அப்படியானால், அச்சில இலட்சம் ஆட்களினால், பலஸ்தீனம் இஸ்ரேலின் கீழேயே அமுக்கப்பட்டிருப்பதுதான் சரியென்கிறீர்களா?
அமெரிக்காவிலே சொகுசுவாழ்க்கை கிட்டியதாலே தனியே நாடு இருந்துங்கூட, திரும்பாத இந்தியர்கள் எத்தனை பேரென்பதை எண்ணிப் பார்த்திருக்கின்றீர்களா? இவையெல்லாம் தனிமனிதத்தேர்வுகள். இத்தேர்வுகளுக்கும் சொந்த நாட்டிலேயே அடிமைத்தனமாக அழுத்தப்பட்டிருப்பவனின் தனிநாட்டுத்தேவைக்கும் சம்பந்தமேயில்லை.
//koothanalluran said... வளைகுடாவில் வாழும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தனிநாடு கிடைத்தாலும் நாடு திரும்ப மாட்டார்கள், வளைகுடாவின் சொகுசு வாழ்க்கை பறி போய்விடுமே//
உண்மை அறியாமல் பேசுகிறார் கூத்தாநல்லூரார். பாலஸ்தீனர்களுக்கு குடி உரிமை துவங்கி எந்த சலுகைகளும் வளைகுடா நாடுகள் வழுங்குவதில்லை. அவர்கள் ஒரு அந்நியர்களாகவே இங்கம் உள்ளனர். அதனால்தான் அந்த இயக்கங்களும் தீவிரத்தன்மைகள் னொண்டதாக உள்ளது. வரலாறோ நிலமைக்ளையோ அறியாமல் பொதுப்புத்தியில் உள்ள கருத்தை இப்படி பொதுவில் வைப்பது முறையல்ல. கூத்தாநல்லூர்கூட சின்ன சிங்கப்புர்தான் அதற்காக அங்குள்ளவர்கள் எல்லாம் அண்டர் கிரவுண்ட் கட்டி பெரிய பெரிய வீட்டில் வசிக்கும் பணக்காரர்கள் என்ற முடிவெடுக்க முடியுமா? பாலஸ்தீனத்தில் சாகும் எண்ணற்ற மக்களுடன் ஒப்பிட வெளியில் இருப்பவர்கள் சொற்பம்தான்.
பெயரிலியின் பதில்கள் சரியாகச் சொல்லப்பட்டுள்ளது. விலக்குகளை விதிகளாக கொள்ள முடியாது.
\\ இத்தேர்வுகளுக்கும் சொந்த நாட்டிலேயே அடிமைத்தனமாக அழுத்தப்பட்டிருப்பவனின் தனிநாட்டுத்தேவைக்கும் சம்பந்தமேயில்லை. \\
இந்த நாட்டுக்காரர்கள் பலரும் பல நாடுகளில் இருக்கிறார்கள் தானே அவர்கள் எல்லோரும் அல்லது அவர்களில் பெரும்பகுதியினர் சொந்த நாடு சரியாகினால் திரும்பி வருவார்களா?! சொந்த நாடு பற்றி எந்தளவுக்கு சிந்தனை வளர்ச்சி இருக்கிறது...
அமீரகத்தில் 15 ஆண்டுகள் பலஸ்தீனிய குழுமம் ஒன்றில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன். சொந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் இருந்து தப்பித்து வந்து அமீரகத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் ஒரு பக்கம் இவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். அதே சமயம் திமிர் பிடித்தவர்கள். சர்வதேச அரங்கில் பலஸ்தீன அரசியல் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவே தினமும் மூன்று (அரபி) நாளேடுகளை வாங்கி படித்தாலும் படிப்பானே தவிர அந்தக் காசை தன் நாட்டு விடுதலைப் போர் நிதிக்காக கொடுக்க மாட்டான். இவர்கள் அகதிகள் என்பதாலேயே அமீரக அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை தருவது மட்டுமல்லாமல் ஊதியமும் அதிக பட்சமே கிடைக்க வழி செய்துள்ளது. இவர்கள் யாசர் அரபாத்தை ஊழல் பேர்வழி என முத்திரை குத்தியவர்கள். இவர்கள் கையில் இருக்கும் கடவுச்சீட்டு 'அகதிகள்' அந்தஸ்தை பெற்றிருப்பதால் எந்த நாட்டிற்கும் செல்லலாம் என்ற தைரியம் வேறு.
யாராவது ஒரு பலஸ்தீனியரை நான் ஒரு 'பலஸ்தினியன்' என சொல்லச் சொல்லுஙகள். கேட்டால் ஜோர்டானியன் எனபான் (ஜோர்டான் பலஸ்தீனியர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடுதான்) MERIP (Middle East Research in Politics) என்ற ஆங்கில காலாண்டிதழ் இங்லிலாந்திலிருந்து வெளிவருகிறது ( இது வளைகுடா நாடுகளீல் தடை செய்யப்பட்ட இதழ்) அதில் வளைகுடா பலஸ்தீனியர்களை அழகாக அலசியிருக்கிறார்கள்.
எங்கள் ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி.
//அமீரகத்தில் 15 ஆண்டுகள் பலஸ்தீனிய குழுமம் ஒன்றில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன். சொந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் இருந்து தப்பித்து வந்து அமீரகத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் ஒரு பக்கம் இவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். அதே சமயம் திமிர் பிடித்தவர்கள்.//
நண்பரே நானும்கூட ஒரு பாலஸ்தீனியரிடம்தான் பணியாற்றினேன். அவர் பல மில்லியன் பணத்தை களவாடி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தது எனது அலுவலகம். அதனால் பாலஸ்தீனீயர்கள் அனைவரையும் திருடன் என்ற சொல்லமாட்டேன். அவர்களில் பிழைப்புவாதிகள் பலரும் உள்ளனர். உதாரணமாக இந்தியாவில் நடைபெறும் எந்த ஒடுக்கமுறைக்கும் குரல் கொடுக்காமல் குறைந்தபட்சம் அதற்காக வருந்தாமல் இங்கு சொகுசாக வாழபவர்களைக் கொண்டு இந்தியர்கள் அனைவரையும் பிழைப்புவாதிகள் சுயநலமிகள் என முடிவுகட்ட முடியுமா? நீங்கள் யானையைப் பார்த்த குருடனைப்போல உங்கள் அனுபவங்களிலிருந்து பேசுகிறீர்கள் என நினைக்கிறேன் (மானேஜர் ரொம்ப படுத்துறார் போலிருக்கிறது :)). தவிரவும் பாலஸ்தீனியர்கள் மோசமாக வளைகுடா நாடுகளில் உள்ளனர் என்பதால் அது பாலஸ்தீனியர்களின் பொதுகுணமாகிவிடுமா?
//சர்வதேச அரங்கில் பலஸ்தீன அரசியல் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவே தினமும் மூன்று (அரபி) நாளேடுகளை வாங்கி படித்தாலும் படிப்பானே தவிர அந்தக் காசை தன் நாட்டு விடுதலைப் போர் நிதிக்காக கொடுக்க மாட்டான்.//
வளைகுடா நாடுகளில் வசிக்கும் எல்லா பாலஸ்தீனியர்களிடமும் உங்கள் கருத்தை பரிசோதித்துப் பார்த்துவிட்டீர்களா? பொதுக்குலராக பேசுவதற்குமுன்பு குறைந்தபட்சம் அதுகுறித்த எல்லா தரப்புக் கருத்தக்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு இனம் முழுவதுமே பிழைப்புவாதமாகவோ சுயலமியாகவோ சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களாகவோ இருக்க வாய்ப்பில்லை. இப்படி பேசுவது அந்த இனத்தையும் அந்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவதாக மாறிவிடும்.
//இவர்கள் அகதிகள் என்பதாலேயே அமீரக அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை தருவது மட்டுமல்லாமல் ஊதியமும் அதிக பட்சமே கிடைக்க வழி செய்துள்ளது.//
ஆனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க தடை செய்துள்ளது வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு. எந்த காலத்திலும் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத்தான் செல்லவேண்டும். தவிரவும் அவர்களுக்கு அகதிகள் என்பதற்காக சலுகைகள் இல்லை. அரபிகள் என்பதற்காகத்தான். ஆப்கானிய அகதிகள் நிலை தெரியுமா உங்களுக்கு? ஒருவேளை சோற்றிற்கு பிச்சை எடுக்கும் நிலையில் வைத்துள்ளது இந்த அரசாங்கம். இஸ்லாமியர் என்பதற்காகவோ அகதிகள் என்பதற்காகவோ எந்த வளைகுடா அரசும் எந்த சலுகையும் தருவதில்லை.
