1996 இலிருந்து வைத்திருந்த வலைப்பக்கங்கள் பெருமளவிலே சேமிக்கப்படாது கரைந்துபோய்விட்டன. சேமிப்பதற்கென்று உள்ளடங்கு விடயப்பெறுதியாக ஏதுமில்லையென்றாலுங்கூட, கடந்த காலத்தின் குறுக்குவெட்டுகளாதலாலே - ஒரு பழைய நண்பனோ நடிகனோ இறக்கும்போது, அவருடனான எம் மீளாக்காலத்தை நினைவூட்டுவதுபோல - அக்காலப்பெறுதிமட்டும் பதிந்துவிடுகின்றது. அவ்வகையிலே என் வலைப்பக்கங்கள் சிலவற்றின் குறுக்குவெட்டுகளை webarchive களஞ்சியத்திலே பெறக்கூடியதாயிருந்தது. 1996/1997/1998 இலே நெட்ஸ்காப்பிலே மயிலை/முரசு அஞ்சல் எழுத்துருக்களிலே geocities, angelfire, tripod இலவசத்தளங்களிலே செய்யப்புகுந்தவை. வலைப்பதிவு மீயுரை மொழியினை நான் படித்ததில்லை. அதனாலே மிகவும் அசிங்கமான பக்கங்களாகவே வடிவமைக்கமுடிந்தது. இதிலே ஒரு பக்கத்திற்கு அமெரிக்காவின் இடைநிலைப்பாடசாலைமாணவர்களிடமிருந்து வந்திருந்த அஞ்சல், "இன்று இப்பக்கத்தினை எப்படி வலைப்பக்கத்தை வடிவமைக்கக்கூடாதெனக் கற்பிக்க எங்கள் ஆசிரியை உதாரணத்துக்குப் பயன்படுத்தினார். அதற்கு நன்றி" என்றிருந்தது.
Rizi's Personal Tamil Galaxy
Eelam Related Web Photo Album
TRINCOMALEE, THE NATURAL HARBOUR TOWN
An Ezhaththu Wandering Acrobat's Daily Scribbles
tmizfcfciBkAt ugfkAq nlfvrEvbfki[fbT (சிறுகதை??ப்பக்கம்)
WATERWORLD
"Poem of the day" வலைப்பக்கம் 1996-1997 வரை மயிலை எழுத்துருவிலே angelfire இலே போட்டிருந்தது, அகப்படவில்லை. அதன் முகவரியும் ஞாபகமில்லை. தமிழிலே தட்டச்சிடத்தொடங்கியதற்கு, கல்யாணசுந்தரத்துக்கும் முத்து நெடுமாறனுக்கும் பாலாபிள்ளைக்கும் என்றும் கடன்பட்டுள்ளேன்; 1995-1998 ஆண்டுக்காலங்களை வெறுமையின்றிக் கடத்த இவர்கள் தந்த வசதிகள்தான் -எழுதவும் பகிரவும் தமிழிலே ஈடுபாடுள்ள நண்பர்களை அகிலம் பரவப் பெறவும்- வழியமைத்தன.
ஆனால், கடந்த இப்பக்கங்களையோ இதற்கு முன்னாலான 95 இலான soc.cuture.tamil பயனர்குழுப்பங்கங்களையோ பின்னான தமிழ்நெற், மையமன்று, யாஹூ குழுமங்கள் இடுகைகளையோ பார்க்கும்போது, பன்றி குட்டிகள் போட்டதுதான் தெரிகின்றது. எத்தனை மணிநேரத்துளிகள்! எத்தனை உள்ளீடுகள்! ஆனால், கருத்தைக் குவியப்படுத்திப் போட்டிருக்கலாமென்ற உணர்வுதான் மிஞ்சுகின்றது. ஆனாலும், அக்கடந்தகாலத்திலே அவற்றுக்கான பெறுதி கணிசமானது; அழுத்தங்கள், குற்றவுணர்வுகள் இவற்றினைத் தவிர்க்க வடிகால்களாக இருந்திருக்கின்றன, நல்ல நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கின்றன என்றளவிலே அவற்றுக்கான பெறுதி தங்குகின்றது. திரும்பிப்பார்க்கையிலே ஒரு குறித்த காலகட்டத்துடன் ஒவ்வொருவரும் தம்மைப் பொருத்திப் பார்க்க, மற்றோருக்கு எடுத்துச் சொல்ல, பொதுவிலே பகிர்ந்துகொண்ட புலனாலுணரக்கூடிய கணியங்கள் தேவைப்படுகின்றன - ஒரு காலகட்டத்திலே வந்த திரைப்படப்பாடலைப்போல, நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களைப்போல, எழுதியனுப்பிய அஞ்சல்களைப்போல, உடன்பிறந்தாரோடு பகிர்ந்துகொண்ட வீட்டின் அறைகளிலே இருக்கும் காரைபெயர்ந்த சிறுசுவர்வெடிப்பினைப்போல. அப்புலனறியும் சிறிய மரக்கீறல்களும் இடப்பெறுதியையும் காலக்குறியினையும் பெற்றுக்கொள்கின்றன. வாழ்க்கையின் அமைப்பிலே இறுதியிலே மிஞ்சிப்போவது இப்படியான குறுக்குவெட்டுப்படிமங்களே.
not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Showing posts with label பழசு. Show all posts
Showing posts with label பழசு. Show all posts
Sunday, October 16, 2011
Wednesday, December 24, 2008
(பழசு): காகங்கள்
காகங்களை நான் உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. காகங்கள் என்று நான் சொல்லும்போது, நீங்கள், பசித்தவுடன் பறந்தும் சிறகு களைத்தவுடன், மரங்கண்ட இடங்களிலே உட்கார்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்னர், மீண்டும் இரைக்காகப் பறக்கும் சனிபகவானின் கண்பார்வைக்கு உட்பட்ட எல்லாவற்றையும் எண்ணிக்கொள்ளவேண்டும். காகங்களை ஏன் அத்துணை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆவல் எனக்கு ஏற்பட்டதென்றுங்கூட உங்களிலே ஒரு சிலர் புருவத்தினை உயர்த்தக்கூடும். காகங்களை நான் முதன்முதலிலே கூர்ந்து அவதானிக்க முனைந்தது, என்னை நானே நுழைந்து பார்க்க முயன்ற அன்றைக்குத்தான்.இதன் காரணமாகத்தான், மனிதன் பறவைகளைப் பார்த்து விமானத்தினை அமைக்கமுயன்றான் என்று அந்தக்காலத்திலே எண்ணிக்கொள்வேன். இங்கே, அந்தக்காலம் என்பது, நான் திரைப்படப்பாடல்களிலே இந்தக்கருத்தைக் கேட்ட காலமோ, டாவின்சியின் ஓவியங்களைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலே படித்த காலமோ அல்ல. அவை எனக்கு, வெறுமனே செவிக்கான பாடலும் பரீட்சைப்புள்ளிக்கான பாடமும் என்றளவுக்குமட்டுமேதான். இங்கே நான் சொல்ல வருகின்றது, அதற்குப்பின்னால் -அதற்கு வெகுகாலத்துக்கும் பின்னால்- எனது கடவுட்சீட்டிலே இன்னொரு நாட்டு உத்தரவுமுத்திரையின் எச்சிலிட்ட மை காய்ந்துகொண்டிருந்த மதியப்பொழுது ஒன்றை. இன்னோர் எச்சில் என்று சொன்னதற்காக நாங்கள் எவருமே எச்சிலிட்டுக்கொண்டிருக்கும்போது, அருவருப்பு அடைவதில்லை; முத்தங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் நாங்கள். காகங்கள்கூட மற்றக்காகங்களின் எச்சில்களுக்காக வெட்கப்பட்டுக்கொள்கின்றதில்லை; உரொட்டித்துண்டு முக்கியமா, அல்லது எச்சில் ஒட்டிக்கொள்ளாதது முக்கியமா என்று விவாதித்து முடிவுக்கு வரும் விடயமல்ல இ·து என்பது காகங்களுக்கு மிகநன்றாகத் தெரியும்; விவாதிக்கமுயல்கின்றவர்கள் (விவாதித்தும்கூட முடிவுக்கு வராதவர்கள்), உண்மையான காகங்கள் இல்லை என்பது காகங்களின் மாற்றமுடியாத அபிப்பிராயம். இதனால், விவாதிக்கும் கலை, தம் சொந்தப்பிறப்பிலேயே காகங்களாக உருவெடுக்காதவர்களைக் கண்டு கலையெடுத்துக் கொள்ளத் தாம் பயன்படுத்தும் ஓர் உபாயம் என்று ஓர் உண்மையான காகம் எனக்கு ஒருமுறை தனிப்பட, வெறுப்பு உமிழச் சொல்லியிருக்கின்றது. அதற்கு, நான் காகவியலைக் கவனிப்பின்மூலம் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்பது மிகத்தெளிவாகத் தெரியும். தமது தொழிலின் நெளிவுசுழிவுகளை மாற்று உயிரினம் ஒன்று கற்றுத்தெளிவதை மானுடர்கள்போலவே காகங்களும்கூட விரும்புவதில்லை. கூடுவிட்டுக்கூடு பாய்ந்தோ, மான் வடிவிலே மயங்கிப்புணர்வதோ மட்டும்தான் மானிடரின் மாயக்கலை என்று எண்ணிக்கொள்ளும் மந்தகாசமான உலகு காகங்களினது. அதனால், அவை வெறுப்புமிழத்தான் செய்யும் என்று எனக்குத் தெரியும். ஆனால், வெறுப்பைக் கண்டு ஒதுங்கிக்கொண்டால், தொழிற்கல்வி என்னவாகின்றது? அழுக்குமூட்டையைச் சுமந்தாற்றான் வெளுக்கமுடிகின்றது; அழுக்குநீரை வடித்தாற்றான், துலக்கமுடின்றது. இப்படியாக, எதிலும், எவருக்காவது ஏதோ பயன் இருந்துதான் ஆகின்றது என்று எண்னிக்கொண்டு, சில பிறப்புக்காக்கைக்கள், அகத்திலே வெறுப்புநெருப்பைக் கனலக் கனலக் காலிக் கக்கவும், விடாப்பிடியாக காகத்துவத்தினைக் கற்றுக்கொண்டிருந்தேன் நான்.
காகங்களைப் பற்றிப் பல விடயங்கள், மிகவும் வெளிப்படையானவையும் அடித்துத் தீர்மானமாகச் சொல்லிவிடப்படக்கூடியவையுமாகும். இரையை எங்கே தேடும், தேடுவதற்கு என்றைக்கு எந்த உத்தியைக் கையாளும், எந்தத்திசையில் எத்தனை காகங்கள் ஓர் ஒற்றைக்கூட்டத்தை உணவு பற்றும் வியூகமாக்கிப் பறக்கும் என்பதெல்லாம் எனக்கு அத்துப்படி; இவற்றையெல்லாம். இத்தனை வருடக் கல்வியின் தரவுகளைக் கொண்டு ஏரணத்தின் அடிப்படையிலே கண்டு என் நாட்குறிப்பிலே பதிந்துவைத்திருக்கின்றேன்.
ஆனால், சில விடயங்கள் குழப்பத்துக்குரியன; ஒருமுடிவுக்கு வரமுடியாதன; பறந்து கொண்டிருக்கையிலே, அறுந்த காத்தாடியன்று, பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதுபோல, அங்கும் இங்கும் அனுமானிக்கமுடியாத ஒயிலாட்டம் ஆடுகின்றவை; உதாரணமாக, காகங்கள் இரைக்காகப் பறக்கின்றனவா, அல்லது பறக்கின்ற சுகத்திற்காக, இரையை, ஓர் எய்-இலக்காக எண்ணிக் குறிக்கின்றனவா என்பது இத்தனை கால எனது கவனிப்பின்பிறகும் அத்துணை வெளிச்சப்படாத மூலையிடுக்கு இருள். வெறுப்பை உமிழாத காகங்களும் இருக்கின்றன எனபதைச் சொன்னேனா? அவற்றினைத் தேடிக் கண்டு கொள்கின்றவை மிகக் கடினமேயழிய, ஆங்காங்கு அப்படியும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றை என் ஆராய்ச்சியின் உச்சத்து ஆயாசக்கட்ட நாளொன்றின் மதியப்பொழுதிலே, எதேச்சையாக ஒரு பட்ட மொட்டை மரத்திலே, தனியே கண்டுகொள்ள நேர்ந்தது. நீங்கள் எண்ணுவது உண்மை; அப்படிப்பட்ட ஒற்றை இலக்கத்துக் காகவுயிரிகள், தனிப்படவே ஒதுக்கப்பட்டு வாழ்வது வழக்கமாம். எனது கேள்வியை ஏதோ ஒரு பெரிய வேள்வி அவிர்ப்பாகமாய், மெல்ல மெல்ல முணுமுணுத்தபடி அதன் முன் வைத்தேன். காகங்கள் பெருமூச்சு விடுக்கூடியவை என்பதைக் கூடக் கற்றுக்கொள்ளமுடிந்தது. தலையைச் சாய்த்தபடி, ஓரக்கண்ணால், ஒரு செத்தபுழுவினை அலகு சொட்டிச் சிதிலப்படுத்திக்கொண்டிருந்து. சத்தம்போடாமல், ஒற்றைச்செயலிலே ஒருங்கே கருத்தூன்றிச் சித்தம் செலுத்தியிருப்பதோர் சித்துவித்தை என்று அர்த்தப்படுமானால், அக்காகம் ஒரு புறச்சுத்தம் செத்ததோர், உட்புனிதயோகி. ஆரம்பத்திலே, அவ்வசிரத்தைத்தோரணை காகத்தின் ஒரு மெத்தத்தனத்தின் மீயுந்தற்பரவுகை என்றே எனக்குப் பட்டது. திட்டிகொண்டு திரும்பி, வெயிலுக்கு நேராக நடக்கத்தொடங்கியபோது, அ·தென்னை அழைத்தது.
அதன்பிறகு, சில நேரம், நானும் அதுவும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இருப்பையும் பறப்பையும் இரைப்பையும் இரைப்பையையும் இரையையும் இறையையும் பற்றி கரையிலே வந்தடிக்கும் ஆற்றடைசல்போல அலைந்தலைந்து நோக்கின்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதனால், மேலே குறிப்பிட்ட காக்கையுடனான எனது உரையாடலைச் சொல்லும்முகமாக, அந்தக்காக்கையை, "அக்காக்கை" என்று இனிமேல் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.
சொற்சந்தங்கள்போலவே, இருப்பும் பறப்பும் இரைப்பையும் இரைப்பும் இரையும் இறையும் தம்முள் மிகவும் நெருங்கியனவாகவும் ஓரிரு நாக்கொட்டல்களிலேயே ஒத்தமை பிறழ்ந்தனவாகவும் உள்ளதென்று ஒருமுறை அது சொல்லிற்று. ஆரம்பத்திலே, பறப்பின் தூரத்தை முன்வைத்து, நானும் அதுவும் இரைக்கும் இருப்புக்குமான முக்கியத்துவத்தினை விவாதித்துகொண்டோம். (காகங்கள் தமக்குப் பெயரிட்டுக்கொள்கின்றவை இல்லை; மூன்று காகங்கள், ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பட்சத்திலே, அருகிலிருக்கும் காகம் "கா" என்றும், அதற்கடுத்த காகம், "காகா" என்று சொல்லிக்கொள்ளப்படும், அந்தக்காகங்கள் அடுத்த கணத்திலே ஒரு சிறுவனின் கல்லெறிக்குப் பயந்து, கிளையிலே இடம்மாறிக்கொள்ளும் கணத்திலே, "கா" எனப்பட்ட காகம், "காகா" எனவும், மற்றது, "கா" எனவும் அழைக்கப்படலாம் என்பது எனது ஆராய்ச்சியின் ஆரம்பகாலத்திலேயே அறியவந்திருந்தது. இதிலிருந்து எனக்கு இரண்டு விடயங்கள் தெளிவாகியிருந்தன. ஒன்று, காகங்கள், அருகருகே இல்லாத பட்சத்திலே, அடுத்ததன் இருப்பையும் இல்லாமையையும் பற்றி ஏதும் குறைவாகவோ நிறைவாகவோ பேசிக்கொள்வதில்லை. இரண்டாவது, எப்போதும் நிகழ்காலத்தை மட்டுமே பேசிக்கொள்கின்றன என்கின்றதால், தம் இருப்பிற்கான ஏற்பாடுகளை மட்டுமே பேசிக்கொள்கின்றன. கல்லெறிந்த சிறுவன் யார் என்பதைக் கவனிப்பதிலும் விட, கல்லெறிந்தபின்னர், குந்துவதற்கான தமது இருப்பிடங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்துவிட்டன என்பதை உணர்ந்து கொள்வதிலும்விட, இந்தக்கணத்திலே கல்லெறியப்படுகின்றதா என்பதும், இரைக்கான இசைக்கச்சேரிகளுமே எண்ணத்திலே இருத்தி வைக்கப்படுகின்றன.)
பறப்புக்கும் இருப்புக்குமான தூரம் பற்றி எனக்கும் அக்காக்கைக்கும் இடையிலே நடந்த கதையாடலைச் சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா? என்னைப் பொறுத்தமட்டிலே, பறப்பு என்பது இளைப்பும் இயலாமையும் ஏற்படாமல் நடந்து கடந்துமுடிக்கக்கூடிய தூரத்துக்கு அப்பாலே செல்வதற்காக, சிறகுகளை அடித்துக் கொள்ளும் செயல். அக்காக்கையோ, பறப்பும் நடப்பும் ஒரே காரியத்தினை செய்து முடிப்பதற்கான வெவ்வேறு செயலூடகங்கள் என்றதொரு கருத்தினை முன்னுக்கு வைத்தது. அதாவது, அதன் சிந்தைப்பிரகாரம், ஒரு காக்கைக்குத் தத்திச் சென்று இரை கவ்வும் செயல்முடிப்பது இலகுவானால், இன்னொன்றுக்கு இறகெத்தி, இறங்கி, கொத்திக்கொண்டோடுவது சுலபமாகின்றது. இதிலே, எத்துணை இலகுவாக இரையைக் கௌவிக்கொள்கின்றதுதான் முக்கியமேயழிய, வேறொன்றும் அர்த்தமாவதில்லை என்றது. அதாவது, “இரைதான் அந்தக்கணத்துக்கான இறை" என்பது அக்காக்கையின் முத்தாய்ப்பு.
எனது வாதம் எந்த மனிதரும் எதிர்பார்க்கக்கூடியதுபோலவே, "இதைச் செய்ய இது; அதைச் செய்ய அது" என்ற போக்கிலே, தத்தும்தூரத்தைக் கடக்கப் பறக்க அவசியமில்லை என்றும், பறந்துபோய் புதிய தேடல்களுக்குத் தன்னை உள்ளாக்கிக் கடினப்படுத்திக்கொள்கின்றதிலும், பழக்கப்பட்ட சூழலிலேயே, புதிதான தேடலுக்குப் பக்குவப்படுத்தும் முறைமைகளை ஆய்ந்து தேர்த்தல் வேண்டும் என்ற தொனியிலும் இருந்தன. அக்காக்கை சிரித்தது; அந்த நேரத்திலும் கால் கொத்திய புழுவைக் கிளை நழுவவிடவில்லை.
"இருப்பிடத்துக்காக நீயா, அல்லது, இருப்பிடம் உனக்காகவா?"
நேரடியாகப் பதிலேதும் சொல்லாமல், "காகங்களின் உலகு, இரையைச் சுற்றி உலகிலே நகரும் ஒரு வட்டத்தட்டுப்போலும்" என்று கிண்டல் குரல் தெறிக்க, நழுவினேன்.
"இருப்பிலிருந்து வேர்பற்றிப் பிறந்தது இருப்பிடம்; இருப்பு என்பதுவோ இன்றைப் பொறுத்தது; இந்நியதி, காகத்துக்கு வேறு, மானுடர்க்கு வேறல்லவே?" -காகங்களுக்கும் கிண்டல் தொனிக்க வார்த்தை துளிர்க்கத் தெரிகின்றது. பதில்கூறித்தான் ஆகவேண்டும்; காகங்களைவிட மேலானோன் மனிதன்.
"இருப்பிடம் உயிரிகட்காகவே என்பதுகூட, காகத்துக்கும் மனிதனுக்கும் வேறில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மையே; இதனை உணர்ந்துகொண்டவர்கள் ஒருசிலர்தான் என்று எண்ணிக்கொள்வது அறியாமை," -'எல்லோரும்', 'ஒருசிலர்' என்கின்ற பதங்களிலே அழுத்தம் படியக்கூறினேன்.
அக்காக்கை அவ்வழுத்தத்தைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை; "அப்படியானால், எந்த இடமும் வாழ்வசதிகூடினால், தேவைப்படின், எந்த உயிரியினதும் இருப்பிடமாகக் கூடும்; அதிலே, பறப்பினைச் சிறகடிக்கும் பரப்பின் விளிம்பினை வைத்து வரையறுப்பது முட்டாற்றனம்."
நான் பதில் கூற எத்தனித்தேன். அ·து என் குரலை எழமுன் அழுத்தித் தொடர்ந்தது.
"இரைக்காகப் பறத்தல் எந்த வகையிலே கேவலமான செயலாகும்? இரையைக் குறியாக வைக்காத ஒருத்தனைக் கூறு; அதனையட்டி, கேவலத்தை நீயும் நானும் நிர்ணயிப்போம்."
இந்த இடத்திலே இத்தனை கால ஆராய்ச்சிகளின்பின்னால், என்னையும் ஒரு காகமாக நான் உணர்ந்து கொள்ளத்தொடங்கியிருந்த கற்பிதம், தோல் சிதம்பிச் சிதம்பி உதிர்ந்து போகத்தொடங்கியது - கிட்டத்தட்ட, ஒரு பழைய வீட்டின் சுவரிலே படிந்து வேரேறிப் பரவி, வீட்டின் ஒரு கட்டுமான அங்கம்போல ஆகிக்கொண்டிருந்த, காட்டுச் செடியின் ஓரேறியைப் பற்றி, கீழேயிழுத்துச் சொடுக்கிச்சொடுக்கி உரித்து விழுத்தும் உயரிய தொழில்நுட்பம், அதன் சொற்களுக்குட் தொக்கி, கொக்கி நின்றது.
காகத்தின் கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லையா, அல்லது எத்துணை தன்னை மற்றதாக மாற்றிக்கொள்ளமுயன்றாலும் காகமும் மனிதனும் தத்தமளவிலே தமக்கென மட்டுமே நியாயப்படுத்தக்கூடிய நியதிக்கோட்பாடுகளினால் வகுக்கப்பட்ட வெவ்வேறு உணர்வுச்சிந்தை உடைத்த உயிரிகளா, நியதி என்பது ஒன்றுக்கு மேற்பட்டதும் முரண்பட்டதும் அதேசமயத்தில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றுகொன்று கொண்டிருப்பவை அல்லாதவையுமா என்பது போல குழப்பங்கள் ஒவ்வொன்றாக - நீர் நிலைத்துத் தூங்கிய குளத்திலிட்ட ஒற்றைக்கூழாங்கல் எழுப்பிப் பரப்பும் ஒரு தொகுதிச்சலனவட்டங்கள்போல- எனக்குள் அகன்று, கரைதேடி அலைந்து கொண்டிருந்தன.
ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிந்தது. கற்றுக்கொண்டு ஒன்றை வேறொன்றாக மாற்றிக் கொள்ளுதல் என்பதும் இயற்கையிலேயே ஒன்றாக இருத்தல் என்பதும் முற்றிலும் வெவ்வேறான விடயங்கள்.
அண்டங்காக்கையாக உருமாறியதாகக் காட்டிக்கொள்வதிலும், எண்ணுகின்றதையும் செய்கின்றதையும் ஒத்தோடவைக்கமுடியாத, எய்கையிற் தோற்ற மனிதனாக வாழ்கின்றதிலேகூட ஏதோ துளி உண்மையும் சொட்டு வெற்றியும் இருக்கின்றதாகத் தெரிந்தன.
"போய்வருகின்றேன்" என்று அக்காக்கையிடம் சொன்னேன்; குரல் மதித்து, என் கூற்றுக்குப் பதில் அது சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை; அந்தப்பொழுதிலே, அதற்கு நான் ஒரு கடந்த காலத்தின் "கா" அரிசிக்காக்கை; முற்கணம் அழிக்கப்பட்ட புதுக்கரும்பலகை அதன் இக்கணப்புத்தி; அதிலே ஒரு செத்த மண்புழுவின், சிதிலச்சதைமட்டும் "வாவா" என்றரற்றிச் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கலாம்.
அன்றையிலிருந்து காகங்களைப் பற்றி உன்னித்துக் குறிப்பெழுதிக் கற்றுக்கொள்வதை விட்டுவிட்டேன். ஆனாலும், பொழுதுபோக்காக, போகின்றபோக்கிலே பொதுப்படையாகக் கவனிப்பதை விட்டுவிடமுடியவில்லை. இருப்பதிலே பற்றும் இல்லாதவற்றை அறிந்துகொள்ளும் உளக்குறுகுறுப்பும் இருப்பவனே பிறப்பிலேயே மனிதன் ஆவான் என்பது அனுபவம்.
'00, ஓகஸ்ட் 25
படம்: நன்றி http://www.geocities.com/acanthostega2000/crows.jpg
Monday, March 10, 2008
பழசு - 9

".... ஆங்கே அல்குல் அகல..."
கல்முனை கோணேஸ்வரி,
யாழ்ப்பாணம் கிருஷாந்தி,
பரிஸ் சுதர்ஷனி,
மன்னார் ஹேமலதா,
இன்னும்,
பிரி யோனி மட்டும்
தொடையிடைகொண்டதற்காய்
இறந்துபோன இளம், கிழம்
எல்லோருக்கும்
இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,
1.
எனக்குப்
பெண்குழவியில்லை.
2.
மற்றவர்களின் பெண்மகவுகள்
கர்மவினை கொண்டோர்;
அவர்களைக்
கடவுள் கண்டு கொள்வார்.
கவலையில்லை.
கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;
செத்தாற் கவலையில்லை;
நான் தேவாரப்பாடல்பெறு திருகோணமலையான்.
கிருஷாந்தி என் கைக்கெட்டா இளங்கிளி;
சிங்கள ஆமிக்காரன் எண்டாலும்
அவனும் அதுவுள்ள ஆம்பிளைதானே?
சுதர்ஷனி ஆவி அறிக;
நான் நெபுயேவின் 'லொலிட்டா' விசிறி;
என்றும் துன்பியற் காவியங்கள்,
சுவைக்க நிலைப்பதிற் தோற்பதில்லை, பெண்ணே.
ஹேமலதா கூட்டி, பின், குழிபறித்துக் காட்டிக்கொடுத்தவள்;
சூட்டுச்சாவு நியாயம்;
எப்பவோ எரியாத லைட்போஸ்டிலை இழுத்துக் கட்டியிருக்கவேணும்.
உடல்கிழி சிங்களக் கதிர்காமத்தழகி,
பீகார்ப் பெண்பிறவிச் சொக்கப்பானை,
கொசவோ கிழவிக்கருப்பைக்குட் சேர்பிய விந்து.....
நேரமில்லை இன்றைக்கு;
நியாயப்படுத்திப் பேசுவேனாம்
பின்னொரு நாள்,
நான்.
அதுவரையில்.....
நேற்றைக்கு,
பால்ய நண்பி பாசம்
பற்றியொரு பாடல் எழுதினேன்;
இன்றைக்கு,
பால் கொடுக்கும் தாய் வதனச் சந்ரபிம்பம்
பற்றியொரு பந்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்;
நாளைக்கு,
கடல்கடந்த பழந்தமிழ்ப் பாடல், பாரம்பரியம்,
பல்லாங்குழி, பலாக்காய், பகடை, சகடை, பண்பாடு
பற்றி பத்துப்பக்கம் படுக்காமல் எழுதவேண்டும்.........
..........." ............ ஆங்கே,
காம அல்குல் அகல,
ஒல்கு இடைவிரிந்து
ஒசிந்து தான் உருள,
துள்ளித் தெறித்து
எண்துண்டாய் விழுந்தது,
பொறிபடத் தரையில்
பெண் பூண்
பொன் மேகலை.... "
'99/07/15 வியாழன்
டெடிசடெட் டொ டும்ப் & டும்பெர்ஸ் :-( coNverTsation is very much needed
Thursday, July 12, 2007
பழசு - 8
இன்று போய் நாளை வா

குழித்தீயோடு சீதையையும்
கோதைசீதையோடு ராமனையும்
உத்தரராமனோடு அனுமனையும்
வலிஅனுமனோடு அங்கதனையும்
அம்பிகாபதியோடு கம்பனையும்
கவிகம்பனோடு வால்மீகியையும்
கல்லூரியோடு கழற்றித் தொலைத்து
கரைத்து மறந்துபோக்கியாகிவிட்டது.
ஆனால், போர்க்களமிருந்து
கடன்பட்டார் நெஞ்சத்தோடு
தலைகுனிந்துபோன
அந்த அவனை மட்டும்
என் மனமிருந்து இன்னும்
இறக்கி விட முடியவில்லை.
கம்பராமாயணம் குறித்து அண்மைய பதிவுகளிலே நிறையப் பேசப்படுகின்றது. எவரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது; எல்லோரும் எழுதியதை வாசித்து வாசித்து விளக்கத்துக்குப் பதிலாகக் குழப்பமே எனக்கு மிஞ்சுகிறது - குறிப்பாக, பேச்சு பேசிக்கொண்டிருந்த படைப்பினை விட்டு மிகவும் விலகி மிகவும் கருத்துரு சார்ந்த தளத்திலே மட்டும் பேசும் நிலை வந்தபின்னாலே. என் பங்குக்கு இங்கே அங்குமிங்கும் அளைந்து ஒரு சட்டிக்குழம்பு :-)
இராமாயணத்தினை எப்படியாகப் பார்க்கின்றோம் என்பது அவரவர் எதை அதிலே தேடுகின்றார் என்பதைச் சார்ந்தது. மிக எளிதான "தேடுங்கள் கிடைக்கப்பெறும்" உண்மை அது. இலக்கியத்துக்காகத் தேடுகின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; இறைவனுக்காகத் தேடிக்கொள்கின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் & ஒரு களத்தின் குறுக்குவெட்டினை அறியத் தேடுகின்றவர் - ஓரளவுக்கு கவித்துவமும் புனைகற்பனையும் மயக்கும் இரைச்சல் விலக்கி - அதற்கேற்ற மாதிரியாகப் பகுத்துக்கொள்ளட்டும். இதிலே முரண் ஏதுமிருக்கமுடியாது. ஒருவரின் பார்வையே சரியென்பதாகவும் தோன்றவில்லை (நிகழ்வு என்பது ஒன்றாக இருக்கலாம்; ஆனால், உண்மை என்பது ஒன்றுக்கு மேற்பட்டது; சொல்லப்போனால், ஒருவருக்கான உண்மை என்பது, நிகழ்வினை அவர் கிரகித்து உள்வாங்கும் விதமும் பார்வையுமே). இந்த வடிவிலேயே, ஒரு புறம், கம்பனுடைய இராமாயணத்தினை வைத்து ஒரு சாராருக்கு கம்பனையோ இராமனையோ குற்றக்கூண்டிலே இழுத்து ஏற்றவும் தாடகையை ஏற்றிப் புகழவும் முடிகிறது; மறுபுறம், செவ்வியல் என்ற அளவிலே அதனை இலக்கியமாக மட்டும் பார்க்கின்றவர்களின் பார்வையும் அதனளவிலே சரியென்று படுகின்றது. ஆனால், இவ்விரண்டு பார்வைகளும் எதிரும் புதிருமென்று தமக்குள்ளே மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எந்தப்படைப்பிலக்கியம் தொடர்பாகவும், அதனதன் தேவை சார்ந்து இவற்றிலே எந்தப்பார்வையும் சரிதான்.
அதன் காரணமாகத்தான், முழுமையாகக் கம்பராமாயணத்தினை முழுக்க நான் ஒருபோதும் வாசித்ததில்லை என்கிறபோதும், அங்குமிங்கும் துண்டங்களாக வாசித்த அளவிலே, நான் ப. ஜீவாவினது எனச் சொல்லப்படும் கட்சி. கம்பன் கவிதையின் ஊற்றையும் ஒழுக்கையும் வாசிக்க உற்சாகம் பொங்க, கம்பராமாயணம் பிடிக்கின்றது; எனக்கு வாசிக்கும்போது, அப்படியாகப் பொங்கிவரும் உத்வேகத்தினைத் தருகின்ற, கம்பனைப் போன்ற, வேறு "பழம்நூற்றாண்டுகாலத்துக்கவிகள்" இருவர்தான்; இன்றைய எந்தத் துள்ளற்பாட்டுக்காரர்களும் தரமுடியாத துள்ளலை மணிப்பிரவாளத்திலே தந்த அருணகிரிநாதர் & ஆளை உருக்கும் வாசகம் தந்த மாணிக்கவாசகர். இங்கே கம்பராமாயணக்கவிதையை கவிதை உணர்வுக்காகமட்டுமே பார்த்துவிட்டுப் போகிறேன். கவிஞனாகக் கம்பன் பிடித்திருக்கிறான். ஆனால், கம்பராமாயணத்தின் கதாபொருள், கதாபாத்திரங்கள், கருத்து என்பனவற்றினை முன்னிலைப்படுத்தி, அதற்குள்ளே ஒரு காலகட்டத்திலே களத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைப் பகுப்பாய்வு பண்ணிக் கட்டுடைக்கப்போனால், தாடகைக்கும் சூர்ப்பனகைக்குமாக நியாயம் கேட்கவே இயல்பாக விருப்பமெழுகின்றது. அந்நிலையிலே கம்பன் என்கின்றவன் துளசி இராமாயணத்திலே எடுத்து எழுதினானா இல்லையா என்பதொரு புறமிருக்க, வடநில இராமனை எப்படியாகத் தமிழ்ச்சூழலிலே உருவகிக்க விரும்பியிருக்கின்றான் என்ற பார்க்க விரும்புகையிலே, கம்பனை, அவன் புரவலர், பின்புலம், புனைகாலம் எல்லாம் நோக்கி விசாரிக்கவே முடிகிறது; அதிலே தவறுமில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் ஒருவன் கம்பராமாயணத்தினை(யோ அல்லது வேறெந்தப் படைப்பினையோ) அணுகலாமா என்றால், (என்னால்) முடியுமென்றே சொல்வேன். இப்படியாக ஒரு படைப்பினைக் குறித்துச் சாத்தியமாகக்கூடிய இரு நிலைப்பாடுகளுக்கு வேறு சில உதாரணங்களையும் தரலாம்.
அ. தமிழ்த்திரைப்படப்பாடல்கள் & Shaggy_மற்றும் பல Rap பாடகர்களின் பாடல்கள் - "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" & "பழகத் தெரிய வேணும்; பெண்கள் பார்த்து நடக்கவேணும்" இவை இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்களிலே அடங்கும். முதலாவது பாடல், அதிலே இருக்கும் கவிதைப்படிமத்துக்காக; இரண்டாவது பாடல், ஏ. எம். ராஜாவின் குரலுக்காக; ஆனால், சமூகக்கருத்தாக்கத்திலே அப்பாடல்வரிகளைப் பார்க்கும்போது இரண்டுமே பெண்களினை அவமதிக்கின்ற, ஆணாதிக்கத்தினைச் செருகுகின்ற பாடல்களாகவே இருக்கின்றன. "மண்ணில் இந்தக்காதலன்றி" போல, இன்னும் பல பாடல்களை இதே வரிசையிலே சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், "It wasn't me" தொடக்கம் பல பாடல்களும் - இசை கொடுக்கும் துள்ளலும் அசைவும் பிடிக்கின்றன; கருத்து பிடிக்கவில்லை. வேண்டுமானால், சமூகக்கருத்-தாக்கத்துக்காக, இச்சந்தர்ப்பங்களிலே பாடலாசிரியர்களைக் குற்றம் சாட்டி விசாரிக்கலாம்; அதேநேரத்தில், பாடலின் இசையமைப்பு & படிமங்களுக்காக, பாடலைப் புகழ்ந்துவிட்டும்போகலாம்.
