செய்தி: கடாபி இறந்திருக்கலாம்
எழுபதுகளின் மத்தியிலே இலங்கையிலே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசின்போது நிகழ்ந்த அணிசேராநாடுகளின்(?) உச்சிமகாநாட்டுக்கு கடாபி வந்தபோதே முதலிலே அவர் பற்றிய எனது பதிதல்; அந்நேரத்திலே பிடல் காஸ்ரோவினைப்போல இவரும் வெகுகாலம் வல்லரசுகளுக்கு அடிபணியாத போராளியாக என்னுள்ளே ஒரு படம். ஆனால், கடைசிக்காலத்திலே ஸ்ரீலங்கா அரசின் எதேச்சதிகார அரசின் செயற்பாடுகளுக்கு விமர்சனமின்றி, "பயங்கரவாதத்தினை ஒழிப்பதாக/ஒழித்ததாக" அறிக்கைவிட்டபோது, காஸ்ட்ரோ, சவாஷ் போன்றோருடன் இவர் குறித்த மரியாதையும் மண்ணாகிப்போனது. ஆனாலும், இலிபியாவின் உள்நாட்டுப்போரிலே மேற்குநாடுகள்மட்டும் நேர்மையானவையாக நடந்துகொள்ளவில்லை.இலிபியாவுக்கும் பஹ்ரேயினுக்கும் அரசுகளைப் பார்த்தால் என்னளவிலே பெருமளவிலே வேறுபாடிருந்ததாகத் தெரியவில்லை; ஆனால், மேற்குநாடுகள், பஹ்ரேன் அரசின் வன்கைகளைக் கண்டுகொள்ளாமல், இலிபியாவிலேமட்டும் "மக்கள்குரல்" எழட்டுமென்பது, தமக்கான இரட்டை அரசியல்நிலைப்பாடுமட்டுமே
not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Showing posts with label புலம். Show all posts
Showing posts with label புலம். Show all posts
Thursday, October 20, 2011
Saturday, October 15, 2011
சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்
தமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதிலும்விட அதிகமே கலந்திருக்கும். இலங்கையிலே தமிழ்.எதிர்.வடமொழி முரண், தமிழ்நாட்டிலிருந்ததுபோல, என்றுமே மேலோங்கியிருக்கவில்லை. உள்நாட்டிலே வடமொழி ஆதிக்கத்தினதோ அடக்குமுறையினதோ கூறாகக் காணப்பட வேண்டியதல்லாத அரசியல்நெருக்குநிலை. அதனாலே, பெரும்தலைமுறைக்கு யாழ்ப்பாணத்தமிழிலே கலந்திருக்கும் திசைச்சொற்கள் தமிழில்லையென உறுத்தவில்லை. அவற்றின் நெருடலை உணர்ந்து கொள்ள நேரமில்லாது வேறு சிக்கல்கள். இந்நிலையிலே சாந்தி, சமாதானம், சுபீட்சம் போன்ற சொற்கள் வடமொழியின் தமிழ்ப்படுத்தலென்று தெரிந்திருக்கவில்லை. கூகுலிலே, “சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும்” தேடினால், அரசியல்வாதிமுதல், ஆண்டவர்சந்நிதி ஊடாகக் காதலின் பக்தர்கள்வரை நாட்டிலே இம்முக்கூட்டணிக்கொம்புத்தேனுக்கு அலைவது தெரியவரும். ஆனால், நாளாந்தப்பேச்சிலும் ஊடகங்களிலும் விழுந்துகொண்டேயிருப்பதைக் காண்போம். புத்தாண்டு பிறந்தால், அத்தனை கொடுமைகளும் செய்யும் அரசியல்வாதிகள் எதுவித சங்கடமுமின்றி, “இப்புத்தாண்டு நாட்டிலே சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் கூடியிருக்க” வாழ்த்துவதோடு தொடங்கக் கேட்டு, மறுநாள் குண்டுகளும் உடலங்களூம் விழ, இத்தொடர் ஒரு நக்கலான தொடராக எம்மிலே பலருக்கும் பதிந்துபோயிற்று. நாளுக்கு நாலுமுறை காதலர்க்கிடையே பிணக்கோ, தம்பதியரிடையே சண்டையோ வந்தாலும், நக்கலாக, அவர்தம் நாட்டிலே சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் கூடியிருக்க” “வாழ்த்துவது” சலித்துப்போன வழமையாகிய நிலை இக்காலகட்டம்.
இரண்டு பயங்கரநாட்களின் முன், ஒரு பயங்கரப்பதிவிலே, கொதித்துப்போன ஒரு பயங்கரத்தமிழ்ப்பதிவருக்கு, ஒரு பயங்கரமான பதிலாக “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்…. கூல்டவுன். இரத்தக்கொதிப்பு ஏறப்போகிறது” என்று பயங்கரமாகவே சொல்லி பயங்கரமாகவே விட்டேன். இன்றைக்குப் பார்த்தால், ஓரன்பரின் அஞ்சல்; அஞ்சலினை விபரிக்க நெறி இடம்கொடாது. ஆனால், உள்ளூரச்சொல்லப்பட்டிருந்தது இது:
ஜனநாயகமதப்பேச்சுச்சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என்று குற்றம் சுமத்தியவர் நாற்பத்தைந்தாண்டுகளாக எனது மொழியாகப் பழகியதினை, நாளாந்தம் நக்கலாக நான் சொல்லிய சொல்லும் வார்த்தைத்தொடரைத் தனக்குரியதென்று உரிமை கொண்டாடும் அராஜகத்தை, என் பேச்சுச்சுதந்திரமறுப்பை என்னவென்று சொல்வது! “அவர்கூறும் முகமனைக் கேலி செய்கின்றேன்” என்ற அவரது கற்பனையை அவரோடும் அவருடன் உடன்படுகின்றவர்களோடும் விட்டுவிடுகிறேன். நான் இரத்தக்கொதிப்புப்பதிவருக்குப் பகிடியாகத்தான் சொன்னேன் என்பது எத்துணை உண்மையோ அத்துணை ஈடான உண்மை, -நான் "கூல்டவுன்; இரத்தக்கொதிப்பு ஏறிவிடும்" பதில் சொல்லியபோது- இவரின் முகமன் இதுவாயிருக்கலாமென்பதும் என் மண்டைக்குள்ளே புகுந்து வரவில்லையென்பதும்.
கூகுலிலே அவர் தேடிப்பார்த்தால், முஸ்லீம்கள்மட்டுமல்ல, அகிலாண்டேஸ்வரி அம்மையாரின் பக்தர்களும் தலதா மாளிகைப்புத்தரின் புத்தாக்களும் காதலர்களும் இனமதபேதமின்றி ஒவ்வோர் இலங்கை அரசியல்வாதியுங்கூட சாந்திசமாதானி வார்த்தைக்காக என்மீது கோபம் கொள்ளவேண்டுமானால், கொள்ளலாம் என்பதாகத் தெரியவரும்.
அவரது இறைநம்பிக்கை எதுவென நான் அக்கறைப்பட அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவரின் இறைநம்பிக்கையைக் கேள்விசெய்வதோ நக்கல்செய்வதோ என் தேவைப்பைக்குள்ளோ கரிசனத்தொடுவான்எல்லைக்குள்ளோ இல்லாத மற்றும் தோன்றாத எண்ணங்கள்.
அவருக்கு(ம் அவரது நண்பர்களுக்கும்) ஏன் என்மீது இப்படியாக பொறிகொள்ளவேண்டுமென்று தோன்றுகின்றதென்பதற்கு ஒரு காரணத்தை ஊகிக்கமுடிகின்றது. விதிகளின்படி பதிவுகளை அனுமதிப்பது என்ற அடிப்படையிலே நான் செயற்பட்டதின் விளைவை இன்னமும் ஏற்றுக்கொள்ளமுடியாத படிவாகாத மனநிலையே அது. அதன் எதிர்வினையாகவே இது கிளம்பியிருக்கின்றதென்பது என் ஊகம். ஆனால், அதற்கு நானொன்றும் செய்யமுடியாது.
இப்படியாக “நீ பேசும் தாய்வட்டாரமொழிக்குச் சொந்தக்காரர் நாமே; அதை நீ இப்படித்தான் பயன்படுத்தவேண்டும்” என்றெல்லாம் சலசலப்பது முறையல்ல. நான் சொன்ன “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்” அவர்களாலே சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் அனுமதி பெற்றே நான் பயன்படுத்தவேண்டிய சொற்றொடரென்றால், அறியத்தரட்டும். தவறென ஒத்துக்கொண்டு திருத்திக்கொள்வேன். மிகுதிப்படி நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நானறியாதவர்களை எனக்குத் தோன்றாத காரணங்களுக்காக நோக்கி நோகச் செய்யுமே என்று எப்படியாகப் பேசமுடியும்! என் நண்பர் ஒருவர் ஆய்வுகூடத்திலே வடிகட்டிய மதுசாரத்தைப் பரிசுத்த ஆவி என்பார். இதை "பரிசுத்த ஆவி" என்பதற்கு மதச்சடங்குகளின் அடிப்படையிலே இன்னோர் கருத்தும் இருக்கென்று அறிந்துகொண்டே மீளமீளச் சொல்வார். எவரும் வாதாடவில்லை. இங்கே வெறுமனே இரண்டு சொற்களைத் தேடி வைத்துக்கொண்டு மதத்தைப் புண்படுத்தியதாகப் பேசுகின்றார்கள்.
ஆனால், அவர் அவருடைய முகமன் இதுவென்றால், “சாந்தியையும் சமாதானத்தையும் கூடவே சுபீட்சத்தையும்” தமிழுக்குத் திசைப்படுத்திய சமஸ்கிருதக்காரர்கள் அடுத்ததாக தங்கள் மொழியை நான் கேலி செய்வதாகக் குற்றஞ் சாட்டலாம். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.
சாந்தியையும் சமாதானத்தையும் நான் அறிந்த காலத்திலே பயன்படுத்தியதுபோல, மொழிப்பதங்களாக நான் எவ்வாறும் பயன்படுத்தலாம். வேண்டுமானால், அப்படியாகச் சொல்லும்போது, அவர்களைக் கேலிசெய்கிறேனென உணர்ந்தால், சுட்டிக்காட்டி "இவ்வாறுமிருக்கின்றது எங்களைக் கேலியா செய்கிறீர்கள்?" என்றாவது கேட்டிருக்கலாம். என்னை நோகடிக்காத எவரையும் நோகச் செய்யக்கூடாதென்று "அப்படியா! சரி இனி அப்படியாக நடக்காது" என்று சொல்லிவிட்டு நகர்ந்திருப்பேன். ஆனால், அவரின் அஞ்சலின் உட்தொனி மிரட்டுதலன்றி அப்படியாகவும் செய்யவில்லை. கேட்டிருந்தால், இக்கோணமுமிருக்கிறதேயென்பதற்காகமட்டும் சகமனிதனின் நம்பிக்கையை நோகடிப்பதாக இருக்கக்கூடாதெனச் சொல்லாமலே தவிர்த்துவிடலாம். ஆனால், இது நான் வழங்கிய வழங்கும் திசைச்சொல் உள்வாங்கிய தமிழின் கூறானதாலே, அவரின் 'பெரும்பாலான முஸ்லீம்களுக்குப் போட்டிருக்கிறேன், உலகமக்களெல்லோருக்கும் அறிவித்திருக்கிறேன்' அறிவிப்பெல்லாம் எனக்கு அநாவசியமும் அராஜகமுமாகவே தோன்றுகின்றது. செய்யாத தவறுக்கு ஒருவன் ஆயிரம்பேர் தவறு தவறு என்று அடிநுனியைப் பகுத்துப் பார்க்காமலே குற்றம் சாட்டுகின்றார்களென்பதற்காகமட்டும் மன்னிப்பினைக் கேட்கமுடியாது. அவ்வாறு கேட்பதுதான் அக்குற்றத்தை அவன் இழைத்தான் என்பதுபோல ஆக்கிக்காட்டும். அதைவிட்டுவிட்டு வேறெங்கோ வந்த புண்ணுக்காக இங்கே நெறியை மற்றவர்களுக்கும் கிளப்பிக்கொண்டிருப்பதைக் குறைந்தபட்சம் மற்றவர்களாவது புரியாமலே குற்றம் சாட்டமுன்னால், உணரக்கூடாதா?
Just don't pick on me only because you want to pick on me and your glasses are tinted.
இரண்டு பயங்கரநாட்களின் முன், ஒரு பயங்கரப்பதிவிலே, கொதித்துப்போன ஒரு பயங்கரத்தமிழ்ப்பதிவருக்கு, ஒரு பயங்கரமான பதிலாக “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்…. கூல்டவுன். இரத்தக்கொதிப்பு ஏறப்போகிறது” என்று பயங்கரமாகவே சொல்லி பயங்கரமாகவே விட்டேன். இன்றைக்குப் பார்த்தால், ஓரன்பரின் அஞ்சல்; அஞ்சலினை விபரிக்க நெறி இடம்கொடாது. ஆனால், உள்ளூரச்சொல்லப்பட்டிருந்தது இது:
--உள்ளடக்கத்தின் குறிப்பு-------
முஸ்லிம்கள் சார்பாக அஞ்சல் அனுப்புவதாகவும் நான் குறிப்பிட்ட ///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// வார்த்தைகள் தம் கவனத்துக்கு வந்ததாகவும் இது தாம் கூறும் முகமனை கேலி செய்வதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளதாகவும். இதற்கு நான் எவரையேனும் பிரதிநிதிப்படுத்தினால், அவர்கள் விளக்கம் தரவேண்டும் என்பதாகவும் அந்த அஞ்சல் குறிப்பிட்ட குமுகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கும் "காணாப்படி"யாக (Bcc) அனுப்பப்பட்டிருப்பதாகவும்.
------ முடிவு--------------------
ஜனநாயகமதப்பேச்சுச்சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என்று குற்றம் சுமத்தியவர் நாற்பத்தைந்தாண்டுகளாக எனது மொழியாகப் பழகியதினை, நாளாந்தம் நக்கலாக நான் சொல்லிய சொல்லும் வார்த்தைத்தொடரைத் தனக்குரியதென்று உரிமை கொண்டாடும் அராஜகத்தை, என் பேச்சுச்சுதந்திரமறுப்பை என்னவென்று சொல்வது! “அவர்கூறும் முகமனைக் கேலி செய்கின்றேன்” என்ற அவரது கற்பனையை அவரோடும் அவருடன் உடன்படுகின்றவர்களோடும் விட்டுவிடுகிறேன். நான் இரத்தக்கொதிப்புப்பதிவருக்குப் பகிடியாகத்தான் சொன்னேன் என்பது எத்துணை உண்மையோ அத்துணை ஈடான உண்மை, -நான் "கூல்டவுன்; இரத்தக்கொதிப்பு ஏறிவிடும்" பதில் சொல்லியபோது- இவரின் முகமன் இதுவாயிருக்கலாமென்பதும் என் மண்டைக்குள்ளே புகுந்து வரவில்லையென்பதும்.
கூகுலிலே அவர் தேடிப்பார்த்தால், முஸ்லீம்கள்மட்டுமல்ல, அகிலாண்டேஸ்வரி அம்மையாரின் பக்தர்களும் தலதா மாளிகைப்புத்தரின் புத்தாக்களும் காதலர்களும் இனமதபேதமின்றி ஒவ்வோர் இலங்கை அரசியல்வாதியுங்கூட சாந்திசமாதானி வார்த்தைக்காக என்மீது கோபம் கொள்ளவேண்டுமானால், கொள்ளலாம் என்பதாகத் தெரியவரும்.
அவரது இறைநம்பிக்கை எதுவென நான் அக்கறைப்பட அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவரின் இறைநம்பிக்கையைக் கேள்விசெய்வதோ நக்கல்செய்வதோ என் தேவைப்பைக்குள்ளோ கரிசனத்தொடுவான்எல்லைக்குள்ளோ இல்லாத மற்றும் தோன்றாத எண்ணங்கள்.
அவருக்கு(ம் அவரது நண்பர்களுக்கும்) ஏன் என்மீது இப்படியாக பொறிகொள்ளவேண்டுமென்று தோன்றுகின்றதென்பதற்கு ஒரு காரணத்தை ஊகிக்கமுடிகின்றது. விதிகளின்படி பதிவுகளை அனுமதிப்பது என்ற அடிப்படையிலே நான் செயற்பட்டதின் விளைவை இன்னமும் ஏற்றுக்கொள்ளமுடியாத படிவாகாத மனநிலையே அது. அதன் எதிர்வினையாகவே இது கிளம்பியிருக்கின்றதென்பது என் ஊகம். ஆனால், அதற்கு நானொன்றும் செய்யமுடியாது.
இப்படியாக “நீ பேசும் தாய்வட்டாரமொழிக்குச் சொந்தக்காரர் நாமே; அதை நீ இப்படித்தான் பயன்படுத்தவேண்டும்” என்றெல்லாம் சலசலப்பது முறையல்ல. நான் சொன்ன “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்” அவர்களாலே சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் அனுமதி பெற்றே நான் பயன்படுத்தவேண்டிய சொற்றொடரென்றால், அறியத்தரட்டும். தவறென ஒத்துக்கொண்டு திருத்திக்கொள்வேன். மிகுதிப்படி நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நானறியாதவர்களை எனக்குத் தோன்றாத காரணங்களுக்காக நோக்கி நோகச் செய்யுமே என்று எப்படியாகப் பேசமுடியும்! என் நண்பர் ஒருவர் ஆய்வுகூடத்திலே வடிகட்டிய மதுசாரத்தைப் பரிசுத்த ஆவி என்பார். இதை "பரிசுத்த ஆவி" என்பதற்கு மதச்சடங்குகளின் அடிப்படையிலே இன்னோர் கருத்தும் இருக்கென்று அறிந்துகொண்டே மீளமீளச் சொல்வார். எவரும் வாதாடவில்லை. இங்கே வெறுமனே இரண்டு சொற்களைத் தேடி வைத்துக்கொண்டு மதத்தைப் புண்படுத்தியதாகப் பேசுகின்றார்கள்.
ஆனால், அவர் அவருடைய முகமன் இதுவென்றால், “சாந்தியையும் சமாதானத்தையும் கூடவே சுபீட்சத்தையும்” தமிழுக்குத் திசைப்படுத்திய சமஸ்கிருதக்காரர்கள் அடுத்ததாக தங்கள் மொழியை நான் கேலி செய்வதாகக் குற்றஞ் சாட்டலாம். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.
சாந்தியையும் சமாதானத்தையும் நான் அறிந்த காலத்திலே பயன்படுத்தியதுபோல, மொழிப்பதங்களாக நான் எவ்வாறும் பயன்படுத்தலாம். வேண்டுமானால், அப்படியாகச் சொல்லும்போது, அவர்களைக் கேலிசெய்கிறேனென உணர்ந்தால், சுட்டிக்காட்டி "இவ்வாறுமிருக்கின்றது எங்களைக் கேலியா செய்கிறீர்கள்?" என்றாவது கேட்டிருக்கலாம். என்னை நோகடிக்காத எவரையும் நோகச் செய்யக்கூடாதென்று "அப்படியா! சரி இனி அப்படியாக நடக்காது" என்று சொல்லிவிட்டு நகர்ந்திருப்பேன். ஆனால், அவரின் அஞ்சலின் உட்தொனி மிரட்டுதலன்றி அப்படியாகவும் செய்யவில்லை. கேட்டிருந்தால், இக்கோணமுமிருக்கிறதேயென்பதற்காகமட்டும் சகமனிதனின் நம்பிக்கையை நோகடிப்பதாக இருக்கக்கூடாதெனச் சொல்லாமலே தவிர்த்துவிடலாம். ஆனால், இது நான் வழங்கிய வழங்கும் திசைச்சொல் உள்வாங்கிய தமிழின் கூறானதாலே, அவரின் 'பெரும்பாலான முஸ்லீம்களுக்குப் போட்டிருக்கிறேன், உலகமக்களெல்லோருக்கும் அறிவித்திருக்கிறேன்' அறிவிப்பெல்லாம் எனக்கு அநாவசியமும் அராஜகமுமாகவே தோன்றுகின்றது. செய்யாத தவறுக்கு ஒருவன் ஆயிரம்பேர் தவறு தவறு என்று அடிநுனியைப் பகுத்துப் பார்க்காமலே குற்றம் சாட்டுகின்றார்களென்பதற்காகமட்டும் மன்னிப்பினைக் கேட்கமுடியாது. அவ்வாறு கேட்பதுதான் அக்குற்றத்தை அவன் இழைத்தான் என்பதுபோல ஆக்கிக்காட்டும். அதைவிட்டுவிட்டு வேறெங்கோ வந்த புண்ணுக்காக இங்கே நெறியை மற்றவர்களுக்கும் கிளப்பிக்கொண்டிருப்பதைக் குறைந்தபட்சம் மற்றவர்களாவது புரியாமலே குற்றம் சாட்டமுன்னால், உணரக்கூடாதா?
Just don't pick on me only because you want to pick on me and your glasses are tinted.
Saturday, March 08, 2008
சந்நதி முருகனுக்கும் கதிர்காமக்கந்தனுக்கும் அரோகரா!
புலம் - 27
'சுஜாதா' ரங்கராஜன் இறந்ததற்கு, "துக்கம் கொண்டாடுவது ஏன்?" என்று பதிவு போட்டவர்களைக் கண்டிக்காத பதிவர்களை, வாய்கட்டிப்பூசாரிகள் சிலர் கண்டித்திருக்கின்றார்கள். இப்படியான தர்க்கமற்ற கேள்வி எழுப்புவதற்கும், "தமிழ்ச்செல்வன் இறந்தபோது, இனிப்பினைக் கொடுத்துக் கொண்டாடியவர்களின் செயற்பாட்டினை ரங்கராஜனின் இறப்பிற்குத் துக்கம் கொண்டாடத்தேவையில்லை" என்று முன்னிகழ்வு காட்டிப் போகின்ற - எதிர்நிலைக்காரர்களின் - செயலுக்கும் ஒரேயொரு வித்தியாசம் - எப்பக்கம் நிற்கின்றார்கள் என்பதுதான். அவரவர் ஒருவர் மீதான அவரவர் விருப்புக்கும் வெறுப்புக்குமேற்ப துக்கமோ களிப்போ அடைந்துவிட்டுப்போகிறார்கள். அத்துக்கத்துக்கும் அக்களிப்புக்கும் அவற்றுக்கான அளவுகளுக்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கின்றன. இதிலே மற்றவர் போய்க் கூட்டம் போட்டு, "எதற்குத் துக்கம் கொண்டாடவில்லை?" என்றோ, "எதற்குத் துக்கம் கொண்டாடுகின்றீர்கள்?" என்றோ கேட்க என்ன உரிமையிருக்கின்றதென்று தெரியவில்லை.ஷியா உல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என் தந்தையைத் தூக்கிலே போட்டவன் இறந்ததற்கு நான் கவலைப்படவில்லை" என்று சொன்னார். அவரிடம் போய் எதற்காகத் துக்கம் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கமுடியுமா?
[இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் எவரோ அவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; ஆனால், அவரின் இழப்பிலும்விட, என்னைப் பாதித்த எழுத்தாளர் என்ற வகையிலே ஸ்டெல்லா புரூஸின் இறப்பும் இறப்புக்கான அவரின் காரணமும் என்னைத் தொட்டிருக்கின்றன; அதையும்விட, நாளாந்தம் கொட்டும் குண்டுகளாலே மழலைக்கப்பால் தனது மொழி எதுவென்றே பேசவும் தெரியாத குழந்தைகளின் இறப்பு, ஒரு தந்தை என்றளவிலே என்னைப் பாதித்திருக்கின்றது. கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி' செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுசர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், இவற்றினைப் பற்றி ஏன் துக்கம் தெரிவித்து ஓர் இழவிடுகையேனும் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கச் சொல்லி பதிவுத்திரட்டிகளையோ, தமிழிணையத்திட்டிகளையோ எவரும் இட்டுக் கேட்டதாகத் தெரியவில்லை; கேட்கவும் தேவையில்லை; அவரவர்க்கு அவரவர்க்கானது]
"சுஜாதா இறப்பினைக் கொண்டாடுவோம்" என்பது போன்ற இடுகைகள் என்னளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதேயிருக்கின்றன. ரங்கராஜனின் இறப்பினைக் கொண்டாடுமளவுக்கு அவரொன்றும் எச்சமூகத்துக்கும் கெடுதலாகச் செய்துவிடவில்லை. 'அவரின் இறப்பினைக் கொண்டாடுவோம்' என்ற வகையிலான கருத்து, அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் -பிராமணசங்கங்களிலே தலைகாட்டியதன், பிராமணசார்புக்கதையொன்று எழுதியதன் -விளைவானாலும், அஃது அதீதமே. தமிழகத்தின் பார்ப்பனிய அதிகாரத்துக்கு அவரே முதன்மைக்காவலர் என்பதுபோல நிறுத்திக் கொண்டாடுவது தனிப்பட்டவளவிலே எனக்கு எரிச்சலூட்டுகிறது. ('தினமலர்' அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது, அதை அவரின் கோமாளித்தனம் என்று பார்த்தாலுங்கூட எரிச்சலூட்டுகிறது). அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் & பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் சிலரின் ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது.
அவருடன் அம்பலத்திலே பணியாற்றிய சந்திரன் என்பவர் "சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்" என்று எழுதியிருக்கின்றார்; இஃது உண்மையா என்பதை, சுஜாதாவே வந்து அவரது இறப்பு அஞ்சலிக்கூட்டத்தினைப் பார்த்திருந்தால் அறிந்திருக்கலாம். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்திபன், சுஜாதா பெயரிலே ஆயுட்காப்புறுதி எடுத்திருக்கக்கூடிய அளவுக்கு முதலிட்ட மனுஷ்யபுத்திரன் போன்ற புதுப்பூசாரிகள் பந்தல்போட்டு வைத்த கூட்டத்திலே, சார்ந்தத(ண்ணியி)ன் வண்ணமாகும் சாருநிவேதிதா, ராமகிருஷ்ணன், பழனிச்சாமி சிவகுமார், பேசியபோது தண்ணி போடாததாலோ என்னவோ நிதானமிழந்து கணினியின் உற்பத்தியை சுஜாதாவுக்குத் தாரை வார்த்த ஜெயகாந்தன் இவர்கள் பேசியதெல்லாம் ஸ்ரீரங்கம் அரங்கராஜனை பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். இன்னமும், தன்னைப் பிராமணர் என்று தள்ளிவைத்திருந்தார்கள் என்று சுஜாதா எண்ணியிருந்தால், அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது, பிராமணர்சங்கக்கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயமாக, பரமசிவன் போன்ற தமிழ்_சமூக ஆய்வாளர்களே "சுஜாதா எப்படி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதலாம்?" என்று கேட்டபோது, சுஜாதா அடைந்திருக்கக்கூடிய ஆத்திரத்தினை உணரக்கூடியதாகவிருக்கின்றது; அப்படியாகக் கேட்டவர்கள் மீது ஆத்திரம் எனக்கும் வந்திருக்கின்றது. இலக்கியம் என்றால், உரை எவர் எழுதவேண்டும் கூடாது என்று வகுத்துச் சொல்ல எவருக்கும் அதிகாரமில்லை; வேண்டுமானால், உரையின் சிறப்பினை உரைத்துப்பார்த்து விவாதத்தினை வைத்துக்கொள்ளலாம். (இதே சுஜாதா, வே. சபாநாயகம் கணையாழி இதழ்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரே காரணத்தினாலே மட்டுமே சபாநாயகத்துக்கு அவை பற்றி எழுதத் தகுதியிருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று காட்டமாகக் கேட்டதும், பரமசிவன் சுஜாதா சங்க இலக்கியத்துக்கு எப்படியாக உரையெழுதலாம் என்று கேட்ட காலகட்டத்திலேயே நிகழ்ந்தது என்பது முரண்சோகம்).
தமிழின் எழுத்துநடையையும் பேசப்படும் கருக்களையும் புதுமைப்படுத்தியதிலே, வாசகர்களை ஆர்வமுடன் அதற்கு முன்னான காலத்திலிருந்து மாறுதலான துறைகளிலே தேடி வாசிக்க வைத்ததிலே, சுஜாதாவின் எழுத்தோடு சம்பந்தப்பட்ட ஆளுமை மறுக்கப்படமுடியாதது. அவ்வகையிலே அவரது இழப்பு தமிழ் எழுத்துலகுக்கு - அவர் எண்பதுகளின் பின்னரையிலே, தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே இறந்திருந்தால் இருப்பதிலும்விட மிகவும் குறைவேயாயினுங்கூட- பெரிதே. நல்லதாகவோ, கெட்டதாகவோ அவர் போட்டு வைத்த பாதையிலே நடை பயின்றெழுந்த எழுத்தாளர்கள் பலர். ஆனால், அவரைப் பற்றிய விமர்சனங்களே வரக்கூடாதென்ற விதத்திலே, "இப்போதுதானா அவரைப் பற்றி விமர்சிக்கவேண்டும்?" என்று கேட்பவர்களுக்கு, 'அண்ணா(த்துரை) இறந்ததன் பின்னாலான தேர்தலின்போது,இறந்தவரைத் 'தெய்வமாக்கி' (sic) வாக்கினைத் திராவிடமுன்னேற்றக்கழகம் பெற்றிடக்கூடாதென்ற விதத்திலே, 'சோ'வும் ஜெயக்காந்தனும் அவரைப் பற்றிப் பேசவில்லையா?' என்ற கேள்விதான் பதிலாகவிருக்கமுடியும். ஒருவரினைப் புனிதப்பசுவாக்கி, குட்டி எல்லைக்காவற்றெய்வமாக மாற்றாதிருக்க அப்படியான - "பார்ப்பனியன் இறப்பைக் கொண்டாடுவோம்; இறந்ததுக்காகப் பதற்றம் வேண்டாம்" போன்ற எல்லைமீறிய உருப்பெருத்த அபஸ்வரங்கள் அல்லாத - விமர்சனங்களும் அவசியமே. "'கணினி' என்ற பதத்தைக் கண்டுபிடித்தவர் சுஜாதா" என்று உளறிக்கொட்டுகிறார் ஜெயக்காந்தன்; "தமிழுக்குக் கணியகராதி தந்தார்; எழுத்துருக்களை அமைத்தார்" என்ற வகையிலே தட்ஸ்தமிழ் எழுதித்தள்ளுகிறது. ('க்ரியா' தமிழகராதியிலே சுஜாதாவுக்கு பங்களிப்பு இருக்கின்றதென்றாலுங்கூட, இக்கணியகராதி பற்றி யாரேனும் சொல்ல வேண்டும்; 98 இலே கணையாழியிலே "புதுச்சொல் உருவாக்கங்கள் குடிசைக்கைத்தொழில் போல உருவாகுகின்றன; புதுச்சொல் உருவாக்கியிருக்கிறோம்; பரிசினைக் கொடுங்கள் என்பதுபோலப் புறப்பட்டிருக்கிறார்கள்" என்ற வகையிலே எழுதியவர் சுஜாதா; கணனி, கணினி என்பன பயன்பாட்டுக்கு வந்த பின்னும், "வாசகர்களுக்குச் சென்றடைவதற்காக," 'கணிப்பொறி', 'கம்ப்யூட்டர்' என்று தொங்கிக்கொண்டிருந்தவர் அவர்). "இந்தியாவிலே முதலாவது கணியமைவாக்குப்பொறி அமைத்ததிலே பாரத் நிறுவனத்திலே அவரது பங்களிப்பு என்ன" என்பதுகூடத் தெளிவாகச் சொல்லப்படாமல், அவரை கருத்துமுதல் பொருள்கொண்டு கணியமைத்ததாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓர்குட் குழுமத்திலே சில பிராமண இளைஞர்கள் 'இணையம்' என்ற சொல்லே சுஜாதாதான் உருவாக்கினார் என்று வரலாறு எழுதியிருக்கின்றார்கள் (இங்கே குறிப்பாக, பிராமண இளைஞர்கள் என்று சொல்லக்காரணம், இதைப் பற்றிப் பேசப்பட்ட, குழுமமே ஓர் ஓர்குட் பிராமணர்குழுமம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குழுமம் என்பதாலேதான். இவ்வகையிலேதான், சாதி/ஜாதி முக்கியமாகின்றதென்பது, கொழும்பிலிருந்து -அடுத்தடுத்த தெருக்களிலே தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டுக் காணாமற்போகும்போது- அப்துல்கலாமின் புத்தாண்டுச்செவ்வி இணையத்திலே கிடைக்குமா என்று கேட்கும் வாய்கட்டிப்பூசாரிகளுக்குத் தெரியவேண்டும். 'ஜாதி'யும் அறிவும் தமிழகசமூகத்தின் கண்டத்திலே குடுமியின் முதலைப்பிடியும் எவ்வாறு புனைகதையாக அமைக்கப்பட்டு, சமன்பாடு போடப்படுகின்றதென்பதையும் கொஞ்சம் சன் ரிவி நிகழ்ச்சிகளுக்கும் ஆனந்தவிகடனுக்கும் அப்பாலே போயும் பார்த்தாலே பிடிபடும்). சுஜாதாவின் இறப்பின்போது, அவர்மீதான விமர்சனங்களே வரக்கூடாதென்ற வகையிலும் துக்கம் தெரிவிக்காதவர்கள்மீது கண்டனம் திரட்டிகளும் திட்டித் தெரிவிக்கவேண்டுமென்று அலறுகின்றவர்கள், இப்படியான புனைகதைகளைச் சுஜாதாவின் உடலத்தின்மேலே போ(ர்)த்தி, அவரைத் திருநிலைப்படுத்தி, விமர்சனம் மறுத்த தெய்வவழிபாடுக்கு வழிபோடமட்டுமே உதவுவார்கள்.
அவர் பற்றிய வாய்கட்டிப்பூசாரிகளின் தனித்துவமான இன்னொரு புனிதப்பசுவுக்கு இன்னொரு கறவைமுலைபொருத்தும் கதையாகத்தான், "ஈழத்தமிழர்களுக்காக சுஜாதா நெக்குருகினார்" என்ற வகை இடுகைகளும் பின்னூட்டங்களுமிருக்கின்றன. நிச்சயமாக, 'சோ'+இராம்+மாலன் போன்ற இந்தீய(ப்)பத்'திரி'கையாளர்களுக்கும் சுஜாதாவுக்கும் ஈழத்தமிழர்களின் நிலை, கதை, எதிர்வினைகளிலே வெளிப்படையாகவே தெரியும் வேறுபாடுண்டு. அவர், ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளிலே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்கியதாக (நான் அறிய) ஏதும் ஆதாரமில்லை. ஓரளவுக்கு ஜெயலலிதா அம்மையாரின் வைசூரி ஆட்சியின்போது, தமிழகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுக்குச் சென்றிருந்த சிவத்தம்பி போன்றோர் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கருவாக, களமாகக் கொண்ட, "சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்" என்ற கதையை அவர் எழுதியதும், யாழ் நூலகம், ஈழத்தமிழ்க்கவிதை (அவரின் ஈழத்தமிழ்க்கவிதைகள் பற்றிய அறிதல் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டன என்பதை அவரின் 'கற்றதும் பெற்றதும்', கானா பிரபாவிற்கான செவ்வி என்பதிலேயிருந்து அறிந்து கொள்ளலாம்) பற்றிய குறிப்புகள் என்பனவும் ஈழத்தமிழர் மீதான அவரின் ஈரத்தனத்தினைக் காட்டுவதாகவேயிருந்தன. அதற்காக -ஈழத்தமிழர் குறித்த மறை உணர்வும் குறைப்புரிதலும் கணிசமாக நிறைந்த 'அறந்தாங்கி அஹிம்ஸாமூர்த்திகளான" 'துக்ளக்+த ஹிண்டு+இந்தியா ருடே" வாசகப்பரசுராமர்களிடையே நிறைய மதிப்பினைப் பெற்றிருந்த - அவருக்கு நன்றி. [இதையே ஆள்வோர் பின்பலமற்ற வேறு படைப்பாளி எழுதியிருக்கமுடியாதென்றாலுங்கூட, எழுதிய அவருக்கு நன்றி] ஆனால், இவ்விடத்திலே அவர் ஒரு கரு(க்)கட்டும் கதையாளி என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவருக்கு -எல்லா எழுத்தாளர்களையும்போலவே - சந்திக்கின்றவர்கள் சொல்லும்/தரும் கருக்களும் சொற்களும் -ஏன் சந்திப்பவர்களுமே- கதைக்கானவைதான். அவருக்கு(ம் மணிரத்தினத்துக்கும்) 'கன்னத்தில் முத்தமிட்டால்" எழுதக் கருவும் (இடைக்காலச்சமாதான ஒப்பந்தமும் புலம்பெயர் பார்வையாளர்கள் தொகையும் இந்தியத்தயாரிப்புக்குத் துணிவினைத் தந்திருந்தால்) இந்தியாவின் செயற்பாடுகளிலே விமர்சனம் வைக்காத கதைகளும் ஆக்கமுடியுமானால், அவரின் பிரபலத்தோடு அவற்றினைச் செய்ய ஏதும் தடையில்லை ['கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்த அதே காலத்திலே தடை செய்யப்பட்ட புகழேந்தியின் ஈழம் தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி'யை இங்கே நினைவுகூர்வோமாக]. இதுதான் சுஜாதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையின் எல்லை: '"சோராமாலன்" உடனோடு ஒப்பிடும்போது, இவர் 'ஒரு மூட்டை அரிசியையாவது விதைத்தவருக்குத் திருப்பித் தந்தாரே' என்ற நிலைதான்.' நிச்சயமாக, அதற்காகவேனும் நன்றியுள்ளவர்களாக, கொழும்பிலே குந்தியிருந்து இந்தியாவின் ஆளுமைகளுக்காக உருகும் வாய்கட்டிப்பூசாரிகளும் நானும் என்னைப் போன்றவர்களும் இருப்போம் - "தளையசிங்கத்தைக் கிண்டி ஆழமும் முத்துலிங்கத்தை விராண்டி அகலமும் கண்டுபிடித்துத் தமிழகத்துக்குச் சொன்னதற்காக, ஜெயமோகனருக்கு நன்றி உடையவர்கள்போல." ஆனால், நெருக்கடி நிலைகளிலும் தமிழகத்தின் பதிப்பகங்களிலும் படைப்புகளிலும் ஈழத்தமிழர்கள் பற்றி நூல் வெளியிட்ட, வெளியிடும் படைப்பாளிகள் குறைந்தது ஐவரையாவது, இந்த வாய்கட்டிப்பூசாரிகள் சொல்வார்களானால், நன்றியுடைத்திருப்பேன்.
மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்....
..... மூளையில் வரல் ஆற்றுச்சளி கட்டாதவரையில்.
'சுஜாதா' ரங்கராஜன் இறந்ததற்கு, "துக்கம் கொண்டாடுவது ஏன்?" என்று பதிவு போட்டவர்களைக் கண்டிக்காத பதிவர்களை, வாய்கட்டிப்பூசாரிகள் சிலர் கண்டித்திருக்கின்றார்கள். இப்படியான தர்க்கமற்ற கேள்வி எழுப்புவதற்கும், "தமிழ்ச்செல்வன் இறந்தபோது, இனிப்பினைக் கொடுத்துக் கொண்டாடியவர்களின் செயற்பாட்டினை ரங்கராஜனின் இறப்பிற்குத் துக்கம் கொண்டாடத்தேவையில்லை" என்று முன்னிகழ்வு காட்டிப் போகின்ற - எதிர்நிலைக்காரர்களின் - செயலுக்கும் ஒரேயொரு வித்தியாசம் - எப்பக்கம் நிற்கின்றார்கள் என்பதுதான். அவரவர் ஒருவர் மீதான அவரவர் விருப்புக்கும் வெறுப்புக்குமேற்ப துக்கமோ களிப்போ அடைந்துவிட்டுப்போகிறார்கள். அத்துக்கத்துக்கும் அக்களிப்புக்கும் அவற்றுக்கான அளவுகளுக்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கின்றன. இதிலே மற்றவர் போய்க் கூட்டம் போட்டு, "எதற்குத் துக்கம் கொண்டாடவில்லை?" என்றோ, "எதற்குத் துக்கம் கொண்டாடுகின்றீர்கள்?" என்றோ கேட்க என்ன உரிமையிருக்கின்றதென்று தெரியவில்லை.ஷியா உல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என் தந்தையைத் தூக்கிலே போட்டவன் இறந்ததற்கு நான் கவலைப்படவில்லை" என்று சொன்னார். அவரிடம் போய் எதற்காகத் துக்கம் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கமுடியுமா?[இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் எவரோ அவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; ஆனால், அவரின் இழப்பிலும்விட, என்னைப் பாதித்த எழுத்தாளர் என்ற வகையிலே ஸ்டெல்லா புரூஸின் இறப்பும் இறப்புக்கான அவரின் காரணமும் என்னைத் தொட்டிருக்கின்றன; அதையும்விட, நாளாந்தம் கொட்டும் குண்டுகளாலே மழலைக்கப்பால் தனது மொழி எதுவென்றே பேசவும் தெரியாத குழந்தைகளின் இறப்பு, ஒரு தந்தை என்றளவிலே என்னைப் பாதித்திருக்கின்றது. கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி' செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுசர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், இவற்றினைப் பற்றி ஏன் துக்கம் தெரிவித்து ஓர் இழவிடுகையேனும் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கச் சொல்லி பதிவுத்திரட்டிகளையோ, தமிழிணையத்திட்டிகளையோ எவரும் இட்டுக் கேட்டதாகத் தெரியவில்லை; கேட்கவும் தேவையில்லை; அவரவர்க்கு அவரவர்க்கானது]
"சுஜாதா இறப்பினைக் கொண்டாடுவோம்" என்பது போன்ற இடுகைகள் என்னளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதேயிருக்கின்றன. ரங்கராஜனின் இறப்பினைக் கொண்டாடுமளவுக்கு அவரொன்றும் எச்சமூகத்துக்கும் கெடுதலாகச் செய்துவிடவில்லை. 'அவரின் இறப்பினைக் கொண்டாடுவோம்' என்ற வகையிலான கருத்து, அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் -பிராமணசங்கங்களிலே தலைகாட்டியதன், பிராமணசார்புக்கதையொன்று எழுதியதன் -விளைவானாலும், அஃது அதீதமே. தமிழகத்தின் பார்ப்பனிய அதிகாரத்துக்கு அவரே முதன்மைக்காவலர் என்பதுபோல நிறுத்திக் கொண்டாடுவது தனிப்பட்டவளவிலே எனக்கு எரிச்சலூட்டுகிறது. ('தினமலர்' அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது, அதை அவரின் கோமாளித்தனம் என்று பார்த்தாலுங்கூட எரிச்சலூட்டுகிறது). அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் & பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் சிலரின் ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது.
அவருடன் அம்பலத்திலே பணியாற்றிய சந்திரன் என்பவர் "சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்" என்று எழுதியிருக்கின்றார்; இஃது உண்மையா என்பதை, சுஜாதாவே வந்து அவரது இறப்பு அஞ்சலிக்கூட்டத்தினைப் பார்த்திருந்தால் அறிந்திருக்கலாம். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்திபன், சுஜாதா பெயரிலே ஆயுட்காப்புறுதி எடுத்திருக்கக்கூடிய அளவுக்கு முதலிட்ட மனுஷ்யபுத்திரன் போன்ற புதுப்பூசாரிகள் பந்தல்போட்டு வைத்த கூட்டத்திலே, சார்ந்தத(ண்ணியி)ன் வண்ணமாகும் சாருநிவேதிதா, ராமகிருஷ்ணன், பழனிச்சாமி சிவகுமார், பேசியபோது தண்ணி போடாததாலோ என்னவோ நிதானமிழந்து கணினியின் உற்பத்தியை சுஜாதாவுக்குத் தாரை வார்த்த ஜெயகாந்தன் இவர்கள் பேசியதெல்லாம் ஸ்ரீரங்கம் அரங்கராஜனை பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். இன்னமும், தன்னைப் பிராமணர் என்று தள்ளிவைத்திருந்தார்கள் என்று சுஜாதா எண்ணியிருந்தால், அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது, பிராமணர்சங்கக்கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயமாக, பரமசிவன் போன்ற தமிழ்_சமூக ஆய்வாளர்களே "சுஜாதா எப்படி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதலாம்?" என்று கேட்டபோது, சுஜாதா அடைந்திருக்கக்கூடிய ஆத்திரத்தினை உணரக்கூடியதாகவிருக்கின்றது; அப்படியாகக் கேட்டவர்கள் மீது ஆத்திரம் எனக்கும் வந்திருக்கின்றது. இலக்கியம் என்றால், உரை எவர் எழுதவேண்டும் கூடாது என்று வகுத்துச் சொல்ல எவருக்கும் அதிகாரமில்லை; வேண்டுமானால், உரையின் சிறப்பினை உரைத்துப்பார்த்து விவாதத்தினை வைத்துக்கொள்ளலாம். (இதே சுஜாதா, வே. சபாநாயகம் கணையாழி இதழ்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரே காரணத்தினாலே மட்டுமே சபாநாயகத்துக்கு அவை பற்றி எழுதத் தகுதியிருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று காட்டமாகக் கேட்டதும், பரமசிவன் சுஜாதா சங்க இலக்கியத்துக்கு எப்படியாக உரையெழுதலாம் என்று கேட்ட காலகட்டத்திலேயே நிகழ்ந்தது என்பது முரண்சோகம்).
தமிழின் எழுத்துநடையையும் பேசப்படும் கருக்களையும் புதுமைப்படுத்தியதிலே, வாசகர்களை ஆர்வமுடன் அதற்கு முன்னான காலத்திலிருந்து மாறுதலான துறைகளிலே தேடி வாசிக்க வைத்ததிலே, சுஜாதாவின் எழுத்தோடு சம்பந்தப்பட்ட ஆளுமை மறுக்கப்படமுடியாதது. அவ்வகையிலே அவரது இழப்பு தமிழ் எழுத்துலகுக்கு - அவர் எண்பதுகளின் பின்னரையிலே, தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே இறந்திருந்தால் இருப்பதிலும்விட மிகவும் குறைவேயாயினுங்கூட- பெரிதே. நல்லதாகவோ, கெட்டதாகவோ அவர் போட்டு வைத்த பாதையிலே நடை பயின்றெழுந்த எழுத்தாளர்கள் பலர். ஆனால், அவரைப் பற்றிய விமர்சனங்களே வரக்கூடாதென்ற விதத்திலே, "இப்போதுதானா அவரைப் பற்றி விமர்சிக்கவேண்டும்?" என்று கேட்பவர்களுக்கு, 'அண்ணா(த்துரை) இறந்ததன் பின்னாலான தேர்தலின்போது,இறந்தவரைத் 'தெய்வமாக்கி' (sic) வாக்கினைத் திராவிடமுன்னேற்றக்கழகம் பெற்றிடக்கூடாதென்ற விதத்திலே, 'சோ'வும் ஜெயக்காந்தனும் அவரைப் பற்றிப் பேசவில்லையா?' என்ற கேள்விதான் பதிலாகவிருக்கமுடியும். ஒருவரினைப் புனிதப்பசுவாக்கி, குட்டி எல்லைக்காவற்றெய்வமாக மாற்றாதிருக்க அப்படியான - "பார்ப்பனியன் இறப்பைக் கொண்டாடுவோம்; இறந்ததுக்காகப் பதற்றம் வேண்டாம்" போன்ற எல்லைமீறிய உருப்பெருத்த அபஸ்வரங்கள் அல்லாத - விமர்சனங்களும் அவசியமே. "'கணினி' என்ற பதத்தைக் கண்டுபிடித்தவர் சுஜாதா" என்று உளறிக்கொட்டுகிறார் ஜெயக்காந்தன்; "தமிழுக்குக் கணியகராதி தந்தார்; எழுத்துருக்களை அமைத்தார்" என்ற வகையிலே தட்ஸ்தமிழ் எழுதித்தள்ளுகிறது. ('க்ரியா' தமிழகராதியிலே சுஜாதாவுக்கு பங்களிப்பு இருக்கின்றதென்றாலுங்கூட, இக்கணியகராதி பற்றி யாரேனும் சொல்ல வேண்டும்; 98 இலே கணையாழியிலே "புதுச்சொல் உருவாக்கங்கள் குடிசைக்கைத்தொழில் போல உருவாகுகின்றன; புதுச்சொல் உருவாக்கியிருக்கிறோம்; பரிசினைக் கொடுங்கள் என்பதுபோலப் புறப்பட்டிருக்கிறார்கள்" என்ற வகையிலே எழுதியவர் சுஜாதா; கணனி, கணினி என்பன பயன்பாட்டுக்கு வந்த பின்னும், "வாசகர்களுக்குச் சென்றடைவதற்காக," 'கணிப்பொறி', 'கம்ப்யூட்டர்' என்று தொங்கிக்கொண்டிருந்தவர் அவர்). "இந்தியாவிலே முதலாவது கணியமைவாக்குப்பொறி அமைத்ததிலே பாரத் நிறுவனத்திலே அவரது பங்களிப்பு என்ன" என்பதுகூடத் தெளிவாகச் சொல்லப்படாமல், அவரை கருத்துமுதல் பொருள்கொண்டு கணியமைத்ததாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓர்குட் குழுமத்திலே சில பிராமண இளைஞர்கள் 'இணையம்' என்ற சொல்லே சுஜாதாதான் உருவாக்கினார் என்று வரலாறு எழுதியிருக்கின்றார்கள் (இங்கே குறிப்பாக, பிராமண இளைஞர்கள் என்று சொல்லக்காரணம், இதைப் பற்றிப் பேசப்பட்ட, குழுமமே ஓர் ஓர்குட் பிராமணர்குழுமம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குழுமம் என்பதாலேதான். இவ்வகையிலேதான், சாதி/ஜாதி முக்கியமாகின்றதென்பது, கொழும்பிலிருந்து -அடுத்தடுத்த தெருக்களிலே தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டுக் காணாமற்போகும்போது- அப்துல்கலாமின் புத்தாண்டுச்செவ்வி இணையத்திலே கிடைக்குமா என்று கேட்கும் வாய்கட்டிப்பூசாரிகளுக்குத் தெரியவேண்டும். 'ஜாதி'யும் அறிவும் தமிழகசமூகத்தின் கண்டத்திலே குடுமியின் முதலைப்பிடியும் எவ்வாறு புனைகதையாக அமைக்கப்பட்டு, சமன்பாடு போடப்படுகின்றதென்பதையும் கொஞ்சம் சன் ரிவி நிகழ்ச்சிகளுக்கும் ஆனந்தவிகடனுக்கும் அப்பாலே போயும் பார்த்தாலே பிடிபடும்). சுஜாதாவின் இறப்பின்போது, அவர்மீதான விமர்சனங்களே வரக்கூடாதென்ற வகையிலும் துக்கம் தெரிவிக்காதவர்கள்மீது கண்டனம் திரட்டிகளும் திட்டித் தெரிவிக்கவேண்டுமென்று அலறுகின்றவர்கள், இப்படியான புனைகதைகளைச் சுஜாதாவின் உடலத்தின்மேலே போ(ர்)த்தி, அவரைத் திருநிலைப்படுத்தி, விமர்சனம் மறுத்த தெய்வவழிபாடுக்கு வழிபோடமட்டுமே உதவுவார்கள்.
அவர் பற்றிய வாய்கட்டிப்பூசாரிகளின் தனித்துவமான இன்னொரு புனிதப்பசுவுக்கு இன்னொரு கறவைமுலைபொருத்தும் கதையாகத்தான், "ஈழத்தமிழர்களுக்காக சுஜாதா நெக்குருகினார்" என்ற வகை இடுகைகளும் பின்னூட்டங்களுமிருக்கின்றன. நிச்சயமாக, 'சோ'+இராம்+மாலன் போன்ற இந்தீய(ப்)பத்'திரி'கையாளர்களுக்கும் சுஜாதாவுக்கும் ஈழத்தமிழர்களின் நிலை, கதை, எதிர்வினைகளிலே வெளிப்படையாகவே தெரியும் வேறுபாடுண்டு. அவர், ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளிலே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்கியதாக (நான் அறிய) ஏதும் ஆதாரமில்லை. ஓரளவுக்கு ஜெயலலிதா அம்மையாரின் வைசூரி ஆட்சியின்போது, தமிழகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுக்குச் சென்றிருந்த சிவத்தம்பி போன்றோர் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கருவாக, களமாகக் கொண்ட, "சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்" என்ற கதையை அவர் எழுதியதும், யாழ் நூலகம், ஈழத்தமிழ்க்கவிதை (அவரின் ஈழத்தமிழ்க்கவிதைகள் பற்றிய அறிதல் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டன என்பதை அவரின் 'கற்றதும் பெற்றதும்', கானா பிரபாவிற்கான செவ்வி என்பதிலேயிருந்து அறிந்து கொள்ளலாம்) பற்றிய குறிப்புகள் என்பனவும் ஈழத்தமிழர் மீதான அவரின் ஈரத்தனத்தினைக் காட்டுவதாகவேயிருந்தன. அதற்காக -ஈழத்தமிழர் குறித்த மறை உணர்வும் குறைப்புரிதலும் கணிசமாக நிறைந்த 'அறந்தாங்கி அஹிம்ஸாமூர்த்திகளான" 'துக்ளக்+த ஹிண்டு+இந்தியா ருடே" வாசகப்பரசுராமர்களிடையே நிறைய மதிப்பினைப் பெற்றிருந்த - அவருக்கு நன்றி. [இதையே ஆள்வோர் பின்பலமற்ற வேறு படைப்பாளி எழுதியிருக்கமுடியாதென்றாலுங்கூட, எழுதிய அவருக்கு நன்றி] ஆனால், இவ்விடத்திலே அவர் ஒரு கரு(க்)கட்டும் கதையாளி என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவருக்கு -எல்லா எழுத்தாளர்களையும்போலவே - சந்திக்கின்றவர்கள் சொல்லும்/தரும் கருக்களும் சொற்களும் -ஏன் சந்திப்பவர்களுமே- கதைக்கானவைதான். அவருக்கு(ம் மணிரத்தினத்துக்கும்) 'கன்னத்தில் முத்தமிட்டால்" எழுதக் கருவும் (இடைக்காலச்சமாதான ஒப்பந்தமும் புலம்பெயர் பார்வையாளர்கள் தொகையும் இந்தியத்தயாரிப்புக்குத் துணிவினைத் தந்திருந்தால்) இந்தியாவின் செயற்பாடுகளிலே விமர்சனம் வைக்காத கதைகளும் ஆக்கமுடியுமானால், அவரின் பிரபலத்தோடு அவற்றினைச் செய்ய ஏதும் தடையில்லை ['கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்த அதே காலத்திலே தடை செய்யப்பட்ட புகழேந்தியின் ஈழம் தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி'யை இங்கே நினைவுகூர்வோமாக]. இதுதான் சுஜாதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையின் எல்லை: '"சோராமாலன்" உடனோடு ஒப்பிடும்போது, இவர் 'ஒரு மூட்டை அரிசியையாவது விதைத்தவருக்குத் திருப்பித் தந்தாரே' என்ற நிலைதான்.' நிச்சயமாக, அதற்காகவேனும் நன்றியுள்ளவர்களாக, கொழும்பிலே குந்தியிருந்து இந்தியாவின் ஆளுமைகளுக்காக உருகும் வாய்கட்டிப்பூசாரிகளும் நானும் என்னைப் போன்றவர்களும் இருப்போம் - "தளையசிங்கத்தைக் கிண்டி ஆழமும் முத்துலிங்கத்தை விராண்டி அகலமும் கண்டுபிடித்துத் தமிழகத்துக்குச் சொன்னதற்காக, ஜெயமோகனருக்கு நன்றி உடையவர்கள்போல." ஆனால், நெருக்கடி நிலைகளிலும் தமிழகத்தின் பதிப்பகங்களிலும் படைப்புகளிலும் ஈழத்தமிழர்கள் பற்றி நூல் வெளியிட்ட, வெளியிடும் படைப்பாளிகள் குறைந்தது ஐவரையாவது, இந்த வாய்கட்டிப்பூசாரிகள் சொல்வார்களானால், நன்றியுடைத்திருப்பேன்.
மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்....
..... மூளையில் வரல் ஆற்றுச்சளி கட்டாதவரையில்.
Tuesday, December 04, 2007
என் எல்லைக்குள்ளிருந்து...."என்ன எண்ணிக்கொண்டு சொன்னீர்கள்?"
His Holiness the Abbot
is shitting
in the withered fields
- Yosa Buson (1716 - 1783), translated byRobert Hass
is shitting
in the withered fields
- Yosa Buson (1716 - 1783), translated byRobert Hass
கடந்த ஒரு கிழமைக்குள்ளே இலங்கை தொடர்பாக வாசித்தவற்றிலே, சிலரின் சில கருத்துகள் தமது கருத்துகளை நியாயப்படுத்த, வாசிக்கின்றவரின் பகுத்தறிவினைப் பகிடி செய்ததாகத் தோன்றின.
தொடர்ந்து உற்சாகமாகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்க உளநிலை இல்லாததாலே, இப்பதிவிலே நக்கலையும் குத்தலையும் தவிர்த்துவிடலாம். குறிப்பான சில விடயங்களை மட்டும் பேச எடுத்துக் கொண்டு, கருத்தாளர்களின் மற்றக்கருத்துகளை, பதிவுநீட்சி, நேரப்பற்றாக்குறை, முக்கியமின்மை, ஒத்துப்போதல் காரணங்களாக விட்டுவிடலாம்.
*****
தவிகூட்டணியின் தனித்தவில் ஆனந்தசங்கரி,
"வன்னியிலே கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளை ஸ்ரீலங்கா அரசு கொன்றிருக்க நியாயமேயில்லை; இது ஸ்ரீலங்கா அரசின்மீது பழியைப் போட விடுதலைப்புலிகளே கிளப்பிவிட்ட பொய்ப்பிரசாரமேதான்"என்று பகிரங்கக்கடிதம் விட்டது இதிலே ஒன்று. அவரின் கருத்து என்னவென்றால், ஸ்ரீலங்கா இராணுவம் அவ்வளவு தூரம் ஊடுருவிப் போய்ச் செய்திருக்க முடியாதாம். ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடுருவித்தாக்கும் அணி இதே வன்னிக்குள்ளே ஒட்டிசுட்டான்வரை சென்று விடுதலைப்புலிகளின் கேர்ணல். சங்கரை 2001 இலே கொன்றதும் அப்படியாகச் செயற்படும் தேவைகளுக்கான திட்டமிட கொழும்புவட்டாரத்திலே அமர்த்தியிருந்த மறைவிடம் பற்றியும் ஸ்ரீலங்கா செய்திகளிலே வெளிவந்தன. அந்நேரம் ஸ்ரீலங்கா அதிபராகவும் முப்படையின் ஆணையிடுநாயகியாகவுமிருந்த சந்திரிகா குமாரணதுங்கவே தனக்குத் தெரியாமல் இப்படியான மறைவிடமிருந்ததையிட்டு ஆத்திரம் கொண்டதும் செய்திகளிலே வந்திருந்தது. அண்மையிலே கொல்லப்பட்ட மன்னார் கத்தோலிக்கத்துறவியின் கொலைக்கும் இத்தகைய ஊடுருவித்தாக்குதலே காரணமாக வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஆனந்தசங்கரி பொய்யான செய்தி என்று மறுதலிக்கலாம்; ஆனல், தங்களுடைய மாவீரர் வாரத்திலே வன்னியின் இதயப்பகுதியிலே பாடசாலைமாணவிகளைக் கொல்லும் தேவை -எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்றுதான் கொண்டாலுங்கூட - எதற்கு விடுதலைப்புலிகளுக்கு இருக்கமுடியும்? இதனை ஆனந்தசங்கரி யோசித்துப் பார்த்திருக்கவேண்டாமா? எத்துணை அவருக்கு விடுதலைப்புலிகளுடன் வெறுப்பிருந்தாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசை நியாயப்படுத்த தமிழ்மக்களிலே ஸ்ரீலங்கா அரசு இரக்கம் நிறைந்திருக்கின்றது என்பதாக நிறுவ இப்படியாகவா ஓட்டைப்பாத்திரத்திலே தண்ணீர் வார்ப்பது?
*******
அடுத்ததாக, பிரான்சிலே வாழும் எம். ஆர். ஸ்டாலின் என்ற ஞானம் என்ற சின்னமாஸ்ரர், தேசம் இணையத்தளத்திலே கொடுத்த செவ்வி. ஈழத்தின் கிழக்குமாகாணத்தின் நலனைப் பேணுகின்றவராக, வடக்கின் ஆக்கிரமிப்பினை எதிர்ப்பவராகவும் கருணா அம்மானின் தீவிர நியாயப்படுத்துனராகவும் தனது செவ்வியிலே பேசியிருக்கின்றார். பிரான்சிலே வந்திறங்கிய கருணா அம்மானை ஸ்ராலின்தான் ஸ்ரீலங்கா தூதராலய அதிகாரியோடு வரவேற்றார் என்று டிபிஎஸ் ஜெயராஜ் எழுதியதிலிருந்து அண்மைய பாரிசின் தலித் மகாநாட்டின் அமைப்பாளரிலே ஒருவரான அவர்மீது அங்கேயே கிழக்கின் கழுதாவளையிலே இருக்கும் சாதியத்துவத்தினைப் பற்றி கிழக்கின் யோகன் கண்ணமுத்து (அசோக்) பேசி முரண்பட்டதுவரை இணையத்திலே தேட அகப்படுகின்றன. இணையத்திலே வாசித்த இவற்றிலே எவை உண்மை, எவை பொய் எனக்குத் தெரியாது; எவரும் எதையும் வரலாறு என்று எழுதிவிட்டுப்போகலாம் - இங்கே திருகோணமலை பற்றி எம். ஆர். ஸ்டாலின் சொல்லியிருப்பதுபோலவே. அதனால் உறுதிப்படுத்தப்படாத இக்கருத்துகளையும் இங்கே பேச்சுக்கான விடயங்கள் அவையல்ல என்பதாலும் அவற்றினையெல்லாம் இப்பதிவிலே விட்டுவிடுவோம். ஆனால், தான் கிழக்கின்காவலர் என்பதை நிரூபிக்கும் முயற்சியிலே, "அவரது" திருகோணமலையினைப் பற்றி ஓர் அட்டகாசமான தகவலைத் தருகின்றார். அதைப் பார்ப்போம்
"ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது"
இதை, புரிந்துகொண்டே சொன்ன புளுகுமூட்டை என்பதா புரியாமலே அவிழ்த்துவிட்ட கோழிக்குஞ்சு என்பதா என்று எனக்குத் தெரியவில்லை. மூவினங்களும் சேர்ந்துவாழும் அந்த அற்புதமான அவரது திருகோணமலை எங்கேயிருந்தது என்று எனக்குத் தெரியாது; ஆனால், நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த திருகோணமலையிலே செல்வநாயகத்தின் சாம்பல் கொண்டுவரப்பட்டபோது எனக்கு நடப்பது ஓரளவுக்குப் புரியும் வயதுதான். அதற்கு முன்னரும் என்ன என்ன திருகோணமலையிலே இனத்தினை முன்வைத்து நடந்தன என்பதைக்கூட இணையத்திலே தேடிப் பார்க்கின்றவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். கிழக்கிலே சேருவில, கல்லோயா குடியேற்றத்திட்டங்கள் குறித்தும் திட்டமிட்டவகையிலே இனவிகிதாசாரம் அன்றிலிருந்து இன்றுவரைக்குங்கூட மாற்றப்படும் நிலையினைப் பற்றிய ஆதாரத்துடனான கட்டுரைகள் இணையத்திலே நிறையவுண்டு. இவை எல்லாம் நிகழ்ந்திராவிட்டால், தமிழ்த்தேசியம் எதற்காக எழுந்திருக்கப்போகின்றதென்று, மிதக்கும்வெளி சுகுணா திவாகருக்குத் தெரிந்திராவிட்டாலுங்கூட, எம். ஆர். ஸ்டாலினுக்குத் தெரிந்திராமலிருக்க வாய்ப்பில்லை. வாகரை, மூதூர், சம்பூர் என்று தமிழ்மக்கள் துரத்தப்பட்டபின்னால், இன்றைக்கும் அப்படியான குடியேற்றம் கிழக்கிலே இவ்வாண்டிலே, இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும்போது நடந்துகொண்டிருக்கின்றது. ஸ்ராலின் என்பவருக்கு இது தெரிந்திருக்காதா? இப்படியான குடியேற்றமேதான் எங்கள் திருகோணமலையிலேயும் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னாலே நிகழ்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையின் இந்துக்கல்லூரிவிடுதிக்கான காணியிலேதான் அந்நேரத்திலேயே கோகர்ண விகாரைக்கு வருகின்றவர்கள் தங்குவதற்கான சங்கபோதி பௌத்தயாத்திரீகர்மடம் அமைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் பன்குளம் மொரவெவ என்றும் குமரன்கடவை கோமரன்கடவல என்றும் மாற்றப்பட்டதும் மகாவலித்திட்டத்துடனான குடியேற்றங்கள் அல்லைக்கந்தளாயிலே நிகழ்ந்ததும் செல்வநாயகத்தின் அஸ்தி வந்து அனுராதபுரச்சந்தி என்றழைக்கப்படும் கலைமகள் வித்தியாலயம் அல்லது கஞ்சிமடம் பள்ளிக்கூடம் என்ற இடத்திற்குக் கிட்டே கொண்டு வந்தவர்கள் சிறிமாபுர/மகிந்தபுர என்றழைக்கப்படும் குடியேற்றத்திட்டப்பகுதியிலே காரணமேதுமின்றிச் சிங்களக்காடையர்களாலே தாக்கப்படுவதற்குமுன்னாலேதான். ஸ்டாலினுக்குத் திருகோணமலையின் நிகழ்வுகள் பற்றித் தெரியாதென்றால், பேசாமலிருந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, அவரது கிழக்கின் காவலர்பிரதேசத்துக்குள்ளே திருகோணமலையையும் சேர்க்கும் அநாவசியமான தேவையில்லை. யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கத்தாலேயே கிழக்குக்கு இந்நிலை என்று வரையும் ஸ்டாலினின் வாதத்தின்படி பார்த்தால், கல்லோயாத்திட்டத்தினைக் கொண்டு இனவிகிதாசாரத்தினை மாற்ற பாரம்பரியப்பிரதேசங்களிலிருந்து தமிழ், முஸ்லீம்களை விரட்டியதும் தமிழ் என்ற மொழி ரீதியிலான இரண்டாம்பட்சக்குடிமகனாகச் செய்ததும் யாழ்ப்பாணமேலாதிக்கமா? வடக்குமேலாதிக்கத்தின்படிதான் கிழக்கு அமுக்கப்பட்டதென்றால், மட்டக்கிளப்பிலிருந்து வந்து திருகோணமலையைத் தனதென்று உரிமை கொள்ள ஸ்டாலினின் மேலாதிக்கம் எவ்வகைப்பட்டது? கிழக்கிலே யாழ்மேலாதிக்கத்தினைச் சுட்டிக்காட்டுகின்றவர்களும் அதற்குமுன்னாலே யாழ்ப்பாணத்திலேயிருந்து போய்க் குடியேறியவர்கள்தான் என்பதைக் கிண்டி யாராவது பதிவு போடுவார்களாக.