//இவர்கள் யாசர் அரபாத்தை ஊழல் பேர்வழி என முத்திரை குத்தியவர்கள்.//
இது ஒரு கற்பனைதான். யாசர் அராபத்தின் இறுதிக்கால அரசியல் ஒஸ்லோ ஒப்பந்தம் ஆகியன பல அரசியல் அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. எட்வர்ட்சைத் துவங்கி தர்வீஷ் வரை விமர்சித்தள்ளனர். அதனால் யாசர் அராபத் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சீசரின் மணைவி ஒன்றும் அல்ல.
//இவர்கள் கையில் இருக்கும் கடவுச்சீட்டு 'அகதிகள்' அந்தஸ்தை பெற்றிருப்பதால் எந்த நாட்டிற்கும் செல்லலாம் என்ற தைரியம் வேறு. //
எந்த நாட்டிற்கு அவர்கள் செல்லமுடியும்? வளைகுடாவைத் தவிர மற்ற நாடுகளில் அவர்களது நிலை மேசமானதாகவே உள்ளது. அகதியாக இருப்பது ஒரு வசதி என்கிறீர்களா? அகதிகளின் மனப்போராட்டம் அவர்களது பொருளியல் நிலமை மூன்றாந்தரமாக நடத்தப்படும் இழிநிலைப்பற்றி எல்லாம் தெரியுமா? உங்களுக்கு.
//யாராவது ஒரு பலஸ்தீனியரை நான் ஒரு 'பலஸ்தினியன்' என சொல்லச் சொல்லுஙகள். கேட்டால் ஜோர்டானியன் எனபான் (ஜோர்டான் பலஸ்தீனியர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடுதான்)//
வேறு என்ன செய்ய அருகில் உள்ள நாடுதான் அடைக்கலம் தந்தது. அவர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட கடவுச்சீட்டும் தந்தது. அதனால்தான் அவர்கள் தங்களை ஜோர்டானியர்கள் என்கிறார்கள்.
//MERIP (Middle East Research in Politics) என்ற ஆங்கில காலாண்டிதழ் இங்லிலாந்திலிருந்து வெளிவருகிறது ( இது வளைகுடா நாடுகளீல் தடை செய்யப்பட்ட இதழ்) அதில் வளைகுடா பலஸ்தீனியர்களை அழகாக அலசியிருக்கிறார்கள். //
அழகாக என்றால் பல வண்ணங்களிலா? என்ன அலசி உள்ளனர்? கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன். உங்களைப்போல ஒன்றிரண்டு நபர்களை சந்தித்தவிட்டு தனக்கு தெரிந்ததை ஆய்வுக்கருத்தாக முன்வைத்துள்ளனரா? குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பற்றி உலக அளவில் உருவாக்கப்படும் கருத்தக்கள் பற்றி பல அறிஞர்கள் பேசி உள்ளனர். அது ஒரு மேற்கத்திய கருத்தியல் கட்டமைப்பின் விளைவு. உடனே பத்திரிக்கை பாலஸ்தீனியர்கள் பத்திரிக்கை என்றுகூட நீங்கள் கூறலாம். அத்வானிக்கு அயொத்திய ரதத்தை ஓட்டியவர் ஒரு முஸ்லிம் தெரியுமா? அதனால் பத்திரிக்கைகைகள் என்ன சொல்கிறது என்பதை அப்படியே ஏற்காதீர்கள்? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பபொருள் காண்பதறிவு.
சரி நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? பாலஸ்தீனியப் போராட்டம் தேவை இல்லை ஏனென்றால் அவர்கள் சுயநலமிகள் தேசப்பற்று அற்றவர்கள் என்கிறீர்களா? எதிர்ப்பு காட்டுதல் என்பது ஒவ்வொரு இனமும் ஒருவகையான வடிவத்தையும் உளப்படிமத்தின் அடிப்படையிலும் செய்கிறது. துப்பாக்கிக்கு முன்பாக கல்லெறியும் பாலஸ்தீனியச் சிறுவனை நீங்கள் பார்த்தில்லையா? எல்லைகளில் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்று அறிந்தும் கடக்கும் எதிர்த்து நகரும் அம்மக்களைப்பற்றி பேசுங்கள். உங்கள் மானேஜரின் மீதான வெறுப்புணர்வை அந்த மக்கள் மீதானதாக மாற்ற வேண்டாம்.
//எங்கள் ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி.//
கூத்தநல்லூரான், ஜமாலன் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எப்படி உங்களால் இப்படியாக மிகவும் இதையெல்லாம் எளிமைப்படுத்தி எண்ண முடிகிறது என்ற வியப்பு மட்டும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது. ட்ரான்ஸ்ஜோர்டான் பிரிக்கப்பட்ட (பரிதாப) வரலாற்றை வேண்டுமானால் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன்.
வளைகுடாவில் வாழும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தனிநாடு கிடைத்தாலும் நாடு திரும்ப மாட்டார்கள், வளைகுடாவின் சொகுசு வாழ்க்கை பறி போய்விடுமே
ReplyDeleteஅப்படியானால், அச்சில இலட்சம் ஆட்களினால், பலஸ்தீனம் இஸ்ரேலின் கீழேயே அமுக்கப்பட்டிருப்பதுதான் சரியென்கிறீர்களா?
ReplyDeleteஅமெரிக்காவிலே சொகுசுவாழ்க்கை கிட்டியதாலே தனியே நாடு இருந்துங்கூட, திரும்பாத இந்தியர்கள் எத்தனை பேரென்பதை எண்ணிப் பார்த்திருக்கின்றீர்களா? இவையெல்லாம் தனிமனிதத்தேர்வுகள். இத்தேர்வுகளுக்கும் சொந்த நாட்டிலேயே அடிமைத்தனமாக அழுத்தப்பட்டிருப்பவனின் தனிநாட்டுத்தேவைக்கும் சம்பந்தமேயில்லை.
//koothanalluran said...
ReplyDeleteவளைகுடாவில் வாழும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தனிநாடு கிடைத்தாலும் நாடு திரும்ப மாட்டார்கள், வளைகுடாவின் சொகுசு வாழ்க்கை பறி போய்விடுமே//
உண்மை அறியாமல் பேசுகிறார் கூத்தாநல்லூரார். பாலஸ்தீனர்களுக்கு குடி உரிமை துவங்கி எந்த சலுகைகளும் வளைகுடா நாடுகள் வழுங்குவதில்லை. அவர்கள் ஒரு அந்நியர்களாகவே இங்கம் உள்ளனர். அதனால்தான் அந்த இயக்கங்களும் தீவிரத்தன்மைகள் னொண்டதாக உள்ளது. வரலாறோ நிலமைக்ளையோ அறியாமல் பொதுப்புத்தியில் உள்ள கருத்தை இப்படி பொதுவில் வைப்பது முறையல்ல. கூத்தாநல்லூர்கூட சின்ன சிங்கப்புர்தான் அதற்காக அங்குள்ளவர்கள் எல்லாம் அண்டர் கிரவுண்ட் கட்டி பெரிய பெரிய வீட்டில் வசிக்கும் பணக்காரர்கள் என்ற முடிவெடுக்க முடியுமா? பாலஸ்தீனத்தில் சாகும் எண்ணற்ற மக்களுடன் ஒப்பிட வெளியில் இருப்பவர்கள் சொற்பம்தான்.
பெயரிலியின் பதில்கள் சரியாகச் சொல்லப்பட்டுள்ளது. விலக்குகளை விதிகளாக கொள்ள முடியாது.
\\
ReplyDeleteஇத்தேர்வுகளுக்கும் சொந்த நாட்டிலேயே அடிமைத்தனமாக அழுத்தப்பட்டிருப்பவனின் தனிநாட்டுத்தேவைக்கும் சம்பந்தமேயில்லை.
\\
இந்த நாட்டுக்காரர்கள் பலரும் பல நாடுகளில் இருக்கிறார்கள் தானே அவர்கள் எல்லோரும் அல்லது அவர்களில் பெரும்பகுதியினர் சொந்த நாடு சரியாகினால் திரும்பி வருவார்களா?! சொந்த நாடு பற்றி எந்தளவுக்கு சிந்தனை வளர்ச்சி இருக்கிறது...
ஜமாலன் அய்யா...
ReplyDeleteஅமீரகத்தில் 15 ஆண்டுகள் பலஸ்தீனிய குழுமம் ஒன்றில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன். சொந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் இருந்து தப்பித்து வந்து அமீரகத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் ஒரு பக்கம் இவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். அதே சமயம் திமிர் பிடித்தவர்கள். சர்வதேச அரங்கில் பலஸ்தீன அரசியல் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவே தினமும் மூன்று (அரபி) நாளேடுகளை வாங்கி படித்தாலும் படிப்பானே தவிர அந்தக் காசை தன் நாட்டு விடுதலைப் போர் நிதிக்காக கொடுக்க மாட்டான். இவர்கள் அகதிகள் என்பதாலேயே அமீரக அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை தருவது மட்டுமல்லாமல் ஊதியமும் அதிக பட்சமே கிடைக்க வழி செய்துள்ளது. இவர்கள் யாசர் அரபாத்தை ஊழல் பேர்வழி என முத்திரை குத்தியவர்கள். இவர்கள் கையில் இருக்கும் கடவுச்சீட்டு 'அகதிகள்' அந்தஸ்தை பெற்றிருப்பதால் எந்த நாட்டிற்கும் செல்லலாம் என்ற தைரியம் வேறு.
யாராவது ஒரு பலஸ்தீனியரை நான் ஒரு 'பலஸ்தினியன்' என சொல்லச் சொல்லுஙகள். கேட்டால் ஜோர்டானியன் எனபான் (ஜோர்டான் பலஸ்தீனியர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடுதான்) MERIP (Middle East Research in Politics) என்ற ஆங்கில காலாண்டிதழ் இங்லிலாந்திலிருந்து வெளிவருகிறது ( இது வளைகுடா நாடுகளீல் தடை செய்யப்பட்ட இதழ்) அதில் வளைகுடா பலஸ்தீனியர்களை அழகாக அலசியிருக்கிறார்கள்.
எங்கள் ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி.
koothanalluran said...
ReplyDelete//அமீரகத்தில் 15 ஆண்டுகள் பலஸ்தீனிய குழுமம் ஒன்றில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன். சொந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் இருந்து தப்பித்து வந்து அமீரகத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் ஒரு பக்கம் இவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். அதே சமயம் திமிர் பிடித்தவர்கள்.//
நண்பரே நானும்கூட ஒரு பாலஸ்தீனியரிடம்தான் பணியாற்றினேன். அவர் பல மில்லியன் பணத்தை களவாடி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தது எனது அலுவலகம். அதனால் பாலஸ்தீனீயர்கள் அனைவரையும் திருடன் என்ற சொல்லமாட்டேன். அவர்களில் பிழைப்புவாதிகள் பலரும் உள்ளனர். உதாரணமாக இந்தியாவில் நடைபெறும் எந்த ஒடுக்கமுறைக்கும் குரல் கொடுக்காமல் குறைந்தபட்சம் அதற்காக வருந்தாமல் இங்கு சொகுசாக வாழபவர்களைக் கொண்டு இந்தியர்கள் அனைவரையும் பிழைப்புவாதிகள் சுயநலமிகள் என முடிவுகட்ட முடியுமா? நீங்கள் யானையைப் பார்த்த குருடனைப்போல உங்கள் அனுபவங்களிலிருந்து பேசுகிறீர்கள் என நினைக்கிறேன் (மானேஜர் ரொம்ப படுத்துறார் போலிருக்கிறது :)). தவிரவும் பாலஸ்தீனியர்கள் மோசமாக வளைகுடா நாடுகளில் உள்ளனர் என்பதால் அது பாலஸ்தீனியர்களின் பொதுகுணமாகிவிடுமா?
//சர்வதேச அரங்கில் பலஸ்தீன அரசியல் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவே தினமும் மூன்று (அரபி) நாளேடுகளை வாங்கி படித்தாலும் படிப்பானே தவிர அந்தக் காசை தன் நாட்டு விடுதலைப் போர் நிதிக்காக கொடுக்க மாட்டான்.//
வளைகுடா நாடுகளில் வசிக்கும் எல்லா பாலஸ்தீனியர்களிடமும் உங்கள் கருத்தை பரிசோதித்துப் பார்த்துவிட்டீர்களா? பொதுக்குலராக பேசுவதற்குமுன்பு குறைந்தபட்சம் அதுகுறித்த எல்லா தரப்புக் கருத்தக்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு இனம் முழுவதுமே பிழைப்புவாதமாகவோ சுயலமியாகவோ சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களாகவோ இருக்க வாய்ப்பில்லை. இப்படி பேசுவது அந்த இனத்தையும் அந்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவதாக மாறிவிடும்.
//இவர்கள் அகதிகள் என்பதாலேயே அமீரக அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை தருவது மட்டுமல்லாமல் ஊதியமும் அதிக பட்சமே கிடைக்க வழி செய்துள்ளது.//
ஆனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க தடை செய்துள்ளது வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு. எந்த காலத்திலும் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத்தான் செல்லவேண்டும். தவிரவும் அவர்களுக்கு அகதிகள் என்பதற்காக சலுகைகள் இல்லை. அரபிகள் என்பதற்காகத்தான். ஆப்கானிய அகதிகள் நிலை தெரியுமா உங்களுக்கு? ஒருவேளை சோற்றிற்கு பிச்சை எடுக்கும் நிலையில் வைத்துள்ளது இந்த அரசாங்கம். இஸ்லாமியர் என்பதற்காகவோ அகதிகள் என்பதற்காகவோ எந்த வளைகுடா அரசும் எந்த சலுகையும் தருவதில்லை.
//இவர்கள் யாசர் அரபாத்தை ஊழல் பேர்வழி என முத்திரை குத்தியவர்கள்.//
இது ஒரு கற்பனைதான். யாசர் அராபத்தின் இறுதிக்கால அரசியல் ஒஸ்லோ ஒப்பந்தம் ஆகியன பல அரசியல் அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. எட்வர்ட்சைத் துவங்கி தர்வீஷ் வரை விமர்சித்தள்ளனர். அதனால் யாசர் அராபத் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சீசரின் மணைவி ஒன்றும் அல்ல.
//இவர்கள் கையில் இருக்கும் கடவுச்சீட்டு 'அகதிகள்' அந்தஸ்தை பெற்றிருப்பதால் எந்த நாட்டிற்கும் செல்லலாம் என்ற தைரியம் வேறு. //
எந்த நாட்டிற்கு அவர்கள் செல்லமுடியும்? வளைகுடாவைத் தவிர மற்ற நாடுகளில் அவர்களது நிலை மேசமானதாகவே உள்ளது. அகதியாக இருப்பது ஒரு வசதி என்கிறீர்களா? அகதிகளின் மனப்போராட்டம் அவர்களது பொருளியல் நிலமை மூன்றாந்தரமாக நடத்தப்படும் இழிநிலைப்பற்றி எல்லாம் தெரியுமா? உங்களுக்கு.
//யாராவது ஒரு பலஸ்தீனியரை நான் ஒரு 'பலஸ்தினியன்' என சொல்லச் சொல்லுஙகள். கேட்டால் ஜோர்டானியன் எனபான் (ஜோர்டான் பலஸ்தீனியர்களுக்காக உருவாக்கப்பட்ட நாடுதான்)//
வேறு என்ன செய்ய அருகில் உள்ள நாடுதான் அடைக்கலம் தந்தது. அவர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட கடவுச்சீட்டும் தந்தது. அதனால்தான் அவர்கள் தங்களை ஜோர்டானியர்கள் என்கிறார்கள்.
//MERIP (Middle East Research in Politics) என்ற ஆங்கில காலாண்டிதழ் இங்லிலாந்திலிருந்து வெளிவருகிறது ( இது வளைகுடா நாடுகளீல் தடை செய்யப்பட்ட இதழ்) அதில் வளைகுடா பலஸ்தீனியர்களை அழகாக அலசியிருக்கிறார்கள். //
அழகாக என்றால் பல வண்ணங்களிலா? என்ன அலசி உள்ளனர்? கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன். உங்களைப்போல ஒன்றிரண்டு நபர்களை சந்தித்தவிட்டு தனக்கு தெரிந்ததை ஆய்வுக்கருத்தாக முன்வைத்துள்ளனரா? குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பற்றி உலக அளவில் உருவாக்கப்படும் கருத்தக்கள் பற்றி பல அறிஞர்கள் பேசி உள்ளனர். அது ஒரு மேற்கத்திய கருத்தியல் கட்டமைப்பின் விளைவு. உடனே பத்திரிக்கை பாலஸ்தீனியர்கள் பத்திரிக்கை என்றுகூட நீங்கள் கூறலாம். அத்வானிக்கு அயொத்திய ரதத்தை ஓட்டியவர் ஒரு முஸ்லிம் தெரியுமா? அதனால் பத்திரிக்கைகைகள் என்ன சொல்கிறது என்பதை அப்படியே ஏற்காதீர்கள்? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பபொருள் காண்பதறிவு.
சரி நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? பாலஸ்தீனியப் போராட்டம் தேவை இல்லை ஏனென்றால் அவர்கள் சுயநலமிகள் தேசப்பற்று அற்றவர்கள் என்கிறீர்களா? எதிர்ப்பு காட்டுதல் என்பது ஒவ்வொரு இனமும் ஒருவகையான வடிவத்தையும் உளப்படிமத்தின் அடிப்படையிலும் செய்கிறது. துப்பாக்கிக்கு முன்பாக கல்லெறியும் பாலஸ்தீனியச் சிறுவனை நீங்கள் பார்த்தில்லையா? எல்லைகளில் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்று அறிந்தும் கடக்கும் எதிர்த்து நகரும் அம்மக்களைப்பற்றி பேசுங்கள். உங்கள் மானேஜரின் மீதான வெறுப்புணர்வை அந்த மக்கள் மீதானதாக மாற்ற வேண்டாம்.
//எங்கள் ஊரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் நன்றி.//
அத்தாவு நானும் பக்கத்து ஊர்க்காரன்தான். பின்னே தெரியாதா?
கூத்தநல்லூரான்,
ReplyDeleteஜமாலன் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எப்படி உங்களால் இப்படியாக மிகவும் இதையெல்லாம் எளிமைப்படுத்தி எண்ண முடிகிறது என்ற வியப்பு மட்டும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது. ட்ரான்ஸ்ஜோர்டான் பிரிக்கப்பட்ட (பரிதாப) வரலாற்றை வேண்டுமானால் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன்.
கிங்,
எந்நாட்டுக்காரைச் சொல்கிறீர்கள்? குழப்பமாகவிருக்கிறது.
\\
ReplyDeleteகிங்,
எந்நாட்டுக்காரைச் சொல்கிறீர்கள்? குழப்பமாகவிருக்கிறது.
\\\
வேற எது ஸ்ரீலங்காதான்..:)
தேசம்நெற், உங்கள் வலைப்பதிவு இவற்றினை வாசித்திருப்பதால், நீங்கள் இந்தியாவைச் சொல்லியிருப்பீர்கள் என்றும் எண்ணவில்லை.
ReplyDeleteஸ்ரீலங்காவினர், தெரியவில்லை. நீங்கள்தான் சொல்லவேண்டும். ;-)
ஈழத்தவர் அநேகர் திரும்பப்போவதில்லை என்பது என் எதிர்பார்ப்பு. அதன்/அவ்வுணர்வின் அடிப்படையிலேயே கூத்தநல்லூரானுக்கு என் முதலாவது மறுமொழி.
கட்டியெழுப்பக் காசனுப்பினாலே போதுமே?
எனக்கும் அதே கருத்துதான் இருக்கிறது...
ReplyDelete///கட்டியெழுப்பக் காசனுப்பினாலே போதுமே?///
இப்பவும் காசனுப்பகினை தானே...:)
/இப்பவும் காசனுப்பகினை தானே...:)/
ReplyDeleteஅது கட்டி(னால்) உடைக்கக் குடுக்கிறதுக்கும் கட்டினவனைக் கடத்துறவைக்கு கட்டி விடுவிக்கவுமெல்லோ? ;-)
\\\
ReplyDeleteஅது கட்டி(னால்) உடைக்கக் குடுக்கிறதுக்கும் கட்டினவனைக் கடத்துறவைக்கு கட்டி விடுவிக்கவுமெல்லோ? ;-)
\\\
தெளிவு...