ஆ. D.W. Griffith இன் "The Birth of a Nation" இனையும், Mario Vargas Llosa இன் "The Real life of Alejandro Mayta" இனையும் அவற்றின் ஏற்படுத்த விழையும் கருத்துப்பதிவுகளுக்காக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால், அவை என்னைக் கவர்ந்தவற்றிலே அடக்கம். படம், அது தயாரிக்கப்பட்ட காலத்துக்குரிய "கருத்தாக்கத்தினைப் பிரதிபலித்தாலும்" அக்காலத்திலே திரைப்படம் என்ற சாதனத்திற்குப் புதிய நுணுக்கங்களையும் அச்சாதனத்தின் புதிய சாத்தியங்களையும் தந்திருப்பதாலே பிடித்திருந்தது. புதினம், அது சொல்லப்படும் உத்தி குறித்துப் பிடித்திருந்தது.
ஆனால், இராமாயணம் போன்ற காதைகளைப் பயன்படுத்தும் விதத்திலே, அது நாளாந்த வாழவிலே சிக்கலை உருவாகின்ற நிலமைகளும் இருக்கின்றன. உதாரணமாக, இராமாயணத்தினை வைத்து
அ. வரலாற்றினை வரையறுத்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால அரசியலையும் சமூகச்சிந்தனைப்போக்கினையும் வளர்த்தலும் (அயோத்தி, அரசியற்களமாகவும் பயணக்கலமாகவும் மாற்றப்பட்டது இதன் வடிவமே),
ஆ. கதையைத் தெய்வீகப்படுத்தி, அதிலே சொல்லப்படும் நம்பிக்கைகளையோ கருத்தாங்கங்களையோ கேள்வி கேட்டலையும் அவற்றோடு முரண்படுதலையும் (மறுவாசிப்பும் மாற்றுப்பார்வைகளும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்) குற்றங்களாக தெய்வநிந்தை என்ற போக்கில் அழித்தலும் அமுக்குதலும்
ஆகியன எதிர்க்கப்படவேண்டியனவாகும் (- குறிப்பாக, நாட்டின் அரசியலும் மதமும் ஒன்றிலொன்று சாராதிருக்கின்றதற்கும் கருத்துச்சுதந்திரத்துக்கும் அடிப்படைச்சட்டமிருக்கின்றபோது).
இனி, காவியத்தை (இங்கே, கம்பராமாயணத்தினை) ஓர் இலக்கியப்படைப்பு என்று ஒத்துக்கொண்டு பார்க்கின்றபோது, அதன் பாத்திரங்களின் அமைவும் பண்புகளும் கவிஞன் (இங்கு கம்பன்) என்ற தனிப்பட்டவனின் சொந்த அனுபவம், விருப்பு-வெறுப்பு, விபரிப்பு எல்லை ஆகியவற்றினாலே வரைந்து வனையப்பட்ட பட்ட பார்வை மட்டுமே; அதே பாத்திரங்கள், வேறு காலத்திலே வேறு களத்திலே மாறுபட்ட அனுபவங்களூடாகப் பயணித்து வந்தவர்களுக்கு வேறு கோணங்களிலே நோக்கப்படவும் காதையை மீண்டும் மாற்றுப்போக்கிலே புனைந்து பார்க்கப்படவும் சாத்தியமிருக்கின்றது; தாடகை, சூர்ப்பனகை, வாலி போன்றவர்களின் நிலைமையை அவர்களைக் கம்பன் படைத்த பின்புலத்தினை ஒத்த பின்புலத்திலே வருகின்ற ஒருவரால், அப்படியான பின்புலத்தினைச் சமைத்த கம்பன் உணர்ந்திருக்கமுடியாத உணர்வூற்றோடச் சொல்லமுடியும்; நியாயப்படுத்த முடியும்; இதற்குச் சமாந்திரமாகச் சென்ற ஒரு நூற்றாண்டிலே வந்த உதாரணமாக, வெள்ளைக்காரப்பெண்ணான Margaret Mitchell எழுதிய "Gone With the Wind" இற்கு இருக்கக்கூடிய இன்னொரு சாத்தியத்தைச் சொல்லும் "The Wind done Gone" இனை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளின் பின் கறுப்புப்பெண்ணான Alice Randell எழுதியதைச் சொல்லலாம்.
ஆனால், இராமாயணத்தின் கூறுகளான துணைக்கதைகளையும் பாத்திரங்களின் கதைகளையும் மீள எழுதுதலுங்கூட, தமிழிலே வெவ்வேறு காலகட்டங்களிலே வெவ்வேறு நோக்கங்களிலே நிகழ்ந்திருக்கின்றன. பாரதியாரின் சிறுகதையிலே இராமாயணம் நகைச்சுவையை முன்வைத்து முரணுக்குச் சொல்லப்படுவதாக, குதிரைக்கொம்பாக வந்திருக்கின்றது. மரபுசார்ந்த இராமாயணத்தின் ஷத்ரிய இரவிகுல இராமனை ஆரியன் என்றும் பார்ப்பன புலத்திய இராவணனைத் திராவிடன் என்றும் திராவிட இயக்கங்களுக்குக் காட்டத் தேவையிருந்தபோது, புலவர் குழந்தையின் படைப்பும் அண்ணாவின் கம்பரசமும் எம். ஆர். ராதாவின்(?) கீமாயணமும் வந்திருக்கின்றன. துணைக்கதைகளளும் அப்படியே பேசப்பட்டிருக்கின்றன; வாலியின் வதம் ஏற்கனவே இராமகாதை சொல்லும் தாங்கும் விழுமியங்களின் அடிப்படையிலே ஒரு துளைபோடுவதாகத் தோன்றுவதாலே, திரும்பப் பேசப்பட்டிருக்கின்றது - சில வேளைகளிலே வாலியை நியாயப்படுத்தி & மீதி வேளைகளிலே கோசலைராமனை நியாயப்படுத்தி. புதுமைப்பித்தன் தொடக்கம், தளையசிங்கம், சிவசேகரம் வரைக்கும் அகலிகையைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அதுபோலவே, அண்ணனுக்காகத் தூக்கமில்லாமற் பின்னாலே திரிந்த உறங்காவிலி இலக்குமணனுக்குமாய்ச் சேர்த்து அயோத்தியிலே தூங்கின அவன் மனைவி ஊர்மிளை பற்றியும் அநியாயமாகத் இராமன் தீக்குள்ளே இறக்கிய சீதை பற்றியும் நிறையவே பெண்ணியல்வாதிகள் தாங்கியிருக்கின்றனர். அதுபோலவே, வாலி/சுக்ரீவன் மனைவி தாராவும் இராவணன் மனைவி மண்டோதரியுங்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அனுதாபத்துடன் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஏன், கைகேயிகூட நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றாள் - கூனியின் முதுகினை இன்னும் வளைத்தேறி. ஆனால், இங்கேதான் ஒரு சுவையான தொடர்ச்சி இருக்கின்றது. இந்தப்பெண்கள் அனைவருமே அடிப்படையிலே முனிபத்தினி, அரசிகள், இளவரசிகள், குலத்தலைவிகள் என்ற நிலையிலே கற்ற (ஆண் & பெண் என்ற பேதமின்றி) பெண்ணியல்வாதிகளால் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், சமூகத்திலே விளிம்பு நிலையிலே படைக்கப்பட்ட தாடகை, சூர்ப்பனகை (இராவணன் தங்கை என்றாலுங்கூட, அவள் வர்ணிக்கப்படும் விதம் அவளை ஒரு கௌரவத்துக்குரியவளாகக் காட்ட முயல்வதில்லை), கூனி போன்றவர்களுக்காக இந்தப்பெண்ணியல்வாதிகள் பேசியதாக நான் வாசித்தறியேன். இவர்கள் பேசப்படத்தொடங்கியது, பஞ்சமர் வாழ்க்கையும் தலித்தியமும் தமிழ் இலக்கியத்துள்ளே ஒரு தனியிடத்தினை ஊடுருவிப் பெற்றுக்கொண்ட பின்னாலேதான். சில ஆண்டுகளுக்கு முன்னாலே சூர்ப்பனகையின் மூக்கறுபடுவதற்குக் காரணமாக, ஆக, "அவள் ஒருவனை நான் உன்னை விரும்புகின்றேன்" என்று கேட்டதே அடிப்படைக்காரணமாகிவிட்டதா என்ற வாதம் வந்து எங்கோ வாசித்தேன். சூர்ப்பனகையின் கதை, இப்போதெல்லாம் ஓரளவுக்கு Matthew Shepard இனைத்தான் எனக்கு ஞாபகப்படுத்துகின்றது. ஆக, இருவரும் செய்த தவறு, தவறான மனிதரிடம் தங்கள் இச்சையைத் தெரிவித்ததன்றி வேறில்லை. அதன் பின்னர், சொல்லப்படும் சூர்ப்பனகையின் வெருட்டல், அருட்டல் எல்லாவற்றினையும் களைந்துவிட்டு மாற்றுப்பார்வை இருக்கலாமென்றே தோன்றுகின்றது. தாடகையின் கதையின் நவீனப்படுத்தப்பட்ட வடிவமாக வேண்டுமென்றால், பாலமுருகன் எழுதிய சோளகர்தொட்டியினைச் சொல்லலாம். அதிலே ஏன் சிவண்ணா ஒரு கட்டத்திலே துப்பாக்கியினை எடுக்கவேண்டி வந்ததென்பதற்கும் முனிவர்களைத் தாடகை பயமுறுத்தியதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அஃது இயலாமையின் இறுதிக்கட்டத்திலே, மூலைக்குள்ளே ஓரங்கட்டப்பட்ட, பூனைக்குட்டியும் காற்பாதம் தூக்கிச் சீறும் நிலையை ஒத்தது. அதனால், தாடகை அட்டூழியம்-அழிப்பினைக் குறித்துச் சொல்வதற்குப் புதிய இராமகாதை எழுதப்படவேண்டுமென்றால், அதேபோல, சூர்ப்பனகையின் காமம்-மூக்கறுப்புக் குறித்து, இராமமூக்கை எழுதப்படவேண்டும்; கூனிக்கு உண்டுவில் அடித்தது குறித்து, இராமமுதுகை எழுதப்படவேண்டும். இன்னும் வேண்டுமானால், பொன்னியின் செல்வனின் ஆரம்பத்திலே வரும் ஆழ்வார்க்கடியான் - சிவனடியார் வகை வாதாட்டம் மேவிய பார்வையிலே "இராவணன் மேலது நீறு" என்று சம்பந்தர் ஏற்றிய சைவன் தசக்க்ரீவனின் நிலையை நியாயப்படுத்தி, வைஷ்ணவ கம்பநாட்டாழ்வானின் இராமனுக்கு எதிராக ஒரு படைப்பு இதுவரை வராதது ஆச்சரியத்தினைத்தான் தருகின்றது.
இவை எல்லாம் தவிர, தனியொருவனின் பார்வைகூட, காலத்தோடும் அனுபவத்தோடும் ஒரு படைப்பினைக் குறித்து நிகழலாம். சிறுவயதிலே, கடவுளாகத் தோன்றியவன் இராமாயணத்தின் இராமன்; பின்னாலே, இராவணன் என்னூரான் என்ற ஐதீகத்தின் அடிப்படையிலே இராமாயணத்தின் பார்வை, இராவணனுக்கு அனுதாபம் கொண்டிருந்தது. பின்னால், ஜி. பார்த்தசாரதி இந்திரா அம்மையாரின் தூதுவராக வந்தபோது, இலங்கைத்தமிழர்சார்புப்பத்திரிகைகள், அனுமார் என்று போற்றப்பட, இராமாயணம் தொடர்பாக ஒரு குழப்பம். கடைசியிலே இந்திய அமைதிப்படையோடு வானரசைனியம் வனத்துள்ளே நுழைந்தால், இதுதான் ஆகுமென்று உணர்வு. எல்லாவற்றுக்கும்மேலாக, கடந்த பதினேழு ஆண்டுகளாக ராம் என்ற ஒற்றைச்சொல் மனிதன் ஏற்றும் வெறுப்பு. ஆக, இன்றைய நிலையிலே என்னைப் போன்ற உணர்வு, அனுபவத்தூடாகப் போன ஒருவன் கம்பநாட்டாழ்வானின் இராமாயணத்தினை மீளத் தன் பார்வையிலே எழுத முயன்றால், நிச்சயமாக, அஃது இராவணனுக்கும் வாலிக்கும் தாடகை சூர்ப்பனகை போன்றோருக்கும் அனுதாபமான பார்வையாக மட்டுமே இருக்கமுடியும். (சுப்பிரமணிய ஸ்ரீதரனின் இராமாயண கலகம், இலங்கையின் பிரச்சனை-இந்தியாவின் மூக்கு நுழைப்பு என்பதன் பார்வையிலே மீட்டு எழுதப்பட்ட இராமாயணத்தின் துண்டு எனலாம்)
அடுத்ததாக, சிலப்பதிகாரம் தமிழர்/திராவிடர் சார்பான மக்கள்காதையாகக் காட்டமுயல்வது குறித்து, சிதம்பர ரகுநாதனின் "இளங்கோவடிகள் யார்? (சிலப்பதிகாரம் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி)" என்ற நூலையும் அதன் மீதான எம். ஏ. நுஃமானின் "ரகுநாதனின் சிலப்பதிகார ஆராய்ச்சி" என்ற விமர்சனக்கட்டுரையையும் ("மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும்" என்ற நூலில்) வாசிப்பது சில பார்வைகளைத் தருமென்று நினைக்கிறேன். சிதம்பர ரகுநாதன் உண்மையில் இளங்கோவடிகள் வணிக வகுப்பினைச் சேர்ந்தவரென்றும் அதனால், அவ்வகுப்பின் வர்க்க நலன் குறித்து அரசகுடிக்கெதிரான காவியமாகச் சிலப்பதிகாரத்தினை முன் வைத்திருக்கின்றார் என்று முன்வைக்க, நுஃமான் அக்கருதுகோளை அது வலிந்து பெறப்பட்ட முடிவு என்று மறுக்கின்றார். (ஆனால், சிலப்பதிகாரமும் கண்ணகி மதுரையை எரிக்கின்றபோது, பசுவையும் பார்ப்பனரையும்விட்டுவிட்டே கொளுத்தும்படி சொல்கிறாள் என்பதையும் தொழிலாளி பொற்கொல்லனையும் கெட்டவன் என்ற வகைக்குள்ளே போட்டதையும் இந்த திராவிட மக்கள்கதையிலே எப்படியாகப் பொருத்துவது என்று எனது துணைச்சந்தேகமுங்கூட உண்டு).
'05 மே 08., ஞாயி 04:04 கிநிநே.

குழித்தீயோடு சீதையையும்
கோதைசீதையோடு ராமனையும்
உத்தரராமனோடு அனுமனையும்
வலிஅனுமனோடு அங்கதனையும்
அம்பிகாபதியோடு கம்பனையும்
கவிகம்பனோடு வால்மீகியையும்
கல்லூரியோடு கழற்றித் தொலைத்து
கரைத்து மறந்துபோக்கியாகிவிட்டது.
ஆனால், போர்க்களமிருந்து
கடன்பட்டார் நெஞ்சத்தோடு
தலைகுனிந்துபோன
அந்த அவனை மட்டும்
என் மனமிருந்து இன்னும்
இறக்கி விட முடியவில்லை.
கம்பராமாயணம் குறித்து அண்மைய பதிவுகளிலே நிறையப் பேசப்படுகின்றது. எவரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது; எல்லோரும் எழுதியதை வாசித்து வாசித்து விளக்கத்துக்குப் பதிலாகக் குழப்பமே எனக்கு மிஞ்சுகிறது - குறிப்பாக, பேச்சு பேசிக்கொண்டிருந்த படைப்பினை விட்டு மிகவும் விலகி மிகவும் கருத்துரு சார்ந்த தளத்திலே மட்டும் பேசும் நிலை வந்தபின்னாலே. என் பங்குக்கு இங்கே அங்குமிங்கும் அளைந்து ஒரு சட்டிக்குழம்பு :-)
இராமாயணத்தினை எப்படியாகப் பார்க்கின்றோம் என்பது அவரவர் எதை அதிலே தேடுகின்றார் என்பதைச் சார்ந்தது. மிக எளிதான "தேடுங்கள் கிடைக்கப்பெறும்" உண்மை அது. இலக்கியத்துக்காகத் தேடுகின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; இறைவனுக்காகத் தேடிக்கொள்கின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் & ஒரு களத்தின் குறுக்குவெட்டினை அறியத் தேடுகின்றவர் - ஓரளவுக்கு கவித்துவமும் புனைகற்பனையும் மயக்கும் இரைச்சல் விலக்கி - அதற்கேற்ற மாதிரியாகப் பகுத்துக்கொள்ளட்டும். இதிலே முரண் ஏதுமிருக்கமுடியாது. ஒருவரின் பார்வையே சரியென்பதாகவும் தோன்றவில்லை (நிகழ்வு என்பது ஒன்றாக இருக்கலாம்; ஆனால், உண்மை என்பது ஒன்றுக்கு மேற்பட்டது; சொல்லப்போனால், ஒருவருக்கான உண்மை என்பது, நிகழ்வினை அவர் கிரகித்து உள்வாங்கும் விதமும் பார்வையுமே). இந்த வடிவிலேயே, ஒரு புறம், கம்பனுடைய இராமாயணத்தினை வைத்து ஒரு சாராருக்கு கம்பனையோ இராமனையோ குற்றக்கூண்டிலே இழுத்து ஏற்றவும் தாடகையை ஏற்றிப் புகழவும் முடிகிறது; மறுபுறம், செவ்வியல் என்ற அளவிலே அதனை இலக்கியமாக மட்டும் பார்க்கின்றவர்களின் பார்வையும் அதனளவிலே சரியென்று படுகின்றது. ஆனால், இவ்விரண்டு பார்வைகளும் எதிரும் புதிருமென்று தமக்குள்ளே மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எந்தப்படைப்பிலக்கியம் தொடர்பாகவும், அதனதன் தேவை சார்ந்து இவற்றிலே எந்தப்பார்வையும் சரிதான்.
அதன் காரணமாகத்தான், முழுமையாகக் கம்பராமாயணத்தினை முழுக்க நான் ஒருபோதும் வாசித்ததில்லை என்கிறபோதும், அங்குமிங்கும் துண்டங்களாக வாசித்த அளவிலே, நான் ப. ஜீவாவினது எனச் சொல்லப்படும் கட்சி. கம்பன் கவிதையின் ஊற்றையும் ஒழுக்கையும் வாசிக்க உற்சாகம் பொங்க, கம்பராமாயணம் பிடிக்கின்றது; எனக்கு வாசிக்கும்போது, அப்படியாகப் பொங்கிவரும் உத்வேகத்தினைத் தருகின்ற, கம்பனைப் போன்ற, வேறு "பழம்நூற்றாண்டுகாலத்துக்கவிகள்" இருவர்தான்; இன்றைய எந்தத் துள்ளற்பாட்டுக்காரர்களும் தரமுடியாத துள்ளலை மணிப்பிரவாளத்திலே தந்த அருணகிரிநாதர் & ஆளை உருக்கும் வாசகம் தந்த மாணிக்கவாசகர். இங்கே கம்பராமாயணக்கவிதையை கவிதை உணர்வுக்காகமட்டுமே பார்த்துவிட்டுப் போகிறேன். கவிஞனாகக் கம்பன் பிடித்திருக்கிறான். ஆனால், கம்பராமாயணத்தின் கதாபொருள், கதாபாத்திரங்கள், கருத்து என்பனவற்றினை முன்னிலைப்படுத்தி, அதற்குள்ளே ஒரு காலகட்டத்திலே களத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைப் பகுப்பாய்வு பண்ணிக் கட்டுடைக்கப்போனால், தாடகைக்கும் சூர்ப்பனகைக்குமாக நியாயம் கேட்கவே இயல்பாக விருப்பமெழுகின்றது. அந்நிலையிலே கம்பன் என்கின்றவன் துளசி இராமாயணத்திலே எடுத்து எழுதினானா இல்லையா என்பதொரு புறமிருக்க, வடநில இராமனை எப்படியாகத் தமிழ்ச்சூழலிலே உருவகிக்க விரும்பியிருக்கின்றான் என்ற பார்க்க விரும்புகையிலே, கம்பனை, அவன் புரவலர், பின்புலம், புனைகாலம் எல்லாம் நோக்கி விசாரிக்கவே முடிகிறது; அதிலே தவறுமில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் ஒருவன் கம்பராமாயணத்தினை(யோ அல்லது வேறெந்தப் படைப்பினையோ) அணுகலாமா என்றால், (என்னால்) முடியுமென்றே சொல்வேன். இப்படியாக ஒரு படைப்பினைக் குறித்துச் சாத்தியமாகக்கூடிய இரு நிலைப்பாடுகளுக்கு வேறு சில உதாரணங்களையும் தரலாம்.
அ. தமிழ்த்திரைப்படப்பாடல்கள் & Shaggy_மற்றும் பல Rap பாடகர்களின் பாடல்கள் - "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" & "பழகத் தெரிய வேணும்; பெண்கள் பார்த்து நடக்கவேணும்" இவை இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்களிலே அடங்கும். முதலாவது பாடல், அதிலே இருக்கும் கவிதைப்படிமத்துக்காக; இரண்டாவது பாடல், ஏ. எம். ராஜாவின் குரலுக்காக; ஆனால், சமூகக்கருத்தாக்கத்திலே அப்பாடல்வரிகளைப் பார்க்கும்போது இரண்டுமே பெண்களினை அவமதிக்கின்ற, ஆணாதிக்கத்தினைச் செருகுகின்ற பாடல்களாகவே இருக்கின்றன. "மண்ணில் இந்தக்காதலன்றி" போல, இன்னும் பல பாடல்களை இதே வரிசையிலே சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், "It wasn't me" தொடக்கம் பல பாடல்களும் - இசை கொடுக்கும் துள்ளலும் அசைவும் பிடிக்கின்றன; கருத்து பிடிக்கவில்லை. வேண்டுமானால், சமூகக்கருத்-தாக்கத்துக்காக, இச்சந்தர்ப்பங்களிலே பாடலாசிரியர்களைக் குற்றம் சாட்டி விசாரிக்கலாம்; அதேநேரத்தில், பாடலின் இசையமைப்பு & படிமங்களுக்காக, பாடலைப் புகழ்ந்துவிட்டும்போகலாம்.
ஆ. D.W. Griffith இன் "The Birth of a Nation" இனையும், Mario Vargas Llosa இன் "The Real life of Alejandro Mayta" இனையும் அவற்றின் ஏற்படுத்த விழையும் கருத்துப்பதிவுகளுக்காக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால், அவை என்னைக் கவர்ந்தவற்றிலே அடக்கம். படம், அது தயாரிக்கப்பட்ட காலத்துக்குரிய "கருத்தாக்கத்தினைப் பிரதிபலித்தாலும்" அக்காலத்திலே திரைப்படம் என்ற சாதனத்திற்குப் புதிய நுணுக்கங்களையும் அச்சாதனத்தின் புதிய சாத்தியங்களையும் தந்திருப்பதாலே பிடித்திருந்தது. புதினம், அது சொல்லப்படும் உத்தி குறித்துப் பிடித்திருந்தது.
ஆனால், இராமாயணம் போன்ற காதைகளைப் பயன்படுத்தும் விதத்திலே, அது நாளாந்த வாழவிலே சிக்கலை உருவாகின்ற நிலமைகளும் இருக்கின்றன. உதாரணமாக, இராமாயணத்தினை வைத்து
அ. வரலாற்றினை வரையறுத்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால அரசியலையும் சமூகச்சிந்தனைப்போக்கினையும் வளர்த்தலும் (அயோத்தி, அரசியற்களமாகவும் பயணக்கலமாகவும் மாற்றப்பட்டது இதன் வடிவமே),
ஆ. கதையைத் தெய்வீகப்படுத்தி, அதிலே சொல்லப்படும் நம்பிக்கைகளையோ கருத்தாங்கங்களையோ கேள்வி கேட்டலையும் அவற்றோடு முரண்படுதலையும் (மறுவாசிப்பும் மாற்றுப்பார்வைகளும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்) குற்றங்களாக தெய்வநிந்தை என்ற போக்கில் அழித்தலும் அமுக்குதலும்
ஆகியன எதிர்க்கப்படவேண்டியனவாகும் (- குறிப்பாக, நாட்டின் அரசியலும் மதமும் ஒன்றிலொன்று சாராதிருக்கின்றதற்கும் கருத்துச்சுதந்திரத்துக்கும் அடிப்படைச்சட்டமிருக்கின்றபோது).
இனி, காவியத்தை (இங்கே, கம்பராமாயணத்தினை) ஓர் இலக்கியப்படைப்பு என்று ஒத்துக்கொண்டு பார்க்கின்றபோது, அதன் பாத்திரங்களின் அமைவும் பண்புகளும் கவிஞன் (இங்கு கம்பன்) என்ற தனிப்பட்டவனின் சொந்த அனுபவம், விருப்பு-வெறுப்பு, விபரிப்பு எல்லை ஆகியவற்றினாலே வரைந்து வனையப்பட்ட பட்ட பார்வை மட்டுமே; அதே பாத்திரங்கள், வேறு காலத்திலே வேறு களத்திலே மாறுபட்ட அனுபவங்களூடாகப் பயணித்து வந்தவர்களுக்கு வேறு கோணங்களிலே நோக்கப்படவும் காதையை மீண்டும் மாற்றுப்போக்கிலே புனைந்து பார்க்கப்படவும் சாத்தியமிருக்கின்றது; தாடகை, சூர்ப்பனகை, வாலி போன்றவர்களின் நிலைமையை அவர்களைக் கம்பன் படைத்த பின்புலத்தினை ஒத்த பின்புலத்திலே வருகின்ற ஒருவரால், அப்படியான பின்புலத்தினைச் சமைத்த கம்பன் உணர்ந்திருக்கமுடியாத உணர்வூற்றோடச் சொல்லமுடியும்; நியாயப்படுத்த முடியும்; இதற்குச் சமாந்திரமாகச் சென்ற ஒரு நூற்றாண்டிலே வந்த உதாரணமாக, வெள்ளைக்காரப்பெண்ணான Margaret Mitchell எழுதிய "Gone With the Wind" இற்கு இருக்கக்கூடிய இன்னொரு சாத்தியத்தைச் சொல்லும் "The Wind done Gone" இனை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளின் பின் கறுப்புப்பெண்ணான Alice Randell எழுதியதைச் சொல்லலாம்.
ஆனால், இராமாயணத்தின் கூறுகளான துணைக்கதைகளையும் பாத்திரங்களின் கதைகளையும் மீள எழுதுதலுங்கூட, தமிழிலே வெவ்வேறு காலகட்டங்களிலே வெவ்வேறு நோக்கங்களிலே நிகழ்ந்திருக்கின்றன. பாரதியாரின் சிறுகதையிலே இராமாயணம் நகைச்சுவையை முன்வைத்து முரணுக்குச் சொல்லப்படுவதாக, குதிரைக்கொம்பாக வந்திருக்கின்றது. மரபுசார்ந்த இராமாயணத்தின் ஷத்ரிய இரவிகுல இராமனை ஆரியன் என்றும் பார்ப்பன புலத்திய இராவணனைத் திராவிடன் என்றும் திராவிட இயக்கங்களுக்குக் காட்டத் தேவையிருந்தபோது, புலவர் குழந்தையின் படைப்பும் அண்ணாவின் கம்பரசமும் எம். ஆர். ராதாவின்(?) கீமாயணமும் வந்திருக்கின்றன. துணைக்கதைகளளும் அப்படியே பேசப்பட்டிருக்கின்றன; வாலியின் வதம் ஏற்கனவே இராமகாதை சொல்லும் தாங்கும் விழுமியங்களின் அடிப்படையிலே ஒரு துளைபோடுவதாகத் தோன்றுவதாலே, திரும்பப் பேசப்பட்டிருக்கின்றது - சில வேளைகளிலே வாலியை நியாயப்படுத்தி & மீதி வேளைகளிலே கோசலைராமனை நியாயப்படுத்தி. புதுமைப்பித்தன் தொடக்கம், தளையசிங்கம், சிவசேகரம் வரைக்கும் அகலிகையைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அதுபோலவே, அண்ணனுக்காகத் தூக்கமில்லாமற் பின்னாலே திரிந்த உறங்காவிலி இலக்குமணனுக்குமாய்ச் சேர்த்து அயோத்தியிலே தூங்கின அவன் மனைவி ஊர்மிளை பற்றியும் அநியாயமாகத் இராமன் தீக்குள்ளே இறக்கிய சீதை பற்றியும் நிறையவே பெண்ணியல்வாதிகள் தாங்கியிருக்கின்றனர். அதுபோலவே, வாலி/சுக்ரீவன் மனைவி தாராவும் இராவணன் மனைவி மண்டோதரியுங்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அனுதாபத்துடன் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஏன், கைகேயிகூட நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றாள் - கூனியின் முதுகினை இன்னும் வளைத்தேறி. ஆனால், இங்கேதான் ஒரு சுவையான தொடர்ச்சி இருக்கின்றது. இந்தப்பெண்கள் அனைவருமே அடிப்படையிலே முனிபத்தினி, அரசிகள், இளவரசிகள், குலத்தலைவிகள் என்ற நிலையிலே கற்ற (ஆண் & பெண் என்ற பேதமின்றி) பெண்ணியல்வாதிகளால் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், சமூகத்திலே விளிம்பு நிலையிலே படைக்கப்பட்ட தாடகை, சூர்ப்பனகை (இராவணன் தங்கை என்றாலுங்கூட, அவள் வர்ணிக்கப்படும் விதம் அவளை ஒரு கௌரவத்துக்குரியவளாகக் காட்ட முயல்வதில்லை), கூனி போன்றவர்களுக்காக இந்தப்பெண்ணியல்வாதிகள் பேசியதாக நான் வாசித்தறியேன். இவர்கள் பேசப்படத்தொடங்கியது, பஞ்சமர் வாழ்க்கையும் தலித்தியமும் தமிழ் இலக்கியத்துள்ளே ஒரு தனியிடத்தினை ஊடுருவிப் பெற்றுக்கொண்ட பின்னாலேதான். சில ஆண்டுகளுக்கு முன்னாலே சூர்ப்பனகையின் மூக்கறுபடுவதற்குக் காரணமாக, ஆக, "அவள் ஒருவனை நான் உன்னை விரும்புகின்றேன்" என்று கேட்டதே அடிப்படைக்காரணமாகிவிட்டதா என்ற வாதம் வந்து எங்கோ வாசித்தேன். சூர்ப்பனகையின் கதை, இப்போதெல்லாம் ஓரளவுக்கு Matthew Shepard இனைத்தான் எனக்கு ஞாபகப்படுத்துகின்றது. ஆக, இருவரும் செய்த தவறு, தவறான மனிதரிடம் தங்கள் இச்சையைத் தெரிவித்ததன்றி வேறில்லை. அதன் பின்னர், சொல்லப்படும் சூர்ப்பனகையின் வெருட்டல், அருட்டல் எல்லாவற்றினையும் களைந்துவிட்டு மாற்றுப்பார்வை இருக்கலாமென்றே தோன்றுகின்றது. தாடகையின் கதையின் நவீனப்படுத்தப்பட்ட வடிவமாக வேண்டுமென்றால், பாலமுருகன் எழுதிய சோளகர்தொட்டியினைச் சொல்லலாம். அதிலே ஏன் சிவண்ணா ஒரு கட்டத்திலே துப்பாக்கியினை எடுக்கவேண்டி வந்ததென்பதற்கும் முனிவர்களைத் தாடகை பயமுறுத்தியதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அஃது இயலாமையின் இறுதிக்கட்டத்திலே, மூலைக்குள்ளே ஓரங்கட்டப்பட்ட, பூனைக்குட்டியும் காற்பாதம் தூக்கிச் சீறும் நிலையை ஒத்தது. அதனால், தாடகை அட்டூழியம்-அழிப்பினைக் குறித்துச் சொல்வதற்குப் புதிய இராமகாதை எழுதப்படவேண்டுமென்றால், அதேபோல, சூர்ப்பனகையின் காமம்-மூக்கறுப்புக் குறித்து, இராமமூக்கை எழுதப்படவேண்டும்; கூனிக்கு உண்டுவில் அடித்தது குறித்து, இராமமுதுகை எழுதப்படவேண்டும். இன்னும் வேண்டுமானால், பொன்னியின் செல்வனின் ஆரம்பத்திலே வரும் ஆழ்வார்க்கடியான் - சிவனடியார் வகை வாதாட்டம் மேவிய பார்வையிலே "இராவணன் மேலது நீறு" என்று சம்பந்தர் ஏற்றிய சைவன் தசக்க்ரீவனின் நிலையை நியாயப்படுத்தி, வைஷ்ணவ கம்பநாட்டாழ்வானின் இராமனுக்கு எதிராக ஒரு படைப்பு இதுவரை வராதது ஆச்சரியத்தினைத்தான் தருகின்றது.
இவை எல்லாம் தவிர, தனியொருவனின் பார்வைகூட, காலத்தோடும் அனுபவத்தோடும் ஒரு படைப்பினைக் குறித்து நிகழலாம். சிறுவயதிலே, கடவுளாகத் தோன்றியவன் இராமாயணத்தின் இராமன்; பின்னாலே, இராவணன் என்னூரான் என்ற ஐதீகத்தின் அடிப்படையிலே இராமாயணத்தின் பார்வை, இராவணனுக்கு அனுதாபம் கொண்டிருந்தது. பின்னால், ஜி. பார்த்தசாரதி இந்திரா அம்மையாரின் தூதுவராக வந்தபோது, இலங்கைத்தமிழர்சார்புப்பத்திரிகைகள், அனுமார் என்று போற்றப்பட, இராமாயணம் தொடர்பாக ஒரு குழப்பம். கடைசியிலே இந்திய அமைதிப்படையோடு வானரசைனியம் வனத்துள்ளே நுழைந்தால், இதுதான் ஆகுமென்று உணர்வு. எல்லாவற்றுக்கும்மேலாக, கடந்த பதினேழு ஆண்டுகளாக ராம் என்ற ஒற்றைச்சொல் மனிதன் ஏற்றும் வெறுப்பு. ஆக, இன்றைய நிலையிலே என்னைப் போன்ற உணர்வு, அனுபவத்தூடாகப் போன ஒருவன் கம்பநாட்டாழ்வானின் இராமாயணத்தினை மீளத் தன் பார்வையிலே எழுத முயன்றால், நிச்சயமாக, அஃது இராவணனுக்கும் வாலிக்கும் தாடகை சூர்ப்பனகை போன்றோருக்கும் அனுதாபமான பார்வையாக மட்டுமே இருக்கமுடியும். (சுப்பிரமணிய ஸ்ரீதரனின் இராமாயண கலகம், இலங்கையின் பிரச்சனை-இந்தியாவின் மூக்கு நுழைப்பு என்பதன் பார்வையிலே மீட்டு எழுதப்பட்ட இராமாயணத்தின் துண்டு எனலாம்)
அடுத்ததாக, சிலப்பதிகாரம் தமிழர்/திராவிடர் சார்பான மக்கள்காதையாகக் காட்டமுயல்வது குறித்து, சிதம்பர ரகுநாதனின் "இளங்கோவடிகள் யார்? (சிலப்பதிகாரம் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி)" என்ற நூலையும் அதன் மீதான எம். ஏ. நுஃமானின் "ரகுநாதனின் சிலப்பதிகார ஆராய்ச்சி" என்ற விமர்சனக்கட்டுரையையும் ("மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும்" என்ற நூலில்) வாசிப்பது சில பார்வைகளைத் தருமென்று நினைக்கிறேன். சிதம்பர ரகுநாதன் உண்மையில் இளங்கோவடிகள் வணிக வகுப்பினைச் சேர்ந்தவரென்றும் அதனால், அவ்வகுப்பின் வர்க்க நலன் குறித்து அரசகுடிக்கெதிரான காவியமாகச் சிலப்பதிகாரத்தினை முன் வைத்திருக்கின்றார் என்று முன்வைக்க, நுஃமான் அக்கருதுகோளை அது வலிந்து பெறப்பட்ட முடிவு என்று மறுக்கின்றார். (ஆனால், சிலப்பதிகாரமும் கண்ணகி மதுரையை எரிக்கின்றபோது, பசுவையும் பார்ப்பனரையும்விட்டுவிட்டே கொளுத்தும்படி சொல்கிறாள் என்பதையும் தொழிலாளி பொற்கொல்லனையும் கெட்டவன் என்ற வகைக்குள்ளே போட்டதையும் இந்த திராவிட மக்கள்கதையிலே எப்படியாகப் பொருத்துவது என்று எனது துணைச்சந்தேகமுங்கூட உண்டு).
'05 மே 08., ஞாயி 04:04 கிநிநே.
Wednesday, July 11, 2007
Tuesday, July 10, 2007
பழசு - 6
பதிவிட விஷயமில்லாவிட்டால், அதைக் கையாளுவது எப்படியென்றே ஓரிடுகையைப் போட்டுக்கொள்ளலாமென்பதைவிட்டால், வேறென்ன வழிகள் என்ற பட்டியல்
1. உங்களின் (வலையிலே சிலரின்) உணர்வைத் தூண்டும் & நெருக்கமான இடுகைக்கான செய்திகளைத் தேடியெடுத்து இணைப்பினைக் கொடுப்பது -
உதாரணம் காட்டினால், உதைப்பார்கள் (ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேற்பட்ட எதிரிகளைத் தேடுவதில்லை என்பது என் இம்மாத்தொடக்க உறுதிமொழி)
2. கும்மி அடி தமிழ்நாடு முழுவதும் மொக்கைதனைச் சுற்றிக் கும்மியடி
3. இருக்கவேயிருக்கு..... பழசை அள்ளிப்போடுதல்
மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள். அல்லாரும் பகவத்கீதை படியுங்கோ (நன்றி: சோ)..... அப்படியே....வலைப்பதிவிலே பின்னாலே எங்கிருந்தோ அல்லது சொந்தக்கிட்டங்கியிலிருந்தோ வெட்டி முன்னாலே கிடக்கும் கிடங்கை நிரப்ப மின்துகள் கொட்டுங்கள்.. ஏதோ எம்மாலானது...
கரை
'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.
சமர்ப்பணம்: பாக்கு நீரணைக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும்
எழுத்தனுக்கு கரை கிறுக்கற்கோடுகளாக அலைப்படிமங்களுக்குப் பின்னால் தெரிந்தபோது, அகன்ற ஆற்றின் படகோட்டத்தைப் பற்றிய பயம் கொஞ்சம் மறந்தது. கரையை அடைய இன்னும், -விழுந்தால் நீச்சல் தெரியாத இவன் தாக்குப்பிடிக்கமுடியாதளவு- நேரமும் ஆழமும் இருந்தாலும், கரையைத் தன்னொரு புலனூடாகத் தொடர்பு கொண்டது பயத்தினைப் பின்தள்ளிப் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தியது. விபரமறிந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்ட, கடந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களினூடே அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட அக்கரை. இவனைப் பெற்ற பெரிய எழுத்தரும் அவரைக் காண அடிக்கடி வரும்-போகும் பிற எழுத்தர்களும் பேசிக்கொள்ளும் முற்றத்து வாங்கடியிலே குந்திக்கொண்டு தன் மண்ணோடு மண்ணாக உணர்ந்த கரை. எழுத்தனுக்கு, முழுமண்ணுக்கு விரும்பாதார் யாரோ ஒரு கண்மூடி மண்ணுருட்டிப் புரண்டோடும் நல்லது செய்தறியா ஆற்றை ஊற்றிப் பயிர்செய்துவிட்டுப் போக, பிளந்த நிலத்தின் மறுகரை அது. இன்றைக்கும் பெரிய எழுத்தன் இருந்திருந்தால், இவன் ஓலைகளை விற்பதற்குக் கொண்டு வந்திருக்கப்போவதில்லை. பனையோ தென்னையோ, ஓலை பறித்து ஊறவிட்டு, பதம்பிறக்கப் பிரித்தெடுத்து, தேறியதை நீட்டி வெயிலிலே உலரவிட்டு, கைமுன்னேயுள்ள - எழுத்து, இருப்பு, இறப்பு -தேவைகட்களவாக சுவடிக்கு வெட்டி நறுக்கியோ, கூரைக்கும் கூடைக்கும் பாடைக்கும் இழைத்து முடைந்துமோ, பக்குவப்படுத்தி விற்பதே எழுத்தனின் குடும்பத்தொழில்.
அவன் மண்ணும் மரங்களும் இயற்கையின் வரட்சிமிகைப்படவும் வனவிலங்குகள் மேயவும்முன்னால், அவன் அம்மான் எழுத்தனின் காலத்தில் ஆற்றுக்கு அந்தக்கரையிலும் ஒரு சந்தை - சின்னதாகவேனும் முளைத்து, உயர்ந்து வளராத அடர்ந்த வெப்பவலயமுட்பற்றை போல அனற்புழுதிக்கும் சூரியன் தகிப்புக்கும் இறுமாந்திருந்தது. ஆனால், மேலேயிருந்து அணை திறவுண்ட ஆறு பெருகி முள் மண்முடி மூடிக் கவிழ, மாதமாக மூடிக் கிடந்த புதர் ஆறு வற்ற வேர் அழுகி நாறியது. வெயில் வேருக்கிறங்கிக் காயமுன், கீழிருந்து முள்ளம்பன்றிகளின் இரை தேடுகை. ஒரு குட்டைப்புதர் முள்ளுத் தின்பதிலே முள்ளம்பன்றிகள் சொர்க்கநிலை உணர்ந்திருக்கமுடியாது என்றும் புதரின் குட்டைநாற்றமே பன்றிகளுக்குச் சுவையைத் தந்திருக்கலாம் என்றும் பன்றிகள் அழுகிய பலவீனமான புதர்களைச் சாய்ப்பதினால், தம் வீரத்தினைப் பெண்பன்றிகளுக்குக் காட்ட ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பின் விளைவே அதுவொழிய, பன்றிகள் ஒரு வெட்டவெளித் தனிக்குட்டைப்புதரினை அழிக்கும் நோக்கத்துடன்மட்டும் வந்திருக்கமாட்டா என்றும் பெரிய எழுத்தரும் மீதி எழுத்த அங்கத்தவர்களும் பேசிக்கொண்டதைக் கேட்டிருந்தான். அதன்பின் சிலகாலம் இவனுக்கு முள்ளம்பன்றிகள் என்றில்லை, சாதாரண பன்றிகளையே கண்டால் வெறுப்பு. கல்லெறிதலும் உண்டு. ஊருக்குள் ஒரு சின்ன எழுத்தனாக இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்றார்கள்.... என்ன செய்வது? ஆள் அங்கம் விளையமுன்னர் அடையாளங்கள் விரைந்துகொள்கின்றன. எழுத்தர்கள் கல்லெறிவதில்லை. அவர்கள் முடிந்தால் ஓலைகளைப் பறிக்கவும் பிரிக்கவும் பதப்படுத்தவும் நறுக்கவும் விற்கவும் மட்டுமே வகுக்கப்பட்டவர்கள். எழுத்தர்கள் ஆற்றைப் பிரித்தோருக்கும் அதன்பின் அணை கட்டினோருக்குமன்றி வேறெவருக்கும் பிரித்தோனால் வெளிப்படையாகச் சுட்டிச்சொல்லப்படாத ஐந்தாம் வருணத்தவர். காலாற்கூட உதறுண்டு பிறந்துழற்றுப்பட முடியாமல், உடலுக்கு வேண்டாமற் கழிந்த மலத்திலோ சிறுநீரிலோ முகிழ்த்து முனைவிட்டு முளைத்துவந்தவர்களாய் ஆற்றுக்கப்பால் தள்ளப்பட்டுப்போனவர்கள். அதன் காரணமாகவே, மூர்க்கமும் மூடத்தன்மையும் நிறைந்த முள்ளம்பன்றிகளின் வனங்களுக்கு மேலும் தான் நினைத்தபோதெல்லாம் அணையுடைத்தோடும் ஆற்றுக்குக் கீழும் தம் பனைவிளை பூமியையும் வெப்பமுட்பற்றையையும் கொண்டிருக்கப்படைக்கப்பட்ட சேற்றுத்திணையினர். கிழட்டு எழுத்தர்களின் உட்கார்வாங்குக்கால்களுக்கு மேலாக வளர்ந்த பின்னர்தான், எழுத்தனுக்கு பன்றிகளும் முள்ளம்பன்றிகளும் வேறு வேறு என்று தெரியவந்தது. தேவையின்றி, சாதாரணபன்றிகளையும்கூட முள்ளம்பன்றிகளுக்காக வெறுத்துக்கொண்டிருந்தோமே என்ற துயர் அடங்காமல் ஆறு துடிக்குமோசை கவியும் காலங்களிலே உள்ளே கவியும். ஆனால், இவனின் எண்ணங்களுக்குச் சம்பந்தப்படாமல், எழுத்தர்களின் சந்தையோ எப்போதோ மடிந்துபோன ஒன்று.
அதன் பின்னர் பெரிய எழுத்தரும் மீதிக்கிழட்டு எழுத்தர்களும் ஏன் இவனோடொத்த ஓரிரு பிஞ்சிலே பழுத்த முட்டுக்காய் எழுத்தன்களும் ஆறு தாண்டி, ஓலை விற்க அக்கரைக்குப் போகையிலும் போய் வந்து விற்றகதை சொல்லுகையிலும், இவனுக்கு ஆற்றை இடையிலே ஊற்றி நிலத்தைப் பிரித்தவர்கள் எவரென்று உறுதியாகச் சொல்லமுடியாதுபோனாலும், அதன் சிற்றிடைத்தூரத்தைக் கடந்துபோக பாலம் அமையாத வேதனை வருத்தும். பெரியஎழுத்தரின் பெருந்தன்மையே, அவரின் கடகம் போன்ற தன்னுட் போட்டத்தை பொறுமையாகத் தாங்கித் தேக்குதிறனிலும் கிடுகின் காக்கும் தன்மையும் ஓலை நறுக்குப்போன்ற ஓரிரு சொற்களிலுமே இருந்தது என்று எல்லோரும்போலவே இவனுக்கும் தெரியும். இவன் அவருக்கு எதிர்; எழுத்தர்களின் குடும்பநிரலிலேயே இவன் ஒருவன்தான், கொஞ்சம் காலிடறி பக்கவாட்டிலே போய், தனக்கு முன்னே ஒரு வழிகாட்டி இல்லாமல், சொந்தமாக வேறு தொழில் செய்யத்தொடங்கினான்; வீடு சமைத்தலும் வீதிபோடுதலும்; பெரியஎழுத்தருக்கு அவ்வளவுக்கு அவை பிடித்திருக்கவில்லை.... அவன் தன் பரம்பரையிலே அவரறிந்து இருந்த எவரையும்விட ஒரு நல்ல பக்குவப்பட்ட எழுத்தனாக வரமுடியும் என்று அவர் மற்றவர்களிடமும் மற்றவர்கள் அவரிடமும் புலம்பியும் புகழ்ந்தும் கொண்டிருந்தார்கள். அவன் பதப்படுத்தும் நுட்பத்திலும் தேவைக்கேற்ப நறுக்கியும் இழைத்தும் செதுக்கும்இலாகவத்திலும் கற்றுக்கொள்ள இருப்பினும்கூட, மரத்திலிருந்து தக்க ஓலை தேர்ந்து பறித்தெடுத்து ஊறப்போட்டு, தொழிலுக்கு-உரத்துக்கு என்று பிரித்தெடுக்கும் திறன், அவன் பருவமுற்றலுக்கு மேற்படக் கனிந்ததென அவனிடமும் தாயாரிடமும் புலம்பிக்கொண்டிருந்தார். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்று எண்ணிக்கொண்டான்; அவனுக்கும் ஓலைக்கலை சேற்றிலே ஊறவிட்டுகையிலும் வெயிலிலே காயவிடுகையிலும் தன்னுள்ளும் தானாகவே ஆகி கீச்சுக்கீச்சுமூட்டி வருகின்றதைப் போலத்தான் இருந்தது. ஆனால், அவனுக்குச் சொந்தச்சந்தையினைப் பற்றிய பட்டறிவு இல்லை...... எங்கோ, அந்நிய ஊருக்குச் சுற்றுப்பயணம் போகையிலே, ஊதுகுழலுடன் நினைவுச்சின்னமும் வாங்கிக்கொண்ட ஓரிடம்போலத்தான் இருந்தது, நினைவும் முட்புதர் முள்ளம்பன்றி கிளர்ந்தெறிந்துபோகக் கிடந்த கிழநிலமும். இல்லாத சந்தையிலே, எதிர்ப்படுவோரின் இலக்குக்கேற்ப, பாடையும் கூரையும் அவர்களுக்கன்றி தனக்கில்லாமல் ஒரு சடங்காகச் செய்து வைத்து வயிறு கழுவும் தன்மை ஒவ்வாததது போலத் தெரிந்தது; பாடையிலே குருவித்தோரணக்குஞ்சம் தொங்குவதை எவரும் அனுபவித்துச் சிலாகிக்கப்போவதில்லை; இயற்கைக்கு அதீதமாகத் தேவை பெருகியுள்ளபோது, பாடை ஒரு காவிக்காகவேயழிய, கலைக்காக இல்லை..... அதுவும், பெருவாரிப்பன்றிமுட்களுக்கும் சொல்லாமற்கொள்ளாமல் குறைப்பிரசவித்துத் தள்ளும் ஆற்றுவிலங்குக்கும் பயந்துஅங்குமிங்கும் கண் வைத்து அவதிப்படும் காலச்சந்திலும் களமுடுக்கிலும்.... பாடைகள் கலைக்காகாது. ஆனால், ஒன்றோ இரண்டோ, அபூர்வமாக வீதி போடுகையிலே, வீடு கட்டுகையிலே அவனுக்குத் தன் கையகலத்தினூக உளநுட்பங்களைப் பிரசவிக்க முடிகின்றது...... மேலாக, அவனுக்கு ஒரு கனவு இருந்தது....... அதன் பருப்பம் அவனுக்குத் தெரியாத பொழுதிலும் பருவத்திலும்........ காயமாய்ப் பிளந்த நிலத்தின் கரைகளை -ஒரு பையின் வாயாக இழுத்து தைத்துக் கோக்கும் உறுதிப்பட்ட கயிறாய் - இணைக்கும் ஒரு பாலம் இவனது கலையின் முத்தாய்ப்பாக வேண்டுமென்பது இவனின் ஆற்றாத கனவு. அது ஆற்றை அணைக்கமுடியாதபோதும் அடக்கமுடியக்கூடும். இவ்வாறுதான் இவன் வனைஞனானான். ஆனாலும், மிகுந்த நேரங்களிலே ஓலையைப் பதனிடக் கற்றுக்கொண்டு வந்தான்; குறைந்த பட்சம், பிறர் கற்றுக்கொள்கின்றதைக் கண்டு கொண்டிருந்தான்.....உன்னித்து உள்வாங்குதலே ஒரு கலை என்று உணர்ந்தான். என்னதான் தேவையென்றாலும், இத்தனை வேகமாய்க் குருத்தோலைகள் அவசரத்துக்குத் தறிக்கப்பட்டுப் பாடைக்கு இழுத்து வரப்பட்டால், எதிர்காலத்திலே ஒற்றைப்பொட்டெனச் சிரிக்கக்கூடப் பாளைக்குத் தென்னை மிஞ்சுமா என்று பயம்பிறக்க, கலக்க அவதானிக்கொண்டுதான் இருந்தான். வாங்குவாரின்றித் தொலைந்து போகும் நுட்பமாகிக் கொண்டிருந்தது, குறுவோலை அமை கலை. பேரோலைப்பாடையின் தேவை பெருகும் காலத்திலே, சிற்றோலை தறித்தலும் தகவமைத்தலும் வாய்ப்பற்றுப் போதல் வியப்பாகவில்லை. இறுதியிலே பெரிய எழுத்தர், குடும்பத்தொழிலிருந்து விலகியதற்குப் பிராயச்சித்தமாக இவன் அதை இரு சங்கிலி வளையத்திடையே இருக்கும் கொழுக்கியாகவேனும் கற்றுக்கொள்கின்ற நிம்மதியோடு அற்றுப்போனார்.
அவன் எண்ணத்திலும் பட்டறிவிலும் முதிர்ச்சியடைந்தபோது, பெரிய எழுத்தரைப்போலவே, புலன்களிலே சுருதியைக் கூட்டிக்கொண்டு, பேச்சினைத் தறித்துக்கொண்டான். அவனுக்கு முதிர்ச்சியென்பது தன் இயலாமையின் எல்லைகளை உணர்ந்துகொள்வது என்பது தெளிந்தது. அது தெளிந்தபோது, ஆற்றை மேவிப் பாலம் அமைக்கும் நோக்கு அற்றுப் போனது. முனைப்பு என்பது அந்த இயலாமையின் எல்லைகளை இயலுமானவரை வெளியே தள்ளிவிட்டுக்கொள்ள முயல்வது என்பதும் அடுத்த கட்டமாகத் தோன்றியபோது, குறுவோலைக்கலைக்கு அக்கரையிலே ஒரு சந்தை அமைத்தலினையும் அக்கரையின் புதியநுட்பங்களையும் கற்று கலையினை மேம்படுத்துதலும் தனக்கான முனைப்புகளாகலாம் என்று எண்ணிக்கொண்டான். அதன் விளைவு, இன்றைக்கு தானும் தன் மூதாதையரும் செதுக்கிய ஓலைகளிலேயே சீர்மிகு குறுவோலைப்பொதிகளுடன் இந்த ஆறு கடப்பு. அவன் ஆற்றைக் கடக்கப்போகின்றான் என்ற விடயம் அத்துணை வரவேற்பினையும் உற்சாகத்தினையும் சிறுநீர்த்துளிநிலத்து மீதி எழுத்தர்களிடமோ, ஏன் எழுத்தர்கள் அல்லாத சக வனைஞர்கள், இசைஞர்கள் மத்தியிலோ தரவில்லை. ஓரிரு ஆண்டுகள் முன்னமே சென்றிருந்தால், சந்தை சந்தோசமாக இருந்திருக்கும் என்றவர்களும் கண்ணீர்த்துளிநிலத்துக் குறுவோலைகளிலும்விட பாடைகளுக்கே அங்கே சந்தை அதிகமென்று பாடைகளை இவனுடன் படகேற்றச் சொன்னவர்களும் கூட இவனின் நம்பிக்கையினை மழுங்கடிக்கமுடியவில்லை; ஆனால், இதுபோன்ற கருத்துகளையே சாராமல், கலைஞரே அல்லாத புவியியலாளர்களும் கனிமவியலாளர்களும், "ஒரு காலத்திலே இரு நிலங்களும் ஒன்றாக இருந்தது உண்மையாயினும், ஊடறுத்த ஆற்றின் ஓட்டத்தின் காரணமாகச் சேர்ந்த வண்டற்றன்மையுடனும் காற்றுத்திசை மாறுதல்களாலும், இரு நிலங்களும் ஒரே தன்மையுடைத்ததாக இராது" என்றார்கள்; "அதனால், அக்கரை பற்றிய பட்டறிவும் புவியியலறிவும் துப்பரவாகவேயற்ற அவன் தன் கனவுகளையும் சொந்தக்கருத்துக்கட்டமைப்புகளையும்மட்டுமே நம்பி கலையை அங்கே கொண்டு செல்கின்றது, குறுவோலை பதப்படுத்தும் கலைப் பரிமாற்றத்துக்கும் சந்தைப்படுத்தலுக்குமப்பால், அவன் உடல் நலத்துக்கும் கேடாகலாம்" என்று எச்சரித்தது பயத்தினைத் தந்தது. எந்தளவு ஓலையாக்கிப் பேணும் கலையிலே ஆர்வம் கொண்டவனாக இருந்தபோதும், தன் உடல்நலத்துக்கு ஊறு விளைவித்துக்கொண்டு அதைச் செய்யும் உளத்திடமும் நோக்கும் சின்ன எழுத்தனுக்கு இருக்கவில்லை; அதுமட்டும் இருந்திருந்தால், என்றைக்கோ அவன் கீழ்வனத்திலே முள்ளம்பன்றி வேட்டையாடவும் ஆற்றுக்கப்பால், பனைநிலத்தின் துயரான அதை அடிக்கடி திசைமாற்றி அவதிப்படுத்தும் எதேச்சாதிகார அணைவாயை வெடித்தடித்துடைக்கவும் போயிருப்பான். அவன் திடநெஞ்சில்லாதவன்.....
....... ஆனாலும், பனையோலையிலே குறுவோலை நறுக்கு எழுத்தனாகப் பிறந்துவிட்டவன். அதனால், ஒரு முடிச்சு சீர்மை ஓலைக்குறுக்குகளுடனும் என்றோ தொடர்புவிட்டுப்போன பெரிய எழுத்தரின் சில அக்கரைச்சொந்தங்களின் முகவரிகளுடனும் படகேறினான். கட்டிக்கொடுத்த சோற்று ஆலோசனைகளும் அனுதாபத்துடன்கூட அவனோடேறின.
படகோட்டி இறக்கிப்போனபின், கூட வந்த பயணிகள் எல்லோரும் கலைந்துபோகும்வரைக்கும் நெடுநேரம் தரித்திருந்து இறங்கிய கரை மண்ணை எடுத்து முகர்ந்தான்; கிட்டத்தட்ட அவன் கரையை நுகரின்பம்.... ஆனால், அந்த முள்ளம்பன்றிக்கழிவின் துர்நாற்றமோ மண்ணுட் புதைந்த முள்ளின் 'சுருக்' குத்துதலோ இந்நுகரனுபவத்துள்ளே இல்லை என்று பட்டது. காற்றும் அதுபோலத்தான் வீசியதென்றாலும், கொஞ்சம் கூதற்றன்மை தூக்கலாக இருந்தது போல...... ஆறு பிரிக்கும்போது எதைத்தான் சிறிதாகவேனும் மாற்றிப் பிரிக்காமல் விட்டது - ஆற்றினை அலட்சியப்படுத்தி வானத்திலே குறுக்கும் நெடுக்கும் இக்கரைக்கும் அக்கரைக்கும் தான்தோன்றித்தனமாகப் பறக்கும் சிறுபுட்களைத்தவிர? அவனின் விளிம்பு தளும்பிய உணர்வோட்டம் சூழலுக்குக் கட்டுப்பட்டு மட்டுப்பட்டபின்னர், ஓலை முடிச்சினை ஐந்தாறு மாதக்குழந்தையை தூக்கி ஏந்திக்கொண்டவன்போலப் பக்குவமாக விழாமல் இறுக்கியும் நோகாமற் தளர்த்தியும் வைத்துக்கொண்டு, படகுத்துறை அதிகாரியிடம்போய் சந்தைக்குப் போகும் வழியினைக் கேட்டான். ஏற்கனவே, அவனுக்கு ஓரிருவர் ஊரிலேயே சொல்லியிருந்தாலும், சொல்லப்பட்டது அக்கரையில்; சொல்லியவர்கள்தான் அங்கே இருந்துகொண்டு, "போகத்தான் வேண்டுமா? போய்த்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடித்தால், இப்படிப்போ" என்று பாதை வளிவெளியினைக் கிழித்துக்குறித்தவர்கள்; 'இக்கரை அதிகாரிக்கு இடம் பற்றிய தெளிவு அதிகம் இருக்கும்; என்னவிருந்தாலும், உயிருள்ளதொன்று முன்னுக்கு நின்று சுட்டி வழிகாட்டுவதுபோல வராது என்று நினைத்தான்.
பதிலுக்கு, அதிகாரி ஒரு சந்தேகப்பார்வையை வீசினான், "அக்கரையிலே இருந்து படகிலே வந்தாயா?"
எந்தக்கரை என்றால் என்ன? நேற்றைக்கு வந்த ஆறு நிலத்தைப் பிரிக்கலாம்; காற்றைத் திருப்பலாம்; வேண்டியபோது அணைப்படுத்தலாம்; அதைத் திறக்கலாம்..... ஆனால், சொல்லசைத்திசைக்கும் பண் வேறுபட்டாலும் மொழியிலக்கணத்தை, அடிப்படைச்சொல்லொலியமைப்பை முறிக்கமுடியுமா?
சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று சொன்னபோதிருந்த மகிழ்ச்சி அதிகாரிக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் சரிபாதியாகக் கலந்து நாட்டுமருந்துக்குக் குளிகையாக உருட்டிக் கொடுத்திருக்கவேண்டும்.
"ஏன் வந்தாய்? அணைப்பக்கம் போகிறாயா? மார்போடு வீங்கிய துணிமுடிச்சிலே என்ன?"
அந்த ஆண்டுக்கான ஓலைக்கலைச்சந்தைக்கு வந்ததைக்கூறினான்; முடிச்சுக்குள் ஓலையென்றான்; கேட்காமலே அவிழ்த்துப்போட்டுக்காட்டினான். பெரிய எழுத்தரின், அவரின் முன்னோரின் தேர்ந்தெடுத்துக்கொணர்ந்த ஓலைகளினை எடுத்துக்காட்டி, அவை செய்யப்படும் முறைகளினை விளக்கியதில், அதிகாரிக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை என்பதையும் கூடவே குழப்பத்தினை அதிகரித்தது என்றும் அறிந்துகொள்ளும் கிரகிதிறனும் உளநிலையும் அவனுக்கு இருக்கவில்லை. வாங்குக்கால்களிலே கேட்கப்பட்ட அக்கரை பற்றிய கதைகளிலே, அதிகாரிகளைப் பற்றியே எவரும் பேசாதபோது, அவர்களின் குறுவோலைகள் பற்றிய ஈடுபாட்டினைப் பற்றிப் பேசியிருக்கச் சாத்தியமேயில்லை. அணைப்பக்கம் போவது பற்றிய கேள்வியின் அர்த்தம்மட்டும் இவனுக்குப் புரியவில்லை.
அதிகாரி, ஓலைகளை வாங்கி தாறுக்கும்மாறுக்கும் கொட்டிக்கிண்டி எதைத் தேடினான் என்று இவனுக்கு புரியவில்லை; சிரித்துக்கொண்டிருந்தான். பிறகு, அதிகாரி தனக்குப் பின்னாலிருந்த அறைகளிலே இருந்து இன்னும் சில (மேல்??)அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து ஓலைகளைக் கிண்டித் தேடியபோதும் சிரித்துக்கொண்டிருந்தான். தான் வேறு என்ன செய்யமுடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை; நேராகவே அவர்களிடம் கேட்காமல் போயிருக்கலாமோ என்று ஓரிரு தடவையும் பழம்பனையோலைகள், அலட்சியத்தேடற்றட்டல்களிலே சேதமுற்றுவிடக்கூடாதே என்ற பயம் முழு நேரமும் தொடரவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் முள்ளம்பன்றிகளைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்பு. ஆற்றுத்துறை அதிகாரிக்கு, ஓர் ஓலைத்தறிப்பானுக்குப் புரியாத, புரியத்தேவையில்லாத தொழிற்கடமைகள் நிச்சயமாக உண்டு. பிரிப்பது இடைப்புகுந்த ஓர் இருட்டாறென்றாலும், இக்கரைக்கும் அக்கரைக்கும் துப்பரவற்ற படகுகளிற் கடக்கும் பயணிகள் நோய்க்கிருமிகளை உணவுப்பண்டங்களிலும் கொண்டு சென்று எதிர்க்கரைநிலங்களிலே வயிற்றுப்போக்கினையும் தலைவலியினையும் பரப்பிவிடக்கூடாதே என்ற பாதுகாதுப்பு உணர்வு அத்தியாவசியமானதே. ஆற்றின் இறங்குதுறை அதிகாரி அதனைக் கவனித்துக்கொள்ளாவிட்டால், வேறு எவர்தான் கண்டு கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியும்? இன்னமும் சிரித்துக்கொண்டான்.
பிறகு என்ன நினைத்தார்களோ தெரியாது, வேண்டாக்குப்பையினைக் கட்டுவதுபோல, ஓலைகளை அள்ளித் துணிமூட்டையிலே போட்டுக்கட்டி, சலவைக்கு அழுக்குடைகள் மூலையிலே எறிந்ததுவாய், இவனை நோக்கி எறிய இவன் இலாவகமாகப் பிடித்துக்கொண்டான்; அப்போதும் சிரித்தான்..... பெரிய எழுத்தர், முள்ளம்பன்றிகள் முட்புதர்களைக் கிண்டிக் கெல்லி எறிகையிலே வேறேதும் செய்யத்தோன்றாமல் இப்படித்தான் சிரித்திருப்பாரோ என்று எண்ணிக்கொண்டதாலும் சிரித்தான். சந்தைக்குப் போகும் வழியினை அந்த அதிகாரி இவனுக்குச் சொல்லி, சந்தையிலே அவன் விற்றல்-வாங்கல் வெற்றிகரமாக நடக்கின்றதோ இல்லையோ என்று தனக்குக் கவலையில்லை என்றும் ஆனால், அக்கரைச்சட்டப்பிரகாரம் அவன் அணைக்கட்டுப்புறம் போகக்கூடாதென்றும் அன்று இருட்டமுன்னரே படகுத்துறைக்குத் திரும்பி அவன்புறக்கரைக்குப் படகேறிப் போய்விடவேண்டுமென்றும் சொன்னார். தலையை ஆட்டிக்கொண்டான். "ஓலைச்சந்தை, படகுத்துறை அல்லவே; ஆர்வலர்கள் கூடும் இடம், ஒன்றுமில்லாததற்கெல்லாம் அதிகாரிகள் அராஜகம் பண்ணுமிடமல்ல. ஆற்றுக்குக்குறுக்கே பாலம் கட்டவிரும்பியவன் அந்த ஆற்றை அவதிப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் அணைக்கட்டினைப் பார்க்கவிரும்புவது இயல்பே என்றாலும், இக்கரைச்சட்டம் இடம் கொடுக்காதவிடத்திலே கட்டாயப்படுத்த நானேதும் இந்த நிலத்தவன் இல்லையே! ஆற்றின் உற்பத்தித்தானத்தினையும் அணை கட்டப்பட்ட வரலாற்றினையும் வெவ்வேறு நூல்களிலே படித்தறிந்திருந்தபோதும், சொந்தமாக தன் புலன்களாலேயே உண்மையினை அறிந்து உணர்ந்து கொள்வது சிறப்புத்தான். ஆனாலும் இன்றையச்சட்டம் அதற்கொவ்வாததென்றால், ஒன்றும் செய்வதற்கில்லை." எழுத்தன் தான் வந்த நோக்கு, குறுவோலைச்சந்தையிலே பங்கு கொள்வதுமட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொண்டு நகர்ந்தான்.
இவன் நடந்து தடியாக, விரலளவாகிப் புள்ளியாகி, அதுவும் மறையும்வரை அதிகாரி அவன் அணைப்பக்கம் போகிறானா என்றே அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை எழுத்தன் கவனித்திருக்கமுடியாது. அவரவர்க்கு அவரவர் கவனம். அது கலைந்தபின், அதிகாரி, எழுத்தனுக்காக ஏனோ கவலைப்பட்டுக்கொண்டான்; தான் அவனுடன், அந்தளவு கடுமையாக நடந்துகொண்டிருக்கவேண்டுமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்; அவன் தன் வயிற்றுப்பாட்டுக்கு, போயும்போய் பழைய ஓலைகளை விற்றுத் தின்ன வந்திருக்கின்றான். உள்ளம் நிரம்பச் சங்கடப்பட்டது. என்ன செய்வது? அல்லாதுவிடின், பின்னாலறைகளுக்குள் இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் பெரிய அதிகாரிகள் தன்னைவேறு அணைப்பக்கம் போகின்றானா என்று கவனிக்கத்தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம். சிற்றதிகாரிகளுக்கும் குற்றம்சுமத்தும் கண்காணிப்பு மேலதிகாரிகள் உண்டு. பேரதிகாரிகளுக்கு ஆறடுத்த ஆறாம்திணையார் என்றால் அக்கறையில்லை என்பதிலும்விட, சின்னப்பையன்கள் மழைகாலத்திலே கம்பிளிப்பூச்சிகளைப் பிடித்து ஓடவிட்டு, பின் நசுக்குவதுபோல ஓர் அதீத சித்திரவதைச்சுகமும்கூடத் தரும் ஆத்திரம் உள்ளுக்குள்ளே இருக்கின்றதுண்டு...... இக்கரைக்கு அப்பாலான எவருமே ஆற்றுக்குக் குறுக்கான அணையை உடைந்துவிடுவார்களோ என்ற அச்சம்போலும். அவர்களினையும் தவறு சொல்லமுடியாது.... ஒவ்வொரு கல்கல்லாக எடுத்து அணையைக் கட்டியவர்கள் அவர்களின் முன்னோரென்றால், ஆற்றின் இன்றையத்திசையினை அணைக்கட்டுப்பாட்டால் நிர்ணயிக்கின்றவர்களும் அவர்கள்தான். அவரவர்களின் அச்சங்களை அவர்கள் மட்டுமே நியாயப்படுத்தமுடியும்......... சின்ன ஆற்றுத்துறையதிகாரி பின்னர் தன் கவலைகளிலே மூழ்கிப்போனான்.....
சந்தையின் ஆரவாரிப்பும் புழுதியும் தொலைவிலேயே கேட்கவும் தெரியவும் செய்தன. பொதுவாக, ஓலைச்சந்தைகளிலே காளைமாடுகள் சண்டையிடுதலும் காலிலே கத்திகட்டிக்கொண்ட சேவற்சண்டைகளும் அதன் பின்னணியிலே ஒவ்வொரு பக்கத்துக்கும் கட்சியாகிக்கொண்ட ஓலைவியாபாரிகளின் உற்சாக, வசவு, சோர்வு ஆர்ப்பரிப்புகள் பற்றி வாங்கடிக்காலங்களிலே தெகிட்டத்தெகிட்டவே கேட்டிருக்கின்றான்....... சேவற்குஞ்சத்து ஓலைப்பாடைக்காரர், பாவாடைக்கிடுகார், வெளிறோலையார் போன்ற புனைபெயர்களால், பட்டப்பெயர்களாலே வழங்கப்பட்டவர்களின் கதைகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் மாற்றப்பட்டும் திரிக்கப்பட்டும் இவனுக்கு எது உண்மை எவர் சொன்னது பொய் என்று அறியாமலே இருந்ததுமட்டுமல்ல, அவர்களையெல்லாம் நேராகக் கண்டு உண்மைகளைத் தானே உணர்ந்து, ஒவ்வொருவர் திரிபுகளினையும் அவை எப்படி தமது இறுதிக்கதைநிலைகளை அடைந்தனவென்றும் இனம் கண்டு கொள்ளவேண்டுமென்றும் ஆவலாக இருந்தான்..... ம்ம்ம்ம்ம்.... யுககாலம் முந்தியகதைகள்... எவர் இருக்கின்றாரோ.... இருக்கின்றவர்களும் எப்படியெப்படி மாறியிருக்கின்றார்களோ........ அருகிலே வர வர அவன் உள்ளம் மகிழ்வுடனும் ஏனோ ஒரு பதட்டத்துடனும் கூடி அடித்துக்கொண்டது...... இதுவும் என் நிலம், காற்று இங்கிருந்து பிறந்துதான், ஆற்றைத் தாவியோ அல்லது ஆறு காவியோ என் கரையினையும் அடைகின்றது. நடக்கும் பாதைகளிலே இருந்த மரத்தோலைகளை எல்லாம் உன்னிப்பாகக் கண்டுகொண்டு நடந்தான். மரங்களும் அப்படித்தான் இருக்கின்றன..... என்ன தென்னைகள் கொஞ்சம் குறைவு. இப்போது ஏன் இந்தக்கரையில் இருக்கின்றவர்கள், அந்தக்கரையிலே இருக்கின்றவர்களிடம், பாடைகளை மட்டும் அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் என்று புரிந்ததுபோல இருந்தது. இளம் தென்னோலைகள் அதிகம் பறிக்கப்படக்கூடிய தேவையும் நிலையும் இருக்கும் இடங்களிலேயே குருத்துப்பாடைகள் அமைக்கும் கலை அதிகம் வளரும்...... பனம்குறுவோலைகளிலே சரம் கட்டுவது இங்கே அதிகம் வளர்ந்திருக்கும் என்பதால், தான் கற்றுக்கொள்ள அதிக நுட்பங்களும் விடயங்களும் அகப்படும் என்று எண்ணிக்கொள்ள மகிழ்ச்சியும் முள்ளம்பன்றி புகுந்த காலம்தொடக்கம் பெரிதாக வளர்க்கப்பட வாய்ப்பின்றித் தேங்கிய தனது எழுத்தர் பரம்பரையின் குறுவோலைநுட்பங்கள் இவற்றோடு பார்க்கப்படும்போது தரத்திலே எங்கே இருக்குமோ என்றும் ஐயமும் வெட்கமும் பிறந்தன.
இத்தகைய ஒரு குழப்பமான உளநிலையோடு, ஓலைச்சந்தைக்குள்ளே காலடி வைத்தான். அதன் அமைப்பினைப் பார்க்கும்போது, அது சந்தையா அல்லது ஒரு விளையாட்டுமைதானமா என்று சந்தேகம் அவனுள்ளே பிறந்தது; நடுவிலே கணிசமான நிலத்தினையைடைத்த வட்டத்தளக்களம். அதைச்சுற்றி உயர்ந்துசெல்லும் படலச்சங்கிலிபோல, இருக்கைகளும் ஓலைச்சந்தைக்கூடாரங்களும். களத்தினிலே ஆங்காங்கே கூட்டம்கூட்டமாக நின்று சேவற்சண்டைகளும் காளைகள்பொருதுகைகளும் பார்த்துக்கொண்டு ஆர்ப்பரித்தும் ஆத்திரப்பட்டும் அட்டகாசம் செய்துகொண்டிருந்தவர்களும்கூட, சந்தை எதற்காக என்று தாம் மறந்துவிடக்கூடாதேயென்றோ வேறேதோ காரணத்தினாலோ, ஏதோவொரு ஓலையைக் காதிலோ கையிலோ மூக்கிலோ கழுத்திலோ கௌவிக்கொண்டுலாவினார்கள்; ஒருவருக்கொருவர், மற்றவர்களின் அணியோலைகளைப் பிரமாதப்படுத்திப் பேசினார்கள்; தாமொன்றைக் கொடுத்து கொடுத்தவரிடம் இன்னொன்றினைப் பண்டமாற்றுச் செய்துகொண்ட வேளைகளிலே, சுற்றியிருந்தவர்கள் சேவற்சண்டைகளைக் கணநேரம் நிறுத்தி வைத்துவிட்டு, கைதட்டியதையும், வாங்குகை-விற்பனைக்கணக்கில் எழுதிக்கொண்டார்கள். பிறகு ஆளையாள் கடந்துபோனபின்னர், கணம்முன் வாங்கியதை வேறொருவருக்கு வேறொன்றுக்கு விற்றுக்கொண்டார்கள். முகம் பொருள் பார்க்கவேண்டிய இடத்திலே பார்க்காமலும் பார்க்கவேண்டாத சந்தர்ப்பத்திலே பார்த்தும் பண்டமாற்றுப்பண்ணுதலும் வாங்கியதைப் பக்குவப்படுத்தி வைக்காமல் இன்னொரு பண்டமாற்றுக்குக் கைமாற்றுவதும் பொழுதுபோக்கிற்கு அப்பாலும் தொழிலாகவே விரிந்து நடக்கின்றதைக் கண்டுகொண்டான். இவன் இந்தக்கரைப்பணம் கொஞ்சம் கொண்டு வந்திருந்தான் என்றாலும், இங்கே வெறும் பண்டமாற்றே போதும் என்பதாக வர்த்தகம் நிகழ்வதினைக் கண்டான். புல்லாக்கு அணிந்த சிலரை பெரும் ஓலைப்பல்லாக்குகளிலே வைத்து சிலர் காவிப்போக, முன்னால் "பராக்" கூறியபடி ஓரிருவரும், பக்கத்திலே சாமரைவீசியபடி இருவரும், பின்னால் திருப்புகழ் பாடியபடி சிலரும் போய்க்கொண்டிருந்தார்கள். இத்தகைய பாடைவடிவத்துப்பல்லக்குகள் ஒன்றையன்று குறுக்கிட்டபோது, குறுவோலைகளை ஆளுக்காள் பல்லக்கிருப்பிகள் எறிந்துகொண்டார்கள். மழையே காணாத நிலத்திலே பாதங்களையும் குளம்புகளையும் கூரியநகங்களையும் கீறிக்கீறி சுருதிகூட்டிச் சண்டைகள் நிகழும்போது, புழுதி கிளம்புவது தவிர்க்கமுடியாததே. புழுதி கிளம்ப, செருமலும் இருமலும் கனைப்பும் பின் தொடரும் என்கிறதை இவன் தன் கரையின் வீதிகளிலே பல்லக்குகள் பவனிவரும் வேளைகளிலே கண்டிருக்கின்றான்....... முள்ளம்பன்றிகள் புகமுன்னால்; இப்போது பல்லக்குத்தூக்கிகளும் பல்லக்கிருப்பிகளும் பல்லக்குகளும் பல்லற்றுப்போன காலம். அப்போதெல்லாம் இதேபோலத்தான், வரண்ட தொண்டையிலே, மூச்சுக்குழலிலே மட்புழுதி ஒட்டிக்கொண்டு அடிக்கடி செருமலேற்படுத்தாமல், இருமலுக்கு மருந்து உட்கொள்கின்றது வழக்கம்தான். உட்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவு வெளிப்பாடுகளை, எறிந்துடைந்த மருந்துக்குடுவைகள், குப்பிகளின் உடைந்த கண்ணாடி ஓடுகள் பாதங்களிலே கீறிக்கொள்ளும்போது இவன் உணர்ந்ததுண்டு. பெரிய எழுத்தரிடம்கூட ஒரு பெரிய பல்லக்குக்கும் சில விசுவாசமான பல்லக்குத்தூக்கிகளும் தீவட்டி பிடிக்கின்றவர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் எழுத்தர்பரம்பரையினரல்லாத பதிப்பர், உரைப்பர்குடியினர் என்றாலும்கூட, அவர்களின் சாமரவீசுகை வாங்கடியிலே இருக்கும் இவன் குஞ்சிவிளிம்புக்குக்கூடச் சொட்டி எட்டியதுண்டு....... எல்லாம் பொய்யாய், புழுகாய், இனியில்லாப்பெருநினைவாய்......... போனதையிட்டு இவனுக்கு நிறையவே சந்தோஷம். பதிப்பர்கள் யார், எழுத்தர்கள் யாரென்று சொல்லமுடியாத அளவு பதிப்பர்கள் உரைப்பர்களின் எண்ணங்கள் எழுத்தர்களின் ஓலைக்கலைக்குள்ளே மெல்ல மெல்லத் திணிவாகி வெளிப்பட்டு, ஒரு நிலையிலே முழுதுமே அவர்களின் கருத்துக்களுக்கு வடிவம் தரும் கைகளாகவே எழுத்தர்களின் ஓலைக்கலை ஒய்யாரப்படுத்தும் கதை ஆகிப்போனதுண்டு. எழுத்தர் பரம்பரையுள்ளே பதிப்பர்குடும்பங்கள் பின்னிய பிளவுகளும்கூட இலேசிலே மறக்கப்படக்கூடியவை அல்ல. ஓலைப்பல்லக்குகள் சில சிறப்புத்தினங்களிலே இன்றைக்கும் பதிப்பர்களின் வேண்டுதலுக்காக சில எழுத்தர்குடும்பங்களிலே கட்டப்படுவதுண்டு. ஆனால், இவை எல்லாமே எழுத்தர்கள், புழுதி இருமலுக்காக பதிப்பர்களின் உரைப்பர்களின் செருமல்மருந்துகளை வாங்கி நேரகாலம் தெரியாமல் பருகியதும்மீறிப்போய், பானைபானையாக அருந்தத்தொடங்கியபின்னரேதான்.
அவன் தன்னுள்ளே ஞாபங்களிலே அழுந்திப்போனது விலக்கி வெளியே வந்தபோது, சேவற்சண்டைகளுக்கு சிற்றோலைநறுக்குகளையும் காளைகளின் பொருதுதலுக்கு ஓலைப்பாடைகளையும் கூத்தாடிச்சூதாடிகள் பந்தயம் வைத்துக்கொண்டிருந்ததைக் கண்டான். இன்னும் மனிதக்கைத்தொழிலாகவும் குடும்பத்தொழிலாகவுமே பக்தியோடும் கலைப்பொறுப்புணர்வோடும் தன்னூரிலே தங்கிப்போன குறுவோலைத்தயாரிப்பு, இயந்தியமயமாக்கப்பட்ட நிலையிலே தொகுதிதொகுதியாக ஒரிரு வடிவங்களிலும் நிறங்களிலுமே பந்தயத்துக்காக காளைகள் இழுத்து வந்த வண்டிகளிலே பட்டுத்துணிமுகக்கவசங்களிலேயிருந்து அள்ளி எறிந்து சொரியப்பட்டு, பல்லக்குத்துக்கிகளினதும் சண்டைக்கோழிகளினது கால்களிலேயும் மிதிபட்டுக்கிழிபடுகின்றபோது, சின்ன எழுத்தனுக்கு ஏமாற்றமும் வேதனையும் கூடவே வெகுவாய்ப் பயமும் ஏற்பட்டுக்கொள்ள, தன் பனையோலைநறுக்குகளை, உடல் வியர்வையினையும் மறந்து இறுக்கி நெஞ்சிலே அழுத்திக்கொண்டான். அங்குமிங்கும் பாய்ந்து, தனது தனிப்பட்ட ஆர்வச்சேமிப்புக்காக, ஒவ்வொரு வகை ஓலைத்துணுக்கிலும் ஒவ்வொன்றைப் பொறுக்கி, ஊதித் தூசு தட்டி, தன் சட்டைப்பையினுள்ளே பாதுகாப்பாக வைத்துக்கொண்டான். இங்கே குறுவோலை பறித்து பதப்படுத்தி நறுக்கிப் பிழைப்பது, தன்கரையிலே ஓலைப்பாடைகள் கட்டும் மும்முர பெரும்வணிகர் தொழிலெனப் போய்விட்டதுபோல உணர்ந்தான். அதற்குமேலே அங்கே இருக்கப்பிடிக்கவில்லை. இத்தகைய தடகளச்சமரிகளிடமிருந்து விலகி, மேலே பார்வையாளர் கூடாரங்களிலே, பாடை, கூடை, கூரை, கிடுகு, நறுக்கு பிரிவுகளிலேயும் இத்தகைய சூழ்நிலை நிலவக்கூடுமோ என்ற அச்சவுணர்வோடு அகன்றான்.
பெரியதும் சிறியதுமாக அகன்ற கூடாரங்கள். முழுவதுமே ஆறுதலாகச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் நாளுக்கு எட்டு மணிநேரம் என்று பார்த்தாலும்கூட, மூன்று நாட்கள் தேவைப்படும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால், என்ன செய்வது? மாலைக்கு முன்னர் இறுதிப்படகினைப் பிடித்தேயாகவேண்டிய நிலை. இரவு தங்கிடும்பட்சத்திலே, இந்தவூர்ச்சட்டம் எவரெவர்க்கு என்னவென்னவற்றுக்கு என்னென்ன தண்டனை வைத்திருக்கின்றதோ தெரியாது. சிறிய எழுத்தன், தன் உள்ளத்துக்குத் தவறெனத் தெரியும் சட்டத்துக்கு என்றைக்கும் அஞ்சினவன் இல்லாதபோதும், தண்டனைக்கு அஞ்சினான்; அதற்குமேலாக, எத்தகைய தண்டனையைப் பெற்றுக் கொண்டாலும்கூட, அதற்குப் பெறுதியாக இருந்து முழுதாக அனைத்துப்புலன்களாலும் அனுபவித்து அனுபவங்களைப் பகிர்ந்து போகவேண்டிய சந்தைதானா இது என்ற சந்தேகம் வேறு அவனுக்கு கடந்த ஒரு மணிநேரத்திலே ஏற்பட்டுவிட்டது. கூடவே, ஆங்காங்கு, சில இக்கரை ஓலைப்பாடை வணிகர்கள் தங்களுடன்கூடவே அழுக்கினைச் சிலுப்பும் முள்ளம்பன்றிகளை வளர்ப்புப்பிராணிகளாகக் கொண்டு உலாவியது அதிர்ச்சியினையும் அடுத்தநாளைக்குரிய அவனின் இருப்புக்கான பயப்பிராந்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இறுதிப்படகுக்கு இன்னும் இருப்பது ஏதோ நான்கு மணிநேரங்கள் மட்டுமே. இதற்குள் விழைந்து திட்டமிட்டதிலே சிலவற்றினை விலக்கி, மிகவத்தியாவசியமெனப் பட்டவற்றினை மட்டுமே இந்தமுறைக்குக் கண்டுபோகலாம் என்று எண்ணிக்கொண்டான். அவசர அவசரமாக, எல்லாவற்றினையும் காகப்பார்வை பார்த்துக்கொண்டு எதையுமே செரிக்கச் சுவைக்காமல், வதவதவென்று வாய்க்குள்ளே கொட்டமுன்னரே விழுங்கிக்கொண்டு போகின்றதிலும்விட, இயற்கை இப்போது இருப்பது போலக்கூட பேணுண்டால் நகர்ந்தால், வருங்காலத்திலே ஓரிரு தடவைகள் வந்து மற்றையவற்றினைக் கண்டுகொள்ளலாம் என்று தோன்றியது. அதனால், குறுவோலைப்பிரிவிலே இருக்கக்கூடியவற்றினைக் கண்டுகொண்டு, தன்னுடைய ஓலைகளினைப் பற்றி ஆர்வலர்களுக்கு விளங்குறுத்தி அவர்களின் தம் அறிமுகங்களையும் கருத்துக்களையும் கேள்விகளையும் கேட்டுப் பதிலிறுத்தும் பதிவுசெய்தும் கொண்டபின்னர், பெரிய எழுத்தரின் இக்கரைநண்பர், வெளிறோலையார் (இயற்பெயரோ, பட்டப்பெயரோ அல்ல, தன்தொழிலுக்கேற்ப அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டது) இனைச் சந்தித்துக்கொண்டு, பின்னர் நேரமிருப்பின், அவரின் ஆலோசனைப்படி, வேறு ஓலைத்தொழில்களிலேயிருக்கும் எந்தநுட்பங்களைத் தனது குறுவோலை நறுக்குக்கலைக்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டறிந்து அவற்றினையும் கண்டு தன் குறிப்புகளிலே பதிந்து செல்லலாம் என்று எண்ணிக்கொண்டான். இவற்றுக்கே நேரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும், அந்தநேரத்திலே நேரத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பது, தன்னை இதைவிடவும் உற்சாகம்குன்றியவனாக ஆக்கிவிடும் என்று பயந்தபடி நறுக்குப்பிரிவுக்கு நகர்ந்தான்.
நறுக்குப்பிரிவு அவன் படகேறமுன் எண்ணியதிலும் சிறிதாக இருந்தாலும், அந்தப்பிரிவுக்குள் நுழையமுன்னர் எண்ணிக்கொண்டதிலும்விடப் பெரிதாக இருந்தது உள்ளத்துக்குக் கொஞ்சம் ஊட்டத்தினைத் தந்தது. பங்குதாரர்களிலும் பார்வையாளர்களிலும் பெரும்பான்மையோர் நடுத்தரவயதினைக் கடந்தவர்களாகவும் கடந்துகொண்டிருக்கின்றவர்களாகவுமே இருந்தார்கள். கண்ணாடிப்பேழைகளிலே பழைய குறுவோலைகள் தூசு தட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அங்காடிகளுக்கு முன்னால் வழிப்பாதைகளிலே நின்று பேசிக்கொண்டவர்களின் குரல்களைச் செவிமடுத்துக்கொண்டே கண்களினால் விதவிதமான குறுவோலை நறுக்குகளைக் கண்டுகொண்டு நடப்பது மிகவும் ஆனந்தத்தைத் தந்தது. சில அங்காடிகளின் கண்ணாடிப்பேழைகளின் முன்னே தானும் தனக்கு இருக்கும் கெடுகாலநேரத்தையும் மறந்து பதுமையாக நின்றான். பெரிய எழுத்தர், அடிக்கடி வெவ்வேறு பாணி குறுவோலை செலுக்கலுக்கு உவமானங்களாகச் சொல்லிக் காட்டும் உன்னதமான நறுக்குகள் எனப்பட்டவை எல்லாம் வஞ்சகமின்றி அங்குமிங்கும் 'முதலில் என்னைப் பார், பிறகு வேண்டுமானால், அதனையோ வேறெதனையோ' என்று இருக்கின்ற நிலையிலே அவனின் புத்தி உற்சாகசன்னதமாடிக்கொண்டிருந்தது. பெரும்பாலானவை பார்வைக்குமட்டுமே அரசநூதனசாலைகளிலேயிருந்து கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தூசு தட்டப்பட்டதும் பேணி வைத்திருந்ததும் நிறைவான முறையிலே நிகழ்ந்திருந்ததா என்று சொல்லமுடியாதவளவுக்குத் தம் அகவைக்கும் மீறி பழுப்பேறியும் ஆங்காங்கே பூச்சி அரிப்புண்டும் மூப்புண்டு கிடந்தவை மனதுக்கு வருத்தத்தினைத் தந்ததற்கு, இழந்த சிறிய எழுத்தனின் கரைச் சந்தையும் பேணியும் மூர்க்கமுள்வராகங்கள் கிழித்துக்குதறிய, கண்மூடிக்காட்டாறு அள்ளிக்கொண்டுபோய் அமிழ்த்தியழித்த பல அபூர்வ ஓலைநறுக்குகளின் ஞாபகமும் ஒரு முக்கிய காரணமாகும். அவ்வாறு அழிந்துபோன ஓர் ஓலைநறுக்கினைக் கூட அவன் தொட்டோ, ஏன் கண்ணால் கண்டோ அறியான்தான்; அறிந்ததெல்லாம் பெரிய எழுத்தரின் ஓலைநறுக்குகள் பற்றிய சில ஓவியங்களிலே கண்டதும் கீழிருந்த அவற்றின் செழுமையினைப் பற்றி சிலாகித்துச் சொல்லியிருந்த குறிப்புகளிலே அறிந்துகொண்டதும் மட்டுமேதான். அவற்றின் பாணியிலே, இந்த அபூர்வ பழம்குறுவோலைகளிலே ஏதேனும் அமைந்திருக்கின்றதா என்று தேடிப் பார்த்து தோற்றான். ஓலைக்கலையின் தன்கரைக்கிளை தறிக்கப்பட்டது அவனுக்குப் புரிந்தது. பொதுவாக, அவனது கரையோலைகள் - அவன் கொண்டு வந்தவை உட்பட- செய்கால எல்லைகளுக்கு அப்பாலும்கூட சில கலைப்பண்புகளைத் தமக்கெனத் தனித்துவமாய் இவற்றிலிருந்து வேறாகக் கொண்டிருந்தன....... உதாரணமாக, இந்தக்கரையோலைகளின் இடக்கை விளிம்புகள் செங்கோணத்திலோ அல்லது சீராய்மாறும் வளைவாக அமைந்திருக்கின்றபோது, பெரிய எழுத்தரினது அம்மானின் ஓலைகளோ அல்லது பெரிய எழுத்தரின் நறுக்கு இடப்புறமூலைகளோ, புறாக்கழுத்து வடிவிலே இருந்தன. ஓலைகளைப் ஊறவிடும்-ஒளிபடர்த்திப் பதனிடும்முறையிலும் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுகள் வித்தியாசங்கள் இருக்கக்கூடும் என்பது ஓலைகளின் நிறங்களிலேயும் தொடுவுணர்விலும் தெரிந்தன. இவனது ஓலைகள், உடலம்முழுவதும் சீராக அதிக வெயிலிலே பட்ட ஆழ்பழுப்பாகவும் கரடுமுரடாகவும் ஓரிரு உரசல்களிலேயே விரற்றோலை எரிக்கிறதாக தம்மை உணர்த்தியிருந்தவேளைகளிலே, இந்தக்கரை ஓலைநறுக்குகள் ஓரங்களிலே வெளிறியும் மத்தியிலே மினுங்கட் காவிமஞ்சளும் உடைத்து மிகுமென்மையாக வருடவருட விடாமற் தடவிக்கொண்டே இருக்கவேண்டும்போல ஒரு மோகத்தன்மையினை வளர்த்துக்கொண்டே போயின. இவை மிகவும் கச்சிதமாக கைக்கடங்கி ஒரு சதுரநெறியினை மீறவா வேண்டாமா என்று கேட்டபடி மீறிக்காட்டும் செவ்வகக்கவர்ச்சியாகவிருக்க, அவனது துணுக்குகள் உயரம் குன்றி பக்கவாட்டிலே அகன்று சாய்ந்து சரிவகமாகித் தொங்கின. ஈரப்பதனைக்கூட கொஞ்சம் உள்ளுறுஞ்சி இவன் கொணர்ந்த ஓலைகள் வைத்திருக்கும் என்று இரு கைகளிலும் ஒவ்வொன்றிலும் ஒன்றைத் தூக்கிப் பார்த்து எண்ணிக்கொண்டான். இதிலே எ·து அழகு என்று இவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஒவ்வொன்றும்தான்; எல்லாமும்தான். ஓலைகளின் சாமுத்ரிகாலக்ஷ்ணம் வேறு. பத்தினியுடன் சித்தினியினை ஒத்துப்பார்த்துக்கொள்ளமுடியுமா, அல்லை, வேண்டும்தானா? ஒவ்வொன்றும் தம்மளவிலே தமக்கான சிறப்பியல்புகளைக் கொண்டு கிடைக்கையிலேயே, இதோடு அதனையும் அதோடு இதனையும் மேலானது எது என்ற வினாவினை முன்வைத்து சீர்தூக்கிப்பார்க்கின்றதிலே அர்த்தம் இல்லை என்றே பட்டது. வேலையற்றவர்கள் வேண்டுமானால், ஒவ்வொரு வகைக்குள்ளும் போட்டி வைத்துக்கொள்ளலாம்; மற்றவர்கள், ஒவ்வொரு வகையின் இயல்புகளையும் மற்றதற்குள் அமைவுச்சுருதியிலே அபம் விளைவிக்காது பொருந்தக்கலந்து புதிய கலப்பின ஓலைநறுக்குகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்; கிளைகள் சடைத்து விருட்சம் வளரவேண்டுமேயழிய, ஒரே விருட்சத்தின் கிளைகளுள்ளே எ·து அழகிலே சிறந்தகிளை என்று கூட்டற்கழித்தற்கணக்குகள் பார்க்கின்றது அர்த்தமற்ற பின்னோக்கிய நகர்வு. சிலம்புகளைச் செய்த ஆசாரியை எடைபோடுவதற்காகமட்டும், உடைத்து மாணிக்கமா முத்தா என்று இனியும் பார்த்துக்கொள்ளக்கூடாது என்று எண்ணிக்கொண்டான்.
இத்தனைக்குப் பின்னர் ஒரு பெரியகடையிலே, விழிகளிலே ஒட்டிக்கொண்டு விலகமறுத்த சில நறுக்குகளைத் தனது நினைவுப்பதிவுகளாக ஆக்கிக்கொள்ளும் நோக்குடன் சித்திரப்படுத்த முயல்கின்றவேளையிலே, கடை உரிமையாளர்தோரணையிலே நடமாடிக்கொண்டிருந்தவர் வந்து, அதற்கு அனுமதி இல்லாததைச் சொல்லி வருத்தம் தெரிவித்தார். விருப்பமானால், ஏற்கனவே அவற்றினைப் பதிவு செய்த ஓவியங்களை அவனுக்குத் தாம் விற்கமுடியும் என்று கூறியபோது, அவன் தன்னை அறிமுகப்படுத்தி தான் வந்த நோக்கினைச் சொன்னான். அக்கரையிலேயிருந்து வந்தவன் என்று சொல்லியபோது, கடைக்காரர் நெளிந்தார்; சுற்றுமுற்றும் இருந்தவர்களிலே பலர் தமது பார்வைகளை ஓலைகளிலே இருந்து விலக்கி இவனை ஊருடுவ நோக்கிச் செலுத்திவிட்டு, ஓலைகளுக்கு மீண்டனர். தனக்கான மரியாதை தனது சொந்தமுயற்சிக்கான விளைவின் அளவுமட்டமாகமட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றவன் ஆதலினால், தான் பெரிய எழுத்தரின் புதல்வன் என்பதினைச் சொல்லிப் பரிச்சயம் தேட விரும்பவில்லை. அக்கரைக்காரர்கள் பொதுவாக, 'தென்னோலைப்பாடைகள் பிரிவுக்குத்தானே சந்தையில் அதிகம் வந்துபோவதுண்டு!?" என்று இருகுறிகள் இறுதியிலே ஒருங்கித்தொனிக்கக் கேட்டபோது, சின்ன எழுத்தன், அவர்கூறியதுபோலவே தன் அண்ணனின் ஈடுபாடும் வாழ்க்கைக்கான தொழிலும் அதுதான் என்றும் ஆனால், அவன்கூட பாடையின் கலைநயத்திலும்விட தாங்குதிறனுக்கும் ஓலைத்திறனிலும்விட விற்பனைத்தேவைக்கும் விலைக்குமே அதிக ஈடுபாடு கொடுக்கின்றதுண்டு என்று கூறினான். பிறகு, தணிந்த குரலிலே தான் தொழில்ரீதியிலே வீதிபோடுகின்றவன் என்றும் நேற்றைக்கும் நாளைக்குமான சங்கிலிக்கொழுக்கியாகித் தான்போன உள்ளத்திருப்திக்குமாகவே குறுவோலைக்கலையிலே ஈடுபாடு உள்ளது என்று சொல்லி, நெஞ்சோடு ஒத்துப்பார்க்கத் திறந்திருந்த தன் பொட்டணியினை மேசைமேல் விரித்து வைத்தான்.
கடைக்காரர் விஷயகாரர் என்று கண்களின் விஷமம் சொன்னது; நறுக்குகளின் பெறுமதி பளிச்சிட்ட அவரின் கண்மணிகள் சுருங்கமுன்னர், காளைச்சண்டைக்களத்தினிலே கண்ட பண்டமாற்று உத்தி அங்கும் செல்லுபடியாகும் என்று எண்ணிக்கொண்டதனால், அவற்றிலே சிலவற்றினை அவரிடம் கொடுத்து, தான் ஓரிரு ஓவியங்களை வாங்க வாய்ப்புண்டா என்று கேட்டான். "சாத்தியப்படும்" என்ற கடைக்காரர் அடுத்து, "பேரம் பேசமுன்னர், அவை திருட்டோலைகள் இல்லை என்பதற்கு அத்தாட்சி ஏதுமுள்ளதா?" எனக் கேட்டார். எழுத்தன் எல்லா ஓலைகளின் வலதுகீழ்மூலையிலே இருக்கும் 'உ' குறியினைக் காட்டி, எழுத்தர் பாரம்பரிய ஓலைக்கலைஞர்கள்மட்டுமே அவ்வண்ணம் இடுவார்கள் என்று கூறினான். கொஞ்ச நேரம் அதனை நம்பமறுக்கின்றவர்போல, தாமதம் செய்த கடைக்காரர், பேரத்திலே தன் கையோங்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, கலைப்படைப்பு-தரம்-பொய்மை-திருட்டு-நீதி என்பன பற்றி சிறிது அச்சுறுத்தற் சொற்பொழிவின்பின், எழுத்தனின் ஓலைகளை எடுத்து 'நிறுத்தலளவிலோ நீட்டலளவிலோ' பெறுதியளக்க வேண்டும் என்று கேட்டார். இவன் அவர் விரும்பியதைச் செய்யும்படி சொல்ல, அவர் தன் தராசிலே சின்ன எழுத்தனின் சில நறுக்குகளை எடுத்துப்போட்டார். தராசின் மறுபக்கம் சித்திரங்களை வைக்கப்போனவரை எழுத்தன் தடுத்தான். எல்லோருக்கும் பொதுவான நிறைப்படிகளையே வைத்து நிறுத்துக்கொள்வது இந்தவிடத்துக்குப் புதிய தனக்கு வியாபாரத்திலே நம்பிக்கையைத் தரும் என்றான். கடைக்காரருக்குக் கோபம் வந்தது. "செய்கின்றது பண்டமாற்றேயழிய பணம் ஊடோடும் வர்த்தகமல்ல, அதனால், இரு பண்டமாற்றுப்பொருட்களையும் பக்கம்பக்கமாக வைத்துக்கொள்கின்றதே போதுமானதும் நேரச்சிக்கனத்துக்குரியதும்" என்று அதட்டலாகச் சொன்னார். எழுத்தனுக்கு அரசு இலச்சனைகள் பொறிக்கப்பட்ட நிறைப்படிகள் மட்டுமே தராசின் நேர்மையினையும் சுட்டக்கூடும் என்று பட்டது. இறுதியாக சில நிமிடப்நேரப்பிணக்கின் பின், வேண்டாவெறுப்பாக நிறைப்படிகள் ஒருபுறமும் இவனின் நறுக்குகள் மறுபுறமும் இடப்பட்டுச் சமானம் பார்க்கப்பட்டபோது, எழுத்தனுக்கு தராசின் நேர்மையினைப் பற்றிமட்டுமல்ல, அரச இலச்சனைப்படிகளுமே திட்டமிட்டுப் பொய் சொல்லக்கூடுமோ என்று எண்ணம் வந்தது. அவனது கரையிலே எட்டு ஓலைகளைக் கேட்ட நிறைப்படியிற்குச் சமானமாக வேண்டிய இந்தக்கரை நிறைப்படி பத்து ஓலைகளைத் தட்டிலே பெய்யெனக் கேட்டது. இவன் அதனை வெளியே வாய்விட்டே சொன்னான். கடைக்காரருக்கு அதீதகோபம் வந்துவிட்டது. 'தன் நிலத்திலேயே வந்து தன்னைப் பொய்யன் என்று அழைக்கும் அசாத்தியதுணிவுள்ள அக்கரைக்காரன்' என்று கத்தத்தொடங்கியது மட்டுமல்லாது, தனது தராசின், அதன்படியின் நீதியை நிரூபிக்க வேண்டி, 'ஆறு பிரிப்பதினால், புவியீர்ப்பு எவ்வாறு நிலங்களுக்கிடையே மாற்றமடைகின்றது என்பதை அவன் கணக்கிலே கொள்ளவில்லை' என்றும் குற்றம்சாட்டினார். எழுத்தன் பதிலுக்கு, பூமியிலே கிட்டத்தட்டச் சமானமான உயரத்திலேயிருக்கும் எந்த நிலத்திலும் இரண்டு ஓலையைப் பெயர்க்கும்வண்ணம் நிறைக்கல்லிலே புவியீர்ப்பு மாறாது என்று அழுத்திச் சொன்னான். இறுதியாக, கடைக்காரர் 'உன்னைப் போன்றவர்களுக்கு நான் விற்கமாட்டேன்" என்று இழுக்காத குறையாக கடைக்கு வெளியே கொண்டு வந்து தள்ளிவிட்டுப்போனார்; கடையிலே ஓலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனுக்கு நடப்பதையும் பேசாமற் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதற்குப்பிறகும் கடைக்காரரிடம் பேரம் பேசாமல் சொன்னவிலைக்கு ஓலைகளை வாங்கிக்கொண்டும் போனார்கள். அவமானவுணர்வோடு இவனுக்குக் கண்கலங்கிவிட்டது. அழுத்தத்திலேயிருந்து கொஞ்சம் இளகி வருவதற்காக, கொஞ்சம் தள்ளி நடந்து தனிமையிலே நின்று தன்னை ஆசுவாசப்படுதியபின்னர், தன்னைக் கடந்து வழியிலேபோன ஒருவரிடம் பெரிய எழுத்தரின் நண்பர் வெளிறோலையாரின் முகவரியினைக் காட்டி, அதற்குச் செல்லும் வழியினைக் கேட்டான்.
அவர் இவனை ஆதரவோடு அழைத்துக்கொண்டுபோய் ஒரு சிறிய கடையினைச் சுட்டிக்காட்டி விட்டுப்போக, இவன் நன்றி கூறிவிட்டு உள்ளே நுழைந்தான். ஒரு வயதான பெண்மணி மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அது மூடப்படும் நிலையிலே இருந்த கடை என்று தெரிந்தது. நறுக்குகள் அரைவிலையிலும் சிலவற்றினை வாங்கியதற்கு வேறுசில இலவசமாகவும் கொடுக்கப்படும் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நறுக்கோலைகள் மீதிக்கடைகளிலே காணப்பட்டதற்கு மாறாக இவனுக்கு பல காலமாக மிகவும் பரிச்சயப்பட்டனபோலவும் தோன்றின. இவனுக்கு முன்னைய பண்டமாற்றுப்பேரம் விளைவித்த வெறுப்புத்தனத்தின் பின்னால், உள்ள பணத்திலே படகுக்கூலிக்குத் தவிர்ந்த மீதிக்கு - பசியினை இரவு வீட்டுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம் என்று பட்டதால்- தேர்ந்தெடுத்து குறுவோலைகளை இங்கேயே வாங்கிப் போனால், வந்ததற்கு வருத்தப்படமாட்டோம் என்று பட்டது. இவ்விடத்தில் எக்காரணம்கொண்டும் பேரம் பேசுவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டான்; சொன்னவிலைக்கு வாங்கிக்கொண்டு வெளிறோலையாரைப் பற்றி விசாரிக்கலாம் என்று பட்டது. கட்டிக்கொண்டு வந்த தனது ஓலைகளை அடாத விலைக்கு இங்கே எந்த ஏமாற்றுக்காரனுக்கும் விளக்கவோ விற்கவோபோவதில்லை என்ற உறுதி முன்னைய கடையிலே இருந்து வெளியே வருகின்றபோதே உள்ளுக்குட் தீர்மானித்த விடயமாகி விட்டது. இவர்களுக்கு நறுக்கோலைகளை விற்கின்றதும் அக்கரையிலே சாமரைப்பதிப்பர்பரம்பரைக்கு விற்கின்றதற்கும் ஏதும் வித்தியாசமில்லை. நாய் விற்ற காசையும் குரைக்கச்சொல்லிக்கேட்கும் ஒத்தகூட்டங்களேதான் மொத்தத்திலே இரண்டும். வேறு சுருதியிலே பேசிக் கெடுக்காமல், சிறியதொரு சிரிப்பினைமட்டுமே கிழவிக்குச் சிந்திவிட்டு, குறிப்பிடப்பட்டிருந்த விலைகளையும் தன் கையிருப்பினையும் கணக்குப் பார்த்துப்பார்த்து தெரிந்தும் விலக்கியும் சேர்த்துக்கொண்டான். கிழவி உற்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள்; இவன் நிமிர்ந்துபார்க்கும் நேரங்களிலே ஒரு சிறிய சிரிப்பினை உதிர்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்வாள்; சரி, அந்நியன் என்றுதான் என் முகத்திலே கரியாற் குறிப்பெழுதி ஒட்டிக்கொண்டிருக்கின்றேன், கோலால் பகற்றிருடன் என்றுகூடவா நெற்றியிலே சூடு போட்டிருக்கின்றேன்!! எட்டாண்டு காலமாக இந்த யாத்திரைக்கென்று சிறுகச்சிறுக இப்படி பணத்தினைச் சேர்த்துவந்து இங்கே திருடன் என்ற பார்வையினையும் அநியாயத்திட்டினையும் வாங்கிக்கொண்டு கொட்டிவிட்டுப்போகவேண்டுமா என்ன என்று ஆத்திரம் தன்மீதே சின்ன எழுத்தனுக்குப் பீறிட்டது.
சேர்த்துக்கொண்ட குறுவோலைகளை எடுத்து கிழவியிடம் பணத்தினைக் கொடுக்க நகர்ந்தபோது, அவளுக்குப் பின்னால், சூரியன் ஆற்றுக்குப் பின்னால், இவனது கரையினை நோக்கிச் சாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. 'என்னவாயிற்று இந்த நிலத்துக்கு!' என்று எழுத்தனுக்குள் சோர்வுடன் நொந்தது. பெரிய எழுத்தரும் மற்றவர்களும், "எமது கரை எமது அக்கரை" என்று பேதமில்லாமலே சக்கரைக்கட்டிகள் சலித்துக்கொட்ட, வாங்கினடியிலிருந்து சிந்திக்காமலே அள்ளியள்ளி வாய்க்குள்ளே மென்றுகொண்டு அக்கரை யாத்திரைக்கான ஆசையை வளர்த்து இன்றைக்கு வந்திறங்கியது தன் தவறுதான் என்று பட்டது. ஆறு பிறந்தபின்னால், அணை அமைந்தபின்னால், அக்கரை வேறு இக்கரை வேறுதான்.... இல்லாவிட்டால் கரை என்ற கதையே இருந்திருக்காதே..... இருந்துகொள் எனது கரையே.... இன்னும் சில மணித்துளிகள்தான். வந்துவிடுவேன். உள்ளுக்குள்ளே எங்கேயோ இருந்தெழுந்த அந்தக்கரைக்காற்றின் அழுகல்நுகர்ச்சியிலும் ஒரு கணம் இலயித்தான்.
