Wednesday, October 14, 2015

தண்ணிக் கை சப்பை

ஓர் அரசுசார்ந்த குழு என்பது நடுநிலையான, ஒழுக்கக்கோவையின் அடிபப்டையிலே, தொழில்சார்நெறியுடன் தொழிற்படவேண்டியது.
"போர்க்களத்திலே ஒரு பூ" என்ற படத்தினை எஸ். வி. சேகர் உள்ளடங்கிய தணிக்கைக்குழு "பெண்களுக்கு எதிரான பலர் உள்ளடங்கிய வன்முறை", "தாய்நாட்டுக்கோ அதன் நட்புநாட்டுக்கோ எதிரான கருத்துகள்:" என்பதன் அடிப்படையிலே தடை செய்தது (ஆதாரம்: எஸ். வி. சேகரின் ஊடகங்களுக்கான செவ்வி http://www.tamilwin.com/show-RUmtyJSZSVju2G.html
இயக்குநரின் செவ்வி: https://www.youtube.com/watch?v=H6CZr8ZMX4o ).
அதன் பின்னால், இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் 'போர்க்களத்திலே ஒரு பூ' இயக்குநர் கணேசனுக்குமான முரண்பாடு குடும்பத்தினரின் எதிர்ப்புக்கும் மாறாக கணேசன் படத்தினைத் தந்ததாக வெளிவந்த செய்தியிலிருந்தது.
(ஆதாரம்: https://www.youtube.com/watch?v=UubHl3jb8X0&feature=youtu.be )
இதிலே இரண்டாவது செய்தியை மட்டும் நாராயணமூர்த்தி தன் பேஸ்புக் செய்தியாக இட்டிருந்தார். அதிலே, அப்படத்தினைத் தடைசெய்த தணிக்கைக்குழு உறுப்பினர் எஸ். வி. சேகர் வந்து, என்று கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார். ( ஆதாரம்: https://www.facebook.com/moorthy.n.moo…/…/10153695975977490…{%22tn%22%3A%22R%22 }
ஒரு செய்தியை, தகவலை சட்டரீதியாகச் சம்பந்தப்படாதவர்கள் பகிரங்கமாக விமர்சிப்பது என்பது ஒரு விடயம், சட்டரீதியாக/தொழில்சார் ஒழுக்காற்றின்கீழே செயற்படவேண்டிய ஓர் அதிகாரி வந்து தன் தொழில்சார்ந்த எல்லைக்கு அப்பாலே இறங்கித் தனிப்பட விமர்சிப்பது என்பது வேறு. இரண்டாவது நிலை, சம்பந்தபப்ட்ட பாதிக்கப்பட்டவர் என்று தன்னைக் கருதக்கூடிய பட இயக்குநர் இப்படியான தனிப்பட்ட உணர்வு அடிப்படையிலே பகிரங்கமாக சமூகவலைத்தளங்களிலே கருத்து வெளியிடும் (ஆதாரம்: https://www.facebook.com/sve.shekher/posts/10153194966697496 ) தணிக்கை அதிகாரி அப்படியான தனிப்பட்ட அடிப்படையிலேயே தன்னைத் தடைசெய்ததாகச் சொல்லச் சட்டரீதியான வழக்குத்தாக்குதலுக்கு வழிவகுக்காதா?
தணிக்கைக்குழு அதிகாரிக்கு/உறுப்பினருக்குத் தனிப்பட்டவராகக் கருத்துகள் இருக்கும்; அதை மறுக்கமுடியாது. ஆனால், தனது அரசுக்குழுவின் செயற்பாடு சம்பந்தப்பட்ட சிக்கலிலே, வெளிப்படையாக வந்து, எடுக்கப்பட்ட தீர்வுக்குச் சொல்லப்பட்ட குழுவின் வரைமுறைக்கு அப்பாற்பட்ட கருத்துகளை உணர்வு அடிப்படையிலே பகிர்வது, அவ்வரசுக்குழுவின் நோக்கத்தினையும் செயற்பாடுகளையும் களங்கம் கொண்டவை என்று காட்டுவதாகாதா? இப்படியான உளநிலையிலேயே இத்தணிக்கைக்குழு செயற்பட்டிருக்குமானால், இத்தணிக்கைக்குழுவின் தொழில்சார்நெறி என்ன? இப்படியான செயற்பாடு, தணிக்கைக்குழுவின் இறைமையினைக் கேள்விக்குறிக்காக்காதா?
இயக்குநர் இசைப்பிரியா குடும்பத்துக்கு இழைத்தது சரியா என்பதும் 'போர்க்களத்திலே ஒரு பூ' இந்திய தணிக்கைச்சட்டத்தின்கீழே தடைசெய்யப்படச் சொல்லப்பட்ட காரணங்கள் நியாயமானவைதானா என்பதுவும் அல்ல இத்தாலே பேசப்பட்டவை.
ஒரு தணிக்கைக்குழுவின் தலைவர் சமூகவலைத்தளத்திலே தன் தணிக்கைக்குழு சார்ந்த தீர்ப்புக்குமப்பால், தனிப்பட்ட அளவிலே பாதிக்கப்பட்டதாகத் தன்னைச் சொல்லும் இயக்குநர் குறித்த கருத்துகளைப் பரப்புதல் தொழில்நெறிக்கு முரணானதும் சம்பந்தப்பட்ட தணிக்கைக்குழுவின் இறைமைக்குக் குந்தகம் விளைவிப்பதும் ஆகாதா? இதனையே சம்பந்தப்பட்ட இயக்குநர் சுட்டிக்காட்டி வழக்குத் தொடரவோ, குறைந்தளவு (கருத்துக்கூறிய தணிக்கைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்காத) மாற்றுத்தணிக்கைக்குழுவினைத் தன் படத்தினை மீளப்பரிசீலனை செய்யக்கேட்கவோ வழிவகுக்காதா?

No comments: