூன்றுமுறை நான் விளக்கியபின்னாலுங்கூட, அதை வலைநெறி என மீண்டும் நான்காம் முறை அவர் பயன்படுத்தக் கேட்டிருக்கும் நிலையையும் ஏற்படுத்துவது என்ன? அவர் கனிந்தமரமாகப் பலருக்கும் அதிலும் சிலருக்கு, விழுதுவிட்டு ஏற வசதி செய்யும் ஆலமரமாகத் தோன்றுவதுமேதான். just sitting as a fucking idot with no face at a remote corner of a laptop, எவ்வளவுதான் கழுதைக்கத்துதல் நாம் கத்தினாலும், இதனை செல்வேந்திரன் போன்ற ஆசாமிகளிடம் மாற்றமுடியுமா என்று தெரியவில்லை. எம்மைப் பொருளாதார அளவிலும் பெயரளவிலும் நாமே இப்படியான செல்வேந்திரன்களுக்கும் அவர்களின் ஆனந்தவிகடன்களுக்கும் நிரூபிக்கும்வரை, ஷோபா சக்தியும் முகமிலிதான் (ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், முத்துலிங்கம் போன்ற இடம் கண்டு சுழியோடிகள் வேறுவகை).

வலைப்பதிவு பட்டறையிலே நடந்த குறிப்பிட்ட விடயம் பற்றி, சொந்தக்காரணத்துக்காகப் பேசிக் குழப்பம் விளைவித்ததிலே எனக்கேதும் வருத்தமில்லை; இல்லாவிட்டால், இத்தனை இளைஞர்களும் ஓடியாடிச் செய்த உழைப்பினை "Long time blogger (& the media personality) Malan" and few others would have taken (or already took ?) with two liners even in English media :-) ["Long-time bloggers like Maalan, a television personality, suggested that bloggers keep an open mind, steer clear of negative behaviour like slander and character assassination, which amounted to a misuse of freedom." . [ஆனால், தமிழ்மணம். தமிழ்வெளி, சற்றுமுன் போன்ற வலைப்பதிவு வலைப்பதிவு என்று மூச்சுக்கு மூச்சு பேச்சுக்குப் பேச்சு பேசுகின்றவர்கள் இவ்வலைப்பதிவர் பட்டறைக்கு எதையும் செய்யாமலிருக்கையிலே, இவ்விளைஞர்களின் உழைப்பு இப்படியான முகங்களுக்காகப் பின் தள்ளப்படுவதொன்றும் வியப்புக்குரியதல்ல... பட்டறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் இரண்டு இடுகைகள் பாராட்டுகின்றவர்களைப் பார்க்கையிலே அப்படியாகச் சொல்லத்தோன்றியது [தொடர்ந்து அவை பற்றி விவாதித்துக்கொண்டு, முட்டையிலும் மொட்டையும் மயிர்புடுங்கும் பெயரிலியாக மாறமுடியாததால், அவற்றின் இணைப்புகளை இங்கே தரவில்லை; ஆதாரம் வேண்டுமென்றே அடம் யாரேனும் பிடித்தால், தருகின்றேன் (அதற்குள் இடுகைகளை ஒருத்தரும் திருத்தக்கூடாது, சரியோ? ;-))]...இந்த இடத்திலே யாரேனும் எனக்கு http://tamilbloggers.org இற்கு வழிசொல்வார்கள் என்று நான் சொல்கிறேன்; நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? ;-) ஆனால், பேசிக்கொண்டிருப்பது பட்டறைநடத்தியவர்களின் இந்த உத்தியோகபூர்வமான பொதுத்தளத்தினை அல்ல]

.... well, back to your original question... I just want to establish myself more for myself, my family and to stand strong against people like Ram, Malan and ilks in the future to fight for what I believe for us. Going over and over again trying to explain the same stuff to the people who do not debate sincerely, but spit their own vrsions as ours, and expecting people who workship them (பெரியாரை வியத்தல்) to listen what we say is FRUITLESS at this point - at least to me. I think it is better right a lengthly full article with optimal supporting reference is better than giving weekly segments as a reply to malan to anyone. At the same time, I have to establish myself in my professional life and in few "departments" where I am good as a player :-)

பாலபாரதி, பூர்ணா, லக்கி லுக், இரவிசங்கர், மா. சிவக்குமார், (தனிப்பட்ட அஞ்சலிலே இன்னொரு நண்பர்)
நேரம் செலவு செய்து வாசித்துத் தந்த பதில்களுக்கு மிகுந்த நன்றி. இன்றிரவு, அல்லது இவ்வார இறுதிக்குள்ளே பதிலினைத் தந்துவிடுவேன்.
மீண்டும் எவ்விதத்திலும், மாலன் என்னைச் சம்பந்தப்படுத்திய ஒரேயொரு விடயத்தினைப் பேசுவதைத் தவிர, பட்டறைமீது நான் எந்த விமர்சனத்தினையும் வைக்கவில்லையென்று சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், பதில் முழுதாகத் தரும் வரைக்கும், இப்போதைக்கு உடனடியான தேவைக்காக, சிவக்குமாரின் இறுதிப்பகுதியிலே

--- சிவக்குமாரின் பின்னூட்டத்தின் பகுதி உள்ளூட்டம்---
//நம் சித்தஞ்சிதறிச்சட்னிவடை என்னையும் இன்னும் சிலரையும் அன்போடு அ தட்டியெழுதிய பின்னூட்டத்தைக்கூட, சட்னிவடை கோச்சுக்கக்கூடாதென்று கொஞ்ச நேரம் நேற்றிரவு தன் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் இடுகையின்பின்னாலே, 'me'தக்கவிட்டிருந்தாரென்றால் பாருங்கள் :-)//

அந்தப் பின்னூட்டத்தில் எந்த தவறும் இல்லை. அவரது சுட்டியைக் கிளிக்கிப் போகும் போதுதான் உங்களைத் தாக்கிய பதிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அதை ஒரு நண்பர் சுட்டிக் காட்டி பின்னூட்டத்தையும் நீக்க வைத்தார். அந்தப் பின்னூட்டம், உங்கள் பார்வைக்காக இங்கே:
=============================
சட்னிவடை said...
என்ன பேசினார் என்ற முழுப்பேச்சை எழுத முடியுமா சிவகுமார்?
படித்துப் பாருங்கள் என் பதிவை
(+++++சுட்டி++++)
Wed Aug 08, 08:15:00 AM IST
===================================
(பாருங்க, உங்களுக்கும் நல்ல பிள்ளையாக முயற்சிக்கிறேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்
----- பின்னூட்ட உள்ளூட்டம் முடிவு-----

