Thursday, March 13, 2014

அண்ணாவைக் கேட்ட சிறுமியும் கடத்தப்பட்டாள்

அண்ணாவைக் கேட்ட சிறுமியும் கடத்தப்பட்டாள்

இம்முறையும் மறக்காமல்
"காணாமற்போனவர்கள் பற்றி என்ன செய்கிறாய்?"
-கேட்கிறார்கள்.
இதுவரைநாள், தொடராய்த்
துன்பக்கதை எழுதுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இன்று
கதை எழுதுவதை நிறுத்தி, துண்டுத்
துயர்கவிதை எழுதத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறேன்.

காணாதாரைக் கண்டாரும்
காணாமற்போங்காலத்தின்
ஒருகாலை, துயர்
கவிதையும் குமிழாய்
குப்பென்றொரு வெப்ப ஊதலில்
பட்டென்று வட்டமுடைந்து
தொலைந்துபோகலாம்,
யார் கண்டார்?

1 comment:

Anonymous said...

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட பெண் பூஸா முகாமில் அடைப்பு

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140314_tnaconcern.shtml