Friday, December 31, 2004

புலம்

உணர்ந்ததை உரைக்கிறேன்

கடந்த ஒரு கிழமையாக எனக்கு நேரே இளைய தம்பி திருகோணமலை சமூக-பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு (SEDOT) ஊடாகவும் மருத்துவராகவும் பெற்ற அனுபவத்தினைச் சொல்ல, அதிலே நான் கிரகித்துக்கொண்டது கீழுள்ளவற்றிலே அடங்கும். ஏற்கனவே செய்தியூடகங்களிலும் மற்றைய நண்பர்கள் அறிந்து எழுதியவற்றினையும் நான் அறிந்த அளவிலே சொன்னது சொல்லல் வேண்டாததாலே தவிர்த்திருக்கின்றேன். இக்கருத்துகள் நான் புரிந்து கொண்டவை சரியானால், என் தம்பியின் தனிப்பட்ட அவதானிப்புகளின் விளைவானவையேயொழிய SEDOT இன் கருத்துகளையோ அவன் தொழில்புரியும் திருகோணமலை ஆதாரவைத்தியசாலையின் கருத்துகளையோ பிரதிபலிப்பனவல்ல. அதனாலே, தகவலைச் சொல்லும் விதத்திலே கொஞ்சம் தனிப்பட்டதான தொனிகூட இருக்கக்கூடும்.

No comments: