Wednesday, May 02, 2018

சத்தி -1

இப்ப மார்க்ஸ், தலித், தமிழ், சமயம், பெட்டை, சட்டை, குட்டை, மட்டை, கொட்டை என்றில்லாமல் இதுதான் எல்லாத்திசைகளிலும் புரட்சி பஷன்!  
பட்ட பனைமரத்தைத் தறிக்கவேண்டுமா வேண்டாமா என்ற வாதம் வந்தால், எனக்கும் ஒரு கருத்துண்டு என்று பாய்ந்து பட்டபனைமரத்தை அப்படியே குத்த நிற்கவைத்துப்போட்டு, எங்களின் வேலிச்சண்டைப்பக்கத்துவளவுக்காரரின் வீட்டுத்தென்னைமரத்தாலேதான் பனைமரத்திலே பிரச்சனை என்பதாகி, தென்னைமரத்தை வெட்டு, பனைமரம் துளிர்க்குமென்ற அறிவுபூர்வமான கருத்தினை தாளக்கட்டுப்பின்பாட்டுக்காரருடன் முன்வைப்பது. அதிகம் பேர் தாளம் தட்டினால், அத்தாளலயநாட்டியமானது ஜனநாயகம் எனப்படும். ஆகவே, தென்னையின் மண்டையிலே போட்டுவிட்டுப் போய்விட, பனை துளிர்க்கும்.
"மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு ஓட்டுப்போடாதீர்கள்!" என்ற 'துக்ளக்' சோவின் நக்கலை மெய்யாக்கிவிடுவோம் என்ற மகாநோக்குடன் தத்துவசிகாமணிகள், வெள்ளைவேட்டியிலும் செஞ்சட்டையிலும் மஞ்சட்சீவரத்துடனும் காவிகாற்சட்டையிலும் கறுப்புமுகமூடியிலும் நாயாய்ப் பேயாய் எல்லாப்பிறவியும் எடுத்துளைந்து சொல்லேரும் வரிச்சம்மட்டியும் கொண்டு அலைகின்றார்கள்!
~~~~~
கலந்து கட்டியோ கட்டாமலோ எழுதுவதோடு எழுத்தாளனின் பணி முடிந்துவிடுகின்றது; கட்டியை வெடிக்கவைப்பது அவர்தம் கடமையில்லை நாம் வாழும் யுகத்திலே! அவர் போட்டதிலே சொல் எடுப்பதும் வரி கோர்ப்பதும் தொடுப்புக்காரர் ௸ ஶ்ரீமான் உங்கள் கடமை! கீறிட்ட இடங்களை நிரப்பத் தமிழ்ப்பாடத்திலும் ஒன்று-பல, பல-ஒன்று, பல-பல தொடுப்புகளைக் கணித பாடத்திலும் எதுக்காக உங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள் என்கிறீர்கள்? தொழிற்கல்வி கற்பதற்கா? வாழ்வை ஆற்றுவழிப்படுத்துவதுக்கா? இல்லையே! இப்படியான, மொட்டாக்குக்கும் பூணூலுக்கும் முடிச்சுப்போட இடம் வைத்துவிட்டு, "நியாயம் கோருகிறோம் நாங்கள்! கேரிக்கொண்டே கருத்தைக் கோருங்கோடா நீங்களே!" என்று போகின்ற நிலையிலே, பயன்படுத்தத்தானே?
வருங்காலத்திலே நாம் வந்த நாட்டிலே தேநீர்க்கடையிலே கிட்டுவதுபோல, சொற்களை மட்டும் உங்கள் கணணிக்கு பேராசான்களும் ஜக்கிசான்களும் அறிவுசீவிகளும் ஆறாதசீவுளிகளும் அமுசடக்கமாய் அனுப்பிவிடுவார்கள். நீங்கள்தாம் சொந்தமாக உங்களுக்குத் தேவையான அளவிலே விதத்திலே உங்களுக்கிருக்கக்கூடிய, இருக்கும் சீனிவியாதிக்கேற்ப, நாவின் சுவைக்கேற்ப, தேநீர்க்கட்டுரை, கதை, கவிதையை அளவாகவெடுத்துக் கலக்கோ கலக்கென்று சமைத்துக்கொள்ளவேணும்; அதையும் வச்சு சமூகத்தின் விழிப்புக்கும் விடு-தலைக்குமாய்க் கொன்னிக் கொன்னி விவா-திக்க வேணும் 
~~~~~~~
இத்தனைக்குள்ளும் நாலுநாட்களுக்கு முன்னால், ஒரே நாளிலே இரண்டு பேஸ்புக் பகிர்வுகள்; ஒன்று நித்திரையால் எழும்ப மூஞ்சியிலே; இன்னொன்று நித்திரைக்குப் போகமுன்னால், மூஞ்சிலை; முதலாவது சூடான மாட்டுமூத்திரத்தின் மஹாகுணாம்சயங்களை வீச்சமாய் அடித்து வேலைநாளைக் கெடுத்தது; மற்றது இன்னும் சூடான ஒட்டகமூத்திரத்தின் உன்னதகாவியங்களை வீச்சமாய் அடித்து நித்திரையைக் கெடுத்தது. விலங்குதான் வேறென்றாலுங்கூட, இந்த காலத்தை வென்ற மதவிஞ்ஞானிகள் பேசாமல், என்னை மொராஜ்ஜி கோலாவுக்கே வாக்கைப் போடவைக்க மும்முரமாக நிற்பதாகத் தெரிகின்றது.

சரி விடுவோம்! இதென்ன பெரிய மன்னன் சொலமனுக்குப் பிள்ளை பிரிக்க வந்த பெரும் பிரச்சனையா என்ன? "பாலையரபு ஒட்டகமா, அகண்ட்பாரதமாடா திருகோணமலையிலே முட்டுகின்றது பிரச்சனை?" என்று தோழர் கலை மார்க்ஸிடம் கேட்டால், அத்தனைக்கும் காரணம் தமிழ்த்தேசியமென்று தெளிவான காரணத்தை மாசேதுங் காண்டத்தைக் கிளியெடுக்க வாசிச்சுச் சொல்லிவிட்டுப்போகிறார். மாட்டுக்கும் ஒட்டகத்துக்கும் மாசேதுமில்லை நம்காலத்து மாசேதுங்கிருக்கும்வரை! செவ்வணக்கம் தோழர்களே! மே ஒன்றிலாவது எம் மாறாக்கோஷக்கிளிக்குப் புதுச்சொற்கள் கொஞ்சம் சொல்லிக் கொடுப்போமாக!
ஒட்டகமும் மாடும் கட்டிப்பிடிச்சு ஒரே இலக்கிலை காதல் பண்ணுவதைக் கண்டவர் விண்டார்! ஆனால், ஆர் கண்டார்? சரி வேண்டாம்! வழக்கம்போல, கிளியை விட்டுவிடுவோம்! கிளையை முறி! அடி ஒரு பிடி அம்பு லோஞ்சரிலை வச்சு!
"வாருங்கள் பாபிகளே! கேளுங்கள். மார்க்ஸும் அம்பேத்காரும் சொன்னதாவது, திருகோணம........"

No comments: