tag:blogger.com,1999:blog-9437046.post7993645203957527874..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்Unknownnoreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-9437046.post-8832511921579079542008-03-17T22:39:00.000-05:002008-03-17T22:39:00.000-05:00Savithri Kannan Article: "சுதந்திரத்திற்கு முந்திய...<A HREF="http://savithrikannan.blogspot.com/2008/02/blog-post_28.html" REL="nofollow">Savithri Kannan Article</A>: "சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல்"Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-58722836297517152772007-08-15T13:58:00.000-05:002007-08-15T13:58:00.000-05:00Wikipedia 'shows CIA page edits'<A HREF="http://news.bbc.co.uk/2/hi/technology/6947532.stm" REL="nofollow">Wikipedia 'shows CIA page edits' </A>-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-5247716284525538642007-07-21T23:46:00.000-05:002007-07-21T23:46:00.000-05:00முதன்முதல் குரற்பதிவு போட்டவர் என்பதிலிருந்து கொ...முதன்முதல் குரற்பதிவு போட்டவர் என்பதிலிருந்து கொழுவி தவறிவிட்டார். ஆனால் வலைப்பதிவில் இன்னொரு 'முதன்முதல்' அவருக்கு இருக்கிறது. இதை யாரும் தட்டிப்பறிக்க முடியாதென்று நினைக்கிறேன்.<BR/><BR/>திரட்டியொன்றிலிருந்து முதன்முதல் விரட்டப்பட்ட வலைப்பதிவர் கொழுவியாகத்தான் (அப்போது Mustdo) இருப்பார். அதன்பிறகுதான் தற்போது அவர் வைத்திருக்கும் வலைப்பதிவை ஏற்படுத்தி கொழுவியாக திரட்டியில் இணைந்துகொண்டார். <BR/><BR/>பெயரிலி எழுதிக்கொண்டிருப்பது 'வலையில் தமிழ்' என்பதால் இத்தரவு முக்கியமற்றது. ஆனால் தமிழ் வலைப்பதிவுகள் பற்றி யாராவது வரலாறு எழுதினால் அதில் இந்த விடயமும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.<BR/><BR/>** வலைப்பதிவுகளில் குரற்பதிவுகள் பற்றியும் யாராவது தொகுக்க வேண்டும். இல்லாவி்ட்டால் கொழுவிமாதிரி யாராவது முதலிடத்தில் குந்திக்கொண்டதை பார்க்கும் அவலநிலை எங்களுக்கு ஏற்பட்டுவிடும். கவிதனின் படைப்புக்கான இணைப்பு இப்போதே இல்லாமற் போய்விட்ட நிலையில் இன்னும் கொஞ்சக்காலத்தின் பின்னர் வரலாறு திரிந்துதான் போகும். சிலவேளை கொழுவிகூட பின்தள்ளப்பட்டு, அதன்பின் வந்த ஒருவர் குந்திக்கொள்ளும் நிலைவரலாம்.<BR/><BR/>இப்போதைக்கு 'வலைப்பதிவில் குரற்பதிவு' பிதா கவிதன், மாதா கொழுவி (இதனால் கொழுவி பெண் எனக் கொள்ளாதீர்; ஆதாமின் விலாவிலிருந்து ஏவாள் வந்ததைப்போல், கவிதனின் படைப்பை நக்கலடித்து கொழுவி எழுதியதால் மாதா எனும் பட்டம் கொண்டார். ஆணுக்குப் பிறகா பெண் என யாராவது வந்தால் விவிலியத்தைச் சுட்டி ஆதாரம் தருவேன்.)<BR/><BR/>-முன்னாள் குழப்பி-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-10829075545159052312007-07-21T22:45:00.000-05:002007-07-21T22:45:00.000-05:00குழப்பி யாரென்று தெரியும் .... ஏனென்றால், குழப்பி ...குழப்பி யாரென்று தெரியும் .... ஏனென்றால், குழப்பி என்ற பின்னூட்டம் அனுப்பியபின்னால், தானே குழப்பி என்று தனியஞ்சலும் அனுப்பியதால் :-)<BR/><BR/>குழைக்காட்டானைத் தவறாகத்தான் அழைத்துவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். <BR/><BR/>இந்த பின்னூடியோடு நூறுக்கெல்லாம் வாத்து, தாரா தேவையா? :-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-40035245589781356662007-07-21T22:15:00.000-05:002007-07-21T22:15:00.000-05:00பெயரிலி,அதுசரி, குழைக்காட்டானை ஏன் தவறாக அழைக்கிறீ...பெயரிலி,<BR/>அதுசரி, குழைக்காட்டானை ஏன் தவறாக அழைக்கிறீர்கள்?<BR/>அவர் தனதுபெயரை தமிழில் தெரியத் தக்கதாகத்தானே விட்டிருக்கிறார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-30361517086715983382007-07-21T22:13:00.000-05:002007-07-21T22:13:00.000-05:00கொழுவி,mustdo என்ற பெயரில் இயங்கியபோது உங்களால் ...கொழுவி,<BR/>mustdo என்ற பெயரில் இயங்கியபோது உங்களால் துரத்தப்பட்டவர் இங்கு குழப்பியாக வரவில்லை. இந்த குழப்பி வேறு. நான்தான் உங்களால் துரத்தப்பட்ட (அப்)பாவி.<BR/><BR/>-/பெயரிலியும் குழப்பியைத் தவறாக அடையாளம் கண்டுகொண்டார் என்றே நினைக்கிறேன். குழப்பியின் முதலாவது பின்னூட்டத்துக்கான பெயரிலியின் பதில்,அவர் குறிப்பிட்ட ஒருவரை நினைத்து எழுதியதாகப் படுகிறது. (ஆனைக்கும் அடிசறுக்கிவிட்டது). 'நான் அவனில்லை'.<BR/><BR/>** பெயரிலி, இது பொழுதுபோக்குப் பின்னூட்டமன்று. உண்மையிலேயே குழப்பி குறித்துத் தெளிவுபடுத்தும் பின்னூட்டமே. இப்போதைய குழப்பி ஈழத்தவராகக் கூட இல்லாமலிருக்கலாம்.<BR/><BR/>** முதன்முதலாக நூறு பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்து! (கள் சேர்க்க மாட்டோம்).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-12670367629596594782007-07-21T11:16:00.000-05:002007-07-21T11:16:00.000-05:00செல்வநாயகியின் "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயி...செல்வநாயகியின் <A HREF="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html" REL="nofollow">"அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்" </A>இடுகையிலே மாலனின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக எழுதியது.. <BR/><BR/>===<BR/>செல்வநாயகி,<BR/>மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்.<BR/><BR/>டெல்கியிலிருந்து மாலன் சுட்ட வரும் பத்திரிகைகளின் ஆசிரியர்களெல்லாம், யாழ்ப்பாணத்தினைப் புலிகள் கைப்பற்றப்போகப்போகின்றார்கள் என்றவுடன் ஆயுதத்துக்கு இந்தியா ஓடிவரும் இலங்கை அமைச்சு, இராணுவப்பெருந்தலைகளை, சாயிபாபா, இந்திய அமைச்சர்கள், (பின்னால் தம்மைப் பெங்களூருக்கு துரத்தப்போகும்) தமிழ்நாட்டு முதலமைச்சர்களிடம் அழைத்துப்போவதில்லை. தனது தென்னாசியப்பத்திரிகைக்கல்விநிறுவனங்களிலே விசேட விருந்துரையாற்ற அழைப்பதில்லை. டெல்கியிலே ஈழத்தமிழர்களின் ஆதரவில்லாத ஆனந்தசங்கரி, மஹிந்த ராஜபக்ஸவுடன் விஜயம் செய்யும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களினை அழைத்து இந்தியத்தமிழரின் ஆதரவில்லாத சுப்பிரமணியசுவாமிகளோடு சேர்ந்துகொண்டு ஈழத்தமிழருக்கு என்ன வேண்டும் என்ற மகாநாடு நடத்திக் "காட்டுவதில்லை.' எல்லாவற்றுக்கும் மேலாக, லங்கா ரத்னா பெற்றதில்லை. <BR/><BR/>இவை பற்றி மேலும் இங்கே இனிமேல் வரப்போகும் எப்பின்னூட்டம் மீதும் எழுதப்போவதில்லை. விபரமாக, இந்த "தேர்ந்தெடுத்துச்சுட்டும் எள்ளல்" என்ற குற்றச்சாட்டு ஆயுதத்தைப் பற்றி, "இந்து - ராம் ஐயங்கார்" என்ற தனிமனிதரும் இலங்கை அரசியலும் பற்றி என் பதிவிலே எழுதுகிறேன்.<BR/>===-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-14788946655410769652007-07-18T07:00:00.000-05:002007-07-18T07:00:00.000-05:00//கொழுவி திட்டமிட்டு உண்மையை தொடர்ந்து மறைத்துவருக...//கொழுவி திட்டமிட்டு உண்மையை தொடர்ந்து மறைத்துவருகிறார் என இங்கு சொல்லிகொள்ள விரும்புகிறேன். இதை வன்மையாக கண்டிக்கிறேன்//<BR/><BR/>குழக்காட்டான்.. இதனை இத்தனை பப்ளிக்காக நீங்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை. எனது பதிவில் பின்னூட்டமாகவோ அல்லது எனக்கொரு தனிமடலாகவோ இட்டிருந்தால் நாமொரு சமரசத்திற்கு வந்திருக்கலாம். அதை விட்டு விட்டு இப்படி பின்னூட்டியது வெறும் காற்றடிக்கத் தானே.. எண்டாலும் blogspot இல் இசையும் கதையும் போட்டது நான்தான் என சொல்லுகிறேன்..<BR/><BR/>மற்றது.. இங்கே குழப்பி என எழுதுபவர் சில காலங்களுக்கு முன்னால் கொழுவியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் உறுப்பினரா..கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-64539197932274644742007-07-17T02:58:00.000-05:002007-07-17T02:58:00.000-05:00//எம்மிலே பல தரவுத்தளங்களிருக்கினோம்; ஆனால், எமக்க...//எம்மிலே பல தரவுத்தளங்களிருக்கினோம்; ஆனால், எமக்கு வேண்டியதெல்லாம் மார்க்கியவல்லியும் கௌடில்யனும் கான்ப்யூசியசுமே//<BR/><BR/>நன்று. இத் சரியான, மிகச் சரியான புரிதல். ஒரு தரப்பில் எத்த்னை நியாயங்கள் இருந்தாலும், உணர்வு வயப்படுவதில் ஆற்றாமையும், ஆதங்கமும் கண்ணை மறைத்து விடுகிறது. பெரிய பெரிய இயக்கங்கள் கூட இந்த தவறை செய்து விடுகின்றன.;-)<BR/>தமிழன் நாசுக்காய் ஊசி போடும் வித்தையைக் கைக் கொள்ள வேண்டும்...!!Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-29927495709068179492007-07-16T06:59:00.000-05:002007-07-16T06:59:00.000-05:00அநாமதேய நண்பர்:இரவிசங்கரின் கருத்துப்பத்தியினை ஏற்...அநாமதேய நண்பர்:<BR/>இரவிசங்கரின் கருத்துப்பத்தியினை ஏற்கனவே வலைச்சரத்திலே படித்திருந்தேன் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் மீண்டும் அவரது அக்குறிப்பிட்ட இடுகையையும் எடுத்துப்போட்டிருக்கின்றீர்கள். <BR/><BR/>அவை இங்கே தொடர்பற்றதால், நீக்கியிருக்கின்றேன். <BR/><BR/>தயவு செய்து மேலேயும் தொடர்ந்தும் அவர் பற்றிய உங்கள் கருத்துகளை இங்கே இட்டால்,அவற்றினை நிறுத்தவேண்டியிருக்கும்.<BR/><BR/>புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன் :-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-34284749780132537232007-07-16T00:05:00.000-05:002007-07-16T00:05:00.000-05:00This comment has been removed by the author.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-62339537818127890782007-07-15T22:51:00.000-05:002007-07-15T22:51:00.000-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-90797056365827536962007-07-15T22:48:00.000-05:002007-07-15T22:48:00.000-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-44468160614976372872007-07-15T22:29:00.000-05:002007-07-15T22:29:00.000-05:00அநாமதேய நண்பர் 1: அது புரிகின்றது; ஆனால், நான் சொல...அநாமதேய நண்பர் 1: அது புரிகின்றது; ஆனால், நான் சொல்ல வந்த நோக்கினையும் புரிந்துகொண்டிருப்பீர்களென எண்ணுகிறேன்<BR/><BR/>அநாமதேய நண்பர் 2: மாலனுக்கான வயது குறித்த அனுதாப அலை பற்றி சிறிது உண்மையிருப்பினுங்கூட, இங்கு அவருடைய பத்திரி கையாளான் என்ற முப்பதாண்டு அனுபவமும் பெயரும் கொண்டுவரும் அது பதிவர்களிடையே பெரிய பாதிப்போடு ஒப்பிடும்போது, வயதின் தாக்கம் புறக்கணிக்கத்தக்கது என்றே கருதுகிறேன். ஆனால், தரவுகளைப் புரிந்துகொள்ள முயல்கிறவர்களுக்கு இஃதொரு தடையல்ல.<BR/><BR/>இரவிசங்கர் குறித்து; நீங்கள் அவர் குறித்துச் சொன்னதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர் காமலோகம் பற்றி வலைச்சரத்திலே எழுதியதை(யும் பின்னான பின்னூட்டங்களையும்) வாசித்திருக்கின்றேன். அவர் காமலோகம் பற்றிச் சொன்ன நோக்குடன் உடன்படுகின்றேன். இங்கும் அவர் தன் கருத்தினை முன்வைத்திருப்பதிலே எத்தவறுமில்லையேன்றே கருதுகின்றேன். அவர் ஒரு தேவையான விவாதத்தினை (முறையாக)) எழுப்ப முயல்கிறாரென்றே நினைக்கிறேன். அவரை முறிக்காதீர்கள். விக்கிபீடியாவின் தேவையும் எல்லைகளும் குறித்த என் புரிதலிலே இதுவரை மாற்றமில்லை. <BR/><BR/>ஆரம்பகாலச்செயற்பாடுகளுக்கு ஆதாரம் எங்கே என்று அவர் கேட்டிருப்பதை grandpa/grandma staus & clause ஊடாக நியாயப்படுத்துவோமா என்று பார்க்கலாம் :-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-21103316673512010582007-07-15T21:59:00.000-05:002007-07-15T21:59:00.000-05:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-24415948669778327392007-07-15T20:04:00.000-05:002007-07-15T20:04:00.000-05:00மீண்டும் திசை திருப்புவதற்கு மன்னிக்கவாசிப்பவர்களு...மீண்டும் திசை திருப்புவதற்கு மன்னிக்க<BR/><BR/>வாசிப்பவர்களுக்கோ அல்லது மாலனுக்கோ கூட என் பதில் ஒப்பாரியாக இருக்கலாம். அது முக்கியமல்ல, இவர்கள் போன்றவர்களுக்கு திரும்ப திரும்ப நாம் புள்ளிவிபரங்களையோ ஆதாரங்களையோ அள்ளிவிடுவதில் அர்த்தமில்லையென்று நினைக்கின்றேன், இவர்கள் தூங்குவது போல் நடிக்கும் பூனைகள். <BR/><BR/>தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட உணர்வுகளே என் தட்டச்சில் வெளிப்பட்டன, மீண்டும் மீண்டும் தர்க்கவாதம் புரிய வைக்க இவர்களுக்கு நாம் சொல்லும் விடயங்கள் புதிதல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-30301269819066981052007-07-15T19:38:00.000-05:002007-07-15T19:38:00.000-05:00அநாமதேய நண்பருக்கு,உங்கள் பதிலினை மாலன் எதற்கு விட...அநாமதேய நண்பருக்கு,<BR/>உங்கள் பதிலினை மாலன் எதற்கு விடவில்லையென அறியேன். ஏதேனும் தகுந்த காரணமிருப்பின், அவர் தரக்கூடும்.<BR/><BR/>நிற்க, இவ்விடுகை இப்புள்ளியிலே இணையத்தமிழ்பற்றி மட்டுமே வந்து நிற்கின்றது (அகதிகள், புலிகள், இந்து, நாவலர் போன்றவற்றினை ஆரம்பத்திலே தொட்டிருந்தாலுங்கூட). அதனால், அப்படியே தொடர எண்ணம். <BR/><BR/>நிச்சயமாக, மாலனின் ஈழம்-இந்தியா - ஸ்ரீலங்கா - புலிகள் - மற்றவர்கள் - இந்து போன்றவற்றின் மீதான கருத்துகளை வரும் இரு வாரங்களிலே இடவிருக்கும் இடுகைகள் மூலமாக எதிர்கொள்ளலாமென நினைக்கின்றேன். அந்நேரத்திலே, உங்கள் பின்னூட்டங்கள் செஔழுமை சேர்க்குமென்று எண்ணுகிறேன். இப்போது, இங்கே வேண்டாமே? நடைபெறும் வாதம் திசைமாறிவிடும். ஒன்றுக்கு ஓரளவுக்கு எம் பக்க நியாயத்தைச் சொல்லி முடித்து அடுத்ததைத் தொடுவோமே?<BR/><BR/><BR/>நிற்க: சுருக்கமாக, நீங்கள் காட்டும் மாலனின் குறிப்பிலும் அதற்கான பதில்மீதும் என் ஓரிரு பந்திகள்:<BR/><BR/>அவர் தரவு போலப் பண்ணியதற்கு நீங்கள் உணர்வாகப் பதில் தந்திருக்கின்றீர்கள். உங்களின் அதிர்ஷ்டம் அவர் அதை வெளியிடாதது.<BR/><BR/> (அவருடைய குறிப்பு சரியான புள்ளிவிபரமுள்ள தரவு அல்ல; ஆனால், இரண்டு மூன்று பெயர்களை உதிர்த்திவிடுவதும் ஓரளவு உணர்ச்சியைக் கட்டிவிட்டு வெறும் வசனமாக எழுதுவதும் நிதானமாக தகவல்களுடன் கருத்துகளை முன்வைத்திருப்பதாகத் தோற்றத்தினைத் தருகின்றது. இதுதான் தேவையான அளவு வெட்டி ஒட்டும் வாதத்திறன். <BR/><BR/>1. மூன்று புலி எதிர் பிரபல பெயர்களைச் சொல்லிவிட்டு இதைப் போலப் பல இலங்கைத்தமிழர்கள் இருக்கின்றார்கள் என்கிறார் (அவர் சொன்ன பெயர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவையே. மறுக்கமுடியாது. ஆனால், பல என்பது, பத்தா, ஆயிரமா, இலச்சமா என்பது எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது, எவருக்கும் தெரியாது, புலிகளுக்கான ஆதரவு, புலிகளுக்கு எதிர்ப்பு இவை குறித்து, ஸொக்பியோ, கல்ப் போலோ, நீல்சனோ, எவரும், இடைவிலகல் சொல்லக்கூடிய, அறிவியல்பூர்வமாகச் சரியெனச் சொல்லக்கூடிய கருத்துக்கணிப்புகூட வேண்டாம், வானொலி, தொலைக்காட்சி, தினகரன் பாணி கருத்துக்கணிப்பினைக்கூட நடத்தியதில்லை. ஆனாலும், இங்கே கருத்துநிலைப்புள்ளி விபரம்போலத் தோற்றும் 'பல' உணர்வுநிலையிலே தட்டமட்டுமே சொல்லப்படுவது)<BR/><BR/>2. வலையிலே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கைத்தமிழர்ப்பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார். (நீங்கள், நான், அவர், அவர் உங்களுக்குச் சொல்வதுபோல சொல்லும் அவரைப்போல கருத்துக்கொண்டிருக்கும் பதிவர்கள் எல்லோரும் இப்படியான பதிவர்களைப் பார்க்கின்றோம். அதை மறுக்கமுடியாது. ஆனால், காந்திக்கு எதிரானவர்கள் இருந்ததில்லையா? காங்கிரஸ் தலைமையிலே ஜவர்கலால் நேருவைப் புறக்கணித்துக்கொண்டு " போ(ஸ்)யா, நீயும் உன் காங்கிரஸும்" என்று போனவர்களில்லையா? ஹமாஸ் வரும்வரைக்கும் பி எல் ஓவுக்கு எதிரானவர்கள் எழுதுபதுகளிலே அபு நிடால் பாலஸ்தீனத்திலே இருந்ததில்லையா? மென்ஸ்விக் இருந்தால் போல்ஷ்விக் இருந்துதான் தீருவார்கள். ஆனால், அதையே வைத்துக்கொண்டு வாதத்துக்காக மட்டும் குழிவில்லையை ஒரு புறமும் குவிவில்லையை ஒரு புறமும் பிடித்துவைத்துக்கொண்டு, யானையைவிடப் பூனை பெரிதாகவிருக்கின்றது என்று நிறுவ முயல்கின்றவைச் சின்னப்பிள்ளை நம்பலாம்; முதிர்ச்சியானவர்கள் பகுத்தறியத் தெரியவேண்டும். அதற்கு நீங்கள் கத்திச் சொல்லவோ கத்தி கொண்டு சொல்லவோ முயன்றால், கேட்காது)<BR/><BR/>இப்போது பார்த்தீர்களானால், அவரின் கூற்று மூலம் வாசிப்பவர்கள் உணர்மனதிலே அவரின் ''தர்க்கரீதியான புள்ளிவிபரம்" (மேற்கோள் குறியிணை மறக்காமல் இட்டிருக்கிறேன்; அது முக்கியம்) எழுப்பும் நாதம் அவர் ஏற்படுத்த விரும்பியதை ஏற்படுத்திவிட்டது. <BR/><BR/>பதிலுக்கு நீங்கள் செய்வதென்ன? உணர்வினை வெளிப்படையாக விட்டு ஒப்பாரியாக (மன்னிக்கவேண்டும்; அதுதான் உண்மை) "புரிந்துகொள்ளமாட்டாயா?" என்று எழுத்திலே குரலெடுத்து விசைத்தறிப்பறைதட்டி அரற்றுகின்றீர்கள். உங்கள் உணர்நிலையலைவரிசையிலே பரிகின்றவர்கள் அந்த ஓலத்தின் உள் துடிக்கும் நாதத்தைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், மற்றவர்களுக்கு வெறும் ஓலம் மட்டுமே. இத்தனைக்கும் நீங்கள் உணர்வுமயப்பட்ட ஓலமாக வைத்திருக்கும் அப்பதிலிலே அவர் தரவுபோலப் பண்ணித்தந்திருப்பதிலும்விட அதிகம் திருத்தமான குறிபார்த்துச் சொல்லும் தகவல்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆயினும், என்ன நிதானமான தரவுபோல மயக்கும் அவருடைய வெற்றுவரிகள், உங்களின் குறித்த தரவினை முன்வைக்கும் பதிலினை உணர்வு வெளிப்பாட்டினாலே வாசிக்கின்றவர்களின் முன்னாலே அடித்து நொருக்கிவிட்டுப்போய்விடுகின்றது. மனிதர் எவ்வளவு நிதானமாக உண்மையை முன் வைக்கின்றார் என்று ஒருவர் வந்து பின்னூட்டம் இட்டுவிட்டுப்போவார். காய்த்தமரம் என்று இன்னொருவர் வாழ்த்துவார். நீங்கள் ஆற்றாமையிலே நிற்பீர்கள். <BR/><BR/>இதுதான் மாலனைப் போன்றவர்கள் இயங்குதளம். அவரைவிட நிச்சயமாக உங்களுக்கு இலங்கைப்பிரச்சனை பற்றிச் சொல்லத் தகவல்கள் இருக்கக்கூடும். ஆனால், உணர்விலே தொலைத்துவிடுகின்றீர்கள். ஆனால், அவரோ தனக்குத் தெரிந்திலும் தெரிந்தெடுத்துத் தனக்குச் சார்பானவையை மட்டும் தன் வாசகர்களின் உணர்வுத்தளத்தைத் "தரவுபோற் செய்யும் கருத்து"" முன்வைப்பினாலே நுணுக்கமாக அதிரவைத்துத் தனக்கு வேண்டியதைச் சாதித்துவிட்டுப்போகின்றார்.<BR/><BR/>அதனால், நீங்களோ நானோ, "மலம் கழுவும் அகதி" என்று உணர்வுபூர்வமாகத் திட்டுகின்றவனை அதே உணர்வுபூர்வ எதிர்வினை உத்தியாலும் "கருத்துப்போல்மை" செய்யும் மாலனை அதே கருத்துத்தளத்திலே ஆனால், எம்மிடமிருக்கும் திருத்தமான தரவுகளாலும் எதிர்கொள்ளவேண்டும்.<BR/><BR/>இதுதான் முக்கியம். பாருங்கள், இப்போது இங்கே நானிட்ட பதிலுக்கு எவ்விதத்திலே மாலனின் கருத்தோடு ஒன்றியவர்கள் எதிர்கொள்வார்களென்று.... "பெயரிலி புலி ஆதரவாளன்." இறுதியான இந்தப் ப்ரமாஸ்திரத்தை ஏவி வாலையும் வரியையும் அவர்கள் விருப்பப்படி எனக்குக் கட்டிவிட்டால், இவர்களின் வாதம் அவர்களின் இலக்கான கேட்போர்கூடத்து மாந்தரிடம் ஆவியேற்றத்தின் பீதியை இலகுவிலே உட்செல்லும். உஃல்பா முதல் ராஜீவ் ஊடாக கடைசியாக மீனவர் "கடத்தப்பட்டது"வரை கணத்திலே பொதிகொண்டு கனமாகத் தலையிறங்கும். பிறகென்ன, நினைத்தது நடந்தது. அதனால், இடத்துக்கும் வாதம் செய்கின்றவரின் போக்குக்குமேற்ப நாமும் உத்தியினைப் பயன்படுத்தவேண்டும். மாலனின் வாதத்துக்கு தெளிவான விளக்கம் பதில் கொடுத்திருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள் என்பதை மறக்கக்கூடாது. :-)<BR/><BR/>எம்மிலே பல தரவுத்தளங்களிருக்கினோம்; ஆனால், எமக்கு வேண்டியதெல்லாம் மார்க்கியவல்லியும் கௌடில்யனும் கான்ப்யூசியசுமே. அப்படியாக வராவிடின், "தோற்றுத்தான் போவோமா?" என்று அரற்றிக்கொள்வதுதான் மிஞ்சும்-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-41957949200294252942007-07-15T18:10:00.000-05:002007-07-15T18:10:00.000-05:00கடந்த 14 மணி நேரத்துக்கு முன் மாலனின் பதிவில் நான்...கடந்த 14 மணி நேரத்துக்கு முன் மாலனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம், இதுவரை அவர் அதைப் பிரசுரிக்காததால் இங்கே தருகின்றேன்.<BR/><BR/>...................................<BR/>//விடுதலைப் புலிகளை விமர்சித்து பதிவுகளிலேயே கூட எழுதும் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.அமிர்தலிங்கம் பத்மநாபா தொடங்கி, கருணா வரைக்கும் விடுதலைப்புலிகளின் செயலை, தலைமையை ஏற்காத பல இலங்கைத் தமிழர்கள் உண்டு.// <BR/>ஐயா பெரியவர<BR/>நீங்கள் குறிப்பிடும் பெரியவர்கள் தான் எமது இன அடிவருடிகளுக்குத் தோழர்களாக இருந்து செயற்பட்டத்தை நீங்கள் அறியமாட்டீர்களோ அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்ள மாட்டீர்களோ?<BR/>மிகச் சமீபத்திய உதாரணம் கருணா குழுவை மேற்குலகம் தடை செய்யக்கேட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? அவர்கள் தமிழ்த் தொழிலதிபர்களைக் கப்பம் கேட்டு கடத்திக் கொன்று குவித்ததை அறியமாட்டீர்களோ?<BR/>உங்களைக் கும்பிட்டுக் கேட்கின்றோம், எஞ்சியிருக்கும் எம் உறவுகளையாவது காப்பற்ற உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் பேசாமல் இருந்தாலே போதும். புலிகளைப் புனித புருஷர்களாக நாம் எல்லாரும் ஏற்கா விட்டாலும், அவர்கள் மட்டும் இன்று இல்லையென்றால் எமது உறவுகளுக்கு கோவணம் கூட மிஞ்சாது. <BR/>உங்களைப் போன்றவர்களுக்கு எமது பிரச்சனை ஒரு விளையாட்டாக இருக்கிறது. எமக்கோ அது உயிர்ப்போராட்டம். <BR/>- பாதிக்கப்பட்ட ஒரு ஈழத்தமிழன் -Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-26218863564415939042007-07-15T15:05:00.000-05:002007-07-15T15:05:00.000-05:00/கணினியில் தமிழ் குறித்த வரலாற்றுக் கட்டுரையை நீங்.../கணினியில் தமிழ் குறித்த வரலாற்றுக் கட்டுரையை நீங்களோ யாருமோ எழுதினாலும் ஒரு வேண்டுகோள் - அதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எவருக்கான மறுமொழியாகவும் இல்லாமலும் உள்குத்துகள், எள்ளல்கள் இல்லாமலும் வலுவான ஆதாரங்கள், பின்னணியுடன் ஒரு நேர்த்தியான academic ஆய்வுக் கட்டுரையின் அமைப்பில் தந்தீர்கள் என்றால் பெரும் உதவியாக இருக்கும். அதையும் விக்கிபீடியாவில் ஆதாரமாக இணைக்க நன்றாக இருக்கும் தானே ;)?/<BR/><BR/>கவலைப்படாதீர்கள். அதுதான் திருத்திய பதிப்பினைத்தான் இடுவேன் என்றேன்.<BR/><BR/>உரோமிலே உரோமராகவே இருப்போம்; உரோமம் சிலிர்க்கோம். அப்படி சிலிர்த்திருந்தால், தொழில்சம்பந்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் ஆய்வுப்பேராசிரியர்களையும் கூட ஆய்வு பண்ணிய, வழி நடத்திய மாணவர்களைத் திட்டுதலாகவுமே முடிந்திருக்கும். அப்படியாக ஏதும் நடக்கவில்லை... (சத்தியமாக இப்பதில் உட்குத்துத்தான்) :-))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-25485909364490400572007-07-15T14:58:00.000-05:002007-07-15T14:58:00.000-05:00எண்ணங்களின் குரல் இவ்விடுகை தொடர்பாக வெறும் விவாதங...<I>எண்ணங்களின் குரல்</I> இவ்விடுகை தொடர்பாக <A HREF="http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html" REL="nofollow">வெறும் விவாதங்கள் தரும் அயர்ச்சி</A> என்று எழுதியிருப்பதிலே இட்ட என் பின்னூட்டம்:<BR/><BR/><BR/>===========<BR/>எண்ணங்களின் குரல்,<BR/><BR/>மாலனுக்கு எதிர்வினையான என் இடுகையைப் பற்றிய உங்கள் கருத்து இதுவென்பதால், இங்கே எனது குறிப்பு<BR/>நீங்கள் சொல்லியிருக்கும் தமிழிலே இணையம், கணணி சம்பந்தமான தொழில்நுட்பத்தேவை குறித்து நூறுசதவீதம் ஒப்புக்கொள்கிறேன்.<BR/>நானும் தெளிவாக எழுதி, நீங்களும் இன்னும் பொறுமையாகப் படித்திருந்தால், நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்; நீங்கள் தேவையென்று சொல்வதுதான் முக்கியம் என்பதையும் வலியுறுத்துக்கின்றேன் என்பதைப் புரிந்திருப்பீர்கள். <BR/><BR/>ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களிருந்தாலுங்கூட, எனது பதிவின் தமிழ்-கணிமை-இணையம் தொடர்பான நோக்கத்தினைச் சொல்லிவிடுகிறேன்<BR/>1. இந்த மாதா, பிதா, குரு, தெய்வம் போன்ற பீடப்படுத்தற்சங்கதிகள் குமட்டிக்கொண்டு வந்ததாலேதான் இடுகையையே இடவேண்டியதாயிற்று<BR/>2. ஆனால், வரலாறு என்பது "யார் எப்போது என்ன செய்தார்" என்பதற்காக இல்லாவிட்டாலுங்கூட, "யார் எப்போது என்ன செய்யவில்லை" என்பதைக் குறிப்பதற்காகவும் எமது தொடர்ச்சிகளையும் வளர்ச்சிகளையும் பார்த்துக்கொள்ளவும் அவசியம்; அது தமிழ்க்கணிமை & தமிழிணையம் இவற்றுக்கும் இத்தேவையுண்டு. அனாச்சிஸ்டாக இருந்தாலொழிய பசாம் பாகம் பாகமாக எழுதிய இந்திய வரலாற்று தொடக்கம் கோசாம்பி குறித்தது முதலாக பல வரலாற்றுக்கான தேவையில்லை. வரலாற்றுத்தேவையென்று ஒன்றுண்டு. <BR/>3. "முதற்குரங்கு நம் குரங்கு" என்ற குமுகப்பாரம்பரியத்தோடும் ஆதாரமில்லாமல் பேசுவது தவறு மட்டுமல்ல, நீங்கள் சொல்வதுபோலவே பல சந்தர்ப்பங்களிலே அநாவசியமானதுங்கூட<BR/>4. வரலாற்றைப் பேசுவதென்பது தொழில்நுட்பத்தின் அவசியத்தை மறுத்தலாகாது.<BR/>5. பசியோடு பழத்தை முதலிலே கண்ட ஆதாமுக்குக் கடிக்கத் தோன்றியதென்றால், 1985/1986 இலேயே தமிழ் எழுத்துருவைச் செய்தவனும் 1990 ஆரம்பங்களிலே இணையத்தினைக் கண்டவனும் இரண்டையும் ஒன்றாகக் கண்டெடுத்துப் போட எண்ணுவது இயல்பாகவே வருவதுதான். எந்தளவு வேகமாகப் போய் பழத்தைப் பறித்தான் என்பதை எண்ணிப் பார்க்கச்சொல்கிறேன்<BR/><BR/><BR/>நிற்க, <I>/நான் கூறுவது, உ-ம்,<BR/>வலை://வவவ.விருபா.வணிகம் என்று பயனர் உள்ளிட்டால் அது <BR/>http://www.viruba.com என ஏற்றுக் கொண்டு சரியான முகவரிக்குச் செல்லும் வகையில் மொழிபெயர்த்தல். இதை எளிதாகச் செய்து விடலாம். ஆனாலும் இது தேவையான ஒன்று என்பதைக் குறிப்பிடவே எனது இடுகையில் இதையும் பட்டியலிட்டேன். /</I> என்றிருக்கின்றீர்கள்.<BR/>மெய்யாகவே இல்லையா? சிங்கை மணியம் சில ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்பந்தமாகக் கட்டுரை எழுதியும் இணையம் பதிவு செய்து அமைத்தும் காட்டியிருக்கின்றார் என்பதாக ஞாபகம். <A HREF="http://www.aptsec.org/meetings/2003/workshop/idn/Session%202.3%20%5BIDN06B%5D_Mr.%20Subbiah.ppt#256,1,MINC - Multilingual Internet Names Consortium" REL="nofollow">இப்போதைக்கு இச்சுட்டியைப்</A> (warning: Pwer Point Presentation)பாருங்கள். ஒழுங்கான அவரது கட்டுரை/இடுகை/அஞ்சல் சேர்த்த சுட்டி கிடைத்தால், பின்னர் இணைக்கிறேன்.<BR/><BR/><BR/>உங்களின் இவ்விடுகையை வாசித்து "Good One" சொன்ன பின்னால், நாமக்கல் சிபி மொக்கைப்பதிவு இனியேதும் எழுத மாட்டாரென்ற நம்பிக்கையோடு :-)<BR/>-/பெயரிலி (எ) இரமணிதரன், க.<BR/><BR/><I>பிகு: வலையுலகப்பெருந்தலை என்று என்னைத்தான் குறித்திருந்தால், நன்றி! நன்றி! நன்றி!!!நமக்கெல்லாம் 'தமிழிணைய வேந்தர்கள்', 'செந்தமிழ்க் கணிமைப் புரவலர்கள்' என்ற பயனற்ற பட்டங்கள் எவரும் தருவதற்கான வாய்ப்பில்லாததால், நீங்கள் தந்திருக்கும் "வலையுலகப்பெருந்தலை" என்பதையே இனி வரும் வாதங்களிலே என் செங்கோல் ஆதாரமாகக் கொண்டு சுட்டிக் காட்டிச் செயற்படுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்</I> :-)<BR/>=======-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-10973634882210123682007-07-15T14:26:00.000-05:002007-07-15T14:26:00.000-05:00விக்கிபீடியா எந்த அளவு நம்பத்தகுந்தது?அரசியல், வரல...<B>விக்கிபீடியா எந்த அளவு நம்பத்தகுந்தது?</B><BR/><BR/>அரசியல், வரலாறு குறித்த விக்கிபீடியா கட்டுரைகளில் சர்ச்சைகள் நிலவினாலும் அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்கள் மூலம் அக்கட்டுரைத் தகவல்கள் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களைக் கண்டு உண்மை நிலையைத் தெளியலாம். சர்ச்சை அறிவிப்புகள் காணப்படாத விக்கிபீடியா கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் கூட அதன் பேச்சுப் பக்கங்களில் தகுந்த விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட பிறகே கட்டுரைப் பக்கத்தில் இடம்பெறுகின்றன.<BR/><BR/>சென்ற ஆண்டு Nature இதழ் நடத்திய ஆய்வில் ஆங்கில விக்கிபீடியாவில் அறிவியல் தலைப்பில் அமைந்துள்ள கட்டுரைகள் encyclopedia britannicaவின் தரத்துக்கு மிக நெருங்கி அமைந்துள்ளதாகத் <A HREF="http://www.nature.com/news/2005/051212/full/438900a.html" REL="nofollow">தெரிவிக்கிறது.</A><BR/><BR/>விக்கிபீடியா setupக்கு உள்பட்டு நம்பகமான கட்டுரைகளை உருவாக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.<BR/><BR/><B>விக்கிபீடியா கட்டுரையை முதன்மை ஆதாரமாகப் பல்கலைக்கழகங்கள் ஏற்குமா? </B><BR/><BR/>விக்கிபீடியா கட்டுரைகள் மட்டுமல்ல britannica கட்டுரைகளைக் கூட முதன்மை ஆதாரமாக <B>ஆய்வு அறிக்கைகளில்</B> காட்ட இயலாது. இதற்கு இவற்றின் நம்பகத்தன்மை குறைவு காரணமில்லை. மாறாக, இவற்றின் nature of authorshipஏ காரணம். Britannicaவில் இடம்பெற்ற ஒரு அறிவியல் அறிஞரின் தனி நூலை ஆதாரம் காட்ட வல்ல அளவுக்கு Britannica மொத்தத்தையும் ஆதாரமாகக் காட்டுவது வராது. நீங்கள் சுட்டிக்காட்டியபடி, wikipedia, britannica முதலியவை எல்லாமே மாணவர் நிலையில் உள்ளவர்களின் ஒரு தலைப்பு குறித்த தேடலுக்கான முதல் வாயிலாகவே அமைய இயலும். அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களை நிறுவ இவற்றை மேற்கோள் காட்ட இயலாது. மூல ஆதாரங்களையே உசாத்துணையாகக் காட்ட வேண்டும். academic acceptance கிடைக்க வேண்டிய வரலாறு, அறிவியல், அல்லது கலை-இலக்கிய-மொழி-அறிவியல் வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு அந்தந்த துறைகளில் வெளி வந்துள்ள peer-reviewed journal publicationகளையே முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியும்.<BR/><BR/>விக்கிபீடியா கட்டுரையோ எதுவோ 100% நம்பகத்தன்மை உடையதாக இருந்தாலும், ஒரு ஆய்வுக்கட்டுரையில் context, review இல்லாமல் வெறும் சாதகமான மேற்கோள்களை மட்டும் வரிசையாக அடுக்கி ஒரு கருதுகோளை நிறுவ முடியாது என்று நீங்கள் சுட்டிக் காட்டி இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். <BR/><BR/>கணினியில் தமிழ் வரலாறு குறித்த peer reviewed journal ஏதும் இல்லாத நிலையில் ;), ஆதாரங்கள் முழுக்க இணையத்திலும் சரி பார்க்கப்படாமலும் சார்புநிலைகள், ஒளிவு மறைவுகளுடன் இருக்கும் நிலையில் தத்தம் ஆய்வு முடிவுகளுக்கு எந்தெந்த ஆதாரங்களை முன்வைக்கிறீர்கள், அதில் எந்தெந்த ஆதாரங்கள், argumentகள் ஏற்புடையவை என்பதை உங்களின் ஆய்வு வழிகாட்டி தான் மதிப்பிட வேண்டும் :)<BR/><BR/>கணினியில் தமிழ் குறித்த வரலாற்றுக் கட்டுரையை நீங்களோ யாருமோ எழுதினாலும் ஒரு வேண்டுகோள் - அதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எவருக்கான மறுமொழியாகவும் இல்லாமலும் உள்குத்துகள், எள்ளல்கள் இல்லாமலும் வலுவான ஆதாரங்கள், பின்னணியுடன் ஒரு நேர்த்தியான academic ஆய்வுக் கட்டுரையின் அமைப்பில் தந்தீர்கள் என்றால் பெரும் உதவியாக இருக்கும். அதையும் விக்கிபீடியாவில் ஆதாரமாக இணைக்க நன்றாக இருக்கும் தானே ;)?<BR/><BR/>உங்கள் கேள்விகளுக்கு இயன்றவரை நேரடியாகவும் விரிவாகவும் பதில் தந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பணிச்சுமை காரணமாகத் தொடர்ந்து இவ்வுரையாடலில் பங்குபெற இயலாமல் போகலாம். நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-77293085112560063702007-07-15T13:32:00.000-05:002007-07-15T13:32:00.000-05:00/விக்கிபீடியாவின் எந்தக் கட்டுரையும் மேம்பாட்டுக்க.../விக்கிபீடியாவின் எந்தக் கட்டுரையும் மேம்பாட்டுக்கு உகந்ததே. அந்த வகையில் உங்கள் பங்களிப்பை வேண்டியே அழைத்தேன். விக்கிபீடியா மேற்கோள் காட்டத்தக்கதா என்று கேள்வி எழுப்புவதை விட அதை மேற்கோள் காட்டத் தக்கதாக மாற்ற முனைவதே நல்ல செயற்பாடாக இருக்கும். ஏனெனில், இது நாம் நமக்காக உருவாக்கும் கலைக்களஞ்சியம். விலகி நின்று குறை கூறுவதால் இந்தத் திட்டமும் மேம்படாது. இன்னொரு நல்ல திட்டமும் வந்து விடாது. /<BR/><BR/>இரவிசங்கர் தவறாகப் புரிந்துகொண்டீர்கள். தன்னார்வத்தொண்டான விக்கிபீடியாவினைக் குறை சொல்லவில்லை. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆனால், விக்கிபீடியாவினை முதல்நிலை ஆதாரமாகக் காட்டமுடியாது. அடிப்படையிலே ஒரு தேடுதலுக்கான ஆரம்பமாக மட்டுமே அதனைக் கொள்ளலாம். இங்கே பேசிக்கொண்டிருப்பதுபோன்ற வரலாற்றுத்தேடுதலுடன் சம்பந்தப்பட்டவற்றுக்கு, இன்னார்தான் இக்காலப்பகுதியிலே செய்திருக்கின்றார், செய்திருக்கக்கூடும் என்று முன்வைக்கும் மூல ஆதாரங்களிலிருந்தோ, சம்பந்தப்பட்டவர்களுடனான உரையாடல்களிலிருந்தோதான் நாங்கள் காலவரையறைப்படி நிறுவவேண்டும். அப்படியான ஆதாரங்கள், உரையாடல்கள்கூட ஆதாரம் குறித்த விமர்சன மீள்பார்வையில்லாமல், வெறுமனே இணையப்பக்கத்தின் இணைப்பினை எடுத்துப்போடுதலாலோ உரையாடலிலே ஒருவர் நான் செய்தேன் என்பதை அப்படியே எடுத்துப்போடுவதாலோ ஆகப்போவதில்லை. ஆராய்ச்சிமாணவரான நீங்கள் இதனை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள். Nature அல்லது Science இற்குக் ஆய்வுக்கட்டுரை ஒன்று அனுப்பும்போது, விக்கிபீடியாவினை உசாத்துணையாகக் காட்டிப்பாருங்கள்; உங்களின் நண்பரான ஆய்வாளர் ஒருவர், "பூமி வெப்பமடைவது உண்மையே; இதனை நான் 1995 செப்ரெம்பர் 2 ஆம் நாளே சொல்லியிருக்கின்றேன்" என்று சொல்வதைப் போட்டுப் பாருங்கள். அவை எப்படியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதைச் சொல்லுங்கள். நிச்சயமாக, சம்பந்தப்பட்டவரின் கருத்து முக்கியமாகும். ஆனால், அதனை நான் விமர்சன ரீதியிலே 'தகுமா? தகாதா?' என்று ஆய்வுக்கண்ணோட்டத்தில், கால,பொருள், இடப்பார்வைகளிலே பொருந்துகின்றதா என்பதைப் பார்த்துவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். <BR/><BR/>நீங்கள் ஓர் ஆய்விதழிலே வேறோர் ஆதாரமுமின்றி அப்படியான சம்பந்தப்பட்டவரின் மேற்கோளினையிடுகின்றீர்களென்றால், அதனைக் கட்டுரையின் உள்ளே தர்க்கரீதியாகவோ விமர்சனரீதியாவோ தன்னைத் தானே தாங்கி நிற்கும்படி நியாயப்படுத்தவேண்டும். இதனாலேயே, பெரும்பாலான முன்னிலை ஆய்விதழ்கள், விமர்சனமற்ற மேற்கோள் காட்டுவதையோ, நிலை, முகவரி மாறும் இணையப்பக்கங்களினை மேற்கோள் காட்டுவதையோ பெருமளவிலே விரும்புவதில்லை. வேண்டுமானால், அறிவியல் அல்லாத கலை, இலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளிலே பாருங்கள்; எதற்கு, பெரிய தொழில்முறை ஆய்வுகளைப் பதிப்பிக்கும் இதழ்களுக்குப் போகவேண்டும். வேண்டுமானால், உதாரணத்துக்கு, வெகுமக்கள் இடைநிலை இதழான காலச்சுவட்டிலேயே அண்மைக்காலத்திலே பெருமாள் முருகன் தமிழிலக்கியங்களின் வரலாற்றினைப் பற்றி எழுதும் பத்திகளைக் கவனியுங்கள். என்ன வகையிலே யார் ஓர் இலக்கியப்படைப்போடு சம்பந்தப்படுகின்றார்கள் என்று ஆராய்வதை. குறிப்பாக, ஏட்டியிருந்து எடுக்கப்படும் பழந்தமிழ் நூல் இன்றைக்குக் கையிலே கிட்டும்போதுவரை, எத்தனை பேரின் கைகளிலே என்னென்ன நிலை படுகின்றதென்பதைக் காணுங்கள்; ஒரு நூலாகி வரும்வரை எத்தனை இடைச்செருகல்கள், அந்நூலினைப் பதிப்பித்தவர்களிடையேயான திருத்தல்களும் மறைத்தல்களும் உருப்பெருப்பித்தல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஆய்வாளன் காண்பதாகப் பாருங்கள். எதற்காக, ஒரு நூலின் செம்பதிப்பு என்பதை ஒவ்வோர் ஆதாரமாகத் தேடித் தேடி மூல நூலிருந்து பின் வந்த நூலெல்லாம் தேடி, ஒத்து சரிபிழை பார்த்து வெளியிடுகின்றார்கள் என்று பாருங்கள். அப்படியான செம்பதிப்பிலே விக்கிபீடியாவினை ஆதாரம் காட்டமுடியாது. அதிகம் வேண்டாம், பாரதியாரின் பாடல்களையே வெவ்வேறு பதிப்பகங்கள் வெவ்வேறு காலத்திலே எடுத்துப் பதித்ததைப் பாருங்கள். பாடல்களிலே இடைப்பூசாரிகளின் கைங்கர்யசேவை தெட்டத்தெளிவெனப் புரியும். அதுவும் பூம்புகார் பதிப்பகம்.. மிச்சம் திறம்!! வெகுசுத்தம்!! <BR/><BR/>மாலன் மேலே வைத்திருக்கும் வாதங்கள் தம்மைத்தாமே பொடிபடுத்திக்கொள்கின்றவை. இன்னமும் நா. கோவிந்தசாமி குறித்து அவர் தந்திருக்கும் உசாத்துணை ஆதாரங்களின் ஆரம்பக்காலப்பகுதியினைவிட, முந்திய காலத்திலேயே கோவிந்தசாமி ஏற்றிவிட்டார் என்பதற்கு நானே மூல இணையப்பக்க ஆதாரத்தினை சில நாட்களின் முன்னாலே எடுத்துத் தந்திருக்கின்றேன். (<A HREF="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html#c522576136823598637" REL="nofollow">மேலே பாருங்கள்</A>; எனக்கு ஓட்டப்பந்தய வரலாறுதான் முக்கியமேயொழிய, எவரது பந்தயக்குதிரை என்பதல்ல). அவரின் ஒவ்வோர் ஆதாரம் பற்றியும் வரும் வாரம் போடப்போகும் இடுகைகளிலே விபரமாக அலசுகிறேன். இப்போதைக்கு, விக்கிபீடியாவை அவர் இங்கே தரவு - 1 என முன்னிலை உதாரணம் காட்டுவதைத்தான் தவறு என்பதைச் சுட்ட உங்கள் முன்னைய பின்னூட்டத்தினை எடுத்துக் காட்டினேன். தன்னார்வர்கள் தமக்குத் தெரிந்த விபரங்களைப் பொருத்தமான இடங்களிலே காலமுறைப்படி எடுத்துப்போடுவதிலேதான் விக்கிபீடியா அமைந்து வளர்கின்றது. இது மிக மிக அவசியமான தேவை. ஆனால், என்ன காரணங்களை முன்வைத்து என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா நிறுவனத்தார் விக்கிபீடியாவோடு முறைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் காணுங்கள் - விபரங்களை மூல ஆதாரங்களோடு தொழில்முறையாகத் தேடி ஆய்ந்து ஒத்துச் சரி பார்த்துத்தான் தாம் வெளியிடுவதாகவும் விக்கிபீடியாவிலே முழுக்கமுழுக்க அப்படியாக இருக்க வாய்ப்பில்லாதலால் தவறுகள் நேரலாமென்றும் கூறி. தன்னார்வலர்களான உங்களைப் போன்றவர்கள் உங்கள் நேரத்தினைச் செலவு செய்து விக்கிபீடியாவினை உருவாக்குவது மேன்மையே. ஆனால், ஓர் உதாரணத்துக்கு, கட்டமைப்பியல், சொல்லமைப்பியல் என்பவை குறித்து நான் கொஞ்சம் திருத்தமான விளக்கம் பெறவேண்டுமானால், அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் காணமட்டுமே விக்கிபீடியாவைக் காணுவேன்; பிறகு, அவை குறித்து வரும் திருத்தமான கட்டுரைகளைத் தேடிப் போய்விடுவேன். விக்கிபீடியா தரும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இலங்கை வரலாறு, இஸ்ரேல் வரலாறு, காஷ்மீர் வரலாறு என்பவற்றினைக் குறித்து விக்கிபீடியாவினைப் பார்த்தால், இன்னமும் "dispute" இலே இருப்பதாகவேயிருக்கும். அந்நிலையிலே விக்கிபீடியாவினை முன்னுதாரணம் காட்ட முடியுமா? இன்றைக்கு நான் ஜெயச்சந்திரன் கோபிநாத்தின் 1995 ஆண்டின் இணையப்பக்கத்தினை முன்வைத்து, கோவிந்தசாமியின் முதன்மை இடத்தினைத் தர்க்கரீதியிலே கேள்விக்குறியாக்க முடியுமானால், நீங்கள் சொல்வதன்படி, நானோ இன்னொருவரோ விக்கிபீடியாவிலே போய், 'முதலாவது தமிழில் இணையம்' வரலாற்றினை 'முரண்'பட்டு கேள்விக்குறியாக்க முடியுமானால், விக்கிபீடியாவினை இப்பிரச்சனையிலே ஆதாரம் காட்டுவது தானே வளைந்து தன்னைக் குத்தி முறிந்துபோய்விடுகின்றது.<BR/>எல்லாவற்றினையும் விட, இந்த மாலனின் முதலாவது ஆதாரமான விக்கிபீடியாவின் ""முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு <BR/>அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக்கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது" எங்கேயிருந்து பெறப்பட்டதெனப் பார்க்க, மாலனின் மூன்றாம் ஆதாரத்திலே ஆல்பேர்ட் 2004 இலே சிங்கப்பூர்த்தமிழிணைய மகாநாட்டிலே வாசித்த கட்டுரையான, "அவர்- அமரர். நா.கோவிந்தசாமி! 1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது. இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்" என்பதைப் பார்த்தாலே போதுமானது. இனி, ஆல்பேர்ட் எங்கேயிருந்து எடுத்து இதைப் போட்டார் என்பதைக் கீழே முடிந்தவரை தர்க்கபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறேன். <BR/><BR/>[எனது வெறும் ஊகம் என்னவென்றால், மாலன், <A HREF="http://ta.wikipedia.org/wiki/Portal:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88" REL="nofollow"> விக்கிபீடியா</A>, உத்தமத்தின் ஆரம்பகால உறுப்பினர் இலண்டன் நடேசன் சத்தியேந்திராவின் விரியும் தமிழ்க்களஞ்சிமான <A HREF="http://www.tamilnation.org/literature/index.htm" REL="nofollow">தமிழ்நேசன்</A> ஆகியவற்றிலிருந்து புறப்பட்ட கட்டுரைகளிலேயிருந்துமட்டும் மீதித்தேடல்களை நடத்தியிருக்கின்றார் என்பதுதான். அவருடைய தொழில்சார்ந்த நேரச்சிக்கலிடையே எனக்குப் பதிலிட்டதனை வரவேற்று நன்று சொல்லும் அதேநேரத்திலே என் ஊகம் சரியானால், அது மிகவும் தவறான திசையிலே தமிழ்க்கணிமை வரலாற்றினை இட்டுச்செல்ல உதவும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்]. தவிர, <A HREF="http://www.tamilnation.org/hundredtamils/naag.htm#2004" REL="nofollow">ஆல்பேர்ட் என்பவரின் கட்டுரை உத்தமம் தளத்திலே இதுவரை கிட்டவில்லை</A>. (<A HREF="" REL="nofollow">TI Conferences - தமிழிணையம் கருத்தரங்குகளுக்கு அனுப்பப்பட்ட, ஆங்கே வாசிக்கப்பட்ட கட்டுரைகளைக்கூடத் தரவேண்டாம், குறைந்தது முழுக்கட்டுரைகளின் பட்டியலையேனும் எல்லா ஆண்டுகளுக்கும் உத்தமம் தரலாமே</A> :-( ) அதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். வைத்தியர். விஸ்கொன்ஸின் ஆல்பேர்ட் என்பவர் தமிழ்நெற், (உலகத்தமிழ்க்குழுமம்) ஆகியவற்றிலே பங்குபற்றியவர் (<I>மாலன் <A HREF="" REL="nofollow">தன் சுட்டியிலே சுட்டப்பட்டதை</A> இங்கே <A HREF="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html#c7585294511570337659" REL="nofollow">தன் ஆதாரம் -5 ஆக</A> சுட்டுப்போட வசதி செய்த நண்பர் அலெக்ஸ் பாண்டியன் என்று இப்போது அறியப்படும் <A HREF="http://alexpandian.blogspot.com/2005/06/blog-post_111892340178864514.html" REL="nofollow">நண்பர் போலவே - AnionMass எ. அனோனிமாசு</A></I> :-)). ஆல்பேர்ட்டின் அவரின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்; வாசன், இராமகி, ஆசிப் மீரான், நாக.இளங்கோவன் போன்ற தமிழ்நெற், உலகத்தமிழ்க்குழுமத்திலேயிருந்த நண்பர்களும் அவரின் கட்டுரைகளினை வாசித்திருக்கின்றார்கள். கட்டுரை எழுதும்போது, ஆல்பேர்ட் எப்படியாக எழுதுவார் என்பதை ஊகிக்கமுடிகின்றது. ஆல்பேர்ட் எழுதிய கட்டுரையை ஆய்வுக்கட்டுரையா, நீத்தார்பெருமை இரங்கற்குறிப்பா என்பதைக் கொஞ்சம் நாம் வாசிக்கப்பட்ட இடத்தைக் கருதாமலும், கொஞ்சம் மூன்றாம் மனிதராக நின்று ஆய்ந்து பார்த்துக் குறிக்கவேண்டும். இவருடைய கோவிந்தசாமி பற்றிய கட்டுரைக்கு எங்கே ஆதாரம் என்பதை tamilnation இலே கிடைக்கும் அவரது கட்டுரையைமட்டும் வைத்து எதையும் சொல்ல முடியவில்லை. ஆல்பேர்ட் கோவிந்தசாமியினைப் பற்றிச் சொல்வதைவிட, கோவிந்தசாமியுடன் நெருங்கி, அவரின் குழுமத்தினைச் செயற்படுத்திய சிங்கப்பூர் மணியம் விபரமான தகவல்களைத் தரக்கூடும். இப்படியான மாலன் மூன்றாவது ஆதாரமாகத் தரும் ஆல்பேர்ட்டின் குறிப்பினை அள்ளிமுடிந்துகொண்ட மாலனின் முதலாவது ஆதாரமான விக்கிபீடியா_குறிப்பினை என்ன செய்வது? என்ன சொல்வது? விக்கிபீடியாவினை ஆதாரமாக ஏன் தரக்கூடாதென்பதற்கு இதுதான் உதாரணம். அவருக்கு ஆதாரம் யார் என்பதைப் பார்க்கவேண்டும். இதன் ஆதாரத்தை நாமாக விழுந்தடித்துத் தேடினால், அதே <A HREF="http://www.tamilnation.org/digital/tamilnet97/jaykumar.htm" REL="nofollow">தமிழ்நேசன் தளத்திலே TI 1997 கருத்தரங்கின்</A> திறப்புவிழாவிலே சிங்கப்பூர் அமைச்சர் ஜெயக்குமார் "I understand that a prototype of Tamil Internet technology was tested when an electronic selection of representative poems from our official languages from the anthology Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984 - 1995) was launched by the President of Singapore, HE Mr. Ong Teng Cheong in October 1995" என்று சொல்வதிலே கண்டு கொள்ளலாம். இப்போதுகூட, இங்கே அவர் மிகவும் எச்சரிக்கையாகச் சொல்வது, "I understand....." <BR/><BR/>'Crown Prince' பிறந்திருக்கின்றான் என்று சொன்னது, 'Clown Prince', 'Crow Prince" ஆகி, கடைசியிலே அரசருக்கு காகமே பிறந்திருப்பதாக நாட்டுமக்கள் பேசிக்கொள்ளும் கதையாக, 97 இலே சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் திறப்புவிழாவிலே சம்பிரதாயபூர்வமாகச் சொன்னது, கடைசியிலே 2007 இலே விக்கிபீடியாவிலே ஆதாரமாக எடுத்து வாதத்துக்கு முன்வைப்பதிலே நிற்கின்றது. இதுதான் எமது தமிழாய்ச்சிமகாநாடுகள், கட்டுரைகள் சிலவற்றின் அவலம் - எல்லாம் அல்ல/ தொழில்நுட்பக்கட்டுரைகள் மிகவும் முன்னோக்கி எடுத்துச்செல்பவை. ஆனால், அவை தவிர்ந்த பக்கவாட்டு தமிழிணைய வரலாறு, கணிச்சொல், கணித்தமிழ் கற்பிக்கும்முறை,இதழியலிலே தமிழ் பற்றிய கட்டுரைகள் மிகவும் மேலோட்டமாவையும் வழுக்கள் நிரம்பியவையாகவும் இருப்பதை வாசிக்கின்றவர்கள் உணரலாம். <BR/>இப்படியான நூற்கண்டுபோல, சுற்றிச்சுற்றி, ஹெர்குலேயின் பென்சீன் பாம்புபோல, ஆதாரம் தோன்றிய இடங்களிலேயே ஆதாரத்துக்கு மூலம் காட்டிவிடக்கூடிய வட்ட, அறுகோண ஆதாரத்தொகுதியாகவேதான் தமிழ் இணைய வரலாறு நிற்கின்றது. அதுவும் சுட்டுகின்ற 'அ' வினை ஆதாரம் காட்டி, 'ஆ' உம் அவரை ஆதாரம் காட்டியோ பெயர் சொல்லாமல் மேம்போக்காக, 'இ' உம்...... இப்படியாகப் போய் கடைசியிலே ஔவிலே வந்து இணையக்கர்ணபரம்பரைக்கதை நிற்கும்போது, "கோவிந்தா கோவிந்தா" என்று கையெடுத்துச் சேவிப்பதிலேமட்டும் முடிந்துவிடுகிற மாதிரி, நிரூபிக்க வேண்டிய ஆதாரம் தேவையில்லாத 'உண்மை' தோன்றிவிடுகின்றது. அதன் காரணமாகவேதான், எப்போதும் இணையத்திலே வரலாற்ற்றினை எவர் சுட்டும்போதும், சிந்தாநதியோ, இ(L)ளாவோ, இரவிசங்கரோ, மாலனோ சுட்டும்போதும் 'குறை' கண்டுபிடிக்கின்றவனாகின்றேன். மதி கந்தசாமியா அருணா ஸ்ரீனிவாசனா முதற்பெண்பதிவாளர் என்பது குறித்து, திருத்தம் தேவை என்று சுட்டினால் அதுதான் காரணம். அருணா ஸ்ரீனிவாசன் இல்லாமல் மதி கந்தசாமி என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே; அங்கும் சுதேசமித்திரன் பாரம்பரியம் மிக எளிதாகப் பொலபொலத்துபோய்விடுகின்றது. [சந்திரவதனாவின் யாழ்.கொம் பதிவு 12/31/2002 காட்டினாலுங்கூட வேறோர் இரண்டாம்நிலை ஆதாரத்தினை, சரிபார்ப்பினைத் தேடியபோது, யாழ்.கொம்மிலே வலைப்பதிவுகள் பற்றி அறிவித்தவர், நவன் உடைய பதிவினைப் பார்த்துவிட்டே அறிவித்தார் என்றும் அதன் பின்னரே யாழ்.கொம்மிலே பதிவுவசதி தொடக்கப்பட்டிருந்திருக்கலாமென்றும் விபரம் கிட்டியது. அதனால், சந்திரவதனாவின் முதல் பதிவின் திகதி நான் முன்னர் இடுகையிலே சுட்டியதுபோலவே யாழ்.கொம் தரவுத்தளத்தின் அமைப்பிலான விளைவென்றே கருதுகின்றேன்]. அப்படியாக, நான் ஒரு சுட்டியைத் தரும்போது, அது தவறு என்று இன்னொருவர் ஆதாரத்துடன் சுட்டி(க்) காட்டினால், அத்தவற்றைக் களைந்து கொண்டு முன்னே திருத்தி நகர்வதே முக்கியம். தவிர, "நான் சொல்வது சரியா? மற்றவர் சொன்னது சரியா?" என்பதல்ல; இது தான் எனும் இயந்திரத்தின் முடுக்கலிலே வருவதல்ல; ego-engine இனை இதற்கெல்லாம் முடுக்கமாட்டேன் :-) I have my own Achilles' heels to ignite my ego engine to let the hybernating Jinnne out of the bottle, but Internet Tamil History is not one of them; may be Sudesamitran & Navalar issues are:-)<BR/><BR/>நாளைக்கு ஆதாரத்துடன் <A HREF="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html#c522576136823598637" REL="nofollow">கோவிந்தசாமி</A>, <A HREF="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html#c7261151862654929594" REL="nofollow">ஜெயச்சந்திரன்</A>, கல்யாணசுந்தரம் இவர்களுக்கு முன்னமே, எங்கோ தனியனாக, கோவிந்தசந்தரசுந்தரம் என்பவர் இணையத்திலே தமிழினை ஏற்றிவிட்டார் என்பது வரக்கூடும். அப்போது வரலாற்றை நீலகண்ட சாத்திரிகளின் சோழர் வரலாற்றைத் திருத்துவதுபோலத் திருத்திக்கொள்ளலாம். இயன்றவரை, பரணவித்தாரனவின் இலங்கைவரலாறு, நவரத்தின ராஜாராமின் சிந்துவெளிநாகரீகவிலங்குவரலாறு போன்ற வரலாற்றை வரவழைக்கும் நிலைகளைக் களைந்து கொள்/ல்வோம். நான் சொல்வதெல்லாம், கேட்பதெல்லாம் மிகவும் எளிதானதே: "மிகவும் சந்தர்ப்பத்துக்கு அவசியமென்று பட்டாலொழிய, "தமிழின் முதல்..." என்பதுபோன்ற அடைமொழிகளைச் சேர்த்துக்கொண்டு கட்டுரைகளைச் இணையவாசகர்களுக்கோ அச்சுப்படிவாசிப்பவர்களுக்கோ சொல்லத்தொடங்காதீர்கள். அப்படியாகத் தொடங்கத்தான் வேண்டுமென்றால், (சிங்கப்பூர் அமைச்சர் தொடங்கியதுபோலவே), "எனக்குத் தெரிந்தவரை..." என்ற இன்னோர் அடைமொழியினையும் "தமிழின் முதல்..." என்பதற்கு முன்னாலே சேர்த்துக்கொள்ளுங்கள்." அதுதான் முக்கியம்; நான் தந்திருக்கும் மேம்பட்ட கோவிந்தசாமிக்கு ஆதரவான, ஜெயச்சந்திரனின் ஆய்வுக்கு ஆதரவான ஆதாரங்களின் இப்போதைக்குக் கிடைக்கும் நாட்களை மட்டும் வைத்துப்பார்த்தால், கோவிந்தசாமி இரு மாதங்களினாலே முன்னே இப்போதைக்கு நிற்கின்றார். அதிலே எனக்கேதும் வருத்தமில்லை - ஏனென்றால், இது ஓட்டப்பந்தயப்போட்டியல்ல. தமிழ்வரலாறு என்பது எனதும் மாலனினதும் பொதுவானதுதான். சிலவேளை இவர்களின் செயற்பாடு இன்னொரு மொழிக்கான இணையச்செயற்பாட்டுக்குப் பிந்தினாலே நான் வருத்தப்படக்கூடும். ஆனால், அதேநேரத்திலே, இப்போது அரைகுறையாக இருக்கும் இந்த ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு எவர் & எப்போது என்பதைச் சொல்லமுடியாது. அதைத்தான் இப்போதைக்குச் சுட்டுகின்றேன். விபரமாக வரும் இடுகைகளிலே மாலனின் மீதி ஆதாரங்கள், விடயங்கள் தொட்டும் எழுதுவேன்.<BR/> <BR/>சொல்ல வந்ததிலிருந்து அலைந்ததிலிருந்து மீண்டு விக்கிபீடியா பற்றி மீண்டும்; ஆயினுங்கூட, இம்மாதிரியான 'Dr. Naa Govindasamy' வழுக்களுக்கு முழுக்கமுழுக்க விக்கிபீடியாவினை ஆதாரம் காட்டுவதே காரணம் என்று சொல்லமாட்டேன். தமிழ்.இணையம் 2000 மகாநாட்டிலே ஒரு காலகட்டத்திலே உத்தமம் போன்ற அமைப்பிலே மிகவும் முக்கியமான பதவியிலிருந்த அனந்தகிருஷ்ணனே வாசிக்கும் ஆய்வுக்கட்டுரையான "Tamil Fonts, Keyboards and Beyond" இனை வாசித்துப்பாருங்கள் (இதுவும் <A HREF="http://www.answerok.com/security/2544-1-security.html" REL="nofollow">AnswerOk.com: Computers & Internet Questions and Answers போன்ற விக்கிபீடியாவின் வழியொற்றி நடக்கும் விபரத்தளம்</A>); அதே 'Dr. Naa Govindasamy'தான். ஆய்வுக்கட்டுரை என்பது ஒரு முன்னைய பல்கலைக்கழகத்துணைவேந்தர், TamilNet 2001 (TI2001) இன் தலைவர், தொழில்முறைக்கல்வியியலாளர், ஆய்வாளரிடமிருந்து இப்படியான வெளிப்படையான வழுக்களுடன் குமுதத்திலே இலங்கையின் இனப்பிரச்சனையிலே இந்தியாவின் தன்னலமற்ற பங்கு என்பதுபோல எழுதப்படும் கட்டுரைகள் மாதிரியாக வருமானால், அப்படியான கட்டுரைகளை ஒத்தி ஒட்டும் விக்கிபீடியாவைப் பிழை சொல்லி என்ன செய்வது?! இக்கட்டுரையே, தமிழ்க்கணியமை தொடர்பான உத்தியோகபூர்வ infitt / உத்தமம் தளத்திலும் இருக்கின்றதென்று வைத்துக்கொள்வோம். அதனால், அதன் சரிபிழை ஆயாது, டாக்டர். கோவிந்தசாமி என்று எல்லாவிடத்திலும் இணையத்தளத்தையும் ஆனந்தக்கிருஷ்ணனயும் எண்ணிக்கொண்டு எழுதிவிட்டுப்போகமுடியாது. இத்தவறு இவற்றினை வைத்துப் பின்னாலே கட்டுரை எழுதும் கட்டுரையாளரின் தலையிலே பொறியாதிருக்கவே, உசாத்துணைகளைக் கட்டுரைகளின் பின்னே சேர்த்துக்கொள்வதன் நோக்கம். அப்படியாகச் சேர்க்கும்போது, ஏற்படும் வழுக்களை இயன்றவரை குறைப்பதற்காகத்தான், வழுக்கள் ஏற்படும் என்ற சாத்தியமோ நம்பிக்கையோ குறைந்த உசாத்துணைகளை, தனிப்பட்ட உரையாடல் ஆதாரங்களை நல்ல ஆய்வுக்கட்டுரைகள் ஆரம்பத்திலேயே இயன்றவரை தவிர்த்துக்கொள்வதன் நோக்கம்.<BR/><BR/>சம்பந்தப்படாமல்: மாலனின் பின்னூட்டத்தின் (அவர் தன் பதிவிலே இடுகையாக இட்டது) அபத்தத்தனங்களைப் பற்றித் தனித்தனியே எடுத்து சில எதிர்வினைச்சிற்றிடுகைகளை வரும் வாரங்களிலே தருவேன். தமிழ் இணைய வரலாற்றின் பகுதிகளைக் குறிப்பிடுவதற்குச் சென்ற ஆண்டிலே சில நண்பர்கள் தீர்மானித்து ஓரளவுக்கு முதற்காலடி (எங்களுடையதுதான், தமிழிலே இணையவரலாற்றினை எழுதுவதிலே நாமே என்றல்ல :-)) வைத்துவிட்டபோதிலும், சில ஆண்டுகளின் பின்னால், இருந்து சீர்படுத்தி, இனி வரப்போகும் பதிவுகளையெழுத ஊட்டம் தந்த மாலனின் "விட்டுப்போன எட்டு" இடுகைக்கு இத்தால் நன்றி. இப்பதிவினையும் சீர்படுத்தி மீள இடுவேன்.<BR/><BR/><I>பிகு 1: <A HREF="http://www.infitt.org" REL="nofollow">உத்தமம் இணையத்தளம்</A> உள்ளடக்கம், மொழிவழு இவை அனைத்திலுமே அதன் நோக்குக்கும் தேவைக்கும் (இருக்கவேண்டிய) தரத்துக்கு மாறாக மிகவும் மோசமான நிலையிலேயிருக்கின்றது. தேடுபொறி வேலை செய்வதில்லை; <A HREF="http://www.infitt.org/index.php?option=com_content&task=view&id=50&Itemid=141" REL="nofollow">படைக்கப்பட்ட கட்டுரைகள் குறித்த தலைப்புகளிலோ அங்குலத்துக்கொரு தட்டான் தவறு</A> . முன்னொரு காலத்திலே infitt ஆ uniftt ஆ என்று பகிடிவிட்டு வாங்கிக்கொண்டது நினைவுக்கு வந்தாலுங்கூட, இதைச் சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லையா? :-( <BR/><BR/>பிகு 2:பின்னால், இப்பின்னூட்டத்தின் நீளமும் தேவையும் கருதி, விரித்து, ஒழுங்குபடுத்தித் திருத்தி ஒரு தனி இடுகையாக இடுவேன்.</I>-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-50275016559010890462007-07-15T07:44:00.000-05:002007-07-15T07:44:00.000-05:00//ஆனால் தற்சமயம் தான் வளமையாக தமிழ்விக்கிபீடியா போ...//ஆனால் தற்சமயம் தான் வளமையாக தமிழ்விக்கிபீடியா போன்ற தளங்கள் வளர்ந்துவரும் பொழுது அதை உதாரணமாகக்காட்ட முடியாதென்றும். அப்படி மாலன் செய்வது எவ்வளவு சரியென்று தெரியவில்லை.//<BR/><BR/>எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கேற்ப, விக்கிபீடியா மட்டுமல்ல நூல்களில் இணையத்தில் ஏன் encyclopedia britanniccaவில் உள்ள கட்டுரைகளாக இருந்தாலும் கூட அவை எவற்றை அடிப்படையாக, உசாத்துணையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து அதன் உண்மையை அவரவர் தெளிய வேண்டியது அவசியம். <BR/><BR/>விக்கிபீடியாவைப் பொறுத்தவரை, தகுந்த ஆதாரங்கள், உசாத்துணைகள் இல்லாமல் மேலெழுந்தவாரியாக எதையும் புனைந்து எழுத முடியாது. அதை விக்கிபீடியர் சமூகம் அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் யார் எழுதினார், என்ன எழுதினார் என்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டுரையின் நம்பகத்தன்மையையும் தனித்தனியாக நீங்கள் உறுதி செய்யலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-19321376127044895132007-07-15T05:13:00.000-05:002007-07-15T05:13:00.000-05:00//தமிழ்விக்கிபீடியாவினை ஆதாரம் சுட்டுவது எத்துணை ச...//தமிழ்விக்கிபீடியாவினை ஆதாரம் சுட்டுவது எத்துணை சரி என்பதை அதிலே பங்குபெறும் நீங்கள் மேலே விட்ட ஒரு பின்னூட்டம் கேள்விக்க்குறியாக்குகின்றது//<BR/><BR/>எனக்கென்னமோ பெயரிலி கேட்டதில் தவறிருப்பதாக தோன்றவில்லை.<BR/><BR/>//விக்கிபீடியா மேற்கோள் காட்டத்தக்கதா என்று கேள்வி எழுப்புவதை விட அதை மேற்கோள் காட்டத் தக்கதாக மாற்ற முனைவதே நல்ல செயற்பாடாக இருக்கும்.//<BR/><BR/>இதைப்பற்றிய மறுபேச்சு இல்லை. ஆனால் தற்சமயம் தான் வளமையாக தமிழ்விக்கிபீடியா போன்ற தளங்கள் வளர்ந்துவரும் பொழுது அதை உதாரணமாகக்காட்ட முடியாதென்றும். அப்படி மாலன் செய்வது எவ்வளவு சரியென்று தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-67655673072394686682007-07-15T03:22:00.000-05:002007-07-15T03:22:00.000-05:00//தமிழ்விக்கிபீடியாவினை ஆதாரம் சுட்டுவது எத்துணை ச...//தமிழ்விக்கிபீடியாவினை ஆதாரம் சுட்டுவது எத்துணை சரி என்பதை அதிலே பங்குபெறும் நீங்கள் மேலே விட்ட ஒரு பின்னூட்டம் கேள்விக்க்குறியாக்குகின்றது.//<BR/><BR/>விக்கிபீடியாவின் எந்தக் கட்டுரையும் மேம்பாட்டுக்கு உகந்ததே. அந்த வகையில் உங்கள் பங்களிப்பை வேண்டியே அழைத்தேன். விக்கிபீடியா மேற்கோள் காட்டத்தக்கதா என்று கேள்வி எழுப்புவதை விட அதை மேற்கோள் காட்டத் தக்கதாக மாற்ற முனைவதே நல்ல செயற்பாடாக இருக்கும். ஏனெனில், இது நாம் நமக்காக உருவாக்கும் கலைக்களஞ்சியம். விலகி நின்று குறை கூறுவதால் இந்தத் திட்டமும் மேம்படாது. இன்னொரு நல்ல திட்டமும் வந்து விடாது.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com