*******
புரிதலின்றி எழுதப்பட்டதோ என்று தோன்றுவகையிலே சில வரிகளைச் சொல்லும் மூன்றாவது ஆள், மிதக்கும் வெளி சுகுணா திவாகர்; ஈழம் தொடர்பான அவருடைய கருத்து & நிலைப்பாடு(ம் அ. மார்க்ஸின் நிலைப்பாடும்) பிரான்ஸின் ஷோபா சக்தியினதும் அவரது நண்பர்களினதும் வழியான புரிதலே என்பது அவதானித்த வரையிலே என் புரிதல்; நான் தவறாகவுமிருக்கலாம். முன்னர் அவருடைய இடுகையொன்றிலே, ஒரு கவிதையின் பின்னாலே, ஈழம் தொடர்பான சில பின்னூட்டங்கள் நானும் அவரும் குழலியும் எழுதிக்கொண்டது ஞாபகமுண்டு. அவரின் அண்மைய தமிழகத்திலே ஈழத்தின் ஆதரவாளர்கள் குறித்த பதிவிலே சில கருத்துகளோடு முற்றாக உடன்படுகிறேன் (தமிழகத்தின் சில திராவிட அரசியல்வாதிகளின் இரட்டைநிலை); சிலவற்றிலே பேசுவதற்கு எனக்கு விபரம் பத்தாதென்பதும் ஈடுபாடில்லையென்பதும் உண்மை (நெடுமாறனின் சாதி + பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருது); சில சந்தர்ப்பங்களிலே சாதி சம்பந்தமாகப் பேச அவருக்குப் பிடிப்பதில்லையென்பதையும் கண்டிருக்கின்றேன் (வளர்மதி அவரின் சாதி பற்றிச் சுட்டியபோது). அதனால், இங்கே அவரின் இடுகையிலிருந்து இரண்டு கருத்துகளின் அபத்தநிலை பற்றிக் கேட்க விரும்புகிறேன்
"தமிழ்த்தேசியம்....ஆனால் (ஏன், ஈழத்திலும் கூட) சாதியக் கறைபடிந்த இந்துத்துவச் சார்போடேயே உள்ளது."
இதற்கு ஆதாரம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பாரிஸின் தலித் மகாநாட்டிலே எம். ஆர் ஸ்டாலினின் பேச்சு மும்பாய் புதியமாதவி சங்கரனுக்குத் தந்த மெய்ஞானம் போலவோ, சத்தியக்கடதாசி என்று நண்பரின் வலைப்பதிவியோ காட்டினாலும் சரிதான். தமிழகத்தின் வர்ணாச்சிரமத்தின் பிரமிட்டுவாழ்நிலைத்தட்டினை அப்படியே ஈழத்துக்கும் நகர்த்தி அதனூடாகப் பார்க்கும் பலரிடமிருந்து வாசிப்பு நிறைந்தவராகத் தோன்றிய சுகுணா திவாகர் கொஞ்சம் விலகி நிலைமைக்கு அண்மித்த கண்ணோட்டத்தோடு பார்த்திருப்பார் என்று எதிர்பார்த்தது தவறோ தெரியவில்லை. தமிழ்த்தேசியம் ஈழத்திலே இந்துக்களை (??, வேளாள சைவர்களை??) மட்டுமேதான் பற்றிப்பிடித்திருக்கின்றதா? ரொக்கிராஜுகளுக்கும் அந்தோனிசாமிகளுக்கும் ஸ்ரனிஸ்லாசுகளுக்கும் சார்ள்ஸ் அன்ரனிகளுக்கும் தமிழ்ச்செல்வன்களுக்கும் சாதியக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடுதான் அடித்திருக்கிறதா? மேலே ஸ்டாலினின் கருத்தின்பின்னாலே குறிப்பிட்ட மாதிரி, குடியேற்றத்திட்டங்களும் சிங்களமொழிச்சட்டமும் யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க நோக்கு என்று சத்தியக்கடதாசி பட்டியல் போட்டுக் கட்டுரையிட்ட பல்கலைக்கழகக்கல்வியும் சாதி இந்துக்களைமட்டுமேதான் தாக்கியதா? ஸ்ரீலங்கா இராணுவமும் அப்படியாகத்தான் சாதியம் கேட்டுத் தாக்கியதா? தமிழ்த்தேசியம் இலங்கையிலும் சாதியக்கரை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளதாக, தமிழச்சிக்கு எடுத்துச் சொல்லும் சுகுணா எங்களுக்கும் அதற்கான "இராணுவம் துரத்தியபோது, கோவிலுக்குள்ளே சாதி குறைந்தவர்களை இன்ன இடத்திலே இவர்கள் விடவில்லை; ஆகவே, தமிழ்த்தேசியம் சாதிக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளது" என்றது மாதிரியான ஆதாரங்களைத் தந்தால், நாங்களும் தெளிவு பெறலாமே? "தமிழ்த்தேசியம் = இந்துத்தமிழர்", "சிங்களத்தேசியம்=சிங்கள பௌத்தர்" என்பதுபோன்ற மஹிந்த சிந்தனய / சிவசேனா சிந்தனை / HINDRAF Philosophy எப்போது சுகுணாவுக்கும் வந்ததென்று அறிந்தால், நமக்கும் புரிதல் கிடைக்குமென்று நம்பலாம். [தமிழ்த்தேசியவாதிகளிலே சாதியக்கறை படைத்தவர்கள் இருப்பது மறுப்பதற்கில்லை; இல்லாதவர்களும் எத்தனை வீதமென்று இலங்கையிலுஞ்சரி இந்தியாவிலுஞ்சரி எண்ணிப்பார்க்கவேண்டாமா? மற்றப்பக்கம், தமிழ்த்தேசியவாதிகள் அல்லாதவரிடமுமேதான் அதே சாதியக்கறை கிடக்கிறது - இலங்கையிலும் இந்தியாவிலும். ]
அவருடைய அடுத்த கருத்து:
"தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை."
விடுதலைப்புலிகள் என்றால், ஈழத்தமிழர்களை வெறுக்கும் தமிழ்நாட்டின் தேசியவாதிகளும் அல்லாத இரட்டைப்படகு பெரியாரிய-தலித்போராளிகளான உங்களைப் போன்றவர்களுங்கூட, திட்டித்தள்ளுகின்றீர்கள். சென்னையிலே தகுந்த ஆவண & அனுமதி அடையாளங்களையும் கையிலே காசையையும் வைத்துக்கொண்டும் வீடெடுக்க, தமிழ்நதி ஈழத்தமிழர் என்ற முகவரியோடு பட்ட க(வி)தையைக் கேட்டு, "வெட்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்" என்று இத்தனை கவிதைகள் வந்த பின்னால், புலம்பெயர் தமிழர்கள் தமிழகத்திலே வசிக்கும் அகதித்தமிழர்கள் பற்றிக் கவலைப்பட்டாலுங்கூட, என்ன செய்ய முடியுமென்கிறார், சுகுணா திவாகர்? ஆழியூரானோ வரவனையானோ போய்ப் பார்த்து எழுதிய கட்டுரைகள், இரவிக்குமார் கட்டுரை வாசித்துத்தான் இப்படியான அகதிகள் நிலையே தமிழகத்திலேயிருக்கும் மக்களுக்கே அப்போது இப்போது தெரிகின்றது? இந்நிலையிலே, புலம்பெயர்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென்று எண்ணுகின்றார்? அகதி முகாமிலே இருப்பவர்களுக்கான கெடுபிடிகளின்பின்னால், உதவ விரும்புகின்றவர்கள்தான் உதவமுடியுமா? உதவி பெற விரும்புகின்ற அகதிதான் பெற்றுவிடவோ பெற்றுவிட்டால் "வால் அடையாளம்" சேராமல் இருக்கமுடியுமா? அகதிகளோடு தொடர்புள்ள தன்னார்வ இயக்கமாகக் காட்டிக் கொள்வதை நடத்து செல்வநாயத்தின் மகன் சந்திரஹாசன், சுப்பிரமணியசுவாமியினதும் இந்திய அரசினதும் சட்டைப்பை பொமரேனியன் என்றுதான் ரீடிப்பிலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே வாசித்த கட்டுரையிலிருந்து உணர்ந்துகொள்ளமுடிகின்றது. எவ்விதத்திலே, ஈழத்தமிழர்கள் உதவ வந்தாலுங்கூட, உதவமுடியும்?
சாதாரணமான இயக்கம் சாராத ஈழத்தமிழர்களுக்கே உதவமுடியாமல் நிலமை இப்படியிருக்க, "தமிழக ஈழ அகதித்தமிழர்கள் குறித்து, விடுதலைப்புலிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று எழுதும் சுகுணா திவாகரின் அவசரத்தினை எண்ணித்தான் கவலைப்பட முடிகின்றது. இதுவரைக்கும், விடுதலைப்புலிகள் தமிழக அகதிகள் குறித்துக் கவலைப்படுவது குறித்து வாசனும் ஜெஜெயும் மட்டுமேதான் அதிகம் கவலைப்பட முடியுமென்று எண்ணியிருந்தேன்.
நிற்க; இந்த அகதிகளைப் பற்றி சுகுணா திவாகரின் புலம்பெயர்ந்த நண்பர்கள் எத்துணை கவலைப்படுகின்றார்கள்? தமிழகம் வரும்போதெல்லாம், அகதிகளைக் காணச் சென்று என்ன செய்கிறார்கள்? அவற்றினைப் பற்றியும் அறிய ஆவல். இவர்களை மையமாக வைத்து நந்தாவும் இராமேஸ்வரமும் எடுக்கும் படத்துறையினர்தான் கவலைப்படுகின்றார்களா? புன்னகைமன்னனிலே பாலச்சந்தரும் கமல்ஹாசனும் கெட்டவர்களாகக் காட்டிவிட்டுப்போனார்கள். இப்போது, இராமேஸ்வரம் வந்தும் இந்தப்படத்துறையினர் உதவி செய்கிறார்களா?
தனிப்பட்ட நிலையிலே, என்னைப் பொறுத்தமட்டிலே, குறைந்தபட்சம் இந்த அகதிகளேனும் உயிருக்கு அதிகம் அஞ்சாமல், அன்றைய நாளுக்கு நிம்மதியாக இருக்கின்றார்கள்; சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து உயிருக்கும் உணவுக்கும் அஞ்சுகின்றவர்களுக்கு முதன்மையிடம் உதவுவதிலே கொடுப்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக்கூடிய ஒரு தேவையாகவிருக்கும்.
*******
நான்காவது கருத்து, புதியமாதவி சங்கரன் பாரிஸின் தலித் மகாநாட்டிலே கலந்து கொண்டபின்னால், கண்ணை வெளிச்சம் திறந்தது (கூசியது??) என்பதுபோல, கீற்றிலே ஒரு கருத்தரங்கு(ப்பயணக்)கட்டுரை வரைந்திருக்கின்றார். தமிழச்சி, அ. மார்க்ஸின் முன்னுரையோடு வந்த ஈழத்துத்தலித் சிறுகதைகளைப் படித்ததோடு ஈழத்திலே தலித்திய நிலை இதுதான் என்பதுபோல முகவுரை எடுத்து எழுதியதற்கு ஒப்பான கட்டுரை புதியமாதவியனது. ஒரு விமானப்பயணக்கட்டுரைகள் எல்லாம் இப்படியாகத்தான் ஒரு புறப்பார்வையினைத் தரும் ஒரு கருத்தரங்கோடு வருமோ என்று தோன்றுகிறது - புலி ஆதரவுக்கூட்டங்களும் இப்படித்தான்; புலியெதிர்ப்புக்கூட்டங்களும் இப்படித்தான். (இயக்குநர் சீமான் அண்மையிலே கனடாவிலே ஈழத்தமிழர்கள் மத்தியிலே பேசும்போது, "ஈழத்திலே தமிழ்மக்கள் படும் துயரங்கள் உங்களுக்குத் தெரியாது; தெரிந்தவன் நான் சொல்கிறேன் கேளுங்கள்" என்ற விதத்திலே (சரியான வரிகள் ஞாபகமில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்) பேசினார் என்பதை ஒரு நண்பர் சொன்னார்; அதுவல்ல அங்கே முக்கியம், கேட்டுக்கொண்டிருந்த ஈழத்திலேயிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அவ்வரிகளுக்கு ஓங்கிக் கைதட்டினார்களாம்.)
புதியமாதவியை பாரதிதாசனின் தமிழ்த்தேசியத்தோடு உலகத்தமிழ்-யாஹூ குழுமத்திலே ஐந்தாறு ஆண்டுகளின் முன்னாலே பார்த்திருக்கிறேன்; பதிவுகள்.கொம்மிற்காக மும்பாயிலே ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவுக்கவிஞர் அறிவுமதியை, அவரின் கருத்தோடோடிச் செவ்வி கண்டு போட்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன். இப்போது, மேலே சொன்ன, கருணாவின் காசுகளைப் பாரிசிலே முதலீடு செய்திருக்கின்றார் என்று கருணைதாசன் என்ற ஒருவர் அறிக்கைவிட, அதை மறுத்து, ஆனால், கருணாவின் கிழக்குத்தலைமையை வரவேற்கும் தோழர் எம். ஆர். ஸ்ராலின் ஈழத்திலே சாதியமே இன்றைய பிரச்சனையென்று கரகோஷத்திடையே சுட்டிக்காட்டியதை, ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவாள தமிழக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாளவளவன் அறிந்து கொள்ளவேண்டுமென்று புதியமாதவி கண் திறந்து சொல்கிறார்
"டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்வி விசவரூபமெடுத்தது"
டொமினிக் ஜீவா, செல்லன் கந்தையா இவர்களுக்கான அவமதிப்புகள் செய்யப்பட்ட காலகட்டத்திலே, யாழ்ப்பாணத்தினைத் தமது வாக்கு எண்ணிக்கையாலே ஜனநாயகப்பிடிக்குள்ளே வைத்திருந்த அஹிம்சைப்பாதைக்குத் திரும்பிய இயக்கங்கள் தமிழ்த்தேசியத்தைவிட்டுவிட்டு, ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவுக்காகப் படை நடத்தியதாகத்தான் வரலாறு. இதைத் தலித் மகாநாடு புதியமாதவிக்குத் தெரிவித்ததா தெரியவில்லை. (ஆனால், அவருடைய செவ்வியிலே தமிழ்த்தேசியம்-தலித்தியம் முரண் பற்றிக் குழம்பியேயிருப்பதாகச் சொல்கிறார்)
அதாவது, தமிழத்தேசியமேதான் ஈழச்சாதியத்துக்கான அடிப்படைக்காரணம்... அல்லது சுகுணா திவாகர் சொன்னது மாதிரியாக, தமிழ்த்தேசியமே சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமேதான்.... சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமென்றால், கிழக்கிலே கழுதாவளையிலேயில்லாத, வடக்கின் மேலாதிக்கத்திலே வந்ததாக எம். ஆர். ஸ்ராலின் சொல்லும் தமிழ்த்தேசியமேதான்.... அந்தத்தமிழ்த்தேசியம் வருவதற்குமுன்னால், அல்லது அது அழிந்துபோனால், சாதியமே அறியாத முன்னைய சமாஜவாதி, பருத்தித்துறையின் பெரும்பிறப்பும் கிளிநொச்சியின் குடியிருப்புமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி சொல்லும் அல்லது எம். ஆர். ஸ்ராலின் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னால் கண்ட சமரசம் உலாவும் ஸ்ரீலங்காவின் சாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் நிலவும்......
........நிலவிலே பேசியவர்களையெல்லாம் சமதர்ம நியாயவான்களென்று மறந்துவிட்டு
......நம்புவோம்.
XI
"Slave, come to my service!" "Yes, my master. Yes?"
"If all this is so, then what is good?"
"To have your neck broken and my neck broken,
to be thrown into a river - that's what is good!
Who is so tall as to reach the heavens?
Who so broad as to embrace plains and mountains?"
"If that's so, I should kill you, slave: I'd rather you go before me."
"And does my master believe that he can survive for three days without me?"
- Joseph Brodsky, 1987, "Slave, Come to My Service"
"Slave, come to my service!" "Yes, my master. Yes?"
"If all this is so, then what is good?"
"To have your neck broken and my neck broken,
to be thrown into a river - that's what is good!
Who is so tall as to reach the heavens?
Who so broad as to embrace plains and mountains?"
"If that's so, I should kill you, slave: I'd rather you go before me."
"And does my master believe that he can survive for three days without me?"
- Joseph Brodsky, 1987, "Slave, Come to My Service"
Wednesday, November 21, 2007
சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்
புலம் - 25
வைகோ-கருணாநிதி இடையேயான சிக்கல் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் என்பது எனது கருத்து; அவர்களுக்குத் தம்மைத் தக்கித்து வைத்துக்கொள்ளத் தேவைப்படும் உள்நாட்டு அரசியல் ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதல்ல என்பதும் வெறும் அரசியற்பார்வையாளர் என்பதற்கப்பால், ஈழத்தின் பிரச்சனையையும் உள்ளே ஊறப்போட்டு, உள்ளூரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்லும் உரிமையும் தேவையும் ஈழத்தமிழர்களுக்கு இல்லை என்பதும் என் உறுதியான நம்பிக்கை. மேலும் நம்பிக்கை என்பதிலும்விட, அப்படித்தான் இருக்கவேண்டுமெனும் கட்டாயத்தேவையென்றே சொல்வேன். (எனக்குத் தனிப்பட்ட அளவிலே, ஜெயலலிதா + சோ + ராம் + சுசுவாமி + எஸ்வி சேகர் என்ற மந்தைவரிசையிலே எழுதப்படாத புரிந்துணர்வுடன் இயங்கும் கூட்டணி எக்காலகட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்குப் பயன் தராதென்ற முழு நம்பிக்கை.)
விடுதலைப்புலிகளின் எம்ஜிஆருடனான அருகாமையும் கருணாநிதியின் மற்றைய ஈழ இயக்கங்களுடனுமான (டெலோ குறிப்பாக) அருகாமையுங்கூட கருணாநிதியினை விடுதலைப்புலிகளுடன் முற்றிலும் நெருங்கவிடவில்லை என்பதிலும் ஓரளவுக்கு உண்மையுண்டு. ஆனாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால், ஐபிகேஎப் காலத்திலே கருணாநிதியின் ஈழத்தமிழர் நிலைப்பாடு, விடுதலைப்புலிகளுடனுங்கூட அத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். (உலகத்தமிழினத்தலைவர் என்ற கோதாவிலே வம்புக்கு கருணாநிதி.எதிர்.பிரபாகரன் என்று நிறுத்தவும் சில உதிரிகள் கமல்.எதிர்.ரஜனி என்ற பாணியிலே நிறுத்தும் குரங்குத்தனத்தினை விட்டுவிடலாம்; அதைக் கருணாநிதியே கணக்கிலே எடுத்திருக்கமாட்டார்) இன்றைய நிலையிலே, ஈழம் தொடர்பான ஆதரவிலே ஆட்சியிலிருக்கும் கருணாநிதிக்கு இருக்கும் சிக்கல்கள், எதிரணியிலேயிருக்கும் வைகோவுக்கிருக்கும் சிக்கல்களை விட அதிகமானதுதான்; கருணாநிதிக்கு இழக்க ஆட்சியிருக்கின்றது; வைகோவுக்குத் தனிப்பட்டச் சிறைப்படவே வாய்ப்புண்டு. அதனால், ஆட்சியிலிருக்கும் கருணாநிதி, தமிழ்ச்செல்வன் இறப்புக்கு அவ்வசனவொழுக்கினை (கவிதை என்று எழுத ஒப்பமில்லை; அது கவிதையா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக்கூட முக்கியமற்ற விடயமிங்கே) எழுதியதும் தொடர்ந்து "தமிழிரத்தத்தொடர்பு" (இவ்விதமான உணர்ச்சிப்பேச்சுகள் தனிப்பட இப்போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கவோ ஹாப் அரிக்கவோ செய்வதில்லை என்றபோதுங்கூட) பற்றிப் பேசியதும் வைகோ தமிழ்ச்செல்வன் நினைவுப்பேரணியிலே கலந்ததிலும்விடப் பெரியவிடயமென்பதிலே எனக்கேதும் சந்தேகமில்லை.
[தனிப்பட்ட, வைகோவினைக் கருணாநிதியினைவிட எனக்குப் பிடிக்கும் என்பதினையும் இவ்விடத்திலே சொல்லிக்கொள்ளவேண்டும்; அவர் ஜெஜெ என்றவரிடத்திலே சேர்ந்திருப்பது பிடிக்கவில்லையென்றபோதுங்கூட, அஃது அவருடைய உள்ளூர் அரசியலென்பதினாலே, எனக்கேதும் சிக்கலில்லை; திருமாவளவன் தமிழகத்தின் தலித் நலனுக்கான எவரோடு கூட்டுச்சேரவேண்டுமென்று சொல்ல எனக்கு உரிமையோ அருகதையோ இல்லை என்பதிலுள்ள தெளிவே இங்குமுண்டு. வைகோவின் நிலையிலே கருணாநிதியிருந்திருப்பின், பதினெட்டு மாதகாலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுக்காகச் சிறையிலே இருந்திருக்க ஆயத்தமாகவிருந்திருக்கமாட்டார் என்பதும் என் தனிப்பட்ட புரிதல்].
ஈழத்தமிழர்கள் (ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டென்பதாலே, என் கருத்தே இங்கே), தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே யார் என்ன செய்யவேண்டும் என்று வாயைத் திறக்காதிருத்தல் உத்தமம் என்று சொல்லமாட்டேன்; உத்தமத்திலும் உத்தமம் என்றே சொல்வேன். ஈழத்தமிழர்களுக்கு(ம் விடுதலைப்புலிகளுக்கும்) தமிழகத்தின் நலன்விரும்பிகள் ஆதரவினை இந்தியத்தேசியவாதப்பூதத்தினைக் கிளப்பிப் பயமுறுத்தும் பத்தி(ரிகை)யாளர்களையும் அரசியல்வாரிகளையும் அரசியல்வங்கரோத்துகளையும் மீறித் தரும்போது, இதுவரை நாள் ஈழத்தமிழர்களோ விடுதலைப்புலிகளோ என்ன செய்யவேண்டுமென்று சொல்லி நான் வாசிக்கவில்லை. அப்படியாக, "அரிவுரை" சொல்வதெல்லாம், இந்து ராம் அன் கோவும் அவற்றினையொத்த தமிழகத்திலேயே அடையாளமற்ற அரசியல் உதிரிகளுமேதான். இத்தகு பெருந்தன்மையான போக்கினை ஈழத்தமிழர்களிலே சிலர் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவர்களின் குறைப்பார்வை, ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாலே (அல்லது தாம் ஆதரிக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதாலே), ஈழத்தமிழர் நலன்விழை தமிழக அரசியல்வாதிகள் "இதைச் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது" என்று தமிழக உள்ளூர் அரசியலிலே மூக்கினை நுழைக்கும் நிலைக்கு உள்ளாக்குகின்றது. தமிழகத்தின் அரசியற்கூட்டணிகள், கூத்தணிகள், கூற்றணிகளைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு, வெறும் தம் நலனைப் பிணைத்துக்கொண்டு காண் அரசியற்பார்வையாளர்களாக - 'புஷ் ஈராக்கிலே என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது' என்று சொல்வதுபோல- கருத்துகள் இருப்பதிலே தவறில்லை; ஆனால், அதற்குமேலே, "ஈழத்தமிழர் நாம் சொல்கிறோம், கருணாநிதி சரி/பிழை; வைகோ பிழை/சரி" என்று பேச உரிமையுமில்லை; நடைமுறைத்தக்கித்தலுக்கு, அப்படிப்பேசுவது நலனானதுமல்ல. ஈழத்தமிழர்கள் அல்லர், தமிழகத்துத்தேர்தல்களிலே வாக்குகளை இடுகின்றவர்கள் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும்; அப்படியாக இட்டாலுங்கூட, தமிழகத்திலிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையோடு பார்க்கும்போது, நாம் எதையும் எம் சொந்த விருப்புவெறுப்புக்கருத்துகளினாலே மட்டும் சாதித்துவிடமுடியாதென்பதையும் உணரவேண்டும். தமிழகத்தேர்தல்களிலே வாக்கிடுகின்றவர்கள், தமிழ்வலைப்பதிவுத்தமிழர்களல்ல; ஈழத்தமிழர்கள் (& அவர்களின் நலன்விரும்பிகள்) தன்னலன் பேணும் திட்டங்களை வெற்றி பெறச்செய்ய தம் நலன்களுக்கு எதிரானவர்களுக்குச் சமனான தொகையிலேயிருப்பது வலைப்பதிவுகளிலே மட்டுமே இன்றைய நிலையிலே சாத்தியப்படும்.
இன்றைய நிலையிலே, எமது முக்கியமான தேவை, தமிழகத்திலே எப்படியாக ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் பலம் பெறுகின்றன என்பதிலேயிருக்கவேண்டுமேயொழிய, தமிழகத்தின் ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் தமக்குள்ளே தமிழகத்தின் உள்ளூராட்சியிலே என்ன நிலைப்பாடுகள், எவ்விதமான கூட்டணிகள் கொண்டிருக்கவேண்டுமென்பதல்ல. சுசுவாமி, 'இந்து' ராம் போன்ற கொள்கையளவிலான ஈழ எதிர்ப்புசக்திகள் எப்படியாக தமிழக மக்களிடையேயும் இந்தியாவின் இலங்கை தொடர்பான செயலளவிலேயும் குரலிழந்து பலமிழந்து ஓரங்கட்டப்படவேண்டும் என்பது முக்கியமேயொழிய, கருணாநிதி/வைகோ/ராமதாஸ்/திருமாவளவன் எப்படியாகக் கூட்டணி தம் உள்ளூர் அரசியலுக்காகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதிலல்ல. சொல்லப்போனால், ஆளும் கட்சிகள் & எதிர்க்கட்சிகள் என்று இருபுறங்களிலும் ஈழத்தமிழர்கள்நலன்பேணுகின்றவர்கள் இருப்பதும் மேன்மையே; ஈழத்தமிழர்களின் நலன் ஒரு பக்கத்துக்குரலாகக் கூர்மைப்படுத்தப்படும் அவலம் குறைகின்றது. நெடுமாறன் கருணாநிதியினை ஆதரிக்காமல், சுப. வீரபாண்டியன் கருணாநிதியினை ஆதரித்தாலுங்கூட, ஈழத்தமிழர்கள் விடயத்திலே அவர்களிருவரும் காட்டும் குரலின் ஒத்திசைப்பிலே எவ்விதப்பிசிறுமிருப்பதில்லை.
கருத்தளவிலே என் விருப்பு வெறுப்புகள் தமிழக அரசியல் குறித்தும் அதன் கட்சிகள் குறித்தும் எதுவாகவுமிருக்கலாம்; மாயத்தேவர் & நாராயணசாமி எம்ஜிஆருடன் கூட்டுச்சேர்ந்திருக்கவேண்டுமா இல்லையா என்பதிலிருந்து, சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கியிருக்கத்தான் வேண்டுமா, திருமாவளவன்&ராமதாஸ் ஆகியோர் குஷ்புவினைத் தாக்கியிருக்கவேண்டுமா என்பவை ஊடாக, கனிமொழி, சல்மா அரசியலிலே இறங்கியிருக்கவேண்டுமா, திருமாவளவன் பார்ப்பனியசடங்குகளைச் செய்யவேண்டுமா, ரவிக்குமார் தொடர்ந்து பெரியாரைத் தாக்கத்தான் வேண்டுமா என்பதுவரை எனக்கு ஆயிரம் தனிப்பட்ட கருத்துகள் தமிழக அரசியல் குறித்து இருந்திருக்கின்றன; இருக்கின்றன. ஆனால், ஈழம் குறித்து வரும்போது, நான் அமெரிக்க "liberal, but not progressive" உயூதனாகிறேன் - "Anything, but Israel"; பாரதியும் டென்ஸியாவோ பிங்கும் சேரச்சொன்னால், "எலியைப் பிடிக்கக்கூடிய பூனை (எம்மைத் தாக்காதவரைக்கும்) எந்த நிறம் இருந்தாலும்-அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிது என்றும்-இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ? வண்ணங்கள் வேறுபட்டால் -அதில் மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்-இங்கு யாவருக்கும் ஒன்றெனல் காணீர்." சண்டே லீடர் சொல்வதன்படி "ஏசியன் ரிபியூன்" ராஜசிங்கம் திருவிளையாடல்கள், பாரிஸ் தலித்மகாநாடு அமைப்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின்(ஞானம்)- இலங்கையரசு வனவிலங்கதிகாரியென்று கொடுத்த கடவுட்சீட்டுடன் இங்கிலாந்து போன கருணா உறவுக்குற்றச்சாட்டுகள், பேச்சுவார்த்தை நடக்கவேண்டும் என்று சொல்லும் விழாவிலேயே ஆயுதம் கையளிக்கும் அமெரிக்கத்தூதுவர், "“Brigadier” Thamilchelvan, The “Smiling” Face of LTTE" என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை "Direct Hit" என்று தேவைக்கேற்ப உள்ளடக்கமும் சுருக்கி வெளியிடும் Frontline, கடந்த பதினைந்து மாதங்களில் 4082 விடுதலைப்புலிகளும் 1066 மக்களும் இறந்தார்கள் என்ற இந்திய உளவுத்தாபனம்சார் the South Asia Intelligence Review of the South Asia Terrorism Portal அறிவுக்குளத்தின் அற்புதக்கணக்கெடுப்பினை வெளியிடும் outlook, ஈழத்தமிழர்களின் கடவுட்சீட்டுகள் பற்றிய கருத்தின்மேலே கேள்வியெழுப்பினால், "எனது இந்தியா; எனது தேசம்" என்று தமது ஐந்தாம் உரிமைக்கு உருக்கொடுத்து, 180 பாகையிலே வாதத்தினைத் திருப்பும் இந்தியத்தமிழ்ப்பத்திரிகையாளர்கள் இப்படியானவர்கள்/வை பற்றிய செய்திகளை வாசிக்கும்போது, நான் தொடர்ச்சியாக, John J. Mearsheimer உம் Stephen Walt உம் எழுதிய "The Israel Lobby and U.S. Foreign Policy" நூலினை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.
நாம் எம் நியாயங்களை எமக்கே நியாயமாகப்படும் வழிகளிலே செயற்பட்டுத் தக்கிப்பதுதான் முக்கியம்; ஈழத்தின் வடக்குக்கிழக்கிலே இனவிகிதாசாரம் திட்டமிட்டப்பட்டு மாற்றப்படும்வேளையிலே அதையே முன்னிலைப்படுத்தி ஆதாரமாக அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவர் பொஸ்ரன்குளோப்புக்கு ஈழத்தின் கிழக்கிலே தமிழர்கள் உரிமைகொள்ளமுடியாதென்ற விதத்திலே ஆசிரியருக்கான கடிதம் வரையும்போது, கிண்ணியாவிலே, முஸ்லீம் குடியிருப்புகளிலேயிருப்பதாலே சாதி பற்றி எமக்குப் பாதிப்பில்லை என்று ஒருவர் சொன்னதாகத் 'தூ'வி, கீதையைப் பின்பற்றும் நெடுமாறனுக்கும் திருமாவளவனுக்கும் (sic), தம்மோபதேசம் செய்யும் சிங்களவர்களே மேல் என்று எழுதுகிற "பாரிஸவாதக்காரர்கள்" இருக்கும்போது, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று பார்ப்பதோ, ஈழத்தவருக்குக் கூடுதலான ஆதரவு வழங்குவது வைகோவா, கலைஞரா என்று பட்டிமன்றம் வைப்பதோ ஈழத்தவருக்கான இப்பொழுதின் -மட்டுமல்ல, எப்பொழுதினதும்- முக்கிய வேலையல்ல; தேவையுமல்ல.
நூற்றாண்டின் முன்னான, ஆர்மீனியர்கள் மீதான துருக்கியக்கொடுமைகளையோ, துருக்கியகுர்திஷியர்களின் போராட்டங்களையோ பெருவிரல்நுனியிலே அமுக்கும் பேரரசுகளின் காலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்; கருத்துகளையும் நடைமுறைகளையும் ஒன்று சேர முன்னெடுத்துக்கொண்டு செல்லக்கூடிய வசதியினைக் கொண்டிருக்கவில்லை; "ஆயுதம் தாங்காத பொதுமகனை/மகளைக் கொல்லாத எதுவுமே பயங்கரவாதமில்லை" என்ற எளிமையான சூத்திரத்தினை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதுபோலவே, எமக்கே நியாயமென்று படும் எளிமையான தீர்வுகளைச் சிக்கலான கொள்கை-நடைமுறைப்படுத்தல் நிலைகளுக்கிடையே எடுக்கவேண்டிய நிலையிலேயிருக்கின்றோம். இந்நிலையிலே, தம்மளவிலே பலமற்ற எரித்திரியாவோ, பாஸ்க்/கடலோனியவிடுதலையமைப்புகளோ ஈழவிடுதலையை ஆதரிக்கின்றன என்று மகிழ்ச்சியோடு பதிவுகளிடுவதாலோ, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; இருட்டினில் நீதி மறையட்டுமே; தன்னாலே வெளிவரும் தயங்காதே; தலைவர் தக்க பதிலளிப்பார்; கலங்காதே" என்று எம்ஜிஆர் படப்பாடலாகப் பதிவெழுதுவதாலோ, எமக்குள்ளே பழங்கதை பேசி, எம் உற்சாகத்தினைத் தட்டியெழுப்புவதற்கப்பால் எதுவுமே நடந்துவிடப்போவதில்லை. ஈழ விடுதலையை ஆதரிக்கக்கூடிய (குறைந்தபட்சம் எதிர்க்காத) இந்திய ஆங்கில ஊடகமொன்றினை ஏற்படுத்த உழைக்காத நாங்கள், கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியல் பற்றிப் பேசுவதற்கு எதற்காக இத்துணை பொழுது வீணாக்கவேண்டும்?
சென்ற வாரம் நெவாடாவிலே அமெரிக்க ஜனநாயகக்கட்சி சார்பிலே அதிபருக்காகப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கக் கேட்டு நிற்கும் வேட்பாளர்கள் இடையே விவாதம்; ஒரு பாக்கிஸ்தானின் இன்றைய நிலை பற்றி ஒரு கேள்வி; "பாக்கிஸ்தானிலே அமெரிக்க அதிபர் எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? அமெரிக்க நலன்களையா?" இங்கே வேட்பாளர்கள் என்ன பதில்களைத் தந்தார்கள் என்பதல்ல நாம் பெறவேண்டிய பாடம்; எவ்விதத்திலே அமெரிக்கா(வும் இந்தியாவும் - பி. ராமன், ஹரிஹரன் "ஆய்வுக்கட்டு உரை"களைக் காண்க) நடக்கமுயல்கின்றதென்பதையே காட்டுகின்றது; இதே மனப்பாங்கிலேதான், குடியரசுக்கட்சி சார்பான நவ-பழமைவாதப்போக்குள்ள ரைஸும் போன ஆண்டு லெபனானிலே இஸ்ரேலின் வெற்றியின் பின்னால், "we have to talk (from the balance of power at this very moment) - the status quo; not from where we were two weeks back (in which time Lebanon militants seemed to be in better position)" என்ற பாணியிலே சொன்னார்; துருக்கியிலே ஆர்மீனியர்/குர்தீசியர் தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்; தூதுவர் பிளேக், ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம் கையளித்துப் பேச்சுவார்த்தைக்கும் இனிப்பினைக் கொடுக்கின்றார். இச்சூழலிலே ஈழத்தமிழராக நாம் ஆதரிப்பது, கொள்கையளவிலே, ஜனநாயகக்கட்சியையா, குடியரசுக்கட்சியையா என்பதல்ல கேள்வி; வெல்லும் கட்சி ஈழத்தமிழருக்கு, அவர்களின் இனவிகிதாசாரம் திட்டமிடப்பிழிந்து மாற்றப்படும் நிலையிலே, அவர்களுக்கு ஆதரவாக என்னத்தினைச் செய்யவைக்கமுடியுமென்பதையே காணவேண்டும். இதே நோக்குடனேதான் கனடாவிலோ, பிரிட்டனினோ நாம் நோக்கவேண்டும். ஹார்ப்பரை ஈழவேந்தன் சந்தித்தாலுஞ்சரி, தமிழ்ச்செல்வன் நினைவுவிழாவிலே லிபரல் டெமோகிரட்டிக் கட்சி பாஉ கலந்துகொண்டாலுஞ்சரி, வெல்வது நமது நலனும் நோக்காகவேயிருக்கவேண்டும். உலகம் சார, புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களின் வரும் சந்ததிகளும் தாம் வாழும் நாட்டிலே அவ்வூரரசியலிலே -ஈழநலனையும் ஒரு பகுதியாக இருத்தி,- பங்கேற்க வேண்டும். இத்தாலியர்களின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இன்றைக்கும் இத்தாலிய அரசவையிலே மேலவையிலே சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையை மனதிலேயிருத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களின் உலகலளாவிய அரசியல்வாதிகள்கூட்டமைப்பொன்று உருவாகி, அவரவர் நாட்டிலே ஈழத்தமிழர்களின் நலனையும் பேசும்வகையிலே ஆக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், நாம் தக்கிக்கமுடியாது. நிலைமை இப்படியாகவிருக்கும்போது, கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியலைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமென்ன என்று எனக்குப் புரியவில்லை. தேவையற்ற பிரச்சனைகளை மட்டுமே இவை கொணரமுடியும்.
"சமாதான ஒப்பந்த"த்தின் பின்னால், கௌசல்யன், சந்திராநேரு, ஜோஸப் பரராஜசிங்கம், விக்கினேஸ்வரன், ரவிராஜ் கொல்லப்பட்டபோது கள்ளமோனத்தவமிருந்த பேருலகு, கதிர்காமர் இறந்தபோது "பயங்கரவாதம்" என்று ஓலமிட்டத்தைக் கண்ட எமக்கு, தமிழ்ச்செல்வனின் கொலலயைக்கூடக் கதிர்காமரின் இறப்பிலிருந்துதான் 'சமாதானகாலத்திலே' அரசியல்வாதிகள் கொல்லப்படத் தொடங்கியதாக வரலாறு எழுதும்போது ஆச்சரியமேற்படவில்லை. ஆனால், இதனை நாம் மட்டும் உணர்ந்தால் போதுமா? அல்லது, "தமிழ்ச்செல்வன் இறந்தார்; லபோ! லபோ!!" என்று அரற்றினால் மட்டும் போதுமா? ஒருவன் இயக்கத்த்துக்கென்று போனால் இறப்பினை எதிர்பார்த்தே போகிறான்; இறப்புகள் இல்லாமல், ஆறு தாண்டி அக்கரை போகலாமென்று நம்பியா போனார்கள்? கொண்ட நோக்கத்துக்காவல்லவா? அவ்விறப்பும் அந்நோக்கத்திற்கு ஓரளவுக்கு பயன்படுமென்றால், அதைப் பயன்படுத்துவதுதான் இறந்த போராளிக்கும் அவனின் நோக்குக்கும் செய்யப்படும் கைமாறு. அவ்வகையிலேதான் தமிழ்ச்செல்வனின் இறப்பினைப் பார்க்கவேண்டும். இணையத்திலே சிலர் விடுதலைப்புலிகள் சாதியமைப்பினைப் பேணுகின்றார்கள் என்பது தொடக்கம் தமிழ்நாட்டிலே ஈழத்தமிழாதரவு செத்துவிட்டது என்பதாக அமைக்கப்பட்ட கருத்தமைவுகள் உடைந்துபோக, இவ்விறப்பின் பின்னாலான வாதங்களும் பதில்வாதங்களும் உதவியிருக்கின்றன. அவ்வகையிலே தமிழ்ச்செல்வனின் இறப்பு அமுக்கப்பட்ட எமது குரலைக் கேட்க உதவியிருக்கின்றது. தமிழ்ச்செல்வன் மறந்து அழகிய தமிழ்மகன் விஜயுக்குக் கட் அவுட் வைக்கப்போகும்முன்னால், அதனை நாம் பயன்படுத்தவேண்டும். (கருணாநிதியின் 'கவிதை' அந்தளவிலே ஈழத்தமிழர் நினைவினைத் தமிழகத்திலே நீட்டப் பயன்பட்டிருக்கின்றது என்பதிலே மகிழ்ச்சியடையவேண்டும்; ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்குப் போனால், தன்னை நோக்கி மக்கள் எதிர்ப்பு திரும்பிவிடுமோ என்று அடங்கிக்கொண்டதையும் ஞாபகத்திலேயிருத்தவேண்டும்). இந்நிலையிலே, கருணாநிதி-வைகோ அரசியலிலே எமக்கென்ன கவலை வேண்டும்? "தமிழ்ச்செல்வனின் பின்னால், நடேசனை ஏன் நிறுத்தினீர்?" என்று கருணாநிதியோ, வைகோவோ விடுதலைப்புலிகளைப் பார்த்துக்கேட்டார்களா? ஆக, டிபிஎஸ் ஜெயராஜுக்கும் ப்ரொண்ட்லைனுக்கும் பிகே பாலச்சந்திரன்+ இந்துஸ்தான் டைம்ஸுக்குமட்டுமேதான் நடேசன் இந்தியாவிடம் கெஞ்சுவாரா மிஞ்சுவாரா என்ற கணிப்பெடுப்புகள் முக்கியமாகின்றன. இதுதான் நிலையென்றிருக்க, நாமேன், "வைகோ, நெடுமாறன் கைது பற்றிப் புலிகள் கருத்தினைத் தெரிவிக்கமறுத்துவிட்டார்கள்" என்ற இந்துவின் "முக்கியமான, ஆய்வுச்"செய்திக்குச் சேர்ந்தாடுவதுபோல, உதயன் தலையங்கத்தையும் கோகர்ணனின் தினக்குரல் கட்டுரையையும் போட்டு வறுத்தெடுத்துச் சொல்முத்துப் பொறுக்கவேண்டும்?
கொஸூவோவிலே ஒரு முன்னைய அல்பேனியவழிவந்த கெரில்லாப்போராளி ஆட்சிக்கு வருகின்றார்; பயங்கரவாதத்தினை எதிர்க்கும் ஏகாதிபத்தியங்களுக்கு எவ்வித எதிர்ப்புமிருப்பதாகத் தெரியவில்லை; சேர்பிய"க்கொலையாளிகள்" வரவில்லை என்பதைமட்டும் தெரிவித்துக்கொள்கின்றார்கள். சென்ற ஆண்டு, ஒரு விவரணம் (The Broklyn Connection) வந்தது; அமெரிக்கப்பிரஜையான கொஸவோ-அல்பேனியர் ஒருவர் எப்படியாக அமெரிக்கத்தேர்தலிலே நிற்பவர்கள் தொடக்கம் ஆயுதக்கடத்தற்காரர்கள்வரை உறவு வைத்திருந்து கொஸவோ-அல்பேனியர்களுக்காகப் போராடுகின்றார் என்பதை அவரை விவரணத்துக்காக எடுக்க அனுமதித்த விவரணம். அமெரிக்க அரசுக்கு இதுவரை அவர் பயங்கரவாதியாகத் தெரிந்தாரா என்று தெரியவில்லை. ஏகாதிபத்திய அரசியல் "நம் ஏகாதிபத்திய அதிபர் X நாட்டிலே எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? எம் ஏகாதிபத்திய நலன்களையா?" என்பதாக நடப்பது; இதிலே, கோக்கோகோலாவும் உள்ளாடைதயாரிக்கும் சிறுபிள்ளைகளும் மொன்ஸாண்டோ விதைகளும் கருத்தளவிலே எவ்விதமான தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், நடைமுறையிலே எத்துணை X நாட்டிலே ஏற்கனவே வேறேதோ கருத்தமைப்பிலே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுபான்மைக்கு மேலதிகத்தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். காலாசினிக்கோவ் நெத்திப்பொட்டிலே நிற்கும் நேரத்திலே, உபரி உற்பத்தியும் உள்ளூர் உற்பத்தியும் கொக்கோகோலாவுக்கு அண்டி வாரோல் வரைந்த ஓவியமும் பேசிப் பயனாகப்போவதில்லை. அதற்காக, கருத்தாக்கத்தினை விட்டுவிடவேண்டிய அவசியமில்லை. ஆனால், அதனைச் செயற்படுத்தும் தளமும் போக்கும் வேறாகவிருக்கவேண்டும். கடைசியிலே தக்கிப்பது, "Anything, but Israel" என்பதுதான். கருணாநிதியும் வைகோவும் ஸ்டாலினும் மார்க்ஸும் அவர்களின் உள்ளூர் அரசியலுக்காக, கவிதை எழுதினால் என்ன, கடதாசியிலே மலம் துடைத்து அனுப்பினாற்றான் நமக்கென்ன? வாயை நமக்குத் தேவையற்ற பிரச்சனையென்று மூடிக்கொண்டிருக்கவேண்டாமா? அல்லது "முட்டி முடுக்குது, மூத்திரம் பெஞ்சுதான் ஆகோணும்" என்றால், "இது நானாக என் கிணத்திலே வீட்டுத்துலாவைப் போட்டு அள்ளிக்குடிச்ச தண்ணியை வைத்து என்ரை உடம்புச்சிறுநீர்த்தொகுதி உற்பத்தியாக்கிய சொந்த மூத்திரம்" என்ற ஒரு கருத்தினையும் சேரச் சொல்லிவிட்டுப் பெய்யக்கூடாதா? எதுக்கு "ஈழத்தவர் கருணாநிதி பற்றிக் கருத்து, கந்தசாமி பற்றிக் கக்கூசு" என பாணியிலே இந்துவுக்குச் செய்தி அள்ளிக்கொடுக்கும் தேவை??
[இப்படியான சூழலிலே, இரயாகரன் போன்றவர்கள், புலிபாஸிஸ்ட் என்று திட்டினால், அவர்களுக்கு Umbreto Eco இன் "Eternal Fascism: Fourteen Ways of Looking at a Blackshirt" இனைச் சுட்டிக் காட்டி அவர்களையும் ஏதோவிதத்திலே பாஸிஸ்ட் ஆக்கிவிட்டுப்போகலாம். அட! மிஞ்சி மிஞ்சிப்போனது, பாலஸ்தீனர்களின் குரலுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றவர்களைக்கூட, "Islamofascists" என்று திட்டுகின்றவர்களினை "American Fascists: The Christian Right and the War on America " என்று திட்டி நூல் வந்திருக்கின்றது. அந்தளவிலே சந்தோஷம் - நான் தனியன் அல்லன் என்று :-)]
தமிழக அரசியல் குறித்து ஓர் ஈழத்தமிழனின் மிகவும் சுயநலமான, சந்தர்ப்பவாதக் கருத்தாக இது தோன்றலாம்; ஆனால், கொஞ்சம் நிதானமாக வாசித்தால், அப்படியல்ல என்று புரிந்துகொள்ளப்படலாம்.
தொடர்புள்ள பதிவொன்று
வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? - வசந்தன்

//yet to be edited//
"America is about to enter a presidential election year. Although the outcome is of course impossible to predict at this stage, certain features of the campaign are easy to foresee. The candidates will inevitably differ on various domestic issues - health cre, abortion, gay marriage, taxes, education, immigration - and spirited debates are certain to erupt on a host of foreign policy questions as well........
Yet on one subject, we can be equally confident that the candidates will speak with one voice. In 2008, as in previous election years, serious candidates for the highest office in the land will go to cosiderable lengths to express their deep personal commitment to one foreign country - Israel-as well as their determination to maintain unyielding U.S. support for the Jewish state. Each candidate will emphasize that he or she fully appreciates the multitude of threats facing Israel and make it clear that, ig elescted, the United States will remain firmly committed to defending Israel's interests under any and all circumstances. None of the candidates is likely to criticize Israel in any significant way or suggest that the United Sates ought to pursue a more evenhanded policy in the region. Any who will probably fall by the wayside"
-John J. Mearsheimer and Stephen Walt, in the Introduction of their book, "The Israel Lobby and U.S. Foreign Policy"
வைகோ-கருணாநிதி இடையேயான சிக்கல் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் என்பது எனது கருத்து; அவர்களுக்குத் தம்மைத் தக்கித்து வைத்துக்கொள்ளத் தேவைப்படும் உள்நாட்டு அரசியல் ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதல்ல என்பதும் வெறும் அரசியற்பார்வையாளர் என்பதற்கப்பால், ஈழத்தின் பிரச்சனையையும் உள்ளே ஊறப்போட்டு, உள்ளூரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்லும் உரிமையும் தேவையும் ஈழத்தமிழர்களுக்கு இல்லை என்பதும் என் உறுதியான நம்பிக்கை. மேலும் நம்பிக்கை என்பதிலும்விட, அப்படித்தான் இருக்கவேண்டுமெனும் கட்டாயத்தேவையென்றே சொல்வேன். (எனக்குத் தனிப்பட்ட அளவிலே, ஜெயலலிதா + சோ + ராம் + சுசுவாமி + எஸ்வி சேகர் என்ற மந்தைவரிசையிலே எழுதப்படாத புரிந்துணர்வுடன் இயங்கும் கூட்டணி எக்காலகட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்குப் பயன் தராதென்ற முழு நம்பிக்கை.)
விடுதலைப்புலிகளின் எம்ஜிஆருடனான அருகாமையும் கருணாநிதியின் மற்றைய ஈழ இயக்கங்களுடனுமான (டெலோ குறிப்பாக) அருகாமையுங்கூட கருணாநிதியினை விடுதலைப்புலிகளுடன் முற்றிலும் நெருங்கவிடவில்லை என்பதிலும் ஓரளவுக்கு உண்மையுண்டு. ஆனாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால், ஐபிகேஎப் காலத்திலே கருணாநிதியின் ஈழத்தமிழர் நிலைப்பாடு, விடுதலைப்புலிகளுடனுங்கூட அத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். (உலகத்தமிழினத்தலைவர் என்ற கோதாவிலே வம்புக்கு கருணாநிதி.எதிர்.பிரபாகரன் என்று நிறுத்தவும் சில உதிரிகள் கமல்.எதிர்.ரஜனி என்ற பாணியிலே நிறுத்தும் குரங்குத்தனத்தினை விட்டுவிடலாம்; அதைக் கருணாநிதியே கணக்கிலே எடுத்திருக்கமாட்டார்) இன்றைய நிலையிலே, ஈழம் தொடர்பான ஆதரவிலே ஆட்சியிலிருக்கும் கருணாநிதிக்கு இருக்கும் சிக்கல்கள், எதிரணியிலேயிருக்கும் வைகோவுக்கிருக்கும் சிக்கல்களை விட அதிகமானதுதான்; கருணாநிதிக்கு இழக்க ஆட்சியிருக்கின்றது; வைகோவுக்குத் தனிப்பட்டச் சிறைப்படவே வாய்ப்புண்டு. அதனால், ஆட்சியிலிருக்கும் கருணாநிதி, தமிழ்ச்செல்வன் இறப்புக்கு அவ்வசனவொழுக்கினை (கவிதை என்று எழுத ஒப்பமில்லை; அது கவிதையா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக்கூட முக்கியமற்ற விடயமிங்கே) எழுதியதும் தொடர்ந்து "தமிழிரத்தத்தொடர்பு" (இவ்விதமான உணர்ச்சிப்பேச்சுகள் தனிப்பட இப்போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கவோ ஹாப் அரிக்கவோ செய்வதில்லை என்றபோதுங்கூட) பற்றிப் பேசியதும் வைகோ தமிழ்ச்செல்வன் நினைவுப்பேரணியிலே கலந்ததிலும்விடப் பெரியவிடயமென்பதிலே எனக்கேதும் சந்தேகமில்லை.
[தனிப்பட்ட, வைகோவினைக் கருணாநிதியினைவிட எனக்குப் பிடிக்கும் என்பதினையும் இவ்விடத்திலே சொல்லிக்கொள்ளவேண்டும்; அவர் ஜெஜெ என்றவரிடத்திலே சேர்ந்திருப்பது பிடிக்கவில்லையென்றபோதுங்கூட, அஃது அவருடைய உள்ளூர் அரசியலென்பதினாலே, எனக்கேதும் சிக்கலில்லை; திருமாவளவன் தமிழகத்தின் தலித் நலனுக்கான எவரோடு கூட்டுச்சேரவேண்டுமென்று சொல்ல எனக்கு உரிமையோ அருகதையோ இல்லை என்பதிலுள்ள தெளிவே இங்குமுண்டு. வைகோவின் நிலையிலே கருணாநிதியிருந்திருப்பின், பதினெட்டு மாதகாலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுக்காகச் சிறையிலே இருந்திருக்க ஆயத்தமாகவிருந்திருக்கமாட்டார் என்பதும் என் தனிப்பட்ட புரிதல்].
ஈழத்தமிழர்கள் (ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டென்பதாலே, என் கருத்தே இங்கே), தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே யார் என்ன செய்யவேண்டும் என்று வாயைத் திறக்காதிருத்தல் உத்தமம் என்று சொல்லமாட்டேன்; உத்தமத்திலும் உத்தமம் என்றே சொல்வேன். ஈழத்தமிழர்களுக்கு(ம் விடுதலைப்புலிகளுக்கும்) தமிழகத்தின் நலன்விரும்பிகள் ஆதரவினை இந்தியத்தேசியவாதப்பூதத்தினைக் கிளப்பிப் பயமுறுத்தும் பத்தி(ரிகை)யாளர்களையும் அரசியல்வாரிகளையும் அரசியல்வங்கரோத்துகளையும் மீறித் தரும்போது, இதுவரை நாள் ஈழத்தமிழர்களோ விடுதலைப்புலிகளோ என்ன செய்யவேண்டுமென்று சொல்லி நான் வாசிக்கவில்லை. அப்படியாக, "அரிவுரை" சொல்வதெல்லாம், இந்து ராம் அன் கோவும் அவற்றினையொத்த தமிழகத்திலேயே அடையாளமற்ற அரசியல் உதிரிகளுமேதான். இத்தகு பெருந்தன்மையான போக்கினை ஈழத்தமிழர்களிலே சிலர் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவர்களின் குறைப்பார்வை, ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாலே (அல்லது தாம் ஆதரிக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதாலே), ஈழத்தமிழர் நலன்விழை தமிழக அரசியல்வாதிகள் "இதைச் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது" என்று தமிழக உள்ளூர் அரசியலிலே மூக்கினை நுழைக்கும் நிலைக்கு உள்ளாக்குகின்றது. தமிழகத்தின் அரசியற்கூட்டணிகள், கூத்தணிகள், கூற்றணிகளைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு, வெறும் தம் நலனைப் பிணைத்துக்கொண்டு காண் அரசியற்பார்வையாளர்களாக - 'புஷ் ஈராக்கிலே என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது' என்று சொல்வதுபோல- கருத்துகள் இருப்பதிலே தவறில்லை; ஆனால், அதற்குமேலே, "ஈழத்தமிழர் நாம் சொல்கிறோம், கருணாநிதி சரி/பிழை; வைகோ பிழை/சரி" என்று பேச உரிமையுமில்லை; நடைமுறைத்தக்கித்தலுக்கு, அப்படிப்பேசுவது நலனானதுமல்ல. ஈழத்தமிழர்கள் அல்லர், தமிழகத்துத்தேர்தல்களிலே வாக்குகளை இடுகின்றவர்கள் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும்; அப்படியாக இட்டாலுங்கூட, தமிழகத்திலிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையோடு பார்க்கும்போது, நாம் எதையும் எம் சொந்த விருப்புவெறுப்புக்கருத்துகளினாலே மட்டும் சாதித்துவிடமுடியாதென்பதையும் உணரவேண்டும். தமிழகத்தேர்தல்களிலே வாக்கிடுகின்றவர்கள், தமிழ்வலைப்பதிவுத்தமிழர்களல்ல; ஈழத்தமிழர்கள் (& அவர்களின் நலன்விரும்பிகள்) தன்னலன் பேணும் திட்டங்களை வெற்றி பெறச்செய்ய தம் நலன்களுக்கு எதிரானவர்களுக்குச் சமனான தொகையிலேயிருப்பது வலைப்பதிவுகளிலே மட்டுமே இன்றைய நிலையிலே சாத்தியப்படும்.
இன்றைய நிலையிலே, எமது முக்கியமான தேவை, தமிழகத்திலே எப்படியாக ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் பலம் பெறுகின்றன என்பதிலேயிருக்கவேண்டுமேயொழிய, தமிழகத்தின் ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் தமக்குள்ளே தமிழகத்தின் உள்ளூராட்சியிலே என்ன நிலைப்பாடுகள், எவ்விதமான கூட்டணிகள் கொண்டிருக்கவேண்டுமென்பதல்ல. சுசுவாமி, 'இந்து' ராம் போன்ற கொள்கையளவிலான ஈழ எதிர்ப்புசக்திகள் எப்படியாக தமிழக மக்களிடையேயும் இந்தியாவின் இலங்கை தொடர்பான செயலளவிலேயும் குரலிழந்து பலமிழந்து ஓரங்கட்டப்படவேண்டும் என்பது முக்கியமேயொழிய, கருணாநிதி/வைகோ/ராமதாஸ்/திருமாவளவன் எப்படியாகக் கூட்டணி தம் உள்ளூர் அரசியலுக்காகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதிலல்ல. சொல்லப்போனால், ஆளும் கட்சிகள் & எதிர்க்கட்சிகள் என்று இருபுறங்களிலும் ஈழத்தமிழர்கள்நலன்பேணுகின்றவர்கள் இருப்பதும் மேன்மையே; ஈழத்தமிழர்களின் நலன் ஒரு பக்கத்துக்குரலாகக் கூர்மைப்படுத்தப்படும் அவலம் குறைகின்றது. நெடுமாறன் கருணாநிதியினை ஆதரிக்காமல், சுப. வீரபாண்டியன் கருணாநிதியினை ஆதரித்தாலுங்கூட, ஈழத்தமிழர்கள் விடயத்திலே அவர்களிருவரும் காட்டும் குரலின் ஒத்திசைப்பிலே எவ்விதப்பிசிறுமிருப்பதில்லை.
கருத்தளவிலே என் விருப்பு வெறுப்புகள் தமிழக அரசியல் குறித்தும் அதன் கட்சிகள் குறித்தும் எதுவாகவுமிருக்கலாம்; மாயத்தேவர் & நாராயணசாமி எம்ஜிஆருடன் கூட்டுச்சேர்ந்திருக்கவேண்டுமா இல்லையா என்பதிலிருந்து, சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கியிருக்கத்தான் வேண்டுமா, திருமாவளவன்&ராமதாஸ் ஆகியோர் குஷ்புவினைத் தாக்கியிருக்கவேண்டுமா என்பவை ஊடாக, கனிமொழி, சல்மா அரசியலிலே இறங்கியிருக்கவேண்டுமா, திருமாவளவன் பார்ப்பனியசடங்குகளைச் செய்யவேண்டுமா, ரவிக்குமார் தொடர்ந்து பெரியாரைத் தாக்கத்தான் வேண்டுமா என்பதுவரை எனக்கு ஆயிரம் தனிப்பட்ட கருத்துகள் தமிழக அரசியல் குறித்து இருந்திருக்கின்றன; இருக்கின்றன. ஆனால், ஈழம் குறித்து வரும்போது, நான் அமெரிக்க "liberal, but not progressive" உயூதனாகிறேன் - "Anything, but Israel"; பாரதியும் டென்ஸியாவோ பிங்கும் சேரச்சொன்னால், "எலியைப் பிடிக்கக்கூடிய பூனை (எம்மைத் தாக்காதவரைக்கும்) எந்த நிறம் இருந்தாலும்-அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிது என்றும்-இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ? வண்ணங்கள் வேறுபட்டால் -அதில் மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்-இங்கு யாவருக்கும் ஒன்றெனல் காணீர்." சண்டே லீடர் சொல்வதன்படி "ஏசியன் ரிபியூன்" ராஜசிங்கம் திருவிளையாடல்கள், பாரிஸ் தலித்மகாநாடு அமைப்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின்(ஞானம்)- இலங்கையரசு வனவிலங்கதிகாரியென்று கொடுத்த கடவுட்சீட்டுடன் இங்கிலாந்து போன கருணா உறவுக்குற்றச்சாட்டுகள், பேச்சுவார்த்தை நடக்கவேண்டும் என்று சொல்லும் விழாவிலேயே ஆயுதம் கையளிக்கும் அமெரிக்கத்தூதுவர், "“Brigadier” Thamilchelvan, The “Smiling” Face of LTTE" என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை "Direct Hit" என்று தேவைக்கேற்ப உள்ளடக்கமும் சுருக்கி வெளியிடும் Frontline, கடந்த பதினைந்து மாதங்களில் 4082 விடுதலைப்புலிகளும் 1066 மக்களும் இறந்தார்கள் என்ற இந்திய உளவுத்தாபனம்சார் the South Asia Intelligence Review of the South Asia Terrorism Portal அறிவுக்குளத்தின் அற்புதக்கணக்கெடுப்பினை வெளியிடும் outlook, ஈழத்தமிழர்களின் கடவுட்சீட்டுகள் பற்றிய கருத்தின்மேலே கேள்வியெழுப்பினால், "எனது இந்தியா; எனது தேசம்" என்று தமது ஐந்தாம் உரிமைக்கு உருக்கொடுத்து, 180 பாகையிலே வாதத்தினைத் திருப்பும் இந்தியத்தமிழ்ப்பத்திரிகையாளர்கள் இப்படியானவர்கள்/வை பற்றிய செய்திகளை வாசிக்கும்போது, நான் தொடர்ச்சியாக, John J. Mearsheimer உம் Stephen Walt உம் எழுதிய "The Israel Lobby and U.S. Foreign Policy" நூலினை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.
நாம் எம் நியாயங்களை எமக்கே நியாயமாகப்படும் வழிகளிலே செயற்பட்டுத் தக்கிப்பதுதான் முக்கியம்; ஈழத்தின் வடக்குக்கிழக்கிலே இனவிகிதாசாரம் திட்டமிட்டப்பட்டு மாற்றப்படும்வேளையிலே அதையே முன்னிலைப்படுத்தி ஆதாரமாக அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவர் பொஸ்ரன்குளோப்புக்கு ஈழத்தின் கிழக்கிலே தமிழர்கள் உரிமைகொள்ளமுடியாதென்ற விதத்திலே ஆசிரியருக்கான கடிதம் வரையும்போது, கிண்ணியாவிலே, முஸ்லீம் குடியிருப்புகளிலேயிருப்பதாலே சாதி பற்றி எமக்குப் பாதிப்பில்லை என்று ஒருவர் சொன்னதாகத் 'தூ'வி, கீதையைப் பின்பற்றும் நெடுமாறனுக்கும் திருமாவளவனுக்கும் (sic), தம்மோபதேசம் செய்யும் சிங்களவர்களே மேல் என்று எழுதுகிற "பாரிஸவாதக்காரர்கள்" இருக்கும்போது, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று பார்ப்பதோ, ஈழத்தவருக்குக் கூடுதலான ஆதரவு வழங்குவது வைகோவா, கலைஞரா என்று பட்டிமன்றம் வைப்பதோ ஈழத்தவருக்கான இப்பொழுதின் -மட்டுமல்ல, எப்பொழுதினதும்- முக்கிய வேலையல்ல; தேவையுமல்ல.
நூற்றாண்டின் முன்னான, ஆர்மீனியர்கள் மீதான துருக்கியக்கொடுமைகளையோ, துருக்கியகுர்திஷியர்களின் போராட்டங்களையோ பெருவிரல்நுனியிலே அமுக்கும் பேரரசுகளின் காலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்; கருத்துகளையும் நடைமுறைகளையும் ஒன்று சேர முன்னெடுத்துக்கொண்டு செல்லக்கூடிய வசதியினைக் கொண்டிருக்கவில்லை; "ஆயுதம் தாங்காத பொதுமகனை/மகளைக் கொல்லாத எதுவுமே பயங்கரவாதமில்லை" என்ற எளிமையான சூத்திரத்தினை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதுபோலவே, எமக்கே நியாயமென்று படும் எளிமையான தீர்வுகளைச் சிக்கலான கொள்கை-நடைமுறைப்படுத்தல் நிலைகளுக்கிடையே எடுக்கவேண்டிய நிலையிலேயிருக்கின்றோம். இந்நிலையிலே, தம்மளவிலே பலமற்ற எரித்திரியாவோ, பாஸ்க்/கடலோனியவிடுதலையமைப்புகளோ ஈழவிடுதலையை ஆதரிக்கின்றன என்று மகிழ்ச்சியோடு பதிவுகளிடுவதாலோ, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; இருட்டினில் நீதி மறையட்டுமே; தன்னாலே வெளிவரும் தயங்காதே; தலைவர் தக்க பதிலளிப்பார்; கலங்காதே" என்று எம்ஜிஆர் படப்பாடலாகப் பதிவெழுதுவதாலோ, எமக்குள்ளே பழங்கதை பேசி, எம் உற்சாகத்தினைத் தட்டியெழுப்புவதற்கப்பால் எதுவுமே நடந்துவிடப்போவதில்லை. ஈழ விடுதலையை ஆதரிக்கக்கூடிய (குறைந்தபட்சம் எதிர்க்காத) இந்திய ஆங்கில ஊடகமொன்றினை ஏற்படுத்த உழைக்காத நாங்கள், கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியல் பற்றிப் பேசுவதற்கு எதற்காக இத்துணை பொழுது வீணாக்கவேண்டும்?
சென்ற வாரம் நெவாடாவிலே அமெரிக்க ஜனநாயகக்கட்சி சார்பிலே அதிபருக்காகப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கக் கேட்டு நிற்கும் வேட்பாளர்கள் இடையே விவாதம்; ஒரு பாக்கிஸ்தானின் இன்றைய நிலை பற்றி ஒரு கேள்வி; "பாக்கிஸ்தானிலே அமெரிக்க அதிபர் எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? அமெரிக்க நலன்களையா?" இங்கே வேட்பாளர்கள் என்ன பதில்களைத் தந்தார்கள் என்பதல்ல நாம் பெறவேண்டிய பாடம்; எவ்விதத்திலே அமெரிக்கா(வும் இந்தியாவும் - பி. ராமன், ஹரிஹரன் "ஆய்வுக்கட்டு உரை"களைக் காண்க) நடக்கமுயல்கின்றதென்பதையே காட்டுகின்றது; இதே மனப்பாங்கிலேதான், குடியரசுக்கட்சி சார்பான நவ-பழமைவாதப்போக்குள்ள ரைஸும் போன ஆண்டு லெபனானிலே இஸ்ரேலின் வெற்றியின் பின்னால், "we have to talk (from the balance of power at this very moment) - the status quo; not from where we were two weeks back (in which time Lebanon militants seemed to be in better position)" என்ற பாணியிலே சொன்னார்; துருக்கியிலே ஆர்மீனியர்/குர்தீசியர் தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்; தூதுவர் பிளேக், ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம் கையளித்துப் பேச்சுவார்த்தைக்கும் இனிப்பினைக் கொடுக்கின்றார். இச்சூழலிலே ஈழத்தமிழராக நாம் ஆதரிப்பது, கொள்கையளவிலே, ஜனநாயகக்கட்சியையா, குடியரசுக்கட்சியையா என்பதல்ல கேள்வி; வெல்லும் கட்சி ஈழத்தமிழருக்கு, அவர்களின் இனவிகிதாசாரம் திட்டமிடப்பிழிந்து மாற்றப்படும் நிலையிலே, அவர்களுக்கு ஆதரவாக என்னத்தினைச் செய்யவைக்கமுடியுமென்பதையே காணவேண்டும். இதே நோக்குடனேதான் கனடாவிலோ, பிரிட்டனினோ நாம் நோக்கவேண்டும். ஹார்ப்பரை ஈழவேந்தன் சந்தித்தாலுஞ்சரி, தமிழ்ச்செல்வன் நினைவுவிழாவிலே லிபரல் டெமோகிரட்டிக் கட்சி பாஉ கலந்துகொண்டாலுஞ்சரி, வெல்வது நமது நலனும் நோக்காகவேயிருக்கவேண்டும். உலகம் சார, புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களின் வரும் சந்ததிகளும் தாம் வாழும் நாட்டிலே அவ்வூரரசியலிலே -ஈழநலனையும் ஒரு பகுதியாக இருத்தி,- பங்கேற்க வேண்டும். இத்தாலியர்களின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இன்றைக்கும் இத்தாலிய அரசவையிலே மேலவையிலே சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையை மனதிலேயிருத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களின் உலகலளாவிய அரசியல்வாதிகள்கூட்டமைப்பொன்று உருவாகி, அவரவர் நாட்டிலே ஈழத்தமிழர்களின் நலனையும் பேசும்வகையிலே ஆக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், நாம் தக்கிக்கமுடியாது. நிலைமை இப்படியாகவிருக்கும்போது, கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியலைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமென்ன என்று எனக்குப் புரியவில்லை. தேவையற்ற பிரச்சனைகளை மட்டுமே இவை கொணரமுடியும்.
"சமாதான ஒப்பந்த"த்தின் பின்னால், கௌசல்யன், சந்திராநேரு, ஜோஸப் பரராஜசிங்கம், விக்கினேஸ்வரன், ரவிராஜ் கொல்லப்பட்டபோது கள்ளமோனத்தவமிருந்த பேருலகு, கதிர்காமர் இறந்தபோது "பயங்கரவாதம்" என்று ஓலமிட்டத்தைக் கண்ட எமக்கு, தமிழ்ச்செல்வனின் கொலலயைக்கூடக் கதிர்காமரின் இறப்பிலிருந்துதான் 'சமாதானகாலத்திலே' அரசியல்வாதிகள் கொல்லப்படத் தொடங்கியதாக வரலாறு எழுதும்போது ஆச்சரியமேற்படவில்லை. ஆனால், இதனை நாம் மட்டும் உணர்ந்தால் போதுமா? அல்லது, "தமிழ்ச்செல்வன் இறந்தார்; லபோ! லபோ!!" என்று அரற்றினால் மட்டும் போதுமா? ஒருவன் இயக்கத்த்துக்கென்று போனால் இறப்பினை எதிர்பார்த்தே போகிறான்; இறப்புகள் இல்லாமல், ஆறு தாண்டி அக்கரை போகலாமென்று நம்பியா போனார்கள்? கொண்ட நோக்கத்துக்காவல்லவா? அவ்விறப்பும் அந்நோக்கத்திற்கு ஓரளவுக்கு பயன்படுமென்றால், அதைப் பயன்படுத்துவதுதான் இறந்த போராளிக்கும் அவனின் நோக்குக்கும் செய்யப்படும் கைமாறு. அவ்வகையிலேதான் தமிழ்ச்செல்வனின் இறப்பினைப் பார்க்கவேண்டும். இணையத்திலே சிலர் விடுதலைப்புலிகள் சாதியமைப்பினைப் பேணுகின்றார்கள் என்பது தொடக்கம் தமிழ்நாட்டிலே ஈழத்தமிழாதரவு செத்துவிட்டது என்பதாக அமைக்கப்பட்ட கருத்தமைவுகள் உடைந்துபோக, இவ்விறப்பின் பின்னாலான வாதங்களும் பதில்வாதங்களும் உதவியிருக்கின்றன. அவ்வகையிலே தமிழ்ச்செல்வனின் இறப்பு அமுக்கப்பட்ட எமது குரலைக் கேட்க உதவியிருக்கின்றது. தமிழ்ச்செல்வன் மறந்து அழகிய தமிழ்மகன் விஜயுக்குக் கட் அவுட் வைக்கப்போகும்முன்னால், அதனை நாம் பயன்படுத்தவேண்டும். (கருணாநிதியின் 'கவிதை' அந்தளவிலே ஈழத்தமிழர் நினைவினைத் தமிழகத்திலே நீட்டப் பயன்பட்டிருக்கின்றது என்பதிலே மகிழ்ச்சியடையவேண்டும்; ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்குப் போனால், தன்னை நோக்கி மக்கள் எதிர்ப்பு திரும்பிவிடுமோ என்று அடங்கிக்கொண்டதையும் ஞாபகத்திலேயிருத்தவேண்டும்). இந்நிலையிலே, கருணாநிதி-வைகோ அரசியலிலே எமக்கென்ன கவலை வேண்டும்? "தமிழ்ச்செல்வனின் பின்னால், நடேசனை ஏன் நிறுத்தினீர்?" என்று கருணாநிதியோ, வைகோவோ விடுதலைப்புலிகளைப் பார்த்துக்கேட்டார்களா? ஆக, டிபிஎஸ் ஜெயராஜுக்கும் ப்ரொண்ட்லைனுக்கும் பிகே பாலச்சந்திரன்+ இந்துஸ்தான் டைம்ஸுக்குமட்டுமேதான் நடேசன் இந்தியாவிடம் கெஞ்சுவாரா மிஞ்சுவாரா என்ற கணிப்பெடுப்புகள் முக்கியமாகின்றன. இதுதான் நிலையென்றிருக்க, நாமேன், "வைகோ, நெடுமாறன் கைது பற்றிப் புலிகள் கருத்தினைத் தெரிவிக்கமறுத்துவிட்டார்கள்" என்ற இந்துவின் "முக்கியமான, ஆய்வுச்"செய்திக்குச் சேர்ந்தாடுவதுபோல, உதயன் தலையங்கத்தையும் கோகர்ணனின் தினக்குரல் கட்டுரையையும் போட்டு வறுத்தெடுத்துச் சொல்முத்துப் பொறுக்கவேண்டும்?
கொஸூவோவிலே ஒரு முன்னைய அல்பேனியவழிவந்த கெரில்லாப்போராளி ஆட்சிக்கு வருகின்றார்; பயங்கரவாதத்தினை எதிர்க்கும் ஏகாதிபத்தியங்களுக்கு எவ்வித எதிர்ப்புமிருப்பதாகத் தெரியவில்லை; சேர்பிய"க்கொலையாளிகள்" வரவில்லை என்பதைமட்டும் தெரிவித்துக்கொள்கின்றார்கள். சென்ற ஆண்டு, ஒரு விவரணம் (The Broklyn Connection) வந்தது; அமெரிக்கப்பிரஜையான கொஸவோ-அல்பேனியர் ஒருவர் எப்படியாக அமெரிக்கத்தேர்தலிலே நிற்பவர்கள் தொடக்கம் ஆயுதக்கடத்தற்காரர்கள்வரை உறவு வைத்திருந்து கொஸவோ-அல்பேனியர்களுக்காகப் போராடுகின்றார் என்பதை அவரை விவரணத்துக்காக எடுக்க அனுமதித்த விவரணம். அமெரிக்க அரசுக்கு இதுவரை அவர் பயங்கரவாதியாகத் தெரிந்தாரா என்று தெரியவில்லை. ஏகாதிபத்திய அரசியல் "நம் ஏகாதிபத்திய அதிபர் X நாட்டிலே எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? எம் ஏகாதிபத்திய நலன்களையா?" என்பதாக நடப்பது; இதிலே, கோக்கோகோலாவும் உள்ளாடைதயாரிக்கும் சிறுபிள்ளைகளும் மொன்ஸாண்டோ விதைகளும் கருத்தளவிலே எவ்விதமான தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், நடைமுறையிலே எத்துணை X நாட்டிலே ஏற்கனவே வேறேதோ கருத்தமைப்பிலே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுபான்மைக்கு மேலதிகத்தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். காலாசினிக்கோவ் நெத்திப்பொட்டிலே நிற்கும் நேரத்திலே, உபரி உற்பத்தியும் உள்ளூர் உற்பத்தியும் கொக்கோகோலாவுக்கு அண்டி வாரோல் வரைந்த ஓவியமும் பேசிப் பயனாகப்போவதில்லை. அதற்காக, கருத்தாக்கத்தினை விட்டுவிடவேண்டிய அவசியமில்லை. ஆனால், அதனைச் செயற்படுத்தும் தளமும் போக்கும் வேறாகவிருக்கவேண்டும். கடைசியிலே தக்கிப்பது, "Anything, but Israel" என்பதுதான். கருணாநிதியும் வைகோவும் ஸ்டாலினும் மார்க்ஸும் அவர்களின் உள்ளூர் அரசியலுக்காக, கவிதை எழுதினால் என்ன, கடதாசியிலே மலம் துடைத்து அனுப்பினாற்றான் நமக்கென்ன? வாயை நமக்குத் தேவையற்ற பிரச்சனையென்று மூடிக்கொண்டிருக்கவேண்டாமா? அல்லது "முட்டி முடுக்குது, மூத்திரம் பெஞ்சுதான் ஆகோணும்" என்றால், "இது நானாக என் கிணத்திலே வீட்டுத்துலாவைப் போட்டு அள்ளிக்குடிச்ச தண்ணியை வைத்து என்ரை உடம்புச்சிறுநீர்த்தொகுதி உற்பத்தியாக்கிய சொந்த மூத்திரம்" என்ற ஒரு கருத்தினையும் சேரச் சொல்லிவிட்டுப் பெய்யக்கூடாதா? எதுக்கு "ஈழத்தவர் கருணாநிதி பற்றிக் கருத்து, கந்தசாமி பற்றிக் கக்கூசு" என பாணியிலே இந்துவுக்குச் செய்தி அள்ளிக்கொடுக்கும் தேவை??
[இப்படியான சூழலிலே, இரயாகரன் போன்றவர்கள், புலிபாஸிஸ்ட் என்று திட்டினால், அவர்களுக்கு Umbreto Eco இன் "Eternal Fascism: Fourteen Ways of Looking at a Blackshirt" இனைச் சுட்டிக் காட்டி அவர்களையும் ஏதோவிதத்திலே பாஸிஸ்ட் ஆக்கிவிட்டுப்போகலாம். அட! மிஞ்சி மிஞ்சிப்போனது, பாலஸ்தீனர்களின் குரலுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றவர்களைக்கூட, "Islamofascists" என்று திட்டுகின்றவர்களினை "American Fascists: The Christian Right and the War on America " என்று திட்டி நூல் வந்திருக்கின்றது. அந்தளவிலே சந்தோஷம் - நான் தனியன் அல்லன் என்று :-)]
தமிழக அரசியல் குறித்து ஓர் ஈழத்தமிழனின் மிகவும் சுயநலமான, சந்தர்ப்பவாதக் கருத்தாக இது தோன்றலாம்; ஆனால், கொஞ்சம் நிதானமாக வாசித்தால், அப்படியல்ல என்று புரிந்துகொள்ளப்படலாம்.
தொடர்புள்ள பதிவொன்று
வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? - வசந்தன்
//yet to be edited//
Thursday, August 16, 2007
உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு இன்னும் தொடரும் பயனற்ற விவாதம்
புலம் - 24
"...மக்கள் என்று நாம் யாரைச் சொல்கிறோம் என்று தெளிவாக விளங்கிக்கொள்வது மிகவும் அவசியம். வசதிகள் படைத்தோரையும் சமூகத்தில் அதிகாரவர்க்கத்திலிருப்போரையும் தவிர்ந்த ஏனையோரையே நாம் மக்கள் என்று குறிப்பிடுக்கின்றோம். இந்தச்சமூகத்தில் அதிகாரமில்லாத அவர்களே பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள். அதிகார வசதி படைத்தவர்கள் அவர்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றார்கள். ஆனால், அவர்களிடம் சென்று பேசமாட்டேன் என்கின்றார்கள். ஆட்டு மந்தையைப்போல அந்த மக்களை வழிநடத்தவும் அந்த மக்களைப் பற்றித் தாங்களே முடிவெடுக்கவும் வசதி படைத்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். சாதாரணமக்கள் முடிவெடுக்குமளவுக்கு அறிவு படைத்தவர்களாகக் கருதப்படுவதில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் மக்களைப் பற்றி ஒரே மனப்பாங்கு உடையவர்களே. மக்களின் நன்மை என்பது அவர்களைப் பொறுத்தமட்டில், இரண்டாம் பட்சமே. பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் 97.5 வீதமானோர் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர். அவர்கள் உடல் உழைப்பை நல்குபவர்கள்...." - குன்றின்குரல், மலர் - 7, இதழ் -8, ஆகஸ்ட், 1987 பக் 1இலே எழுதப்பட்டதாக, 'மலையகத்தமிழ் இலக்கியம்' நூலில் க. அருணாசலம்.
மாலன் பட்டறைக்குச் சம்பந்தமில்லாத விவாதத்துடனே மூட்டையைக் கட்டிவைத்துவிட்டாலுங்கூட, மிச்சமிருக்கும் என் ஓரிரு பதில்களிலே ஒன்றுக்கான ஆறி அவலாகுமுன்னான என் அவசரப்பதில்
மாலனின் இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் நிலையினை இலங்கைத்தமிழரோடு பிணைத்துப்பேசியதை இப்பதிலி/விலே பேசமாட்டேன். அதற்கு மிக நீண்டதான பதில் தேவைப்படும். இலங்கைத்தமிழர் என்பவர்கள் யார்? இலங்கையிலிருந்த இந்தியத்தமிழர்கள் என்பவர்கள் யார்? ஒவ்வொரு குழுவுக்குள்ளும் அடங்கியிருந்த கூறுகளான குழுக்கள் யார்? அக்கூறுகளின் சிறுபான்மை மேல்மட்டக்கூறுகள், தமக்குக் கீழ்மட்டத்திலேயிருந்தவர்களை நடத்திய தன்மை எப்படியாகவிருந்தது? இந்தியத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தவர்கள் யார்? அப்போது பலம்வாய்ந்த இந்திய அரசினதும் ஜவகர்லால் நேருவினதும் எதிர்வினைகள் என்ன? வேறுநாடுகளிலே குடியேறிய வட இந்தியர்களுக்கு இப்படியாகக் குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர்களின் எதிர்வினையென்ன? திருப்பி அனுப்பப்பட்ட இந்தியத்தமிழர்களைத் தமிழகமும் அதன் பத்திரிகை,செய்தியூடகங்களும் என்ன மாதிரியாக நடத்தின? நடத்துகின்றன? தமிழர்விடுதலைக்கூட்டணி, ஈழத்தமிழ்விடுதலையியக்கங்களின் இந்தியத்தமிழர், அவர்களின் நிலப்பகுதி குறித்த நிலைப்பாடுகள் என்ன? ஈழவிடுதலையியக்கங்களிலே இந்தியவழிவந்த தமிழர்களின் பங்களிப்பு என்ன? சந்திரசேகரன் போன்றோர் தொண்டமான் ஆகியோரை மறுதலித்துப் புதுத்தலைமையை இளைஞர்கள் மத்தியிலே மலையகத்தமிழர் முன்னணி கொண்டு வந்ததற்கென்ன காரணம் (சி. சிவசேகரம் என்றே கருதப்படும் கோகர்ணனின் பத்தி)? சந்திரசேகரன் போன்றோருக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவு எப்படியானது? - இவை பற்றி விரிவாகப் பேசவேண்டும். அதற்கு இஃதல்ல இடம்; நேரம். ஆனால், ஒரே ஒரு வரியினை மட்டும் சொல்லிவிடவேண்டும். ஆனால், டி. எஸ். சேனநாயக்காவின் சிங்களப்பெரும்பான்மை அரசு கொண்டு வந்த இந்தியத்தமிழர்களின் குடியுரிமையை மறுத்தலினை, "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்." என்பதாக பட்டறையோடு முடிந்து முடிக்க மாலனால் மட்டுமே முடியும். இலங்கைத்தமிழர் தலைமையென்று இருந்தவர்கள் ஜிஜி பொன்னம்பலம் . எதிர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்று இரண்டாக உடைய, இந்தியத்தமிழர் குடியுரிமைமறுப்பினாலான விவாதமே காரணமென்று சொல்லப்படுகின்றது. ஜி.ஜி. பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்றும் செல்வநாயகம், tamil nation.org சத்தியேந்திராவின் தந்தை நடேசன் ஆகியோர் அதனை எதிர்த்தார்களென்றும் சொல்லப்படுகின்றது (இந்தியத்தமிழர் குடியுரிமையை மறுக்கச் சட்டம் கொண்டு வந்தவர் என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை என்பதையும் மாலனின் கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன்).
இக்குறிப்பு எவ்வகையிலும் 'யாழ்ப்பாணத்தமிழர்.எதிர்.மலையகத்தமிழர்.எதிர்.கொழும்புத்தமிழர்.எதிர்.வன்னித்தமிழர்.எதிர்.மட்டக்கிளப்புத்தமிழர்' என்ற பார்வையினையோ, ஒவ்வொரு குழுவினரும் மற்றவரைப் பார்க்கும் தன்மையையோ ஆய்வதல்ல. வெறுமனே, மாலன் சொல்லிய "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதைமட்டுமே உடனடியான சில இணையத்திலே கிட்டும் தரவுகளோடு எதிர்கொள்வதாகும்.
மாலன், பிரமிளையும் சிவசேகரத்தையும் தனது இந்தியத்தமிழர் குடியுரிமை நிலையிலே யாழ்ப்பாணத்தலைமையின் நிலைப்பாடு குறித்துச் சொல்லச் சுட்டியிருக்கின்றார்.
பிரமிள், ஒருவகையிலே அவரே ஆங்கிலத்திலே "..While Dr. Pound goes over Italy's air Endrosing the Century's anti-Semitic pair. You who warned the poet not to be viewy, Slipped though it was far afield of your trade, into a very unpoetic view, held by centuries of myopia That just this race was Usura's chosen children..." கவிதை பாடின எஸ்ரா பவுண்டினைப் போன்றவரே. பவுண்ட் சிறந்த கவிஞர், விமர்சகராகவிருந்தபோதும், அவரது "பொருளாதாரக்கொள்கைகள்"+"யூதர்" குறித்த கருத்துகள் பெரிதும் அறிவுபூர்வமற்ற, அரைவேக்காட்டுத்தனம் நிறைந்தவை; "வன்னியாழ் கோணைபுத்தளம்மட்டு நகரோடு மன்னார் அம்பாறையும் நிமிர அதிரும் முத்திசைக்கடல்நடுநெற்றியாய் ஒளிர்வது கற்றவர் நிறையுமிந்நாடு. வர்க்கவர்ணங்களை சிந்தை செய்திறனால் வென்றது நம் தமிழீழம்" என்று ஈழத்துக்கான தன் தேசிய கீதம் பாடிய பிரமிளும் சிறந்த கவிஞர் விமர்சகராகவிருந்தபோதுங்கூட, அரசியலைப் பொறுத்தமட்டிலே பவுண்டைப் போலவே தரவுகளோடும் உணர்வுகளறுத்துக் கருத்துக்கூறும் தன்மையைக் கொண்டவரல்ல என்றே நினைக்கிறேன். அவரின் நூலைத் தரவாக்குவது எத்துணை சிறப்பானதெனத் தெரியவில்லை. பிரமிளின் எதிர்க்கட்சிக்காரர் சிவசேகரத்தின் கருத்துகளை அவருடைய விவாதங்களின்போது சீனச்சார்பு பொதுவுடமைச்சாய்வினைக் கண்டுகொள்ளாமல் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" வரிகளிலேயிருக்கும் ஒரு திருத்ததைச் சொல்லவேண்டும். 1947 இன் தேர்தல் முடிவின்படி, இலங்கை இந்திய காங்கிரஸிற்கு வாக்களித்தோர் ஆறு பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து 72,230 வாக்குகளுடன் அனுப்பினர். இலங்கை தமிழ்க்காங்கிரசுக்கு வாக்களித்தோரும் ஏழு பிரதிநிதிகளை 82,499 வாக்குகளுடன் மட்டுமே அனுப்பினர். 1947 இலங்கைத்தேர்தலிலே வாக்களிக்கும் வயதுள்ளவர்களிலே மொத்தமாக வாக்களித்தோரே பத்தொன்பது இலட்சத்தினரே. ஏழாவதாக ஒருவர் இருந்தாரா அல்லது வாக்குவீதத்தின்படி மேற்சபைக்கு நியமிக்கப்பட்டாரா தெரியவில்லை.
கீழே தரப்பட்டிருப்பவை, இக்குடியுரிமை பறிக்கப்பட்ட காலத்தின் போதிருந்த நிகழ்வுகள்/நிலைமை (மட்டும்) குறித்த சில இணைப்புகள் சில; அதன் பின்னான அரசியலை இங்கே சுட்ட இடம், நேரம் கொடுக்காது.
முதலிலே 'இலங்கையிலேயிருந்த, இருக்கின்ற இந்தியத்தமிழர்கள் எல்லோருமே தோட்டங்களிலே வேலைசெய்யவந்தவர்கள், அவர்கள் எல்லோரும் பொருளாதாரநிலையிலே ஒரே வகையினர்' என்ற எண்ணம் பலரிடம் நிலவுகின்றதாகத் தெரிகின்றது. அப்படியல்ல. தோட்டத்தொழிலாளர், அவர்களுக்கான வர்த்தகம் செய்யவந்தவர்கள், வெள்ளைச்சட்டை வேலைகள் செய்யவந்தவர்கள் என்று வகையிருந்தனர். தோட்டத்தொழிலாளர்களிலுங்கூட இருந்த வகைப்பாடுகளை, வி. இராதாகிருஷ்ணன் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல்வாதியாக இருந்தவர் என்று ஞாபகம்) எடுத்தாண்டு சொல்வது இது. (விக்கிபீடியாவிலேயும் இது சுட்டப்பட்டிருக்கின்றது; by the way, there is a name mistake in englsih wikipedia. It/He is NOT Bertram BastiaNpillai, but Bertram BastiaMpillai)
இவர்களிலே மேற்தட்டினருக்குக் குடியுரிமை பறிக்கப்பட்டதா என்பதையோ, குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்களுக்காக இம்மேற்றட்டிலேயிருந்த இலங்கையின் இந்தியத்தமிழர்களிலே பெரும்பான்மையானோர் போராடினார்களா என்பதைக்கூட (தன் வசதிக்காகவோ என்னவோ) மாலன் பேசவில்லை. பின்னாளிலே வந்த மேற்தட்டு இந்தியர்களிலே பலர் குடியுரிமை பெற்றார்கள்; அவர்களின் பிள்ளைகள் அன்றும் இன்றும் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமைகளுக்கூடாகவோ அதே காலத்திலே யாழ்ப்பாணத்திருந்த ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமைக்கூடாகவோ போகவேண்டியிருக்கவில்லை.
மாலனின் சுந்தரலிங்கம் ராஜினாமா செய்தது எப்போது என்பது பற்றி tamilnation.org இலே வாசித்துக்குழம்பியதற்கு, அதே தளத்திலிருக்கும் PLANTATION TAMILS DEPRIVED OF VOTE AND CITIZENSHIP - 1948/50 பக்கத்திலிருந்து அவருக்கு ஆதரவான கருத்து உண்டு (ஆனால், ஜீஜீ பொன்னம்பலம் குறித்து மாற்றான கருத்து) என்பதை நாம் சுட்டிக்காட்டலாம்
இனி, மாலனின் "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதன் மேலாக.....
மகேந்திரன் என்பவர் சங்கம்.ஓர்க் இலே எழுதியிருக்கும் Plantation Tamils – The Oppressed People of Sri Lanka கட்டுரையின்படி,
இதை மறுதலித்து ஜி ஜி பொன்னம்பலத்தின் பக்க நியாயத்தைச் சொல்வதாக, ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளிலேயிருந்தது, கொலை செய்யப்பட்ட அப்பாத்துரை விநாயகமூர்த்தி, -மாலன் அடிக்கடி சுட்டிக்காட்டும் tamilnation வலைத்தளத்திலே- ஜி ஜி பொன்னம்பலம் அப்படியாகச் செய்யவில்லை என்று வாதாடும் பகுதி கீழே:
இதிலே விநாயகமூர்த்தி, "பொன்னம்பலம், சேனநாயக்கா, நேருவுடனான கலந்தாலோசித்தபின்னரே செயற்படவேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்" என்பதோடு தொடர்பாக நேருவினது செயற்பாடுகளினைப் பற்றி வலையிலே ஓரிடத்தில் வாசிக்கக்கிடைப்பது இது, "CITIZENSHIP AND FRANCHISE RIGHTS OF INDIAN TAMILS IN SRI LANKA":
பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" என்ற கருத்தினை, மாலன், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று கண்முன்னேயே தன் தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டதை மேலே ஒரு சிங்களக்கட்டுரையாளர், "Thus, while the Indian Tamils affected the Sinhalese politically, to the Sri Lankan Tamils and the political Left they represented a political base that could be exploited to further their ambitions" என்று சொல்வதோடு உரசிப் பார்க்கவேண்டும்.
மாலன், அந்நேர இந்தியத்தலைமை - குறிப்பாக, ஜவகர்லால் நேரு ("In spite of the lucidity and analytical clarity of one of India's greatest thinkers, the question why he did not involve himself more deeply to bring about an early solution to the problem of Indian Tamil plantation labour in Ceylon foxes the reader. Perhaps, it may best be answered by the gentlemanly norms of the Nehruvian era of Indian politics. At one time, Nehru was willing to believe that the Indians might be to blame for their own worsening situation in Ceylon. "I have no doubt that the Indians there have not been behaving well and have made a mess of things... we should stop all unregistered labour to Ceylon," he wrote to Vallabhai Patel in 1939." - Madam Nirupama Subramanian reviews "Nehru and Sri Lanka", edited by Gopal Krishna Gandhi)- இலங்கையிலிருந்த இந்தியத்தமிழருக்காக, அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது என்ன செய்தது - செய்தார் - என்பது பற்றி எக்கேள்வியும் எழுப்பாமல், எல்லாத்துயருக்கும் காரணம், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதாக முடித்துவிடுகின்றார். [இன்னமும், இதே போக்கிலே பிஜியிலே மஹேந்ர சௌத்ரியிலும் அவரைப் போன்ற புலம்பெயர் வடஇந்தியர்களின் வழிவந்தோரிலே இந்திய அரசு காட்டும் அக்கறையை புலம்பெயர் இந்தியத்தமிழர்களின் வழிவந்தோருக்குக் காட்டுவதில்லை என்பதுதான் நிலைமை :-(]. ஈழத்திலே இந்திய இராணுவத்தின் இராணுவ, அமைதிப்படைச்செயற்பாடுகளுக்கு மாறான மனிதத்தன்மையற்ற பல செயற்பாடுகளை இதுவரை மாலன் எங்கேயும் கேள்வி கேட்டதாகத் தெரியாததுபோலவே, இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, ஜி ஜி பொன்னம்பலம், டி. எஸ் சேனநாயக்காவைப் பேசும்படி கைகாட்டியதாகச் சொல்லப்படும் நேருவும் அவரின் அரசினது செயற்பாடுகளும் குறித்து மாலன் கேள்வி கேட்கமறுக்கின்றார். அவருக்குத் தேவைப்படுவதெல்லாம், ஈழத்திலே இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளுக்குக் காரணம், விடுதலைப்புலிகள் என்பதுபோலவே, இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிபோனதற்குக் காரணமெல்லாம், யாழ்ப்பாணத்தலைமையென்பதுதான். மணலுக்குள் தலையை மறைப்பது தீக்கோழிக்கும் (அதுகூட உண்மையிலே அப்படிச் செய்வதில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது ஒரு புறமிருக்கட்டும்) கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது பூனைக்கும் அவை விரும்பிக்கொண்ட காரணங்களுக்காகவும் திருப்திக்காகவும் வசதிப்படலாம்; ஆனால், மெய்யான காரணங்கள் அவையல்ல என்பது அவற்றுக்கே மிகவும் தெளிவாகத் தெரிந்தேயிருப்பன. வேண்டுமானால், விபரம் புரியாத, கதை கேட்க மட்டும் விரும்பும் குழந்தைகளுக்குக் கண்ணை விரித்துக் காதை அகட்டிக் கேட்கப் பயனாகவிருக்கும். மாலன், இந்திய இராணுவத்தின் ஈழ நடவடிக்கைகள் குறித்தோ, நேரு அரசின் இந்தியத்தமிழர் குடியுரிமை பறிப்பினைக் குறித்தோ கேள்வி கேட்காமல், ஈழத்தமிழர்களை நோக்கி விரலை நீட்டுவதற்கு, அவரே மனம் விட்டுக் கேட்கும், "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?" என்பதுதான் காரணமென்றால், தன் தேசத்திலும் தன்னவர்களிலும் விமர்சனமிருக்கக்கூடாதென்ற அர்த்தப்பட்டு எனக்குத் தோன்றும் அவரின் அக்காரணத்தினை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்கின்றவர்களையிட்டுக் கவலையும் பரிதாபமும் கொள்கிறேன்.
சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம், பொன்னம்பலம் புத்திரர்கள், அவர்களைச் சூழ்ந்தவர்களின் "யாழ்ப்பாணத்தலைமை"யின் தங்கள் (இனசனம், சாதி) நலம் பேணும் பிற்போக்கான எத்தனையோ பண்புகளிருந்திருக்கலாம். இவர்களிலே எல்லோரும் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார்களா கொழும்பிலே இருந்தார்களா என்பதைவிட்டுவிடுவோம்; அவர்களின் யாழ்ப்பாணத்தலைமை, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான மற்றையத்தமிழர்களை எப்படியாகப் பிரதிபலித்தது என்பதை விட்டுவிடுவோம். யாழ்ப்பாணத்துக்குள்ளேயே சிறுபான்மை மகாஜனசபை ஏற்படும் வகையிலே முழு யாழ்ப்பாணத்தவரையும் பிரதிபலித்ததா என்பதையும் விட்டுவிடுவோம். இவர்களின் யாழ்ப்பாணத்தலைமையை இலங்கைத்தமிழர்தலைமையென்பதும் சத்தியமூர்த்தி, ராஜாஜியைத் தமிழகத்தலைமையென்பதும் ஒன்றே என்று ஒப்புநோக்கி வாதாடக்கூடிய இலகுநிலையையுங்கூட இங்கே விட்டுவிடலாம். இவர்களுக்கு இந்தியத்தமிழர்கள் மேலே தனிப்பட்ட, எமக்குத் தெரியாது பிடிப்பின்மைகூட இருந்திருக்கலாம் - இதுவரை அதற்கான ஆதாரங்களைக் காணமுடியவில்லையென்றபோதுங்கூட. (விநாயகமூர்த்தி பொன்னம்பலம் இந்தியத்தமிழர்களுக்காக ஜி ஜி பொன்னம்பலம் வாதாடினார் என்றுதான் தன் தலைவரைக் குறித்து வாதாடுகின்றார் என்பதைக்கூடத் தொண்டர் அபிமானம் என்று இப்போதைக்கு விட்டுவிடுவோம்; சி. வி. வேலுப்பிள்ளை, 'வீடற்றவன்' தன் குறுநாவலின் முன்னுரையிலே, பொன். அருணாசலமே 1921 இலே தோட்டத்தொழிலாளிகளின் ஒப்பந்தக்கூலி என்ற கொடுமையை ஒழிக்க வழி செய்ததாகச் சொல்கிறார்.).
ஆனால், இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது, அந்நேரச்செயற்பாடுகள் என்னவென்பதை சம்பவங்களின் கோர்வையாகப் பார்த்துக் கருத்துச் சொல்லவேண்டும். வெறும் மேம்போக்கான 'எடுத்தார்-கவிழ்த்தார்' கருத்துகளைத் தவிர்த்து விட்டு, ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்களின் கருத்துகளைத் தர்க்கபூர்வமாக அணுகியபின்னால், பாராளுமன்றத்திலே சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகளை, வாக்குப்பதிவுகளை, ஹன்ஸார்ட் பதிகுறிப்புகளிலிருந்தே பார்த்தே நிகழ்வுகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு, எங்கோ ஒரு பட்டறையிலே "பயனற்ற விவாதங்களால் உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு" ராமின் மகளுக்கும் -/பெயரிலி.யின் பாஸ்போர்ட்டுக்கும் முடிச்சுப்போடப்போனது, சிக்கிவிட, கவனக்குலைப்பாக, வலைப்பதிவின் இந்தியத்தமிழ்வாசகர்களை உணர்வுபூர்வமாக(த்) (திசை) ஈழத்தமிழர்களுக்கெதிராகத் திருப்பிவிட, "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று அப(பா)யக்கூற்றிடுவது முற்றிலும் அநாவசியமானதும் நியாயமற்றதுமானது.
நன்றி: நூலகம் குழுவினருக்கு இலங்கைத்தமிழ்நூல்களை இணையப்படுத்துவதற்கும் இணைப்புக்குதவிதற்கும்
"...மக்கள் என்று நாம் யாரைச் சொல்கிறோம் என்று தெளிவாக விளங்கிக்கொள்வது மிகவும் அவசியம். வசதிகள் படைத்தோரையும் சமூகத்தில் அதிகாரவர்க்கத்திலிருப்போரையும் தவிர்ந்த ஏனையோரையே நாம் மக்கள் என்று குறிப்பிடுக்கின்றோம். இந்தச்சமூகத்தில் அதிகாரமில்லாத அவர்களே பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள். அதிகார வசதி படைத்தவர்கள் அவர்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றார்கள். ஆனால், அவர்களிடம் சென்று பேசமாட்டேன் என்கின்றார்கள். ஆட்டு மந்தையைப்போல அந்த மக்களை வழிநடத்தவும் அந்த மக்களைப் பற்றித் தாங்களே முடிவெடுக்கவும் வசதி படைத்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். சாதாரணமக்கள் முடிவெடுக்குமளவுக்கு அறிவு படைத்தவர்களாகக் கருதப்படுவதில்லை. அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் மக்களைப் பற்றி ஒரே மனப்பாங்கு உடையவர்களே. மக்களின் நன்மை என்பது அவர்களைப் பொறுத்தமட்டில், இரண்டாம் பட்சமே. பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையில் 97.5 வீதமானோர் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர். அவர்கள் உடல் உழைப்பை நல்குபவர்கள்...." - குன்றின்குரல், மலர் - 7, இதழ் -8, ஆகஸ்ட், 1987 பக் 1இலே எழுதப்பட்டதாக, 'மலையகத்தமிழ் இலக்கியம்' நூலில் க. அருணாசலம்.
மாலன் பட்டறைக்குச் சம்பந்தமில்லாத விவாதத்துடனே மூட்டையைக் கட்டிவைத்துவிட்டாலுங்கூட, மிச்சமிருக்கும் என் ஓரிரு பதில்களிலே ஒன்றுக்கான ஆறி அவலாகுமுன்னான என் அவசரப்பதில்
மாலனின் இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் நிலையினை இலங்கைத்தமிழரோடு பிணைத்துப்பேசியதை இப்பதிலி/விலே பேசமாட்டேன். அதற்கு மிக நீண்டதான பதில் தேவைப்படும். இலங்கைத்தமிழர் என்பவர்கள் யார்? இலங்கையிலிருந்த இந்தியத்தமிழர்கள் என்பவர்கள் யார்? ஒவ்வொரு குழுவுக்குள்ளும் அடங்கியிருந்த கூறுகளான குழுக்கள் யார்? அக்கூறுகளின் சிறுபான்மை மேல்மட்டக்கூறுகள், தமக்குக் கீழ்மட்டத்திலேயிருந்தவர்களை நடத்திய தன்மை எப்படியாகவிருந்தது? இந்தியத்தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தவர்கள் யார்? அப்போது பலம்வாய்ந்த இந்திய அரசினதும் ஜவகர்லால் நேருவினதும் எதிர்வினைகள் என்ன? வேறுநாடுகளிலே குடியேறிய வட இந்தியர்களுக்கு இப்படியாகக் குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர்களின் எதிர்வினையென்ன? திருப்பி அனுப்பப்பட்ட இந்தியத்தமிழர்களைத் தமிழகமும் அதன் பத்திரிகை,செய்தியூடகங்களும் என்ன மாதிரியாக நடத்தின? நடத்துகின்றன? தமிழர்விடுதலைக்கூட்டணி, ஈழத்தமிழ்விடுதலையியக்கங்களின் இந்தியத்தமிழர், அவர்களின் நிலப்பகுதி குறித்த நிலைப்பாடுகள் என்ன? ஈழவிடுதலையியக்கங்களிலே இந்தியவழிவந்த தமிழர்களின் பங்களிப்பு என்ன? சந்திரசேகரன் போன்றோர் தொண்டமான் ஆகியோரை மறுதலித்துப் புதுத்தலைமையை இளைஞர்கள் மத்தியிலே மலையகத்தமிழர் முன்னணி கொண்டு வந்ததற்கென்ன காரணம் (சி. சிவசேகரம் என்றே கருதப்படும் கோகர்ணனின் பத்தி)? சந்திரசேகரன் போன்றோருக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவு எப்படியானது? - இவை பற்றி விரிவாகப் பேசவேண்டும். அதற்கு இஃதல்ல இடம்; நேரம். ஆனால், ஒரே ஒரு வரியினை மட்டும் சொல்லிவிடவேண்டும். ஆனால், டி. எஸ். சேனநாயக்காவின் சிங்களப்பெரும்பான்மை அரசு கொண்டு வந்த இந்தியத்தமிழர்களின் குடியுரிமையை மறுத்தலினை, "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்." என்பதாக பட்டறையோடு முடிந்து முடிக்க மாலனால் மட்டுமே முடியும். இலங்கைத்தமிழர் தலைமையென்று இருந்தவர்கள் ஜிஜி பொன்னம்பலம் . எதிர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்று இரண்டாக உடைய, இந்தியத்தமிழர் குடியுரிமைமறுப்பினாலான விவாதமே காரணமென்று சொல்லப்படுகின்றது. ஜி.ஜி. பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்றும் செல்வநாயகம், tamil nation.org சத்தியேந்திராவின் தந்தை நடேசன் ஆகியோர் அதனை எதிர்த்தார்களென்றும் சொல்லப்படுகின்றது (இந்தியத்தமிழர் குடியுரிமையை மறுக்கச் சட்டம் கொண்டு வந்தவர் என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை என்பதையும் மாலனின் கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன்).
இக்குறிப்பு எவ்வகையிலும் 'யாழ்ப்பாணத்தமிழர்.எதிர்.மலையகத்தமிழர்.எதிர்.கொழும்புத்தமிழர்.எதிர்.வன்னித்தமிழர்.எதிர்.மட்டக்கிளப்புத்தமிழர்' என்ற பார்வையினையோ, ஒவ்வொரு குழுவினரும் மற்றவரைப் பார்க்கும் தன்மையையோ ஆய்வதல்ல. வெறுமனே, மாலன் சொல்லிய "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதைமட்டுமே உடனடியான சில இணையத்திலே கிட்டும் தரவுகளோடு எதிர்கொள்வதாகும்.
மாலன், பிரமிளையும் சிவசேகரத்தையும் தனது இந்தியத்தமிழர் குடியுரிமை நிலையிலே யாழ்ப்பாணத்தலைமையின் நிலைப்பாடு குறித்துச் சொல்லச் சுட்டியிருக்கின்றார்.
பிரமிள், ஒருவகையிலே அவரே ஆங்கிலத்திலே "..While Dr. Pound goes over Italy's air Endrosing the Century's anti-Semitic pair. You who warned the poet not to be viewy, Slipped though it was far afield of your trade, into a very unpoetic view, held by centuries of myopia That just this race was Usura's chosen children..." கவிதை பாடின எஸ்ரா பவுண்டினைப் போன்றவரே. பவுண்ட் சிறந்த கவிஞர், விமர்சகராகவிருந்தபோதும், அவரது "பொருளாதாரக்கொள்கைகள்"+"யூதர்" குறித்த கருத்துகள் பெரிதும் அறிவுபூர்வமற்ற, அரைவேக்காட்டுத்தனம் நிறைந்தவை; "வன்னியாழ் கோணைபுத்தளம்மட்டு நகரோடு மன்னார் அம்பாறையும் நிமிர அதிரும் முத்திசைக்கடல்நடுநெற்றியாய் ஒளிர்வது கற்றவர் நிறையுமிந்நாடு. வர்க்கவர்ணங்களை சிந்தை செய்திறனால் வென்றது நம் தமிழீழம்" என்று ஈழத்துக்கான தன் தேசிய கீதம் பாடிய பிரமிளும் சிறந்த கவிஞர் விமர்சகராகவிருந்தபோதுங்கூட, அரசியலைப் பொறுத்தமட்டிலே பவுண்டைப் போலவே தரவுகளோடும் உணர்வுகளறுத்துக் கருத்துக்கூறும் தன்மையைக் கொண்டவரல்ல என்றே நினைக்கிறேன். அவரின் நூலைத் தரவாக்குவது எத்துணை சிறப்பானதெனத் தெரியவில்லை. பிரமிளின் எதிர்க்கட்சிக்காரர் சிவசேகரத்தின் கருத்துகளை அவருடைய விவாதங்களின்போது சீனச்சார்பு பொதுவுடமைச்சாய்வினைக் கண்டுகொள்ளாமல் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" வரிகளிலேயிருக்கும் ஒரு திருத்ததைச் சொல்லவேண்டும். 1947 இன் தேர்தல் முடிவின்படி, இலங்கை இந்திய காங்கிரஸிற்கு வாக்களித்தோர் ஆறு பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து 72,230 வாக்குகளுடன் அனுப்பினர். இலங்கை தமிழ்க்காங்கிரசுக்கு வாக்களித்தோரும் ஏழு பிரதிநிதிகளை 82,499 வாக்குகளுடன் மட்டுமே அனுப்பினர். 1947 இலங்கைத்தேர்தலிலே வாக்களிக்கும் வயதுள்ளவர்களிலே மொத்தமாக வாக்களித்தோரே பத்தொன்பது இலட்சத்தினரே. ஏழாவதாக ஒருவர் இருந்தாரா அல்லது வாக்குவீதத்தின்படி மேற்சபைக்கு நியமிக்கப்பட்டாரா தெரியவில்லை.
கீழே தரப்பட்டிருப்பவை, இக்குடியுரிமை பறிக்கப்பட்ட காலத்தின் போதிருந்த நிகழ்வுகள்/நிலைமை (மட்டும்) குறித்த சில இணைப்புகள் சில; அதன் பின்னான அரசியலை இங்கே சுட்ட இடம், நேரம் கொடுக்காது.
முதலிலே 'இலங்கையிலேயிருந்த, இருக்கின்ற இந்தியத்தமிழர்கள் எல்லோருமே தோட்டங்களிலே வேலைசெய்யவந்தவர்கள், அவர்கள் எல்லோரும் பொருளாதாரநிலையிலே ஒரே வகையினர்' என்ற எண்ணம் பலரிடம் நிலவுகின்றதாகத் தெரிகின்றது. அப்படியல்ல. தோட்டத்தொழிலாளர், அவர்களுக்கான வர்த்தகம் செய்யவந்தவர்கள், வெள்ளைச்சட்டை வேலைகள் செய்யவந்தவர்கள் என்று வகையிருந்தனர். தோட்டத்தொழிலாளர்களிலுங்கூட இருந்த வகைப்பாடுகளை, வி. இராதாகிருஷ்ணன் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல்வாதியாக இருந்தவர் என்று ஞாபகம்) எடுத்தாண்டு சொல்வது இது. (விக்கிபீடியாவிலேயும் இது சுட்டப்பட்டிருக்கின்றது; by the way, there is a name mistake in englsih wikipedia. It/He is NOT Bertram BastiaNpillai, but Bertram BastiaMpillai)
Caste orientation of a plantation
The social structure of the Plantations strongly resembles the South Indian rural social structure. This community rigidly bound by caste system. In a Plantation the Tea factory is the center of activities. It stands majestically in the Central Part of the plantation. The office adjoins this and these are surrounded by the quarters of the Staff Members (Such as clerks, Tea makers, Conductors, Kanakka Pillais, and Supervisors). The Bungalows of the planter and his assistants are in an isolated but peaceful area. These will be in close proximity to the office. The dwellings of the labourers called ëLine Rooms are situated a little further away from the factories. Those who are considered to be of higher castes (Such as Pillai, Ahambadiyar, and Mukkkulathore) occupy the first row of line rooms. They perform respectable jobs (such as factory work and grinding of Tea. They work as minor employees too) Even though they belong to the labour category they are influential among conductors, Tea Makers, Kanganies and other officials. The labourers considered low castes live in the dwellings that are away from the center and these dwellings are called ‘distant / Lower Lines'. This group consists of Pallar, Parayars, Barbers, launders and scavengers. The yard sweepers and changers of clothes are in the lowest rank. Even today they receive very meager facilities from the Management.
இவர்களிலே மேற்தட்டினருக்குக் குடியுரிமை பறிக்கப்பட்டதா என்பதையோ, குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்களுக்காக இம்மேற்றட்டிலேயிருந்த இலங்கையின் இந்தியத்தமிழர்களிலே பெரும்பான்மையானோர் போராடினார்களா என்பதைக்கூட (தன் வசதிக்காகவோ என்னவோ) மாலன் பேசவில்லை. பின்னாளிலே வந்த மேற்தட்டு இந்தியர்களிலே பலர் குடியுரிமை பெற்றார்கள்; அவர்களின் பிள்ளைகள் அன்றும் இன்றும் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமைகளுக்கூடாகவோ அதே காலத்திலே யாழ்ப்பாணத்திருந்த ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமைக்கூடாகவோ போகவேண்டியிருக்கவில்லை.
மாலனின் சுந்தரலிங்கம் ராஜினாமா செய்தது எப்போது என்பது பற்றி tamilnation.org இலே வாசித்துக்குழம்பியதற்கு, அதே தளத்திலிருக்கும் PLANTATION TAMILS DEPRIVED OF VOTE AND CITIZENSHIP - 1948/50 பக்கத்திலிருந்து அவருக்கு ஆதரவான கருத்து உண்டு (ஆனால், ஜீஜீ பொன்னம்பலம் குறித்து மாற்றான கருத்து) என்பதை நாம் சுட்டிக்காட்டலாம்
While a battle was on in the Parliament, over the Citizenship Act, certain interesting developments, in respect of certain Tamil members of the then Parliament, took place. When the Ceylon Citizenship Act was passed in 1948, C. Suntharalingam, who was a Minister in the (UNP) Government of D.S. Senanayake, voted for the Citizenship Act, while G.G.Ponnambalam (Sr), who was then, the leader of the Tamil Congress, voted against the Act, and so did Ponnambalam's Tamil Congress Party. But, by the year 1949, G.G. Ponnambalam joined the Sinhala dominated Government of D.S.Senanayake.
When the Indian and Pakistani (Residents) Citizenship Bill came before the Parliament there were two Tamil Ministers in Cabinet of D.S. Senanayake. On the issue of this Bill, namely the Indian and Pakistani (Residents) Citizenship Bill, there was a split between the Tamil Members of the then Parliament. G.G.Ponnambalam, despite the pledge he had signed with the party representing the Plantation Tamil interests (i.e. the Ceylon Indian Congress as it was then known) in respect of Citizenship for the persons of Indian origin, voted for the Bill, while C. Suntharalingam voted against the Bill, and resigned his portfolio. The Tamil Congress broke into two and Mr. S.J.V.Chelvanayagam, with his supporters formed the Federal Party....
இனி, மாலனின் "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதன் மேலாக.....
மகேந்திரன் என்பவர் சங்கம்.ஓர்க் இலே எழுதியிருக்கும் Plantation Tamils – The Oppressed People of Sri Lanka கட்டுரையின்படி,
Developments after independence
The granting of independence to Ceylon was a tragedy for the Tamils. The Ceylon government dominated by the Sinhalese gave them step-motherly treatment. The Upcountry Tamils were living in extremely difficult conditions, but the Sinhala-dominated government completely neglected them.
The Ceylon Indian Congress led by Thondaman secured 8 seats in the first Parliament out of a total of 101. Thondaman was elected to the Nuwara Eliya seat. The block Upcountry Tamil votes influenced 12 other electorates in favour of leftist parties.
Then, like a bolt from the blue, came the terrible betrayal of the Tamils by Prime Minister D.S. Senanayake and the U.N.P. In the very year of independence, the Upcountry Tamils, who numbered over a million, were rendered stateless. In a blatant act of perfidy, D.S. Senanayake passed the Ceylon Citizenship Act ,depriving citizenship to the Upcountry Tamils (over half the Tamil population) who had lived in Ceylon for several generations. This loss of citizenship was followed in the next year by the Ceylon Elections Amendment Act depriving voting rights to those Estate Tamils, who constituted about 13% of the population. As a result, in the next elections in 1952, not a single Tamil member was elected from the Upcountry, where half the Tamils in Ceylon lived.
Ceylon Tamils fail to support Upcountry Tamil brethren
This was the first blow to the Tamils in Ceylon, and was to be followed by numerous serious acts of discrimination by the Sinhalese majority against the Tamils by successive governments creating a permanent division between the two communities. D.S. Senanayake who started these anti-Tamil policies can be called the father of Sinhala racism. The Tamils, even in this time of peril, failed to take united action. To the dismay of the Tamils, G.G. Ponnambalam who posed as the champion of the Tamils and minorities, voted in support of these discriminatory acts against fellow Tamils to enable him to continue in the cabinet. The Plantation Tamils, who were already living in sub-human conditions, were left without any political voice.
The honour of the Tamils was partly salvaged by S.J.V. Chelvanayagam, who voted against those despicable Acts of discrimination and broke away from the Tamil Congress Party of G.G. Ponnambalam over this issue. In 1949 S.J.V. Chelvanayagam formed the Federal Party to agitate for a federal constitution to safeguard Tamil rights. He was the first Tamil leader to alert the Tamils to the dangers of unitarianism and Sinhalese hegemony. At that stage he only agitated for a federal form of government and did not ask for a separate state for the Tamil minority.
இதை மறுதலித்து ஜி ஜி பொன்னம்பலத்தின் பக்க நியாயத்தைச் சொல்வதாக, ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளிலேயிருந்த
"...His (G. G. Ponnambalam's - -/peyari.) political opponents carried on a persistent campaign of vilification and character assassination against him stating he was responsible for the disfranchisement of several Indian Tamils in 1948. This is absolutely incorrect. The act which disfranchised the Tamils of Indian origin was the Ceylon Citizenship Act No. 18 of 1948 and the All Ceylon Tamil Congress and its Leader Mr. G. G. Ponnambalam vehemently opposed this act and voted against it. When this Act was passed Mr. Ponnambalam was in the opposition. Later when Tamil Congress decided to give responsive co-operation to the UNP Government it did so only after getting an undertaking from late Mr. D. S. Senanayake that he would consult the then Indian Prime Minister late Mr. Jawaharlal Nehru and bring a bill in Parliament to give citizenship rights to those who were deprived of their citizenship by the earlier Citizenship Act.
The subsequent piece of legislation known as the Indian and Pakistani Residents Citizenship Act which was passed in Parliament was the outcome of the undertaking given by late Mr. D. S. Senanayake to late Mr. Ponnambalam. Mr. Ponnambalam only supported this legislation which gave citizenship rights to Indian Citizens.
From 1930 onwards it was late Mr. G.G. Ponnambalam who fought for the rights of the Indians and safeguarded their self respect. When Sir Jackson Commission was appointed when Govindan was shot dead at the famous Mooloya Estate incident and when Nefsumoyar Estate was taken over it was G.G. Ponnambalam which spoke on behalf of the Indian Tamils and fought for their rights. Out of three days allotted to the Tamil Congress by the Soulbery Commission late Mr. G.G. Ponnambalam set apart one full day to represent matters relating to the rights of the Indian Tamils before the Soulbery Commission and as a result Soulbery Commission has recommended that 14% of the seats in Parliament be reserved for the Indian Citizens..."
இதிலே விநாயகமூர்த்தி, "பொன்னம்பலம், சேனநாயக்கா, நேருவுடனான கலந்தாலோசித்தபின்னரே செயற்படவேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்" என்பதோடு தொடர்பாக நேருவினது செயற்பாடுகளினைப் பற்றி வலையிலே ஓரிடத்தில் வாசிக்கக்கிடைப்பது இது, "CITIZENSHIP AND FRANCHISE RIGHTS OF INDIAN TAMILS IN SRI LANKA":
"..The issue of Indian Tamils had serious ramifications both within Sri Lanka and internationally. Nehru's global perspective was a serious impediment to the resolution of the Citizenship status of Indian Tamils in Sri Lanka. This global perspective blinded him to the particular aspects associated with the Indian Tamils in Sri Lanka. To Nehru, and to other host countries such as Kenya and Uganda, they were collectively all nationals of India who had migrated. To Sri Lanka on the other hand, because they were predominantly ethnic Tamils, their presence in Sri Lanka in large numbers had adverse political, social, and economic consequences. Furthermore, Sri Lanka could not afford financially to accommodate all the Indian Tamils who wished to seek Citizenship in Sri Lanka. Consequently, Sri Lanka looked to reduce the number of Indian Tamils in the interests of the indigenous population. To do so was in the national interests of Sri Lanka.
Statements by Nehru such as "So far as we are concerned, strictly, legally and constitutionally it is not our problem. They (Indian Tamils) are not our nationals" (Sahadevan," India and Overseas Indians", 1995, p. 67) [சகாதேவன், இன்னும் டில்லியிலேயே இருக்கின்றார் என்று நம்புகிறேன்; மாலன் அவருக்கு ஒரு தொலைபேசி போட்டு உறுதிப்படுத்திக் கேட்டுக்கொள்வது மிகவும் இலகுவானது], are hollow in the light of V.K.Krishna Menon words to the effect "Nehru knew the burdens that we would have to carry (their absorption into Indian economy)..." (Ibid, p.150). Undoubtedly, India's perspective was influenced entirely by her self interest. The Indian Tamils in Sri Lanka and elsewhere became other people's problems because India made it difficult for them to return as Indian nationals through the mechanism of Articles 5 and 8 of the Indian Constitution.
Indians emigrated overseas because employment prospects throughout the rest of the British Empire were better than the prospects at home. Britain offered inducements and India sought safeguards for this labour. Between them the resources of countries like Sri Lanka were exploited. When it was time to leave at the end of the colonial era, BOTH BRITAIN AND INDIA DISASSOCIATED THEMSELVES FROM THEIR RESPECTIVE RESPONSIBILITIES. It was obligatory on the part of Britain to have resolved the questions relating to the Indian Tamils being left behind in Sri Lanka. Instead, Britain abandoned her responsibilities and left it to Sri Lanka and India to resolve it bilaterally.
Like India, Britain also did not want to face the prospect of thousands of Indians descending on her shores. Britain's attitude to Overseas Indians was revealed when she refused entry to those Indians from Kenya and Uganda who had British passports, despite internationally recognized customs. India asserted that entry into U.K. was a fundamental right that every British citizens was entitled to, and any attempt to deny such a right was an act of racial discrimination against them (Sahadevan, 1995). Britain remained undeterred. She too was acting in her self-interest.
All three countries Sri Lanka, India, and Britain, acted in their self interests. Of the three countries Sri Lanka was the least obligated. The Indian Tamils were in Sri Lanka at the behest of the British to facilitate British colonial adventure in Sri Lanka, and India benefitted financially from the remittances of these workers. In addition, from India's perspective, this emigration was a relief to her economy. The national self interest of Sri Lanka called for a solution that would ease the financial, social, and political burdens imposed upon her by the presence of such a large number of Indian Tamils.
Within Sri Lanka, their presence in large numbers had serious political ramifications. The Sinhalese realized that it would erode their political base to an extent that the indigenous Sinhalese would go unrepresented. To the Sri Lankan Tamils, they represented a political base that would double their influence with negative consequences on the Sinhala political base. To the political Left, they represented a solid block of labour votes that would strengthen their political base. Thus, while the Indian Tamils affected the Sinhalese politically, to the Sri Lankan Tamils and the political Left they represented a political base that could be exploited to further their ambitions.
Under these circumstances, the Sri Lankan government acted responsibly, while protecting the interests of the larger Sri Lankan nation."
பிரமிளின் "".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" என்ற கருத்தினை, மாலன், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று கண்முன்னேயே தன் தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டதை மேலே ஒரு சிங்களக்கட்டுரையாளர், "Thus, while the Indian Tamils affected the Sinhalese politically, to the Sri Lankan Tamils and the political Left they represented a political base that could be exploited to further their ambitions" என்று சொல்வதோடு உரசிப் பார்க்கவேண்டும்.
மாலன், அந்நேர இந்தியத்தலைமை - குறிப்பாக, ஜவகர்லால் நேரு ("In spite of the lucidity and analytical clarity of one of India's greatest thinkers, the question why he did not involve himself more deeply to bring about an early solution to the problem of Indian Tamil plantation labour in Ceylon foxes the reader. Perhaps, it may best be answered by the gentlemanly norms of the Nehruvian era of Indian politics. At one time, Nehru was willing to believe that the Indians might be to blame for their own worsening situation in Ceylon. "I have no doubt that the Indians there have not been behaving well and have made a mess of things... we should stop all unregistered labour to Ceylon," he wrote to Vallabhai Patel in 1939." - Madam Nirupama Subramanian reviews "Nehru and Sri Lanka", edited by Gopal Krishna Gandhi)- இலங்கையிலிருந்த இந்தியத்தமிழருக்காக, அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது என்ன செய்தது - செய்தார் - என்பது பற்றி எக்கேள்வியும் எழுப்பாமல், எல்லாத்துயருக்கும் காரணம், "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்பதாக முடித்துவிடுகின்றார். [இன்னமும், இதே போக்கிலே பிஜியிலே மஹேந்ர சௌத்ரியிலும் அவரைப் போன்ற புலம்பெயர் வடஇந்தியர்களின் வழிவந்தோரிலே இந்திய அரசு காட்டும் அக்கறையை புலம்பெயர் இந்தியத்தமிழர்களின் வழிவந்தோருக்குக் காட்டுவதில்லை என்பதுதான் நிலைமை :-(]. ஈழத்திலே இந்திய இராணுவத்தின் இராணுவ, அமைதிப்படைச்செயற்பாடுகளுக்கு மாறான மனிதத்தன்மையற்ற பல செயற்பாடுகளை இதுவரை மாலன் எங்கேயும் கேள்வி கேட்டதாகத் தெரியாததுபோலவே, இலங்கையிலே இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, ஜி ஜி பொன்னம்பலம், டி. எஸ் சேனநாயக்காவைப் பேசும்படி கைகாட்டியதாகச் சொல்லப்படும் நேருவும் அவரின் அரசினது செயற்பாடுகளும் குறித்து மாலன் கேள்வி கேட்கமறுக்கின்றார். அவருக்குத் தேவைப்படுவதெல்லாம், ஈழத்திலே இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளுக்குக் காரணம், விடுதலைப்புலிகள் என்பதுபோலவே, இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிபோனதற்குக் காரணமெல்லாம், யாழ்ப்பாணத்தலைமையென்பதுதான். மணலுக்குள் தலையை மறைப்பது தீக்கோழிக்கும் (அதுகூட உண்மையிலே அப்படிச் செய்வதில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது ஒரு புறமிருக்கட்டும்) கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது பூனைக்கும் அவை விரும்பிக்கொண்ட காரணங்களுக்காகவும் திருப்திக்காகவும் வசதிப்படலாம்; ஆனால், மெய்யான காரணங்கள் அவையல்ல என்பது அவற்றுக்கே மிகவும் தெளிவாகத் தெரிந்தேயிருப்பன. வேண்டுமானால், விபரம் புரியாத, கதை கேட்க மட்டும் விரும்பும் குழந்தைகளுக்குக் கண்ணை விரித்துக் காதை அகட்டிக் கேட்கப் பயனாகவிருக்கும். மாலன், இந்திய இராணுவத்தின் ஈழ நடவடிக்கைகள் குறித்தோ, நேரு அரசின் இந்தியத்தமிழர் குடியுரிமை பறிப்பினைக் குறித்தோ கேள்வி கேட்காமல், ஈழத்தமிழர்களை நோக்கி விரலை நீட்டுவதற்கு, அவரே மனம் விட்டுக் கேட்கும், "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?" என்பதுதான் காரணமென்றால், தன் தேசத்திலும் தன்னவர்களிலும் விமர்சனமிருக்கக்கூடாதென்ற அர்த்தப்பட்டு எனக்குத் தோன்றும் அவரின் அக்காரணத்தினை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்கின்றவர்களையிட்டுக் கவலையும் பரிதாபமும் கொள்கிறேன்.
சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம், பொன்னம்பலம் புத்திரர்கள், அவர்களைச் சூழ்ந்தவர்களின் "யாழ்ப்பாணத்தலைமை"யின் தங்கள் (இனசனம், சாதி) நலம் பேணும் பிற்போக்கான எத்தனையோ பண்புகளிருந்திருக்கலாம். இவர்களிலே எல்லோரும் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார்களா கொழும்பிலே இருந்தார்களா என்பதைவிட்டுவிடுவோம்; அவர்களின் யாழ்ப்பாணத்தலைமை, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான மற்றையத்தமிழர்களை எப்படியாகப் பிரதிபலித்தது என்பதை விட்டுவிடுவோம். யாழ்ப்பாணத்துக்குள்ளேயே சிறுபான்மை மகாஜனசபை ஏற்படும் வகையிலே முழு யாழ்ப்பாணத்தவரையும் பிரதிபலித்ததா என்பதையும் விட்டுவிடுவோம். இவர்களின் யாழ்ப்பாணத்தலைமையை இலங்கைத்தமிழர்தலைமையென்பதும் சத்தியமூர்த்தி, ராஜாஜியைத் தமிழகத்தலைமையென்பதும் ஒன்றே என்று ஒப்புநோக்கி வாதாடக்கூடிய இலகுநிலையையுங்கூட இங்கே விட்டுவிடலாம். இவர்களுக்கு இந்தியத்தமிழர்கள் மேலே தனிப்பட்ட, எமக்குத் தெரியாது பிடிப்பின்மைகூட இருந்திருக்கலாம் - இதுவரை அதற்கான ஆதாரங்களைக் காணமுடியவில்லையென்றபோதுங்கூட. (விநாயகமூர்த்தி பொன்னம்பலம் இந்தியத்தமிழர்களுக்காக ஜி ஜி பொன்னம்பலம் வாதாடினார் என்றுதான் தன் தலைவரைக் குறித்து வாதாடுகின்றார் என்பதைக்கூடத் தொண்டர் அபிமானம் என்று இப்போதைக்கு விட்டுவிடுவோம்; சி. வி. வேலுப்பிள்ளை, 'வீடற்றவன்' தன் குறுநாவலின் முன்னுரையிலே, பொன். அருணாசலமே 1921 இலே தோட்டத்தொழிலாளிகளின் ஒப்பந்தக்கூலி என்ற கொடுமையை ஒழிக்க வழி செய்ததாகச் சொல்கிறார்.).
ஆனால், இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும்போது, அந்நேரச்செயற்பாடுகள் என்னவென்பதை சம்பவங்களின் கோர்வையாகப் பார்த்துக் கருத்துச் சொல்லவேண்டும். வெறும் மேம்போக்கான 'எடுத்தார்-கவிழ்த்தார்' கருத்துகளைத் தவிர்த்து விட்டு, ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்களின் கருத்துகளைத் தர்க்கபூர்வமாக அணுகியபின்னால், பாராளுமன்றத்திலே சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகளை, வாக்குப்பதிவுகளை, ஹன்ஸார்ட் பதிகுறிப்புகளிலிருந்தே பார்த்தே நிகழ்வுகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு, எங்கோ ஒரு பட்டறையிலே "பயனற்ற விவாதங்களால் உலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு" ராமின் மகளுக்கும் -/பெயரிலி.யின் பாஸ்போர்ட்டுக்கும் முடிச்சுப்போடப்போனது, சிக்கிவிட, கவனக்குலைப்பாக, வலைப்பதிவின் இந்தியத்தமிழ்வாசகர்களை உணர்வுபூர்வமாக(த்) (திசை) ஈழத்தமிழர்களுக்கெதிராகத் திருப்பிவிட, "நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்று அப(பா)யக்கூற்றிடுவது முற்றிலும் அநாவசியமானதும் நியாயமற்றதுமானது.
நன்றி: நூலகம் குழுவினருக்கு இலங்கைத்தமிழ்நூல்களை இணையப்படுத்துவதற்கும் இணைப்புக்குதவிதற்கும்
Sunday, August 12, 2007
இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?
புலம் - 23
இது எவ்வகையிலும் ஒரு புதிய இடுகை அல்ல. என் me, myself, my ego இடுகையின் பின்னான என் இரு பின்னூட்டச்செருகுதல்கள், தமிழ்மணத்தின் சூடான இடுகைகளிலே இடம் பிடிப்பதற்காக இங்கே ஓர் இடுகையாகப் போடப்படுகின்றன என்றும் கொள்ளவேண்டாம் :-) [அப்படியிருந்தாலும், மகிழ்ச்சியே] பின்னூட்டங்களின் நீட்சி காரணமாக, இடுகையினைத் திறக்கமுடியவில்லை என்று சொல்லும் நண்பர்களின் கருத்துக்கிணங்கி இங்கே ஓர் இடுகையாக.
பேரில்லாத பேமானிக்கு ஆண்டுமுடியும்வரை புதிய இடுகைக்கென்று எழுதும் நோக்கமில்லை. எல்லோரும் காமிக்ஸ் வாசித்து இன்புற்றறிவது அல்லால், வேறேதும் அறியேன் பராபரமே!! வாழ்க வளமுடன். பின்னால், வந்து I will (hell)bend & (de)fend
"இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?" தலைப்புக்கு நன்றி: 'ஒரு தீப்பொறி' அந்தனி சில்
------------
1.
மாலன் தன் பக்க விளக்கத்தைப் போட்டிருக்கின்றார். Out of context இலே ஆரம்பித்து தான் என்ன சொன்னேன் என்று தெரியமுன்னால் தன்னை வசைபாடுவதுதான் நோக்கம் என்று நகர்கின்றார். [அவர் என்ன சொன்னார் என்று சரியாகத் தெரிவதற்காகக் காத்திருந்தேன் என்பதையும் தவறுகள் ஏற்பட்டால், திருத்திக்கொள்வேன் என்பதையும் அவருடைய பேச்சினை யாராவது தந்தால் பொருத்தமாகவிருக்குமென்றும் பட்டறையிலே மாலன் பேசியது குறித்த என் முதலாவது பதிவிலே சுட்டியிருந்தேன். இவ்விடுகையிலே, அவர் பேசியதிலே எமக்குத் தேவையான பகுதியினை அப்படியே எடுத்தும் ஒலித்துண்டமாகப் போட்டிருக்கின்றேன். பதில் சொல்லச் சொன்ன ஆளில்லாத இடத்திலே ஒரு வரியினை out of context இலே எடுத்து எதுக்கோ உதாரணமாக்கி அரசியல் வியாக்கியானம் பண்ணும் ஒருவரிலும்விட மிகவும் நிதானமாகவும் நியாயமாகவும் நான் நடந்திருக்கின்றேன் என்பதை என்னைப் பிடிக்காத மாலனின் ஆதரவாளர்கள்கூட இங்கே வந்து இதுவரை வாசித்திருந்தால் ஒத்துக்கொள்வார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்]
இவரின் ஒவ்வொரு வரிக்கும் ஆதி முதல் அந்தம் வரை உடைத்துப் பதில் தரமுடியும்.. நான் செல்வநாயகியின் பதிவிலே சொன்ன, ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இனைத் தான் out of context ஆகக்கூட அங்கே புரிந்து கொள்ளமுடியாமல் ஏகடியமென்று சொல்லிவிட்டு, என் மூன்று தரத்து to the context ஆன விளக்கங்களையும் "சீ நாயே" (இன்றைக்கென்று மாலனுக்கும் இட்டலிவடைக்கும் இடையிலே தமிழ்மணத்திலே பலகாலம்பின்னாலே பட்டையின்றி நிர்வாணமாய் முளைத்திருக்கும் நாய்க்கவிதையைச் சொல்லவில்லை :-)) என்றும் கவனிக்காமல்விட்டு, பட்டறையிலே போய் மட்டும், "சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள் அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின் பெண் என்ன செய்தார்?" என்று அவுட்டோ அவுட்டென்று ultra out of context இலே என் இராம் மகள் வரிகளைச் சுற்றித்திரி வைத்துச் சொன்னவருக்கு, out of context ஆகத் தன்னைக் கருதிக்கொண்டோமென்று வருத்தம் வருகிறதாம். வருந்தம் என்ன சிலருக்கு மட்டுமா வம்சம் வம்சமா வாழையடி வாழையா வரும்? :-(
1. (மீண்டும் தன் முயற்சியில் மனம் தளராத) நான் (அமெரிக்க எதிர்ப்புள்ள, கம்யூனிஸ்ட் சித்தாந்தம் சார்ந்த) சந்திப்புக்கு இவ்வரிகளை எடுத்துச் சொன்னதன் அர்த்தம், "சீன அரசின் சார்பாக தீபெத் மீதான அதன் அத்துமீறலையும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு மார்க்ஸியச்சித்தாந்தத்திலே நம்பிக்கையுள்ள பத்திரிகையாளர், தன் மகளை அப்படியான சீனப்பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் படிப்பதைக் காணாமல், முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றிலே பத்திரிகைத்துறையிலே கற்கப் பார்த்திருப்பது, தந்தைப்பத்திரிகையாளரின் முரண்பாடும் & பொய்த்தன்மையும் நிறைந்த செயல்" என்ற அர்த்தத்திலே. சந்திப்போடு, செல்வநாயகியின் பதிவிலே பேசிக்கொண்டிருந்தது இப்பின்புலத்திலேதான், in this context. மாலன், இதை எடுத்துக்கொண்டுபோய், out of context இலே பட்டறையிலே தனிமனிததாக்குதலோடு கொண்டு வந்து no context இலே பனைமரத்திலே மாடு கட்டுவதுபோலக் கட்டி, பதிவர்களை மனம் விட்டு (எங்கே?), பேசச் சொல்கிறார். யார் எங்கே எதை out of context ஆக எடுத்துப்போடுவது?
2. சரி அப்பால் நகர்வோம். தனிப்பட்டமுறையிலே தாக்கி எழுதுதலென்று சொன்னாலும், "பொண்ணு என்ன பண்ணும்" என்பதுதான் அவர் தன் உதாரணமாகச் சொல்லும் 'இராமின் மகளை நான் தாக்குகின்றேன்' என்று கொண்டால், கொஞ்சம் நில்லுங்கள். ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற இந்த வசனத்திலே பொண்ணை என்ன சொல்லியிருக்கின்றேன். தமிழிலேதானே எழுதியிருக்கின்றேன். வாசிக்கின்றவர்கள் எவராவது சொல்லுங்கள் பொண்ணை என்ன தாக்கியிருக்கின்றேன். 'பொண்ணு ராங்க் வாங்கினதுகூடாதென்றோ ராங்கா போயிருக்கணும்ன்னோ' எதுவாச்சும் சொல்லியிருக்கிறேனா? இதிலே என்ன தாக்குதல் இருக்கின்றது? இதுவென்ன அநியாயவாதம்? நான்தான் சிந்திக்கத்தெரியாதவன்; புரிந்த எவரேனும் சொல்லுங்கள்; நான் சொன்னது அப்பெண்ணின் பொதுவாழ்விலே மும்முரமாக இயங்கும் தந்தை பற்றிய முரண் ஒன்றைச் சுட்டிக்காட்டும் சாதாரண விமர்சனமா? தனிமனிதத்தாக்குதலா? [இத்தனைக்கும் இந்துவிலே Pol Potist என்று பிரபாகரனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வரும்; மாலனின் தனிமனிதத்தாக்குதல் வரைவிலக்கணத்தின்படி பார்த்தால், இந்துவின் தனிமனிதத்தாக்குதலுக்கு மானநஷ்டவீடு இந்தியா வரமுடிந்தால், பிரபாகரன் போடலாம்]
3. சரி, அதற்கும் அப்பால் நகர்வோம்; பட்டறையிலே பேச எடுத்துக்கொண்டது தனிநபர் தாக்குதலைப் பற்றி; அதைக்கூடச் சரியாகப் பொருத்திக் காட்டக்கூடிய உதாரணத்துடன் காட்டாமல் சொன்னதை மேலே ஏன் பிழையென்று காட்டியிருக்கின்றேன். மேற்கொண்ட விவாதத்துக்காகமட்டும் அது தனிப்பட்ட தாக்குதலென்றே எடுத்துக்கொள்வோமே? சரி பெண்ணைத் தனிப்பட்ட தாக்குதல் செய்துவிட்டுப் போனார் என்றே சொல்லி விட்டுப்போயிருந்திருக்கலாம். ஆனால், அவர் வலைப்பதிவுப்பட்டறையின் தேவைக்கப்பால்,
அ. இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதினை மட்டுமே ஒன்றைரை நிமிடங்கள் நியாயப்படுத்துவதெல்லாம் எதற்காக?
ஆ. அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் உதாரணங்கள் ராஜாஜி-பெரியார் தவிர, மிகுதியானதெல்லாம், "இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க?" பத்திரிகையாளராகவும் செய்தியாளராகவும் விளங்கும் அவருக்கு, குறைந்தபட்சத்தேவைகளுக்கான கூட்ட(த்த)ணிகளாக ஒவ்வொரு மாநில,மத்திய, உள்ளூராட்சித்தேர்தலிலும் முளைக்கும் காவிபட்ட மஞ்சட்துண்டு, கைபட்ட இரட்டை இலை, துருப்பிடிக்காமலிருக்க கைப்பிடி நெல்லாச்சும் அறுவடையானாற் சரி என்று இடம் பார்த்து அலையும் அரிவாளும் சுத்தியலும் தோன்றுவதில்லை; ஆங்கு இலங்கைத்தமிழரே தாம் தோன்றி நிற்கின்றார்கள். இலங்கைத்தமிழரே இல்லாத பட்டறையிலே இராமின் மகள் சீனாவிலே படிக்காமல் அமெரிக்காவிலே படிப்பதை நியாயப்படுத்த இலங்கைத்தமிழர்களினை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வது எதேச்சையானதா, இல்லையா என்று பட்டறையிலே குந்தியிருந்தவர்கள்கூடவேண்டாம், இங்கிருந்து வாசிக்கும் எவருமே சொல்லிவிடலாம். அவரின் இராமின் பெண் சார்பான பதில் சொல்லும் மனநிலையின்போது, முன்னே சபையிலிருந்த்த தமிழகத்தமிழ்ப்பாண்டவ,விதுர,துரோண,பீஷ்மாச்சாரியர்களோ கர்ணன்களோ கூடத் தோன்றவில்லை; இலக்குவைத்துப் பேசியிருக்கவேண்டிய வலைநெறிக்கிளியோ கிளையோகூடத் தோன்றவில்லை; எங்கோ குந்திக்கொண்டு, "இராமின் பொண்ணு கொலம்பியாவிலே படிப்பது" பற்றிப் பேசிய துரியோதனப்பெயரிலியும் அவனின் தொண்ணூற்றொன்பது (விகர்ணன் உட்பட) ஈழகௌரவர்களுமே சிந்தையிலே தோன்றி விரிந்திருக்கப் பதில் சொல்லியிருக்கின்றார் என்பதுதான் நமக்கு எல்லோருக்குமே புரிகின்ற அந்நேரத்து யதார்த்தம். அந்தளவுக்கு அவருக்கு இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதுபற்றி இராமினை எப்படி ஈழத்தமிழன் நான் விமர்சிக்கலாம் என்பதுதான் இத்துணை உளத்தாக்கத்தினை ஏற்படுத்துவற்கு என்ன காரணமென்று எனக்கு இன்னுமே புரியவில்லை. இராம் விமர்சனத்துக்கு மேலானவர் என்று கருதுகின்றாரா? :-(
இ. அவரின் குறைந்தபட்ச இலங்கைத்தமிழர் உதாரணங்களைப் பாருங்கள். "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை; ஆனால், இந்தியாவுக்கு வரத்தானே போகத்தானே செய்கின்றார்கள்?" - சம்பந்தப்படாமல் ஒரு கேள்வியை முதலிலே வைத்துவிடுவோம்; "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை" என்றால், இலங்கைத்தமிழருக்கு எதிராகத்தான் இந்தியா செயற்படுகின்றது என்பதுதானே அர்த்தம். பின்னால், இந்தியா, இவர், இந்து ராம் ஆகியோர் முன்னிலைப்படுத்தும் (செத்த அமிர்தலிங்கம், பத்மநாபா, நீலன்), கருணா, ஆனந்தசங்கரி, டக்லஸ் ஆகியோரெல்லாம், India's 'Our Men Flints in Sri Lanka' என்றா ஈழத்தமிழர் அர்த்தப்படுத்தவேண்டும்? ஆக, ஈழத்தமிழரின் மாற்றுத்தலைமைகளென இந்தியா முன்வைக்கும் கருணா, டக்ல்ஸ், ஆனந்தசங்கரி ஆகியோர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர்களல்லர்; அதுதானே அர்த்தம்?
இனி, இந்தியா இலங்கைப்பிரச்சனையில் தமக்கு எதிர்நிலையிலேயிருக்கும் இலங்கைத்தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லையென்றால், அஃது இந்திய அரசினதும் அதன் வெளியுறவுக்கொள்கையிலே அழுத்தம் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட 'சகூனி' நாராயணர்கள் சிலரினதும் கருத்தா? இல்லையென்றால், மாலன் சொல்வதுபோன்று அமெரிக்க அரசின் நிலைக்கு எதிர்நிலைகூடக் கொண்டிருக்ககூடிய அமெரிக்கப்பல்கலைக்கழகங்கள் போன்ற இந்திய அரசினதும் அதனது 'ஆலோசகர்களினதும்' அரசியற்கட்சிகளினதும் கருத்துக்களோடு பெரியளவு சம்பந்தம் கொண்டிராத, இலங்கைத்தமிழர் வந்து கலந்து போகக்கூடிய தமிழகமக்களின் கருத்தா?
இலங்கை அரசை எதிர்த்துப்போராடும் இலங்கைத்தமிழர்கள் இலங்கைப்பாஸ்போட்டுல போவதும் இந்து இராமின் மகள் சீனாவுக்குப் பத்திரிகைத்துறைக்குப் படிக்கப்போகாமல் (இந்தியாவிலேயே தன்னார்வச்சேவை செய்யாமல், ஓராண்டு சீன மக்களுக்குத் தன்னார்வச்சேவை அவர் செய்தவர் என்பதைப் பேசுவதற்குச் சம்பந்தமில்லையென்பதாலே இங்கே விட்டுவிடுவோம்) அமெரிக்காவுக்குப் போவதும் ஒரே வகைதானா? என்ன முட்டாட்டனமான வாதம். முதலாவது நிலையிலே தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அம்மக்களுக்கில்லையே. இராமின் மகளின் நிலையிலே அவர் என்ன அமெரிக்க அரசினையா எதிர்த்துப் போராடினார் என்ற கேள்வியை விட்டுவிட்டுப் பார்த்தாலுங்கூட, அவருக்கு வேண்டிய எதையும் தேர்ந்தெடுக்க வசதியும் சுதந்திரமுமிருக்கின்றதென்பதில்லையா உண்மை? "தமக்குத் தேர்ந்தெடுக்க இருக்கும் சுதந்திரம்" பற்றி ஒரு குழந்தைக்குக்கூடப் புரிந்துகொள்ளும் அடிப்படைத்தெளிவினை மாலன் புரிந்துகொள்ள முடியாமற்போனதற்கு அவருக்கு ஈழத்தமிழருக்கு வியாக்கியானம் பட்டறையிலே கொடுக்கவேண்டுமென்ற மதி மீறிய அவா காரணமென்று சொல்லலாமா? இதைத்தானே வலைப்பதிவுகளிலே எல்லோரும் சுட்டிக்காட்டி எதிர்த்துக்கொண்டிருந்தனர். "விருப்பப்பட்டு" ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் எதற்காக, போயிறங்கும் இடங்களிலே அதைக் கிழித்துப்போட்டுவிடுகின்றார்கள் என்பதையோ அல்லது வேறெந்தப் பாஸ்போர்ட்டினையோ எடுத்துக்கொள்ள வசதியின்றி இருக்கின்றார்களென்பதோ உங்களுக்குப் புரியவில்லை; இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் எத்தனையோ பேர் சந்தர்ப்பம் கிடைத்தால், அமெரிக்க பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு, இந்தியப்பாஸ்போர்ட்டிலிருந்து தம்மைக் கழற்றிக்கொடுக்க ஆயத்தமாகவிருக்கின்றார்களென்று பாருங்கள்.
சின்னக்குட்டி, அற்புதன், சசி ஆகியோர் இதனைத்தானே தம் பதிவுகளிலே எடுத்துச் சொல்லியிருந்தார்கள். தமிழர்களின் மாதச்சம்பளத்திலே அவர்களின் மண்மேலேயே தாக்குதல் நிகழ்த்த பாதுகாப்புநிதியாக அரசுவெட்டிக்கொள்ள என் வருமானத்திலிருந்தும் மாதம் மாதம் துண்டு ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுத்த நான் இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழிக்காமலேதான் வைத்திருக்கின்றேன்; அமெரிக்க, கனடிய, அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு ஒன்றினை எடுத்துத்தாருங்கள்; உடனே ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழித்தெறிந்துவிட்டு, NRI அமைப்புகள் இந்தியாவுக்கு உதவுவதுபோலவே, ஈழத்துக்கும் எனக்குக் கல்வி தந்த ஈழத்திலில்லாத ஸ்ரீலங்காவின் பல்கலைகழகத்துக்கும் கையிலே துட்டிருந்தால், உதவி செய்யத்தயாராகவிருக்கின்றேன். "கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள்; புரியாமல் எதிர்த்தார்கள்; சொல்லப்பட்ட context இனைக் கவனிக்காமலே எதிர்த்தார்கள்" என்று அழுகுணியாட்டமல்லவா ஆடுகின்றீர்கள், மாலன். அவர்கள் கேட்டதெல்லாம், சொன்னதெல்லாம், "ஈழத்தமிழரென்ன விரும்பியா இலங்கைப்பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றார்கள்? இதைப் போய் நீங்கள் எப்படி இராமின் மகள் அமெரிக்காவுக்குப் படிக்கப்போவதற்கோ அல்லது இஃது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் கொள்கிற உறவு என்று (அவமதிப்பாக உணரும் வகையிலே) எளிமைப்படுத்தவோ செய்ய முடிகின்றது?" உங்களுக்கு வலைப்பதிவிலே உங்களை எல்லோரும் வசை பாடுவதாகவே தெரிகின்றதென்ற அடிப்படைப்பார்வையோடு பார்க்கத்தொடங்கும்போது, குறைந்தபட்சம் மற்றவர்களின் அவமதிப்பு உணர்வு தோன்றும் அச்சிலசின் குதிக்கால்மனப்புள்ளிகளைக் கண்டுகொள்ளமுடியாதென்றே தோன்றுகின்றது.
4. இவை எல்லாவற்றினையும் விட்டுவிடுவோம். ஆனால், என் கருத்தினை நீங்கள் புரிந்த வகையிலே ஓரிடத்திலே -என்னைத் தெரிந்தவர்களும் நிறைந்த அவையிலே- நெறி பிறழ்தல் என்பதற்கு உதாரணமாகச் சொல்லும்போது, அவ்விடத்திலே என் கருத்தினைச் சொல்ல நான் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதுதான் முறை. உங்கள் கருத்துக்கு உங்கள் பதிவிலில்லாமல், வேறெங்கோ பின்னூட்டிவிட்டேன் என்று குறை கண்ட நீங்கள் இதிலே செய்தது அதைவிடப்பெரிய வலைநெறிப்பிறழ்வல்லவா? :-(
5. வலைப்பதிவிலே தனிமனிதத்தாக்குதலுக்கு எத்தனையோ மிகமிகமிக மோசமான காலாகாலமாக அலையும் பதிவு செய்யப்பட்ட திமிங்கல உதாரணங்களெல்லாம் இருக்க, இப்படியான கையில் ஒட்டினாற் தட்டிக்கொள்ளும் மினுங்கற்காக்காய்ப்பொன் உதாரணமே உங்களுக்கு அங்கே ஞாபகத்துக்கு வருகின்றதென்றால், இத்துணை நாள் வலைப்பதிவுகளிலே பங்காற்றி, தனித்தாக்குதலினாலே பதம் பார்க்கப்பட்டு, பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அப்பட்டறையின் கேட்போராகவிருந்திருந்தால், நீங்கள் ஒரு பழைய கணக்கினைப் பதிவர்களை மனம் திறந்து பார்த்துத் தீர்த்துக்கொள்வோமென்று தனிப்பட்ட தாக்குதலினை மேற்கொண்டீர்கள் என்பதை புரிந்துகொள்ளமாட்டாதவர்கள் என்றா கணிப்பிட்டிருந்தீர்கள்? அத்துணைதானா சக/காபதிவர்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு? :-(
6. ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இதிலும் விட எனக்கு மிகவும் தனிப்பட்ட தாக்குதலாகத் தெரிவது, நீங்கள் அனுமதித்திருக்கும், "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது." என்னைப் போன்றோரிலே நீங்கள் மறைமுகமாக அங்கீகரிக்கும் தனிப்பட்ட தாக்குதல் இது. பதிவின் தலையிலே "பெரியோர் எனில் வியத்தலும் இலமே சிறியோர் எனில் இகழ்தலும் இலமே" வலைக்கோளாகக் கொண்ட நீங்கள் இப்படியான பின்னூட்டங்களை அனுமதிப்பது அறிந்துகொண்டே மறைமுகமாக உற்சாகமூட்டும் தனிப்பட்ட தாக்குதல் என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. அப்படியான நீங்கள் எப்படி என் சாதாரண வரிகளிலே இப்படியான அர்த்தத்தினைக் கண்டுகொண்டீர்களென்பது என் வியப்பிற்குரியதாகவேயிருக்கின்றது.
பட்டறை அமைப்பாளர்களை எண்ணி மெய்யாகவே நான் சங்கடமடைகின்றேன். ஒரு புறம் நானும் என்னைப் போன்றவர்களும் மறுபுறம் அவர்களின் மதிப்புக்குரிய நீங்கள். இந்நிலையிலே இருபுறங்களிலும் பிய்த்துக்கொள்ள நடுவிலே ஒருவர் படும் பாட்டினை உணர, பாற்கடல்கடை கயிறான ஆதிஷேசனுக்குக்கும், விடாதுகருப்புவின் பதிவினையோ, விட்டதுசிகப்பினது பதிவினையோ திரட்டிகளிலிருந்து "நீக்கு/நீக்காதே" என்ற இருபுறஆட்களின் பிய்த்தெடுப்புக்கும் ஆளாகும் திரட்டி நிர்வாகிகளுக்குமேதான் முடியுமென நம்புகிறேன் :-) வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இந்தப்பக்கம், நாங்கள் முதலிலே கத்திவிட்டோமேயென்று மட்டுமேதான் ஆட்சேபணைப்பதிவுகளையிட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்பவில்லையென்றபோதுங்கூட, அவர்களினை அப்படியாக வெளிப்படையாகவே செய்யும்படி மூலைக்குத் தள்ளிவிட்டதால், அநாவசியமாக உங்களின் மனத்தாங்கலுக்கு உள்ளாக்கிவிட்டோமோ/டேனோ என்று உண்மையாகவே சங்கடமாகவிருக்கின்றது. இப்படியாகுமென்று எண்ணவில்லையென்றாலுங்கூட, இது தவிர்க்கமுடியாதது; ஆனால், 'When a giant tree falls, the earth below shakes" என்றமாதிரியாக கொடூர அர்த்தத்திலே நான் சொல்லவில்லை. இத்துணை கஷ்டப்பட்டு பட்டறை அமைத்து உழைத்த அமைப்பாளர்களுக்குச் சங்கடம் வருமே என்று பேசாமலே விடுவதா, அல்லது உங்களின் பேச்சின் பொருந்தாமையைச் சுட்டிப் பேசிப் பெரிதாக்கி விண்டு பார்ப்பதா என்பதிலே, இரண்டாவதே முக்கியமாகத் தோன்றியது. அதற்காக, மாலன் அவர்களோடு மனத்தாங்கல் ஏற்படும் வகைக்கு உள்ளாகியதற்கு என் வருத்தத்தைத் தெரிவிக்கும்போது, என் (என்னைப்போன்றோர்) நிலையினையும் அமைப்பாளர்கள் புரிந்துகொள்வார்களென நம்புகிறேன்.
மாலனின் மற்றைய வரிகளிலே எனக்குப் பிய்த்துப் பிய்த்துச் சொல்லும் தேவை இப்போதைக்கு இல்லை. அநாவசியமாக இழுத்துக்கொண்டு போவதாகவிருக்கும்.
~~~~~
2.
மாலன் அவர்கள் பட்டறையிலே -/பெயரிலி._இராம்_ஈழம் பற்றிப் பேசியதன் நுண்ணரசியலைப் பேச முற்பட்டேன். அதன், ஒரு கூறாக அங்கே மட்டுறுத்துனர், அமைப்பாளர்களின் பொறுப்பினைப் பற்றிக் (கேள்வி) கேட்டிருந்தேன். ஆனால், அதுவோ அதற்கான பட்டறை அமைப்பாளர்களின் பதில்களோ மாலனின் வருத்தத்தைப் பட்டறையாளர்களிலே இத்துணை ஏற்படுத்துமென்பதை நான் எதிர்பார்க்கவில்லை. வேண்டாப்பக்கவிளைவு என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, மேலும் பட்டறை அமைப்பாளர்களை "என் கேள்விக்கென்ன பதில்?" என்று கேட்பதோ அவர்களுடன் விவாதத்தினை வைப்பதோ எவ்வகையிலும் நான் செய்யும் நல்ல செயலாக அமையாது; ஓர் எல்லைக்கப்பால், நான் இன்னும் அதனையே பிடித்து அவர்களுடன் தொங்கிக்கொண்டிருப்பது, பட்டறையாளர்களின் உழைப்பினையும் நோக்கினையும் நான் அவமதிப்பதாகவே எனக்கே தோன்றும். அதனால், இனி பட்டறையாளர் பற்றி எதையும் பேசமாட்டேன்.
மேலும், "நான் அவ்வுதாரணத்தினைச் சொன்னதன் சூழலைக் கண்டுகொள்ளவில்லை", " நுண்ணரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்" என்று தன் மேற்சட்டையின் முதலாம் இரண்டாம் தறிகளிலே கைவைத்து ஆடையவிழ்ப்பு நடனம் தொடங்கும் மாலன், "நான் வசதி படைத்த,நிரம்பப் படித்த, தன் இனம் விடுதலைக்குப் போராடும் போது, தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறி சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டு வசதியான சூழ்நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய சமூகப் பிரசினையாக பூச்சாண்டி காட்டி விமர்சிக்கிற பெரிய மனிதர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்", "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?","அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும்தான், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் பெயரிலி போன்றவர்கள்தான்,விமானம் பிடித்து அயலகங்களுக்குக் குடியேறுகிறவர்கள்" என்று போர்த்திருந்த ஒவ்வோர் ஆடையினையும் களைந்து, தன் பின்னூட்ட இறுதியிலே உள்ளாடையையும், "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்ற முற்றிலும் பொய்யான வரலாற்றுத்திரிபினை அது தூண்டக்கூடிய வீச்சம், களம் அறிந்து களைந்தெறிந்து நிர்வாணமாக நிற்கின்றார். என்ன, ஒரேயொரு வித்தியாசம்; இந்நடனத்தின் இறுதிநிர்வாணநேரத்தின்போது, இங்கே விளக்குகள் அணையவில்லை. கண்கூசத் தெறிக்கின்றது உட்குரூரமும் நுண்ணரசியல்நோக்கும்.
நேரடியாகவே, "ஈழத்தமிழரை வரப்போகவிடும் ஈழத்தமிழரை ஆதரிக்காத இந்தியாவினை எனது தேசமென்று கொண்ட நான், இந்தியத்தேசத்திலே உள்ள இராமின் மகள் அமெரிக்காவிலே கற்பது பற்றி, "வெளிநாட்டிலே குடும்பத்துடன் வசதியுடன் வீடுகட்டி" -இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன்- வாழும் இந்தியாவுக்கு அந்நியனான -/பெயரிலி. என்ற ஈழத்தமிழன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா? நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா?" என்பதுதான் இங்கே பிரச்சனை" என்று சொல்லுமாறு சொல்லி அம்மணம் தெரிய நிற்கிறார். ஈழத்தமிழர், இந்தியா, இந்தியத்தமிழர், நாவலர், இந்து, புலிகள், ஈழத்தலைமை, மாற்றுத்தலைமை, யாழ்ப்பாணத்தமிழர், இலங்கையிலே இந்தியத்தமிழர் என்பன தொடர்பாக மாலனின் ஒவ்வொரு கருத்தும் இப்படியான இவரது தேசத்தினையும் தேசத்தின் சகமனிதர்களையும் விமர்சிக்கின்ற அன்னியரை எதிர்கொள்ளும் கல்லற்ற மெல்லிய(?) உணர்வுள்ள மனதினூடாகவே காணப்படவேண்டுமென்றே அவர் மிகவும் தெளிவாக தன் பின்னூட்டங்களிலே அறுத்து உறுத்து மெல்லிய உணர்வுள்ள மனம் பதறத் தேசப்பற்றுடனும் சகதேசத்தவர் பற்றிய நேசத்துடனும் சொல்கிறார். வாருங்கள், நாங்கள் போய் கண்மூடித்தனமான விடுதலைப்புலி ஆதரவாளர்களின் பாசிசத்தை விமர்சிப்போம் :-(
எல்லோரும் காண, பெரியார் மீது தனிமனிதத்தாக்குதல் என்ற பேச்சின் பின்னாலே, இராம்_மகள்+-/பெயரிலி.+ஸ்ரீலங்கா பாஸ்போட்_ஈழத்தமிழர்+இந்தியாவின் ஈழத்தமிழருக்கான ஆதரவின்மை இவை வந்ததற்கு அடியிலே இத்துணை சாம்பல்பூத்த தணல் இருப்பதினை நுண்ணரசியல் என்றில்லாமல் என்னவென்று சொல்வதாம்? அமுக்கிவைத்த முயற்குட்டிகள் இவ்வாறு குழி தோண்டி வளை தாண்டி அடங்காமல் பரந்தோடும் நிலையை எல்லோரும் பாருங்கள். இத்தனையையும் சுருக்கி, "வரப்புயர" என்று "-/பெயரிலி.யின் இராம்(மகள்) மீதான விமர்சன"த்துக்குள் இழுத்ததஉ நுண்ணரசியல் இல்லாவிட்டால், நானோவரசியலாகமட்டுமே இருக்கமுடியும். இதற்கு சற்றுமுன்னேதான் சிறிலைக் காட்டிக்கொடுக்கும் வலைநெறிப்பிறழ்வு வேறு (சிறில், இன்னமும் சயந்தனின் இடுகையின் பின்னாலே, -/பெயரிலி. சொன்ன அந்த 'ரேப்' உதாரணத்தினாலே மனம் நொந்து போயிருக்கின்றீர்களென்று தெரிகின்றது. :-) அதைக்கூட, வேண்டுமானால், வலைநெறிப்பிறழ்வு, தனிமனிதத்தாக்குதலுக்கு மாலன் அவருக்குமட்டும் தனியே ஆழத்தைத்துவிட்ட, மற்றவர்களுக்கு உப்புச்சப்பற்ற முரண்சொல்லும் " -/பெயரிலி._இராம்(மகள்)" உதாரணத்துக்குப் பதிலாகக் காட்டியிருக்கலாம் :-(). "-/பெயரிலி. குடும்பமாக வெளிநாட்டிலேயிருக்கின்றாரா? அவர் குட்டி சமஸ்தானத்துமஹாராஜா போல வசதியோடு இருக்கின்றாரா? இந்தியத்தமிழர்_இலங்கைத்தமிழர் உறவுநிலை, அரசியல் குறித்த வரலாற்றின் சரியான தரவுகள் எங்கே? யாழ்ப்பாணத்தலைமை என்றால் என்ன? எக்காலத்திலே அது எவரால் எவரைப் பிரதிநிதிப்படுத்தியது? (அப்படியான யாழ்ப்பாணத்தலைமையைக் கடிகின்ற மாலன் அதேதலைமையின் வழிப்பட்ட காலத்தே உருவாகிய அசல் யாழ்ப்பாணத்தார் அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி புத்தகத்துக்கு 1996 இலே முன்னுரை எழுதியது முரண்நகை :-)), இராம் மகள் மார்க்ஸியவாதியா என்று கேட்கும் இவர் எப்படி -/பெயரிலி. குடும்பம் வெளிநாட்டிலேயிருக்கின்றதென்று கருதிக்கொள்கின்றார்?" என்பதுபோன்ற பெரும்பட்டியற்கேள்விகளை இன்னொரு பொழுதுக்கு, நான் சொன்னதுபோலவே, என் இறுதிப் பின்னூட்டத்திலே பின்னொரு முறை வைத்துக்கொள்ளலாம்.
அதனால், இப்படியான நுண்ணரசியல், மண்ணரசியல் நிறைந்த (வி)வாதத்துள்ளே இவற்றுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிப்பட்டறை அமைப்பாளர்களை இழுத்து, இவ்வாதக்கிரகணம் பட்டறையின் நன்னோக்கினையும் அமைப்பாளர்கள் & பங்குபற்றியோரின் உழைப்பினையும் மறைத்து மறக்கடிக்க வைத்துவிட்டதற்காக வருந்துகின்றேன். இப்படியான விரிவு கொள்ளும் என்று எண்ணவில்லை. ஆனாலும் தவிர்க்கமுடியவில்லை. மேற்கொண்டேனும், அப்படியான எதிர்விளைவுகளைப் பட்டறைக்கும் அமைப்பாளர்களுக்கும் நான் மோசமாக்க ஒரு காரணமாக என் பதில்களிருப்பதை நான் விரும்பவில்லை. மாலன் பட்டறையமைப்பாளர்களோடு மனம் வருந்தக்காரணம் ஆகிவிட்டேன் என்பதற்காக, பட்டறை அமைப்பாளர்களிடம் (மட்டும்) என் வருந்தம் கலந்த தார்மீகமன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். பட்டறை அமைப்பாளர்கள் குறித்து இனியேதும் இங்கே பேசப்போவதில்லை.
இது எவ்வகையிலும் ஒரு புதிய இடுகை அல்ல. என் me, myself, my ego இடுகையின் பின்னான என் இரு பின்னூட்டச்செருகுதல்கள், தமிழ்மணத்தின் சூடான இடுகைகளிலே இடம் பிடிப்பதற்காக இங்கே ஓர் இடுகையாகப் போடப்படுகின்றன என்றும் கொள்ளவேண்டாம் :-) [அப்படியிருந்தாலும், மகிழ்ச்சியே] பின்னூட்டங்களின் நீட்சி காரணமாக, இடுகையினைத் திறக்கமுடியவில்லை என்று சொல்லும் நண்பர்களின் கருத்துக்கிணங்கி இங்கே ஓர் இடுகையாக.
