Monday, October 01, 2012

நண்பரை நினைவுகூர்தல்:பு. ஈழநாதன்

பதிவர் பு. ஈழநாதன் இறப்பினையிட்டு வருத்தமடைகின்றேன். தமிழ்ப்பதிவுகளின் ஆரம்பகாலத்திலிருந்து எழுதியும் நூலகம் போன்ற தன்னார்வுத்தொண்டுகளிலே ஈடுபட்டும்வந்த நண்பன் ஈழநாதனின் முப்பதோர் அகவையிலான இறப்பு பதிவுலகுக்கு அப்பாலுமான இழப்பு.


Thursday, September 27, 2012

குடிசைக்கதைத்தொழில்


நேற்று நாம்
புனிதர்க்குச் செய்ததென்ற
குற்றங்களை இன்று நாம்
புனிதருடன்கூடி விமர்சிக்கிறோம்
-"நீங்கள் பொறுப்பெடுங்கள்."

அடிப்படைவாதிகளைவிட மோசமானவர்கள் மிதவாதிகளே

இலங்கைத்தமிழ்மாற்றுக்கட்சிகளின், அ. மார்க்ஸின், ஆதவன் தீட்சண்யாவின் அரசியலைவிட்டுவிடலாம். தமிழ் ஓவியா போன்ற வரட்டுத்தனமான ஒத்தி-ஒட்டிகளின் காலத்திற்கேற்ப வரும் மாறுதல்களை உள்ளடக்கிச் சொல்லாத கருத்துகளை விட்டுவிடலாம். ஆனால், கீற்று போன்ற விமர்சனநோக்கோடு எழுதும் தளங்கள் எதையும் கறுப்புவெள்ளையாகவே பார்ப்பதும் எதிரிக்கெதிரி நண்பன் என்ற வகையிலே கருத்துகளைச் |சொல்லாமலே| போவதும் சுட்டிக்காட்டவேண்டியதாகவிருக்கின்றது;

இஸ்லாம் குறித்தும் முஸ்லீங்களின் நிலை குறித்தும் வெறுமனே அமெரிக்காவினையும் மேற்கினையும் திட்டிவிட்டுப்போவதுமட்டும் முறையாகாது. அமெரிக்காவினதும் மேற்கினதும் இஸ்ரேல் குறித்த சாய்வும் முஸ்லீங்கள் குறித்த அமெரிக்கப்பேரூடகங்களின் குதர்க்கமும் நிச்சயமாகக் கண்டிக்கப்படவேண்டியவை. அமெரிக்காவிலும் மேற்கிலுமே பலர் அந்நிலையைக் கண்டிக்கின்றனர். ஆனால், அல் ஜஸீரா இன்று உலகின் பலம்பொருந்திய ஊடகமாவிருக்கின்றது; அது முஸ்லீங்களின் குரலைத் தருகின்றது; அதையும் கீற்று குறிப்பிடவேண்டும். இந்துத்துவாவின் கொடூரமுகம் நரேந்திரமோடியினது. அது மீண்டும் மீண்டும் அன்புதோய்ந்தமுகம்போல மேலெழுப்பப்படும்போது, கண்டித்து அமுக்கப்படவேண்டியது.

ஆனால், அதேநேரத்திலே இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது தீராத எதிர்நிலைப்பாடுகளை - சகோதர முஸ்லீம்கள்மீதான முஸ்லீங்களின் வன்முறையினையும் முஸ்லீம்கள் அல்லாதார்மீதான வன்முறையினையும் கருத்துமறுப்பினையும்- முற்றாகவே மறுத்து என்றாவது கீற்றினாலே சுட்டப்பட்டுக் கட்டுரையாக எழுதப்பட்டிருக்கின்றதா? பெரும்பாலான இந்தியாவின் இடதுசாரி, திராவிட, மாற்றுநிலை அரசியல்வாதிகள் அமெரிக்காவினையும் இந்துத்துவாவினையும் எதிர்க்கின்றோமென்ற வேளையிலே கண்மூடித்தனமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பச்சைவிளக்கினைக் காட்டுகின்றதினை வெளிப்படையாகவே சிறுபான்மையினருக்காகப் பேசுதல் என்பதற்குச் சமானமென்பதாகத் தூக்கி நிறுத்துகின்ற எதிர்_வலதுசாரித்தனத்தினை செய்யும்போது, கீற்று போன்றவை, பச்சைவிளக்கினைக் காட்டாதபோதுங்கூட, சிவப்புவிளக்கினை வேண்டுமென்றே கட்டி அணைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

சுட்டிக்காட்டப்படவேண்டிய இன்னோர் அவதானிப்பு; பேசமறுக்கும் கள்ளமௌனம்கொள்ளும் முஸ்லீம்மிதவாதிகள்; இதற்காகப் பெரிதாக உலகநாடுகளைப் பார்க்கத்தேவையில்லை, தமிழ்பேசும் வட்டத்துள்ளேயேபார்த்தாலேபோதுமானது. இந்து/கிறீத்துவ/மதம்சாராத/இடதுசாரி/தமிழ்த்தேசிய அடையாளங்கள்பேரிலான அடுத்தவர்கள்மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, இந்து/கிறிஸ்துவ/தமிழ்த்தேசியர்கள் அல்லாதோருங்கூடக் -என்னைப்போன்ற மதத்துக்கு எதிரான தமிழ்த்தேசியர்களுட்பட- குரல்கொடுக்கையிலே, இஸ்லாமிய அடிப்படைவாதத்தினையும் அது சக முஸ்லீங்கள்மீதும் மற்றவர்களின்மீதும் தன் கருத்தினையும் உடல்,பொருள்ரீதியான ஊறுகளையும் செலுத்தும்போது, அதனைக் காணததுபோலவே இருக்கும் முஸ்லீம்மிதவாதிகளின் செயல்(இன்மை) வெட்கத்துக்குரியதும் கண்டிப்புக்குரியதும் வரலாற்றின் பெருந்தவறுமாகும். முஸ்லீம்நாடுகளிலே முஸ்லீம்களை முஸ்லீம்களே கொல்லுதல், குடும்பகௌரவத்தினைக் காக்கச் சொந்த மக்களையே படுகொலை செய்தல், மதம்சார்ந்த சுயவிமர்சனமின்மை இவற்றினை காணாததுபோலவேயிருக்கின்றவர்கள், கடைசியாக அவர்களுக்கு வரும்போது, பேச எவருமில்லாதாவராவார்கள் என்று சொல்லமாட்டேன்- என்னைப் போன்றவர்களிருப்பார்கள்.

அடக்குமுறை, வன்முறை, கருத்தழிப்பு எப்பகுதியிலிருந்து வந்தாலும் சுட்டிக்காட்டப்படவேண்டும் - பௌத்த/இந்து/இஸ்லாமிய/கிறீத்துவமேலாதிக்கம்; சிங்கள/தமிழ்/முஸ்லீம்தேசியத்துவம்; அமெரிக்கா/சீனா/சுப்பிரமணியசுவாமி/சோ/சிபிஎம்/என். ராம்.  கீற்று போன்ற விமர்சன ஏடுகள் அப்படியாக முன்வராதவரை அமெரிக்காவுக்கும் அவற்றுக்கும் வேறுபாடில்லை என்றே சொல்வேன்; முஸ்லீம்மிதவாதிகள் குரலெழுப்பாதவரை அவர்களுக்கு அப்படி எழுப்பக்கூடிய சூழ்நிலையில்லாத உயிர் & பொருள் சார்ந்த அச்சம் அவர்சார்ந்த சமூகத்தின் இஸ்லாமியஅடிப்படைவாதிகளினாலே இருப்பதாகவே கொள்ளமுடியும்; இப்படியானவர்கள் மாற்றுக்குழு எதனதும் ஒடுக்குமுறையினைப் பற்றிப் பேச அருகைதையில்லாதவர்களாகின்றனர் - மாற்றுக்குழுவினர் எத்துணை கொடூரர்களாகவிருக்கின்றநிலையானபோதுங்கூட.

இக்குறிப்பினை பிறமதவெறியர்கள், அடிப்படையிலேயே முஸ்லீங்களை முஸ்லீங்கள் என்பதற்காகமட்டுமே வெறுப்பவர்கள் மகிழ்ச்சியோடு வாசிப்பார்கள் &a வரவேற்பார்கள் என்ற அபாயமிருக்கின்றதென்பதையறிகின்றபோதுங்கூட, காலத்தின் அவசியத்தாலே எழுதியிருக்கின்றேன் என்பதையும் கடைசியாகச் சுட்டவேண்டும் ;-)

what the world really needs is the secular moderates who would extremely be active to confront the religious extremists.

Sunday, September 23, 2012

நம்மள்கி லிங் ஒன்லி குட்பான்

நம்மள்கி லிங் ஒன்லி குட்பான்.
ரைட்டா ராங்கா நிம்மள்கீ பாத்துப்பான்


http://www.luminous-lint.com/app/photographer/William_Louis_Henry__Skeen/A/

Names:
Other: J. Parting (Columbo) - Photographic studio
Other: S. Slinn & Co, (Columbo)
Other: Skeen & Co.
Other: W.L.H. Skeen & Co.
Other: William L.H. Skeen
Joint: Skeen & Co. 
Active:  Ceylon
Gender:  Male


Commercial photographer active in Ceylon (1860-1903). The firm of W.L.H. Skeen & Co. became the most successful in Ceylon by the 1870s and continued on under a number of different managers until about 1920.

William Skeen started in Ceylon as the first officially appointed Government Printer 1849-1873. During this time, in 1860, he purchased the existing photographic studio of J. Parting in Colombo for his son, William Louis Henry Skeen. W.L.H. Skeen, who trained at the London School of Photography, did not arrive in Colombo until 1862 so it is unclear who was running the the Parting Studio during this time. William Skeen snr. wrote two books that were illustrated with his son‘s photographs, ‘The Knuckles and Other Poems‘ (1868) and ‘Adam‘s Peak‘ (1870). The studio in Colombo traded under the name S. Slinn & Co (William‘s mother‘s name was Sarah Slinn) until 1868 when it became W.L.H. Skeen & Co. W.L.H. Skeen‘s brother Frederick Albert Edward Skeen arrived in Ceylon in 1878 and he ran a studio under the W.L.H. Skeen name in Rangoon from 1887 although there is no record as to when this studio was opened. In 1891 another studio was opened in Kandy, Ceylon.

PLEASE NOTE: It is unclear if W.H.L. Skeen took all the photographs himself and we would welcome any further research on photographers that worked for W.L.H. Skeen & Co. and the years they did so. As soon as we are able to distinguish different photographers we will include the details here. (January 2007)

[Take care not to confuse with his father: William Skeen (1822-1872)]

புல்லிவிபரப்புளிகள்

நம் மந்தைமுன்னணியின் தாடிக்கார ஏட்டு ஆட்டையா ஒரே ஆட்டையா தரவு பிடுங்கித் தந்திருக்காங்களாம்.
அதிலே ஒன்று http://youtu.be/vSGNybMDTgI என்ற USA Today விழியத்துண்டம்.


இப்படியான இணைப்புகளைத் தருவதைத்தான் தன் தாடியிலேயே ஆடு கொதியெண்ணெயைத் தடவுவதென்பேன்.

முதலாவதாக, இப்படியான இணைப்புகள், அமெரிக்காவிலே வரும் சந்தர்ப்பங்கள் எவை எனக் காணவேண்டும். பதினைந்தாண்டுகள் இங்கே வாழ்ந்திருந்து பார்த்த என்னைவிட, இலங்கையைப் பார்க்காமலே அநாமதேயமாக யூசுப் என்றவர் இலங்கையின் கிழக்கின் சனத்தொகை விபரத்தினைக் கொடுத்ததுபோல, ஆட்டு ஏட்டையாவுக்கு அவர் வெறுக்கும் அமெரிக்காவை அதிகம் தெரிந்திருக்கக்கூடும் பேராண்டவன் பெருங்கருணையால். என்றாலும் சொல்ல முயற்சிக்கின்றேன்.

இப்படியான துண்டங்கள் அமெரிக்காவிலே வரும் சந்தர்ப்பங்கள் பொதுவாக இவை:
1. அமெரிக்காவிலே இஸ்லாமியபோபியாவோ முஸ்லீம் ஒவ்வாமையோ சும்மா பார்க்குமளவுக்கே இருக்கின்றதோ என்ற எண்ணத்திலே அப்படியாக இல்லை என்றவிதத்திலே பேரூடகங்கள் தரும்

2. ஏதாவது "பயங்கரவாதச்சம்பவங்கள்" நடந்தால், வழக்கம்போல, வலதுசாரி கிறீஸ்துவ, யூதக்குழுக்கள் விசாரணையின்றியே முஸ்லீங்கள்மேலே பழியைப் போடும்போது, சாதாரணமுஸ்லீங்கள் மற்றவர்களைவிட வேறானவர்கள் இல்லை என்பதை மிகுதியான மக்களுக்குக் காட்ட இப்படியான நிகழ்ச்சிகள் வரும்

3. முஸ்லீம் மதநிகழ்வுகள் வரும்போது, அவற்றூடாக, முஸ்லீங்களும் மற்றைய அமெரிக்கர்கள்போன்ற சாதாரணமனிதர்களே என்பதைக் காட்ட வரும்.

இப்போது யூஎஸ்ருடே விழியத்துண்டினைப் பார்த்தால், அதிலே சொல்லவருவது, முஸ்லீங்களை மற்றைய அமெரிக்கர்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்பதே. ஏனெனில், அவர்களின் தொகை குறிப்பிட்டத்தக்கது என்பதையும் அவர்கள் சாதாரணமுஸ்லீங்களே என்பதையும் குறிப்பிடவே. ஓரிடத்திலுங்க்கூட, மற்றைய மதங்களைவிட முஸ்லீங்கள் அமெரிக்காவைவிட வெல்லப்போகின்றார்கள் என்று சொல்லவில்லை. சொல்லப்போனால், கிறீஸ்தவர்களின் சிறுகுழுக்களின் தொகையை முஸ்லீங்கள் 2020 இலே எட்டுவார்கள், ஆனால், இன்னமும் அவர்கள் மிகச்சிறுபான்மையே என்பதைத்தான் தெளிவாகச் சொல்கின்றது. | Nevertheless, if we look at the world map, the number of Muslims is over a billion; however, they hardly have any strength in that number.| (இஃது நீங்களே எடுத்துப்போட்ட அவர்களின் ஆங்கிலம் ஆட்டேட்டையா ;-)) இதே மாதிரியாகப் பார்த்தால், ஹிஸ்பானியர்கள்தான் இன்னும் முப்பத்தைந்தாண்டுகளிலே அமெரிக்கப் பெரும்பான்மை இனம். அவர்களிலேகூடப் பலர் கத்தோலிக்கத்திலிருந்து மறு கிறீஸ்துவர்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று போன வாரம் ஒரு நிகழ்ச்சி கேட்டேன். (கத்தோலிக்கர்களையே கிறீஸ்துவர்களாக எண்ணிக்கொள்ளாத சதேர்ன் பெப்டிஸ்டுகள் மேலோங்கிய நாடு அமெரிக்கா; புஷ்-எதிர் மக்கேய்ன் தேர்தலைக் கவனிக்கவும் ;-)) இவ்வாண்டுத்தேர்தலே முதன்முதலாக வெள்ளைப்பெரும்பான்மைக்கிறீஸ்துவத்தினைப் பின்பற்றாத நான்குபேர் தேர்தலிலே கட்சிக்கு இரண்டாக நிற்கின்றார்கள் என்று வெந்துகிடக்கின்ற வலதுசாரிவெள்ளைக்கிறீஸ்துவர்களின் குரல்களை ஆங்காங்கே கேட்கலாம்.

தவிர, மேலும் அவர்கள் இந்நிகழ்ச்சியில்லே சொல்வது, எப்படியாக முஸ்லீங்கள் என்றால், நாற்பதாண்டுகளுக்குமுன்னால், முகமது அலி நினைவுக்கு வந்தார், ஆனால், இப்போது ஒசாமாதான் நினைவுக்கு வருகின்றார் என்று முஸ்லீங்களிலே விழுந்த அநாவசியப்பழியினைச் சுட்டிக் களையவே.

மேலும், இத்தனை மசூதிகள் பெருகுகின்றனவென்றால், எத்தனை இந்து, புத்த ஆலயங்கள் பெருகுகின்றன என்பதையும் பார்க்கவேண்டும். இதனைப் பற்றி நிகழ்ச்சி சொல்லவில்லை.

சொல்லாமல்,விட்ட இன்னொன்று, இஸ்லாம் குறித்துப் பேசும்போது, எத்தனை பேர் மதம் மாறுகின்றார்கள் என்பதையும் எத்தனை பேர்
முயல் குட்டி போடுவதுபோலப் போட்டுப் பெருகுகின்றார்கள் என்பதையும் உள்ளடக்கிய புள்ளிவிபரம். அமெரிக்காவிலே இஸ்லாம் பெருகும் வீதம் முஸ்லீங்கள் குடும்பக்கட்டுப்பாட்டினைக் கருத்திலே கொள்ளாததாலே வருவதா, இஸ்லாத்தினைப் புதிதாக எத்தனை பேர் ஏற்றுக்கொள்வதாலே வருவதா என்பதினை இவர்கள் பேசுவதில்லை. எலிபோல எல்லோரும் குஞ்சு பெருக்கினால், குடும்பம் பெருகித்தான் ஆகும். இதை உணர, நனோதொழில்நுட்பம் தேவையில்லை; என் அம்மம்மாவுக்கு 11 உடன்பிறப்புகள்; அம்மாவுக்கு இரண்டு உடன்பிறப்புகள்; எனக்கு மூன்று உடன்பிறப்புகள்; என் மகனுக்கு உடன்பிறப்பேயில்லை. நாத்திகம் வளர்கின்றதெனக் காட்ட, பரப்ப நானும் நாலைந்தினைப் பெருக்கியிருக்கவேண்டுமோ! இதே பிரச்சனை அமெரிக்காவிலேமட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளிலே உண்டு; யப்பானிலே மாறாகச் சனத்தொகை மங்கத்தொடங்குகின்றது (மணம்செய்யும்வீதம், இறப்புவீதம் இரண்டுமே மிகக்குறைவாக). ஆனால், இலங்கையின் இலங்கையிலேயே குடிசனப்பெருக்கிலே முஸ்லீங்கள் எத்தனை வளர்ச்சிவீதத்தைக் கொண்டிருக்கின்றாகளென்பதையும் (அஃது  எப்படியாக நிகழ்ந்ததெனக் காத்தான்குடி தளமே சொல்கின்றதென்பதையும்) காண்க. (காத்தான்குடி, இலங்கையிலேயே குடிசனத்தொகைவளர்ச்சிவீதத்திலே மிகவும் அதிகமான இடமாகும் என்று ஓரிடத்திலே வாசித்திருக்கின்றேன். உசாத்துணையினை நான் கொண்டு வரும்வரையிலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டாம்)

இதைவிடப்பெரும் பிரச்சனை ஒன்றுண்டு; நான் "நீர்வள முகாமைத்துவத்துக்கான அறிமுகம்"  பாடத்தினை மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது, ஒவ்வொரு தவணையும் ஆரம்பநிலைப் பொறியியல்மாணவர்கள் குழம்புமிடமாகக் கண்டுகொள்ளும் பகுதி ஒன்றுண்டு. நீர்ச்சுழற்சியிலே உப்புக்கடலும் நன்னீரேரியும் சூழலுக்கு ஆவியாதலிலே இழக்கும் நீர் பற்றியது அது; உப்புக்கடல், நன்னீரேரியிலும் விட நீரினை ஆவியாதலிலே இழக்கும்  வீதம் குறைந்தது.  ஆனால், மொத்தமான உப்புக்கடல், நன்னீரேரியின் மேற்பரப்புகளை வைத்துப்பார்த்தால், உப்புக்கடல், ஆவியாக்கும் நீர்க்க்கனவளவிலும்விட நன்னீரேரி ஆவியாக்கும் நீர்க்கனவளவு மிக மிகக் குறைந்தது. இழக்கும்வீதம் . எதிர். இழக்கும் தொகை என்பவற்றுக்கிடையேயான வேறுபாட்டினைப் புரிந்துகொண்டால், அல்லது புரியும் தெளிவும் ஆர்வமும் திறனுமிருந்தால், இங்கே குழப்பம் வர மாணவர்களுக்கு அவசியமில்லை. இதே உதாரணத்தினை முஸ்லீங்கள் பிறப்பினாலே பெருகும் வீதத்தினையும் பெருகும் தொகையினையும் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு, தாம் குழந்தை பெற்றுத்தள்ளுவதையெல்லாம் மார்க்கம் வளர்கின்றது என்ற அடிப்படையிலே செய்தி பரப்பப்புறப்பட்டால், இஸ்லாமியவஹாபித்தலைக்ககும்பலின் அடுத்தபூப்பக்கத்த்தின்இந்துத்துவா கும்பல் "இந்தியாவிலே முஸ்லீங்கள் குழந்தை பெற்றுத்தள்ளுவதாலே சனத்தொகையைப் பெருக்குகின்றார்கள்; ஆகவே, இந்துக்களே நீங்களும் இராப்பகலாகப் புணர்ந்து விந்து தள்ளுங்கள்" என்ற மாதிரி விட்டுக்கொண்டிருக்கும் அறிக்கையிலே நியாயம் வந்துவிடும்.

அமெரிக்காவையே வெறுத்து "டெத் ரு அமெரிக்கா (தமிழிலேயே எழுதிவிடுகிறேன். அது புரியாவிட்டால் ஆண்டவன் துணை)" சொல்லும் தாடியாட்டு ஏட்டையா அமெரிக்க விழியத்துண்டங்களையே துணைக்குக் கொண்டுவருவது (அதுவும் அந்த வலதுசாரி கிளென் பெக்கை அவரின் நோக்கமெதுவெனத் தெரியாமல் உசாத்துணையாகக் கொண்டுவருவது, மந்தைகளுக்கு எதிரானதானும் பயங்கரப்பகிடியானதும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாதவரோடு பேசுவதிலே அர்த்தமில்லை). வலதுசாரி கிறிஸ்துவவெள்ளைவெறித்தனமான கிளன் பெக்கினை எல்லாம் விவாதிக்கக்கூடிய ஒரு மனித ஜென்மம் என்று நான் வெகுகாலமாகக் கருதுவதில்லை. அதனாலே, அவரினது அவர் ஜால்ரா முஸ்லீம் கருத்தாளரினதும் பேச்சினை இங்கே விரித்து எதிர்க்கருத்தினைக் கூறப்போவதில்லை. தாடிக்கார ஆட்டேட்டையா கிளென்பெக்கினை இஸ்லாத்தின் பேச்சுப்பீரங்கி என்று கருதி உசாத்துணை காட்டினால், அவரை அவர் நம்பும் பேரிறையே காக்கட்டும் என்று விட்டுவிடுகின்றேன்.

தவிர, இலங்கையின் கிழக்கிலே முஸ்லீங்களின் தொகை குறித்து கூகுள்+ இணைப்பினைமட்டும் அவர் பேரிலே தரும் இலங்கையர் ஒருவர் ஆட்டேட்டையா பதிவிலே பின்னூட்டியிருக்கின்றார் என்று  ஆட்டேட்டையா நேற்று ஈங்கு குறிப்பிட்டிருந்தார். ஆளே தெரியாதவர், இலங்கையர் என்று ஆட்டேட்டையா எப்படியாகக் கண்டாரென்று அவரே சொல்லட்டும். அதல்ல என் சிக்கல்; ஆனால், ஆட்டேட்டையா குறைந்தளவு அத்தகவல் பிழை என்பதைச் சுட்டிக் காட்டிய புள்ளிவிபரத்தினையேனும் தன் மந்தையிலே குறித்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால், நெப்போலியன் அதைச் செய்யவேயில்லை ;-) செய்வாரென்று எதிர்பார்க்கவில்லை. பொய் ஆயிரம்முறை பரவி, உண்மையாகவேண்டுமோ? ;-) ஆனால், இங்கே நான் சுட்டவிரும்புவது, புள்ளிவிபரவியலிலே எப்படியாக, இவ்விகிதங்கள் விளையாடக்கூடுமென்பதையே; இருக்கும் மொத்தத்தொகையிலே இருக்கின்ற ஒவ்வோர் இனமும் எத்தனை வீதம் என்று கணக்கிடுதல் என்பது, கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்து இன்னமும் இலங்கைக் குடியுரிமையைக் கொண்டிருக்கும் தமிழர்களையோ கொழும்புக்குப் போன தமிழர்களையும் ஊர்காவற்படையின் துணையோடு கொன்று தள்ளப்பட்ட தமிழர்களையும் உள்ளடக்கியதா என்பதையும் கணக்கிலே எடுக்கவேண்டும் ;-) இது பற்றி பின்னொரு முறை...

இதைவிட நகைச்சுவை, எங்கள் ஆட்டேட்டையா, கீழ்க்கண்ட யூரியூப் காட்சியை இஸ்லாத்தின் வளர்ச்சி என்று கருதி இணைப்பிலே ஆதாரமாகப் போட்டிருக்கின்றார்.


இதுக்கு நான் இப்பொழுது என்ன பண்ணவேணும்? இந்த ஐம்பத்திரெண்டு பேரையும் ரூர்பஸ்ஸிலே ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றிக் காட்டவேண்டுமா? அல்லது இஸ்லாத்திலிருந்து கிறிஸ்துவத்துக்க்கு ஐம்பத்திமூன்றுபேர் மாறியிருக்கின்றார்களென்று காட்டி நாவற்கிளையைச் சாய்த்து வெல்லவேண்டுமா? இந்த ஐம்பத்திரண்டுபேருமா உலக சனத்தொகை. என்ன எழவுடா இந்த குறுக்குவாதம்! இதன்படி பார்த்தால், கீழே முஸ்லீம் அன்பர்கள் பரப்பிவரும் 0.01% தரவினைப் பெரிதாக்கி, முஸ்லீங்கள் வன்முறையாளர்கள் என்றெல்லவோ நிறுவவேண்டும் நான்!!
ஆட்டேட்டையாவின் ஐம்பத்தி இரண்டுபேர் டிபென்ஸை வைத்து வாதாடினால், இந்த 0.01% பேரின் நஞ்சு மீதி 0.99% முஸ்லீங்களையும் வன்முறையாளராக்கிவிடும். அதைத்தான் ஆட்டேட்டையா எதிர்பார்க்கின்றார்?

போங்கையா வெறுப்பேற்றாமல்; எல்லா மதவெறியர்களுமே உங்களுக்குள்ளே குத்துப்பட்டுச் செத்துக்கொள்ளுங்கள். ஆனால், தயைகூர்ந்து அறிவியலையும் புள்ளிவிபரவியலையும் அநாவசியத்துக்கு உங்களுக்கேற்றமாதிரியாகத் திரிக்காதீர்கள். நமக்குச் சோறோ பீட்சாவோ போடுவன அவை; அவற்றை நம்பித்தான் குடும்பத்தை ஓட்டுகிறேனேயொழிய, உங்கள் ஐயாறெட்டு பேராண்டவர்களையும் கழிந்தநூற்றாண்டுகளின் செல்லரித்த போதனைகளையும்  நம்பியல்ல. அதனாலேயே, அறிவியலையும் புள்ளிவிபரங்களையும் உங்கள் நம்பிக்கைகளுக்கேற்கத் திரிக்கும்போது, எரிச்சலும் கோபமும் வெறுப்பும் வருகின்றது. இதிலே எந்தச் சூனா  அதன் மதம் கொண்டு திரித்தாலும் ஓநாய் எனக்குத் திரும்பிச் சுட்டிக்காட்டச்சொல்கின்றது.


||சீர்படுத்தப்படாத இக்குறிப்பு தொடர்ந்து தகவலோடும் உசாத்துணையோடும் இயன்றவரை முழுமையான குறிப்பு ஆகும்வரை மேம்படுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கும்||


கேளுங் கல்  தரப்  படும்
தட்டுங் கல் திறக்கப் படும்
(சொன்னவர் ஈசா நபி)


மதம் என்பது அடக்கப்படவேண்டியது
மனிதம் என்பது வளர்க்கப்படவேண்டியது
(நாங்களும் பஞ்ச் லைன் செருப்பு பிஞ்சிடச் சொல்டுவோம்ல!!)


Saturday, September 22, 2012

சுப்பிராமணியசூவாமிகளும் சுனகவாப்பிரியாணிகளும்

சுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள் என்று வட இந்தியத்தொலைக்காட்சி நிகழ்வுகளிலே போடாகப் போடுகின்றார்கள்.


ஆனால், இலங்கையிலிருந்து வடும் தி நேஷன் செய்தியினை வாசித்தால்...

this is against Subramaniam swamy's and Chari's lies in this video http://youtu.be/3c6f24T7AIs

Ethnic polarization


The wartime ethnic polarization is somewhat reflected in the recently concluded provincial elections in the East. The United People’s Freedom Alliance (UPFA) managed to lead in the East with a thin majority of 31.58% as against the Illankai Tamil Arasu Katchi (ITAK) that secured 30.59% of the vote. Moreover, UPFA lost the districts of Batticaloa and Trincomalee to the ITAK. Overall, the UPFA vote base in the East has eroded significantly in comparison to the previous provincial elections in 2008, from 52% to 31%. As against the 2010 general elections, the UPFA votes have reduced in the following manner in the province: from 51% to 33% in Ampara, from 34% to 31% in Batticaloa and from 42% to 28% in Trincomalee.

On the other hand, the ITAK has increased its votes from 2010 general elections. In Trincomalee, it increased from 24% to 29% while in Batticaloa the increase was from 36% to 51%. The votes for ITAK increased from 10% to 16% in Ampara. However, in Sinhala majority poling divisions like Seruwila, the UPFA polled 44.6% as opposed to ITAK’s 12.57% and SLMC’s 6%. Tamil majority areas voted for ITAK. For example, in Padirippu ITAK secured 77.44% of the vote. The Sri Lanka Muslim Congress (SLMC) won in Muslim majority areas like Samanthurai (52.74%) and Kalmunai (54.35%).

Broadly speaking, the Tamils voted for the ITAK while the Muslims voted for the SLMC. However, apart from the Sinhalese vote, the UPFA managed to capture a significant chunk of the Muslim vote. UPFA’s electoral presence in SLMC strongholds like Samanthurai and Pothuvil substantiate this. For this achievement, all praise should go to the Muslim politicians aligned with the UPFA. The ruling alliance has not been successful in maintaining the popular support of the Tamil constituency. Only one Tamil from the UPFA list in the East, Sivanesathurai Chandrakanthan, the former Chief Minister of the province, was able to win. Col. Karuna’s sister’s electoral defeat reflects the mood in the Tamil constituency in the East.
~~~~~~~~~~~
இன்று அடிப்படைவாதப்பதிவர்கள் இலங்கையின் கிழக்கிலே இருக்கும் இனவிகிதாசாரத்தையே மாற்றி இதுதான் என்று எழுதுகின்றார்கள்.  ("ஜெனீவாவிலே சிங்கள அரசினைத் தாக்கும் ஐநாவே பர்மாவை எதற்காக நீ தாக்கவில்லை" என்ற அளவிலே எழுதும் இவர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. ராஜபக்ச அரசுக்கு ஆதவளிக்கும் தமிழகத்தின் இந்த சுனகவாப்பிரியாணிகளுக்கும் இந்துத்துவா சுப்பிராமணியசூவாமிகளுக்கும் தமிழர்களின் நலனைப் பொறுத்தமட்டிலே சாரையும் நாகமும்போல பிணைப்பிருக்கும். ஆக, பாக்கிஸ்தான் பற்றி வரும்போதுமட்டும், பேதமாகிவிடும்)

ஆனால் இலங்கையின் கிழக்கின் அமைவு தமிழர்களைக் கலைத்தபின்னும் இன்னமும் இப்படியாக: http://en.wikipedia.org/wiki/Eastern_Province,_Sri_Lanka

Demographics

Population

The Eastern province's population was 1,460,939 in 2007.[2][3][4] The province is the most diverse in Sri Lanka, both ethnically and religiously.
The population of the province, like that of the Northern Province, has been heavily affected by the civil war. The war has killed between 80,000 and 100,000 people in Sri Lanka comprising all ethinic groups.[9] Several hundred thousand Sri Lankan Tamils, possibly as much as 400,000,[10] have emigrated to the West since the start of the war. The large number of internally displaced persons at the conclusion of the conflict had been now settled except for a few hundred thousands who are still living in refugee camps in the East. There are approximately 80,000 Sri Lankan refugees in India.[11] Many Sri Lankan Tamils have also moved to the relative safety of Colombo. The conflict has also caused some of the Tamils, Moors and Sinhalese who lived in the Northern and Eastern provinces to flee to other parts of Sri Lanka.
Population (2007 Estimate)[2][3][4]
Administrative
District
Sri Lankan
Tamil
Sri Lankan
Moor
Sinhalese Burgher Indian
Tamil
Sri Lankan
Malay
Other Total
Ampara 111,948 268,630 228,938 929 58 163 53 610,719
Batticaloa 381,841 128,964 2,397 2,412 143 81 19 515,857
Trincomalee 95,652 151,692 84,766 967 490 327 469 334,363
Total 589,441 549,286 316,101 4,308 691 571 541 1,460,939

Ethnicity

Ethnicity in Eastern Province(2001)
Population

Percent
Tamils
  
40.39%
Sri Lankan Moors
  
37.64%
Sinhalese
  
21.64%
Others
  
0.33%
Population of Eastern Province by ethnic group 1881 to 2007
Year Tamils1 Moors2 Sinhalese Others Total
No.
No. % No. % No. % No. %
1881 Census 75,318 58.96% 43,001 33.66% 5,947 4.66% 3,489 2.73% 127,755
1891 Census 86,701 58.41% 51,206 34.50% 7,508 5.06% 3,029 2.04% 148,444
1901 Census 96,917 55.83% 62,448 35.97% 8,778 5.06% 5,459 3.14% 173,602
1911 Census 101,181 55.08% 70,395 38.32% 6,909 3.76% 5,213 2.84% 183,698
1921 Census 103,245 53.54% 75,992 39.41% 8,744 4.53% 4,840 2.51% 192,821
1946 Census 136,059 48.75% 109,024 39.06% 23,456 8.40% 10,573 3.79% 279,112
1953 Census 167,898 47.37% 135,322 38.18% 46,470 13.11% 4,720 1.33% 354,410
1963 Census 246,059 45.03% 184,434 33.75% 108,636 19.88% 7,345 1.34% 546,474
1971 Census 315,566 43.98% 247,178 34.45% 148,572 20.70% 6,255 0.87% 717,571
1981 Census 410,156 42.06% 315,436 32.34% 243,701 24.99% 5,988 0.61% 975,251
2001 Census3








2007 Estimate 590,132 40.39% 549,857 37.64% 316,101 21.64% 4,849 0.33% 1,460,939
Sources:[2][3][4][12]
1 Sri Lankan Tamils and Indian Tamils. 2 Sri Lankan Moors and Sri Lankan Malays. 3 2001 Census was only carried out partially in the Eastern province.

Religion

Population of Eastern Province by religion 1981 census
Administrative
District
Hindu Muslim Buddhist Roman
Catholic
Other
Christian
Others Total
No.
No. % No. % No. % No. % No. % No. %
Ampara 72,809 18.72% 162,140 41.68% 145,687 37.45% 5,643 1.45% 2,387 0.61% 304 0.08% 388,970
Batticaloa 218,812 66.24% 78,810 23.86% 9,127 2.76% 19,704 5.96% 3,795 1.15% 85 0.03% 330,333
Trincomalee 80,843 31.56% 76,404 29.85% 82,602 32.27% 14,303 5.59% 1,280 0.50% 516 0.20% 255,948
Total 372,464 38.19% 317,354 32.54% 237,416 24.34% 39,650 4.07% 7,462 0.78% 905 0.09% 975,251
Source:[5]




அடிப்படைவாதப்பதிவர்கள் பதிவுகளிலே மதத்தினை திணிக்கும்விதமே தனி
சிந்திக்கவும் என்று பெரியார் பெயரிலே மறைந்து நின்று மற்றைய மதங்களைத் தாக்குவார்கள்.  அல்லது, சார்ந்திருக்கும் ஊர்களின் பேரிலே பதிவிடுகின்றோமென்று மதங்களைத் திணிப்பார்கள். அல்லது, வழக்கம்போல, சமையற்குறிப்புகளைத் தலைப்பிலேயிட்டுவிட்டு, பின்னாலே மதங்களைத் திணிப்பார்கள். மற்றவர்கள், மதம் சாராதார்கள் கேட்டால்மட்டும் என் மதம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது, அதை விமர்சிக்கக்கூடாதென்பார்கள். அமெரிக்க, இஸ்ரேல் நிலைப்பாட்டுக்கு எதிரான, பாலஸ்தீனம், குர்திஷியம் போன்றவற்றின் முழுமையான  ஆதரவாளனான எனக்கே இப்போதெல்லாம் சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், எகிப்திலே உள்ளே அடிப்படைவாதிகளாலேயே கொல்லப்படும் முஸ்லீங்களைக் கவனிக்காது, ஆக, ஒரு கொப்டிக் கிறீத்துவ ஏமாற்றுக்காரன் எடுத்த ஆபாசத்துக்காக, ஊரைக் கொளுத்தி ஆட்களைக் கொல்லத்துடிக்கும் இப்படியான ஜென்மங்கள் வெறுப்பை ஏற்படுத்துகின்றன.


நம்மள்கி பதிவு என்ற பெயரிலே ஒரு பூனை, இலங்கையின் 1800 களின் படங்களைக் கொண்டு வந்து தென் தமிழகத்தின் சீலைப்போராட்டத்தை நிறுவ நிற்கின்றது. இதன்மூலம் இதன் நோக்கு சாதியத்துக்கு எதிரானதல்ல, ஆனால், அதற்குப் பின்னூட்டமிடும் மதவெறியர்களினை ஊக்குவிப்பதே என்பதாகவிருக்கின்றது என்பது தெட்டத்தெளிவு.
http://www.nambalki.com/2012/09/1_21.html

இதிலே சீலைப்போராட்டத்தின் படங்களெனப்படுகின்றவை இலங்கையின் ரொடியர் இனத்தின் 1800 களின் படங்கள்.
http://lankapura.com/2009/06/low-caste-girl-at-market-place/
http://lankapura.com/2008/10/group-of-nude-rhodiyas-ceylon/

சுப்பிராமணியசூவாமிகளுக்கும் சுனகவாப்பிரியாணிகளுக்கும் டெர(ர்)ரி ஜோன்ஸுகளுக்கும் பெரிதாக ஏதுமே வித்தியாசமில்லை. எல்லாமே மதவெறிகளின் ஒரே கூட்டமே; ஆக, நிறம்மட்டும் காவி, பச்சை, சிவப்பு, கறுப்பு என்பதாக மாறுபடும்.

எல்லாமதங்களிலுமே மிதவாதிகள் வாய்களைச் சாப்பிடவுங்கூடத் திறக்கின்றார்களோ தெரியவில்லை.பேசாமல்,  விஜய், அஜித் சண்டையிலே மும்முரமோ தெரியவில்லை


Friday, August 10, 2012

அனுமான் சாமி ஆஜா!!

மதுரையை மூட்டிய சுண்டலபாண்டியன்!
ஒத்தையாள் கட்சி உன்மத்தன் ஈனமானதமிளன்
உலக்கைப் புரட்டு உன்மைத்தமிளன்!
ஆர்வாடு கண்ட அடங்கால் தமிளன்!
டில்லி கண்ட பஹூத் அச்சாத்தமிளன்!
உலகத்தில் மிஞ்சிய ஒரே ஊறுகாத்தமிளன்!
அண்ணன் சூப்புறஸாமி வால்க! வால்கவே!

"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு களங்கள் இருக்கின்றன."

"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு களங்கள் இருக்கின்றன." 

திமுக லடாய்டாக்குகளோட அடுத்த டயலாக்குகள் இவையிருக்கும் பாருங்க

"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு கலங்கள் இருக்கின்றன."
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு காலங்கள் இருக்கின்றன."
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு கழகங்கள் இருக்கின்றன."
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு கலயங்கள் இருக்கின்றன."

ஜிவ்னு கிக்கேறி வெறிக்குதுப்பா!!
~~~~~
"திமுக ஒரு ஜனநாயக அமைப்பு என்பதிலே எனக்குப் பிரச்சனையிருக்கின்றதேயொழிய, மக்கள் அமைப்பு என்பதிலல்ல"

ஒத்துக்கொள்கிறேன்; ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி, உதயநிதி இப்படியாய்ப் பெருமக்கள், பெறாமக்கள் அமைப்பே திமுக.
~~~~~
"freedom to choose" என்று போராடுவோரிருக்க, "three hours to Juice" என்று போராடுவோருமிருக்கின்றார்.

இதிலே நீர் எவ்வகையென்று உமக்கே தெரியுமென்று நினைக்கின்றேன்.
நான் வாருகிறேன்.
 

கவர்ச்சிகரமாகத் தலைப்பிடுவது எப்படி?

கவர்ச்சிகரமாகத் தலைப்பிடுவது எப்படி?

Thursday, August 09, 2012

சின்னச்சாமி சுப்பிரமணியன் குடும்பம்

சின்னச்சாமி சுப்பிரமணியன் குடும்பம்
(அடிப்படைக்கறுப்புவெள்ளைப்படம் இணையத்திலே  )

கதாகாலம்



  • கதாகாலம்
    -------------


    சீர்திருத்தக்காரன் சீந்தாமல்
    சிதிலமாய்ச் சிதறிச் சரிகிறான்  
    கொல்லப்பட்டவன் கதைகளைக்
    கொலைகாரன் எழுதுகின்றான்

    இடைத்தரகன் கூலிக்குச் சூல் சுமக்கிறான்

    மாடுமேய்ப்பவன் எல்லைக்கோடுக்கப்பாலும்
    பெருவிரலழித்து வந்து போகிறான்
    இத்தனைக்குப்பின்னும்
    எஞ்சியவன் விந்தி 
    உந்திக்கொண்டிருக்கிறான்

    சவத்தின் இலக்கியம்,
    பனியாய்ப் பொழிந்து
    மழையாய்ப் பெருகி
    கதிராய் எரித்து
    -கடந்து போகிறது 
    காலம்.

    மனிதனின் மகத்தான பதக்கத்தை
    உன்னதமாய் நீயே வைத்துக்
    கொ...............ல்.

Monday, August 06, 2012

புலனழிதல்

பன்னிரெண்டு பதின்மூன்று ஆண்டுகளின்முன்னால், திண்ணை இணையத்தளத்திலே உரையாடிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்திலே திண்ணையின் இந்து(ய)தேசியப்பூனைக்குட்டி பையிலேயிருந்து குதித்ததுபோலப்பட்டது. அந்நேரத்திலே, நண்பர் கிரிதரன் பதிவுகள் தளத்திலே உரையாடத்தொடங்கினோம் - நான், கிரிதரன், டிசே, மைக்கல், நா. சுசீந்திரன், ரோஸாவசந்த். ஒரு கட்டத்திலே இலங்கைப்பிரச்சனை பற்றி என் நிலைப்பாட்டினை ஏதோ "கவிதை"யிலே நான் சொல்லியபோத
ு, ஏற்கனவே என்னைத் தெரிந்திருந்தக்கூடிய ஒருவர், வேறுபெயரிலே சித்தார்த்த 'சே' குவேரா ஒரு வலதுசாரியாகவிருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருந்தார். இதுவரை அவர் யாரென நான் அறியமுற்பட்டதில்லை. ஆனால், அப்படியான அடையாளப்படுத்துதல், என்னை மிகவும் பாதித்தது. அடிப்படையிலே கருத்தளவிலேனும் இடதுசாய்வுநிலைப்பாடு எடுப்பவனாகவோ மார்க்ஸிய சித்தாந்தத்தின் அடிப்படையுள்ளவனாகவிருப்பவனாகவோதான் என்றும் நான் பார்க்கப்படவிரும்புவதால், அமெரிக்க வலதுசாரிகளின் அடையாளமாகக் காணப்பட்டதிலே மிகவும் பாதிப்படைந்தேன்.

ஆனால், காலப்போக்கிலே, சிந்தனைக்கு இடமளிக்காத கிளிப்பிள்ளை மார்க்ஸியமும் ஆலவாயிலே புலவன் கீரனுக்குத் தோன்றியபடி, ஒரு புறம் வலதுசாரிப்பண்பும் மறுபுறம் இடதுசாரிப்பண்பும் சுற்றிய புளிப்பினிப்பு விளையாட்டுக்காட்டும் தமிழ்ப்பின்நவீனத்துவவாதிகளின் (இப்போது தலித்தியம், பிரதேசவாத எதிர்ப்பு, முஸ்லீம்மக்கள் கரிசனை பேரிலே புலியெதிர்ப்பினைமட்டுமே நிறுத்துகின்ற அதேகூட்டம்) போக்கும் மத அடிப்படைவாதத்துக்கு ஒப்பான, வலதுசாரித்தனத்துக்கு ஒப்பான அதே முடிவிலேயே கொண்டு சென்று நிறுத்தியிருப்பதை உணர்ந்தபோது, கட்சி+குழுசாராத கருத்துநிலையினை எப்போதும் ஆய்ந்துகொள்ளும் தனிமனித இடதுசாரியாகமட்டுமே இருக்கும் வசதி எனக்குச் சிறப்பெனப்பட்டது. இவ்வளவிலேயே இன்றைக்கும் தமிழ்த்தேசியத்தினையும் தலித்தியத்தினையும் தென்னாசியமார்க்ஸியக்குழுக்களைய
ும் தமிழக திராவிட அரசியலையும் ஏன் அமெரிக்க, சீன அரசுகளையும் என்னாலே காணமுடிகின்றது. இப்போதெல்லாம் வலதுசாரி தொடக்கம் 'அமெரிக்ககார்ப்பரேட்' வரை பல்வேறு வழிகளிலே திட்டுவாங்கும்போதும் ஒரே நேரத்திலே இந்துத்துவா, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிளிப்பிள்ளைக்காம்ரேட்டுகள் என்று அனைத்துப்பக்கங்களாலும் அடிவாங்கும்போதும் அப்போது, சித்தார்த்த 'சே' குவேரா என்று கௌதம சித்தார்த்தனையும் ஏர்னஸ்ரோ குவேராவினையும் வியந்து பொருத்திக்கொண்ட பெயரோடு வலதுசாரி என்று பேர் பெற்றதிலே வந்த நோ வருவதில்லை.

இன்று பார்க்கின்றேன்; பெரியாரையும் பிரபாகரனையும் விமர்சி என்று சொல்கின்றபோது, அதையே கூடச் சொல்ல எனக்கு எதுவித மாற்றுக்கருத்துமிருப்பதில்லை. ஆனால், அதேகூட்டம், சிறுபான்மையினரை ஒடுக்கிய ஸ்ராலினையோ ஆயிரம்பூக்களிலே தொள்ளாயிரத்துமுப்பத்திநான்கு பூக்களை நசுக்கிய மாவோவையோ ஒருபாலுணர்வுள்ளவர்களை இழிவாகக்கூறிய என்றும் என் ஆதர்சபுருசர்களின் ஒருவனான 'சே'யையோ ஸ்ரீலங்காவின் கொலைக்கூட்டத்துக்கு ஆதரவளித்ததால் என்னளவிலே விடுதலை செய்த வரலாறு மீண்டும் அடைத்துவிட்ட காஸ்ரோவையோ விமர்சிக்கவிடுவதில்லை. புலிகளின் பேரான இயக்கக்கொடுமைக்கு இத்தனை மக்களைக் கொன்றதற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு நன்றி சொல்லும் தலித்தியர்களும் காலப்போக்குடன் இயங்கிக் கூர்ப்படையாமல் கட்டித்த சிவப்புப்புத்தகங்களையே மேற்கோள் காட்டுவோமென்ற பேரிலே இனவொடுக்கலை இல்லையென்று மறுத்து கார்ல் மார்க்ஸின் மட்கியகச்சைக்குள்ளையே மறைத்துக் கொடிகாட்டும் தமிழக அயோக்கிய கம்யூனிஸ்ற்பாசிஸ்ற்றுகளும் (yes, fuckingly or mockingly these bastards are the ultimate ugliest fascists, none other; at the same time they are boorish ostriches too) அமெரிக்க வலதுசாரிக்கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கும் இஸ்ரேலிய அடக்குமுறை செய்யும் சியோனிஸ்டுகளுக்கும் எதிரானவர்கள்போலத்தோன்றினாலுங்கூட, சுரண்டிப்பார்த்தால், அதே அயோக்கியத்தனமும் தம்மீதான விமர்சனத்தை ஏற்கமறுக்கும் குழுவடிப்படையிலேயோ கட்சிக்கட்டுக்கோப்பென்ற மர்ஜுவானாவின் போதையிலோ சேர்ந்தியக்கும் மாபியாத்தனத்துடனுடமேதான் இருக்கின்றார்கள். அண்டார்ட்டிக்காவோ ஆர்டிக்கோ எதுவென்றாலும், பனி அதேபனிதான்.

சுயத்தோடு சிந்திக்கச்சொல்வதுதான் செய்வதுதான் என்னைப் பொறுத்தமட்டிலே மார்க்ஸியமும் பெரியாரியமுமென்று சொல்வேன். தனிமனிதனாக இடதுசாரித்தமிழ்த்தேசியத்தைக் கைப்பிடிக்கவே என்னால் முடியும். தேர்ந்தெடுத்து அமெரிக்காவை திட்டு ஆறு இடுகைகள் போட்டும் கியூபாவை வாழ்த்தி ஆறு இடுகைகள் போட்டும் மார்க்ஸியத்தை, தலித்தியத்தை, பெண்ணியத்தை, இன ஒடுக்குமுறையை, மூன்றுகால்முயலை நிலைக்குத்தாக நிறுத்த முயல்கின்றவர்கள், முயங்குகின்றவர்கள் "வலதுசாரி" என்றழைக்கும்போது, இப்போது வலிப்பதில்லை - அமெரிக்க வலதுசாரிகள், "fucking godless red commie" என்று அழைக்கும்போது வலிக்காததுபோலவே.

மனிதன் உருவாக்கும் கடவுளுக்காக, மனிதன் சகமனிதனை மாய்ப்பதைப்போலவேதான், மனிதன் உருவாக்கும் கொள்கைக்காக, மனிதன் சகமனிதனை மாய்ப்பதுமாக முடிகின்றது.

தன்னை நிறுவுதல் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமே; சரியானதை நிறுவுதல் என்பதுதான் எய்நோக்காயிருத்தல்வேண்டும். கல்லான, அல்லாவிடின் உருவமில்லாத கடவுள் உட்பட்ட எதுவுமே நியாயமான விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல.

சம்புக்கோளறுபதிகம்

சம்புக்கோளறுபதிகம் ============== முன்னால், மகிந்தன் மிகுந்தலை வந்தான்; புத்தன் ஞானம் பெற்ற போதி மரக்கிளை தருவதாய்ச் சொன்னான். பின்னால், மித்தை மிகுந்தலை வந்தாள்; உன்மத்தர் ஞானம் பெறப் போதி மரமுளை நாட்டி நின்றாள். மிகும் தலை போதி தழைத்தது - முள்விட்டு.

Thursday, July 19, 2012

Birthday Greetings, Mr. Mandela.

Incriminated History will apologize to him TOO.




-to the prematurely fallen one

Birthday Greetings, Mr. Mandela.

 

Wednesday, July 18, 2012

ராஜேஷ் கன்னா


ராஜேஷ்கன்னாவின் படங்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அதிலேதும் குறைந்துபோகவுமில்லை. ஆனால், அவர்படப்பாடல்கள் எழுபதுகளை ஞாபகப்படுத்துவற்காக...

Tuesday, July 17, 2012

பீலா II

DMK Entertainment Presents
A NARROW ANGLE CREATIONS PRODUCTION
பீலா II

A FILM BY CHANAKYA TOILET

"என் வாழ்க்கையிலே
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும் ஏன்
ஒவ்வொரு நொடியும்
நானே சொதப்பினதுடா..."

Monday, July 16, 2012

மவுண்ட்லவேனியா கடற்கரை 1900'

மவுண்ட்லவேனியா கடற்கரை 1900'
View of Mount Lavinia Hotel & Sea Shore, Ceylon Early 1900s
Original: http://lankapura.com/2009/05/view-of-mount-lavinia-hotel-sea-shore-ceylon-early-1900s/


ஆயிரம் கேடி புண்ணுடையாள்!

ஜெயபாரதமாதா!

ஆயிரம் கேடி புண்ணுடையாள்!


"ஃபெட்னா.. இந்தியவிரோதத்தை அமெரிக்காவில் வளர்க்கும் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையது என நீலகண்டன் அரவிந்தனின் ‘உடையும் இந்தியா’ மிக விரிவான ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறது."

ஜெய்பாரதமாதாஜீ! புத்தகம் எழுதாதுப்பா; எடுத்தாளனேதான் எழுதணும்; டைப்பனும். தமிழே உன்குறிநுனியில தண்ணிபோட்டுத் தள்ளாடுது! இதுல இதிகாயாச எயுத்தச்சன் ஈயாளு பேரு பாரு!! பலே ஜோரு!!!


சிண்டை முடிச்சுப் பூச்சூட ஆண்டைக்குத் தொண்டுகள் அகப்பட்டால், அல்லாரும் அல்ட்ரா அறிவுஜீவிங்கதான்!!

Sunday, July 15, 2012

திருமலை இந்துக்கல்லூரியின் பழையமாணவன் ஒருவன் நினைவாக....

திருமலை இந்துக்கல்லூரியின் பழையமாணவன் ஒருவன் நினைவாக....
பிடித்த பாடலுடன்....

Saturday, July 14, 2012

மீண்டும் அவள்


மீண்டும் அவள் யாருடைய இப்பெண் அம்மம்மாவின் அம்மம்மாவோ தெரியாது. ஆனால், 1800 களின் பிற்பகுதிகளுக்கு இப்பெண்ணின் பார்வையும் நிற்கும் சாய்வும், "ஒளிபடைத்த கண்ணும் உறுதிகொண்ட நெஞ்சும்" என்பதாகமட்டுமே சொல்கின்றன. மிகவும் கவர்ந்துகொண்ட படம் Tamil woman Ceylon Late 1800′s Original photo: http://lankapura.com/2009/12/tamil-woman-ceylon-late-1800s/ Hope I won't end up like Christopher Reeve in "Somewhere in Time"

குஸ்டாவ் கிளிம்ட்


குஸ்டாவ் கிளிம்ட் பிறப்பு 14, ஜூலை 1862

Thursday, July 12, 2012

குழந்தையும் தாயும்


குழந்தையும் தாயும் (இதுக்குமட்டும் பால் கொடுக்கும் இளந்தாய் என்று தலைப்பை வைச்சிருந்தனெண்டால், "பில்லா II" போஸ்ருக்கு மொச்ச இலையான்களையும்விடக்கூடக் குவிஞ்சிருக்கும். சா! Tamil woman & child 1890-1900s Original Photo: http://lankapura.com/2010/06/tamil-woman-child/ (Thanks to Lankapura.com)

இலங்கைத்தோட்டத்தொழிலாளர்கள் -1880


இலங்கைத்தோட்டத்தொழிலாளர்கள் -1880 The Plantation Tamils of Ceylon Original Photo: http://lankapura.com/2009/11/the-plantation-tamils-of-ceylon/ (source: Lankapura)

பில்லா II? நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்

பில்லா II? நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்
தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும்.
ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும்.

பழசைப் புதுசாக்கல்

Damsel in Distress 
மூலப்படம்: http://lankapura.com/2010/06/young-woman-ceylon-circa-1880/
(படவுரிமை அவர்களுக்கே).

Monday, June 25, 2012

மழையாட்டம்


மழையாட்டம் ஒரு வெள்ளைப்பொய்யைப்போல் அழிகிறது தூசு

Thursday, May 31, 2012

யாழ்நூலகம்

ஒஸ்லோ சுதந்திரமன்று - 2012


ஊர்மிளா சௌத்ரி : நேபாளம் மனால் அல்-ஷரீப் : சவூதி அரேபியா மோனா எல்ஹாவி : எகிப்து அஸ்மா ஜஹாங்கீர் : பாக்கிஸ்தான்

Sunday, May 27, 2012

குண்டலகேசி

மண்டியிட்டுக் குந்தி
நிலைக்குத்தாய் நாட்டுகிறாள்
பத்தா தீசா
-சிறுநாவற்கிளை.
ஒவ்வொரு நீள்கேசமும்
தனித்தெடுத்துப் பிடுங்குவாள்...
கேட்பு |
காட்சி |
வாசிப்பு |
எழுத்து...

முடிக்க,
மழிக்கும் கருக்குமட்டைக்காய்க்
காத்திருக்கின்றாள்.

புறப்பூச்சாய்
பேச்சுமட்டும் இன்னும் பிரிந்து
தொங்கிக்கொண்டிருக்கின்றது.

Friday, May 18, 2012

மூன்றாண்டுகளை நினைவிருத்தி...


தடங்களின் வழி நடக்கும் நினைவு. சின்னமுளை மெல்லவெழும். படரும் கொடி பரவும்.

Thursday, May 17, 2012

அ!யோக்கியன் வர்றான்; இலக்கியத்தை ஒழிச்சுத் தீ வை

எத்தனையோ மாதங்களின் முன்னால் தனக்கு இந்திய இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து வந்த கடிதங்களைத் திடீரென ஜெயமோகன் இவ்வாரம் குறிப்பாக மே 18 இனை உள்ளடக்கிய - ஸ்ரீலங்கா_ஈழம்_இந்தியா சார்ந்த  அரசியலிலே ஒரு மாற்றுப்புள்ளியினை ஏற்படுத்திய மூன்றாமாண்டினை நினைவுகூரும்- இவ்வாரம் ஜெயமோகன் முன்னெடுத்துப்போட்டது எதேச்சையாக நடைபெற்றதல்ல;  

 What I hate with certain co-called Indian Tamil literary luminaries is their fucking preachy diphtherial Diarrhea. These people lay low when the real loud supportive voices needed for sake of humanity only to come out from their hideouts for cashing by sailing in the favorable trade wind. They assume that they know even better than the people who faced the problems in first hand and find time to sell their bottle of Gandhian panacea and Dhrama placebos that they themselves can not medicate to get remedy in their daily lives.