சட்னிவடை என்ற பெயரிலே மலேசியாவிலிருந்து பின்னூட்டமிடும் மூர்த்தியின் தமிழ்மணம் அவரது பதிவுகள் சிலவற்றையோ ஒன்றையோ நீக்கியிருப்பதாகத் தெரிகின்றது. அந்த ஆத்திரத்தினை வழக்கம்போல தமிழ்மணத்தின் விளக்கம் கெட்ட ஈழத்தமிழுக்கான [விளக்கமுள்ள ஈழத்தமிழ் என்றால், நீங்களாயிருந்தால் அதை எனக்கு - நான் எழுதினாலுகூட- தரமாட்டீர்களா, சிவக்குமார்? வேறு யாரின் தலையிலுமா கிரீடம் வைத்துவிட்டுப்போவீர்கள்? :-)] என் தலையிலே மெல்லியதாகத் தேய்த்துக்கொண்டிருந்தார். அந்நேரத்திலே இரவிசங்கர் என் இடுகையொன்றிலே பின்னூட்டமாக விக்கிபீடியா பற்றி எழுதினார். இரவிசங்அக்ரோடு வலைச்சரத்திலே ஏற்கனவே முட்டிக்கொண்ட தெருமூர்த்தி...what i intend to say is, திரு.மூர்த்தி, மாலன் வயதுபோனவர் என்பதாலேதான் இத்துணை ஆதரவு என்று பேசிவிட்டு, இரவிசங்கரைத் தாக்கத்தொடங்கினார். இரண்டுமுறை வலைநெறி :-) இன் பால் அவருக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவரின் அனுமதித்த சில பின்னூட்டங்களையும் வலைநெறியால் அழித்துவிட்டு, மற்றைய இரவிசங்கரைத் திட்டிய பின்னூட்டங்களை அனுமதிக்கவில்லை.. பின்னாலே, காசியின் நுட்பம் பதிவு தமிழிணையத்திலே வந்ததும் திருமூர்த்திக்குக் மூலமும் கபாலமும் பிளந்து குண்டலசக்தி சிரசெறி உச்சிக்கு அடித்துவிட்டது. என் சின்னப்பெண்ணான போதிலே பாட்டு இடுகைக்கு மட்டும் 96 (நல்ல காலம் 69 அல்ல :-)) வன் லைனர் விசாரிப்புகள் விட்டார்; சிலதை நானும் விட்டேன். பிறகு, எனக்குப் பின்னூட்டம் இட்டார் என் இடுகைக்குச் சம்பந்தப்பட்டுப் பதிவிட்டார் அத்தனை பேருக்கும் எச்சமிட்டுச் செல்கிறார். பாப்பான் வயோதிகன் என்று அவர் வன்மையாகத் திட்டிக்கொண்டிருந்த மாலனின் காவலாராக வேறு சுயபதவியேற்பு. நேற்றைக்கு ஏன் போலிடோண்டு இனைப் பற்றி வலைப்பட்டறையிலே எவரும் வலைநெறியிலே பேசவில்லையென்றது, அவரைக் கண்டுகொள்ளாததையிட்டு ஆத்திரத்தினைக் கிளப்பியிருக்கின்றதென்று நினைக்கிறேன். ஆளைக் கவனிக்காமலே போய்க்கொண்டிருப்பதுதான் நல்ல விடயமென்றாலுங்கூட, புண்பட்ட வெறிநாய்க்கு புண்ணிலே கல்லெறிவதைவிடத் திருப்தியேதுமுண்டோ? அதனால், அவ்வப்போது, எறிந்துவிட்டுப்போவது குரூரதிருப்தியளிக்கின்றது :-) ச்ச்ச்ச்! நோகத்தான் செய்யும் சட்னிவடை. ஒத்திக்கிட்டா ஆச்சுப்பா ஒத்திக்க. :-)

இதன்படிதான், சிவகுமார் நீங்கள் சொன்ன (உங்களின் குறித்த இடுகைக்கான முதன்முதலான, துளசிகோபாலைக்கூட முந்திக்கொண்ட) தன் முதலாவது பின்னூட்டத்தினை அவர் இட்டார். பின்னால், வெகுநேரமும் ஏறக்குறைய ஒரு நாளும் கழித்து, மாலன் பற்றிய பேச்செல்லாம் விவாதத்திலே வந்து முடிந்தபின்னால், வவ்வாலின் பத்ரி மேலேற்றிய மாலனின் ஒலிக்கோப்பு இணைப்பு பற்றிய பின்னூட்டத்துக்குப் பின்னே, சட்னிவடை மூர்த்தி, தன் பதிவிலேற்றிய இடுகையை அப்படியே முழுமையாக இட்டார். குறைந்தது அரைமணிநேரமாவது அஃது அங்கே கிடந்திருக்கும்.; என்னைத் தவிர, இவ்விடைநேரத்திலே இன்னும் ஒரு நண்பர் கண்டு எனக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் அறிவித்துமிருந்தார். அதன் பின்னரே நீக்கப்பட்டது. அதன் பிறகு விபின் இட்ட பின்னோட்டம் இப்போதிருக்கின்றது. (தனி அஞ்சல் எனக்கு அனுப்பிய நண்பர் நேற்றின் பின்னிரவு நீங்கள் சட்னிவடையின் பின்னூட்டங்களின் பின்னரே மட்டுறுத்தத்தொடங்கியதாகச் சொன்னார்; அதை நம்பி, நான்தான் தவறாக உங்களைப் புரிந்துகொண்டேன் என்று இன்று விளக்கம் எழுதவிருக்கையிலே நீங்கள் இப்படியாக முழுப்பூசணிக்காயைச் சோற்றிலே மறைப்பதான மேற்கொண்ட பின்னூட்டத்தினைப் போடுகின்றீர்களே?) நான் சொல்வதிலே நம்பிக்கையில்லாவிட்டால், 8/8/2007 அமெரிக்க கிழக்கு நிர்ணய நேரம் பின்னிரவு 10:34 இற்கு நான் சேமித்துக்கொண்ட உங்கள் குறிப்பிட்ட பதிவின் தேவையான கூறினைப் பாருங்கள்.

இங்கே படமாக அதனை இட்டிருக்கின்றேன் ம்! மலேசிய விசாலமூர்த்தி ராசா ஒருமாதிரி உன்னைக் கவனிக்க வச்சுப்போட்டாயணை! :-)

மா.சி, உங்களைத் தவிர, உங்கள் பதிவுகளிலே மட்டுறுத்தல், சேர்த்தல், கழித்தலை வேறு யாரேனும் செய்கின்றார்களா? அல்லது, கொந்தர்கள் கொந்திராத்து எடுத்துக்கொண்டார்களா? :-(

எனக்குத் தெரியவில்லை; நீங்கள் முதன்முதலிலே சட்னிவடையின் பின்னூட்டத்தினைக் கண்டபின்னும் மட்டுறுத்தலிட மறந்துவிட்டு, இரண்டாவது தடவை அவரிட்ட பின்னரே சுதாகரித்துக்கொண்டே அழித்து, மீண்டும் இப்போதும் மட்டுறுத்த மறந்திருக்கின்றீர்கள் என்றே படுகின்றது. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. சவப்பின்னூட்டிபோல ஆட்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையிலே 'நானெல்லாம் எவ்வளவோ பெட்டர்' என்று ஒரு சந்தோசமிருக்காது பாருங்கள். அவரோடான பெரிய பகிடியென்னவென்றால், அவர் போடுடா என்று ஏழு முறை அதட்டிப்போட்ட ஒரு லைனரையே அவர், நான் அனுமதித்த ஆபாசப்பின்னூட்டமென்று வைத்துப் பதிவு போடுவதுதான். இதுக்கெல்லாம், இராம் மகளினைப் பற்றி நான் கதைத்த கதை திரிந்த விதமே எவ்வளவோ மேல்:-) விட்டுத்தள்ளுங்கள். சில வேளைகளிலே நான் பேசும் (எழுதும்) பாணியிலே நான் நக்கல் செய்கிறேனா, ஆத்திரமாக எழுதுகிறேனா, பகிடியாகவே பேசுகின்றேனா என்று கேட்கின்றவர்களுக்குப் (வாசிக்கின்றவர்களுக்குப்) புரிவதில்லை. இங்கும் அப்படியேதும் குளறுபடி பண்ணிவிட்டேனா? :-(

ஆறுதலாக, நேரம் வாய்ப்பின், இப்பின்னூட்டங்களுக்குமட்டும் வார இறுதியிலே பதில் தரும் கடப்பாடு எனக்கு முழுக்கவே உண்டென்பதாலே எழுதுகிறேன். வலைப்பட்டறையின் நோக்கினை விடுத்து, மாலனின் விவகாரம் இத்துணை பெரிதாகி நிற்பதிலே எல்லோரையும் போலவே எனக்கும் உடன்பாடில்லை. ஆனால், தவிர்க்கமுடியாதது; ஏனென்றால், இன்னுங்கூட, இந்த இராம்_மகள் பற்றியும் வலைப்பட்டறை வலைநெறி பற்றியும் நமது பத்திரிகாதர்மமும் விளக்கமும் விபரமும் பொருந்திய, மாலன் அவர்களை நன்றே அறிந்த, மதிப்பு வைத்திருக்கும் தமிழ்த்தாளிகைகள், சஞ்சிகைகள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம். அவற்றிலெதிலும் ஈழத்தமிழனான அமெரிக்காவிலே வாழும் -/பெயரிலி. அங்கிருந்து மூன்று மணிநேரப்பயணத்தூரத்திலே வசிக்கும் இந்தியதேசியப்பத்திரிகையான இந்துவின் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆசிரியர் இராம் அவர்களின் மகளினைப் பற்றி அவதூறாக எழுதியிருக்கிறான். காமக்கொடூரன் என்றும் சைக்கோ என்றும் வலைப்பதிவிலே பேசிக்கொள்கின்றார்கள் என்று என்று மிஸ்டர். கோட்டான் தெரிவிக்கின்றார் என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தச்சின்ன வலைப்பதிவர் உலகத்துள்ளேயே, ஓராளைப் பற்றி, "பெண்களைப் பெண்கள் வாரத்திலே அடித்துத்துரத்திய ஆணாதிக்கவாதி" என்றெழுதும் அன்பர்களால் ஆன வம்புமொழிகளை அப்படியே நம்பும் மக்களுக்கு, மாலனுக்கு "இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் பெரிய மனுசன் ஆக்காதீங்க சார்" என்றெழுதும் செல்வேந்திரனுக்கு, ஆனந்தவிகடன், குமுதம், இந்திய ருடே, சன் டீவி விடுவது எதுவானாலும், அதை நம்பி நமக்கு வாலும் வரியும் போட அதிக நேரமாகாது. இந்தக்குமுதம், விகடன், கல்கி, சன் டீவி கோதாரிகள் இன்னமும் இலங்கையிலே போய் பொதிகளாக இறங்குகின்ற அவநிலையிருக்கின்றன என்பதால், அஃது என்னை(யும் என்னைச் சார்ந்தவர்களையும்) எவ்வகையிலே பாதிக்கும் என்பதாலேயே இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம். கொஞ்சம் பெரிதாகவும் பாருங்கள். ஏதேனும் அவமாக நடந்தால், "இலங்கா இரத்தினா இராமின் மகளை இழுத்துப்பேசிய அமெரிக்கப்புலியின் அண்ணன், அக்கா சடக்கென்று சுட்டுச் செத்தது கேட்டபின்னாலேதான் எனக்குத் தூக்கமே வந்தது" என்று எழுதிவிட்டுப்போட்டுச் சிலர் சந்தோஷமாகப் பாரம்பரியத்தைக் காத்ததாகத் தூங்கப்போய்விடுவார்கள். செத்தவர்களின் தம்பிகளுக்குத்தான் தெரியும் வலி. :-(
------------------------------------------------

நிற்க, பொதுவாக வலைப்பதிவுத்தமிழக நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்; இலங்கைத்/ஈழத்தமிழென்று எதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்று எங்கேனும் விளக்குவீர்களா? நான் சீனாவுக்குப் போகமுன்னால் இலங்கையிலே இருக்கும் சீன உணவுவிடுதிகளிலே "சீன உணவு" சாப்பிட்டிருக்கின்றேன். அதன் பிறகு நாலரை ஆண்டுகள் சீனா & ஹொங்கொங்கிலே வாழ்ந்தும் சீன உணவு சாப்பிட்டிருக்கின்றேன். அப்போதுதான், இலங்கையிலே நான் "சீன உணவு" என்று சாப்பிட்டது இலங்கையுணவினையே "சீனமாக"க் காட்டியிருந்ததாக உணர்ந்திருந்தேன். (சங்காயிலே வாழ்ந்த மா.சிவக்குமாருக்கும் இப்படியான அனுபவமிருந்திருக்கலாம்). இலங்கைத்/ஈழத்தமிழ் இதிலுங்கூட, இப்படியாகத்தான் தமிழகத்தின் ஏதோ பகுதித்தமிழோடு ஒத்திசைக்கும்வண்ணம் "இலங்கைத்தமிழ்" காட்டினாலா, நல்ல இலங்கைத்தமிழென்று சொல்வீர்கள்? நண்பர் தழல் ரவி போன்ற மொழிவட்டாரவழக்குப் பிரித்தறியும் அன்னப்பட்சிகள் சொன்னால், நன்றியுடையவனாகவிருப்பேன் :-))
---------------------------------

-/பெயரிலி. said...

மாலன் தன் பக்க விளக்கத்தைப் போட்டிருக்கின்றார். Out of context இலே ஆரம்பித்து தான் என்ன சொன்னேன் என்று தெரியமுன்னால் தன்னை வசைபாடுவதுதான் நோக்கம் என்று நகர்கின்றார். [அவர் என்ன சொன்னார் என்று சரியாகத் தெரிவதற்காகக் காத்திருந்தேன் என்பதையும் தவறுகள் ஏற்பட்டால், திருத்திக்கொள்வேன் என்பதையும் அவருடைய பேச்சினை யாராவது தந்தால் பொருத்தமாகவிருக்குமென்றும் பட்டறையிலே மாலன் பேசியது குறித்த என் முதலாவது பதிவிலே சுட்டியிருந்தேன். இவ்விடுகையிலே, அவர் பேசியதிலே எமக்குத் தேவையான பகுதியினை அப்படியே எடுத்தும் ஒலித்துண்டமாகப் போட்டிருக்கின்றேன். பதில் சொல்லச் சொன்ன ஆளில்லாத இடத்திலே ஒரு வரியினை out of context இலே எடுத்து எதுக்கோ உதாரணமாக்கி அரசியல் வியாக்கியானம் பண்ணும் ஒருவரிலும்விட மிகவும் நிதானமாகவும் நியாயமாகவும் நான் நடந்திருக்கின்றேன் என்பதை என்னைப் பிடிக்காத மாலனின் ஆதரவாளர்கள்கூட இங்கே வந்து இதுவரை வாசித்திருந்தால் ஒத்துக்கொள்வார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்]

இவரின் ஒவ்வொரு வரிக்கும் ஆதி முதல் அந்தம் வரை உடைத்துப் பதில் தரமுடியும்.. நான் செல்வநாயகியின் பதிவிலே சொன்ன, ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இனைத் தான் out of context ஆகக்கூட அங்கே புரிந்து கொள்ளமுடியாமல் ஏகடியமென்று சொல்லிவிட்டு, என் மூன்று தரத்து to the context ஆன விளக்கங்களையும் "சீ நாயே" (இன்றைக்கென்று மாலனுக்கும் இட்டலிவடைக்கும் இடையிலே தமிழ்மணத்திலே பலகாலம்பின்னாலே பட்டையின்றி நிர்வாணமாய் முளைத்திருக்கும் நாய்க்கவிதையைச் சொல்லவில்லை :-)) என்றும் கவனிக்காமல்விட்டு, பட்டறையிலே போய் மட்டும், "சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள் அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின்
பெண் என்ன செய்தார்?"
என்று அவுட்டோ அவுட்டென்று ultra out of context இலே என் இராம் மகள் வரிகளைச் சுற்றித்திரி வைத்துச் சொன்னவருக்கு, out of context ஆகத் தன்னைக் கருதிக்கொண்டோமென்று வருத்தம் வருகிறதாம். வருந்தம் என்ன சிலருக்கு மட்டுமா வம்சம் வம்சமா வாழையடி வாழையா வரும்? :-(

1. (மீண்டும் தன் முயற்சியில் மனம் தளராத) நான் (அமெரிக்க எதிர்ப்புள்ள, கம்யூனிஸ்ட் சித்தாந்தம் சார்ந்த) சந்திப்புக்கு இவ்வரிகளை எடுத்துச் சொன்னதன் அர்த்தம், "சீன அரசின் சார்பாக தீபெத் மீதான அதன் அத்துமீறலையும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு மார்க்ஸியச்சித்தாந்தத்திலே நம்பிக்கையுள்ள பத்திரிகையாளர், தன் மகளை அப்படியான சீனப்பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் படிப்பதைக் காணாமல், முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றிலே பத்திரிகைத்துறையிலே கற்கப் பார்த்திருப்பது, தந்தைப்பத்திரிகையாளரின் முரண்பாடும் & பொய்த்தன்மையும் நிறைந்த செயல்" என்ற அர்த்தத்திலே. சந்திப்போடு, செல்வநாயகியின் பதிவிலே பேசிக்கொண்டிருந்தது இப்பின்புலத்திலேதான், in this context. மாலன், இதை எடுத்துக்கொண்டுபோய், out of context இலே பட்டறையிலே தனிமனிததாக்குதலோடு கொண்டு வந்து no context இலே பனைமரத்திலே மாடு கட்டுவதுபோலக் கட்டி, பதிவர்களை மனம் விட்டு (எங்கே?), பேசச் சொல்கிறார். யார் எங்கே எதை out of context ஆக எடுத்துப்போடுவது?

2. சரி அப்பால் நகர்வோம். தனிப்பட்டமுறையிலே தாக்கி எழுதுதலென்று சொன்னாலும், "பொண்ணு என்ன பண்ணும்" என்பதுதான் அவர் தன் உதாரணமாகச் சொல்லும் 'இராமின் மகளை நான் தாக்குகின்றேன்' என்று கொண்டால், கொஞ்சம் நில்லுங்கள். ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற இந்த வசனத்திலே பொண்ணை என்ன சொல்லியிருக்கின்றேன். தமிழிலேதானே எழுதியிருக்கின்றேன். வாசிக்கின்றவர்கள் எவராவது சொல்லுங்கள் பொண்ணை என்ன தாக்கியிருக்கின்றேன். 'பொண்ணு ராங்க் வாங்கினதுகூடாதென்றோ ராங்கா போயிருக்கணும்ன்னோ' எதுவாச்சும் சொல்லியிருக்கிறேனா? இதிலே என்ன தாக்குதல் இருக்கின்றது? இதுவென்ன அநியாயவாதம்? நான்தான் சிந்திக்கத்தெரியாதவன்; புரிந்த எவரேனும் சொல்லுங்கள்; நான் சொன்னது அப்பெண்ணின் பொதுவாழ்விலே மும்முரமாக இயங்கும் தந்தை பற்றிய முரண் ஒன்றைச் சுட்டிக்காட்டும் சாதாரண விமர்சனமா? தனிமனிதத்தாக்குதலா? [இத்தனைக்கும் இந்துவிலே Pol Potist என்று பிரபாகரனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வரும்; மாலனின் தனிமனிதத்தாக்குதல் வரைவிலக்கணத்தின்படி பார்த்தால், இந்துவின் தனிமனிதத்தாக்குதலுக்கு மானநஷ்டவீடு இந்தியா வரமுடிந்தால், பிரபாகரன் போடலாம்]

3. சரி, அதற்கும் அப்பால் நகர்வோம்; பட்டறையிலே பேச எடுத்துக்கொண்டது தனிநபர் தாக்குதலைப் பற்றி; அதைக்கூடச் சரியாகப் பொருத்திக் காட்டக்கூடிய உதாரணத்துடன் காட்டாமல் சொன்னதை மேலே ஏன் பிழையென்று காட்டியிருக்கின்றேன். மேற்கொண்ட விவாதத்துக்காகமட்டும் அது தனிப்பட்ட தாக்குதலென்றே எடுத்துக்கொள்வோமே? சரி பெண்ணைத் தனிப்பட்ட தாக்குதல் செய்துவிட்டுப் போனார் என்றே சொல்லி விட்டுப்போயிருந்திருக்கலாம். ஆனால், அவர் வலைப்பதிவுப்பட்டறையின் தேவைக்கப்பால்,

அ. இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதினை மட்டுமே ஒன்றைரை நிமிடங்கள் நியாயப்படுத்துவதெல்லாம் எதற்காக?

ஆ. அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் உதாரணங்கள் ராஜாஜி-பெரியார் தவிர, மிகுதியானதெல்லாம், "இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க?" பத்திரிகையாளராகவும் செய்தியாளராகவும் விளங்கும் அவருக்கு, குறைந்தபட்சத்தேவைகளுக்கான கூட்ட(த்த)ணிகளாக ஒவ்வொரு மாநில,மத்திய, உள்ளூராட்சித்தேர்தலிலும் முளைக்கும் காவிபட்ட மஞ்சட்துண்டு, கைபட்ட இரட்டை இலை, துருப்பிடிக்காமலிருக்க கைப்பிடி நெல்லாச்சும் அறுவடையானாற் சரி என்று இடம் பார்த்து அலையும் அரிவாளும் சுத்தியலும் தோன்றுவதில்லை; ஆங்கு இலங்கைத்தமிழரே தாம் தோன்றி நிற்கின்றார்கள். இலங்கைத்தமிழரே இல்லாத பட்டறையிலே இராமின் மகள் சீனாவிலே படிக்காமல் அமெரிக்காவிலே படிப்பதை நியாயப்படுத்த இலங்கைத்தமிழர்களினை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வது எதேச்சையானதா, இல்லையா என்று பட்டறையிலே குந்தியிருந்தவர்கள்கூடவேண்டாம், இங்கிருந்து வாசிக்கும் எவருமே சொல்லிவிடலாம். அவரின் இராமின் பெண் சார்பான பதில் சொல்லும் மனநிலையின்போது, முன்னே சபையிலிருந்த்த பாண்டவ,விதுர,துரோண,பீஷ்மாச்சாரியர்களோ கர்ணன்களோ கூடத் தோன்றவில்லை; இலக்குவைத்துப் பேசியிருக்கவேண்டிய வலைநெறிக்கிளியோ கிளையோகூடத் தோன்றவில்லை; எங்கோ குந்திக்கொண்டு, "இராமின் பொண்ணு கொலம்பியாவிலே படிப்பது" பற்றிப் பேசிய துரியோதனப்பெயரிலியும் அவனின் தொண்ணூற்றொன்பது (விகர்ணன் உட்பட) ஈழகௌரவர்களுமே சிந்தையிலே தோன்றி விரிந்திருக்கப் பதில் சொல்லியிருக்கின்றார் என்பதுதான் நமக்கு எல்லோருக்குமே புரிகின்ற அந்நேரத்து யதார்த்தம். அந்தளவுக்கு அவருக்கு இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதுபற்றி இராமினை எப்படி ஈழத்தமிழன் நான் விமர்சிக்கலாம் என்பதுதான் இத்துணை உளத்தாக்கத்தினை ஏற்படுத்துவற்கு என்ன காரணமென்று எனக்கு இன்னுமே புரியவில்லை. இராம் விமர்சனத்துக்கு மேலானவர் என்று கருதுகின்றாரா? :-(

இ. அவரின் குறைந்தபட்ச இலங்கைத்தமிழர் உதாரணங்களைப் பாருங்கள். "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை; ஆனால், இந்தியாவுக்கு வரத்தானே போகத்தானே செய்கின்றார்கள்?" - சம்பந்தப்படாமல் ஒரு கேள்வியை முதலிலே வைத்துவிடுவோம்; "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை" என்றால், இலங்கைத்தமிழருக்கு எதிராகத்தான் இந்தியா செயற்படுகின்றது என்பதுதானே அர்த்தம். பின்னால், இந்தியா, இவர், இந்து ராம் ஆகியோர் முன்னிலைப்படுத்தும் (செத்த அமிர்தலிங்கம், பத்மநாபா, நீலன்), கருணா, ஆனந்தசங்கரி, டக்லஸ் ஆகியோரெல்லாம், Our Men Flints in Sri Lanka என்றா ஈழத்தமிழர் அர்த்தப்படுத்தவேண்டும்? ஆக, ஈழத்தமிழரின் மாற்றுத்தலைமைகளென இந்தியா முன்வைக்கும் கருணா, டக்ல்ஸ், ஆனந்தசங்கரி ஆகியோர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர்களல்லர்; அதுதானே அர்த்தம்?

இனி, இந்தியா இலங்கைப்பிரச்சனையில் தமக்கு எதிர்நிலையிலேயிருக்கும் இலங்கைத்தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லையென்றால், அஃது இந்திய அரசினதும் அதன் வெளியுறவுக்கொள்கையிலே அழுத்தம் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட 'சகூனி' நாராயணர்கள் சிலரினதும் கருத்தா? இல்லையென்றால், மாலன் சொல்வதுபோன்று அமெரிக்க அரசின் நிலைக்கு எதிர்நிலைகூடக் கொண்டிருக்ககூடிய அமெரிக்கப்பல்கலைக்கழகங்கள் போன்ற இந்திய அரசினதும் அதனது 'ஆலோசகர்களினதும்' அரசியற்கட்சிகளினதும் கருத்துக்களோடு பெரியளவு சம்பந்தம் கொண்டிராத, இலங்கைத்தமிழர் வந்து கலந்து போகக்கூடிய தமிழகமக்களின் கருத்தா?

இலங்கை அரசை எதிர்த்துப்போராடும் இலங்கைத்தமிழர்கள் இலங்கைப்பாஸ்போட்டுல போவதும் இந்து இராமின் மகள் சீனாவுக்குப் பத்திரிகைத்துறைக்குப் படிக்கப்போகாமல் (இந்தியாவிலேயே தன்னார்வச்சேவை செய்யாமல், ஓராண்டு சீன மக்களுக்குத் தன்னார்வச்சேவை அவர் செய்தவர் என்பதைப் பேசுவதற்குச் சம்பந்தமில்லையென்பதாலே இங்கே விட்டுவிடுவோம்) அமெரிக்காவுக்குப் போவதும் ஒரே வகைதானா? என்ன முட்டாட்டனமான வாதம். முதலாவது நிலையிலே தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அம்மக்களுக்கில்லையே. இராமின் மகளின் நிலையிலே அவர் என்ன அமெரிக்க அரசினையா எதிர்த்துப் போராடினார் என்ற கேள்வியை விட்டுவிட்டுப் பார்த்தாலுங்கூட, அவருக்கு வேண்டிய எதையும் தேர்ந்தெடுக்க வசதியும் சுதந்திரமுமிருக்கின்றதென்பதில்லையா உண்மை? "தமக்குத் தேர்ந்தெடுக்க இருக்கும் சுதந்திரம்" பற்றி ஒரு குழந்தைக்குக்கூடப் புரிந்துகொள்ளும் அடிப்படைத்தெளிவினை மாலன் புரிந்துகொள்ளமுடியாமற்போனதற்கு அவருக்கு ஈழத்தமிழருக்கு வியாக்கியானம் பட்டறையிலே கொடுக்கவேண்டுமென்ற மதி மீறிய அவா காரணமென்று சொல்லலாமா? இதைத்தானே வலைப்பதிவுகளிலே எல்லோரும் சுட்டிக்காட்டி எதிர்த்துக்கொண்டிருந்தனர். விருப்பப்பட்டு பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் எதற்காக, போயிறங்கும் இடங்களிலே அதைக் கிழித்துப்போட்டுவிடுகின்றார்கள் என்பதையோ அல்லது வேறெந்தப் பாஸ்போர்ட்டினையோ எடுத்துக்கொள்ள வசதியின்றியோ இருக்கின்றார்களென்று உங்களுக்குப் புரியவில்லை; இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் எத்தனையோ பேர் சந்தர்ப்பம் கிடைத்தால், அமெரிக்க பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு, இந்தியப்பாஸ்போர்ட்டிலிருந்து தம்மைக் கழற்றிக்கொடுக்க ஆயத்தமாகவிருக்கின்றார்களென்று பாருங்கள். சின்னக்குட்டி, அற்புதன், சசி ஆகியோர் இதனைத்தானே தம் பதிவுகளிலே எடுத்துச் சொல்லியிருந்தார்கள். நன் இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழிக்காமலேதான் வைத்திருக்கின்றார்கள். ம"கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள்; புரியாமல் எதிர்த்தார்கள்; சொல்லப்பட்ட context இனைக் கவனிக்காமலே எதிர்த்தார்கள்" என்று அழுகுணியாட்டமல்லவா ஆடுகின்றீர்கள், மாலன். அவர்கள் கேட்டதெல்லாம், சொன்னதெல்லாம், "ஈழத்தமிழரென்ன விரும்பியா இலங்கைப்பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றார்கள்? இதைப் போய் நீங்கள் எப்படி இராமின் மகள் அமெரிக்காவுக்குப் படிக்கப்போவதற்கோ அல்லது இஃது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் கொள்கிற உறவு என்று (அவமதிப்பாக உணரும் வகையிலே) எளிமைப்படுத்தவோ செய்ய முடிகின்றது?" உங்களுக்கு வலைப்பதிவிலே உங்களை எல்லோரும் வசை பாடுவதாகவே தெரிகின்றதென்ற அடிப்படைப்பார்வையோடு பார்க்கத்தொடங்கும்போது, குறைந்தபட்சம் மற்றவர்களின் அவமதிப்பு உணர்வு தோன்றும் அச்சிலசின் குதிக்கால்மனப்புள்ளிகளைக் கண்டுகொள்ளமுடியாதென்றே தோன்றுகின்றது.

4. இவை எல்லாவற்றினையும் விட்டுவிடுவோம். ஆனால், என் கருத்தினை நீங்கள் புரிந்த வகையிலே ஓரிடத்திலே -என்னைத் தெரிந்தவர்களும் நிறைந்த அவையிலே- நெறி பிறழ்தல் என்பதற்கு உதாரணமாகச் சொல்லும்போது, அவ்விடத்திலே என் கருத்தினைச் சொல்ல நான் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதுதான் முறை. உங்கள் கருத்துக்கு உங்கள் பதிவிலில்லாமல், வேறெங்கோ பின்னூட்டிவிட்டேன் என்று குறை கண்ட நீங்கள் இதிலே செய்தது அதைவிடப்பெரிய வலைநெறிப்பிறழ்வல்லவா? :-(

5. வலைப்பதிவிலே தனிமனிதத்தாக்குதலுக்கு எத்தனையோ மிகமிகமிக மோசமான காலாகாலமாக அலையும் பதிவு செய்யப்பட்ட திமிங்கல உதாரணங்களெல்லாம் இருக்க, இப்படியான கையில் ஒட்டினாற் தட்டிக்கொள்ளும் மினுங்கற்காக்காய்ப்பொன் உதாரணமே உங்களுக்கு அங்கே ஞாபகத்துக்கு வருகின்றதென்றால், இத்துணை நாள் வலைப்பதிவுகளிலே பங்காற்றி, தனித்தாக்குதலினாலே பதம் பார்க்கப்பட்டு, பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அப்பட்டறையின் கேட்போராகவிருந்திருந்தால், நீங்கள் ஒரு பழைய கணக்கினைப் பதிவர்களை மனம் திறந்து பார்த்துத் தீர்த்துக்கொள்வோமென்று தனிப்பட்ட தாக்குதலினை மேற்கொண்டீர்கள் என்பதை புரிந்துகொள்ளமாட்டாதவர்கள் என்றா கணிப்பிட்டிருந்தீர்கள்? அத்துணைதானா சக/காபதிவர்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு? :-(

6. ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இதிலும் விட எனக்கு மிகவும் தனிப்பட்ட தாக்குதலாகத் தெரிவது, நீங்கள் அனுமதித்திருக்கும், "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது." என்னைப் போன்றோரிலே நீங்கள் மறைமுகமாக அங்கீகரிக்கும் தனிப்பட்ட தாக்குதல் இது. பதிவின் தலையிலே "பெரியோர் எனில் வியத்தலும் இலமே சிறியோர் எனில் இகழ்தலும் இலமே" வலைக்கோளாகக் கொண்ட நீங்கள் இப்படியான பின்னூட்டங்களை அனுமதிப்பது அறிந்துகொண்டே மறைமுகமாக உற்சாகமூட்டும் தனிப்பட்ட தாக்குதல் என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. அப்படியான நீங்கள் எப்படி என் சாதாரண வரிகளிலே இப்படியான அர்த்தத்தினைக் கண்டுகொண்டீர்களென்பது என் வியப்பிற்குரியதாகவேயிருக்கின்றது.

பட்டறை அமைப்பாளர்களை எண்ணி மெய்யாகவே நான் சங்கடமடைகின்றேன். ஒரு புறம் நானும் என்னைப் போன்றவர்களும் மறுபுறம் அவர்களின் மதிப்புக்குரிய நீங்கள். இந்நிலையிலே இருபுறங்களிலும் பிய்த்துக்கொள்ள நடுவிலே ஒருவர் படும் பாட்டினை உணர, பாற்கடல்கடை கயிறான ஆதிஷேசனுக்குக்கும், விடாதுகருப்புவின் பதிவினையோ, விட்டதுசிகப்பினது பதிவினையோ திரட்டிகளிலிருந்து "நீக்கு/நீக்காதே" என்ற இருபுறஆட்களின் பிய்த்தெடுப்புக்கும் ஆளாகும் திரட்டி நிர்வாகிகளுக்குமேதான் முடியுமென நம்புகிறேன் :-) வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இந்தப்பக்கம், நாங்கள் முதலிலே கத்திவிட்டோமேயென்று மட்டுமேதான் ஆட்சேபணைப்பதிவுகளையிட்டார்கள் என்று நான் நிச்சய்மாக நம்பவில்லையென்றபோதுங்கூட, அவர்களினை அப்படியாக வெளிப்படையாகவே செய்யும்படி மூலைக்குத் தள்ளிவிட்டதால், அநாவசியமாக உங்களின் மனத்தாங்கலுக்கு உள்ளாக்கிவிட்டோமோ/டேனோ என்று உண்மையாகவே சங்கடமாகவிருக்கின்றது. இப்படியாகுமென்று எண்ணவில்லையென்றாலுங்கூட, இது தவிர்க்கமுடியாதது; ஆனால், 'When a giant tree falls, the earth below shakes" என்றமாதிரியாக கொடூர அர்த்தத்திலே நான் சொல்லவில்லை. இத்துணை கஷ்டப்பட்டு பட்டறை அமைத்து உழைத்த அமைப்பாளர்களுக்குச் சங்கடம் வருமே என்று பேசாமலே விடுவதா, அல்லது உங்களின் பேச்சின் பொருந்தாமையைச் சுட்டிப் பேசிப் பெரிதாக்கி விண்டு பார்ப்பதா என்பதிலே, இரண்டாவதே முக்கியமாகத் தோன்றியது. அதற்காக, மாலன் அவர்களோடு மனத்தாங்கல் ஏற்படும் வகைக்கு உள்ளாகியதற்கு என் வருத்தத்தைத் தெரிவிக்கும்போது, என் (என்னைப்போன்றோர்) நிலையினையும் அமைப்பாளர்கள் புரிந்துகொள்வார்களென நம்புகிறேன்.

மாலனின் மற்றைய வரிகளிலே எனக்குப் பிய்த்துப் பிய்த்துச் சொல்லும் தேவை இப்போதைக்கு இல்லை. அநாவசியமாக இழுத்துக்கொண்டு போவதாகவிருக்கும்.

பிகு: மாலன், நீங்கள் பேசும் பட்டறையிலே லக்கி லுக் இருந்தார் என்கிறீர்கள்; ஆனால், அவர் அந்நேரம் அங்கேயிருக்கவில்லை. அவரே சொல்லியிருக்கின்றார்.

Anonymous said...

மாலன் தன் பதிவில் எழுதியிருப்பது: "உதாரணமா பெரியார்
இருக்கிறார்- அவரை denigrate செய்வதுமாதிரியான பின்னூட்டம் வந்தால் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் சமூகத்தில் பல விளைவுகளை
ஏற்படுத்தியவர்; சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்?
இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம்."


சரி நல்ல உதாரணத்தோடு ஆரம்பித்திருக்கிறார். அதை மனம் விட்டு பேசலாம் என்றும் சொல்லியிருக்கிறார். பேச வேண்டியது தானே?

பெரியாரை ஏற்றுக்கொண்ட சிலர் அவரைப் பற்றி எழுதுகிறார்கள். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். பெரியாரைப் பற்றி எழுதுவர்களின் பதிவுகளுக்கெல்லாம் தவறாமல் போய் வாந்தியெடுக்கிறார் "பின்னூட்டம் புகழ்" பாலா. இது வலைப்பதிவுகள் படிப்பவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பெரியாரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கி எழுதுவதை ஏற்க முடியாத மாலன் இந்த உதாரணத்தை எடுத்து நன்நடத்தை பற்றி பேசியிருக்கலாம். ஆனால் ராமசாமி நாயக்கரையும் அந்தரத்தில் விட்டுவிட்டு, பாலா அல்லது அவர் போன்ற ஆசாமிகளையும் கண்டுகொள்ளாமல், திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு சுயநினைவுக்கு வந்தவரைப் போல டபக்கென்று ராம், பெயரிலி என்று தனக்கு பிடித்த பொருளுக்குத் தாவுகிறார். சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டு மீண்டும் பெரியாரைப் பிடித்துத் தொங்குகிறார்.

எப்படியோ மேலும், கீழும் பெரியாரை வைத்து, நடுவில் பெயரிலியைத் திணித்து ஒரு புதுமையான சாண்ட்விச் தயாரித்துவிட்டார். சுவையாகத் தானிருக்கிறது மாலன் :-)

Anonymous said...

//"இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை; ஆனால், இந்தியாவுக்கு வரத்தானே போகத்தானே செய்கின்றார்கள்?"//

இலங்கைப்பிரச்சனையில் இந்தியா புலி எதிர்ப்பு நிலைதான் எடுத்திருக்கிறதே அன்றி ஈழத்தமிழர் எதிர்ப்பு நிலை எதையும் எடுக்கவில்லை என்றுதானே லங்கா ரத்னா ராம் தொடக்கம் ஈழத்தமிழர் வாழ்வில் மண் அள்ளிப்போடும் அனைவரும் சொல்வது வழக்கம். இப்போது இது என்ன புது வாக்குமூலம்?!

Anonymous said...

மாலன் பெரியாரை உதாரணமாக்கியது தனக்கு முன்னாலும்(பார்வையாளர்), பின்னாலும்(அமைப்பாளர்கள்) இருக்கும் திராவிடக் குன்சுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்த.இது தான் மாலன் போன்றோரின் நுண் அரசியல் என்பது.தனது பார்வையாளருடன் தான் ஒன்றுவதாக் காட்டிக் கொண்டு தனது கருத்துக்களை மெல்லச் செருகும் அரசியல்.ராமும் இதனைத் தான் தன்னைக் கமுயூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு செய்கிறார்.மாலன் தன்னைத் திராவிட ஆதரவாளன் என்கிற போர்வையில் செய்கிறார்.மாலன் சாரின் அரசியைப் புரியாத குன்சுகள் தான் இந்தத் திராவிடக் குன்சுகள்.

// இலங்கைப்பிரச்சனையில் இந்தியா புலி எதிர்ப்பு நிலைதான் எடுத்திருக்கிறதே அன்றி ஈழத்தமிழர் எதிர்ப்பு நிலை எதையும் எடுக்கவில்லை என்றுதானே லங்கா ரத்னா ராம் தொடக்கம் ஈழத்தமிழர் வாழ்வில் மண் அள்ளிப்போடும் அனைவரும் சொல்வது வழக்கம். இப்போது இது என்ன புது வாக்குமூலம்?! //

இது புது வாக்கு மூலம் இல்லை முன்னைய பொய்மைக்கான, ஒப்புதல் வாக்கு மூலம்.

-/பெயரிலி. said...

மாலன் தான் செய்ததை நியாயப்படுத்த மேலும் மேலும் சொற்களால் situation_gerrymandering அவருடைய பின்னூட்டங்களிலே பதில்களாகச் செய்துகொண்டிருக்கின்றார். அத்துணை வேலை & நேரநெருக்கடிக்கிடையிலேயும் இவ்விடயத்திற்குப் பதிலளிக்கப் பொழுதும் சக்தியும் செலவழிக்கும் அவருக்கு முதலிலே நன்றி.

அவருடைய பட்டறையில் இழைத்த செய்கைக்குப் பொருந்த துணி கத்திரித்துச் சட்டைபோடும் பின்னூட்டப்பதில்களின் மேலே, ஓரிரு நாட்களிலே இங்கே தாவுவேன். கடந்த சில நாட்கள் நிறையப்பொழுது இங்கேயே கழிந்துவிட்டதால், உடனடியே பதிலளிக்க நேரமில்லை.

மா சிவகுமார் said...

பெயரிலி,

//நீங்கள் முதன்முதலிலே சட்னிவடையின் பின்னூட்டத்தினைக் கண்டபின்னும் மட்டுறுத்தலிட மறந்துவிட்டு, இரண்டாவது தடவை அவரிட்ட பின்னரே சுதாகரித்துக்கொண்டே அழித்து, மீண்டும் இப்போதும் மட்டுறுத்த மறந்திருக்கின்றீர்கள் என்றே படுகின்றது. //

என்னுடைய பதிவில் பின்னூட்ட மட்டுறுத்தல் கிடையாது. இடுகைக்குப் பொருந்தாத பின்னூட்டங்களை மட்டும் பார்த்த பிறகு நீக்கி விடுவேன்.

//இதன்படிதான், சிவகுமார் நீங்கள் சொன்ன (உங்களின் குறித்த இடுகைக்கான முதன்முதலான, துளசிகோபாலைக்கூட முந்திக்கொண்ட) தன் முதலாவது பின்னூட்டத்தினை அவர் இட்டார்.//

ஆகஸ்டு 8ம் தேதி காலையில் இடுகை இட்டதும் வேலை காரணமாக வெளியே கிளம்பி விட்டேன். அப்போதே சட்டினி வடையின் பின்னூட்டத்தைப் பார்த்தாலும் அதை நீக்கவில்லை. அதை நீக்கி விடுவது நல்லது என்று ஒரு நண்பர் தொலை பேசிக் கேட்கவே அவரிடம் கணக்கு விபரங்களை கொடுத்து அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டு மட்டுறுத்தலையும் செயல்படுத்தி விடுமாறு கேட்டுக் கொண்டேன்.

//வெகுநேரமும் ஏறக்குறைய ஒரு நாளும் கழித்து, மாலன் பற்றிய பேச்செல்லாம் விவாதத்திலே வந்து முடிந்தபின்னால், வவ்வாலின் பத்ரி மேலேற்றிய மாலனின் ஒலிக்கோப்பு இணைப்பு பற்றிய பின்னூட்டத்துக்குப் பின்னே, சட்னிவடை மூர்த்தி, தன் பதிவிலேற்றிய இடுகையை அப்படியே முழுமையாக இட்டார். குறைந்தது அரைமணிநேரமாவது அஃது அங்கே கிடந்திருக்கும்.; //

நீங்கள் சொல்வது சரிதான். 8ம் தேதி மாலை இணையத்தில் மீண்டும் இணைந்ததும், மட்டுறுத்தலை நீக்கி விட்டு வழக்கம் போல விட்டு விட்டேன். நீங்கள் படம் பிடித்து போட்ட பின்னூட்டம் அடுத்த நாள் வெளி வந்தது. அதையும் பார்த்தவுடன் அழித்து விட்டேன்.

//மா.சி, உங்களைத் தவிர, உங்கள் பதிவுகளிலே மட்டுறுத்தல், சேர்த்தல், கழித்தலை வேறு யாரேனும் செய்கின்றார்களா? அல்லது, கொந்தர்கள் கொந்திராத்து எடுத்துக்கொண்டார்களா? :-(//

மேலே சொன்னது தெளிவளித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

//இலங்கையிலே நான் "சீன உணவு" என்று சாப்பிட்டது இலங்கையுணவினையே "சீனமாக"க் காட்டியிருந்ததாக உணர்ந்திருந்தேன். (சங்காயிலே வாழ்ந்த மா.சிவக்குமாருக்கும் இப்படியான அனுபவமிருந்திருக்கலாம்).//

அதனால்தான் பெயரிலி, யாரையும் முத்திரை குத்தி ஓரம் கட்டுவதையோ, யாரும் எனக்கு முத்திரை குத்தி அடையாளம் கொடுப்பதையோ ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. உணவாகட்டும், ஆளாகட்டும், ஒரு சமூகமாகட்டும் குறிப்பிட்ட இசம், இயம் அல்லது பண்பு ஏற்றி பேசிக் கொண்டிருப்பது சரியில்லை என்பது என் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

-/பெயரிலி. said...

மா. சிவகுமார்,
/என்னுடைய பதிவில் பின்னூட்ட மட்டுறுத்தல் கிடையாது. இடுகைக்குப் பொருந்தாத பின்னூட்டங்களை மட்டும் பார்த்த பிறகு நீக்கி விடுவேன்./
நன்றி. பின்னூட்டங்களிலே சரமாரியான தாக்குதல்கள் நிகழும் பொழுதானபடியினால், பெரும்பாலானோர் போல நீங்களும் மட்டுறுத்துகின்றீர்கள் என்று எண்ணிக்கொண்டேன்; என் தவறுதான். நம் பொது நண்பரும் சொன்னது எனக்கு என் கருத்தினை உறுதிப்படுத்தியதுபோல ஆகிவிட்டது.

/
//வெகுநேரமும் ஏறக்குறைய ஒரு நாளும் கழித்து, மாலன் பற்றிய பேச்செல்லாம் விவாதத்திலே வந்து முடிந்தபின்னால், வவ்வாலின் பத்ரி மேலேற்றிய மாலனின் ஒலிக்கோப்பு இணைப்பு பற்றிய பின்னூட்டத்துக்குப் பின்னே, சட்னிவடை மூர்த்தி, தன் பதிவிலேற்றிய இடுகையை அப்படியே முழுமையாக இட்டார். குறைந்தது அரைமணிநேரமாவது அஃது அங்கே கிடந்திருக்கும்.; //

நீங்கள் சொல்வது சரிதான்.
/
தெளிவுபடுத்தியதற்கு நன்றி. உங்களின் முன்னைய பின்னூட்டத்தினை வைத்து ஆக, ச.வ.பதிவுக்குக் காட்டும் சுட்டி மட்டுமே பின்னூட்டமாக ச.வ.த்தினால் இடப்பட்டதென்று மற்றோர்கள் எண்ணிக்கொள்ள வாய்ப்பிருந்திருக்கலாமென்றே சுட்டிக்காட்டினேன். மிகுதிப்படி, நீங்கள் வேண்டுமென்றே வலைநெறி செத்த ச.வ.ப்பின்னூட்டத்தை விட்டீர்களென்று சொல்லவேண்டி அல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்.

/அதனால்தான் பெயரிலி, யாரையும் முத்திரை குத்தி ஓரம் கட்டுவதையோ, யாரும் எனக்கு முத்திரை குத்தி அடையாளம் கொடுப்பதையோ ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. உணவாகட்டும், ஆளாகட்டும், ஒரு சமூகமாகட்டும் குறிப்பிட்ட இசம், இயம் அல்லது பண்பு ஏற்றி பேசிக் கொண்டிருப்பது சரியில்லை என்பது என் கருத்து./

இது பற்றி, இதே மென்மையும் பரந்தநோக்கும் கொண்டு பேசவிருப்பமென்றாலுங்கூட, இங்கே ஏற்கனவே உள்ள நிலையை அது மோசமாக்கிவிடுமோ என அஞ்சுகிறேன்.

மாலன் அவர்கள் பட்டறையிலே -/பெயரிலி._இராம்_ஈழம் பற்றிப் பேசியதன் நுண்ணரசியலைப் பேச முற்பட்டேன். அதன், ஒரு கூறாக அங்கே மட்டுறுத்துனர், அமைப்பாளர்களின் பொறுப்பினைப் பற்றிக் (கேள்வி) கேட்டிருந்தேன். ஆனால், அதுவோ அதற்கான பட்டறை அமைப்பாளர்களின் பதில்களோ மாலனின் வருத்தத்தைப் பட்டறையாளர்களிலே இத்துணை ஏற்படுத்துமென்பதை நான் எதிர்பார்க்கவில்லை. வேண்டாப்பக்கவிளைவு என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, மேலும் பட்டறை அமைப்பாளர்களைக் "என் கேள்விக்கென்ன பதில்?" என்று கேட்பதோ அவர்களுடன் விவாதத்தினை வைப்பதோ எவ்வகையிலும் நான் செய்யும் நல்ல செயலாக அமையாது; ஓர் எல்லைக்கப்பால், நான் இன்னும் அதனையே பிடித்து அவர்களுடன் தொங்கிக்கொண்டிருப்பது, பட்டறையாளர்களின் உழைப்பினையும் நோக்கினையும் நான் அவமதிப்பதாகவே எனக்கே தோன்றும்.

மேலும், "நான் அவ்வுதாரணத்தினைச் சொன்னதன் சூழலைக் கண்டுகொள்ளவில்லை", " நுண்ணரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்" என்று தன் மேற்சட்டையின் முதலாம் இரண்டாம் தறிகளிலே கைவைத்து ஆடையவிழ்ப்பு நடனம் தொடங்கும் மாலன், "நான் வசதி படைத்த,நிரம்பப் படித்த, தன் இனம் விடுதலைக்குப் போராடும் போது, தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறி சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டு வசதியான சூழ்நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய சமூகப் பிரசினையாக பூச்சாண்டி காட்டி விமர்சிக்கிற பெரிய மனிதர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்", "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?","அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும்தான், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் பெயரிலி போன்றவர்கள்தான்,விமானம் பிடித்து அயல்கங்களுக்குக் குடியேறுகிறவர்கள்" என்று போர்த்திருந்த ஒவ்வோர் ஆடையினையும் களைந்து, தன் பின்னூட்ட இறுதியிலே உள்ளாடையையும், "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்ற முற்றிலும் பொய்யான வரலாற்றுத்திரிபினை அது தூண்டக்கூடிய வீச்சம், களம் அறிந்து களைந்தெறிந்து நிர்வாணமாக நிற்கின்றார். என்ன, ஒரேயொரு வித்தியாசம்; அந்நடனத்தின் இறுதிநிர்வாணநேரத்தின்போது, இங்கே விளக்குகள் அணையவில்லை. கண்கூசத் தெறிக்கின்றது உட்குரூரமும் நுண்ணரசியல்நோக்கும்.

நேரடியாகவே, "ஈழத்தமிழரை வரப்போகவிடும் ஈழத்தமிழரை ஆதரிக்காத இந்தியாவினை எனது தேசமென்று கொண்ட நான், இந்தியத்தேசத்திலே உள்ள இராமின் மகள் அமெரிக்காவிலே கற்பது பற்றி, "வெளிநாட்டிலே குடும்பத்துடன் வசதியுடன் வீடுகட்"டி -இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன்- வாழும் இந்தியாவுக்கு அந்நியனான -/பெயரிலி. என்ற ஈழத்தமிழன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா? நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா?" என்பதுதான் இங்கே பிரச்சனை" என்று சொல்லுமாறு சொல்லி அம்மணம் தெரிய நிற்கிறார். ஈழத்தமிழர், இந்தியா, இந்தியத்தமிழர், நாவலர், இந்து, புலிகள், ஈழத்தலைமை, மாற்றுத்தலைமை, யாழ்ப்பாணத்தமிழர், இலங்கையிலே இந்தியத்தமிழர் என்பன தொடர்பாக மாலனின் ஒவ்வொரு கருத்தும் இப்படியான இவரது தேசத்தினையும் தேசத்தின் சகமனிதர்களையும் விமர்சிக்கின்ற அன்னியரை எதிர்கொள்ளும் கல்லற்ற மெல்லிய(?) உணர்வுள்ள மனதினூடாகவே காணப்படவேண்டுமென்றே அவர் மிகவும் தெளிவாக தன் பின்னூட்டங்களிலே அறுத்து உறுத்து மெல்லிய உணர்வுள்ள மனம் பதறத் தேசப்பற்றுடனும் சகதேசத்தவர் பற்றிய நேசத்துடனும் சொல்கிறார். வாருங்கள், நாங்கள் போய் கண்மூடித்தனமான விடுதலைப்புலி ஆதரவாளர்களின் பாசிசத்தை விமர்சிப்போம் :-(

எல்லோரும் காண, பெரியார் மீது தனிமனிதத்தாக்குதல் என்ற பேச்சின் பின்னாலே, இராம்_மகள்+-/பெயரிலி.+ஸ்ரீலங்கா பாஸ்போட்_ஈழத்தமிழர்+இந்தியாவின் ஈழத்தமிழருக்கான ஆதரவின்மை இவை வந்ததற்கு அடியிலே இத்துணை சாம்பல்பூத்த தணல் இருப்பதினை நுண்ணரசியல் என்றில்லாமல் என்னவென்று சொல்வதாம்? அமுக்கிவைத்த முயற்குட்டிகள் இவ்வாறு குழி தோண்டி வளை தாண்டி அடங்காமல் பரந்தோடும் நிலையை எல்லோரும் பாருங்கள். இத்தனையையும் சுருக்கி, "வரப்புயர" என்று "-/பெயரிலி.யின் இராம்(மகள்) மீதான விமர்சன"த்துக்குள் இழுத்ததஉ நுண்ணரசியல் இல்லாவிட்டால், நானோவரசியலாகமட்டுமே இருக்கமுடியும். இதற்கு சற்றுமுன்னேதான் சிறிலைக் காட்டிக்கொடுக்கும் வலைநெறிப்பிறழ்வு வேறு (சிறில், இன்னமும் சயந்தனின் இடுகையின் பின்னாலே, -/பெயரிலி. சொன்ன அந்த 'ரேப்' உதாரணத்தினாலே மனம் நொந்து போயிருக்கின்றீர்களென்று தெரிகின்றது. :-) அதைக்கூட, வேண்டுமானால், வலைநெறிப்பிறழ்வு, தனிமனிதத்தாக்குதலுக்கு மாலன் அவருக்குமட்டும் தனியே ஆழத்தைத்துவிட்ட, மற்றவர்களுக்கு உப்புச்சப்பற்ற முரண்சொல்லும் " -/பெயரிலி._இராம்(மகள்)" உதாரணத்துக்குப் பதிலாகக் காட்டியிருக்கலாம் :-(). "-/பெயரிலி. குடும்பமாக வெளிநாட்டிலேயிருக்கின்றாரா? அவர் குட்டி சமஸ்தானத்துமஹாராஜா போல வசதியோடு இருக்கின்றாரா? இந்தியத்தமிழர்_இலங்கைத்தமிழர் உறவுநிலை, அரசியல் குறித்த வரலாற்றின் சரியான தரவுகள் எங்கே? யாழ்ப்பாணத்தலைமை என்றால் என்ன? எக்காலத்திலே அது எவரால் எவரைப் பிரதிநிதிப்படுத்தியது? (அப்படியான யாழ்ப்பாணத்தலைமையைக் கடிகின்ற மாலன் அதேதலைமையின் வழிப்பட்ட காலத்தே உருவாகிய அசல் யாழ்ப்பாணத்தார் அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி புத்தகத்துக்கு 1996 இலே முன்னுரை எழுதியது முரண்நகை :-)), இராம் மகள் மார்க்ஸியவாதியா என்று கேட்கும் இவர் எப்படி -/பெயரிலி. குடும்பம் வெளிநாட்டிலேயிருக்கின்றதென்று கருதிக்கொள்கின்றார்?" என்பதுபோன்ற பெரும்பட்டியற்கேள்விகளை இன்னொரு பொழுதுக்கு, நான் சொன்னதுபோலவே, என் இறுதிப் பின்னூட்டத்திலே பின்னொரு முறை வைத்துக்கொள்ளலாம்.

அதனால், இப்படியான நுண்ணரசியல், மண்ணரசியல் நிறைந்த (வி)வாதத்துள்ளே இவற்றுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிப்பட்டறை அமைப்பாளர்களை இழுத்து, இவ்வாதக்கிரகணம் பட்டறையின் நன்னோக்கினையும் அமைப்பாளர்கள் & பங்குபற்றியோரின் உழைப்பினையும் மறைத்து மறக்கடிக்க வைத்துவிட்டதற்காக வருந்துகின்றேன். இப்படியான விரிவு கொள்ளும் என்று எண்ணவில்லை. ஆனாலும் தவிர்க்கமுடியவில்லை. மேற்கொண்டேனும், அப்படியான எதிர்விளைவுகளைப் பட்டறைக்கும் அமைப்பாளர்களுக்கும் நான் மோசமாக்க ஒரு காரணமாக என் பதில்களிருப்பதை நான் விரும்பவில்லை. மாலன் பட்டறையமைப்பாளர்களோடு மனம் வருந்தக்காரணம் ஆகிவிட்டேன் என்பதற்காக, பட்டறை அமைப்பாளர்களிடம் (மட்டும்) என் வருந்தம் கலந்த தார்மீகமன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். பட்டறை அமைப்பாளர்கள் குறித்து இனியேதும் இங்கே பேசப்போவதில்லை.