அவன் கிழவியிடம் எடுத்த ஓலைகளைக் கொடுத்துவிட்டு, பணத்தினைச் சரியாக எண்ணி வைக்க, கிழவி எண்ணிக்கொண்டிருக்கும்போதே கேட்டாள், "நீ அக்கரையானா?" ஆத்திரம் வந்தது; ஆனாலும், மூன்றாம் ஆளாக விலகி நின்று பார்த்தால், சாதாரண வினா. காசை எடுத்து எண்ணிமுடிக்கும்வரைக்கும் வெறும் மௌனமே விற்போனுக்கும் வாங்குவோனுக்கும் எஞ்சியிருந்தால், அதன் இறுக்கத்திலும் இது பரவாயில்லைத்தான். இக்கரைக்காரனாக இருந்திருந்தால், 'இன்றைக்கு எரிக்கும் வெயில்; இல்லையா?" என்று அவள் வினாவியிருக்கக்கூடும்.
"ஓமோம்."
நன்றி சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவளிடம் வெளிறோலையாரைப் பற்றிக் கேட்பதா இல்லையா என்று அவன் தனக்குட் தீர்மானித்துக் கொண்டிருந்தபோது, "கேட்கின்றேன் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதே; பெரிய எழுத்தருக்கு நீ ஏதும் உறவுமுறையா?" - கிழவி கேட்டாள். இவனுக்குள் இந்தக்கடைக்குள்ளே புகுந்தது முதற்கொண்ட தன் அனைத்துக்கணத்தின் எண்ணங்களுக்கும் உள்வாங்கல்களுக்கும் மிக மாறுதலான புரிதல்கள் -கணத்திலே பழையனவற்றைத் தகர்த்து- உருவாகின.
"ஓமோம்!!" உற்சாகமாகக் கூவி அவருடனான தன் உறவு முறையினையும் கூறினான்... தொடர்ந்து, வெளிறோலையாரைப் பற்றியும் விசாரித்தான்.
அவரைத் தனது கணவரே என்று சொன்ன கிழவி, தங்களது வகை நறுக்கோலைகளுக்கு தற்போது எவரிடமும் அதிக நாட்டம் இல்லாததினால், வெளிறோலையார் ஏற்றுமதித்தேவையதிகமுள்ள குருத்தோலைப்பாடைக்கடையன்றிலே நாட்கூலிக்கு வேலைக்குப் போவதாகவும் சில வாரங்களிலே இந்தக்கடையையும் முற்றாக மூடியபின், தானும் அந்தப்பக்கம் எங்காவது வேலை செய்யவேண்டும் என்றும் கூறியவள், பெரிய எழுத்தர் தங்களின் அன்பு நண்பரென்றும் அவர் இறப்புக்காகத் தாம் வருந்துவதாகவும் சொல்லி மௌனமாக இருந்தாள்; முகத்திலே அகத்து வேதனை கோடுகளாய் நெளிந்தோடியது. சில கண இடைவேளையின் பின்னர், இறுதிமுறை அவர் நறுக்கோலை கொண்டு அக்கரைச்சந்தைக்கு வந்திருந்தபோது, அணைக்கட்டுப்பாதுக்காப்புச்சட்டத்தின்பேரிலே, திருட்டோலை கொண்டு வந்ததாக சிலநாட்கள் அதிகாரிகள் அவரைக் காவலிலே வைத்திருந்ததாகவும் கூறி வேதனைப்பட்டாள். ஓலைச்செதுக்கலையும் சீர்படுத்துதலையும் தவிர எதையும் புரியாத அந்த மனிதரின் கைகளும் ஓலை ஆய்தலையும் மிதித்தலையும் தவிர வேறெந்த வினைக்கும் பயன்படாத அவரின் கால்களும் தமது இறுதிக்காலத்திலே இவ்வளவு வருத்தத்தினை எதற்குத் தாங்கியிருக்கவேண்டிய நியதி ஏற்பட்டது என்று தனக்குப் புரியவில்லை என்றாள். இவனுக்கோ இந்தச் செய்தி புதிது. பெரிய எழுத்தர் இறக்கும்வரைக்கும் இதைப் பற்றியேதும் குடும்பத்தினருக்குச் சொன்னதில்லை.... சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அக்கரையின் எம் எழுத்தவரின் சிறப்பையும் பதிப்பர்களின் செழுமையினையும் -கூடவே- ஆறும் அணையும் பிரித்தாலும் காற்றும் நிலமும் மனிதர்களும் எப்படி ஒன்றே போலவே அங்கும் இங்கும் இன்னமும் இருக்கின்றார்கள் என்றதையும்தான்.
சின்ன எழுத்தன் நெஞ்சுள்ளே நெரிந்ததும் எரிந்ததும் கிழவிக்கும் புரிந்தது. கிழவி இவன் மறுக்கமறுக்க இவன் தேர்ந்தெடுத்த ஓலைகளுக்குக் கொடுத்த பணத்தினைத் திரும்பக் கொடுத்துவிட்டாள்..... பெரிய எழுத்தரின் பிள்ளையிடம் ஒரு செப்புநாணயமும்கூடத் தானோ வெளிறோலையாரோ பெற்றுக்கொள்ளமுடியாதென்று திட்டமாகச் சொல்லிவிட்டாள்; இவன் தான் கொண்டுவந்த நறுக்கோலைகளிலே தனதும் பெரிய எழுத்தரினதும் அவரது அம்மானினதும் நறுக்குகளை எடுத்து கிழவியின் கையிலே தமது நினைவாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்தான். அக்கரைச்சட்டத்தின் வரையறைக்குள்ளே தன்னுருவக்குறிப்பும் நிலைமையும் எவையென்று எடுத்துச்சொல்லி இறுதிப்படகுக்கு அப்போதே அங்கிருந்து நடக்கவேண்டிய நேரம் ஆகிவிட்டதினால், வெளிறோலையாரை அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாகவும் அவருக்குத் தன் அன்பினையும் எடுத்துரைக்கும்படியும் சொல்லி நகர முயற்சித்தபோது, கிழவி படகுத்துறையிலே அமர்ந்திருக்கும்போதாவது சாப்பிடும்படி கூறி, சிறு உணவுப்பொட்டலம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தாள். வாங்கிக்கொண்டு, இவன் மிக நெகிழ்ச்சியுடன் வெளியே நடந்தான். தான் வாக்குவாதப்பட்ட கடைப்புறம் நகர்கையிலோ அல்லது இன்னமும் பல்லக்குத்தூக்கிகளும் காளைமாடுகளும் சண்டைச்சேவல்களும் மருந்துக்குப்பிகளுடன் தடமிடும் புழுதிப்போர்க்களத்தினைக் கடக்கும்போதோ, அக்கரையின் காற்றிலோ புவியியலமைப்பிலோ பெரும்பாலான நிகழ்வுகளிலுமோ அவனுக்கு விருப்பு இன்னமும் ஏற்படாது காலையிலேயேற்பட்ட அந்நியத்தன்மை முற்றாக விலகாதபோதும், முன்னிருந்த வெறுப்பும் அருவெருப்பும் கணிசமாகக் குறைந்திருந்தன.
படகேறுதுறைக்கு ஓர் அரைமணிநேரம் முன்னராகவே போய்விட்டான்; அக்கரைக்குக் கொண்டுபோகும் பொருட்களினை அதிகாரிகளுக்கு முன்னாலே சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டுமென்ற நியதி. ஆசனத்திலே, வேறு சிற்றதிகாரி இருந்தான். இப்போது, இவன் இந்தக் கரையை நன்றாகவே வாழ்ந்து கற்றுக்கொண்டவன்போல தன் ஓலைப்பொட்டணியைக் கொட்டிய தோரணையைப் பார்த்த அதிகாரி உணவுப்பொட்டலத்தினைக் கிண்டிக்கிண்டித் தேடியபிறகு, மீளக்கட்டி எழுத்தனிடம் எறிந்துவிட்டு, அவனுக்கு உணவு தந்தவரின் பெயரையும் முகவரியினையும்மட்டும் கேட்டுக் கவனமாகக் குறித்து வைத்தபின், படகுக்குப் போகும்படி சொன்னான். படகுத்துறையிலே வந்தமர்ந்து அதிகாரியின் கைக்கோல், பதிவுப்புத்தகம், கூரிய விரல்நகங்கள் என்பனவற்றின் நாட்பட்ட கறை சேர்ந்த உணவைத் தின்பதா கொட்டுவதா என்று எண்ணித் தடுமாறியவன், கிழவியையும் அதன்மூலம் பெரிய எழுத்தரையும் -இடைப்புகுந்த ஆற்றையும் அணையையும் அலட்சியம் பண்ணி மறந்த- நேசத்தையும் அவமதிக்கக்கூடாது என்பது தெளிவுபட்டு உண்ணத்தொடங்கினான். உணவு உட்கொண்டிருக்கும்போது, முன்னிருந்த பாதையிலே, காலையிலே "இரவுக்கு முன்னர் திரும்பிவிடவேண்டும்" என்று கூறிய அதிகாரி, தொழில்சாரா சாதாரண உடையிலே போனான். இவனைக் கண்டு நிற்க எழுத்தனுக்குப் பயம் பிறந்தது; அதிகாரியோ, இவனின் அன்றையப்பொழுது எவ்வாறு கழிந்தது என்று கொஞ்சம் அன்பு செருகிய தொனியிலே விசாரித்தபின், தணிந்த குரலிலே "அடுத்தமுறை வருவதானால், இன்றுபோலவே செவ்வாய்க்கிழமை ஒன்று பார்த்து வா; இறங்குதுறையிலே நான்தான் கடமையிலே இருப்பேன்; இன்றிருந்ததுபோலச் சிக்கலிராது; திங்கள் வெள்ளிக்கிழமைகளிலே அணைக்கட்டுப்பூதங்கள் தாமே வாயிற்காப்போராகக் குந்திக்கொண்டிருக்கும்; உன்னாலே அவற்றின் இம்சை தாங்கக்கூடியதல்ல" என்று சொல்லிவிட்டுப்போனான். சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று உணவை மென்று விழுங்கிக்கொண்டே மேலுக்கும்கீழுக்கும் தலையாட்டினான். அவனுக்கு அந்தச் சிற்றதிகாரியைக் காலையிலே மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டாம் என்றுபட்டது.... அதிகாரிக்கும் தன் தொழிற்பாதுக்காப்புணர்வும் தாங்கி-சாய்த்துச் செல்லக் குடும்பங்களும் இருக்கக்கூடும் என்பதைத் தான் மறந்துவிட்டோமே(¡) என்று வெட்கப்பட்டுக்கொண்டான். இப்போது பாலத்தைப் பற்றி எண்ணமேதும் அவனுக்குள்ளே தோன்றவில்லை. 'ஆறு வேண்டுமானால், என்றைக்காவது திசை மாறி மண்சரிந்த வேறு மட்டம் தாழ்ந்த பூமிசார்ந்து ஓடட்டும், ஓடும், ஓடுமா' என்றெல்லாம் மட்டும் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது.
படகிலே ஏறியபோது, ஓலைச்சந்தை முடிந்து தொகையாக மலிவுவிலையிலும் இலவசமாக அக்கரைக்கு அறிமுகப்படுத்தவும் பெற்றுக்கொண்ட பாடைகளினையும் கூடைகளினையும் கிடுகுகளினையும் ஏற்றிக்கொண்டு இவனின் கரை ஓலைவியாபாரிகளும் அவர்களின் வளர்ப்புமுள்ளம்பன்றிகளும் அணைக்கட்டு அதிகாரிகளின் விஷேட அங்கீகாரத்துடன் எல்லோரினையும் தள்ளிக்கொண்டு முன்னர் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஆற்றுக்கு அந்தத்திசையிலே இங்கிருந்து கொண்டுபோகும் பாடைகளும் கூடைகளும் கிடுகுகளும் வசதியாகப் போவதற்காகவே சின்ன எழுத்தனைப் போன்றவர்கள் இருக்கைகளைக் கொடுத்து விட்டு படகின் ஓரங்களிலே நின்று கொண்டிருக்கும்படி அணைக்கட்டுயியக்கிகள் அறுத்துறுத்துச் சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள். அவற்றினைப் பார்க்க, 'ஊருக்குள் எவ்வளவுதான் அசுரவேகத்திலே உற்பத்தி பண்ணினாலும், குருத்தோலைப்பாடைகளை அக்கரையிலிருந்து இறக்குமதி செய்தாலும்கூட சிலவேளைகளிலே இருக்கும் தேவைக்கு கட்டுப்படியாவதில்லை' என்ற உண்மை அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. ஊருக்குள்ளேயே சகலவிதமான ஓலைக்கலைகளுக்கும் ஆரம்பத்திலே வாழ்க்கைத்தொழில்களுடன் சமரசம் செய்துகொண்டாவது அணைக்கட்டியியக்கிகளினதும் முள்ளம்பன்றி வளர்ப்பாளர்களினதும் அராஜகச்சைகைகளின் நட்டுவத்துக்காகக் காத்திராது நமக்கென ஒரு சந்தையை உருவாக்க முடிந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று தோன்றியது.
படகு நகர, ஏறிய பக்கக்கரையினிலே இருட்டு ஏற்கனவே குமிந்துவிட, இவனது செல்திசைக்கரையினைத் திரும்பிப்பார்த்தபடி உடலைமுறுக்கி-கழுத்துப்பிடிக்காமல் வசதிக்காக நின்றான்; அந்தப்புறம் சூரியன் நிலத்திற்குப் பின்னால் பிளந்துகொண்டு போகின்றது தெரிந்தது. இவனுக்கு ஆற்றுக்காற்று எந்தத்திசையிலிருந்து குளிருடன் வீசுகின்றது என்று சொல்லமுடியவில்லை. கொண்டுவந்ததும் பெற்றுக்கொண்டதுமான துணிக்குள் உறங்கும் தனது ஓலைநறுக்குகளை நெஞ்சோடு இறுக்கி விதிர்க்கும் ஐந்துமாதக்குழவியை அணைப்பதுபோல அழுத்திக்கொண்டான்; பின்னர், சந்தைப்பொருதுகளத்திலே பொறுக்கிய நறுக்குகளைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து, படகின் வெளியே எறிந்து, பதிலுக்கு ஆறு உறுமுகிறதா அல்லது ஓலமிடுகிறதா என்று கூர்ந்து கவனிக்கத்தொடங்கினான் சின்ன எழுத்தன்.
'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.
1. உங்களின் (வலையிலே சிலரின்) உணர்வைத் தூண்டும் & நெருக்கமான இடுகைக்கான செய்திகளைத் தேடியெடுத்து இணைப்பினைக் கொடுப்பது -
உதாரணம் காட்டினால், உதைப்பார்கள் (ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேற்பட்ட எதிரிகளைத் தேடுவதில்லை என்பது என் இம்மாத்தொடக்க உறுதிமொழி)
2. கும்மி அடி தமிழ்நாடு முழுவதும் மொக்கைதனைச் சுற்றிக் கும்மியடி
3. இருக்கவேயிருக்கு..... பழசை அள்ளிப்போடுதல்
மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள். அல்லாரும் பகவத்கீதை படியுங்கோ (நன்றி: சோ)..... அப்படியே....வலைப்பதிவிலே பின்னாலே எங்கிருந்தோ அல்லது சொந்தக்கிட்டங்கியிலிருந்தோ வெட்டி முன்னாலே கிடக்கும் கிடங்கை நிரப்ப மின்துகள் கொட்டுங்கள்.. ஏதோ எம்மாலானது...
கரை
'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.
சமர்ப்பணம்: பாக்கு நீரணைக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும்
எழுத்தனுக்கு கரை கிறுக்கற்கோடுகளாக அலைப்படிமங்களுக்குப் பின்னால் தெரிந்தபோது, அகன்ற ஆற்றின் படகோட்டத்தைப் பற்றிய பயம் கொஞ்சம் மறந்தது. கரையை அடைய இன்னும், -விழுந்தால் நீச்சல் தெரியாத இவன் தாக்குப்பிடிக்கமுடியாதளவு- நேரமும் ஆழமும் இருந்தாலும், கரையைத் தன்னொரு புலனூடாகத் தொடர்பு கொண்டது பயத்தினைப் பின்தள்ளிப் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தியது. விபரமறிந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்ட, கடந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களினூடே அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட அக்கரை. இவனைப் பெற்ற பெரிய எழுத்தரும் அவரைக் காண அடிக்கடி வரும்-போகும் பிற எழுத்தர்களும் பேசிக்கொள்ளும் முற்றத்து வாங்கடியிலே குந்திக்கொண்டு தன் மண்ணோடு மண்ணாக உணர்ந்த கரை. எழுத்தனுக்கு, முழுமண்ணுக்கு விரும்பாதார் யாரோ ஒரு கண்மூடி மண்ணுருட்டிப் புரண்டோடும் நல்லது செய்தறியா ஆற்றை ஊற்றிப் பயிர்செய்துவிட்டுப் போக, பிளந்த நிலத்தின் மறுகரை அது. இன்றைக்கும் பெரிய எழுத்தன் இருந்திருந்தால், இவன் ஓலைகளை விற்பதற்குக் கொண்டு வந்திருக்கப்போவதில்லை. பனையோ தென்னையோ, ஓலை பறித்து ஊறவிட்டு, பதம்பிறக்கப் பிரித்தெடுத்து, தேறியதை நீட்டி வெயிலிலே உலரவிட்டு, கைமுன்னேயுள்ள - எழுத்து, இருப்பு, இறப்பு -தேவைகட்களவாக சுவடிக்கு வெட்டி நறுக்கியோ, கூரைக்கும் கூடைக்கும் பாடைக்கும் இழைத்து முடைந்துமோ, பக்குவப்படுத்தி விற்பதே எழுத்தனின் குடும்பத்தொழில்.
அவன் மண்ணும் மரங்களும் இயற்கையின் வரட்சிமிகைப்படவும் வனவிலங்குகள் மேயவும்முன்னால், அவன் அம்மான் எழுத்தனின் காலத்தில் ஆற்றுக்கு அந்தக்கரையிலும் ஒரு சந்தை - சின்னதாகவேனும் முளைத்து, உயர்ந்து வளராத அடர்ந்த வெப்பவலயமுட்பற்றை போல அனற்புழுதிக்கும் சூரியன் தகிப்புக்கும் இறுமாந்திருந்தது. ஆனால், மேலேயிருந்து அணை திறவுண்ட ஆறு பெருகி முள் மண்முடி மூடிக் கவிழ, மாதமாக மூடிக் கிடந்த புதர் ஆறு வற்ற வேர் அழுகி நாறியது. வெயில் வேருக்கிறங்கிக் காயமுன், கீழிருந்து முள்ளம்பன்றிகளின் இரை தேடுகை. ஒரு குட்டைப்புதர் முள்ளுத் தின்பதிலே முள்ளம்பன்றிகள் சொர்க்கநிலை உணர்ந்திருக்கமுடியாது என்றும் புதரின் குட்டைநாற்றமே பன்றிகளுக்குச் சுவையைத் தந்திருக்கலாம் என்றும் பன்றிகள் அழுகிய பலவீனமான புதர்களைச் சாய்ப்பதினால், தம் வீரத்தினைப் பெண்பன்றிகளுக்குக் காட்ட ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பின் விளைவே அதுவொழிய, பன்றிகள் ஒரு வெட்டவெளித் தனிக்குட்டைப்புதரினை அழிக்கும் நோக்கத்துடன்மட்டும் வந்திருக்கமாட்டா என்றும் பெரிய எழுத்தரும் மீதி எழுத்த அங்கத்தவர்களும் பேசிக்கொண்டதைக் கேட்டிருந்தான். அதன்பின் சிலகாலம் இவனுக்கு முள்ளம்பன்றிகள் என்றில்லை, சாதாரண பன்றிகளையே கண்டால் வெறுப்பு. கல்லெறிதலும் உண்டு. ஊருக்குள் ஒரு சின்ன எழுத்தனாக இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்றார்கள்.... என்ன செய்வது? ஆள் அங்கம் விளையமுன்னர் அடையாளங்கள் விரைந்துகொள்கின்றன. எழுத்தர்கள் கல்லெறிவதில்லை. அவர்கள் முடிந்தால் ஓலைகளைப் பறிக்கவும் பிரிக்கவும் பதப்படுத்தவும் நறுக்கவும் விற்கவும் மட்டுமே வகுக்கப்பட்டவர்கள். எழுத்தர்கள் ஆற்றைப் பிரித்தோருக்கும் அதன்பின் அணை கட்டினோருக்குமன்றி வேறெவருக்கும் பிரித்தோனால் வெளிப்படையாகச் சுட்டிச்சொல்லப்படாத ஐந்தாம் வருணத்தவர். காலாற்கூட உதறுண்டு பிறந்துழற்றுப்பட முடியாமல், உடலுக்கு வேண்டாமற் கழிந்த மலத்திலோ சிறுநீரிலோ முகிழ்த்து முனைவிட்டு முளைத்துவந்தவர்களாய் ஆற்றுக்கப்பால் தள்ளப்பட்டுப்போனவர்கள். அதன் காரணமாகவே, மூர்க்கமும் மூடத்தன்மையும் நிறைந்த முள்ளம்பன்றிகளின் வனங்களுக்கு மேலும் தான் நினைத்தபோதெல்லாம் அணையுடைத்தோடும் ஆற்றுக்குக் கீழும் தம் பனைவிளை பூமியையும் வெப்பமுட்பற்றையையும் கொண்டிருக்கப்படைக்கப்பட்ட சேற்றுத்திணையினர். கிழட்டு எழுத்தர்களின் உட்கார்வாங்குக்கால்களுக்கு மேலாக வளர்ந்த பின்னர்தான், எழுத்தனுக்கு பன்றிகளும் முள்ளம்பன்றிகளும் வேறு வேறு என்று தெரியவந்தது. தேவையின்றி, சாதாரணபன்றிகளையும்கூட முள்ளம்பன்றிகளுக்காக வெறுத்துக்கொண்டிருந்தோமே என்ற துயர் அடங்காமல் ஆறு துடிக்குமோசை கவியும் காலங்களிலே உள்ளே கவியும். ஆனால், இவனின் எண்ணங்களுக்குச் சம்பந்தப்படாமல், எழுத்தர்களின் சந்தையோ எப்போதோ மடிந்துபோன ஒன்று.
அதன் பின்னர் பெரிய எழுத்தரும் மீதிக்கிழட்டு எழுத்தர்களும் ஏன் இவனோடொத்த ஓரிரு பிஞ்சிலே பழுத்த முட்டுக்காய் எழுத்தன்களும் ஆறு தாண்டி, ஓலை விற்க அக்கரைக்குப் போகையிலும் போய் வந்து விற்றகதை சொல்லுகையிலும், இவனுக்கு ஆற்றை இடையிலே ஊற்றி நிலத்தைப் பிரித்தவர்கள் எவரென்று உறுதியாகச் சொல்லமுடியாதுபோனாலும், அதன் சிற்றிடைத்தூரத்தைக் கடந்துபோக பாலம் அமையாத வேதனை வருத்தும். பெரியஎழுத்தரின் பெருந்தன்மையே, அவரின் கடகம் போன்ற தன்னுட் போட்டத்தை பொறுமையாகத் தாங்கித் தேக்குதிறனிலும் கிடுகின் காக்கும் தன்மையும் ஓலை நறுக்குப்போன்ற ஓரிரு சொற்களிலுமே இருந்தது என்று எல்லோரும்போலவே இவனுக்கும் தெரியும். இவன் அவருக்கு எதிர்; எழுத்தர்களின் குடும்பநிரலிலேயே இவன் ஒருவன்தான், கொஞ்சம் காலிடறி பக்கவாட்டிலே போய், தனக்கு முன்னே ஒரு வழிகாட்டி இல்லாமல், சொந்தமாக வேறு தொழில் செய்யத்தொடங்கினான்; வீடு சமைத்தலும் வீதிபோடுதலும்; பெரியஎழுத்தருக்கு அவ்வளவுக்கு அவை பிடித்திருக்கவில்லை.... அவன் தன் பரம்பரையிலே அவரறிந்து இருந்த எவரையும்விட ஒரு நல்ல பக்குவப்பட்ட எழுத்தனாக வரமுடியும் என்று அவர் மற்றவர்களிடமும் மற்றவர்கள் அவரிடமும் புலம்பியும் புகழ்ந்தும் கொண்டிருந்தார்கள். அவன் பதப்படுத்தும் நுட்பத்திலும் தேவைக்கேற்ப நறுக்கியும் இழைத்தும் செதுக்கும்இலாகவத்திலும் கற்றுக்கொள்ள இருப்பினும்கூட, மரத்திலிருந்து தக்க ஓலை தேர்ந்து பறித்தெடுத்து ஊறப்போட்டு, தொழிலுக்கு-உரத்துக்கு என்று பிரித்தெடுக்கும் திறன், அவன் பருவமுற்றலுக்கு மேற்படக் கனிந்ததென அவனிடமும் தாயாரிடமும் புலம்பிக்கொண்டிருந்தார். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்று எண்ணிக்கொண்டான்; அவனுக்கும் ஓலைக்கலை சேற்றிலே ஊறவிட்டுகையிலும் வெயிலிலே காயவிடுகையிலும் தன்னுள்ளும் தானாகவே ஆகி கீச்சுக்கீச்சுமூட்டி வருகின்றதைப் போலத்தான் இருந்தது. ஆனால், அவனுக்குச் சொந்தச்சந்தையினைப் பற்றிய பட்டறிவு இல்லை...... எங்கோ, அந்நிய ஊருக்குச் சுற்றுப்பயணம் போகையிலே, ஊதுகுழலுடன் நினைவுச்சின்னமும் வாங்கிக்கொண்ட ஓரிடம்போலத்தான் இருந்தது, நினைவும் முட்புதர் முள்ளம்பன்றி கிளர்ந்தெறிந்துபோகக் கிடந்த கிழநிலமும். இல்லாத சந்தையிலே, எதிர்ப்படுவோரின் இலக்குக்கேற்ப, பாடையும் கூரையும் அவர்களுக்கன்றி தனக்கில்லாமல் ஒரு சடங்காகச் செய்து வைத்து வயிறு கழுவும் தன்மை ஒவ்வாததது போலத் தெரிந்தது; பாடையிலே குருவித்தோரணக்குஞ்சம் தொங்குவதை எவரும் அனுபவித்துச் சிலாகிக்கப்போவதில்லை; இயற்கைக்கு அதீதமாகத் தேவை பெருகியுள்ளபோது, பாடை ஒரு காவிக்காகவேயழிய, கலைக்காக இல்லை..... அதுவும், பெருவாரிப்பன்றிமுட்களுக்கும் சொல்லாமற்கொள்ளாமல் குறைப்பிரசவித்துத் தள்ளும் ஆற்றுவிலங்குக்கும் பயந்துஅங்குமிங்கும் கண் வைத்து அவதிப்படும் காலச்சந்திலும் களமுடுக்கிலும்.... பாடைகள் கலைக்காகாது. ஆனால், ஒன்றோ இரண்டோ, அபூர்வமாக வீதி போடுகையிலே, வீடு கட்டுகையிலே அவனுக்குத் தன் கையகலத்தினூக உளநுட்பங்களைப் பிரசவிக்க முடிகின்றது...... மேலாக, அவனுக்கு ஒரு கனவு இருந்தது....... அதன் பருப்பம் அவனுக்குத் தெரியாத பொழுதிலும் பருவத்திலும்........ காயமாய்ப் பிளந்த நிலத்தின் கரைகளை -ஒரு பையின் வாயாக இழுத்து தைத்துக் கோக்கும் உறுதிப்பட்ட கயிறாய் - இணைக்கும் ஒரு பாலம் இவனது கலையின் முத்தாய்ப்பாக வேண்டுமென்பது இவனின் ஆற்றாத கனவு. அது ஆற்றை அணைக்கமுடியாதபோதும் அடக்கமுடியக்கூடும். இவ்வாறுதான் இவன் வனைஞனானான். ஆனாலும், மிகுந்த நேரங்களிலே ஓலையைப் பதனிடக் கற்றுக்கொண்டு வந்தான்; குறைந்த பட்சம், பிறர் கற்றுக்கொள்கின்றதைக் கண்டு கொண்டிருந்தான்.....உன்னித்து உள்வாங்குதலே ஒரு கலை என்று உணர்ந்தான். என்னதான் தேவையென்றாலும், இத்தனை வேகமாய்க் குருத்தோலைகள் அவசரத்துக்குத் தறிக்கப்பட்டுப் பாடைக்கு இழுத்து வரப்பட்டால், எதிர்காலத்திலே ஒற்றைப்பொட்டெனச் சிரிக்கக்கூடப் பாளைக்குத் தென்னை மிஞ்சுமா என்று பயம்பிறக்க, கலக்க அவதானிக்கொண்டுதான் இருந்தான். வாங்குவாரின்றித் தொலைந்து போகும் நுட்பமாகிக் கொண்டிருந்தது, குறுவோலை அமை கலை. பேரோலைப்பாடையின் தேவை பெருகும் காலத்திலே, சிற்றோலை தறித்தலும் தகவமைத்தலும் வாய்ப்பற்றுப் போதல் வியப்பாகவில்லை. இறுதியிலே பெரிய எழுத்தர், குடும்பத்தொழிலிருந்து விலகியதற்குப் பிராயச்சித்தமாக இவன் அதை இரு சங்கிலி வளையத்திடையே இருக்கும் கொழுக்கியாகவேனும் கற்றுக்கொள்கின்ற நிம்மதியோடு அற்றுப்போனார்.
அவன் எண்ணத்திலும் பட்டறிவிலும் முதிர்ச்சியடைந்தபோது, பெரிய எழுத்தரைப்போலவே, புலன்களிலே சுருதியைக் கூட்டிக்கொண்டு, பேச்சினைத் தறித்துக்கொண்டான். அவனுக்கு முதிர்ச்சியென்பது தன் இயலாமையின் எல்லைகளை உணர்ந்துகொள்வது என்பது தெளிந்தது. அது தெளிந்தபோது, ஆற்றை மேவிப் பாலம் அமைக்கும் நோக்கு அற்றுப் போனது. முனைப்பு என்பது அந்த இயலாமையின் எல்லைகளை இயலுமானவரை வெளியே தள்ளிவிட்டுக்கொள்ள முயல்வது என்பதும் அடுத்த கட்டமாகத் தோன்றியபோது, குறுவோலைக்கலைக்கு அக்கரையிலே ஒரு சந்தை அமைத்தலினையும் அக்கரையின் புதியநுட்பங்களையும் கற்று கலையினை மேம்படுத்துதலும் தனக்கான முனைப்புகளாகலாம் என்று எண்ணிக்கொண்டான். அதன் விளைவு, இன்றைக்கு தானும் தன் மூதாதையரும் செதுக்கிய ஓலைகளிலேயே சீர்மிகு குறுவோலைப்பொதிகளுடன் இந்த ஆறு கடப்பு. அவன் ஆற்றைக் கடக்கப்போகின்றான் என்ற விடயம் அத்துணை வரவேற்பினையும் உற்சாகத்தினையும் சிறுநீர்த்துளிநிலத்து மீதி எழுத்தர்களிடமோ, ஏன் எழுத்தர்கள் அல்லாத சக வனைஞர்கள், இசைஞர்கள் மத்தியிலோ தரவில்லை. ஓரிரு ஆண்டுகள் முன்னமே சென்றிருந்தால், சந்தை சந்தோசமாக இருந்திருக்கும் என்றவர்களும் கண்ணீர்த்துளிநிலத்துக் குறுவோலைகளிலும்விட பாடைகளுக்கே அங்கே சந்தை அதிகமென்று பாடைகளை இவனுடன் படகேற்றச் சொன்னவர்களும் கூட இவனின் நம்பிக்கையினை மழுங்கடிக்கமுடியவில்லை; ஆனால், இதுபோன்ற கருத்துகளையே சாராமல், கலைஞரே அல்லாத புவியியலாளர்களும் கனிமவியலாளர்களும், "ஒரு காலத்திலே இரு நிலங்களும் ஒன்றாக இருந்தது உண்மையாயினும், ஊடறுத்த ஆற்றின் ஓட்டத்தின் காரணமாகச் சேர்ந்த வண்டற்றன்மையுடனும் காற்றுத்திசை மாறுதல்களாலும், இரு நிலங்களும் ஒரே தன்மையுடைத்ததாக இராது" என்றார்கள்; "அதனால், அக்கரை பற்றிய பட்டறிவும் புவியியலறிவும் துப்பரவாகவேயற்ற அவன் தன் கனவுகளையும் சொந்தக்கருத்துக்கட்டமைப்புகளையும்மட்டுமே நம்பி கலையை அங்கே கொண்டு செல்கின்றது, குறுவோலை பதப்படுத்தும் கலைப் பரிமாற்றத்துக்கும் சந்தைப்படுத்தலுக்குமப்பால், அவன் உடல் நலத்துக்கும் கேடாகலாம்" என்று எச்சரித்தது பயத்தினைத் தந்தது. எந்தளவு ஓலையாக்கிப் பேணும் கலையிலே ஆர்வம் கொண்டவனாக இருந்தபோதும், தன் உடல்நலத்துக்கு ஊறு விளைவித்துக்கொண்டு அதைச் செய்யும் உளத்திடமும் நோக்கும் சின்ன எழுத்தனுக்கு இருக்கவில்லை; அதுமட்டும் இருந்திருந்தால், என்றைக்கோ அவன் கீழ்வனத்திலே முள்ளம்பன்றி வேட்டையாடவும் ஆற்றுக்கப்பால், பனைநிலத்தின் துயரான அதை அடிக்கடி திசைமாற்றி அவதிப்படுத்தும் எதேச்சாதிகார அணைவாயை வெடித்தடித்துடைக்கவும் போயிருப்பான். அவன் திடநெஞ்சில்லாதவன்.....
....... ஆனாலும், பனையோலையிலே குறுவோலை நறுக்கு எழுத்தனாகப் பிறந்துவிட்டவன். அதனால், ஒரு முடிச்சு சீர்மை ஓலைக்குறுக்குகளுடனும் என்றோ தொடர்புவிட்டுப்போன பெரிய எழுத்தரின் சில அக்கரைச்சொந்தங்களின் முகவரிகளுடனும் படகேறினான். கட்டிக்கொடுத்த சோற்று ஆலோசனைகளும் அனுதாபத்துடன்கூட அவனோடேறின.
படகோட்டி இறக்கிப்போனபின், கூட வந்த பயணிகள் எல்லோரும் கலைந்துபோகும்வரைக்கும் நெடுநேரம் தரித்திருந்து இறங்கிய கரை மண்ணை எடுத்து முகர்ந்தான்; கிட்டத்தட்ட அவன் கரையை நுகரின்பம்.... ஆனால், அந்த முள்ளம்பன்றிக்கழிவின் துர்நாற்றமோ மண்ணுட் புதைந்த முள்ளின் 'சுருக்' குத்துதலோ இந்நுகரனுபவத்துள்ளே இல்லை என்று பட்டது. காற்றும் அதுபோலத்தான் வீசியதென்றாலும், கொஞ்சம் கூதற்றன்மை தூக்கலாக இருந்தது போல...... ஆறு பிரிக்கும்போது எதைத்தான் சிறிதாகவேனும் மாற்றிப் பிரிக்காமல் விட்டது - ஆற்றினை அலட்சியப்படுத்தி வானத்திலே குறுக்கும் நெடுக்கும் இக்கரைக்கும் அக்கரைக்கும் தான்தோன்றித்தனமாகப் பறக்கும் சிறுபுட்களைத்தவிர? அவனின் விளிம்பு தளும்பிய உணர்வோட்டம் சூழலுக்குக் கட்டுப்பட்டு மட்டுப்பட்டபின்னர், ஓலை முடிச்சினை ஐந்தாறு மாதக்குழந்தையை தூக்கி ஏந்திக்கொண்டவன்போலப் பக்குவமாக விழாமல் இறுக்கியும் நோகாமற் தளர்த்தியும் வைத்துக்கொண்டு, படகுத்துறை அதிகாரியிடம்போய் சந்தைக்குப் போகும் வழியினைக் கேட்டான். ஏற்கனவே, அவனுக்கு ஓரிருவர் ஊரிலேயே சொல்லியிருந்தாலும், சொல்லப்பட்டது அக்கரையில்; சொல்லியவர்கள்தான் அங்கே இருந்துகொண்டு, "போகத்தான் வேண்டுமா? போய்த்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடித்தால், இப்படிப்போ" என்று பாதை வளிவெளியினைக் கிழித்துக்குறித்தவர்கள்; 'இக்கரை அதிகாரிக்கு இடம் பற்றிய தெளிவு அதிகம் இருக்கும்; என்னவிருந்தாலும், உயிருள்ளதொன்று முன்னுக்கு நின்று சுட்டி வழிகாட்டுவதுபோல வராது என்று நினைத்தான்.
பதிலுக்கு, அதிகாரி ஒரு சந்தேகப்பார்வையை வீசினான், "அக்கரையிலே இருந்து படகிலே வந்தாயா?"
எந்தக்கரை என்றால் என்ன? நேற்றைக்கு வந்த ஆறு நிலத்தைப் பிரிக்கலாம்; காற்றைத் திருப்பலாம்; வேண்டியபோது அணைப்படுத்தலாம்; அதைத் திறக்கலாம்..... ஆனால், சொல்லசைத்திசைக்கும் பண் வேறுபட்டாலும் மொழியிலக்கணத்தை, அடிப்படைச்சொல்லொலியமைப்பை முறிக்கமுடியுமா?
சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று சொன்னபோதிருந்த மகிழ்ச்சி அதிகாரிக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் சரிபாதியாகக் கலந்து நாட்டுமருந்துக்குக் குளிகையாக உருட்டிக் கொடுத்திருக்கவேண்டும்.
"ஏன் வந்தாய்? அணைப்பக்கம் போகிறாயா? மார்போடு வீங்கிய துணிமுடிச்சிலே என்ன?"
அந்த ஆண்டுக்கான ஓலைக்கலைச்சந்தைக்கு வந்ததைக்கூறினான்; முடிச்சுக்குள் ஓலையென்றான்; கேட்காமலே அவிழ்த்துப்போட்டுக்காட்டினான். பெரிய எழுத்தரின், அவரின் முன்னோரின் தேர்ந்தெடுத்துக்கொணர்ந்த ஓலைகளினை எடுத்துக்காட்டி, அவை செய்யப்படும் முறைகளினை விளக்கியதில், அதிகாரிக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை என்பதையும் கூடவே குழப்பத்தினை அதிகரித்தது என்றும் அறிந்துகொள்ளும் கிரகிதிறனும் உளநிலையும் அவனுக்கு இருக்கவில்லை. வாங்குக்கால்களிலே கேட்கப்பட்ட அக்கரை பற்றிய கதைகளிலே, அதிகாரிகளைப் பற்றியே எவரும் பேசாதபோது, அவர்களின் குறுவோலைகள் பற்றிய ஈடுபாட்டினைப் பற்றிப் பேசியிருக்கச் சாத்தியமேயில்லை. அணைப்பக்கம் போவது பற்றிய கேள்வியின் அர்த்தம்மட்டும் இவனுக்குப் புரியவில்லை.
அதிகாரி, ஓலைகளை வாங்கி தாறுக்கும்மாறுக்கும் கொட்டிக்கிண்டி எதைத் தேடினான் என்று இவனுக்கு புரியவில்லை; சிரித்துக்கொண்டிருந்தான். பிறகு, அதிகாரி தனக்குப் பின்னாலிருந்த அறைகளிலே இருந்து இன்னும் சில (மேல்??)அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து ஓலைகளைக் கிண்டித் தேடியபோதும் சிரித்துக்கொண்டிருந்தான். தான் வேறு என்ன செய்யமுடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை; நேராகவே அவர்களிடம் கேட்காமல் போயிருக்கலாமோ என்று ஓரிரு தடவையும் பழம்பனையோலைகள், அலட்சியத்தேடற்றட்டல்களிலே சேதமுற்றுவிடக்கூடாதே என்ற பயம் முழு நேரமும் தொடரவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் முள்ளம்பன்றிகளைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்பு. ஆற்றுத்துறை அதிகாரிக்கு, ஓர் ஓலைத்தறிப்பானுக்குப் புரியாத, புரியத்தேவையில்லாத தொழிற்கடமைகள் நிச்சயமாக உண்டு. பிரிப்பது இடைப்புகுந்த ஓர் இருட்டாறென்றாலும், இக்கரைக்கும் அக்கரைக்கும் துப்பரவற்ற படகுகளிற் கடக்கும் பயணிகள் நோய்க்கிருமிகளை உணவுப்பண்டங்களிலும் கொண்டு சென்று எதிர்க்கரைநிலங்களிலே வயிற்றுப்போக்கினையும் தலைவலியினையும் பரப்பிவிடக்கூடாதே என்ற பாதுகாதுப்பு உணர்வு அத்தியாவசியமானதே. ஆற்றின் இறங்குதுறை அதிகாரி அதனைக் கவனித்துக்கொள்ளாவிட்டால், வேறு எவர்தான் கண்டு கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியும்? இன்னமும் சிரித்துக்கொண்டான்.
பிறகு என்ன நினைத்தார்களோ தெரியாது, வேண்டாக்குப்பையினைக் கட்டுவதுபோல, ஓலைகளை அள்ளித் துணிமூட்டையிலே போட்டுக்கட்டி, சலவைக்கு அழுக்குடைகள் மூலையிலே எறிந்ததுவாய், இவனை நோக்கி எறிய இவன் இலாவகமாகப் பிடித்துக்கொண்டான்; அப்போதும் சிரித்தான்..... பெரிய எழுத்தர், முள்ளம்பன்றிகள் முட்புதர்களைக் கிண்டிக் கெல்லி எறிகையிலே வேறேதும் செய்யத்தோன்றாமல் இப்படித்தான் சிரித்திருப்பாரோ என்று எண்ணிக்கொண்டதாலும் சிரித்தான். சந்தைக்குப் போகும் வழியினை அந்த அதிகாரி இவனுக்குச் சொல்லி, சந்தையிலே அவன் விற்றல்-வாங்கல் வெற்றிகரமாக நடக்கின்றதோ இல்லையோ என்று தனக்குக் கவலையில்லை என்றும் ஆனால், அக்கரைச்சட்டப்பிரகாரம் அவன் அணைக்கட்டுப்புறம் போகக்கூடாதென்றும் அன்று இருட்டமுன்னரே படகுத்துறைக்குத் திரும்பி அவன்புறக்கரைக்குப் படகேறிப் போய்விடவேண்டுமென்றும் சொன்னார். தலையை ஆட்டிக்கொண்டான். "ஓலைச்சந்தை, படகுத்துறை அல்லவே; ஆர்வலர்கள் கூடும் இடம், ஒன்றுமில்லாததற்கெல்லாம் அதிகாரிகள் அராஜகம் பண்ணுமிடமல்ல. ஆற்றுக்குக்குறுக்கே பாலம் கட்டவிரும்பியவன் அந்த ஆற்றை அவதிப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் அணைக்கட்டினைப் பார்க்கவிரும்புவது இயல்பே என்றாலும், இக்கரைச்சட்டம் இடம் கொடுக்காதவிடத்திலே கட்டாயப்படுத்த நானேதும் இந்த நிலத்தவன் இல்லையே! ஆற்றின் உற்பத்தித்தானத்தினையும் அணை கட்டப்பட்ட வரலாற்றினையும் வெவ்வேறு நூல்களிலே படித்தறிந்திருந்தபோதும், சொந்தமாக தன் புலன்களாலேயே உண்மையினை அறிந்து உணர்ந்து கொள்வது சிறப்புத்தான். ஆனாலும் இன்றையச்சட்டம் அதற்கொவ்வாததென்றால், ஒன்றும் செய்வதற்கில்லை." எழுத்தன் தான் வந்த நோக்கு, குறுவோலைச்சந்தையிலே பங்கு கொள்வதுமட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொண்டு நகர்ந்தான்.
இவன் நடந்து தடியாக, விரலளவாகிப் புள்ளியாகி, அதுவும் மறையும்வரை அதிகாரி அவன் அணைப்பக்கம் போகிறானா என்றே அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை எழுத்தன் கவனித்திருக்கமுடியாது. அவரவர்க்கு அவரவர் கவனம். அது கலைந்தபின், அதிகாரி, எழுத்தனுக்காக ஏனோ கவலைப்பட்டுக்கொண்டான்; தான் அவனுடன், அந்தளவு கடுமையாக நடந்துகொண்டிருக்கவேண்டுமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்; அவன் தன் வயிற்றுப்பாட்டுக்கு, போயும்போய் பழைய ஓலைகளை விற்றுத் தின்ன வந்திருக்கின்றான். உள்ளம் நிரம்பச் சங்கடப்பட்டது. என்ன செய்வது? அல்லாதுவிடின், பின்னாலறைகளுக்குள் இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் பெரிய அதிகாரிகள் தன்னைவேறு அணைப்பக்கம் போகின்றானா என்று கவனிக்கத்தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம். சிற்றதிகாரிகளுக்கும் குற்றம்சுமத்தும் கண்காணிப்பு மேலதிகாரிகள் உண்டு. பேரதிகாரிகளுக்கு ஆறடுத்த ஆறாம்திணையார் என்றால் அக்கறையில்லை என்பதிலும்விட, சின்னப்பையன்கள் மழைகாலத்திலே கம்பிளிப்பூச்சிகளைப் பிடித்து ஓடவிட்டு, பின் நசுக்குவதுபோல ஓர் அதீத சித்திரவதைச்சுகமும்கூடத் தரும் ஆத்திரம் உள்ளுக்குள்ளே இருக்கின்றதுண்டு...... இக்கரைக்கு அப்பாலான எவருமே ஆற்றுக்குக் குறுக்கான அணையை உடைந்துவிடுவார்களோ என்ற அச்சம்போலும். அவர்களினையும் தவறு சொல்லமுடியாது.... ஒவ்வொரு கல்கல்லாக எடுத்து அணையைக் கட்டியவர்கள் அவர்களின் முன்னோரென்றால், ஆற்றின் இன்றையத்திசையினை அணைக்கட்டுப்பாட்டால் நிர்ணயிக்கின்றவர்களும் அவர்கள்தான். அவரவர்களின் அச்சங்களை அவர்கள் மட்டுமே நியாயப்படுத்தமுடியும்......... சின்ன ஆற்றுத்துறையதிகாரி பின்னர் தன் கவலைகளிலே மூழ்கிப்போனான்.....
சந்தையின் ஆரவாரிப்பும் புழுதியும் தொலைவிலேயே கேட்கவும் தெரியவும் செய்தன. பொதுவாக, ஓலைச்சந்தைகளிலே காளைமாடுகள் சண்டையிடுதலும் காலிலே கத்திகட்டிக்கொண்ட சேவற்சண்டைகளும் அதன் பின்னணியிலே ஒவ்வொரு பக்கத்துக்கும் கட்சியாகிக்கொண்ட ஓலைவியாபாரிகளின் உற்சாக, வசவு, சோர்வு ஆர்ப்பரிப்புகள் பற்றி வாங்கடிக்காலங்களிலே தெகிட்டத்தெகிட்டவே கேட்டிருக்கின்றான்....... சேவற்குஞ்சத்து ஓலைப்பாடைக்காரர், பாவாடைக்கிடுகார், வெளிறோலையார் போன்ற புனைபெயர்களால், பட்டப்பெயர்களாலே வழங்கப்பட்டவர்களின் கதைகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் மாற்றப்பட்டும் திரிக்கப்பட்டும் இவனுக்கு எது உண்மை எவர் சொன்னது பொய் என்று அறியாமலே இருந்ததுமட்டுமல்ல, அவர்களையெல்லாம் நேராகக் கண்டு உண்மைகளைத் தானே உணர்ந்து, ஒவ்வொருவர் திரிபுகளினையும் அவை எப்படி தமது இறுதிக்கதைநிலைகளை அடைந்தனவென்றும் இனம் கண்டு கொள்ளவேண்டுமென்றும் ஆவலாக இருந்தான்..... ம்ம்ம்ம்ம்.... யுககாலம் முந்தியகதைகள்... எவர் இருக்கின்றாரோ.... இருக்கின்றவர்களும் எப்படியெப்படி மாறியிருக்கின்றார்களோ........ அருகிலே வர வர அவன் உள்ளம் மகிழ்வுடனும் ஏனோ ஒரு பதட்டத்துடனும் கூடி அடித்துக்கொண்டது...... இதுவும் என் நிலம், காற்று இங்கிருந்து பிறந்துதான், ஆற்றைத் தாவியோ அல்லது ஆறு காவியோ என் கரையினையும் அடைகின்றது. நடக்கும் பாதைகளிலே இருந்த மரத்தோலைகளை எல்லாம் உன்னிப்பாகக் கண்டுகொண்டு நடந்தான். மரங்களும் அப்படித்தான் இருக்கின்றன..... என்ன தென்னைகள் கொஞ்சம் குறைவு. இப்போது ஏன் இந்தக்கரையில் இருக்கின்றவர்கள், அந்தக்கரையிலே இருக்கின்றவர்களிடம், பாடைகளை மட்டும் அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் என்று புரிந்ததுபோல இருந்தது. இளம் தென்னோலைகள் அதிகம் பறிக்கப்படக்கூடிய தேவையும் நிலையும் இருக்கும் இடங்களிலேயே குருத்துப்பாடைகள் அமைக்கும் கலை அதிகம் வளரும்...... பனம்குறுவோலைகளிலே சரம் கட்டுவது இங்கே அதிகம் வளர்ந்திருக்கும் என்பதால், தான் கற்றுக்கொள்ள அதிக நுட்பங்களும் விடயங்களும் அகப்படும் என்று எண்ணிக்கொள்ள மகிழ்ச்சியும் முள்ளம்பன்றி புகுந்த காலம்தொடக்கம் பெரிதாக வளர்க்கப்பட வாய்ப்பின்றித் தேங்கிய தனது எழுத்தர் பரம்பரையின் குறுவோலைநுட்பங்கள் இவற்றோடு பார்க்கப்படும்போது தரத்திலே எங்கே இருக்குமோ என்றும் ஐயமும் வெட்கமும் பிறந்தன.
இத்தகைய ஒரு குழப்பமான உளநிலையோடு, ஓலைச்சந்தைக்குள்ளே காலடி வைத்தான். அதன் அமைப்பினைப் பார்க்கும்போது, அது சந்தையா அல்லது ஒரு விளையாட்டுமைதானமா என்று சந்தேகம் அவனுள்ளே பிறந்தது; நடுவிலே கணிசமான நிலத்தினையைடைத்த வட்டத்தளக்களம். அதைச்சுற்றி உயர்ந்துசெல்லும் படலச்சங்கிலிபோல, இருக்கைகளும் ஓலைச்சந்தைக்கூடாரங்களும். களத்தினிலே ஆங்காங்கே கூட்டம்கூட்டமாக நின்று சேவற்சண்டைகளும் காளைகள்பொருதுகைகளும் பார்த்துக்கொண்டு ஆர்ப்பரித்தும் ஆத்திரப்பட்டும் அட்டகாசம் செய்துகொண்டிருந்தவர்களும்கூட, சந்தை எதற்காக என்று தாம் மறந்துவிடக்கூடாதேயென்றோ வேறேதோ காரணத்தினாலோ, ஏதோவொரு ஓலையைக் காதிலோ கையிலோ மூக்கிலோ கழுத்திலோ கௌவிக்கொண்டுலாவினார்கள்; ஒருவருக்கொருவர், மற்றவர்களின் அணியோலைகளைப் பிரமாதப்படுத்திப் பேசினார்கள்; தாமொன்றைக் கொடுத்து கொடுத்தவரிடம் இன்னொன்றினைப் பண்டமாற்றுச் செய்துகொண்ட வேளைகளிலே, சுற்றியிருந்தவர்கள் சேவற்சண்டைகளைக் கணநேரம் நிறுத்தி வைத்துவிட்டு, கைதட்டியதையும், வாங்குகை-விற்பனைக்கணக்கில் எழுதிக்கொண்டார்கள். பிறகு ஆளையாள் கடந்துபோனபின்னர், கணம்முன் வாங்கியதை வேறொருவருக்கு வேறொன்றுக்கு விற்றுக்கொண்டார்கள். முகம் பொருள் பார்க்கவேண்டிய இடத்திலே பார்க்காமலும் பார்க்கவேண்டாத சந்தர்ப்பத்திலே பார்த்தும் பண்டமாற்றுப்பண்ணுதலும் வாங்கியதைப் பக்குவப்படுத்தி வைக்காமல் இன்னொரு பண்டமாற்றுக்குக் கைமாற்றுவதும் பொழுதுபோக்கிற்கு அப்பாலும் தொழிலாகவே விரிந்து நடக்கின்றதைக் கண்டுகொண்டான். இவன் இந்தக்கரைப்பணம் கொஞ்சம் கொண்டு வந்திருந்தான் என்றாலும், இங்கே வெறும் பண்டமாற்றே போதும் என்பதாக வர்த்தகம் நிகழ்வதினைக் கண்டான். புல்லாக்கு அணிந்த சிலரை பெரும் ஓலைப்பல்லாக்குகளிலே வைத்து சிலர் காவிப்போக, முன்னால் "பராக்" கூறியபடி ஓரிருவரும், பக்கத்திலே சாமரைவீசியபடி இருவரும், பின்னால் திருப்புகழ் பாடியபடி சிலரும் போய்க்கொண்டிருந்தார்கள். இத்தகைய பாடைவடிவத்துப்பல்லக்குகள் ஒன்றையன்று குறுக்கிட்டபோது, குறுவோலைகளை ஆளுக்காள் பல்லக்கிருப்பிகள் எறிந்துகொண்டார்கள். மழையே காணாத நிலத்திலே பாதங்களையும் குளம்புகளையும் கூரியநகங்களையும் கீறிக்கீறி சுருதிகூட்டிச் சண்டைகள் நிகழும்போது, புழுதி கிளம்புவது தவிர்க்கமுடியாததே. புழுதி கிளம்ப, செருமலும் இருமலும் கனைப்பும் பின் தொடரும் என்கிறதை இவன் தன் கரையின் வீதிகளிலே பல்லக்குகள் பவனிவரும் வேளைகளிலே கண்டிருக்கின்றான்....... முள்ளம்பன்றிகள் புகமுன்னால்; இப்போது பல்லக்குத்தூக்கிகளும் பல்லக்கிருப்பிகளும் பல்லக்குகளும் பல்லற்றுப்போன காலம். அப்போதெல்லாம் இதேபோலத்தான், வரண்ட தொண்டையிலே, மூச்சுக்குழலிலே மட்புழுதி ஒட்டிக்கொண்டு அடிக்கடி செருமலேற்படுத்தாமல், இருமலுக்கு மருந்து உட்கொள்கின்றது வழக்கம்தான். உட்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவு வெளிப்பாடுகளை, எறிந்துடைந்த மருந்துக்குடுவைகள், குப்பிகளின் உடைந்த கண்ணாடி ஓடுகள் பாதங்களிலே கீறிக்கொள்ளும்போது இவன் உணர்ந்ததுண்டு. பெரிய எழுத்தரிடம்கூட ஒரு பெரிய பல்லக்குக்கும் சில விசுவாசமான பல்லக்குத்தூக்கிகளும் தீவட்டி பிடிக்கின்றவர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் எழுத்தர்பரம்பரையினரல்லாத பதிப்பர், உரைப்பர்குடியினர் என்றாலும்கூட, அவர்களின் சாமரவீசுகை வாங்கடியிலே இருக்கும் இவன் குஞ்சிவிளிம்புக்குக்கூடச் சொட்டி எட்டியதுண்டு....... எல்லாம் பொய்யாய், புழுகாய், இனியில்லாப்பெருநினைவாய்......... போனதையிட்டு இவனுக்கு நிறையவே சந்தோஷம். பதிப்பர்கள் யார், எழுத்தர்கள் யாரென்று சொல்லமுடியாத அளவு பதிப்பர்கள் உரைப்பர்களின் எண்ணங்கள் எழுத்தர்களின் ஓலைக்கலைக்குள்ளே மெல்ல மெல்லத் திணிவாகி வெளிப்பட்டு, ஒரு நிலையிலே முழுதுமே அவர்களின் கருத்துக்களுக்கு வடிவம் தரும் கைகளாகவே எழுத்தர்களின் ஓலைக்கலை ஒய்யாரப்படுத்தும் கதை ஆகிப்போனதுண்டு. எழுத்தர் பரம்பரையுள்ளே பதிப்பர்குடும்பங்கள் பின்னிய பிளவுகளும்கூட இலேசிலே மறக்கப்படக்கூடியவை அல்ல. ஓலைப்பல்லக்குகள் சில சிறப்புத்தினங்களிலே இன்றைக்கும் பதிப்பர்களின் வேண்டுதலுக்காக சில எழுத்தர்குடும்பங்களிலே கட்டப்படுவதுண்டு. ஆனால், இவை எல்லாமே எழுத்தர்கள், புழுதி இருமலுக்காக பதிப்பர்களின் உரைப்பர்களின் செருமல்மருந்துகளை வாங்கி நேரகாலம் தெரியாமல் பருகியதும்மீறிப்போய், பானைபானையாக அருந்தத்தொடங்கியபின்னரேதான்.
அவன் தன்னுள்ளே ஞாபங்களிலே அழுந்திப்போனது விலக்கி வெளியே வந்தபோது, சேவற்சண்டைகளுக்கு சிற்றோலைநறுக்குகளையும் காளைகளின் பொருதுதலுக்கு ஓலைப்பாடைகளையும் கூத்தாடிச்சூதாடிகள் பந்தயம் வைத்துக்கொண்டிருந்ததைக் கண்டான். இன்னும் மனிதக்கைத்தொழிலாகவும் குடும்பத்தொழிலாகவுமே பக்தியோடும் கலைப்பொறுப்புணர்வோடும் தன்னூரிலே தங்கிப்போன குறுவோலைத்தயாரிப்பு, இயந்தியமயமாக்கப்பட்ட நிலையிலே தொகுதிதொகுதியாக ஒரிரு வடிவங்களிலும் நிறங்களிலுமே பந்தயத்துக்காக காளைகள் இழுத்து வந்த வண்டிகளிலே பட்டுத்துணிமுகக்கவசங்களிலேயிருந்து அள்ளி எறிந்து சொரியப்பட்டு, பல்லக்குத்துக்கிகளினதும் சண்டைக்கோழிகளினது கால்களிலேயும் மிதிபட்டுக்கிழிபடுகின்றபோது, சின்ன எழுத்தனுக்கு ஏமாற்றமும் வேதனையும் கூடவே வெகுவாய்ப் பயமும் ஏற்பட்டுக்கொள்ள, தன் பனையோலைநறுக்குகளை, உடல் வியர்வையினையும் மறந்து இறுக்கி நெஞ்சிலே அழுத்திக்கொண்டான். அங்குமிங்கும் பாய்ந்து, தனது தனிப்பட்ட ஆர்வச்சேமிப்புக்காக, ஒவ்வொரு வகை ஓலைத்துணுக்கிலும் ஒவ்வொன்றைப் பொறுக்கி, ஊதித் தூசு தட்டி, தன் சட்டைப்பையினுள்ளே பாதுகாப்பாக வைத்துக்கொண்டான். இங்கே குறுவோலை பறித்து பதப்படுத்தி நறுக்கிப் பிழைப்பது, தன்கரையிலே ஓலைப்பாடைகள் கட்டும் மும்முர பெரும்வணிகர் தொழிலெனப் போய்விட்டதுபோல உணர்ந்தான். அதற்குமேலே அங்கே இருக்கப்பிடிக்கவில்லை. இத்தகைய தடகளச்சமரிகளிடமிருந்து விலகி, மேலே பார்வையாளர் கூடாரங்களிலே, பாடை, கூடை, கூரை, கிடுகு, நறுக்கு பிரிவுகளிலேயும் இத்தகைய சூழ்நிலை நிலவக்கூடுமோ என்ற அச்சவுணர்வோடு அகன்றான்.
பெரியதும் சிறியதுமாக அகன்ற கூடாரங்கள். முழுவதுமே ஆறுதலாகச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் நாளுக்கு எட்டு மணிநேரம் என்று பார்த்தாலும்கூட, மூன்று நாட்கள் தேவைப்படும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால், என்ன செய்வது? மாலைக்கு முன்னர் இறுதிப்படகினைப் பிடித்தேயாகவேண்டிய நிலை. இரவு தங்கிடும்பட்சத்திலே, இந்தவூர்ச்சட்டம் எவரெவர்க்கு என்னவென்னவற்றுக்கு என்னென்ன தண்டனை வைத்திருக்கின்றதோ தெரியாது. சிறிய எழுத்தன், தன் உள்ளத்துக்குத் தவறெனத் தெரியும் சட்டத்துக்கு என்றைக்கும் அஞ்சினவன் இல்லாதபோதும், தண்டனைக்கு அஞ்சினான்; அதற்குமேலாக, எத்தகைய தண்டனையைப் பெற்றுக் கொண்டாலும்கூட, அதற்குப் பெறுதியாக இருந்து முழுதாக அனைத்துப்புலன்களாலும் அனுபவித்து அனுபவங்களைப் பகிர்ந்து போகவேண்டிய சந்தைதானா இது என்ற சந்தேகம் வேறு அவனுக்கு கடந்த ஒரு மணிநேரத்திலே ஏற்பட்டுவிட்டது. கூடவே, ஆங்காங்கு, சில இக்கரை ஓலைப்பாடை வணிகர்கள் தங்களுடன்கூடவே அழுக்கினைச் சிலுப்பும் முள்ளம்பன்றிகளை வளர்ப்புப்பிராணிகளாகக் கொண்டு உலாவியது அதிர்ச்சியினையும் அடுத்தநாளைக்குரிய அவனின் இருப்புக்கான பயப்பிராந்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இறுதிப்படகுக்கு இன்னும் இருப்பது ஏதோ நான்கு மணிநேரங்கள் மட்டுமே. இதற்குள் விழைந்து திட்டமிட்டதிலே சிலவற்றினை விலக்கி, மிகவத்தியாவசியமெனப் பட்டவற்றினை மட்டுமே இந்தமுறைக்குக் கண்டுபோகலாம் என்று எண்ணிக்கொண்டான். அவசர அவசரமாக, எல்லாவற்றினையும் காகப்பார்வை பார்த்துக்கொண்டு எதையுமே செரிக்கச் சுவைக்காமல், வதவதவென்று வாய்க்குள்ளே கொட்டமுன்னரே விழுங்கிக்கொண்டு போகின்றதிலும்விட, இயற்கை இப்போது இருப்பது போலக்கூட பேணுண்டால் நகர்ந்தால், வருங்காலத்திலே ஓரிரு தடவைகள் வந்து மற்றையவற்றினைக் கண்டுகொள்ளலாம் என்று தோன்றியது. அதனால், குறுவோலைப்பிரிவிலே இருக்கக்கூடியவற்றினைக் கண்டுகொண்டு, தன்னுடைய ஓலைகளினைப் பற்றி ஆர்வலர்களுக்கு விளங்குறுத்தி அவர்களின் தம் அறிமுகங்களையும் கருத்துக்களையும் கேள்விகளையும் கேட்டுப் பதிலிறுத்தும் பதிவுசெய்தும் கொண்டபின்னர், பெரிய எழுத்தரின் இக்கரைநண்பர், வெளிறோலையார் (இயற்பெயரோ, பட்டப்பெயரோ அல்ல, தன்தொழிலுக்கேற்ப அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டது) இனைச் சந்தித்துக்கொண்டு, பின்னர் நேரமிருப்பின், அவரின் ஆலோசனைப்படி, வேறு ஓலைத்தொழில்களிலேயிருக்கும் எந்தநுட்பங்களைத் தனது குறுவோலை நறுக்குக்கலைக்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டறிந்து அவற்றினையும் கண்டு தன் குறிப்புகளிலே பதிந்து செல்லலாம் என்று எண்ணிக்கொண்டான். இவற்றுக்கே நேரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும், அந்தநேரத்திலே நேரத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பது, தன்னை இதைவிடவும் உற்சாகம்குன்றியவனாக ஆக்கிவிடும் என்று பயந்தபடி நறுக்குப்பிரிவுக்கு நகர்ந்தான்.
நறுக்குப்பிரிவு அவன் படகேறமுன் எண்ணியதிலும் சிறிதாக இருந்தாலும், அந்தப்பிரிவுக்குள் நுழையமுன்னர் எண்ணிக்கொண்டதிலும்விடப் பெரிதாக இருந்தது உள்ளத்துக்குக் கொஞ்சம் ஊட்டத்தினைத் தந்தது. பங்குதாரர்களிலும் பார்வையாளர்களிலும் பெரும்பான்மையோர் நடுத்தரவயதினைக் கடந்தவர்களாகவும் கடந்துகொண்டிருக்கின்றவர்களாகவுமே இருந்தார்கள். கண்ணாடிப்பேழைகளிலே பழைய குறுவோலைகள் தூசு தட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அங்காடிகளுக்கு முன்னால் வழிப்பாதைகளிலே நின்று பேசிக்கொண்டவர்களின் குரல்களைச் செவிமடுத்துக்கொண்டே கண்களினால் விதவிதமான குறுவோலை நறுக்குகளைக் கண்டுகொண்டு நடப்பது மிகவும் ஆனந்தத்தைத் தந்தது. சில அங்காடிகளின் கண்ணாடிப்பேழைகளின் முன்னே தானும் தனக்கு இருக்கும் கெடுகாலநேரத்தையும் மறந்து பதுமையாக நின்றான். பெரிய எழுத்தர், அடிக்கடி வெவ்வேறு பாணி குறுவோலை செலுக்கலுக்கு உவமானங்களாகச் சொல்லிக் காட்டும் உன்னதமான நறுக்குகள் எனப்பட்டவை எல்லாம் வஞ்சகமின்றி அங்குமிங்கும் 'முதலில் என்னைப் பார், பிறகு வேண்டுமானால், அதனையோ வேறெதனையோ' என்று இருக்கின்ற நிலையிலே அவனின் புத்தி உற்சாகசன்னதமாடிக்கொண்டிருந்தது. பெரும்பாலானவை பார்வைக்குமட்டுமே அரசநூதனசாலைகளிலேயிருந்து கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தூசு தட்டப்பட்டதும் பேணி வைத்திருந்ததும் நிறைவான முறையிலே நிகழ்ந்திருந்ததா என்று சொல்லமுடியாதவளவுக்குத் தம் அகவைக்கும் மீறி பழுப்பேறியும் ஆங்காங்கே பூச்சி அரிப்புண்டும் மூப்புண்டு கிடந்தவை மனதுக்கு வருத்தத்தினைத் தந்ததற்கு, இழந்த சிறிய எழுத்தனின் கரைச் சந்தையும் பேணியும் மூர்க்கமுள்வராகங்கள் கிழித்துக்குதறிய, கண்மூடிக்காட்டாறு அள்ளிக்கொண்டுபோய் அமிழ்த்தியழித்த பல அபூர்வ ஓலைநறுக்குகளின் ஞாபகமும் ஒரு முக்கிய காரணமாகும். அவ்வாறு அழிந்துபோன ஓர் ஓலைநறுக்கினைக் கூட அவன் தொட்டோ, ஏன் கண்ணால் கண்டோ அறியான்தான்; அறிந்ததெல்லாம் பெரிய எழுத்தரின் ஓலைநறுக்குகள் பற்றிய சில ஓவியங்களிலே கண்டதும் கீழிருந்த அவற்றின் செழுமையினைப் பற்றி சிலாகித்துச் சொல்லியிருந்த குறிப்புகளிலே அறிந்துகொண்டதும் மட்டுமேதான். அவற்றின் பாணியிலே, இந்த அபூர்வ பழம்குறுவோலைகளிலே ஏதேனும் அமைந்திருக்கின்றதா என்று தேடிப் பார்த்து தோற்றான். ஓலைக்கலையின் தன்கரைக்கிளை தறிக்கப்பட்டது அவனுக்குப் புரிந்தது. பொதுவாக, அவனது கரையோலைகள் - அவன் கொண்டு வந்தவை உட்பட- செய்கால எல்லைகளுக்கு அப்பாலும்கூட சில கலைப்பண்புகளைத் தமக்கெனத் தனித்துவமாய் இவற்றிலிருந்து வேறாகக் கொண்டிருந்தன....... உதாரணமாக, இந்தக்கரையோலைகளின் இடக்கை விளிம்புகள் செங்கோணத்திலோ அல்லது சீராய்மாறும் வளைவாக அமைந்திருக்கின்றபோது, பெரிய எழுத்தரினது அம்மானின் ஓலைகளோ அல்லது பெரிய எழுத்தரின் நறுக்கு இடப்புறமூலைகளோ, புறாக்கழுத்து வடிவிலே இருந்தன. ஓலைகளைப் ஊறவிடும்-ஒளிபடர்த்திப் பதனிடும்முறையிலும் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுகள் வித்தியாசங்கள் இருக்கக்கூடும் என்பது ஓலைகளின் நிறங்களிலேயும் தொடுவுணர்விலும் தெரிந்தன. இவனது ஓலைகள், உடலம்முழுவதும் சீராக அதிக வெயிலிலே பட்ட ஆழ்பழுப்பாகவும் கரடுமுரடாகவும் ஓரிரு உரசல்களிலேயே விரற்றோலை எரிக்கிறதாக தம்மை உணர்த்தியிருந்தவேளைகளிலே, இந்தக்கரை ஓலைநறுக்குகள் ஓரங்களிலே வெளிறியும் மத்தியிலே மினுங்கட் காவிமஞ்சளும் உடைத்து மிகுமென்மையாக வருடவருட விடாமற் தடவிக்கொண்டே இருக்கவேண்டும்போல ஒரு மோகத்தன்மையினை வளர்த்துக்கொண்டே போயின. இவை மிகவும் கச்சிதமாக கைக்கடங்கி ஒரு சதுரநெறியினை மீறவா வேண்டாமா என்று கேட்டபடி மீறிக்காட்டும் செவ்வகக்கவர்ச்சியாகவிருக்க, அவனது துணுக்குகள் உயரம் குன்றி பக்கவாட்டிலே அகன்று சாய்ந்து சரிவகமாகித் தொங்கின. ஈரப்பதனைக்கூட கொஞ்சம் உள்ளுறுஞ்சி இவன் கொணர்ந்த ஓலைகள் வைத்திருக்கும் என்று இரு கைகளிலும் ஒவ்வொன்றிலும் ஒன்றைத் தூக்கிப் பார்த்து எண்ணிக்கொண்டான். இதிலே எ·து அழகு என்று இவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஒவ்வொன்றும்தான்; எல்லாமும்தான். ஓலைகளின் சாமுத்ரிகாலக்ஷ்ணம் வேறு. பத்தினியுடன் சித்தினியினை ஒத்துப்பார்த்துக்கொள்ளமுடியுமா, அல்லை, வேண்டும்தானா? ஒவ்வொன்றும் தம்மளவிலே தமக்கான சிறப்பியல்புகளைக் கொண்டு கிடைக்கையிலேயே, இதோடு அதனையும் அதோடு இதனையும் மேலானது எது என்ற வினாவினை முன்வைத்து சீர்தூக்கிப்பார்க்கின்றதிலே அர்த்தம் இல்லை என்றே பட்டது. வேலையற்றவர்கள் வேண்டுமானால், ஒவ்வொரு வகைக்குள்ளும் போட்டி வைத்துக்கொள்ளலாம்; மற்றவர்கள், ஒவ்வொரு வகையின் இயல்புகளையும் மற்றதற்குள் அமைவுச்சுருதியிலே அபம் விளைவிக்காது பொருந்தக்கலந்து புதிய கலப்பின ஓலைநறுக்குகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்; கிளைகள் சடைத்து விருட்சம் வளரவேண்டுமேயழிய, ஒரே விருட்சத்தின் கிளைகளுள்ளே எ·து அழகிலே சிறந்தகிளை என்று கூட்டற்கழித்தற்கணக்குகள் பார்க்கின்றது அர்த்தமற்ற பின்னோக்கிய நகர்வு. சிலம்புகளைச் செய்த ஆசாரியை எடைபோடுவதற்காகமட்டும், உடைத்து மாணிக்கமா முத்தா என்று இனியும் பார்த்துக்கொள்ளக்கூடாது என்று எண்ணிக்கொண்டான்.
இத்தனைக்குப் பின்னர் ஒரு பெரியகடையிலே, விழிகளிலே ஒட்டிக்கொண்டு விலகமறுத்த சில நறுக்குகளைத் தனது நினைவுப்பதிவுகளாக ஆக்கிக்கொள்ளும் நோக்குடன் சித்திரப்படுத்த முயல்கின்றவேளையிலே, கடை உரிமையாளர்தோரணையிலே நடமாடிக்கொண்டிருந்தவர் வந்து, அதற்கு அனுமதி இல்லாததைச் சொல்லி வருத்தம் தெரிவித்தார். விருப்பமானால், ஏற்கனவே அவற்றினைப் பதிவு செய்த ஓவியங்களை அவனுக்குத் தாம் விற்கமுடியும் என்று கூறியபோது, அவன் தன்னை அறிமுகப்படுத்தி தான் வந்த நோக்கினைச் சொன்னான். அக்கரையிலேயிருந்து வந்தவன் என்று சொல்லியபோது, கடைக்காரர் நெளிந்தார்; சுற்றுமுற்றும் இருந்தவர்களிலே பலர் தமது பார்வைகளை ஓலைகளிலே இருந்து விலக்கி இவனை ஊருடுவ நோக்கிச் செலுத்திவிட்டு, ஓலைகளுக்கு மீண்டனர். தனக்கான மரியாதை தனது சொந்தமுயற்சிக்கான விளைவின் அளவுமட்டமாகமட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றவன் ஆதலினால், தான் பெரிய எழுத்தரின் புதல்வன் என்பதினைச் சொல்லிப் பரிச்சயம் தேட விரும்பவில்லை. அக்கரைக்காரர்கள் பொதுவாக, 'தென்னோலைப்பாடைகள் பிரிவுக்குத்தானே சந்தையில் அதிகம் வந்துபோவதுண்டு!?" என்று இருகுறிகள் இறுதியிலே ஒருங்கித்தொனிக்கக் கேட்டபோது, சின்ன எழுத்தன், அவர்கூறியதுபோலவே தன் அண்ணனின் ஈடுபாடும் வாழ்க்கைக்கான தொழிலும் அதுதான் என்றும் ஆனால், அவன்கூட பாடையின் கலைநயத்திலும்விட தாங்குதிறனுக்கும் ஓலைத்திறனிலும்விட விற்பனைத்தேவைக்கும் விலைக்குமே அதிக ஈடுபாடு கொடுக்கின்றதுண்டு என்று கூறினான். பிறகு, தணிந்த குரலிலே தான் தொழில்ரீதியிலே வீதிபோடுகின்றவன் என்றும் நேற்றைக்கும் நாளைக்குமான சங்கிலிக்கொழுக்கியாகித் தான்போன உள்ளத்திருப்திக்குமாகவே குறுவோலைக்கலையிலே ஈடுபாடு உள்ளது என்று சொல்லி, நெஞ்சோடு ஒத்துப்பார்க்கத் திறந்திருந்த தன் பொட்டணியினை மேசைமேல் விரித்து வைத்தான்.
கடைக்காரர் விஷயகாரர் என்று கண்களின் விஷமம் சொன்னது; நறுக்குகளின் பெறுமதி பளிச்சிட்ட அவரின் கண்மணிகள் சுருங்கமுன்னர், காளைச்சண்டைக்களத்தினிலே கண்ட பண்டமாற்று உத்தி அங்கும் செல்லுபடியாகும் என்று எண்ணிக்கொண்டதனால், அவற்றிலே சிலவற்றினை அவரிடம் கொடுத்து, தான் ஓரிரு ஓவியங்களை வாங்க வாய்ப்புண்டா என்று கேட்டான். "சாத்தியப்படும்" என்ற கடைக்காரர் அடுத்து, "பேரம் பேசமுன்னர், அவை திருட்டோலைகள் இல்லை என்பதற்கு அத்தாட்சி ஏதுமுள்ளதா?" எனக் கேட்டார். எழுத்தன் எல்லா ஓலைகளின் வலதுகீழ்மூலையிலே இருக்கும் 'உ' குறியினைக் காட்டி, எழுத்தர் பாரம்பரிய ஓலைக்கலைஞர்கள்மட்டுமே அவ்வண்ணம் இடுவார்கள் என்று கூறினான். கொஞ்ச நேரம் அதனை நம்பமறுக்கின்றவர்போல, தாமதம் செய்த கடைக்காரர், பேரத்திலே தன் கையோங்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, கலைப்படைப்பு-தரம்-பொய்மை-திருட்டு-நீதி என்பன பற்றி சிறிது அச்சுறுத்தற் சொற்பொழிவின்பின், எழுத்தனின் ஓலைகளை எடுத்து 'நிறுத்தலளவிலோ நீட்டலளவிலோ' பெறுதியளக்க வேண்டும் என்று கேட்டார். இவன் அவர் விரும்பியதைச் செய்யும்படி சொல்ல, அவர் தன் தராசிலே சின்ன எழுத்தனின் சில நறுக்குகளை எடுத்துப்போட்டார். தராசின் மறுபக்கம் சித்திரங்களை வைக்கப்போனவரை எழுத்தன் தடுத்தான். எல்லோருக்கும் பொதுவான நிறைப்படிகளையே வைத்து நிறுத்துக்கொள்வது இந்தவிடத்துக்குப் புதிய தனக்கு வியாபாரத்திலே நம்பிக்கையைத் தரும் என்றான். கடைக்காரருக்குக் கோபம் வந்தது. "செய்கின்றது பண்டமாற்றேயழிய பணம் ஊடோடும் வர்த்தகமல்ல, அதனால், இரு பண்டமாற்றுப்பொருட்களையும் பக்கம்பக்கமாக வைத்துக்கொள்கின்றதே போதுமானதும் நேரச்சிக்கனத்துக்குரியதும்" என்று அதட்டலாகச் சொன்னார். எழுத்தனுக்கு அரசு இலச்சனைகள் பொறிக்கப்பட்ட நிறைப்படிகள் மட்டுமே தராசின் நேர்மையினையும் சுட்டக்கூடும் என்று பட்டது. இறுதியாக சில நிமிடப்நேரப்பிணக்கின் பின், வேண்டாவெறுப்பாக நிறைப்படிகள் ஒருபுறமும் இவனின் நறுக்குகள் மறுபுறமும் இடப்பட்டுச் சமானம் பார்க்கப்பட்டபோது, எழுத்தனுக்கு தராசின் நேர்மையினைப் பற்றிமட்டுமல்ல, அரச இலச்சனைப்படிகளுமே திட்டமிட்டுப் பொய் சொல்லக்கூடுமோ என்று எண்ணம் வந்தது. அவனது கரையிலே எட்டு ஓலைகளைக் கேட்ட நிறைப்படியிற்குச் சமானமாக வேண்டிய இந்தக்கரை நிறைப்படி பத்து ஓலைகளைத் தட்டிலே பெய்யெனக் கேட்டது. இவன் அதனை வெளியே வாய்விட்டே சொன்னான். கடைக்காரருக்கு அதீதகோபம் வந்துவிட்டது. 'தன் நிலத்திலேயே வந்து தன்னைப் பொய்யன் என்று அழைக்கும் அசாத்தியதுணிவுள்ள அக்கரைக்காரன்' என்று கத்தத்தொடங்கியது மட்டுமல்லாது, தனது தராசின், அதன்படியின் நீதியை நிரூபிக்க வேண்டி, 'ஆறு பிரிப்பதினால், புவியீர்ப்பு எவ்வாறு நிலங்களுக்கிடையே மாற்றமடைகின்றது என்பதை அவன் கணக்கிலே கொள்ளவில்லை' என்றும் குற்றம்சாட்டினார். எழுத்தன் பதிலுக்கு, பூமியிலே கிட்டத்தட்டச் சமானமான உயரத்திலேயிருக்கும் எந்த நிலத்திலும் இரண்டு ஓலையைப் பெயர்க்கும்வண்ணம் நிறைக்கல்லிலே புவியீர்ப்பு மாறாது என்று அழுத்திச் சொன்னான். இறுதியாக, கடைக்காரர் 'உன்னைப் போன்றவர்களுக்கு நான் விற்கமாட்டேன்" என்று இழுக்காத குறையாக கடைக்கு வெளியே கொண்டு வந்து தள்ளிவிட்டுப்போனார்; கடையிலே ஓலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனுக்கு நடப்பதையும் பேசாமற் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதற்குப்பிறகும் கடைக்காரரிடம் பேரம் பேசாமல் சொன்னவிலைக்கு ஓலைகளை வாங்கிக்கொண்டும் போனார்கள். அவமானவுணர்வோடு இவனுக்குக் கண்கலங்கிவிட்டது. அழுத்தத்திலேயிருந்து கொஞ்சம் இளகி வருவதற்காக, கொஞ்சம் தள்ளி நடந்து தனிமையிலே நின்று தன்னை ஆசுவாசப்படுதியபின்னர், தன்னைக் கடந்து வழியிலேபோன ஒருவரிடம் பெரிய எழுத்தரின் நண்பர் வெளிறோலையாரின் முகவரியினைக் காட்டி, அதற்குச் செல்லும் வழியினைக் கேட்டான்.
அவர் இவனை ஆதரவோடு அழைத்துக்கொண்டுபோய் ஒரு சிறிய கடையினைச் சுட்டிக்காட்டி விட்டுப்போக, இவன் நன்றி கூறிவிட்டு உள்ளே நுழைந்தான். ஒரு வயதான பெண்மணி மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அது மூடப்படும் நிலையிலே இருந்த கடை என்று தெரிந்தது. நறுக்குகள் அரைவிலையிலும் சிலவற்றினை வாங்கியதற்கு வேறுசில இலவசமாகவும் கொடுக்கப்படும் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நறுக்கோலைகள் மீதிக்கடைகளிலே காணப்பட்டதற்கு மாறாக இவனுக்கு பல காலமாக மிகவும் பரிச்சயப்பட்டனபோலவும் தோன்றின. இவனுக்கு முன்னைய பண்டமாற்றுப்பேரம் விளைவித்த வெறுப்புத்தனத்தின் பின்னால், உள்ள பணத்திலே படகுக்கூலிக்குத் தவிர்ந்த மீதிக்கு - பசியினை இரவு வீட்டுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம் என்று பட்டதால்- தேர்ந்தெடுத்து குறுவோலைகளை இங்கேயே வாங்கிப் போனால், வந்ததற்கு வருத்தப்படமாட்டோம் என்று பட்டது. இவ்விடத்தில் எக்காரணம்கொண்டும் பேரம் பேசுவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டான்; சொன்னவிலைக்கு வாங்கிக்கொண்டு வெளிறோலையாரைப் பற்றி விசாரிக்கலாம் என்று பட்டது. கட்டிக்கொண்டு வந்த தனது ஓலைகளை அடாத விலைக்கு இங்கே எந்த ஏமாற்றுக்காரனுக்கும் விளக்கவோ விற்கவோபோவதில்லை என்ற உறுதி முன்னைய கடையிலே இருந்து வெளியே வருகின்றபோதே உள்ளுக்குட் தீர்மானித்த விடயமாகி விட்டது. இவர்களுக்கு நறுக்கோலைகளை விற்கின்றதும் அக்கரையிலே சாமரைப்பதிப்பர்பரம்பரைக்கு விற்கின்றதற்கும் ஏதும் வித்தியாசமில்லை. நாய் விற்ற காசையும் குரைக்கச்சொல்லிக்கேட்கும் ஒத்தகூட்டங்களேதான் மொத்தத்திலே இரண்டும். வேறு சுருதியிலே பேசிக் கெடுக்காமல், சிறியதொரு சிரிப்பினைமட்டுமே கிழவிக்குச் சிந்திவிட்டு, குறிப்பிடப்பட்டிருந்த விலைகளையும் தன் கையிருப்பினையும் கணக்குப் பார்த்துப்பார்த்து தெரிந்தும் விலக்கியும் சேர்த்துக்கொண்டான். கிழவி உற்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள்; இவன் நிமிர்ந்துபார்க்கும் நேரங்களிலே ஒரு சிறிய சிரிப்பினை உதிர்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்வாள்; சரி, அந்நியன் என்றுதான் என் முகத்திலே கரியாற் குறிப்பெழுதி ஒட்டிக்கொண்டிருக்கின்றேன், கோலால் பகற்றிருடன் என்றுகூடவா நெற்றியிலே சூடு போட்டிருக்கின்றேன்!! எட்டாண்டு காலமாக இந்த யாத்திரைக்கென்று சிறுகச்சிறுக இப்படி பணத்தினைச் சேர்த்துவந்து இங்கே திருடன் என்ற பார்வையினையும் அநியாயத்திட்டினையும் வாங்கிக்கொண்டு கொட்டிவிட்டுப்போகவேண்டுமா என்ன என்று ஆத்திரம் தன்மீதே சின்ன எழுத்தனுக்குப் பீறிட்டது.
சேர்த்துக்கொண்ட குறுவோலைகளை எடுத்து கிழவியிடம் பணத்தினைக் கொடுக்க நகர்ந்தபோது, அவளுக்குப் பின்னால், சூரியன் ஆற்றுக்குப் பின்னால், இவனது கரையினை நோக்கிச் சாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. 'என்னவாயிற்று இந்த நிலத்துக்கு!' என்று எழுத்தனுக்குள் சோர்வுடன் நொந்தது. பெரிய எழுத்தரும் மற்றவர்களும், "எமது கரை எமது அக்கரை" என்று பேதமில்லாமலே சக்கரைக்கட்டிகள் சலித்துக்கொட்ட, வாங்கினடியிலிருந்து சிந்திக்காமலே அள்ளியள்ளி வாய்க்குள்ளே மென்றுகொண்டு அக்கரை யாத்திரைக்கான ஆசையை வளர்த்து இன்றைக்கு வந்திறங்கியது தன் தவறுதான் என்று பட்டது. ஆறு பிறந்தபின்னால், அணை அமைந்தபின்னால், அக்கரை வேறு இக்கரை வேறுதான்.... இல்லாவிட்டால் கரை என்ற கதையே இருந்திருக்காதே..... இருந்துகொள் எனது கரையே.... இன்னும் சில மணித்துளிகள்தான். வந்துவிடுவேன். உள்ளுக்குள்ளே எங்கேயோ இருந்தெழுந்த அந்தக்கரைக்காற்றின் அழுகல்நுகர்ச்சியிலும் ஒரு கணம் இலயித்தான்.
அவன் கிழவியிடம் எடுத்த ஓலைகளைக் கொடுத்துவிட்டு, பணத்தினைச் சரியாக எண்ணி வைக்க, கிழவி எண்ணிக்கொண்டிருக்கும்போதே கேட்டாள், "நீ அக்கரையானா?" ஆத்திரம் வந்தது; ஆனாலும், மூன்றாம் ஆளாக விலகி நின்று பார்த்தால், சாதாரண வினா. காசை எடுத்து எண்ணிமுடிக்கும்வரைக்கும் வெறும் மௌனமே விற்போனுக்கும் வாங்குவோனுக்கும் எஞ்சியிருந்தால், அதன் இறுக்கத்திலும் இது பரவாயில்லைத்தான். இக்கரைக்காரனாக இருந்திருந்தால், 'இன்றைக்கு எரிக்கும் வெயில்; இல்லையா?" என்று அவள் வினாவியிருக்கக்கூடும்.
"ஓமோம்."
நன்றி சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவளிடம் வெளிறோலையாரைப் பற்றிக் கேட்பதா இல்லையா என்று அவன் தனக்குட் தீர்மானித்துக் கொண்டிருந்தபோது, "கேட்கின்றேன் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதே; பெரிய எழுத்தருக்கு நீ ஏதும் உறவுமுறையா?" - கிழவி கேட்டாள். இவனுக்குள் இந்தக்கடைக்குள்ளே புகுந்தது முதற்கொண்ட தன் அனைத்துக்கணத்தின் எண்ணங்களுக்கும் உள்வாங்கல்களுக்கும் மிக மாறுதலான புரிதல்கள் -கணத்திலே பழையனவற்றைத் தகர்த்து- உருவாகின.
"ஓமோம்!!" உற்சாகமாகக் கூவி அவருடனான தன் உறவு முறையினையும் கூறினான்... தொடர்ந்து, வெளிறோலையாரைப் பற்றியும் விசாரித்தான்.
அவரைத் தனது கணவரே என்று சொன்ன கிழவி, தங்களது வகை நறுக்கோலைகளுக்கு தற்போது எவரிடமும் அதிக நாட்டம் இல்லாததினால், வெளிறோலையார் ஏற்றுமதித்தேவையதிகமுள்ள குருத்தோலைப்பாடைக்கடையன்றிலே நாட்கூலிக்கு வேலைக்குப் போவதாகவும் சில வாரங்களிலே இந்தக்கடையையும் முற்றாக மூடியபின், தானும் அந்தப்பக்கம் எங்காவது வேலை செய்யவேண்டும் என்றும் கூறியவள், பெரிய எழுத்தர் தங்களின் அன்பு நண்பரென்றும் அவர் இறப்புக்காகத் தாம் வருந்துவதாகவும் சொல்லி மௌனமாக இருந்தாள்; முகத்திலே அகத்து வேதனை கோடுகளாய் நெளிந்தோடியது. சில கண இடைவேளையின் பின்னர், இறுதிமுறை அவர் நறுக்கோலை கொண்டு அக்கரைச்சந்தைக்கு வந்திருந்தபோது, அணைக்கட்டுப்பாதுக்காப்புச்சட்டத்தின்பேரிலே, திருட்டோலை கொண்டு வந்ததாக சிலநாட்கள் அதிகாரிகள் அவரைக் காவலிலே வைத்திருந்ததாகவும் கூறி வேதனைப்பட்டாள். ஓலைச்செதுக்கலையும் சீர்படுத்துதலையும் தவிர எதையும் புரியாத அந்த மனிதரின் கைகளும் ஓலை ஆய்தலையும் மிதித்தலையும் தவிர வேறெந்த வினைக்கும் பயன்படாத அவரின் கால்களும் தமது இறுதிக்காலத்திலே இவ்வளவு வருத்தத்தினை எதற்குத் தாங்கியிருக்கவேண்டிய நியதி ஏற்பட்டது என்று தனக்குப் புரியவில்லை என்றாள். இவனுக்கோ இந்தச் செய்தி புதிது. பெரிய எழுத்தர் இறக்கும்வரைக்கும் இதைப் பற்றியேதும் குடும்பத்தினருக்குச் சொன்னதில்லை.... சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அக்கரையின் எம் எழுத்தவரின் சிறப்பையும் பதிப்பர்களின் செழுமையினையும் -கூடவே- ஆறும் அணையும் பிரித்தாலும் காற்றும் நிலமும் மனிதர்களும் எப்படி ஒன்றே போலவே அங்கும் இங்கும் இன்னமும் இருக்கின்றார்கள் என்றதையும்தான்.
சின்ன எழுத்தன் நெஞ்சுள்ளே நெரிந்ததும் எரிந்ததும் கிழவிக்கும் புரிந்தது. கிழவி இவன் மறுக்கமறுக்க இவன் தேர்ந்தெடுத்த ஓலைகளுக்குக் கொடுத்த பணத்தினைத் திரும்பக் கொடுத்துவிட்டாள்..... பெரிய எழுத்தரின் பிள்ளையிடம் ஒரு செப்புநாணயமும்கூடத் தானோ வெளிறோலையாரோ பெற்றுக்கொள்ளமுடியாதென்று திட்டமாகச் சொல்லிவிட்டாள்; இவன் தான் கொண்டுவந்த நறுக்கோலைகளிலே தனதும் பெரிய எழுத்தரினதும் அவரது அம்மானினதும் நறுக்குகளை எடுத்து கிழவியின் கையிலே தமது நினைவாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்தான். அக்கரைச்சட்டத்தின் வரையறைக்குள்ளே தன்னுருவக்குறிப்பும் நிலைமையும் எவையென்று எடுத்துச்சொல்லி இறுதிப்படகுக்கு அப்போதே அங்கிருந்து நடக்கவேண்டிய நேரம் ஆகிவிட்டதினால், வெளிறோலையாரை அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாகவும் அவருக்குத் தன் அன்பினையும் எடுத்துரைக்கும்படியும் சொல்லி நகர முயற்சித்தபோது, கிழவி படகுத்துறையிலே அமர்ந்திருக்கும்போதாவது சாப்பிடும்படி கூறி, சிறு உணவுப்பொட்டலம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தாள். வாங்கிக்கொண்டு, இவன் மிக நெகிழ்ச்சியுடன் வெளியே நடந்தான். தான் வாக்குவாதப்பட்ட கடைப்புறம் நகர்கையிலோ அல்லது இன்னமும் பல்லக்குத்தூக்கிகளும் காளைமாடுகளும் சண்டைச்சேவல்களும் மருந்துக்குப்பிகளுடன் தடமிடும் புழுதிப்போர்க்களத்தினைக் கடக்கும்போதோ, அக்கரையின் காற்றிலோ புவியியலமைப்பிலோ பெரும்பாலான நிகழ்வுகளிலுமோ அவனுக்கு விருப்பு இன்னமும் ஏற்படாது காலையிலேயேற்பட்ட அந்நியத்தன்மை முற்றாக விலகாதபோதும், முன்னிருந்த வெறுப்பும் அருவெருப்பும் கணிசமாகக் குறைந்திருந்தன.
படகேறுதுறைக்கு ஓர் அரைமணிநேரம் முன்னராகவே போய்விட்டான்; அக்கரைக்குக் கொண்டுபோகும் பொருட்களினை அதிகாரிகளுக்கு முன்னாலே சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டுமென்ற நியதி. ஆசனத்திலே, வேறு சிற்றதிகாரி இருந்தான். இப்போது, இவன் இந்தக் கரையை நன்றாகவே வாழ்ந்து கற்றுக்கொண்டவன்போல தன் ஓலைப்பொட்டணியைக் கொட்டிய தோரணையைப் பார்த்த அதிகாரி உணவுப்பொட்டலத்தினைக் கிண்டிக்கிண்டித் தேடியபிறகு, மீளக்கட்டி எழுத்தனிடம் எறிந்துவிட்டு, அவனுக்கு உணவு தந்தவரின் பெயரையும் முகவரியினையும்மட்டும் கேட்டுக் கவனமாகக் குறித்து வைத்தபின், படகுக்குப் போகும்படி சொன்னான். படகுத்துறையிலே வந்தமர்ந்து அதிகாரியின் கைக்கோல், பதிவுப்புத்தகம், கூரிய விரல்நகங்கள் என்பனவற்றின் நாட்பட்ட கறை சேர்ந்த உணவைத் தின்பதா கொட்டுவதா என்று எண்ணித் தடுமாறியவன், கிழவியையும் அதன்மூலம் பெரிய எழுத்தரையும் -இடைப்புகுந்த ஆற்றையும் அணையையும் அலட்சியம் பண்ணி மறந்த- நேசத்தையும் அவமதிக்கக்கூடாது என்பது தெளிவுபட்டு உண்ணத்தொடங்கினான். உணவு உட்கொண்டிருக்கும்போது, முன்னிருந்த பாதையிலே, காலையிலே "இரவுக்கு முன்னர் திரும்பிவிடவேண்டும்" என்று கூறிய அதிகாரி, தொழில்சாரா சாதாரண உடையிலே போனான். இவனைக் கண்டு நிற்க எழுத்தனுக்குப் பயம் பிறந்தது; அதிகாரியோ, இவனின் அன்றையப்பொழுது எவ்வாறு கழிந்தது என்று கொஞ்சம் அன்பு செருகிய தொனியிலே விசாரித்தபின், தணிந்த குரலிலே "அடுத்தமுறை வருவதானால், இன்றுபோலவே செவ்வாய்க்கிழமை ஒன்று பார்த்து வா; இறங்குதுறையிலே நான்தான் கடமையிலே இருப்பேன்; இன்றிருந்ததுபோலச் சிக்கலிராது; திங்கள் வெள்ளிக்கிழமைகளிலே அணைக்கட்டுப்பூதங்கள் தாமே வாயிற்காப்போராகக் குந்திக்கொண்டிருக்கும்; உன்னாலே அவற்றின் இம்சை தாங்கக்கூடியதல்ல" என்று சொல்லிவிட்டுப்போனான். சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று உணவை மென்று விழுங்கிக்கொண்டே மேலுக்கும்கீழுக்கும் தலையாட்டினான். அவனுக்கு அந்தச் சிற்றதிகாரியைக் காலையிலே மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டாம் என்றுபட்டது.... அதிகாரிக்கும் தன் தொழிற்பாதுக்காப்புணர்வும் தாங்கி-சாய்த்துச் செல்லக் குடும்பங்களும் இருக்கக்கூடும் என்பதைத் தான் மறந்துவிட்டோமே(¡) என்று வெட்கப்பட்டுக்கொண்டான். இப்போது பாலத்தைப் பற்றி எண்ணமேதும் அவனுக்குள்ளே தோன்றவில்லை. 'ஆறு வேண்டுமானால், என்றைக்காவது திசை மாறி மண்சரிந்த வேறு மட்டம் தாழ்ந்த பூமிசார்ந்து ஓடட்டும், ஓடும், ஓடுமா' என்றெல்லாம் மட்டும் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது.
படகிலே ஏறியபோது, ஓலைச்சந்தை முடிந்து தொகையாக மலிவுவிலையிலும் இலவசமாக அக்கரைக்கு அறிமுகப்படுத்தவும் பெற்றுக்கொண்ட பாடைகளினையும் கூடைகளினையும் கிடுகுகளினையும் ஏற்றிக்கொண்டு இவனின் கரை ஓலைவியாபாரிகளும் அவர்களின் வளர்ப்புமுள்ளம்பன்றிகளும் அணைக்கட்டு அதிகாரிகளின் விஷேட அங்கீகாரத்துடன் எல்லோரினையும் தள்ளிக்கொண்டு முன்னர் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஆற்றுக்கு அந்தத்திசையிலே இங்கிருந்து கொண்டுபோகும் பாடைகளும் கூடைகளும் கிடுகுகளும் வசதியாகப் போவதற்காகவே சின்ன எழுத்தனைப் போன்றவர்கள் இருக்கைகளைக் கொடுத்து விட்டு படகின் ஓரங்களிலே நின்று கொண்டிருக்கும்படி அணைக்கட்டுயியக்கிகள் அறுத்துறுத்துச் சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள். அவற்றினைப் பார்க்க, 'ஊருக்குள் எவ்வளவுதான் அசுரவேகத்திலே உற்பத்தி பண்ணினாலும், குருத்தோலைப்பாடைகளை அக்கரையிலிருந்து இறக்குமதி செய்தாலும்கூட சிலவேளைகளிலே இருக்கும் தேவைக்கு கட்டுப்படியாவதில்லை' என்ற உண்மை அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. ஊருக்குள்ளேயே சகலவிதமான ஓலைக்கலைகளுக்கும் ஆரம்பத்திலே வாழ்க்கைத்தொழில்களுடன் சமரசம் செய்துகொண்டாவது அணைக்கட்டியியக்கிகளினதும் முள்ளம்பன்றி வளர்ப்பாளர்களினதும் அராஜகச்சைகைகளின் நட்டுவத்துக்காகக் காத்திராது நமக்கென ஒரு சந்தையை உருவாக்க முடிந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று தோன்றியது.
படகு நகர, ஏறிய பக்கக்கரையினிலே இருட்டு ஏற்கனவே குமிந்துவிட, இவனது செல்திசைக்கரையினைத் திரும்பிப்பார்த்தபடி உடலைமுறுக்கி-கழுத்துப்பிடிக்காமல் வசதிக்காக நின்றான்; அந்தப்புறம் சூரியன் நிலத்திற்குப் பின்னால் பிளந்துகொண்டு போகின்றது தெரிந்தது. இவனுக்கு ஆற்றுக்காற்று எந்தத்திசையிலிருந்து குளிருடன் வீசுகின்றது என்று சொல்லமுடியவில்லை. கொண்டுவந்ததும் பெற்றுக்கொண்டதுமான துணிக்குள் உறங்கும் தனது ஓலைநறுக்குகளை நெஞ்சோடு இறுக்கி விதிர்க்கும் ஐந்துமாதக்குழவியை அணைப்பதுபோல அழுத்திக்கொண்டான்; பின்னர், சந்தைப்பொருதுகளத்திலே பொறுக்கிய நறுக்குகளைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து, படகின் வெளியே எறிந்து, பதிலுக்கு ஆறு உறுமுகிறதா அல்லது ஓலமிடுகிறதா என்று கூர்ந்து கவனிக்கத்தொடங்கினான் சின்ன எழுத்தன்.
'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.
Monday, July 09, 2007
பழசு - 4
".... ஆங்கே அல்குல் அகல..."
கல்முனை கோணேஸ்வரி,
யாழ்ப்பாணம் கிருஷாந்தி,
பரிஸ் சுதர்ஷனி,
மன்னார் ஹேமலதா,
இன்னும்,
பிரி யோனி மட்டும்
தொடையிடைகொண்டதற்காய்
இறந்துபோன இளம், கிழம்
எல்லோருக்கும்
இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,
1.
எனக்குப்
பெண்குழவியில்லை.
2.
மற்றவர்களின் பெண்மகவுகள்
கர்மவினை கொண்டோர்;
அவர்களைக்
கடவுள் கண்டு கொள்வார்.
கவலையில்லை.
கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;
செத்தாற் கவலையில்லை;
நான் தேவாரப்பாடல்பெறு திருகோணமலையான்.
கிருஷாந்தி என் கைக்கெட்டா இளங்கிளி;
சிங்கள ஆமிக்காரன் எண்டாலும்
அவனும் அதுவுள்ள ஆம்பிளைதானே?
சுதர்ஷனி ஆவி அறிக; நான் நெபுயேவின் 'லொலிட்டா'
விசிறி;
என்றும் துன்பியற் காவியங்கள்,
சுவைக்க நிலைப்பதிற் தோற்பதில்லை, பெண்ணே.
ஹேமலதா கூட்டி, பின், குழிபறித்துக் காட்டிக்கொடுத்தவள்;
சூட்டுச்சாவு நியாயம்;
எப்பவோ எரியாத லைட்போஸ்டிலே இழுத்துக் கட்டியிருக்கவேணும்.
உடல்கிழி சிங்களக் கதிர்காமத்தழகி,
பீகார்ப் பெண்பிறவிச் சொக்கப்பானை,
கொசவோ கிழவிக்கருப்பைக்குட் சேர்பிய விந்து.....
நேரமில்லை இன்றைக்கு;
நியாயப்படுத்திப் பேசுவேனாம்
பின்னொரு நாள்,
நான்.
அதுவரையில்.....
நேற்றைக்கு,
பால்ய நண்பி பாசம்
பற்றியொரு பாடல் எழுதினேன்;
இன்றைக்கு,
பால் கொடுக்கும் தாய் வதனச் சந்ரபிம்பம்
பற்றியொரு பந்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்;
நாளைக்கு,
கடல்கடந்த பழந்தமிழ்ப் பாடல், பாரம்பரியம்,
பல்லாங்குழி, பலாக்காய், பகடை, சகடை, பண்பாடு
பற்றி பத்துப்பக்கம் படுக்காமல் எழுதவேண்டும்.........
..........." ............ ஆங்கே,
காம அல்குல் அகல,
ஒல்கு இடைவிரிந்து
ஒசிந்து தான் உருள,
துள்ளித் தெறித்து
எண்துண்டாய் விழுந்தது,
பொறிபடத் தரையில்
பெண் பூண்
பொன் மேகலை.... "
'99/07/15 வியாழன்
~~~~~~~~~~~~~~~~~
உடைப்பும் உருவமைப்பும்
Constructive Marxists, read from top to bottom;
Deconstructive Post-modernists, read from bottom to top;
Intellectual academics, first "zig-zag" as usual, and then ,
watch Paddaiyappa,
read Anandavikatan,
quote KuraL,
keep low profile,
post 'unsubscribe' mails,
praise the 'Lords of the net-flies',
and, finally rest in cozy arm chairs.
Others, overpass the post and go to the next.
தலை அல்லது வால்:-
முன் உடைப்பும் உருவமைப்பும்
உருவமைப்பும் பின் உடைப்பும்
ஒப்பற்றனவல்ல,
ஒன்றை விஞ்சி இன்னொன்று;
உருண்டு சுற்றும்
உப்பற்ற சடங்குருவே
உள்ளே தம்மமைப்பே.
முண்டம்:-
கட்டுமானமும் .......
..........................
காலச் சிலை உறைந்தது
கர்ப்ப மூலத்தில்.
உட்கரு,
துருக் கொட்டியதாம்
தூளாகிச் சடங்குருவில்.
சிறைப்பட்டுச் செத்தது சிலை
நளின நர்த்தனத்தே
சொல்லவரு சேதியெலாம்
என்று நகுந்தனர்
நயமற்ற இளைஞர்.
குழுமினர்;
உருவினர் ஆயுதம்.
உருத்தலை சிதறிச் சரிந்தது,
உட்கார்ந்திரு தெய்வம்.
கொல்கருவி,
குதித்துக் குதித்தாடிற்று
கோவிற் சுவரெங்கும்.
மழுங்கிய தலையினர்,
மறைந்தோடிப் போயினர்.
தரையினில் அமைதி.
அடித்துத் தட்டிய தரையினில்,
புதுக் கல் சுட்டு நட்டு,
ஒப்பற்றதோர் கட்டிடம் சமைத்திட
கட்டினர் கங்கணம்.
கனதியாய்த் தட்டுண்டது
கால் பட்டதோர் கருங்கல்;
சிற்றுளி செதுக்கச் சுருண்டது,
இருட்செதில் சொட்டிப் பாறை;
வரை நிழற்சித்திரம் ஒன்று,
உற்றது உரு
முப்பரிமாணம்;
பொன்-உடைத்த இடத்தே
சின்னமானது இன்னொரு வன்னச்சிலை.
கல் வேறு;
ரூபக்கல்லமை அருவக்கரு வேறு;
கட்டித்த சுத்தியலறை கரங்கள் வேறுவேறு;
ஆயினும்,
களம் ஒன்று;
இனியும்,
கவின்சிலை உண்டு.
சூல் கொண்டன,
புதுச்சிலைசூழ் செயல்கள்.
அம்பாய்ப் புகுத்தினர்,
அவை சுற்றி அர்த்தம்.
பின்,
மௌனத்தே சடங்கு யாகம்.
இனிவரும் இளைஞர்க்காய்,
இருட்டுக் கர்ப்பமூலத்தில்
உறையும்,
காலத்தே கட்டித்துக்
கருஞ்சிலை.
பிசிறின்றிச்
செத்துப்போம் சுழல்வில்
பிறிதொரு காலம்.
...........................
......... கட்டுடைப்பும்.
99/07/16
~~~~~~~~~~~~~~
நாட்டுப்பற்று
நேரான தெருவுக்கு நேர் குறுக்கே காரோட்டு
இரவுத் திரைப்படத்தை வேலைப்பொழுதில் விமர்சி
அலுவலக் குளிரூட்டியை அணைக்காமல் வீட்டுக்குப் போ
மேல்மாடிக் குப்பையை இருட்சன்னலாற் கவிழ்த்துக்கொட்டு
பெட்டிவாக்கு, துவக்குத்தோட்டாக்கு வலிதென்று பேசு
அரசியல்வாதிகளை அவதூறாய் அடித்துப் பழி
பணக்காரமுதலைகளின் பலிக்கடா நீ என்று சொல்லு
அமெரிக்கத்தூதரகத்தில் அதிகாலையிலே காத்து நில்லு
கணணிச்சுவர்க்காகிதமாய் உன் தேசக்கொடி பரவ ஒட்டு
சுரணையின்றிச் சாத்திக்கொள் அரசுச்செய்திச்சக்கைச்சூரணத்தை.
இனி, நீயே சங்கிலியாற் கட்டி சட்டையிற் கொழுவிக்கொள்,
உனக்கொரு ஒப்பற்ற நற்சான்று:-
"எத்தேசமும் காணாத நாட்டுபற்றுமிக்கோன்
நான் ஒருத்தன் மட்டும்தான் நம்நாட்டில் மிச்சமாம்."
~~~~~~~~~~~~~~~~~~~
தாய்த்தமிழுக்கு வணக்கம்
முற்கால திக்காத துல்லிய தமிழ்த்தாத்தாக்களைத் தெரியும். இப்போது,திக்குத்திக்காய் அலகு குத்தி முளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறது ஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரை என்று சொன்னால்,குறி தப்பாமல் தப்பான தமிழ்த்தாதா வா வேனோ நான்?
இலக்கணம் இவரின் சொத்து; இலக்கியம் அவரின் சொத்து; இடைப்பட்ட சொத்தை மட்டும் எனக்கான பிதிர்த்தேங்காய்ச்சொட்டு.
சரித்திரத்திற் கிவர் வாரிசு; சாஹித்யத்துக் கவர் வாரிசு - மீதிச்சரிப்படா சங்கதியெல்லாம் சக்கடத்தா னெனக்கென்றாச்சு.
கைக்கோல் பண்டிதன் கக்கம்; கத்தரி காண் விமர்சகன் சட்டம்; கத்தரிக்கும் கோலுக்குமிடை அந்தரிப்பதெந்தன் கட்டம்.
தத்துவத்துக் கொப் பவர் கூடு; நட்டுவித்துக் காப்பவர் பாடு; -தின்னப் புட்டவித்து விற்று நாளும் போஷாக்கு பார்ப்ப தாரோ?
ஓரிரண்டு ஒப்பில்லா மொழி திக்காத முற்காலத்தமிழ்த்தாத்தாக்களைத் தெரியுமென்றாலும்கூட இப்போதுதான், திக்குத்திக்காய் வாயலகு குத்திமுளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறது ஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரை என்று சொல்லமட்டும்,குறி தப்பாமல் தப்பான தமிழ்த்தாதாவா வேனோ நான்?
16, நவம்பர் 2001 வெள்ளி 04:22 மநிநே.
~~~~~~~~~~~~~~~~~
* தலைப்பில்லாக்கனவு.
எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.
இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.
~~~~~
அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.
உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்து வலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன் கடப்பார்கள்.
என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.
அன்று இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை அறைகூவித்தான் அலறும்#
~~~~~
அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அஃது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.
அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல விளைந்து.
~~~~~
எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.
* இ·து எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல; கிழக்குத்தீமோர் ஒலம்பிக்கில் நடந்த இன்றைய நாளினை நினைவிலே வைத்துக்கொள்ளமட்டும் எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே
#"My country did not send me to Mexico City to start the race. They sent me to finish the race."
- During 1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place winner.
~~~~~~~~~~~~~~~~~~~
''We have a package...(which) we will disclose at a proper time'' *
எங்களிடம் ஒரு பொதி உண்டு;
வேண்டியபோ ததை நாங்கள் திறப்போம்.
எங்களிடம் இரு நிலைகள் உண்டு;
விழைந்தவே ளையில் விரித்துப் பிழைப்போம்.
எங்களிடம் சில பொடிகள் உண்டு;
விரும்பியபோ தவை நாங்கள் விசிறுவோம்.
எங்களிடம் பல நாய்கள் உண்டு;
வேண்டாதபோ தவை நாங்கள் அவிழ்ப்போம்.
எங்களிடம் எதுவுமே இல்லை;
எல்லோருக்கு மெம் மில்லாமையையும் பிரிப்போம்.
ஸீயஸ் பண்டோராவிடம் ஒரு பெட்டியைத் தந்தார்;
திறந்தபோ ததில் தொல்லைகள் தொடர்ந்து வந்தன.
-/
'00, யூலை 04
*Thanks to Ajit Panja.
http://famulus.msnbc.com/FamulusIntl/reuters07-03-101202.asp?reg=ASIA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணற்றிடர் மாந்தருக்காய்....#
இங்கே,
படகுகளை இழந்துவிட்ட
மணற்றிட்டு மனிதருக்காக
எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
*****
எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.
உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.
புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.
கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.
கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.
******
என்னை விடு எனக்கென்ன குறை?
எழுதிக்கொண்டிருக்கின்றேனே
எலியைப் பற்றியாவது,
எவரையாவது பற்றியேதாவது;
என்னவரை, மண்ணவரை,
எங்கேனும் ஆழிமணற்றிட்டில்
திக்கற்றுத் தனி நின்றவரை,
படகை, கடலை, மீனை, தமிழை,
நிலத்தை, நெருப்பை, பனையை, முனியை,
நினைவை, கனவை, சனியை, பனியை,
சளியை, வளியை, வலியை, கலியை,
இரவே கவிந்த இருளின் செறிவை,
குனிந்த புருவத்தை, கொன்ற நற்காலத்தை,
பனித்த சடையை, பாவக்கரங்களை,
மதர்த்த கொங்கையை, மடிந்த பெண்டிரை,
உடைத்த பொற்பாதத்தை, உடையா நன்நம்பிக்கையை,
முனித்த சேனையை, முடியாத் துயரத்தை,
வனைத்த பானையை, வள்ளியை, மலைக்குறமாதை,
சினைத்த கர்ப்பத்தை, சிதிலித்த பிண்டத்தை,
நரிப்படு மனிதரை, நாய்ப்படு நம்வாழ்க்கையை,
தமிழ்ப்படு பெருந்தாயகத்தை, தவறிய எம் கட்குறிவீச்சை,
குறைப்படு நோக்கினை, கொல்குற்றப் பெருஞ்சாட்டினை,
எதைப்படவோ இருக்காமல் எழுதுவேன், எழுதுவேன்
இங்கே எங்கோ என் உயிரிரந்த பூமியில்,
தங்காவோட்டங்காண், தமிழ் எழுத்தாணி இற்றல்வரை.
இதில் வயப்படா நண்ப, எம் திசை கிளைப்படு மிங்கே.
புறப்படு நீ போ, போய் புக்குன் உடற்சிறைக்குள்.
மாது அணைப்பினுட் சேரு; நம்மூழ் மறந்துறவாடு.
சினைப்படப் பெருக்கு; சிக்கிக்கொள் உன்னுள்ளே செய்சித்தம்;
வசித்திரு வுலகு தானே வழிப்படச் சிறக்குமென் றன்றோவுன்னிருப்பு?
நினைவிற் கடற்பரப்பில் வாழ்வேன்; என் கைக்களைப்பினைக் காண்பேன்.
அந்தோ!
மணற்றிடர் மாந்தர் மீண்டும் கடல் புறப்பட்டார் கண்டேன் யானே.
செல் திசைக்குறிப்பறியா மூடர், மீண்டும் வலிந்து
சென்றார் வடக்கினை வழியென் றெண்ணி.
உன்னில் வடக்கிருந் திறந்தால் வாழ்வி
லெமக்கு வழி பிறக்குமோ,
சொல்
- கடல் மணற்றிட்டே?
******
இதிலேதென்றாலும்,
என்னையிங்கு விட்டுவிடு;
எனக்கென்ன குறை இனி?
படகுகளை இழந்துவிட்ட
கடல் மணற்றிட்டு மாந்தருக்காய்
கவி பாடிக்கொண்டிருப்பேன்,
ஒரு பனிப்பசுமைத்தேசத்து,
குளிர்பதன அறையிருந்து.
17 ஜூன், 2000
# "A group of Tamil refugees has been refused entry to India and
handed over to the Sri Lankan navy on a remote uninhabited island off
India's southern coast." - BBC, Saturday, 17 June, 2000, 15:56 GMT
16:56 UK
http://news.bbc.co.uk/hi/english/world/south_asia/newsid_795000/795230.stm
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி
வள்ளல் வாழ்த்து
-------------
வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.
மீதியும் மிதியும்
-------------------
கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.
மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.
திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.
கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.
அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.
இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.
14/ஜூன்/'00
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உருவிலி
அனுமானிப்பதை அப்படியே அறுத்துவிட்டால்
அரைப்பங்கு ஆகிவரும் என்று படுகின்றது;
பட்டாம்பூச்சிகள் பற்றிப் பாடல் எழுதுவதைப்
பத்தியச்சோற்றைப் போல் படிப்படியாய் நிறுத்திவிடலாம்;
ஆனால்,
அந்தரத்தில் அப்படியே இன்றைய இரவோடு,
அனுமானிப்பதை முற்றாய் அறுத்தாற்றான்,
அரைப்பங்கு தானாய்ச் சரியாகும் என்று படுகின்றது.
பாதிப்பேருக்குத் தானாய்ப் புரிகிறது;
மீதிப்பேருக்கு பாடமோ படிவதில்லை.....
நிகழ்வான திதுவானால்,
யாருக்குக் கம்பசூத்திரம்?
யாருக்குக் குறியுடைத்து,
அதற்கொரு விரிபாஷ்யம்?
இலக்கு இதுவென் றானபோதில்,
இடதால் இலகுவாக இங்கே வரமுடிகிறது;
சுழன்று வலதாலும் வளைந்து வந்து,
இடதின் வலதுகையை இறுக்கக் குலுக்கமுடிகிறது.
இலக்குக்கு இல்லை,
இடதும் வலதும்.
எம்மவர் என்பது மட்டுமே இருப்பு.
அசந்த வேளையில்,
"Profit over People:
neoliberalism and global order"
உரைத்தார் நோம் ஸோம்ஸ்கி.
அரண்டுபோய்,
சுரண்டி,
உரித்துப்பார்த்தேன் அவர் தோலை;
ஆதிசங்கரர் அரைச்சப்பணத்தில்
அலங்கமலங்க விழித்துக்கிடந்தார்.
உருவம் உரிக்க உரிக்க,
உடலிலி ஒரு வெங்காயம் மட்டும்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இடைக்கால அமைதி
"வெடிக்குமா? வெடிக்காதா?"
என்ற வேடிக்கை-விசர் மேவி
சொக்கப்பானைப்பூமியில்
திரி கொளுத்திப்போட்ட
சீனவெடிக்குமுன்னால்
கோணிக் குந்தியிருக்கிறது
என் சனம்.
எப்போதும்போலத்தான்,
எதையும் திடமாய்
எண்ண, சொல்ல, எழுத
ஆகாத
இப்போதும்.
கறுத்த இரவு தட்ட, நெடுநாள்முன்
துவக்குவெடிக்குட் தொலைந்த
கடல்நிலவைத் தேடிப்போனால்
உப்பு மணல் கரைந்து
குப்பென்று நுகர்நாசி
கிட்டும் குளிர்காற்றை
தேவாசுரர் கடைந்து மீந்த
கடைசி அமுதச்சொட்டென்றென்று
உனக்கேனும் உரத்துச் சொல்லி
உறுஞ்சி உட்பை தக்கவைத்து
இளக்கி மெல்லவிடு மேலே;
மூச்சுவெப்பு கிள்ளிக் கரையட்டும்
வெண்கடற்புகார்; உன் உள்ளத்தணல்.
இங்கே சொல்வது மறக்காமல்,
சவட்டைக்கால் கிறுக்குப்பிடித்து
குறுக்காலே பாதை நறுக்கிப்போகும்
சிறுத்த கோணல் நண்டுகளை
செல்நாட்கள் நினைவிருத்தி
நான் அழுத்திக்கேட்டதாயும்
எடுத்துச் சொல் நன்றாய்.
தேசத்துப்பேட்டுக்குருவிகள் பாட்டை
உள்ளுக்குள் இன்னும் நான்
அசைமீட்டிக் கேட்டுக்கொண்டிருப்பதாயும்
ஊட்டிச்சொல் என் உணர்வை.
செல்; விரை; ஓடு...
பிய்யமுன் முழு
நிலவை மோந்து
முகில் நிழலில்
மணல் தூங்கு;
கிடைத்த வெளியில்
அகட்டிக் கைபரப்பு; கால்பரப்பு.
பாதம் புதை; பத்துவிரல் கழுவு;
அலை தழுவ, அடி பதி;
ஓலக்காற்றில், ஓலைக்கீற்றசைவில்
உனக்கோ எனக்கோ
பித்தாய் ஒட்டிப் பிடித்த
ஓர் எட்டு வரி கவிதையை
குரல் பெருக்கிச் சொல்,
கோணமலைப்பித்தனுக்கு;
கேட்டவர் சிரித்தால்,
நாக்குக் கடியாதே;
இன்னும் கேளென்று
முழக்கிச் சொல்
மேலொன்று,
கடல்மேல்,
மணல்மேல்,
காற்றின்மேல்.
இதுவரை எவர் சிரித்தார்?
இனி வரவும் எமக்கெதுவோ?
கலகலத்துச் சிரிக்கச் சொல்,
கத்துங்கடலுக்கும் ஒரு பிடிகவி.
விதைவிதையாய்ப் புதைமணலுள்
சோகி சிப்பி சப்திக்க விசிறி எறி,
இத்தனை நாள் புத்தகப்பொறிக்குள்
அச்சப்பட்டுப் பொத்தி வைத்த
எம் துக்கக்கவித்தொடர்,
கலித்தொகையெல்லாமே.
மேல் காற்றுத் தடவ,
கசியக் கடல் படிக்க,
நற்சுருதிப்பாட்டொன்றை
ஆழப் பொத்திப் புதை
நம் நாட்டு மணலுள்;
நாளைக்கோ,
இன்னொரு வேளைக்கோ,
வரும் எம் வீட்டுச்சிறு
துள்ளல் ஆட்டுக்குட்டிகள்
தாவிப் பறித்துத்தின்ன
தழை இலை முளைக்கும்
பாடல் மரமாகட்டும்
வருங்காலத் தல விருட்சம்.
இப்போது போலத்தான்,
எதையும் திடமாய்
எழுத, சொல்ல, எண்ண
ஆகாத
எப்போதும்
எமக்கென்றேயானது.
யார் கண்டார்?
முன்னைப்போலவே,
பின்னைப்பிள்ளைக்கறியுங்கூட
ஒல்லப் பசியாறட்டுமென்றான
குமிழ்மைம்மற்பொழுதுமாகலாம்
இது.
அதுவரைக்கும் கிடைபொழுதில்,
அகல் தேசத் திக்கேதென்றாலும்,
நகர்நிழலின் வாசம் தக்கித்துயிலும்
அக்கடலின் நீரை இறைத்தெடு
என்னை உன் கைகளில் அள்ளி.
எடுத்துச்செல் கையோடு எம் வீடு....
....செல் வழியில்,
எங்கே காட்டு எனக்கென் இழந்த ஊரை
05, Mar. '02 Tue. 04:38 CST
கல்முனை கோணேஸ்வரி,
யாழ்ப்பாணம் கிருஷாந்தி,
பரிஸ் சுதர்ஷனி,
மன்னார் ஹேமலதா,
இன்னும்,
பிரி யோனி மட்டும்
தொடையிடைகொண்டதற்காய்
இறந்துபோன இளம், கிழம்
எல்லோருக்கும்
இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,
1.
எனக்குப்
பெண்குழவியில்லை.
2.
மற்றவர்களின் பெண்மகவுகள்
கர்மவினை கொண்டோர்;
அவர்களைக்
கடவுள் கண்டு கொள்வார்.
கவலையில்லை.
கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;
செத்தாற் கவலையில்லை;
நான் தேவாரப்பாடல்பெறு திருகோணமலையான்.
கிருஷாந்தி என் கைக்கெட்டா இளங்கிளி;
சிங்கள ஆமிக்காரன் எண்டாலும்
அவனும் அதுவுள்ள ஆம்பிளைதானே?
சுதர்ஷனி ஆவி அறிக; நான் நெபுயேவின் 'லொலிட்டா'
விசிறி;
என்றும் துன்பியற் காவியங்கள்,
சுவைக்க நிலைப்பதிற் தோற்பதில்லை, பெண்ணே.
ஹேமலதா கூட்டி, பின், குழிபறித்துக் காட்டிக்கொடுத்தவள்;
சூட்டுச்சாவு நியாயம்;
எப்பவோ எரியாத லைட்போஸ்டிலே இழுத்துக் கட்டியிருக்கவேணும்.
உடல்கிழி சிங்களக் கதிர்காமத்தழகி,
பீகார்ப் பெண்பிறவிச் சொக்கப்பானை,
கொசவோ கிழவிக்கருப்பைக்குட் சேர்பிய விந்து.....
நேரமில்லை இன்றைக்கு;
நியாயப்படுத்திப் பேசுவேனாம்
பின்னொரு நாள்,
நான்.
அதுவரையில்.....
நேற்றைக்கு,
பால்ய நண்பி பாசம்
பற்றியொரு பாடல் எழுதினேன்;
இன்றைக்கு,
பால் கொடுக்கும் தாய் வதனச் சந்ரபிம்பம்
பற்றியொரு பந்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்;
நாளைக்கு,
கடல்கடந்த பழந்தமிழ்ப் பாடல், பாரம்பரியம்,
பல்லாங்குழி, பலாக்காய், பகடை, சகடை, பண்பாடு
பற்றி பத்துப்பக்கம் படுக்காமல் எழுதவேண்டும்.........
..........." ............ ஆங்கே,
காம அல்குல் அகல,
ஒல்கு இடைவிரிந்து
ஒசிந்து தான் உருள,
துள்ளித் தெறித்து
எண்துண்டாய் விழுந்தது,
பொறிபடத் தரையில்
பெண் பூண்
பொன் மேகலை.... "
'99/07/15 வியாழன்
~~~~~~~~~~~~~~~~~
உடைப்பும் உருவமைப்பும்
Constructive Marxists, read from top to bottom;
Deconstructive Post-modernists, read from bottom to top;
Intellectual academics, first "zig-zag" as usual, and then ,
watch Paddaiyappa,
read Anandavikatan,
quote KuraL,
keep low profile,
post 'unsubscribe' mails,
praise the 'Lords of the net-flies',
and, finally rest in cozy arm chairs.
Others, overpass the post and go to the next.
தலை அல்லது வால்:-
முன் உடைப்பும் உருவமைப்பும்
உருவமைப்பும் பின் உடைப்பும்
ஒப்பற்றனவல்ல,
ஒன்றை விஞ்சி இன்னொன்று;
உருண்டு சுற்றும்
உப்பற்ற சடங்குருவே
உள்ளே தம்மமைப்பே.
முண்டம்:-
கட்டுமானமும் .......
..........................
காலச் சிலை உறைந்தது
கர்ப்ப மூலத்தில்.
உட்கரு,
துருக் கொட்டியதாம்
தூளாகிச் சடங்குருவில்.
சிறைப்பட்டுச் செத்தது சிலை
நளின நர்த்தனத்தே
சொல்லவரு சேதியெலாம்
என்று நகுந்தனர்
நயமற்ற இளைஞர்.
குழுமினர்;
உருவினர் ஆயுதம்.
உருத்தலை சிதறிச் சரிந்தது,
உட்கார்ந்திரு தெய்வம்.
கொல்கருவி,
குதித்துக் குதித்தாடிற்று
கோவிற் சுவரெங்கும்.
மழுங்கிய தலையினர்,
மறைந்தோடிப் போயினர்.
தரையினில் அமைதி.
அடித்துத் தட்டிய தரையினில்,
புதுக் கல் சுட்டு நட்டு,
ஒப்பற்றதோர் கட்டிடம் சமைத்திட
கட்டினர் கங்கணம்.
கனதியாய்த் தட்டுண்டது
கால் பட்டதோர் கருங்கல்;
சிற்றுளி செதுக்கச் சுருண்டது,
இருட்செதில் சொட்டிப் பாறை;
வரை நிழற்சித்திரம் ஒன்று,
உற்றது உரு
முப்பரிமாணம்;
பொன்-உடைத்த இடத்தே
சின்னமானது இன்னொரு வன்னச்சிலை.
கல் வேறு;
ரூபக்கல்லமை அருவக்கரு வேறு;
கட்டித்த சுத்தியலறை கரங்கள் வேறுவேறு;
ஆயினும்,
களம் ஒன்று;
இனியும்,
கவின்சிலை உண்டு.
சூல் கொண்டன,
புதுச்சிலைசூழ் செயல்கள்.
அம்பாய்ப் புகுத்தினர்,
அவை சுற்றி அர்த்தம்.
பின்,
மௌனத்தே சடங்கு யாகம்.
இனிவரும் இளைஞர்க்காய்,
இருட்டுக் கர்ப்பமூலத்தில்
உறையும்,
காலத்தே கட்டித்துக்
கருஞ்சிலை.
பிசிறின்றிச்
செத்துப்போம் சுழல்வில்
பிறிதொரு காலம்.
...........................
......... கட்டுடைப்பும்.
99/07/16
~~~~~~~~~~~~~~
நாட்டுப்பற்று
நேரான தெருவுக்கு நேர் குறுக்கே காரோட்டு
இரவுத் திரைப்படத்தை வேலைப்பொழுதில் விமர்சி
அலுவலக் குளிரூட்டியை அணைக்காமல் வீட்டுக்குப் போ
மேல்மாடிக் குப்பையை இருட்சன்னலாற் கவிழ்த்துக்கொட்டு
பெட்டிவாக்கு, துவக்குத்தோட்டாக்கு வலிதென்று பேசு
அரசியல்வாதிகளை அவதூறாய் அடித்துப் பழி
பணக்காரமுதலைகளின் பலிக்கடா நீ என்று சொல்லு
அமெரிக்கத்தூதரகத்தில் அதிகாலையிலே காத்து நில்லு
கணணிச்சுவர்க்காகிதமாய் உன் தேசக்கொடி பரவ ஒட்டு
சுரணையின்றிச் சாத்திக்கொள் அரசுச்செய்திச்சக்கைச்சூரணத்தை.
இனி, நீயே சங்கிலியாற் கட்டி சட்டையிற் கொழுவிக்கொள்,
உனக்கொரு ஒப்பற்ற நற்சான்று:-
"எத்தேசமும் காணாத நாட்டுபற்றுமிக்கோன்
நான் ஒருத்தன் மட்டும்தான் நம்நாட்டில் மிச்சமாம்."
~~~~~~~~~~~~~~~~~~~
தாய்த்தமிழுக்கு வணக்கம்
முற்கால திக்காத துல்லிய தமிழ்த்தாத்தாக்களைத் தெரியும். இப்போது,திக்குத்திக்காய் அலகு குத்தி முளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறது ஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரை என்று சொன்னால்,குறி தப்பாமல் தப்பான தமிழ்த்தாதா வா வேனோ நான்?
இலக்கணம் இவரின் சொத்து; இலக்கியம் அவரின் சொத்து; இடைப்பட்ட சொத்தை மட்டும் எனக்கான பிதிர்த்தேங்காய்ச்சொட்டு.
சரித்திரத்திற் கிவர் வாரிசு; சாஹித்யத்துக் கவர் வாரிசு - மீதிச்சரிப்படா சங்கதியெல்லாம் சக்கடத்தா னெனக்கென்றாச்சு.
கைக்கோல் பண்டிதன் கக்கம்; கத்தரி காண் விமர்சகன் சட்டம்; கத்தரிக்கும் கோலுக்குமிடை அந்தரிப்பதெந்தன் கட்டம்.
தத்துவத்துக் கொப் பவர் கூடு; நட்டுவித்துக் காப்பவர் பாடு; -தின்னப் புட்டவித்து விற்று நாளும் போஷாக்கு பார்ப்ப தாரோ?
ஓரிரண்டு ஒப்பில்லா மொழி திக்காத முற்காலத்தமிழ்த்தாத்தாக்களைத் தெரியுமென்றாலும்கூட இப்போதுதான், திக்குத்திக்காய் வாயலகு குத்திமுளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறது ஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரை என்று சொல்லமட்டும்,குறி தப்பாமல் தப்பான தமிழ்த்தாதாவா வேனோ நான்?
16, நவம்பர் 2001 வெள்ளி 04:22 மநிநே.
~~~~~~~~~~~~~~~~~
* தலைப்பில்லாக்கனவு.
எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.
இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.
~~~~~
அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.
உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்து வலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன் கடப்பார்கள்.
என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.
அன்று இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை அறைகூவித்தான் அலறும்#
~~~~~
அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அஃது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.
அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல விளைந்து.
~~~~~
எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.
* இ·து எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல; கிழக்குத்தீமோர் ஒலம்பிக்கில் நடந்த இன்றைய நாளினை நினைவிலே வைத்துக்கொள்ளமட்டும் எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே
#"My country did not send me to Mexico City to start the race. They sent me to finish the race."
- During 1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place winner.
~~~~~~~~~~~~~~~~~~~
''We have a package...(which) we will disclose at a proper time'' *
எங்களிடம் ஒரு பொதி உண்டு;
வேண்டியபோ ததை நாங்கள் திறப்போம்.
எங்களிடம் இரு நிலைகள் உண்டு;
விழைந்தவே ளையில் விரித்துப் பிழைப்போம்.
எங்களிடம் சில பொடிகள் உண்டு;
விரும்பியபோ தவை நாங்கள் விசிறுவோம்.
எங்களிடம் பல நாய்கள் உண்டு;
வேண்டாதபோ தவை நாங்கள் அவிழ்ப்போம்.
எங்களிடம் எதுவுமே இல்லை;
எல்லோருக்கு மெம் மில்லாமையையும் பிரிப்போம்.
ஸீயஸ் பண்டோராவிடம் ஒரு பெட்டியைத் தந்தார்;
திறந்தபோ ததில் தொல்லைகள் தொடர்ந்து வந்தன.
-/
'00, யூலை 04
*Thanks to Ajit Panja.
http://famulus.msnbc.com/FamulusIntl/reuters07-03-101202.asp?reg=ASIA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணற்றிடர் மாந்தருக்காய்....#
இங்கே,
படகுகளை இழந்துவிட்ட
மணற்றிட்டு மனிதருக்காக
எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
*****
எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.
உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.
புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.
கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.
கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.
******
என்னை விடு எனக்கென்ன குறை?
எழுதிக்கொண்டிருக்கின்றேனே
எலியைப் பற்றியாவது,
எவரையாவது பற்றியேதாவது;
என்னவரை, மண்ணவரை,
எங்கேனும் ஆழிமணற்றிட்டில்
திக்கற்றுத் தனி நின்றவரை,
படகை, கடலை, மீனை, தமிழை,
நிலத்தை, நெருப்பை, பனையை, முனியை,
நினைவை, கனவை, சனியை, பனியை,
சளியை, வளியை, வலியை, கலியை,
இரவே கவிந்த இருளின் செறிவை,
குனிந்த புருவத்தை, கொன்ற நற்காலத்தை,
பனித்த சடையை, பாவக்கரங்களை,
மதர்த்த கொங்கையை, மடிந்த பெண்டிரை,
உடைத்த பொற்பாதத்தை, உடையா நன்நம்பிக்கையை,
முனித்த சேனையை, முடியாத் துயரத்தை,
வனைத்த பானையை, வள்ளியை, மலைக்குறமாதை,
சினைத்த கர்ப்பத்தை, சிதிலித்த பிண்டத்தை,
நரிப்படு மனிதரை, நாய்ப்படு நம்வாழ்க்கையை,
தமிழ்ப்படு பெருந்தாயகத்தை, தவறிய எம் கட்குறிவீச்சை,
குறைப்படு நோக்கினை, கொல்குற்றப் பெருஞ்சாட்டினை,
எதைப்படவோ இருக்காமல் எழுதுவேன், எழுதுவேன்
இங்கே எங்கோ என் உயிரிரந்த பூமியில்,
தங்காவோட்டங்காண், தமிழ் எழுத்தாணி இற்றல்வரை.
இதில் வயப்படா நண்ப, எம் திசை கிளைப்படு மிங்கே.
புறப்படு நீ போ, போய் புக்குன் உடற்சிறைக்குள்.
மாது அணைப்பினுட் சேரு; நம்மூழ் மறந்துறவாடு.
சினைப்படப் பெருக்கு; சிக்கிக்கொள் உன்னுள்ளே செய்சித்தம்;
வசித்திரு வுலகு தானே வழிப்படச் சிறக்குமென் றன்றோவுன்னிருப்பு?
நினைவிற் கடற்பரப்பில் வாழ்வேன்; என் கைக்களைப்பினைக் காண்பேன்.
அந்தோ!
மணற்றிடர் மாந்தர் மீண்டும் கடல் புறப்பட்டார் கண்டேன் யானே.
செல் திசைக்குறிப்பறியா மூடர், மீண்டும் வலிந்து
சென்றார் வடக்கினை வழியென் றெண்ணி.
உன்னில் வடக்கிருந் திறந்தால் வாழ்வி
லெமக்கு வழி பிறக்குமோ,
சொல்
- கடல் மணற்றிட்டே?
******
இதிலேதென்றாலும்,
என்னையிங்கு விட்டுவிடு;
எனக்கென்ன குறை இனி?
படகுகளை இழந்துவிட்ட
கடல் மணற்றிட்டு மாந்தருக்காய்
கவி பாடிக்கொண்டிருப்பேன்,
ஒரு பனிப்பசுமைத்தேசத்து,
குளிர்பதன அறையிருந்து.
17 ஜூன், 2000
# "A group of Tamil refugees has been refused entry to India and
handed over to the Sri Lankan navy on a remote uninhabited island off
India's southern coast." - BBC, Saturday, 17 June, 2000, 15:56 GMT
16:56 UK
http://news.bbc.co.uk/hi/english/world/south_asia/newsid_795000/795230.stm
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி
வள்ளல் வாழ்த்து
-------------
வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.
மீதியும் மிதியும்
-------------------
கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.
மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.
திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.
கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.
அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.
இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.
14/ஜூன்/'00
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உருவிலி
அனுமானிப்பதை அப்படியே அறுத்துவிட்டால்
அரைப்பங்கு ஆகிவரும் என்று படுகின்றது;
பட்டாம்பூச்சிகள் பற்றிப் பாடல் எழுதுவதைப்
பத்தியச்சோற்றைப் போல் படிப்படியாய் நிறுத்திவிடலாம்;
ஆனால்,
அந்தரத்தில் அப்படியே இன்றைய இரவோடு,
அனுமானிப்பதை முற்றாய் அறுத்தாற்றான்,
அரைப்பங்கு தானாய்ச் சரியாகும் என்று படுகின்றது.
பாதிப்பேருக்குத் தானாய்ப் புரிகிறது;
மீதிப்பேருக்கு பாடமோ படிவதில்லை.....
நிகழ்வான திதுவானால்,
யாருக்குக் கம்பசூத்திரம்?
யாருக்குக் குறியுடைத்து,
அதற்கொரு விரிபாஷ்யம்?
இலக்கு இதுவென் றானபோதில்,
இடதால் இலகுவாக இங்கே வரமுடிகிறது;
சுழன்று வலதாலும் வளைந்து வந்து,
இடதின் வலதுகையை இறுக்கக் குலுக்கமுடிகிறது.
இலக்குக்கு இல்லை,
இடதும் வலதும்.
எம்மவர் என்பது மட்டுமே இருப்பு.
அசந்த வேளையில்,
"Profit over People:
neoliberalism and global order"
உரைத்தார் நோம் ஸோம்ஸ்கி.
அரண்டுபோய்,
சுரண்டி,
உரித்துப்பார்த்தேன் அவர் தோலை;
ஆதிசங்கரர் அரைச்சப்பணத்தில்
அலங்கமலங்க விழித்துக்கிடந்தார்.
உருவம் உரிக்க உரிக்க,
உடலிலி ஒரு வெங்காயம் மட்டும்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இடைக்கால அமைதி
"வெடிக்குமா? வெடிக்காதா?"
என்ற வேடிக்கை-விசர் மேவி
சொக்கப்பானைப்பூமியில்
திரி கொளுத்திப்போட்ட
சீனவெடிக்குமுன்னால்
கோணிக் குந்தியிருக்கிறது
என் சனம்.
எப்போதும்போலத்தான்,
எதையும் திடமாய்
எண்ண, சொல்ல, எழுத
ஆகாத
இப்போதும்.
கறுத்த இரவு தட்ட, நெடுநாள்முன்
துவக்குவெடிக்குட் தொலைந்த
கடல்நிலவைத் தேடிப்போனால்
உப்பு மணல் கரைந்து
குப்பென்று நுகர்நாசி
கிட்டும் குளிர்காற்றை
தேவாசுரர் கடைந்து மீந்த
கடைசி அமுதச்சொட்டென்றென்று
உனக்கேனும் உரத்துச் சொல்லி
உறுஞ்சி உட்பை தக்கவைத்து
இளக்கி மெல்லவிடு மேலே;
மூச்சுவெப்பு கிள்ளிக் கரையட்டும்
வெண்கடற்புகார்; உன் உள்ளத்தணல்.
இங்கே சொல்வது மறக்காமல்,
சவட்டைக்கால் கிறுக்குப்பிடித்து
குறுக்காலே பாதை நறுக்கிப்போகும்
சிறுத்த கோணல் நண்டுகளை
செல்நாட்கள் நினைவிருத்தி
நான் அழுத்திக்கேட்டதாயும்
எடுத்துச் சொல் நன்றாய்.
தேசத்துப்பேட்டுக்குருவிகள் பாட்டை
உள்ளுக்குள் இன்னும் நான்
அசைமீட்டிக் கேட்டுக்கொண்டிருப்பதாயும்
ஊட்டிச்சொல் என் உணர்வை.
செல்; விரை; ஓடு...
பிய்யமுன் முழு
நிலவை மோந்து
முகில் நிழலில்
மணல் தூங்கு;
கிடைத்த வெளியில்
அகட்டிக் கைபரப்பு; கால்பரப்பு.
பாதம் புதை; பத்துவிரல் கழுவு;
அலை தழுவ, அடி பதி;
ஓலக்காற்றில், ஓலைக்கீற்றசைவில்
உனக்கோ எனக்கோ
பித்தாய் ஒட்டிப் பிடித்த
ஓர் எட்டு வரி கவிதையை
குரல் பெருக்கிச் சொல்,
கோணமலைப்பித்தனுக்கு;
கேட்டவர் சிரித்தால்,
நாக்குக் கடியாதே;
இன்னும் கேளென்று
முழக்கிச் சொல்
மேலொன்று,
கடல்மேல்,
மணல்மேல்,
காற்றின்மேல்.
இதுவரை எவர் சிரித்தார்?
இனி வரவும் எமக்கெதுவோ?
கலகலத்துச் சிரிக்கச் சொல்,
கத்துங்கடலுக்கும் ஒரு பிடிகவி.
விதைவிதையாய்ப் புதைமணலுள்
சோகி சிப்பி சப்திக்க விசிறி எறி,
இத்தனை நாள் புத்தகப்பொறிக்குள்
அச்சப்பட்டுப் பொத்தி வைத்த
எம் துக்கக்கவித்தொடர்,
கலித்தொகையெல்லாமே.
மேல் காற்றுத் தடவ,
கசியக் கடல் படிக்க,
நற்சுருதிப்பாட்டொன்றை
ஆழப் பொத்திப் புதை
நம் நாட்டு மணலுள்;
நாளைக்கோ,
இன்னொரு வேளைக்கோ,
வரும் எம் வீட்டுச்சிறு
துள்ளல் ஆட்டுக்குட்டிகள்
தாவிப் பறித்துத்தின்ன
தழை இலை முளைக்கும்
பாடல் மரமாகட்டும்
வருங்காலத் தல விருட்சம்.
இப்போது போலத்தான்,
எதையும் திடமாய்
எழுத, சொல்ல, எண்ண
ஆகாத
எப்போதும்
எமக்கென்றேயானது.
யார் கண்டார்?
முன்னைப்போலவே,
பின்னைப்பிள்ளைக்கறியுங்கூட
ஒல்லப் பசியாறட்டுமென்றான
குமிழ்மைம்மற்பொழுதுமாகலாம்
இது.
அதுவரைக்கும் கிடைபொழுதில்,
அகல் தேசத் திக்கேதென்றாலும்,
நகர்நிழலின் வாசம் தக்கித்துயிலும்
அக்கடலின் நீரை இறைத்தெடு
என்னை உன் கைகளில் அள்ளி.
எடுத்துச்செல் கையோடு எம் வீடு....
....செல் வழியில்,
எங்கே காட்டு எனக்கென் இழந்த ஊரை
05, Mar. '02 Tue. 04:38 CST
Subscribe to:
Posts (Atom)