This guy called Jeyamohan has no shame in keeping his usually loud "I know all" mouth shut when the people were killed like stray dogs. For a writer who claim that he promoted Thalayasingham and trashed eelam Tamil leftist as well as Tamil Nationalist writers in the name of "spiritual writing" through a surrogate critic, for a person who was hosted by Tamil diaspora (who invited him in Canada and Australia have to be discussed separately - except for Selvam, I do not have any respect to the others), for a person wrote on Thalayasingam and Muttuligam, one should expect him to know more about eelam tamil history. Alas! It is not the case. Just after the war, he went on preaching about Gandhism to Tamils as they were illiterates and never heard or tried in practice. Then, he went on -like every other cash making trash typist or publisher in Tamilnadu- wrote 'uloogam' - a cheap distorted tale in time and space. Then he elevated an anti-eelam NRIs running award to put down iyal award for no strong |apparent| reason. Now he comes to tell us how good Indian army was -in his first blog post- and how the eelam Tamils have win the heart of India -in the second blog post as a response to thirumavaLavan.

The irony is he, an Indian Nationalist Hindutva fascist has all the guts to trash 'Tamil Fascists'; he says, the Tamil Fascists gain by bringing eelam issue to Tamilnadu; here comes the second irony: Whoever they really are and whatever their real motives are Seeman and Nedumaran were never proved for gaining electoral and monetary gains; instead they had enough time incarcerated. Now, look at our accuser and his publisher Kizhakku: Uloogam got sold! 

Now, The Almighty Holly Divine Crap! go, bind and sell your blog posts too; there are your foreign tour guides and Hindutva and Indian Nationalist goons waiting to buy.


ஜெயமோகனின் ஈழம் குறித்த இலக்கியம் என்ற பெயரிலான அரசியல் மிகவும் தெளிவானது. அஃது இவரினைத் தமிழ்நாட்டுக்கு/இந்தியாவுக்கு அப்பாலே பிறநாடுகளிலே ஆதரிக்கின்றவர்களின் அரசியலை நம்பி வளைத்துநிகழ்வது என்பதாக நான் ஊகிக்கின்றேன். இவற்றிலே கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஸ்ரீலங்கா (ஆம்! ஸ்ரீலங்கா) இவை நான்கினையும் எடுத்துக்கொள்ளலாம். கீழே காண்பவை என் அவதானிப்பூடான புரிதல்(மட்டுமே)

கனடா

கனடாவிலே இவரை அழைக்கின்றவர்கள் + உபசரிக்கின்றவர்கள் (நான் அவதானித்ததன்படி) மூன்று வகையான அரசியலைக் கொண்டிருப்பவர்கள்: கண்மூடித்தனமான புலி எதிர்ப்பாளர்கள்; புலி & புலியல்லாதது இரண்டிலும் நியாயமான விமர்சனத்தினைக் கொண்டிருப்பவர்கள்; ஈழ அரசியலுக்கு எட்டாவது முக்கியத்துவத்தினைக்கூடக் கொடுக்காமல் சுயபிம்பத்தினைக் கட்டியெழுப்பவும் தமிழகத்தின் மத்தியதட்டிடம் விரிக்கவும் பரஸ்பரமுதுகு சொறியத்தயாராகவிருப்பவர்கள். (அதிலே இரண்டாவது வகையினைச் சேர்த்தவர்கள்மீது எனக்கு முழுமையான மதிப்புண்டு). கடைசிவகையினரை அவர்கள் பற்றிய பயணக்குறிப்புகளாலும் புத்தவிமர்சனத்தாலும் மிஞ்சி விஞ்சிப்போனால் அவர்களைப் பற்றியே புத்தகம் போட்டே சொறிந்துகொள்ளலாம். முதலாம் வகையினருக்கு புலி அரசியலைச் சாடைமாடையாக விமர்சிப்பதாகக் காட்டிக்கொண்டால் போதுமானது எனும் போக்கும் "புலி எதிர்ப்பு= இந்திய ஆதரவு" என்ற எளியசூத்திரப்புரிதலும் அவரிடமிருக்கின்றதோ என்ற சந்தேகம் அவரின் இந்திய இராணுவக்கட்டுரையைக் கண்டபின்னாலே, வந்திருக்கின்றது. புலி எதிர்ப்பாளர்கள் எல்லோரும் இந்திய ஆதரவாளர்களாக இருக்கமுடியாதென்பது அவரின் இன்றைய திட்டத்திலே ஓட்டையைப்போட்டிருக்கலாம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமுடியாது; "புலி எதிர்ப்பாளர் தான்" என்பதைச் சுட்டியே அவரிடம் இந்திய இராணுவத்தினைப் பற்றிச் சுட்டிய திருமாவளவனிடம் திருமாவளவனிடமும் (அதேபோலவே எதிர்த்திருக்கும்) ஷோபா சக்தியிடமும் தனக்கு மதிப்பு இருக்கின்றதென்பதைச் சொல்லி  இந்திய இராணுவம் நடத்தியதையெல்லாம்  "ஒரு துன்பியல் நிகழ்வாக" ஈழத்தமிழர்கள் மறந்துவிட்டு, இந்தியாவிடம் நெருங்கிவரவேண்டுமென்கின்றார். 

அமெரிக்கா

அமெரிக்காவிலே ஜெயமோகனைத் தூக்கிப்பிடிப்பவர்களின் அரசியல் எனது அவதானிப்பின்படி, அமெரிக்கா உறையும் இந்தியத்தேசியம்பேசும் குழுவினரினதாகும் - தவிர கணிசமானவளவு தினமும் உணவிலே இந்துத்துவா உப்பினைச் சேர்த்து உண்பவர்களும் அடக்கம். இப்படியான இந்தியதேசியம், இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்துத்துவா கூட்டத்தினரின் வலைஞ்சிகை, பதிவுகளைத் தேடிக்காண்க. இவர்களினைச் சார்ந்த நண்பர்களின் ஈழம் தொடர்பான அரசியலைப் பற்றியோ ஜெயமோகன் அமெரிக்கா வந்தபோது, அவருக்கு வழிகாட்டியவர்களின் அரசியல் பற்றியோ பெரிதும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இணையத்தினைக் கடந்த பத்தாண்டிலே கண்டவர்கள் உணர்வார்கள். 

மீண்டும் சண்டைபோட அக்கறையில்லாததாலே ஏதும் விபரித்து ஜெயமோகனுக்கு அப்பால், இவ்விடயத்திலே தெரிவிக்கவிரும்பவில்லை. ஆனால், அந்நேரத்திலே புலிகள் தோற்கும்வரை ஆக்ரோஷமாகப் புலிகளே எல்லா அழிவுகளுக்கும் காரணமென்று இந்திய இராணுவத்தினைத் தூக்கித் தலைவைத்துப் பேசியவர்கள், இப்போது "காரியம் முடிந்தது; அத்தோடு எம் அக்கறை(ரை)யும் முடிந்தது" என்பதாகக்  காணாமலே போய்விட்டார்கள் என்பதையும் காண்க. வேண்டுமானவர்கள்,  ஒரு குறுக்குவெட்டுமாதிரிக்கு, 2000 அளவிலே திண்ணை வலைஞ்சிகையிலே நிகழ்ந்த பின்னூட்டச்சண்டைகளையோ 2004 ஆம் ஆண்டின் தமிழ்ட்ருத் பதிவின் பெரும்பாலான குறிப்புகளையோ  பின்னூட்டங்களையோ 2009 மே-ஜூன் இலே ஜெயமோகனின் அமெரிக்கவழிகாட்டியின் பதிவின் 2009 மே-ஜூன் உள்ளடக்கங்களின் தொனியையோ காண்க ;-)

