Tuesday, December 30, 2008

தொ. மு. சிதம்பர ரகுநாதனின் "ஞானமணிப்பதிப்பகம்" இலிருந்து...

அள்ளல்

"..மெசர்ஸ் ஞானமணி லிமிடெட் கம்பெனியார் ஞானமணிப்பதிப்பகத்தைத் தொடங்கி வைத்தது, தமிழ் இலக்கிய உலகில் தாங்கள் ஒரு 'பாட்லி ஹெட்'டாகவோ, 'ஹாடர் அண் ஸ்டாட்ட'னாகவோ விளங்கி தமிழ் இலக்கியத்தை உத்தாரணம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடோ, அல்லது தமிழ்நாட்டில் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து 'இலக்கிய சேவை' செய்துவரும் சிருஷ்டிகர்த்தாக்களுக்குத் தாங்கள் ஒரு வெண்ணெய்நல்லூர் வள்ளலாக விளங்கவேண்டும் என்ற காரணத்தோடோ அல்ல; தங்களது அச்சகத்து மூலையில் வேலையற்றுக் கிடக்கும் மெஷினுக்கு ஒரு வேலை கொடுக்கவும், பெருவாரியான உற்பத்திப்பெருக்கத்தில் கழிவு விழும் பொருள்களிலிருந்து உபரிச்சரக்கு உண்டாக்குவதுபோல், தங்கள் பத்ரிகாலயத்துக்குச் செலவழிந்தது போக, மீதமுள்ள துண்டுப் பத்ரிகைக் காகிதங்களை மூலையிலே வெறுங்குப்பையாகக் கிடக்கவிடாமல் தமிழரின் தலையில் அச்சடித்த 'குப்பை'யாக்கிக் கொட்டவும், அப்படிக் கொட்டுவதன் மூலம் தமது பாங்குக் கணக்கில் ஒன்றிரண்டு சைபர்கள் கூடுதலாகச் சேர்க்கவும் செய்த வியாபாரத் தந்திரமே தவிர வேறல்ல....

ஞானமணிக் கம்பெனி டைரக்டர்களுக்குத் தமிழில் எந்தவிதப் பரிச்சயமோ அபிமானமோ இல்லாவிட்டாலும், பொருள் வருவாயையும் புகழையும் முன்னிட்டு, 'தேசபக்தி', 'காந்தீயம்' போன்ற சர்வஜனரஞ்சக லேபிள்களோடு பத்ரிகைத்தொழிலில் இறங்கினர்..."

No comments: