Thursday, August 16, 2007

உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு இன்னும் தொடரும் பயனற்ற விவாதம்

புலம் - 24

"...மக்கள் என்று நாம் யாரைச் சொல்கிறோம் என்று தெளிவாக விளங்கிக்கொள்வது மிகவும் அவசியம். வசதிகள் படைத்தோரையும் சமூகத்தில் அதிகாரவர்க்கத்திலிருப்போரையும் தவிர்ந்த ஏனையோரையே நாம் மக்கள் என்று குறிப்பிடுக்கின்றோம். இந்தச்சமூகத்தில் அதிகாரமில்லாத அவர்களே பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள். அதிகார வசதி படைத்தவர்கள் அவர்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றார்கள். ஆனால், அவர்களிடம் சென்று பேசமாட்டேன் என்கின்றார்கள். ஆட்டு மந்தையைப்போல அந்த மக்களை வழிநடத்தவும் அந்த மக்களைப் பற்றித் தாங்களே முடிவெடுக்கவும் வசதி படைத்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். சாதாரணமக்கள் முடிவெடுக்குமளவுக்கு அறிவு படைத்தவர்களாகக் கருதப்படுவதில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் மக்களைப் பற்றி ஒரே மனப்பாங்கு உடையவர்களே. மக்களின் நன்மை என்பது அவர்களைப் பொறுத்தமட்டில், இரண்டாம் பட்சமே. பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் 97.5 வீதமானோர் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர். அவர்கள் உடல் உழைப்பை நல்குபவர்கள்...." - குன்றின்குரல், மலர் - 7, இதழ் -8, ஆகஸ்ட், 1987 பக் 1இலே எழுதப்பட்டதாக, 'மலையகத்தமிழ் இலக்கியம்' நூலில் க. அருணாசலம்.

மாலன் பட்டறைக்குச் சம்பந்தமில்லாத விவாதத்துடனே மூட்டையைக் கட்டிவைத்துவிட்டாலுங்கூட, மிச்சமிருக்கும் என் ஓரிரு பதில்களிலே ஒன்றுக்கான ஆறி அவலாகுமுன்னான என் அவசரப்பதில்

மாலனின் இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் நிலையினை இலங்கைத்தமிழரோடு பிணைத்துப்பேசியதை இப்பதிலி/விலே பேசமாட்டேன். அதற்கு மிக நீண்டதான பதில் தேவைப்படும். இலங்கைத்தமிழர் என்பவர்கள் யார்? இலங்கையிலிருந்த இந்தியத்தமிழர்கள் என்பவர்கள் யார்? ஒவ்வொரு குழுவுக்குள்ளும் அடங்கியிருந்த கூறுகளான குழுக்கள் யார்? அக்கூறுகளின் சிறுபான்மை மேல்மட்டக்கூறுகள், தமக்குக் கீழ்மட்டத்திலேயிருந்தவர்களை நடத்திய தன்மை எப்படியாகவிருந்தது? இந்தியத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தவர்கள் யார்? அப்போது பலம்வாய்ந்த இந்திய அரசினதும் ஜவகர்லால் நேருவினதும் எதிர்வினைகள் என்ன? வேறுநாடுகளிலே குடியேறிய வட இந்தியர்களுக்கு இப்படியாகக் குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர்களின் எதிர்வினையென்ன? திருப்பி அனுப்பப்பட்ட இந்தியத்தமிழர்களைத் தமிழகமும் அதன் பத்திரிகை,செய்தியூடகங்களும் என்ன மாதிரியாக நடத்தின? நடத்துகின்றன? தமிழர்விடுதலைக்கூட்டணி, ஈழத்தமிழ்விடுதலையியக்கங்களின் இந்தியத்தமிழர், அவர்களின் நிலப்பகுதி குறித்த நிலைப்பாடுகள் என்ன? ஈழவிடுதலையியக்கங்களிலே இந்தியவழிவந்த தமிழர்களின் பங்களிப்பு என்ன? சந்திரசேகரன் போன்றோர் தொண்டமான் ஆகியோரை மறுதலித்துப் புதுத்தலைமையை இளைஞர்கள் மத்தியிலே மலையகத்தமிழர் முன்னணி கொண்டு வந்ததற்கென்ன காரணம் (சி. சிவசேகரம் என்றே கருதப்படும் கோகர்ணனின் பத்தி)? சந்திரசேகரன் போன்றோருக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவு எப்படியானது? - இவை பற்றி விரிவாகப் பேசவேண்டும். அதற்கு இஃதல்ல இடம்; நேரம். ஆனால், ஒரே ஒரு வரியினை மட்டும் சொல்லிவிடவேண்டும். ஆனால், டி. எஸ். சேனநாயக்காவின் சிங்களப்பெரும்பான்மை அரசு கொண்டு வந்த இந்தியத்தமிழர்களின் குடியுரிமையை மறுத்தலினை, "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்." என்பதாக பட்டறையோடு முடிந்து முடிக்க மாலனால் மட்டுமே முடியும். இலங்கைத்தமிழர் தலைமையென்று இருந்தவர்கள் ஜிஜி பொன்னம்பலம் . எதிர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்று இரண்டாக உடைய, இந்தியத்தமிழர் குடியுரிமைமறுப்பினாலான விவாதமே காரணமென்று சொல்லப்படுகின்றது. ஜி.ஜி. பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்றும் செல்வநாயகம், tamil nation.org சத்தியேந்திராவின் தந்தை நடேசன் ஆகியோர் அதனை எதிர்த்தார்களென்றும் சொல்லப்படுகின்றது (இந்தியத்தமிழர் குடியுரிமையை மறுக்கச் சட்டம் கொண்டு வந்தவர் என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை என்பதையும் மாலனின் கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன்).

இக்குறிப்பு எவ்வகையிலும் 'யாழ்ப்பாணத்தமிழர்.எதிர்.மலையகத்தமிழர்.எதிர்.கொழும்புத்தமிழர்.எதிர்.வன்னித்தமிழர்.எதிர்.மட்டக்கிளப்புத்தமிழர்' என்ற பார்வையினையோ, ஒவ்வொரு குழுவினரும் மற்றவரைப் பார்க்கும் தன்மையையோ ஆய்வதல்ல. வெறுமனே, மாலன் சொல்லிய "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதைமட்டுமே உடனடியான சில இணையத்திலே கிட்டும் தரவுகளோடு எதிர்கொள்வதாகும்.

மாலன், பிரமிளையும் சிவசேகரத்தையும் தனது இந்தியத்தமிழர் குடியுரிமை நிலையிலே யாழ்ப்பாணத்தலைமையின் நிலைப்பாடு குறித்துச் சொல்லச் சுட்டியிருக்கின்றார்.

பிரமிள், ஒருவகையிலே அவரே ஆங்கிலத்திலே "..While Dr. Pound goes over Italy's air Endrosing the Century's anti-Semitic pair. You who warned the poet not to be viewy, Slipped though it was far afield of your trade, into a very unpoetic view, held by centuries of myopia That just this race was Usura's chosen children..." கவிதை பாடின எஸ்ரா பவுண்டினைப் போன்றவரே. பவுண்ட் சிறந்த கவிஞர், விமர்சகராகவிருந்தபோதும், அவரது "பொருளாதாரக்கொள்கைகள்"+"யூதர்" குறித்த கருத்துகள் பெரிதும் அறிவுபூர்வமற்ற, அரைவேக்காட்டுத்தனம் நிறைந்தவை; "வன்னியாழ் கோணைபுத்தளம்மட்டு நகரோடு மன்னார் அம்பாறையும் நிமிர அதிரும் முத்திசைக்கடல்நடுநெற்றியாய் ஒளிர்வது கற்றவர் நிறையுமிந்நாடு. வர்க்கவர்ணங்களை சிந்தை செய்திறனால் வென்றது நம் தமிழீழம்" என்று ஈழத்துக்கான தன் தேசிய கீதம் பாடிய பிரமிளும் சிறந்த கவிஞர் விமர்சகராகவிருந்தபோதுங்கூட, அரசியலைப் பொறுத்தமட்டிலே பவுண்டைப் போலவே தரவுகளோடும் உணர்வுகளறுத்துக் கருத்துக்கூறும் தன்மையைக் கொண்டவரல்ல என்றே நினைக்கிறேன். அவரின் நூலைத் தரவாக்குவது எத்துணை சிறப்பானதெனத் தெரியவில்லை. பிரமிளின் எதிர்க்கட்சிக்காரர் சிவசேகரத்தின் கருத்துகளை அவருடைய விவாதங்களின்போது சீனச்சார்பு பொதுவுடமைச்சாய்வினைக் கண்டுகொள்ளாமல் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" வரிகளிலேயிருக்கும் ஒரு திருத்ததைச் சொல்லவேண்டும். 1947 இன் தேர்தல் முடிவின்படி, இலங்கை இந்திய காங்கிரஸிற்கு வாக்களித்தோர் ஆறு பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து 72,230 வாக்குகளுடன் அனுப்பினர். இலங்கை தமிழ்க்காங்கிரசுக்கு வாக்களித்தோரும் ஏழு பிரதிநிதிகளை 82,499 வாக்குகளுடன் மட்டுமே அனுப்பினர். 1947 இலங்கைத்தேர்தலிலே வாக்களிக்கும் வயதுள்ளவர்களிலே மொத்தமாக வாக்களித்தோரே பத்தொன்பது இலட்சத்தினரே. ஏழாவதாக ஒருவர் இருந்தாரா அல்லது வாக்குவீதத்தின்படி மேற்சபைக்கு நியமிக்கப்பட்டாரா தெரியவில்லை.

கீழே தரப்பட்டிருப்பவை, இக்குடியுரிமை பறிக்கப்பட்ட காலத்தின் போதிருந்த நிகழ்வுகள்/நிலைமை (மட்டும்) குறித்த சில இணைப்புகள் சில; அதன் பின்னான அரசியலை இங்கே சுட்ட இடம், நேரம் கொடுக்காது.

முதலிலே 'இலங்கையிலேயிருந்த, இருக்கின்ற இந்தியத்தமிழர்கள் எல்லோருமே தோட்டங்களிலே வேலைசெய்யவந்தவர்கள், அவர்கள் எல்லோரும் பொருளாதாரநிலையிலே ஒரே வகையினர்' என்ற எண்ணம் பலரிடம் நிலவுகின்றதாகத் தெரிகின்றது. அப்படியல்ல. தோட்டத்தொழிலாளர், அவர்களுக்கான வர்த்தகம் செய்யவந்தவர்கள், வெள்ளைச்சட்டை வேலைகள் செய்யவந்தவர்கள் என்று வகையிருந்தனர். தோட்டத்தொழிலாளர்களிலுங்கூட இருந்த வகைப்பாடுகளை, வி. இராதாகிருஷ்ணன் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல்வாதியாக இருந்தவர் என்று ஞாபகம்) எடுத்தாண்டு சொல்வது இது. (விக்கிபீடியாவிலேயும் இது சுட்டப்பட்டிருக்கின்றது; by the way, there is a name mistake in englsih wikipedia. It/He is NOT Bertram BastiaNpillai, but Bertram BastiaMpillai)

Caste orientation of a plantation
The social structure of the Plantations strongly resembles the South Indian rural social structure. This community rigidly bound by caste system. In a Plantation the Tea factory is the center of activities. It stands majestically in the Central Part of the plantation. The office adjoins this and these are surrounded by the quarters of the Staff Members (Such as clerks, Tea makers, Conductors, Kanakka Pillais, and Supervisors). The Bungalows of the planter and his assistants are in an isolated but peaceful area. These will be in close proximity to the office. The dwellings of the labourers called ëLine Rooms are situated a little further away from the factories. Those who are considered to be of higher castes (Such as Pillai, Ahambadiyar, and Mukkkulathore) occupy the first row of line rooms. They perform respectable jobs (such as factory work and grinding of Tea. They work as minor employees too) Even though they belong to the labour category they are influential among conductors, Tea Makers, Kanganies and other officials. The labourers considered low castes live in the dwellings that are away from the center and these dwellings are called ‘distant / Lower Lines'. This group consists of Pallar, Parayars, Barbers, launders and scavengers. The yard sweepers and changers of clothes are in the lowest rank. Even today they receive very meager facilities from the Management.


இவர்களிலே மேற்தட்டினருக்குக் குடியுரிமை பறிக்கப்பட்டதா என்பதையோ, குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்களுக்காக இம்மேற்றட்டிலேயிருந்த இலங்கையின் இந்தியத்தமிழர்களிலே பெரும்பான்மையானோர் போராடினார்களா என்பதைக்கூட (தன் வசதிக்காகவோ என்னவோ) மாலன் பேசவில்லை. பின்னாளிலே வந்த மேற்தட்டு இந்தியர்களிலே பலர் குடியுரிமை பெற்றார்கள்; அவர்களின் பிள்ளைகள் அன்றும் இன்றும் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமைகளுக்கூடாகவோ அதே காலத்திலே யாழ்ப்பாணத்திருந்த ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமைக்கூடாகவோ போகவேண்டியிருக்கவில்லை.

மாலனின் சுந்தரலிங்கம் ராஜினாமா செய்தது எப்போது என்பது பற்றி tamilnation.org இலே வாசித்துக்குழம்பியதற்கு, அதே தளத்திலிருக்கும் PLANTATION TAMILS DEPRIVED OF VOTE AND CITIZENSHIP - 1948/50 பக்கத்திலிருந்து அவருக்கு ஆதரவான கருத்து உண்டு (ஆனால், ஜீஜீ பொன்னம்பலம் குறித்து மாற்றான கருத்து) என்பதை நாம் சுட்டிக்காட்டலாம்

While a battle was on in the Parliament, over the Citizenship Act, certain interesting developments, in respect of certain Tamil members of the then Parliament, took place. When the Ceylon Citizenship Act was passed in 1948, C. Suntharalingam, who was a Minister in the (UNP) Government of D.S. Senanayake, voted for the Citizenship Act, while G.G.Ponnambalam (Sr), who was then, the leader of the Tamil Congress, voted against the Act, and so did Ponnambalam's Tamil Congress Party. But, by the year 1949, G.G. Ponnambalam joined the Sinhala dominated Government of D.S.Senanayake.

When the Indian and Pakistani (Residents) Citizenship Bill came before the Parliament there were two Tamil Ministers in Cabinet of D.S. Senanayake. On the issue of this Bill, namely the Indian and Pakistani (Residents) Citizenship Bill, there was a split between the Tamil Members of the then Parliament. G.G.Ponnambalam, despite the pledge he had signed with the party representing the Plantation Tamil interests (i.e. the Ceylon Indian Congress as it was then known) in respect of Citizenship for the persons of Indian origin, voted for the Bill, while C. Suntharalingam voted against the Bill, and resigned his portfolio. The Tamil Congress broke into two and Mr. S.J.V.Chelvanayagam, with his supporters formed the Federal Party....


இனி, மாலனின் "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதன் மேலாக.....

மகேந்திரன் என்பவர் சங்கம்.ஓர்க் இலே எழுதியிருக்கும் Plantation Tamils – The Oppressed People of Sri Lanka கட்டுரையின்படி,

Developments after independence

The granting of independence to Ceylon was a tragedy for the Tamils. The Ceylon government dominated by the Sinhalese gave them step-motherly treatment. The Upcountry Tamils were living in extremely difficult conditions, but the Sinhala-dominated government completely neglected them.

The Ceylon Indian Congress led by Thondaman secured 8 seats in the first Parliament out of a total of 101. Thondaman was elected to the Nuwara Eliya seat. The block Upcountry Tamil votes influenced 12 other electorates in favour of leftist parties.

Then, like a bolt from the blue, came the terrible betrayal of the Tamils by Prime Minister D.S. Senanayake and the U.N.P. In the very year of independence, the Upcountry Tamils, who numbered over a million, were rendered stateless. In a blatant act of perfidy, D.S. Senanayake passed the Ceylon Citizenship Act ,depriving citizenship to the Upcountry Tamils (over half the Tamil population) who had lived in Ceylon for several generations. This loss of citizenship was followed in the next year by the Ceylon Elections Amendment Act depriving voting rights to those Estate Tamils, who constituted about 13% of the population. As a result, in the next elections in 1952, not a single Tamil member was elected from the Upcountry, where half the Tamils in Ceylon lived.

Ceylon Tamils fail to support Upcountry Tamil brethren

This was the first blow to the Tamils in Ceylon, and was to be followed by numerous serious acts of discrimination by the Sinhalese majority against the Tamils by successive governments creating a permanent division between the two communities. D.S. Senanayake who started these anti-Tamil policies can be called the father of Sinhala racism. The Tamils, even in this time of peril, failed to take united action. To the dismay of the Tamils, G.G. Ponnambalam who posed as the champion of the Tamils and minorities, voted in support of these discriminatory acts against fellow Tamils to enable him to continue in the cabinet. The Plantation Tamils, who were already living in sub-human conditions, were left without any political voice.

The honour of the Tamils was partly salvaged by S.J.V. Chelvanayagam, who voted against those despicable Acts of discrimination and broke away from the Tamil Congress Party of G.G. Ponnambalam over this issue. In 1949 S.J.V. Chelvanayagam formed the Federal Party to agitate for a federal constitution to safeguard Tamil rights. He was the first Tamil leader to alert the Tamils to the dangers of unitarianism and Sinhalese hegemony. At that stage he only agitated for a federal form of government and did not ask for a separate state for the Tamil minority.


இதை மறுதலித்து ஜி ஜி பொன்னம்பலத்தின் பக்க நியாயத்தைச் சொல்வதாக, ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளிலேயிருந்தது, கொலை செய்யப்பட்ட அப்பாத்துரை விநாயகமூர்த்தி, -மாலன் அடிக்கடி சுட்டிக்காட்டும் tamilnation வலைத்தளத்திலே- ஜி ஜி பொன்னம்பலம் அப்படியாகச் செய்யவில்லை என்று வாதாடும் பகுதி கீழே:

"...His (G. G. Ponnambalam's - -/peyari.) political opponents carried on a persistent campaign of vilification and character assassination against him stating he was responsible for the disfranchisement of several Indian Tamils in 1948. This is absolutely incorrect. The act which disfranchised the Tamils of Indian origin was the Ceylon Citizenship Act No. 18 of 1948 and the All Ceylon Tamil Congress and its Leader Mr. G. G. Ponnambalam vehemently opposed this act and voted against it. When this Act was passed Mr. Ponnambalam was in the opposition. Later when Tamil Congress decided to give responsive co-operation to the UNP Government it did so only after getting an undertaking from late Mr. D. S. Senanayake that he would consult the then Indian Prime Minister late Mr. Jawaharlal Nehru and bring a bill in Parliament to give citizenship rights to those who were deprived of their citizenship by the earlier Citizenship Act.

The subsequent piece of legislation known as the Indian and Pakistani Residents Citizenship Act which was passed in Parliament was the outcome of the undertaking given by late Mr. D. S. Senanayake to late Mr. Ponnambalam. Mr. Ponnambalam only supported this legislation which gave citizenship rights to Indian Citizens.


From 1930 onwards it was late Mr. G.G. Ponnambalam who fought for the rights of the Indians and safeguarded their self respect. When Sir Jackson Commission was appointed when Govindan was shot dead at the famous Mooloya Estate incident and when Nefsumoyar Estate was taken over it was G.G. Ponnambalam which spoke on behalf of the Indian Tamils and fought for their rights. Out of three days allotted to the Tamil Congress by the Soulbery Commission late Mr. G.G. Ponnambalam set apart one full day to represent matters relating to the rights of the Indian Tamils before the Soulbery Commission and as a result Soulbery Commission has recommended that 14% of the seats in Parliament be reserved for the Indian Citizens..."

இதிலே விநாயகமூர்த்தி, "பொன்னம்பலம், சேனநாயக்கா, நேருவுடனான கலந்தாலோசித்தபின்னரே செயற்படவேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்" என்பதோடு தொடர்பாக நேருவினது செயற்பாடுகளினைப் பற்றி வலையிலே ஓரிடத்தில் வாசிக்கக்கிடைப்பது இது, "CITIZENSHIP AND FRANCHISE RIGHTS OF INDIAN TAMILS IN SRI LANKA":

"..The issue of Indian Tamils had serious ramifications both within Sri Lanka and internationally. Nehru's global perspective was a serious impediment to the resolution of the Citizenship status of Indian Tamils in Sri Lanka. This global perspective blinded him to the particular aspects associated with the Indian Tamils in Sri Lanka. To Nehru, and to other host countries such as Kenya and Uganda, they were collectively all nationals of India who had migrated. To Sri Lanka on the other hand, because they were predominantly ethnic Tamils, their presence in Sri Lanka in large numbers had adverse political, social, and economic consequences. Furthermore, Sri Lanka could not afford financially to accommodate all the Indian Tamils who wished to seek Citizenship in Sri Lanka. Consequently, Sri Lanka looked to reduce the number of Indian Tamils in the interests of the indigenous population. To do so was in the national interests of Sri Lanka.

Statements by Nehru such as "So far as we are concerned, strictly, legally and constitutionally it is not our problem. They (Indian Tamils) are not our nationals" (Sahadevan," India and Overseas Indians", 1995, p. 67) [சகாதேவன், இன்னும் டில்லியிலேயே இருக்கின்றார் என்று நம்புகிறேன்; மாலன் அவருக்கு ஒரு தொலைபேசி போட்டு உறுதிப்படுத்திக் கேட்டுக்கொள்வது மிகவும் இலகுவானது], are hollow in the light of V.K.Krishna Menon words to the effect "Nehru knew the burdens that we would have to carry (their absorption into Indian economy)..." (Ibid, p.150). Undoubtedly, India's perspective was influenced entirely by her self interest. The Indian Tamils in Sri Lanka and elsewhere became other people's problems because India made it difficult for them to return as Indian nationals through the mechanism of Articles 5 and 8 of the Indian Constitution.

Indians emigrated overseas because employment prospects throughout the rest of the British Empire were better than the prospects at home. Britain offered inducements and India sought safeguards for this labour. Between them the resources of countries like Sri Lanka were exploited. When it was time to leave at the end of the colonial era, BOTH BRITAIN AND INDIA DISASSOCIATED THEMSELVES FROM THEIR RESPECTIVE RESPONSIBILITIES. It was obligatory on the part of Britain to have resolved the questions relating to the Indian Tamils being left behind in Sri Lanka. Instead, Britain abandoned her responsibilities and left it to Sri Lanka and India to resolve it bilaterally.

Like India, Britain also did not want to face the prospect of thousands of Indians descending on her shores. Britain's attitude to Overseas Indians was revealed when she refused entry to those Indians from Kenya and Uganda who had British passports, despite internationally recognized customs. India asserted that entry into U.K. was a fundamental right that every British citizens was entitled to, and any attempt to deny such a right was an act of racial discrimination against them (Sahadevan, 1995). Britain remained undeterred. She too was acting in her self-interest.

All three countries Sri Lanka, India, and Britain, acted in their self interests. Of the three countries Sri Lanka was the least obligated. The Indian Tamils were in Sri Lanka at the behest of the British to facilitate British colonial adventure in Sri Lanka, and India benefitted financially from the remittances of these workers. In addition, from India's perspective, this emigration was a relief to her economy. The national self interest of Sri Lanka called for a solution that would ease the financial, social, and political burdens imposed upon her by the presence of such a large number of Indian Tamils.

Within Sri Lanka, their presence in large numbers had serious political ramifications. The Sinhalese realized that it would erode their political base to an extent that the indigenous Sinhalese would go unrepresented. To the Sri Lankan Tamils, they represented a political base that would double their influence with negative consequences on the Sinhala political base. To the political Left, they represented a solid block of labour votes that would strengthen their political base. Thus, while the Indian Tamils affected the Sinhalese politically, to the Sri Lankan Tamils and the political Left they represented a political base that could be exploited to further their ambitions.

Under these circumstances, the Sri Lankan government acted responsibly, while protecting the interests of the larger Sri Lankan nation."

பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" என்ற கருத்தினை, மாலன், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று கண்முன்னேயே தன் தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டதை மேலே ஒரு சிங்களக்கட்டுரையாளர், "Thus, while the Indian Tamils affected the Sinhalese politically, to the Sri Lankan Tamils and the political Left they represented a political base that could be exploited to further their ambitions" என்று சொல்வதோடு உரசிப் பார்க்கவேண்டும்.

மாலன், அந்நேர இந்தியத்தலைமை - குறிப்பாக, ஜவகர்லால் நேரு ("In spite of the lucidity and analytical clarity of one of India's greatest thinkers, the question why he did not involve himself more deeply to bring about an early solution to the problem of Indian Tamil plantation labour in Ceylon foxes the reader. Perhaps, it may best be answered by the gentlemanly norms of the Nehruvian era of Indian politics. At one time, Nehru was willing to believe that the Indians might be to blame for their own worsening situation in Ceylon. "I have no doubt that the Indians there have not been behaving well and have made a mess of things... we should stop all unregistered labour to Ceylon," he wrote to Vallabhai Patel in 1939." - Madam Nirupama Subramanian reviews "Nehru and Sri Lanka", edited by Gopal Krishna Gandhi)- இலங்கையிலிருந்த இந்தியத்தமிழருக்காக, அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது என்ன செய்தது - செய்தார் - என்பது பற்றி எக்கேள்வியும் எழுப்பாமல், எல்லாத்துயருக்கும் காரணம், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதாக முடித்துவிடுகின்றார். [இன்னமும், இதே போக்கிலே பிஜியிலே மஹேந்ர சௌத்ரியிலும் அவரைப் போன்ற புலம்பெயர் வடஇந்தியர்களின் வழிவந்தோரிலே இந்திய அரசு காட்டும் அக்கறையை புலம்பெயர் இந்தியத்தமிழர்களின் வழிவந்தோருக்குக் காட்டுவதில்லை என்பதுதான் நிலைமை :-(]. ஈழத்திலே இந்திய இராணுவத்தின் இராணுவ, அமைதிப்படைச்செயற்பாடுகளுக்கு மாறான மனிதத்தன்மையற்ற பல செயற்பாடுகளை இதுவரை மாலன் எங்கேயும் கேள்வி கேட்டதாகத் தெரியாததுபோலவே, இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, ஜி ஜி பொன்னம்பலம், டி. எஸ் சேனநாயக்காவைப் பேசும்படி கைகாட்டியதாகச் சொல்லப்படும் நேருவும் அவரின் அரசினது செயற்பாடுகளும் குறித்து மாலன் கேள்வி கேட்கமறுக்கின்றார். அவருக்குத் தேவைப்படுவதெல்லாம், ஈழத்திலே இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளுக்குக் காரணம், விடுதலைப்புலிகள் என்பதுபோலவே, இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிபோனதற்குக் காரணமெல்லாம், யாழ்ப்பாணத்தலைமையென்பதுதான். மணலுக்குள் தலையை மறைப்பது தீக்கோழிக்கும் (அதுகூட உண்மையிலே அப்படிச் செய்வதில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது ஒரு புறமிருக்கட்டும்) கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது பூனைக்கும் அவை விரும்பிக்கொண்ட காரணங்களுக்காகவும் திருப்திக்காகவும் வசதிப்படலாம்; ஆனால், மெய்யான காரணங்கள் அவையல்ல என்பது அவற்றுக்கே மிகவும் தெளிவாகத் தெரிந்தேயிருப்பன. வேண்டுமானால், விபரம் புரியாத, கதை கேட்க மட்டும் விரும்பும் குழந்தைகளுக்குக் கண்ணை விரித்துக் காதை அகட்டிக் கேட்கப் பயனாகவிருக்கும். மாலன், இந்திய இராணுவத்தின் ஈழ நடவடிக்கைகள் குறித்தோ, நேரு அரசின் இந்தியத்தமிழர் குடியுரிமை பறிப்பினைக் குறித்தோ கேள்வி கேட்காமல், ஈழத்தமிழர்களை நோக்கி விரலை நீட்டுவதற்கு, அவரே மனம் விட்டுக் கேட்கும், "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?" என்பதுதான் காரணமென்றால், தன் தேசத்திலும் தன்னவர்களிலும் விமர்சனமிருக்கக்கூடாதென்ற அர்த்தப்பட்டு எனக்குத் தோன்றும் அவரின் அக்காரணத்தினை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்கின்றவர்களையிட்டுக் கவலையும் பரிதாபமும் கொள்கிறேன்.

சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம், பொன்னம்பலம் புத்திரர்கள், அவர்களைச் சூழ்ந்தவர்களின் "யாழ்ப்பாணத்தலைமை"யின் தங்கள் (இனசனம், சாதி) நலம் பேணும் பிற்போக்கான எத்தனையோ பண்புகளிருந்திருக்கலாம். இவர்களிலே எல்லோரும் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார்களா கொழும்பிலே இருந்தார்களா என்பதைவிட்டுவிடுவோம்; அவர்களின் யாழ்ப்பாணத்தலைமை, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான மற்றையத்தமிழர்களை எப்படியாகப் பிரதிபலித்தது என்பதை விட்டுவிடுவோம். யாழ்ப்பாணத்துக்குள்ளேயே சிறுபான்மை மகாஜனசபை ஏற்படும் வகையிலே முழு யாழ்ப்பாணத்தவரையும் பிரதிபலித்ததா என்பதையும் விட்டுவிடுவோம். இவர்களின் யாழ்ப்பாணத்தலைமையை இலங்கைத்தமிழர்தலைமையென்பதும் சத்தியமூர்த்தி, ராஜாஜியைத் தமிழகத்தலைமையென்பதும் ஒன்றே என்று ஒப்புநோக்கி வாதாடக்கூடிய இலகுநிலையையுங்கூட இங்கே விட்டுவிடலாம். இவர்களுக்கு இந்தியத்தமிழர்கள் மேலே தனிப்பட்ட, எமக்குத் தெரியாது பிடிப்பின்மைகூட இருந்திருக்கலாம் - இதுவரை அதற்கான ஆதாரங்களைக் காணமுடியவில்லையென்றபோதுங்கூட. (விநாயகமூர்த்தி பொன்னம்பலம் இந்தியத்தமிழர்களுக்காக ஜி ஜி பொன்னம்பலம் வாதாடினார் என்றுதான் தன் தலைவரைக் குறித்து வாதாடுகின்றார் என்பதைக்கூடத் தொண்டர் அபிமானம் என்று இப்போதைக்கு விட்டுவிடுவோம்; சி. வி. வேலுப்பிள்ளை, 'வீடற்றவன்' தன் குறுநாவலின் முன்னுரையிலே, பொன். அருணாசலமே 1921 இலே தோட்டத்தொழிலாளிகளின் ஒப்பந்தக்கூலி என்ற கொடுமையை ஒழிக்க வழி செய்ததாகச் சொல்கிறார்.).

ஆனால், இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது, அந்நேரச்செயற்பாடுகள் என்னவென்பதை சம்பவங்களின் கோர்வையாகப் பார்த்துக் கருத்துச் சொல்லவேண்டும். வெறும் மேம்போக்கான 'எடுத்தார்-கவிழ்த்தார்' கருத்துகளைத் தவிர்த்து விட்டு, ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்களின் கருத்துகளைத் தர்க்கபூர்வமாக அணுகியபின்னால், பாராளுமன்றத்திலே சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகளை, வாக்குப்பதிவுகளை, ஹன்ஸார்ட் பதிகுறிப்புகளிலிருந்தே பார்த்தே நிகழ்வுகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு, எங்கோ ஒரு பட்டறையிலே "பயனற்ற விவாதங்களால் உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு" ராமின் மகளுக்கும் -/பெயரிலி.யின் பாஸ்போர்ட்டுக்கும் முடிச்சுப்போடப்போனது, சிக்கிவிட, கவனக்குலைப்பாக, வலைப்பதிவின் இந்தியத்தமிழ்வாசகர்களை உணர்வுபூர்வமாக(த்) (திசை) ஈழத்தமிழர்களுக்கெதிராகத் திருப்பிவிட, "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று அப(பா)யக்கூற்றிடுவது முற்றிலும் அநாவசியமானதும் நியாயமற்றதுமானது.

நன்றி: நூலகம் குழுவினருக்கு இலங்கைத்தமிழ்நூல்களை இணையப்படுத்துவதற்கும் இணைப்புக்குதவிதற்கும்

15 comments:

வவ்வால் said...

பெயரிலி,

உங்கள் செயல் வேகம் பிரமிக்க வைக்கிறது, இந்த தலைப்புக்கும் சிந்தா நதியின் பதிவில் இடம்பெற்ற சொற்றொடருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என நான் நம்புகிறேன்!

தற்போது பேசப்பட்டு வரும் கருத்தின் மையம் மிக புதிரானது ... எப்படி பேசுவது ,எவ்வழி பேசுவது என எனக்கும் புரிவதில்லை... அதானாலேயே உங்கள் பதிவுகளை எல்லாம் அதன் பொருட்டு வாசித்து வருவதோடு நிறுத்திகொள்கிறேன்.(ஒரு முறை சூடுபட்டும் கொண்டேன்) இன்னும் எனக்கு பக்குவம் வரவில்லை ... எப்படி இதனை எல்லாம் கையாள்வது என்று!

வருங்காலத்தில் எனக்கும் சொல்வதற்கு ஏதேனும் கருத்துகள் கிடைக்கும் எனில் அதில் உங்கள் பதிவின் பங்களிப்பும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

Anonymous said...

//"பயனற்ற விவாதங்களால் உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு" ராமின் மகளுக்கும் பெயரிலியின் பாஸ்போர்ட்டுக்கும் முடிச்சுப்போடப்போனது, சிக்கிவிட, வலைப்பதிவின் இந்தியத்தமிழ்வாசகர்களை உணர்வுபூர்வமாகத் (திசை) ஈழத்தமிழர்களுக்கெதிராகத் திருப்பிவிடவோ, "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று கூற்றிடுவது முற்றிலும் அநாவசியமானதும் நியாயமற்றதுமானது.//

இதுதான் இங்கு முக்கியமானது.

Anonymous said...

இலங்கைத்தமிழர் என்பவர்கள் யார்? இலங்கையிலிருந்த இந்தியத்தமிழர்கள் என்பவர்கள் யார்? ஒவ்வொரு குழுவுக்குள்ளும் அடங்கியிருந்த கூறுகளான குழுக்கள் யார்? அக்கூறுகளின் சிறுபான்மை மேல்மட்டக்கூறுகள், தமக்குக் கீழ்மட்டத்திலேயிருந்தவர்களை நடத்திய தன்மை எப்படியாகவிருந்தது? இந்தியத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தவர்கள் யார்? அப்போது பலம்வாய்ந்த இந்திய அரசினதும் ஜவர்கலால் நேருவினதும் எதிர்வினைகள் என்ன? வேறுநாடுகளிலே குடியேறிய வட இந்தியர்களுக்கு இப்படியாகக் குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர்களின் எதிர்வினையென்ன? திருப்பி அனுப்பப்பட்ட இந்தியத்தமிழர்களைத் தமிழகமும் அதன் பத்திரிகை,செய்தியூடகங்களும் என்ன மாதிரியாக நடத்தின? நடத்துகின்றன? தமிழர்விடுதலைக்கூட்டணி, ஈழத்தமிழ்விடுதலையியக்கங்களின் இந்தியத்தமிழர், அவர்களின் நிலப்பகுதி குறித்த நிலைப்பாடுகள் என்ன? ஈழவிடுதலையியக்கங்களிலே இந்தியவழிவந்த தமிழர்களின் பங்களிப்பு என்ன? சந்திரசேகரன் போன்றோர் தொண்டமான் ஆகியோரை மறுதலித்துப் புதுத்தலைமையை இளைஞர்கள் மத்தியிலே மலையகத்தமிழர் முன்னணி கொண்டு வந்ததற்கென்ன காரணம் (சி. சிவசேகரம் என்றே கருதப்படும் கோகர்ணனின் பத்தி)? சந்திரசேகரன் போன்றோருக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவு எப்படியானது? -


இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இந்தக்கேள்விகள் விடையளிக்கப்படாமல் இருப்பது இந்தியதேசிய நலனுக்கு பங்கம் ஏற்படும் என்று நினைக்கும், தமிழர்களை "காலா மதராஸிகளாகப் பார்க்கும்" வட இந்தியர்களுக்கும், மத்திய அரசின் உணர்வுக்கும், தமிழகத்தில் பத்திரிகை விற்றுக்கொண்டே அதற்கு கைக்கூலியாக இலங்கா ரத்னா வாங்கும் இந்து ராம்களுக்கும், இந்து இராம்களின் ஏஜன்டுகளாக விளங்கும் மாலன்களுக்கும், ராஜீவ் கொலையில் சகோதரர்களாக ஆகிக் கொள்ளும் பார்ப்பன இந்தியர்களுக்கும் அதோடு சேர்த்து இலங்கைத்தமிழரின் வாழ்வையும் அரசியல் உரிமையையும் கொலைசெய்ய நிற்கும் எந்த சக்திக்கும் முக்கியம்.


விளக்கமான பதிவுக்கு மிக்க நன்றி

Sri Rangan said...

இரமணி,மாலனின் இந்தப் பார்வை குறித்து எழுதுவதற்காகவும் அதை ஆதார பூர்வமாக எடுத்து வைக்கவும் யோசித்தபோது நீங்கள் மிக வேகமாகவொரு பயனுள்ள கட்டுரையைத் தந்துள்ளீர்கள்.ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு அரசியல் மாணவனுக்கு இந்தப் பிரச்சனையின்(மலையக மக்களுக்கான குடியுரிமை நீக்கம்)முக்கிய கூறு மாலன் போற்றும் இந்தியத் தேசத்தினது சதியென்பதையும்,அதற்கான காரணம் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தனது கைகளுக்குள் வைத்திருந்து தமிழரை கருவறுக்கவுமான பிராந்தியப் புவிகோளரசியலின் பிரதிபலிப்பு-அபிலாசை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.இலங்கையின் இடதுசாரிகளின் வரலாற்றில்,அவர்கள் செய்த மாபெரும் துரோகம் மலையமக்களை "இந்தியாவின் விஸ்தரிப்புக்கு உழைக்கும் கைக் கூலிகள்"என்று காட்டிக் கொடுத்தது.அன்றைக்கே மார்க்சியப் பார்வையற்ற இந்த இடதுசாரிகள் சிங்களப் பூர்ஷ்சுவாக்களின் கைகளைப் பலப்படுத்தியதன் விளைவு இன்றைக்கும் சிங்களப் பாசிசத்தைக் காப்பதற்குத் துணைபோனபடி.1949இல் கொண்டுவரப்பட்ட பிராஜவுரிமைச்சட்டம் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் முழு நிறைவுகண்டது.இவ்வொப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்கு நடந்தேறிய அரசியல் கூட்டுக்கள்,டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்,கூட்டரசாங்கத்தில் பங்குகொண்ட தமிழ் அரசியல் வாதிகளின் பதவி ஆசைகள்,அவர்களுக்கு இந்தியா ஆசைகாட்டிய முறைமைகள் யாவுந்தாம் காரணமாகிறது.

இதிலிருந்த நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.


1949 இல் கொணரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் 10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காகவும்,பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்பதற்காவும் அன்று அக்கட்சியைவிட்டு வெளியேறிய செல்வா, தமிழரசுக்கட்சியை அவரது சகாக்களுடன் அமைத்தபோது உண்மையில் அக்கட்சி மாபெரும் இயக்கமாக மாறியது.மாலன் சொல்வதுபோல மக்கள் ஆதரவற்றதல்ல.ஆனால், அக்கட்சி 1965 ஆம் அண்டில் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததே அங்கேதாம் தவறும்,அரசியல் வெகுளித்தனமும் தொடங்குகிறது.அன்றைக்குத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியாக எம்.திருச்செல்வமும்,தமிழ்க்காங்கிரசு சார்பில் எம்.சிவசிதம்பரமும் சபாநாயகராக இருந்து நமது தலையில் நெருப்பை அள்ளிப்போட்டது உண்மை.இங்கேதாம் உங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அனைத்து விசயமும் பொருள்கொள்ளுந்தரணத்தை எடுக்கிறது.தமிழ்பேசும் மக்கள் எப்போதும்போலவே நடாற்றில் கிடக்க,இந்தத் தலைமைகள் வழமையாக மக்களைக் குட்டிச் சுவராக்கினார்கள்.இங்கே, இனவுணர்வென்பது ஓட்டுக்காகவே தவிர உரிமையை வென்றெடுப்பதற்கானதல்ல.இதுள் பாதிக்கப்படுவது மலையக மக்களாக இருந்தாலென்ன இலங்கைப் பூர்வீகத்தமிழரென்று குறிப்பிடும் மக்களாக இருந்தாலென்ன-எல்லோரும் ஒரு நிலமைக்குள்தாம் அன்று இருந்தார்கள்.மாறி மாறி ஆசிட்சிப்பீடம் ஏறும் அரசுகளோடு இந்தத் தலைமைகள்(தொண்டைமான் உட்பட)கூட்டுவைத்துத் தத்தமது பதவிகளை காத்ததென்பது இந்த அமைப்பில் மிகச் சாதரணமானது.ஏனெனில்,இத்தகைய தலைமைகளில் எவர் மக்கள் நலனில் அக்கறையோடு-மக்களுக்காக அரசியல் செய்கிறார்கள்?

இன்றைய இந்தியாவில் 237 மில்லியன்கள் மக்கள் நடுத்தெருவில் காலம் தள்ள-தீண்டத்தகாதவர்களாக இருத்திவைக்கப்பட்டுச் சுரண்டப்படும்போதும்,அந்த மக்களைக் காவு கொள்ளும் அரசியலானது அரசியல்வாதிகளைக் கோடிஸ்வரர்களாக்கியுள்ளது.இது எப்படிச் சாத்தியமாகிறது?ஏனிந்த மக்களுக்கு வாழ்வாதாரவுரிமை இந்தியாவில் கிடையாது? இந்தியக் குடியுரிமை இருந்துவிட்டால் சகலதும் சரியாகிவிடுமா?அல்லது கூட்டாக"ஜன கண மண்ணாங்கட்டி..."பாடினால் இந்தியர்களாகிவிட முடியுமா?மனிதர்களைக் கூறுபோட்டுக் கொல்லும் ஒரு சாதி அரசியலுக்கும்,அந்த அரசியலால் எழுந்த சட்ட நிர்ணயங்களுக்கும் இவற்றால் பாதுகாக்கப்படும் இந்திய பொருளாதாரத்துக்கும் எந்த மக்கள் நலனும் கிடையாது.இதை இலங்கை அரசியலுக்குள்ளும் பொருத்திப் பார்க்குமிடத்தில் "துரோகம்"குறித்த குழப்பம் நீங்கி,மக்கள் நலனோடு முன்னெடுக்கும் அரசியல்-அமைப்புகள் விருத்தியாகும் அவசியம் புலப்படும்.இதைவிட்டு யாழ்ப்பாணத்தான் துரோகமென்ற மொன்னைத்தனமான விவாதம் உருப்புடியாக எதையுஞ் செய்யாது.மாறாக,இன்னும் காழ்ப்புணர்வைக் கொட்டி இந்திய இலங்கை அரசுகளுக்குச் சேவை செய்வதில் உச்சம் பெறும்.

அற்புதன் said...

பெயரிலி,

மிக நேர்த்தியான கட்டுடைப்பு.
தொடரட்டும் உங்கள் பணி.
மிகத் தேவையானதும் அவசியமானதுமான ஆவணப்படுத்தல்.
அன்றைய நேரு முதல் இன்றைய மன் மோகன் சிங் வரை கஸ்டப்படும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்காக எதைச் செய்திருக்கிறார்கள்?

இவர்களுக்கு தமிழர் ஒற்றுமையை, போராட்டத்தைக் கூறு போட மட்டும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் வேண்டும்.அவர்கள் படும் அல்லலை தீர்க்க என்றாவது இவர்கள் எதாவது செய்திருக்கிறார்களா? குறைந்த பட்சம் இது பற்றி சிறிலங்கா அரசிடம் கேள்வியாவது கேட்டிருக்கிறார்களா?

-/பெயரிலி. said...

வவ்வால்,
முன்னாலே எல்லாம் blogger இன் பழைய அமைப்பிலே நீண்ட தலைப்பு இடுகையைத் தின்று விடுவதால், சுருக்கமாக, 'புலம்', 'கணம்' என்றெல்லாம் தலைப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், கவர்ச்சியில்லாத தலைப்பாகிப் போனதால், என்ன "சண்டை" போட்டாலும், பதிவு சூடாகுவதாகத் தெரியவில்லை. அதனாலேயே தலைப்பிலேயே விடயமிருக்கின்றதெனப் புரிந்துகொண்டேன்.

மாலன் அவர்களின் கருத்துகளும் பட்டறையை விட்டு அப்பாலே போய்விட்டன; அதற்கான என் பதில்களும் கேள்விகளும் அப்படியே ஆகிவிட்டன. இப்போதைய பின்னூட்டங்களிலும் இடுகைகளிலும் மாலனின் பட்டறைப்பேச்சு குறித்து எதுவுமேயில்லை. அதனால், அதன்மேலான (வி)வாதங்கள் எனக்கு - மாலனின் வாதங்களை மறுதலிக்கப் பயனானபோதுங்கூட பட்டறைக்குப் பயனற்றதாகும் என்பதைச் சுட்ட விரும்பினேன். அதனாலேயே இங்கே சரியாக, "உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு இன்னும் தொடரும் பட்டறைக்குப் பயனற்ற விவாதம்" என்று சிந்தாநதியின் இடுகையிலே பின்னூட்டம் இட்ட தலைப்பிலேயே போடவிரும்பினேன். ஆனால், பட்டறைக்குச் சம்பந்தமில்லையென்று தலைப்பிலே போட்டால், அதுவே பட்டறையை இழுத்துவிடுமென்பதாலே, பட்டறையைத் தலைப்பிலேயிருந்து கழற்றிவிட்டேன்.

நீங்கள் உங்களின் பின்னாலே அற்புதன், சசி ஆகியோரின் பதிவுகளிலே இட்ட பின்னூட்டங்களைக் குறித்துத்தான் சூடுபட்டதுபற்றிச் சொல்லியிருக்கின்றீர்களென்று நம்புகிறேன். பதிவுகளிலே, பின்னூட்டங்களிலே முற்பாதுகாப்பாக இருப்பது என் வழக்கம். நீங்கள் வவ்வால் என்ற பெயரிலே எழுதும்போது, உங்கள் வாலெது நீங்கள் எவாள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், ஆங்காங்கே மாலனிடம் பட்டறையிலே நடந்ததுபற்றிக் கேட்பவர்கள் பட்டறைக்கெதிரானது எதிரானவர்கள் என்பதுபோல ஓரிருவர் சொன்னதாகப் பட்டதாலேயே உங்களுடனும் அதே எச்சரிக்கையுடன் என் பதில்கள் சசி, அற்புதனின் பதிவுகளிலே வந்தன. தனிப்பட்ட உங்களைச் சுடவேண்டுமென்று எண்ண உங்களை எனக்குத் தெரியாது. தவறான முன்னெச்சரிக்கையென்றால், மன்னிக்கவேண்டும்

வவ்வால் said...

பெயரிலி,

நான் நினைப்பதை சொல்லிவிடுவேன், பின்னர் கவனிக்கையில் தவறாக கூட போய்விடுகிறது என்பதால் தான் அந்த முன்னெச்சரிக்கை தற்போது தான் அதுவும் , மற்றபடி அடுத்தவர் சுடுவார்கள் என்பதை விட என்வார்த்தைகள் தான் என்னை சுடும் என நம்புகிறேன். அற்புதன் ,சசி போன்றோர் மீது எனக்கும் தனிப்பட்ட மனத்தாங்கல் ஏதும் இல்லை, அங்கே பேசப்பட்ட கருத்து , அது சொன்ன விதம் தான் எதிர்வினை செய்ய தூண்டியது , மற்றபடி யாருக்கும் ஆதரவு அளிக்க அல்ல!

உங்கள் பதிவில் அவ்வளவாக பின்னூட்டம் இடவில்லை காரணம் படித்து அதன் சாரம் மனதில் பதியவே நேரம் எடுக்கிறது மிக ... மிக பெரிய பதிவு(அவ்வப்போது தம் கட்டிப்படித்து வருகிறேன்) . அதற்கான தரவுகளோ அதிகம்! கொஞ்சம் சின்னப்பதிவா போடுங்கள் :-))

சின்னக்குட்டி said...

அப்பொழுது தேயிலைத் தோட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்டு ஒருவன் வந்தான். பறைச்சேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது
இந்திய தோட்டத்தில் லயத்தில் தமிழ் நாட்டின் தாழ்த்தப்பட்டவக்களே அதிகமாக அழைத்து வரப்பட்டனர்

வர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம். இந்த உண்மையைப் பிரிட்டிஷ்காரர் மட்டிலும் தெரிந்துகொண்டிருக்கவில்லை; கொழும்புப் பிள்ளைமாரும் தெரிந்து கொண்டிருந்தனர். ராணுவ பலத்தைப் பொறுத்தவரையில் யானைக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்பொழுது அதன்மீது ஊரும் எறும்புக்கும் அது கிடைக்கும் அல்லவா? அதனால் வெள்ளைக்காரனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பில் தம் நம்பிக்கையைப் போட்டுவிட்டு

கொழும்பிலும் கொழும்பை அண்டிய பகுதியில் வியாபரத்திலும் அரச மட்டத்தில் சேவகம் செய்பவர்களாக தமிழ் நாட்டின் இடை நிலை உயர்நிலை சாதி உள்ளவர்களே வந்துள்ளார்கள்

உண்மையில் லயத்தில் இருந்து வேலை செய்த தோட்ட தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தமையால் அவர்களின் நலன்களில் இந்திய அதிகார வர்க்கம் அக்கறை எடுக்கவல்லை

ஆனால் 83 கலவரத்தில் இந்திய உயர்சாதியனர் நலன்கள் கொழும்பில் பாதிக்க படக்கூடாது என்பதில் இந்திய அதிகார வர்க்கம் மிக கவனமாக இருந்தது.


மேலும் தடித்த எழுத்துள்ள மேற்கோள்கள் புதுமைபித்தன் கதைகளில் எடுக்கப்பட்டது

கொண்டோடி said...

அப்பாத்துரை வினாயகமூர்த்தி சுட்டுக்கொல்லப்படவில்லை.
ஜிஜி பொன்னம்பலத்தின் மகன் குமார் பொன்னம்பலம், அவர்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொண்டோடி said...

ஒன்றைக் கவனித்தீர்களா பெயரிலி,

பிரமிள் ஈழத்தவராகவே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டார். இதுவரை அறியாதவர்களுக்கும் மாலன் சார் மூலமாக தெளிவாகத் தெரிந்துவிடும்

நீங்கள் என்னதான் கூப்பாடு போட்டு, 'பிரமிள் திருகோணமலைக்காரர், உங்கள் தெருக்காரர்' என்று கத்தினாலும் எங்களைப்போல நாலைஞ்சுபேர் தான் அதைத் தெரிஞ்சு வச்சிருந்தோம்.
இப்ப மாலன் சார் அதையும் இலவச விளம்பரமாகவே செய்திட்டார்.

சிவசேகரத்தாரின்ர இந்தியா பற்றின கருத்துக்கள், குறிப்பாக - இந்தியா 'ஈழத்தவருக்கு உதவ வேணும் தலையிட வேணும்' எண்ட கூக்குரல்கள் கேக்கும்போதெல்லாம் சிவசேகரத்தார் எழுதின பத்திகள் எல்லாத்தையும் எடுத்துப்போட்டு ஒரு குழம்பு வைச்சுக் குடுக்கலாம். அந்தாள் அளவுக்கு தற்போது வெகுசன ஊடகங்களில் வெளிப்படையாக எதிர்த்து எழுதுபவர் இல்லையென்று நினைக்கிறேன்.

✪சிந்தாநதி said...

இந்தப் பதிவை இப்போ தான் பார்த்தேன். நேற்று கொஞ்சம் வேலையாக இருந்ததிலே எப்படியோ தவற விட்டிருக்கிறேன்.

இதுவெல்லாம் பயனற்றவிவாதங்களென்று நான் சொல்ல மாட்டேன்;)

தலைப்புக்கான காப்பிரைட் எனக்குத் தானே?;)

Sri Rangan said...

கொண்டோடி,நீங்கள் பிரேமிள்-தர்மு சிவராம் குறித்துத் தப்பான எண்ணத்தோடு இருக்கிறீர்கள்.அவரை மாலன் அறிமுகப்படுத்தும் நிலையில்... அவர் உலகத்தைத் தெரியாமல் இருப்பதென்பது வாசிப்பு அநுபவம் அற்றவர்களிடம் வேண்டுமானால் இருக்கலாம்.பிரேமிள் தமிழிலக்கியத்தின் உச்சத்தைத் தொட்ட கவிஞன்-கதாசிரியன்.

படைப்பின் வர்க்க நிலையில் முரண்படுவேனேதவிர அவனது படைப்பாற்றிலின்மீதல்ல!

அவ்வளவுக்கு இலக்கியப் பரிச்சியமுடைய அனைவருக்கும் தெரிந்த ஆளுமுடைய படைப்பாளியைச் மாலன் அறிமுகப்படுத்துவது-பிரபலப்படுத்துவது...


தமிழில் எப்படிக் கதை சொல்வதென்பதற்கு அவனது சிறுகதைகளைப் பாடமாக வைக்கமுடியும்.அவ்வளவு பெரியவொரு படைப்பாளி பிரேமிள்!

புதிய தலைமுறைக்குப் படிப்பனுவம் என்பது கசப்பானதாக இருப்பதால்-ஆங்கிலப் புதினங்களைப்படிப்பதால் அவரைத் தெரியாதிருக்கலாம்.ஆனால், தமிழ் இலக்கியத்துள் எப்படியொரு சுந்தர ராமசாமிக்கு இடமுண்டோ அதைவிடப் பன்மடங்கு பிரேமிளுக்கு உண்டு.படிமக் கவிதையின் நாயகன்(தமிழில்)அவன்.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், அற்புதன், சின்னக்குட்டி தரவு சேர்க்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி.

கொண்டோடி(யோ? கொழுவியோ?),
நான் செய்த கொலைப்பாவத்திலிருந்து மீட்டதற்கு நன்றி :-) என் அவரச அவசரச்செருகலின் சறுகல் :-(

சிந்தாநதி,
பாதி உங்களுக்கு மீதி எனக்கு :-)

வவ்வால்,
சின்னப்பதிவென்றுதான் தொடங்குவேன்...பதியப் பதிய படியாமலே போய்விடுகிறது :-(

மலைநாடான் said...

இன்னும் வரும்தானே..? :)

// நீங்கள் என்னதான் கூப்பாடு போட்டு, 'பிரமிள் திருகோணமலைக்காரர், உங்கள் தெருக்காரர்' என்று கத்தினாலும் எங்களைப்போல நாலைஞ்சுபேர் தான் அதைத் தெரிஞ்சு வச்சிருந்தோம்.
இப்ப மாலன் சார் அதையும் இலவச விளம்பரமாகவே செய்திட்டார்//

அடிடா சக்கையென்டானாம்..:)

Anonymous said...

I truly loved this brilliant article. Please continue this awesome work. Regards, Duyq.