(ஜெயமோகனின் இயல் விருது பற்றிய கருத்துகள், அஃது அவருக்கு 2007 இலே விவாதத்துக்கு வந்து 2008 இலே செத்து பிறகு 2010 இலே உயிர்த்து 2011 இலே ரஜினிகாந்தின் விழாவில் சிறகு விரித்து ஆனந்தமழையிலே சிலிர்த்துக் கூத்தாடிய அரசியல் தனியே எழுத வேண்டியது)

அவுஸ்ரேலியா

ஈழத்திலே 2009 ஏப்ரல் இறுதியிலே இத்தனைபேர் செத்துக்கொண்டிருக்கும்போது அவுஸ்ரேலியாவுக்கு ஜெயமோகனை அழைத்துச் சென்றவர்களிலே முன்னுக்கு நின்றவர்கள் - ஜெயமோகனின் பதிவூடாகவே நான் காணும் தகவல்களின்படி இருவர்:  லெ. முருகபூபதி & நோயல் நடேசன். (இப்பயணத்திலே மும்முரமாக இருந்தபடியாலேயே உலோகம் எழுதும்வரைக்கும் ஜெயமோகனுக்கு இலங்கை நிகழ்வுகளைப் பற்றிக் கருத்துச்சொல்ல நேரம் கிடைக்கவில்லை என்பதை இத்தால் நாங்கள் உணரவேண்டும்)

லெ. முருகபூபதி என்பவரும்  நோயல் நடேசன் என்பவரும், 2010 ஓகஸ்ரிலே கொழும்பிலே ஞானம் சஞ்சிகையை நடத்தும் ஞானம் என்ற ஞானசேகரன் போன்றோரின் உதவியுடன் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாக "உலகத்தமிழெழுத்தாளர் மகாநாடு" நடத்தியவர்கள் என்று எஸ். பொன்னுத்துரை சொல்கிறார் ;-) ஸ்ரீலங்கா அரசு எல்லாப்பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டதாகத் தோற்றமளிக்கச் செயற்பட்ட இம்மகாநாட்டினை நடத்தவேண்டாம் என்று கையெழுத்துவேட்டைகள் முதல் வாதப்பிரதிவாதங்கள்வரை இணையத்திலே நடத்தப்பட்டன. (லெ. முருகபூபதிக்கும் அண்மையிலே இந்திய உளவுத்துறையாலே வீட்டுள்ள புகுந்து விசாரிக்கப்பட்ட 'கீற்று' சஞ்சிகை நந்தனுக்கும் நிகழ்ந்தவைகூட இணையத்திலே காணலாம்) . மிருகவைத்தியர் & உதயம் இணைய இதழ் நடத்தும் நோயல் நடேசன் என்பவரின் பதிவு தேடியவர்களுக்குக் கிட்டும். 2009 மே முடிந்தவுடன், ராஜபக்க்ஷ தமிழ்மக்களை விடுதலை செய்ததற்கு வாழ்த்தி, வவுனியா முகாம்களுக்குச் சென்று எல்லோரும் நலமே என்று அறிக்கைவிட்டு ராஜபக்ஷவோடு படங்களும் எடுத்துவந்து இன்றுவரை ஸ்ரீலங்கா அரசின்செயற்பாடுகளை முற்றாக ஆதரிப்பவர்களிலே நோயல் நடேசன் முக்கியமானவர். இங்கே அவரின் கட்டுரை, " I am grateful to President Mahinda Rajapaksa for finishing Prabhakaran and saving my people" 

ஸ்ரீலங்கா

இப்படியானவர்கள் அழைக்க சரியாக மூன்றாண்டுகளுக்குமுன்னால், ஈழத்தமிழர்கள் தெருநாய்கள்போலக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அவுஸ்ரேலியா போய் வந்த ஜெயமோகன், இந்திய இராணுவத்தின் நேர்மையை இவ்வாரத்திலே பறைசாற்ற வடகிழக்கினைச் சாராத முருகபூபதி, ஸ்ரீலங்கா அரசினை இக்கொலைகளிலே முழுதாக நியாயப்படுத்தும் நோயல் நடேசன் போன்றவர்களின் ஆதரவு கிட்டலாமோ என்னவோ தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனால், இங்கே இன்னொரு புள்ளி ஆரம்பிப்பதை இன்று ஒரு நண்பர்கள் அனுப்பிய அஞ்சலிலிருந்து உய்த்தறியமுடிகின்றது.

மேலே லெ. முருகபூபதி, நோயல் நடேசன் இவர்களுடன் கொழும்பிலே உலகத்தமிழ்மகாநாட்டினை 2010 இலே நிகழ்த்தியவர் பதிவுசெய்யப்பட்ட வைத்திய அதிகாரி ஞானசேகரன் என்ற ஞானம் . அவர் இன்னும் மூன்று வாரங்களிலே கொழும்பு தமிழ்ச்சங்கத்திலே (ஜூன் 2,3, 4 இலே) மீண்டும்  உலகத்தமிழ்மகாநாட்டினை நடத்தப்போகின்றார்; அது பற்றி அவர் அனுப்பிய மின்னஞ்சலைத்தான் நண்பர் அனுப்பியிருந்தார்:  கீழே காண்க.

இப்போது, ஜெயமோகனின் இந்திய இராணுவத்தின்மீதான "ஊறப்போட்ட உளுந்தை எடுத்து அரைத்துத் தோசை சுட்டத"ற்கான முழு நோக்கு விரிந்து தெரிகிறது.

சோழியன்குடுமி சும்மா ஆடுமா?

("ஜெயமோகனைக் கொழும்புக்குப் போகாமல் பகிஷ்கரி" என்று ஆர்ப்பரித்துக் கையெழுத்துவேட்டையும் பதிவுகளும் பேஸ்புக்குறிப்புகளும் இடப்போகின்றவர்கள், கொடும்பாவி எரிப்பவர்கள், கூக்குரல் வைப்பவர்கள் ஊக்கத்துடன் செய்யவிரும்பின், செய்யவும். அவரிலோ தமிழகத்தின் முன்னணி முடிபிடிங்கி மொழிப்புனைவுமல்லர்களிலே எனக்கேதும் மதிப்பில்லை. இவர்களுக்காக என் இரண்டு நனோமீற்றர் "நான்" இனைவிட்டுக் கையெழுத்து வைக்கப்போவதில்லை; வேண்டுமானால், கைநடுவிரலை உயர்த்திக் காட்டிவைக்கிறேன்.)

இலக்கியம் என்பது இலக்கு உய்ய அரசியல் செய்கின்றவனுக்கு
தத்துவம் என்பது தன்னை சுற்றிக் கோவில்கட்டும் அயோக்கியனுக்கு;
எனக்கு என் பொறியியலே தினப்பருக்கை பொரிகின்றது
இலக்கியக்கீரை கடைவது அநாவசியம்"

=========
From: Gnanam Gnanam
Date: 17 May 2012 09:01
Subject: Jeyamohan attents conference

கொழும்புத் தமிழ்ச்சங்க உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்

 கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றினை  சங்கத்தின் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் எனத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளர் தி. ஞானசேகரன் தெரிவித்தார். உலகறிந்த எழுத்தாளரான ஜெயமோகன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாவல்,  சிறுகதை, அரசியல், வரலாறு போன்ற படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வெற்றிகண்டவர்.

விஷ்ணுபுரம் என்னும் சிறந்த நாவல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ஜெயமோகன் அவர்கள் கொற்றவை, அனல்காற்று, இரவு, உலோகம் உட்பட பதினொரு புதினங்களையும், ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், போன்ற ஒன்பது தொகுதிகளையும், அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும், வரலாற்று நூல்களையும், வடக்குமுகம் என்னும் நாடக நூலையும் கொற்றவை என்னும் காவியத்தையும் படைத்தவர்.

தவிரவும், இலக்கியத் திறனாய்க்வுக் கட்டுரைகளையும் மலையாளக் கவிதைகளின் பல காலகட்ட மொழிபெயர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டவர். மலையாளத்திலும் பல படைப்புகளைத் தந்தவர். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவலுக்கான பரிசுடன் அகிலன் நினைவுப் போட்டி கதாவிருது பாவலர் விருது உட்பட பலவிருதுகளையும் ஜெயமோகன் பெற்றுள்ளார். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ள ஜெயமோகன் இலக்கிய ஆய்வரங்கில் பங்கு பற்றுவதுடன் மாலை நிகழ்வுகளில் சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தவிரவும் பேராளர் பதிவுக்கான முடிவுத் திகதி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலக்கியச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.


Kind Regards
T. Gnanasekaran