பேரில்லாத பேமானிக்கு ஆண்டுமுடியும்வரை புதிய இடுகைக்கென்று எழுதும் நோக்கமில்லை. எல்லோரும் காமிக்ஸ் வாசித்து இன்புற்றறிவது அல்லால், வேறேதும் அறியேன் பராபரமே!! வாழ்க வளமுடன். பின்னால், வந்து I will (hell)bend & (de)fend
"இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?" தலைப்புக்கு நன்றி: 'ஒரு தீப்பொறி' அந்தனி சில்
------------
1.
மாலன் தன் பக்க விளக்கத்தைப் போட்டிருக்கின்றார். Out of context இலே ஆரம்பித்து தான் என்ன சொன்னேன் என்று தெரியமுன்னால் தன்னை வசைபாடுவதுதான் நோக்கம் என்று நகர்கின்றார். [அவர் என்ன சொன்னார் என்று சரியாகத் தெரிவதற்காகக் காத்திருந்தேன் என்பதையும் தவறுகள் ஏற்பட்டால், திருத்திக்கொள்வேன் என்பதையும் அவருடைய பேச்சினை யாராவது தந்தால் பொருத்தமாகவிருக்குமென்றும் பட்டறையிலே மாலன் பேசியது குறித்த என் முதலாவது பதிவிலே சுட்டியிருந்தேன். இவ்விடுகையிலே, அவர் பேசியதிலே எமக்குத் தேவையான பகுதியினை அப்படியே எடுத்தும் ஒலித்துண்டமாகப் போட்டிருக்கின்றேன். பதில் சொல்லச் சொன்ன ஆளில்லாத இடத்திலே ஒரு வரியினை out of context இலே எடுத்து எதுக்கோ உதாரணமாக்கி அரசியல் வியாக்கியானம் பண்ணும் ஒருவரிலும்விட மிகவும் நிதானமாகவும் நியாயமாகவும் நான் நடந்திருக்கின்றேன் என்பதை என்னைப் பிடிக்காத மாலனின் ஆதரவாளர்கள்கூட இங்கே வந்து இதுவரை வாசித்திருந்தால் ஒத்துக்கொள்வார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்]
இவரின் ஒவ்வொரு வரிக்கும் ஆதி முதல் அந்தம் வரை உடைத்துப் பதில் தரமுடியும்.. நான் செல்வநாயகியின் பதிவிலே சொன்ன, ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இனைத் தான் out of context ஆகக்கூட அங்கே புரிந்து கொள்ளமுடியாமல் ஏகடியமென்று சொல்லிவிட்டு, என் மூன்று தரத்து to the context ஆன விளக்கங்களையும் "சீ நாயே" (இன்றைக்கென்று மாலனுக்கும் இட்டலிவடைக்கும் இடையிலே தமிழ்மணத்திலே பலகாலம்பின்னாலே பட்டையின்றி நிர்வாணமாய் முளைத்திருக்கும் நாய்க்கவிதையைச் சொல்லவில்லை :-)) என்றும் கவனிக்காமல்விட்டு, பட்டறையிலே போய் மட்டும், "சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள் அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின் பெண் என்ன செய்தார்?" என்று அவுட்டோ அவுட்டென்று ultra out of context இலே என் இராம் மகள் வரிகளைச் சுற்றித்திரி வைத்துச் சொன்னவருக்கு, out of context ஆகத் தன்னைக் கருதிக்கொண்டோமென்று வருத்தம் வருகிறதாம். வருந்தம் என்ன சிலருக்கு மட்டுமா வம்சம் வம்சமா வாழையடி வாழையா வரும்? :-(
1. (மீண்டும் தன் முயற்சியில் மனம் தளராத) நான் (அமெரிக்க எதிர்ப்புள்ள, கம்யூனிஸ்ட் சித்தாந்தம் சார்ந்த) சந்திப்புக்கு இவ்வரிகளை எடுத்துச் சொன்னதன் அர்த்தம், "சீன அரசின் சார்பாக தீபெத் மீதான அதன் அத்துமீறலையும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு மார்க்ஸியச்சித்தாந்தத்திலே நம்பிக்கையுள்ள பத்திரிகையாளர், தன் மகளை அப்படியான சீனப்பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் படிப்பதைக் காணாமல், முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றிலே பத்திரிகைத்துறையிலே கற்கப் பார்த்திருப்பது, தந்தைப்பத்திரிகையாளரின் முரண்பாடும் & பொய்த்தன்மையும் நிறைந்த செயல்" என்ற அர்த்தத்திலே. சந்திப்போடு, செல்வநாயகியின் பதிவிலே பேசிக்கொண்டிருந்தது இப்பின்புலத்திலேதான், in this context. மாலன், இதை எடுத்துக்கொண்டுபோய், out of context இலே பட்டறையிலே தனிமனிததாக்குதலோடு கொண்டு வந்து no context இலே பனைமரத்திலே மாடு கட்டுவதுபோலக் கட்டி, பதிவர்களை மனம் விட்டு (எங்கே?), பேசச் சொல்கிறார். யார் எங்கே எதை out of context ஆக எடுத்துப்போடுவது?
2. சரி அப்பால் நகர்வோம். தனிப்பட்டமுறையிலே தாக்கி எழுதுதலென்று சொன்னாலும், "பொண்ணு என்ன பண்ணும்" என்பதுதான் அவர் தன் உதாரணமாகச் சொல்லும் 'இராமின் மகளை நான் தாக்குகின்றேன்' என்று கொண்டால், கொஞ்சம் நில்லுங்கள். ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற இந்த வசனத்திலே பொண்ணை என்ன சொல்லியிருக்கின்றேன். தமிழிலேதானே எழுதியிருக்கின்றேன். வாசிக்கின்றவர்கள் எவராவது சொல்லுங்கள் பொண்ணை என்ன தாக்கியிருக்கின்றேன். 'பொண்ணு ராங்க் வாங்கினதுகூடாதென்றோ ராங்கா போயிருக்கணும்ன்னோ' எதுவாச்சும் சொல்லியிருக்கிறேனா? இதிலே என்ன தாக்குதல் இருக்கின்றது? இதுவென்ன அநியாயவாதம்? நான்தான் சிந்திக்கத்தெரியாதவன்; புரிந்த எவரேனும் சொல்லுங்கள்; நான் சொன்னது அப்பெண்ணின் பொதுவாழ்விலே மும்முரமாக இயங்கும் தந்தை பற்றிய முரண் ஒன்றைச் சுட்டிக்காட்டும் சாதாரண விமர்சனமா? தனிமனிதத்தாக்குதலா? [இத்தனைக்கும் இந்துவிலே Pol Potist என்று பிரபாகரனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வரும்; மாலனின் தனிமனிதத்தாக்குதல் வரைவிலக்கணத்தின்படி பார்த்தால், இந்துவின் தனிமனிதத்தாக்குதலுக்கு மானநஷ்டவீடு இந்தியா வரமுடிந்தால், பிரபாகரன் போடலாம்]
3. சரி, அதற்கும் அப்பால் நகர்வோம்; பட்டறையிலே பேச எடுத்துக்கொண்டது தனிநபர் தாக்குதலைப் பற்றி; அதைக்கூடச் சரியாகப் பொருத்திக் காட்டக்கூடிய உதாரணத்துடன் காட்டாமல் சொன்னதை மேலே ஏன் பிழையென்று காட்டியிருக்கின்றேன். மேற்கொண்ட விவாதத்துக்காகமட்டும் அது தனிப்பட்ட தாக்குதலென்றே எடுத்துக்கொள்வோமே? சரி பெண்ணைத் தனிப்பட்ட தாக்குதல் செய்துவிட்டுப் போனார் என்றே சொல்லி விட்டுப்போயிருந்திருக்கலாம். ஆனால், அவர் வலைப்பதிவுப்பட்டறையின் தேவைக்கப்பால்,
அ. இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதினை மட்டுமே ஒன்றைரை நிமிடங்கள் நியாயப்படுத்துவதெல்லாம் எதற்காக?
ஆ. அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் உதாரணங்கள் ராஜாஜி-பெரியார் தவிர, மிகுதியானதெல்லாம், "இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க?" பத்திரிகையாளராகவும் செய்தியாளராகவும் விளங்கும் அவருக்கு, குறைந்தபட்சத்தேவைகளுக்கான கூட்ட(த்த)ணிகளாக ஒவ்வொரு மாநில,மத்திய, உள்ளூராட்சித்தேர்தலிலும் முளைக்கும் காவிபட்ட மஞ்சட்துண்டு, கைபட்ட இரட்டை இலை, துருப்பிடிக்காமலிருக்க கைப்பிடி நெல்லாச்சும் அறுவடையானாற் சரி என்று இடம் பார்த்து அலையும் அரிவாளும் சுத்தியலும் தோன்றுவதில்லை; ஆங்கு இலங்கைத்தமிழரே தாம் தோன்றி நிற்கின்றார்கள். இலங்கைத்தமிழரே இல்லாத பட்டறையிலே இராமின் மகள் சீனாவிலே படிக்காமல் அமெரிக்காவிலே படிப்பதை நியாயப்படுத்த இலங்கைத்தமிழர்களினை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வது எதேச்சையானதா, இல்லையா என்று பட்டறையிலே குந்தியிருந்தவர்கள்கூடவேண்டாம், இங்கிருந்து வாசிக்கும் எவருமே சொல்லிவிடலாம். அவரின் இராமின் பெண் சார்பான பதில் சொல்லும் மனநிலையின்போது, முன்னே சபையிலிருந்த்த தமிழகத்தமிழ்ப்பாண்டவ,விதுர,துரோண,பீஷ்மாச்சாரியர்களோ கர்ணன்களோ கூடத் தோன்றவில்லை; இலக்குவைத்துப் பேசியிருக்கவேண்டிய வலைநெறிக்கிளியோ கிளையோகூடத் தோன்றவில்லை; எங்கோ குந்திக்கொண்டு, "இராமின் பொண்ணு கொலம்பியாவிலே படிப்பது" பற்றிப் பேசிய துரியோதனப்பெயரிலியும் அவனின் தொண்ணூற்றொன்பது (விகர்ணன் உட்பட) ஈழகௌரவர்களுமே சிந்தையிலே தோன்றி விரிந்திருக்கப் பதில் சொல்லியிருக்கின்றார் என்பதுதான் நமக்கு எல்லோருக்குமே புரிகின்ற அந்நேரத்து யதார்த்தம். அந்தளவுக்கு அவருக்கு இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதுபற்றி இராமினை எப்படி ஈழத்தமிழன் நான் விமர்சிக்கலாம் என்பதுதான் இத்துணை உளத்தாக்கத்தினை ஏற்படுத்துவற்கு என்ன காரணமென்று எனக்கு இன்னுமே புரியவில்லை. இராம் விமர்சனத்துக்கு மேலானவர் என்று கருதுகின்றாரா? :-(
இ. அவரின் குறைந்தபட்ச இலங்கைத்தமிழர் உதாரணங்களைப் பாருங்கள். "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை; ஆனால், இந்தியாவுக்கு வரத்தானே போகத்தானே செய்கின்றார்கள்?" - சம்பந்தப்படாமல் ஒரு கேள்வியை முதலிலே வைத்துவிடுவோம்; "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை" என்றால், இலங்கைத்தமிழருக்கு எதிராகத்தான் இந்தியா செயற்படுகின்றது என்பதுதானே அர்த்தம். பின்னால், இந்தியா, இவர், இந்து ராம் ஆகியோர் முன்னிலைப்படுத்தும் (செத்த அமிர்தலிங்கம், பத்மநாபா, நீலன்), கருணா, ஆனந்தசங்கரி, டக்லஸ் ஆகியோரெல்லாம், India's 'Our Men Flints in Sri Lanka' என்றா ஈழத்தமிழர் அர்த்தப்படுத்தவேண்டும்? ஆக, ஈழத்தமிழரின் மாற்றுத்தலைமைகளென இந்தியா முன்வைக்கும் கருணா, டக்ல்ஸ், ஆனந்தசங்கரி ஆகியோர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர்களல்லர்; அதுதானே அர்த்தம்?
இனி, இந்தியா இலங்கைப்பிரச்சனையில் தமக்கு எதிர்நிலையிலேயிருக்கும் இலங்கைத்தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லையென்றால், அஃது இந்திய அரசினதும் அதன் வெளியுறவுக்கொள்கையிலே அழுத்தம் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட 'சகூனி' நாராயணர்கள் சிலரினதும் கருத்தா? இல்லையென்றால், மாலன் சொல்வதுபோன்று அமெரிக்க அரசின் நிலைக்கு எதிர்நிலைகூடக் கொண்டிருக்ககூடிய அமெரிக்கப்பல்கலைக்கழகங்கள் போன்ற இந்திய அரசினதும் அதனது 'ஆலோசகர்களினதும்' அரசியற்கட்சிகளினதும் கருத்துக்களோடு பெரியளவு சம்பந்தம் கொண்டிராத, இலங்கைத்தமிழர் வந்து கலந்து போகக்கூடிய தமிழகமக்களின் கருத்தா?
இலங்கை அரசை எதிர்த்துப்போராடும் இலங்கைத்தமிழர்கள் இலங்கைப்பாஸ்போட்டுல போவதும் இந்து இராமின் மகள் சீனாவுக்குப் பத்திரிகைத்துறைக்குப் படிக்கப்போகாமல் (இந்தியாவிலேயே தன்னார்வச்சேவை செய்யாமல், ஓராண்டு சீன மக்களுக்குத் தன்னார்வச்சேவை அவர் செய்தவர் என்பதைப் பேசுவதற்குச் சம்பந்தமில்லையென்பதாலே இங்கே விட்டுவிடுவோம்) அமெரிக்காவுக்குப் போவதும் ஒரே வகைதானா? என்ன முட்டாட்டனமான வாதம். முதலாவது நிலையிலே தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அம்மக்களுக்கில்லையே. இராமின் மகளின் நிலையிலே அவர் என்ன அமெரிக்க அரசினையா எதிர்த்துப் போராடினார் என்ற கேள்வியை விட்டுவிட்டுப் பார்த்தாலுங்கூட, அவருக்கு வேண்டிய எதையும் தேர்ந்தெடுக்க வசதியும் சுதந்திரமுமிருக்கின்றதென்பதில்லையா உண்மை? "தமக்குத் தேர்ந்தெடுக்க இருக்கும் சுதந்திரம்" பற்றி ஒரு குழந்தைக்குக்கூடப் புரிந்துகொள்ளும் அடிப்படைத்தெளிவினை மாலன் புரிந்துகொள்ள முடியாமற்போனதற்கு அவருக்கு ஈழத்தமிழருக்கு வியாக்கியானம் பட்டறையிலே கொடுக்கவேண்டுமென்ற மதி மீறிய அவா காரணமென்று சொல்லலாமா? இதைத்தானே வலைப்பதிவுகளிலே எல்லோரும் சுட்டிக்காட்டி எதிர்த்துக்கொண்டிருந்தனர். "விருப்பப்பட்டு" ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் எதற்காக, போயிறங்கும் இடங்களிலே அதைக் கிழித்துப்போட்டுவிடுகின்றார்கள் என்பதையோ அல்லது வேறெந்தப் பாஸ்போர்ட்டினையோ எடுத்துக்கொள்ள வசதியின்றி இருக்கின்றார்களென்பதோ உங்களுக்குப் புரியவில்லை; இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் எத்தனையோ பேர் சந்தர்ப்பம் கிடைத்தால், அமெரிக்க பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு, இந்தியப்பாஸ்போர்ட்டிலிருந்து தம்மைக் கழற்றிக்கொடுக்க ஆயத்தமாகவிருக்கின்றார்களென்று பாருங்கள்.
சின்னக்குட்டி, அற்புதன், சசி ஆகியோர் இதனைத்தானே தம் பதிவுகளிலே எடுத்துச் சொல்லியிருந்தார்கள். தமிழர்களின் மாதச்சம்பளத்திலே அவர்களின் மண்மேலேயே தாக்குதல் நிகழ்த்த பாதுகாப்புநிதியாக அரசுவெட்டிக்கொள்ள என் வருமானத்திலிருந்தும் மாதம் மாதம் துண்டு ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுத்த நான் இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழிக்காமலேதான் வைத்திருக்கின்றேன்; அமெரிக்க, கனடிய, அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு ஒன்றினை எடுத்துத்தாருங்கள்; உடனே ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழித்தெறிந்துவிட்டு, NRI அமைப்புகள் இந்தியாவுக்கு உதவுவதுபோலவே, ஈழத்துக்கும் எனக்குக் கல்வி தந்த ஈழத்திலில்லாத ஸ்ரீலங்காவின் பல்கலைகழகத்துக்கும் கையிலே துட்டிருந்தால், உதவி செய்யத்தயாராகவிருக்கின்றேன். "கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள்; புரியாமல் எதிர்த்தார்கள்; சொல்லப்பட்ட context இனைக் கவனிக்காமலே எதிர்த்தார்கள்" என்று அழுகுணியாட்டமல்லவா ஆடுகின்றீர்கள், மாலன். அவர்கள் கேட்டதெல்லாம், சொன்னதெல்லாம், "ஈழத்தமிழரென்ன விரும்பியா இலங்கைப்பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றார்கள்? இதைப் போய் நீங்கள் எப்படி இராமின் மகள் அமெரிக்காவுக்குப் படிக்கப்போவதற்கோ அல்லது இஃது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் கொள்கிற உறவு என்று (அவமதிப்பாக உணரும் வகையிலே) எளிமைப்படுத்தவோ செய்ய முடிகின்றது?" உங்களுக்கு வலைப்பதிவிலே உங்களை எல்லோரும் வசை பாடுவதாகவே தெரிகின்றதென்ற அடிப்படைப்பார்வையோடு பார்க்கத்தொடங்கும்போது, குறைந்தபட்சம் மற்றவர்களின் அவமதிப்பு உணர்வு தோன்றும் அச்சிலசின் குதிக்கால்மனப்புள்ளிகளைக் கண்டுகொள்ளமுடியாதென்றே தோன்றுகின்றது.
4. இவை எல்லாவற்றினையும் விட்டுவிடுவோம். ஆனால், என் கருத்தினை நீங்கள் புரிந்த வகையிலே ஓரிடத்திலே -என்னைத் தெரிந்தவர்களும் நிறைந்த அவையிலே- நெறி பிறழ்தல் என்பதற்கு உதாரணமாகச் சொல்லும்போது, அவ்விடத்திலே என் கருத்தினைச் சொல்ல நான் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதுதான் முறை. உங்கள் கருத்துக்கு உங்கள் பதிவிலில்லாமல், வேறெங்கோ பின்னூட்டிவிட்டேன் என்று குறை கண்ட நீங்கள் இதிலே செய்தது அதைவிடப்பெரிய வலைநெறிப்பிறழ்வல்லவா? :-(
5. வலைப்பதிவிலே தனிமனிதத்தாக்குதலுக்கு எத்தனையோ மிகமிகமிக மோசமான காலாகாலமாக அலையும் பதிவு செய்யப்பட்ட திமிங்கல உதாரணங்களெல்லாம் இருக்க, இப்படியான கையில் ஒட்டினாற் தட்டிக்கொள்ளும் மினுங்கற்காக்காய்ப்பொன் உதாரணமே உங்களுக்கு அங்கே ஞாபகத்துக்கு வருகின்றதென்றால், இத்துணை நாள் வலைப்பதிவுகளிலே பங்காற்றி, தனித்தாக்குதலினாலே பதம் பார்க்கப்பட்டு, பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அப்பட்டறையின் கேட்போராகவிருந்திருந்தால், நீங்கள் ஒரு பழைய கணக்கினைப் பதிவர்களை மனம் திறந்து பார்த்துத் தீர்த்துக்கொள்வோமென்று தனிப்பட்ட தாக்குதலினை மேற்கொண்டீர்கள் என்பதை புரிந்துகொள்ளமாட்டாதவர்கள் என்றா கணிப்பிட்டிருந்தீர்கள்? அத்துணைதானா சக/காபதிவர்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு? :-(
6. ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இதிலும் விட எனக்கு மிகவும் தனிப்பட்ட தாக்குதலாகத் தெரிவது, நீங்கள் அனுமதித்திருக்கும், "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது." என்னைப் போன்றோரிலே நீங்கள் மறைமுகமாக அங்கீகரிக்கும் தனிப்பட்ட தாக்குதல் இது. பதிவின் தலையிலே "பெரியோர் எனில் வியத்தலும் இலமே சிறியோர் எனில் இகழ்தலும் இலமே" வலைக்கோளாகக் கொண்ட நீங்கள் இப்படியான பின்னூட்டங்களை அனுமதிப்பது அறிந்துகொண்டே மறைமுகமாக உற்சாகமூட்டும் தனிப்பட்ட தாக்குதல் என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. அப்படியான நீங்கள் எப்படி என் சாதாரண வரிகளிலே இப்படியான அர்த்தத்தினைக் கண்டுகொண்டீர்களென்பது என் வியப்பிற்குரியதாகவேயிருக்கின்றது.
பட்டறை அமைப்பாளர்களை எண்ணி மெய்யாகவே நான் சங்கடமடைகின்றேன். ஒரு புறம் நானும் என்னைப் போன்றவர்களும் மறுபுறம் அவர்களின் மதிப்புக்குரிய நீங்கள். இந்நிலையிலே இருபுறங்களிலும் பிய்த்துக்கொள்ள நடுவிலே ஒருவர் படும் பாட்டினை உணர, பாற்கடல்கடை கயிறான ஆதிஷேசனுக்குக்கும், விடாதுகருப்புவின் பதிவினையோ, விட்டதுசிகப்பினது பதிவினையோ திரட்டிகளிலிருந்து "நீக்கு/நீக்காதே" என்ற இருபுறஆட்களின் பிய்த்தெடுப்புக்கும் ஆளாகும் திரட்டி நிர்வாகிகளுக்குமேதான் முடியுமென நம்புகிறேன் :-) வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இந்தப்பக்கம், நாங்கள் முதலிலே கத்திவிட்டோமேயென்று மட்டுமேதான் ஆட்சேபணைப்பதிவுகளையிட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்பவில்லையென்றபோதுங்கூட, அவர்களினை அப்படியாக வெளிப்படையாகவே செய்யும்படி மூலைக்குத் தள்ளிவிட்டதால், அநாவசியமாக உங்களின் மனத்தாங்கலுக்கு உள்ளாக்கிவிட்டோமோ/டேனோ என்று உண்மையாகவே சங்கடமாகவிருக்கின்றது. இப்படியாகுமென்று எண்ணவில்லையென்றாலுங்கூட, இது தவிர்க்கமுடியாதது; ஆனால், 'When a giant tree falls, the earth below shakes" என்றமாதிரியாக கொடூர அர்த்தத்திலே நான் சொல்லவில்லை. இத்துணை கஷ்டப்பட்டு பட்டறை அமைத்து உழைத்த அமைப்பாளர்களுக்குச் சங்கடம் வருமே என்று பேசாமலே விடுவதா, அல்லது உங்களின் பேச்சின் பொருந்தாமையைச் சுட்டிப் பேசிப் பெரிதாக்கி விண்டு பார்ப்பதா என்பதிலே, இரண்டாவதே முக்கியமாகத் தோன்றியது. அதற்காக, மாலன் அவர்களோடு மனத்தாங்கல் ஏற்படும் வகைக்கு உள்ளாகியதற்கு என் வருத்தத்தைத் தெரிவிக்கும்போது, என் (என்னைப்போன்றோர்) நிலையினையும் அமைப்பாளர்கள் புரிந்துகொள்வார்களென நம்புகிறேன்.
மாலனின் மற்றைய வரிகளிலே எனக்குப் பிய்த்துப் பிய்த்துச் சொல்லும் தேவை இப்போதைக்கு இல்லை. அநாவசியமாக இழுத்துக்கொண்டு போவதாகவிருக்கும்.
~~~~~
2.
மாலன் அவர்கள் பட்டறையிலே -/பெயரிலி._இராம்_ஈழம் பற்றிப் பேசியதன் நுண்ணரசியலைப் பேச முற்பட்டேன். அதன், ஒரு கூறாக அங்கே மட்டுறுத்துனர், அமைப்பாளர்களின் பொறுப்பினைப் பற்றிக் (கேள்வி) கேட்டிருந்தேன். ஆனால், அதுவோ அதற்கான பட்டறை அமைப்பாளர்களின் பதில்களோ மாலனின் வருத்தத்தைப் பட்டறையாளர்களிலே இத்துணை ஏற்படுத்துமென்பதை நான் எதிர்பார்க்கவில்லை. வேண்டாப்பக்கவிளைவு என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, மேலும் பட்டறை அமைப்பாளர்களை "என் கேள்விக்கென்ன பதில்?" என்று கேட்பதோ அவர்களுடன் விவாதத்தினை வைப்பதோ எவ்வகையிலும் நான் செய்யும் நல்ல செயலாக அமையாது; ஓர் எல்லைக்கப்பால், நான் இன்னும் அதனையே பிடித்து அவர்களுடன் தொங்கிக்கொண்டிருப்பது, பட்டறையாளர்களின் உழைப்பினையும் நோக்கினையும் நான் அவமதிப்பதாகவே எனக்கே தோன்றும். அதனால், இனி பட்டறையாளர் பற்றி எதையும் பேசமாட்டேன்.
மேலும், "நான் அவ்வுதாரணத்தினைச் சொன்னதன் சூழலைக் கண்டுகொள்ளவில்லை", " நுண்ணரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்" என்று தன் மேற்சட்டையின் முதலாம் இரண்டாம் தறிகளிலே கைவைத்து ஆடையவிழ்ப்பு நடனம் தொடங்கும் மாலன், "நான் வசதி படைத்த,நிரம்பப் படித்த, தன் இனம் விடுதலைக்குப் போராடும் போது, தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறி சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டு வசதியான சூழ்நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய சமூகப் பிரசினையாக பூச்சாண்டி காட்டி விமர்சிக்கிற பெரிய மனிதர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்", "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?","அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும்தான், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் பெயரிலி போன்றவர்கள்தான்,விமானம் பிடித்து அயலகங்களுக்குக் குடியேறுகிறவர்கள்" என்று போர்த்திருந்த ஒவ்வோர் ஆடையினையும் களைந்து, தன் பின்னூட்ட இறுதியிலே உள்ளாடையையும், "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்ற முற்றிலும் பொய்யான வரலாற்றுத்திரிபினை அது தூண்டக்கூடிய வீச்சம், களம் அறிந்து களைந்தெறிந்து நிர்வாணமாக நிற்கின்றார். என்ன, ஒரேயொரு வித்தியாசம்; இந்நடனத்தின் இறுதிநிர்வாணநேரத்தின்போது, இங்கே விளக்குகள் அணையவில்லை. கண்கூசத் தெறிக்கின்றது உட்குரூரமும் நுண்ணரசியல்நோக்கும்.
நேரடியாகவே, "ஈழத்தமிழரை வரப்போகவிடும் ஈழத்தமிழரை ஆதரிக்காத இந்தியாவினை எனது தேசமென்று கொண்ட நான், இந்தியத்தேசத்திலே உள்ள இராமின் மகள் அமெரிக்காவிலே கற்பது பற்றி, "வெளிநாட்டிலே குடும்பத்துடன் வசதியுடன் வீடுகட்டி" -இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன்- வாழும் இந்தியாவுக்கு அந்நியனான -/பெயரிலி. என்ற ஈழத்தமிழன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா? நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா?" என்பதுதான் இங்கே பிரச்சனை" என்று சொல்லுமாறு சொல்லி அம்மணம் தெரிய நிற்கிறார். ஈழத்தமிழர், இந்தியா, இந்தியத்தமிழர், நாவலர், இந்து, புலிகள், ஈழத்தலைமை, மாற்றுத்தலைமை, யாழ்ப்பாணத்தமிழர், இலங்கையிலே இந்தியத்தமிழர் என்பன தொடர்பாக மாலனின் ஒவ்வொரு கருத்தும் இப்படியான இவரது தேசத்தினையும் தேசத்தின் சகமனிதர்களையும் விமர்சிக்கின்ற அன்னியரை எதிர்கொள்ளும் கல்லற்ற மெல்லிய(?) உணர்வுள்ள மனதினூடாகவே காணப்படவேண்டுமென்றே அவர் மிகவும் தெளிவாக தன் பின்னூட்டங்களிலே அறுத்து உறுத்து மெல்லிய உணர்வுள்ள மனம் பதறத் தேசப்பற்றுடனும் சகதேசத்தவர் பற்றிய நேசத்துடனும் சொல்கிறார். வாருங்கள், நாங்கள் போய் கண்மூடித்தனமான விடுதலைப்புலி ஆதரவாளர்களின் பாசிசத்தை விமர்சிப்போம் :-(
எல்லோரும் காண, பெரியார் மீது தனிமனிதத்தாக்குதல் என்ற பேச்சின் பின்னாலே, இராம்_மகள்+-/பெயரிலி.+ஸ்ரீலங்கா பாஸ்போட்_ஈழத்தமிழர்+இந்தியாவின் ஈழத்தமிழருக்கான ஆதரவின்மை இவை வந்ததற்கு அடியிலே இத்துணை சாம்பல்பூத்த தணல் இருப்பதினை நுண்ணரசியல் என்றில்லாமல் என்னவென்று சொல்வதாம்? அமுக்கிவைத்த முயற்குட்டிகள் இவ்வாறு குழி தோண்டி வளை தாண்டி அடங்காமல் பரந்தோடும் நிலையை எல்லோரும் பாருங்கள். இத்தனையையும் சுருக்கி, "வரப்புயர" என்று "-/பெயரிலி.யின் இராம்(மகள்) மீதான விமர்சன"த்துக்குள் இழுத்ததஉ நுண்ணரசியல் இல்லாவிட்டால், நானோவரசியலாகமட்டுமே இருக்கமுடியும். இதற்கு சற்றுமுன்னேதான் சிறிலைக் காட்டிக்கொடுக்கும் வலைநெறிப்பிறழ்வு வேறு (சிறில், இன்னமும் சயந்தனின் இடுகையின் பின்னாலே, -/பெயரிலி. சொன்ன அந்த 'ரேப்' உதாரணத்தினாலே மனம் நொந்து போயிருக்கின்றீர்களென்று தெரிகின்றது. :-) அதைக்கூட, வேண்டுமானால், வலைநெறிப்பிறழ்வு, தனிமனிதத்தாக்குதலுக்கு மாலன் அவருக்குமட்டும் தனியே ஆழத்தைத்துவிட்ட, மற்றவர்களுக்கு உப்புச்சப்பற்ற முரண்சொல்லும் " -/பெயரிலி._இராம்(மகள்)" உதாரணத்துக்குப் பதிலாகக் காட்டியிருக்கலாம் :-(). "-/பெயரிலி. குடும்பமாக வெளிநாட்டிலேயிருக்கின்றாரா? அவர் குட்டி சமஸ்தானத்துமஹாராஜா போல வசதியோடு இருக்கின்றாரா? இந்தியத்தமிழர்_இலங்கைத்தமிழர் உறவுநிலை, அரசியல் குறித்த வரலாற்றின் சரியான தரவுகள் எங்கே? யாழ்ப்பாணத்தலைமை என்றால் என்ன? எக்காலத்திலே அது எவரால் எவரைப் பிரதிநிதிப்படுத்தியது? (அப்படியான யாழ்ப்பாணத்தலைமையைக் கடிகின்ற மாலன் அதேதலைமையின் வழிப்பட்ட காலத்தே உருவாகிய அசல் யாழ்ப்பாணத்தார் அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி புத்தகத்துக்கு 1996 இலே முன்னுரை எழுதியது முரண்நகை :-)), இராம் மகள் மார்க்ஸியவாதியா என்று கேட்கும் இவர் எப்படி -/பெயரிலி. குடும்பம் வெளிநாட்டிலேயிருக்கின்றதென்று கருதிக்கொள்கின்றார்?" என்பதுபோன்ற பெரும்பட்டியற்கேள்விகளை இன்னொரு பொழுதுக்கு, நான் சொன்னதுபோலவே, என் இறுதிப் பின்னூட்டத்திலே பின்னொரு முறை வைத்துக்கொள்ளலாம்.
அதனால், இப்படியான நுண்ணரசியல், மண்ணரசியல் நிறைந்த (வி)வாதத்துள்ளே இவற்றுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிப்பட்டறை அமைப்பாளர்களை இழுத்து, இவ்வாதக்கிரகணம் பட்டறையின் நன்னோக்கினையும் அமைப்பாளர்கள் & பங்குபற்றியோரின் உழைப்பினையும் மறைத்து மறக்கடிக்க வைத்துவிட்டதற்காக வருந்துகின்றேன். இப்படியான விரிவு கொள்ளும் என்று எண்ணவில்லை. ஆனாலும் தவிர்க்கமுடியவில்லை. மேற்கொண்டேனும், அப்படியான எதிர்விளைவுகளைப் பட்டறைக்கும் அமைப்பாளர்களுக்கும் நான் மோசமாக்க ஒரு காரணமாக என் பதில்களிருப்பதை நான் விரும்பவில்லை. மாலன் பட்டறையமைப்பாளர்களோடு மனம் வருந்தக்காரணம் ஆகிவிட்டேன் என்பதற்காக, பட்டறை அமைப்பாளர்களிடம் (மட்டும்) என் வருந்தம் கலந்த தார்மீகமன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். பட்டறை அமைப்பாளர்கள் குறித்து இனியேதும் இங்கே பேசப்போவதில்லை.
Subscribe to:
Posts (Atom)
