tag:blogger.com,1999:blog-9437046.post114201475071405331..comments2023-07-23T09:30:09.659-05:00Comments on Wanderer Waves: Focus: புலம் - 18Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9437046.post-1142165925341206362006-03-12T07:18:00.000-05:002006-03-12T07:18:00.000-05:00ரமணீ,இது அலுப்பு தரும் விஷயம் என்றாலும் இப்படியான ...ரமணீ,<BR/>இது அலுப்பு தரும் விஷயம் என்றாலும் இப்படியான நிர்பந்தம் உங்கள் மீது மீண்டும், மீண்டும் திணிக்கப்படும் நிலையில் நீங்கள் செய்துள்ளது சரியே. உங்கள் ஆறுமணி நேரச் செலவுக்கான பலன் கிடைக்கும் என்று நம்புவோம்.<BR/><BR/>வசந்தகாலம் வந்துவிட்டது. செர்ரி மரங்கள் முகிழ ஆரம்பித்துவிட்டது. தெற்கே போன வாத்துக்கள் குஞ்சுகளுடன் திரும்பும் நேரம். ப்ரோக்கள் கே/கமராக்களை துடைத்து வைத்து அடுத்தகட்ட வேலையைப் பாருங்கள்.<BR/><BR/>இப்படிக்கு,<BR/>(உங்கள் கட்சியில் சேர்க்கப்படாத கோயின்சாமி-8a வும், அருளும் இங்கு வந்துபோயிருக்கும் தைரியத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட)<BR/>"சுந்தரமூர்த்திகள்"மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142161908737634912006-03-12T06:11:00.000-05:002006-03-12T06:11:00.000-05:00// goinchami-8A // ஆனாலும் இப்படி போட்டு தாக்க கூட...// goinchami-8A // ஆனாலும் இப்படி போட்டு தாக்க கூடாதய்யா ;-))))<BR/><BR/>நித்திலன் அவர் குழந்தைன்னு யூகிக்க முடிந்தாலும் பெர்சனலாக தெரியாத நிலையில் நான் அந்த வாக்கியத்தை போட்டது அனாவசியம் என்றே தோன்றுகிறது<BR/><BR/>இனிமே அனாவசியமான வாக்கியங்களை தவிர்க்க முயற்சி பண்றேன். கண்ண திறந்ததுக்கு நன்றி..முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142160960911409412006-03-12T05:56:00.000-05:002006-03-12T05:56:00.000-05:00ரமணிபோய் ஒரு மெகா தூக்கம் ஒண்ணு போடவும். எப்பவாவது...ரமணி<BR/>போய் ஒரு மெகா தூக்கம் ஒண்ணு போடவும். எப்பவாவது கவிதை போட்டாச் சரி. <BR/>அருள்arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142160345583897642006-03-12T05:45:00.000-05:002006-03-12T05:45:00.000-05:00This comment has been removed by a blog administrator.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142153143476530212006-03-12T03:45:00.000-05:002006-03-12T03:45:00.000-05:00// முகமூடி, நான் எழுதியதை நீங்கள் சரியாக வாசிக்கவி...// முகமூடி, நான் எழுதியதை நீங்கள் சரியாக வாசிக்கவில்லையென்பதை // போன முறை அவசரமாக வெளியே போகும் முன் படித்தது... நீங்கள் பொதுவாக எழுதியது மற்றும் முகமூடி என்று தென்படும் இடங்களை மட்டும் வாசித்தேன்.. ("பிகேஎஸ்ஸுக்கு குசும்பனுக்கு பத்திகளை படிக்காமல் தாண்டி" என்று போன முறை எழுதியதை குறிப்பிட்டு அப்படி இருக்கும்போது அவர்களுக்கான பத்தியில் முகமூடியை குறித்து எழுதியது முகமூடிக்கு எப்படி தெரிந்தது என்று யாரும் இன்னமும் "மடக்காதது" ஆச்சரியப்படுத்துகிறது) இருப்பினும் போன பின்னூட்டத்தில் நான் கொடுத்த விளக்கங்களில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.. <BR/><BR/>// அவர் முறையல்ல என்றது மாசாசூசெட்டு மோப்பசக்தியை அல்ல என்பதைக் கண்டுகொள்ளவேண்டும் // அப்போது உங்களுக்கும் பிறருக்கும் நடந்த ஐபீ சர்ச்சையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.. ஆனால் எந்த வித குற்றமும் செய்யாத, யார் ஐ.பீயையும் சேகரிக்கும் அல்லது வெளியிடும் வழக்கமில்லாத என் ஐ.பீயை முகாந்திரம் இல்லாமலே பொதுவில் உபயோகித்ததை நான் கண்டித்தேன்/கிறேன். அவ்வளவுதான்.<BR/><BR/>// முகமூடி எதுவும் அவரோடு அவர் பதிவிலே பேசாத என்னைக் குறித்து மோடி என்றொரு பதத்தினை முன்னிட்டு, மோடியைப் பயன்படுத்துகின்றவர்கள், ராம்வோச்சர், மார்டன்கேர்ள், அப்டிப்போடு என்ற தோரணையிலே பேசி ஆகவே மூவரும் ஒருவரோ என்ற வகையிலே ஒரு பதிவிட்டிருந்தார் // கண்டிப்பாக இல்லை. ராம்வோச்சர்தான் மாடர்ன்கேர்ள் அல்லது அப்டிபோடு என்று சூசகமாக கூட நான் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு தோற்றம் வந்தால் அது சொன்ன விதத்தில் அல்லது புரிதலில் வந்த கோளாறேயாகும். முன்பே சொன்னது போல முகமூடி கூத்தடிக்கிறது என்று அப்டிபோடு சில விஷயங்களை சொன்னபோது, அவர் விலக்கப்பட்ட பதிவுகளை குறித்த மேற்கோள் காட்டுகிறார் என்ற எண்ணத்தில் அது எப்படி அவருக்கு இப்போது தெரியவருகிறது என்ற - அது யாராலேயோ தரப்பட்டிருக்க வேண்டும், கண்டிப்பாக நீங்கள் அல்ல - அனுமானத்தில் எழுதப்பட்டது.. அன்றி ராம்வோச்சர் = மாடர்ன்கேர்ள் = அப்டிபோடு என்ற வாதம் எந்த இடத்திலும் என்னால் தரப்படவில்லை... <BR/><BR/>இவர் = அவர் என்ற அனுமானத்தை பலர் சுலபமாக கையாளுகிறார்களே, எழுத்துநடை ஒரே போல் இருப்பதை வைத்து சன்னாசி = பெயரிலி என்று கூட சொல்லலாம் என்ற அளவிலேதான் குறிப்ப்ட்டேன், அதன் மூலம் குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை<BR/><BR/>// "பத்து மைல்" தொலைவு வந்ததை முகமூடியும் குசும்பனும் பயன்படுத்தியிருந்ததை ஒன்றாக எடுத்துப் போட்டிருந்தேன். வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை // இதை பிறிதொரு நாள் படித்து பாருங்கள்... உங்களுக்கே சிரிப்பாக வரும். இறைதூதரை படமாக போட்டோம், வேறு ஒரு சொல் எதையும் சொல்லவில்லை.. இந்து கடவுளை நிர்வாணமாக வரைந்தேன் வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை என்றெல்லாம் அவர்கள் ஏன் சொல்லவில்லை என்று தோன்றுகிறது...<BR/><BR/>// முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். // இதற்கென்ன அர்த்தம் என்று புரியவில்லை.. ஆனால் இதற்கு முன் சில நண்பர்களால் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் போல, நீங்களும் திருமலை = திருப்பதிக்கு மேல் இருக்கும் புனித மலையை குறிப்பிட்டு என்னவோ சொல்கிறீர்கள் என்பதாய் நினைத்து சந்தோஷமாக இருந்து கொள்கிறேன். <BR/><BR/>மற்றபடி போன பின்னூட்டத்தில் குறிக்கப்பட்ட அ மற்றும் இ குறிப்புகள் பெயரிலிக்கு எழுதியதல்ல... நான் அறிந்த மாசக்கா என்ற நபர் இன்றைக்கு பண்ணிக்கொண்டிருக்கும் வேலையை நினைத்து எழுதியதே... // அதற்குமேலே சொல்ல ஏதுமில்லை. தெம்புமில்லை // இவ்விடமும் அஃதே.. சண்டை போட வேண்டும் என்ற குறிக்கோளோடு நான் எதுவும் எழுதியதில்லை.. என்னை குறித்த விமர்சனம் வரும்போது பெரும்பாலும் அமைதியாகவே கடந்தாலும் சில சமயம் எனக்கு தெரிந்த மொழியில் பதில் சொல்கிறேன். அது சண்டை பிடிப்பதாக தோன்றினால் அதுகுறித்து சொல்ல ஏதுமில்லை... நித்திலன் என்பது யாரென்று தெரியவில்லை.. எல்லோரும் சொல்கிறார்கள், நானும் சொல்கிறேன். நித்திலனுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142142612289499982006-03-12T00:50:00.000-05:002006-03-12T00:50:00.000-05:00கோயிஞ்சாமி முதல் வாசன்வரை எல்லோரும் நன்றி. அநாவசிய...கோயிஞ்சாமி முதல் வாசன்வரை எல்லோரும் நன்றி. அநாவசியமான உரைப்புகளைத் தவிர்த்துக்கொண்டுதான், தள்ளியிருக்கிறேன். தொடர்ந்து சுரண்டியபோதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மார்டன் கேர்ள் முதல் மனுஷ்யபுத்திரன்வரை இவர்தான் எனத் திரிபான பதிவு செய்யப்படும்போது, அதை நம்ப இருக்கும் ஒரு சாரார் குறித்துமட்டுமே. இப்பதிவின்பின்னால், எதையும் விரித்து விளக்கமுடியுமென நம்பவில்லை. அதனால், சுட்டியபடியே எதையும் எழுதப்போவதில்லை.<BR/><BR/>முகமூடி, நான் எழுதியதை நீங்கள் சரியாக வாசிக்கவில்லையென்பதை உங்கள் கேள்விகள்மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றீர்கள். அதற்குமேலே சொல்ல ஏதுமில்லை. தெம்புமில்லை.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142141811385972232006-03-12T00:36:00.000-05:002006-03-12T00:36:00.000-05:00ரமணீவணக்கம்.எனக்கு இந்திய/இலங்கை என்றெல்லாம் தமிழர...ரமணீ<BR/><BR/>வணக்கம்.<BR/><BR/>எனக்கு இந்திய/இலங்கை என்றெல்லாம் தமிழர்களிடையே வித்தியாசம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்.. <BR/><BR/>6 மணி நேரம் செல்வழிந்தது பற்றி சொல்லியிருந்தீர்கள்...<BR/><BR/>எனக்குத் தெரிந்து 1997 தொடங்கி இது மாதிரி எத்தனையோ பல ஆறு மணி நேரங்களை நீங்கள் செலவழித்துள்ளீர்கள் இணைய நிழற் சண்டைகளில்.. நீங்கள் மட்டுமல்ல பலரும்தான்.<BR/><BR/>ஆனால் இதுவரை என்ன பலன்..?<BR/><BR/>ஒரு கட்டத்தில் அலுத்துப் போக வேண்டும், இவை. இல்லாவிட்டால் அலுத்து போய்விட தேவையானவற்றை செய்து இந்த இணைய உருப்படாதவற்றிலிருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும்... நம் அனைவருக்கும் வயது ஏறுகின்றதல்லவா.. எத்தனையோ பொறுப்புகள். <BR/><BR/>டீஜே சொன்னது போல தனியாக சொல்லியிருக்கலாம். <BR/><BR/>நித்திலனுக்கு எங்களது அன்புகள்.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142140320017893692006-03-12T00:12:00.000-05:002006-03-12T00:12:00.000-05:00//எத்தனையோ புள்ளிகளில் முரண்பட்டாலும் சிறிரங்கனோ, ...//எத்தனையோ புள்ளிகளில் முரண்பட்டாலும் சிறிரங்கனோ, ரயாகரனோ, பரமுவேலனோ கூறுவதை நிதானித்துக் கேட்பமே தவிர, 'இவர்களை'ப்போன்றவர்கள் தலைக்கு மேலே ஏறிநின்று பிரசங்கம் செய்வதை எந்தப்பொழுதிலும் என்னைப்போன்றவர்கள் செவிமடுக்கமாட்டோம் என்றுதான் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.எனெனில் மேற்கூறிய நண்பர்களுக்கு சொல்வதற்கான தகுதியிருக்கிறது, அவர்களும் மக்களுக்காய்தான் களங்களில் இருந்திருக்கின்றார்கள். மக்களின் அமைதியான வாழ்வுக்காய்த்தான் தங்களின் சொந்த நம்பிக்கையின்பாற்பட்டு இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.<BR/>//<BR/><BR/>டி.சே, சரியாகச் சொன்னீர்.<BR/><BR/>ஆனால் நீர் குறிப்பிட்டவர்களையே துணைக்கழைத்து, பெயரிலியையும், உம்மையும் இன்னும் அவர்களே பெயரிலியின் சீடர்களென்று நினைக்கும் நபர்களையும் சேர்த்த கூட்டத்தை எதிர்கொள்ளப் பாவிக்கிறார்கள். இதே நபர்களின் இந்தியா பற்றிய, இந்திய அமைதிப்படை பற்றிய, இந்திய ஏகாதிப்பத்தியம் பற்றிய (இதை விடவும் கடுமையான வார்த்தைகளை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்) எந்தக் கருத்தையும் காணாது, அல்லது மறைத்துவிட்டு புலியெதிர்ப்பை மட்டும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.<BR/><BR/>முன்பொருமுறை நடந்த கருத்துச் சண்டையில், முறிந்த பனை நூலிலிருந்து சில பகுதிகளைப் பொறுக்கியெடுத்துப் போட்டுவிட்டு ஒப்பாரி வைத்தார் ஒருவர். பகிடியென்னெண்டா அந்தப்பதிவு இந்தியப்படை ஈழத்தில் என்ன செய்தது என்பதையொட்டியதும், தனிநபர்களா ஒட்டுமொத்த இராணுவமா அவற்றுக்குப் பொறுப்பு என்பதும்தான். பதிவுக்கு நேரடியான சம்பந்தமுள்ள - அதே முறிந்தபனையில் எழுதப்பட்டிருந்த இந்திய இராணுவம் கூட்டாகச் செய்த படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் என்பவற்றைத் தூக்கிப் போட்டிருக்க வேண்டும். "சிங்கள இராணுவத்தை விடவும் காட்டுமிராண்டித்தனமான மனிதநேயமற்ற அணுகுமுறைதான் இந்தியப்படையிடமிருந்தது" என்ற பொருள்பட அதே நூலில் சொல்லப்பட்டிருந்ததை எடுத்துப்போட்டிருக்க வேண்டும். மாறாக புலிகள் பற்றிய விமர்சனத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கூக்குரலிட்டார்கள்.<BR/>இதற்குள் இப்போதும் ஜனநாயக, அகிம்சைப் போதனைகள் வேறு.<BR/><BR/>இங்கே இவற்றை எழுதுவதற்குக் காரணம், பெயரிலி மீதான அல்லது மற்றவர்கள் மீதான இந்தச் சேட்டைகளெல்லாம் அரசியல் சார்ந்தது, அரசியற் காரணங்களுக்கானது என்பதே. இந்த நிலையில் தப்பித்தவறி நாங்கள் யாரும் புலியை விமர்சித்து வாய்திறந்தால் அதைவைத்தே தங்கள் வியாபாரத்தைப் பெருக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142131524636262372006-03-11T21:45:00.000-05:002006-03-11T21:45:00.000-05:00பெயரிலி, நீங்கள் எழுதியதை முற்றுமுழுதாய் வாசித்து ...பெயரிலி, நீங்கள் எழுதியதை முற்றுமுழுதாய் வாசித்து கிரகிக்கமுடியாவிட்டாலும் உங்களுக்கு ஏற்படும் அலுப்பும் சோர்வும் புரிகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் -வலைப்பதிவுக்கு வரமுன்னர்- நடந்த விவாதம் ஒன்றை வாசித்தபோது எழுந்த முடிவுகள் இன்னும் மாறாமல் இருப்பதுதான் ஆச்சர்யமாயிருக்கிறது. ஏன் இவ்வளவு வன்மத்தோடும் குரூரத்தோடும் இவர்கள் இருக்கின்றார்கள் என்று, ஒரு பதிவும் பின்னர் நான் எழுதியது ஞாபகம். அன்று கூறியதுமாதிரி, நேரிலும் விவாதங்களிலும் எத்தனையோ எதிரெதிர் முரண்களுள்ளவர்களை சந்தித்திருக்கின்றேன். எவரும் இப்படி ஒருவித வனம்த்தோடு அலைந்ததைக் காணவில்லை. இன்று எத்தனையோ கருத்துக்களில் முரண்பாடு இருந்து விவாதிக்கொண்டிருக்கும் சிறிரங்கனோடோ, பரமுவேலனோடு, ரயாகரனோடோ என்னால் விவாதிக்கமுடியும். அவர்களின் கருத்துக்கள் பிடித்தாலோ பிடிக்காவிட்டாலோ அவர்களின் தளத்துக்குச்சென்று பின்னுட்டம் இடவும் முடியும் (நேரிலும், எத்தனையோ புள்ளிகளில் முரண்படும் நண்பர்களோடு இயல்பாய் உரையாட என்னாலும் முடியும், அவர்களுக்கும் தெரியும்). நமது கருத்துக்களின் முரண்களின் அடிப்படைகளை மீறி சகமனிதர்கள் என்ற நேசிப்பு நமக்குள் இருக்கிறது. அதைத்தான் போர் எங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பெறுமதி வாய்ந்தவை என்பது போருக்குள் இருந்தவர்கள் அறிவார்கள். இறப்பதற்கு முன் கடைசிப்பாவத்துக்கான வாக்குமூலத்தையும் கொடுத்துவிடத் துடிப்பவர்களாய்த்தான் நம்மில் பலர் இன்னமும் நடமாடிக்<BR/>கொண்டிருக்கின்றார்கள்.<BR/><BR/>.....<BR/>'இவர்களைப்' போன்றவர்களின் அடிப்படைப்பிரச்சினைதான் என்ன? இராஜீவ் காந்தி கொல்லப்பட்டதுதான் அனைத்து வன்மத்துக்கும் காரணமா? 'உங்கள் பாதிப்புப் புரிகிறது. எங்களுக்கும் வேறுவிதமான பாதிப்புக்கள் இருக்கின்றன' என்றுதானே கூறுகின்றோம். இதைவிட வேறு என்னத்துக்காய் இவ்வளவு மூர்க்கமாய் எங்களோடு விவாதித்தபடி இருக்கிறார்கள். அவர்களின் இடங்களை நாங்கள் எவரும் ஆக்கிரமிக்கவில்லையே. (பாருங்கள் நீங்கள் கடைசி ஆறுமாதங்களும் எதுவும் பெரியதாய் எழுதியதில்லை. திருப்பத் திரும்ப உங்களை வம்புக்கு இழுக்கின்றார்கள். யாராவது ஒருவர் அவர்களுடன் விவாதித்தால் பெயரிலிதான் ரொனிக் கொடுத்து அனுப்புகின்றார் என்ற நக்கல் வேறு. ப்ரோக்களாகவோ, புறாக்களாகவோ நாங்கள் இருந்தாலும் ஒவ்வொருத்தரும் அவரவர் சொந்தக்கருத்துக்களோடும் முரண்பாடுகளோடும்தானே இருக்கிறோம். எங்களுக்குள்ளும், ஒரு கருத்துப் பிடிக்கவில்லையென்றால் முரண்பட்டு விவாதிக்கத்தானே செய்கின்றோம்) <BR/>....<BR/>இந்தா மகாபாரதப்போர் தொடங்கிவிட்டது. இனி தலைகளை உருட்டாமல் ஓயப்போவதில்லை. இன்ன இன்னார் வெள்ளைக்கொடியோடு வந்தால் தான் சமாதானம் இல்லாவிட்டால் போர் போர் போரன்றி எதுவுமில்லை என்று அங்காலை ஒருவர் முரசறைவிக்கிறார். ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்பதுபோல முதலில் சிரிப்புத்தான் வந்தது. ஜயா, போருக்குள்ளேயே இருந்து பிணங்கள் விழவிழப் பார்த்த எங்களுக்கு 'போர்' என்ற ஒரு சொல் தரும் பாதிப்பு உங்களுக்குச் சிறிதாவது தெரியுமா? இன்றும் ஆண்டுகள் கடந்தாலும் இடிவிழுந்தாலும் திடுக்குற்றும், ஹெலி மேலே பறந்தாலும் ஒருகணம் நிதானித்து வானம் பார்த்துத்தான் நடந்துகொண்டிருக்கின்றோம் என்பதை அறிவீர்களா? போர் இன்னமும் தந்துகொண்டிருக்கும் உளவியல் பிரச்சினைகளை..., நாங்கள் தப்பி இன்னொரு நாட்டுக்கு வந்துவிட்டாலும் அங்கே மடிந்துகொண்டிருக்கும் மக்களின் நிலை எங்களுக்கு குற்றவுணர்வைத் தினமும் தந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிவீர்களா?<BR/>இது நிச்சயம் அனுதாபம் வேண்டி அல்ல கூறவிளைவது, நாங்களும் பலங்களும் பலவீனங்களும் உள்ள இன்னொரு வகை மனிதர்களே.. அவ்வளவுதான். தயவுசெய்து எதையும் அனுபவிக்காது வார்த்தைகளுக்குள் நின்று 'போர்' செய்யாதீர்கள் என்றுமட்டுந்தான் இந்தப்பொழுதில் கூறமுடிகிறது. <BR/><BR/>எத்தனையோ புள்ளிகளில் முரண்பட்டாலும் சிறிரங்கனோ, ரயாகரனோ, பரமுவேலனோ கூறுவதை நிதானித்துக் கேட்பமே தவிர, 'இவர்களை'ப்போன்றவர்கள் தலைக்கு மேலே ஏறிநின்று பிரசங்கம் செய்வதை எந்தப்பொழுதிலும் என்னைப்போன்றவர்கள் செவிமடுக்கமாட்டோம் என்றுதான் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.எனெனில் மேற்கூறிய நண்பர்களுக்கு சொல்வதற்கான தகுதியிருக்கிறது, அவர்களும் மக்களுக்காய்தான் களங்களில் இருந்திருக்கின்றார்கள். மக்களின் அமைதியான வாழ்வுக்காய்த்தான் தங்களின் சொந்த நம்பிக்கையின்பாற்பட்டு இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.<BR/>....<BR/>பெயரிலி, முதல் ஒரு பதிவிலும் இந்தப்பதிவிலும் சிறிரங்கன் கூறுவதைத்தான் நானும் தனிப்பட உங்களுக்குக் கூற விரும்புவது. எத்தனை தடவைதான் நீங்கள் 'நியாயம்' கேட்டுக்கொண்டு இருக்கப்போகின்றீர்கள்? உங்களின் எழுத்துக்களுக்காய் உங்கள் பதிவுகளை வாசித்துக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை-ஒரே விடயத்தை- திருப்பக் திருப்பக் கூறி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்என்பதைத்தான் அலுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இப்படி மனவழுத்தம் ஏற்றும் பதிவுகளைப் பார்த்து, சிலவேளைகளில் இவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு தோழி கூறுவார், 'திருப்பித் திருப்பி ஒரே விடயத்தை எழுதி எத்தனைபேரை மாற்றப்போகிறாய்.... புதிது புதிதாய் ஆட்களும் புதிது புதிதாய் குற்றச்சாட்டுக்களுடன் பழைய நபர்களும் வந்துகொண்டிருப்பார்கள் அத்தனை பேருக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கப் போகிறாயா?' என்று. அந்தக் கேள்வியைத்தான் நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். <BR/>.....<BR/>ஆறு மணித்தியாலம் செலவழித்ததைவிட நீங்கள் இன்னும் தூங்கியிருக்கலாம் என்றுதான் கூறுவேன். மற்றும்படி எனக்குப் பிடித்த ஒரு படைப்பாளியை இந்தப்பொழுதுகளில் நான் இழந்துகொண்டிருக்கின்றேன் என்ற கவலையை மட்டும் இறுதியாய் பதிவு செய்துவிடுகின்றேன். நன்றி.<BR/><BR/>( I know this comment is too personal, But I couldn't find any other form to share my thoughts rather than this. Thankx again)இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142119200475565382006-03-11T18:20:00.000-05:002006-03-11T18:20:00.000-05:00//He who is used to the absurd will get along fine...//He who is used to the absurd will get along fine in our time.//<BR/><BR/>இதுதான்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142115932205916902006-03-11T17:25:00.000-05:002006-03-11T17:25:00.000-05:00பெயரிலி.. இதுவரை நான் உங்களை கேட்டது, கேட்பது எல்ல...பெயரிலி.. இதுவரை நான் உங்களை கேட்டது, கேட்பது எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான்.. அதை தவிர வேறெதுவும் கேட்டதில்லை. அது நீங்கள் என் IP <BR/><BR/>அட்ரஸை எடுத்துப்போட்டது.. (அப்போது ராம்வாச்சர்தான் பெயரிலி என்பது எனக்கு தெரியாது என்பதை சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்) நீங்கள் காசி பதிவை மேற்கோளிட்டு, குசும்பன் ஐபீயையும் சின்னவன் ஐபீயையும் எடுத்து போட்டு என்னவோ எழுதுகிறீர்கள்.. ஆனால் அதோடு கூடவே எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் காசி பதிவில் என் ஒரிஜினல் பெயரோடு ஒரே ஒரு கேள்வி கேட்ட என் ஐபீயையும் எடுத்து எழுதுகிறீர்கள்... இதன் மூலம் உங்கள் நோக்கம் என்ன? <BR/><BR/>இந்த இரண்டு பேரின் ஐபீயையும் எழுதி அதோடு என் ஐபீயையும் எழுதுவதன் மூலம் எனக்கும் இந்த இரண்டு பேருக்கும் சம்பந்தம் உண்டு என்று நிறுவுவது போன்றதான <BR/><BR/>செய்கை அல்லவா அது... கொசுறாக ஒன்றிரண்டு ஐபீ எடுத்து போட்டால்தான் பதிவு பெரிசாக இருக்கும் என்று தோன்றினால் உங்கள் ஐபீயையோ அல்லது வேறெதாவது <BR/><BR/>உங்கள் நண்பர்கள் ஐபீயையோ எடுத்து போட்டுக்கொள்ள வேண்டியதுதானே? <BR/><BR/>சின்னவனுக்கும் முகமூடிக்கும் எச்சரிக்கை என்று அப்டிபோடு ஒரு பதிவு எழுதுகிறார். நண்பர்கள் மெயில் அனுப்பி விளக்குகிறார்கள், போனில் பேசி விளக்குகிறார்கள் என்று <BR/><BR/>அவரே சொல்லிக்கொள்கிறார். எந்த பிண்ணனியில் நாங்கள் மயில் ராவணர்கள் என்ற முடிவுக்கு வந்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை (சின்னவன் பதிவுக்கு நான் <BR/><BR/>தொடர்ச்சியாக பின்னூட்டம் இட்டதாலாம் என்பது பின்னர் தெரிய வந்தது.. அப்ப ஏகப்பட்ட பேரு சிலருக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் எழுதறாங்களே என்று நான் கேட்க <BR/><BR/>ஆரம்பித்தால் அது வேறு விதமாக ஆகிவிடும்) அறியாத நிலையில், என்றோ குத்து மதிப்பாக சின்னவன் ஐபீயோடு முகமூடியின் ஐபீயையும் எடுத்து போட்ட ராம்வாச்சரின் பதிவு, அதுவும் மறைக்கப்பட்ட விலக்கப்பட்ட அந்த பதிவு அப்டிபோடுவுக்கு "நண்பர்கள்" மூலம் அறிய வந்ததாலேயே இருக்கலாமா என்பது எனக்கு தோன்றக்கூடாதா? ஆனால் நான் அப்படி கூட கேட்கவில்லை. நீங்கள் சம்பந்தமில்லாம் என் ஐபீயை எழுதினீர்கள் என்பதாலேயே நீங்கள் ஓட்டு கேட்கும் பொதுமக்களில் ஒருவரான அப்டிபோடு இவ்வாறு நினைக்கிறாரோ என்று பொருள் படும்படி சொல்லியிருந்தேனே தவிர உங்களிடம் காலங்காத்தாலை சண்டை பிடித்துக்கொண்டிருக்க எனக்கென்ன விசரே? <BR/><BR/>இன்றளவும் நீங்கள் அப்படி எழுதியதற்கு காரணம் உங்களின் ஆறு வயது குசும்புத்தனமா அல்லது வேறு விஷயமா என்பதற்கு விளக்கமில்லாமலே இருக்கிறது.. ஆக <BR/><BR/>செய்வதெல்லாம் செய்துவிட்டு முகமூடி என் பெயரை எழுதுகிறது என்று பரிதாப வேஷம் போடுவது எதனால்? எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை வரலாம் என்பது <BR/><BR/>உங்களுக்கு தோன்றவில்லையா? அல்லது நீங்கள் என்பதால் அதற்கு வராது என்று நினைத்தீர்களா?<BR/><BR/>இப்போது உங்கள் பதிவில் பிகேஎஸ்ஸுக்கு குசும்பனுக்கு பத்திகளை படிக்காமல் தாண்டி, நீங்கள் பொதுவில் எழுதியது + முகமூடிக்கு என்று எழுதியதை மட்டுமே நான் <BR/><BR/>படித்தேன் என்பதை சொல்லி, அதுபற்றி மட்டும் நான் பேசுகிறேன். <BR/><BR/>மாடர்ன் கேர்ள் என்று நான் பெயரிலியை சொன்னதாக ஞாபகம் இல்லை.. (வேறு சிலரும் இதே போன்று claim செய்கிறார்கள்..) ஆனால் முகமூடிக்கு என்று எழுதிய பத்தியில் மூக்கில் சளி என்றெல்லாம் குன்சாய் எழுதினால் என்ன எழுதுகிறீர்கள் என்று புரியாமலே கைதட்டும், நீங்கள் விசனப்படும் குறிப்பிட்ட அந்த மிகச்சிலர் தமக்கு ஏற்றபடி புரிந்து கொண்டு உணர்ச்சி வசப்படுவார்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ..<BR/><BR/>நானும் குசும்பனும் வேறு வேறு என்று சத்தியமாக உங்களுக்கு தெரியும் என்றாலும், "பத்து மைல்" என்ற வார்த்தை பிரயோகத்தை இருவரும் உபயோகித்திருந்தோம் <BR/><BR/>என்பதை குறிப்பிட்டு குசும்பன் = முகமூடி என்பதாக நீங்கள் படம் காட்டிய போது எல்லாரும் அறிவாளியாக கொண்டாடுகிறார்களே அது இந்த பெயரிலியையா என்று <BR/><BR/>சிரிப்புதான் வந்தது... அதை விட சிரிப்பு நீங்கள் என்ன படம் போட்டாலும் பப்படம் போட்டாலும் ஓடி வந்து அண்ணை சூப்பர் என்று சொல்லும் அந்த குறிப்பிட்ட சிலர் <BR/><BR/>இதற்கும் அதே வேலையை செய்ததுதான்...<BR/><BR/>இன்று சன்னாசி = பெயரிலி ஈக்குவேஷனின் பாற்பட்ட உங்கள் பார்வை ஏன் மற்றவர்களுக்கு நடக்கும்/நடத்தியபோது உங்களுக்கு தெரியவில்லை. என்னை <BR/><BR/>வந்தியத்தேவனாக நீங்கள் சொன்னபோது வெறுமே நான் இல்லை என்று மறுத்தேனே தவிர உங்களை போல் "புத்திசாலித்தனமாக" பேசிக்கொண்டிருக்கவில்லை..திடீரென <BR/><BR/>சன்னாசி மீது என்னவோ ஒரு அக்கரை.. அவரை பேரி குத்து என்றெல்லாம் சொன்னேன் என்பது என்னுடைய <A><BR/><BR/>href="http://mugamoodi.blogspot.com/2006/01/blog-post_24.html">இலக்கிய சலிப்பும் கருத்துப் பதிவும்</A> பதிவை வைத்து என்றால் அது படிப்பவரின் <BR/><BR/>அனுமானம் மட்டுமே. அதை எழுதிய காலகட்டத்தில் இதே போன்றதொரு சலிப்பில் எழுதிக்கொண்டிருந்த ஒரு பதிவாளரை பற்றியது அது.. அதற்கு எதிர்வினையாக அவர் <BR/><BR/>கவிதை எல்லாம் கூட எழுதினார்... எதை எழுதினாலும் தன்னை பற்றி என்று சிலர் நினைத்துக்கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது.<BR/><BR/>// அதனாலேயே this-is-not-a-spam பயன்படுத்தவேண்டிய அவசியமேற்பட்டது // இதே போன்ற நிர்ப்பந்தங்கள் மற்றவருக்கு ஏற்பட்டால், அதுவும் சின்னவனுக்கு <BR/><BR/>ஏற்பட்டால் அது குறித்து என்னிடம் என் பதிவில் வந்து சன்னாசி கேட்பது ஏன் என்பது எனக்கு புரியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். நான் இங்கு கேட்க விரும்புவது, <BR/><BR/>KingKK எழுதியது - சாரம் என்னவென்றாலும் - தவறுதானே அவர் பதிவில் எல்லாம் நீ எப்படி பின்னூட்ட (ஆதரவு) தரலாம் என்றெழுதிய சன்னாசி, இந்த <BR/><BR/>உங்களுக்கேற்பட்ட "நிர்பந்தத்தை" பற்றி இதுவரை உங்களிடம் ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறாரா என்பதை மட்டுமே..<BR/><BR/>இதுவரை கார்த்திக்கை தவிர வேறு யாரையும் உங்களின் அடியாள் என்று நான் சொன்னதாக ஞாபகம் இல்லை. கார்த்திக்கை உங்கள் அடியாள் என்று சொல்வதில் என்னிடம் <BR/><BR/>மாற்றம் எதுவும் இல்லை.. (எப்படி என்று கேட்டால் ஒரு பெரீய்ய பதிவே எழுதும் அளவு விஷயம் இருக்கிறது) அப்படி அவராக விரும்பி அடியாளாக இருப்பதிலும் எனக்கு <BR/><BR/>ஒன்றும் ஆட்சேபம் இல்லை, அந்த விசுவாசத்தால் எனக்கு ப்ரச்னை எனும்போது மட்டுமே அதை குறிப்பிடுகிறேன் என்பதை இந்நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.<BR/><BR/>இதற்கு முன்னால் நீங்கள் செய்த "உண்மைக்குப் புறம்பானதொன்றை எழுதுதலும் உள்ளதைத் திரித்து எழுதுதலும்" பதிவுகளில் பலவற்றிலே சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயம் இருந்தது... ஆனால் ஆகப்போவது என்ன என்றே சும்மா இருந்தேன்.. இதற்கும் அப்படியே இருந்திருப்பேன், ஆனால் "இப்படியான பொழுதிலே, சொல்லப்பட்டதை மற்றவர்கள் முன்னாலே மறுதளிக்கவேனும் வந்தாகவேண்டிய பின்தள்ளுதல்நிலை" ஏற்பட்டதாலேயே இப்பின்னூட்டம். <BR/><BR/>நானும் நீங்களும் சம்பந்தப்பட்டது இது ஒன்றுதான் :: ராம்வோச்சரின் கணியிணைமுகவரியென பி. கே. சிவகுமார் வெளிட்டால் அதற்கு பதில் சொல்லும்போது எதற்கு முகமூடி ஐபியையும் எடுத்து போடவேண்டும் என்பதை இன்றாவது எல்லோருக்கும் புரிகிற எளிய தமிழில் விளக்கவும்... இல்லையெனிலும் ஒன்றும் பாதகமில்லை, அது பெயரிலியின் "நேர்மை மனதிற்கு" மற்றொரு சாட்சி என்று இருந்துவிட்டு போகிறேன். ஆனால் கதைப்படி உண்மையில் நீங்கள் தம்பியாக இருந்துகொண்டு "அண்ணன் நிலையிலே என்னைச் சிலர் தள்ளி" என்றெல்லாம் புலம்பாதீர்கள். அது உங்களின் ஆளுமைக்கு இழுக்கு. <BR/><BR/>பிகு :: உங்க ஆளுமை இப்பதிவிலேயே கிழிந்து தொங்குவதை பார்க்க உண்மையிலேயே பாவமாக இருக்கிறது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலேயே உங்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்துவிட்டார்கள்.. அதற்கென ஒரு கம்பீரம் வேண்டாமா? (இதை கிண்டலாக எடுத்துக்கொள்ளாமல் படியுங்கள்)<BR/><BR/>அ) "மிகச்சிலர் தவிர்த்து மீதியானோர் என்னை இன்னார் இப்படிப்பட்டவர் என்று நினைப்பதினால் எனக்கேதும் ஆகப்போவதில்லை" என்று ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்? நான் உட்பட எல்லோருமே விளக்கம் கொடுத்து மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதுவது சம்பந்தப்பட்டவர் உட்பட அனைவருக்குமாகத்தான் (அதை எடுத்துக்கொள்வார்களா இல்லையே என்பது வேறு விஷயம்) அதில் வெட்கப்பட ஒன்றுமேயில்லை.. எனக்கு கவலையில்லை என்றெல்லாம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே செய்வதை பார்த்தவர்தானே நாம்... உங்களின் நோக்கம் "எனது பக்கக்கதை ஏற்கனவே என்னை அறிந்து தனிப்பட்டத் தெரிந்த சிலருக்குத் தெரியவேண்டுமென்பதாலும்" என்பதாகத்தான் என்றால் பதிவே தேவையில்லை, யாகூ குழுமத்தில் ஒரு மெயிலே போதும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஓ.. "இனியும் கிடைக்கக்கூடிய சில கருத்தொத்த நண்பர்கள்" சரிதான்.. <BR/><BR/>ஆ) தயவு செய்து எனக்காக நீங்கள் பொதுமக்களிடம் ஓட்டு கேட்காதீர்கள்.. அப்புறம் எதிர்காலத்தில் "என்னால் ஓட்டு பெற்ற முகமூடி இப்படியெல்லாம் எழுதுவதை கண்டால் புல்லரிக்கிறது" என்றெல்லாம் நீங்கள் பெருமைப்படும்போது எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.<BR/><BR/>இ) நான் அரசியல்வாதிக்கு சொல்வதை இங்கும் சொல்கிறேன்.. அரசியல்வதியின் அடிப்படை குணத்திடை ஒன்று, வாக்கு மாறுவது. அதை அமைதியாக செய்தால் ப்ரச்னை ஒன்றுமில்லை.. ஆனால் வீராப்பாக வசனம் விட்டுவிட்டு அதை மாற்றும்போதே அதுகுறித்த கிண்டல் வருகிறது. எனவே ஏற்கனவே உங்களால் 27 தடவை சொல்லி புளித்து போன "இந்தப்பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் அப்பால், எதையுமே நான் பேசப்போவதில்லை" போன்ற அனாவசிய வாக்கியங்களை தவிருங்கள்.. அதனால் "கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படும்" பத்திகள் குறையும். எழுதுபவருக்கும் சில மணித்தியலங்கள் மிச்சம்.. படிப்பவருக்கும் முக்கால் மணிநேரம் ஆகாது பாருங்கள்..முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142110878096188402006-03-11T16:01:00.000-05:002006-03-11T16:01:00.000-05:00//தவிர, 'என் மூக்கு' சுந்தரராஜனின் (தற்போது) நீக்க...//தவிர, 'என் மூக்கு' சுந்தரராஜனின் (தற்போது) நீக்கப்பட்ட பதிவிலே, பலருடன் குறிப்பாக இவருடனும் வந்தியத்தேவன் என்பவருடனும் (இவருடைய பெயர் ஏன் இங்கே என்று பார்த்திபன் கனவு வாசித்தவர்கள், படத்திலே ரங்கராவைப் பார்த்தவர்கள் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள்) //<BR/><BR/> ப்ளாக்கர் பின்னூட்ட வசதி இல்லாத காலத்தில் ஹாலோஸ்கான் தரும் பின்னூட்ட வசதியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். ப்ளாக்கர் பின்னூட்ட வசதியை உபயோகப்படுத்த ஆரம்பித்ததும் ஹாலோஸ்கான் உபயோகப்படுத்தாதலால் அந்தப் புகழ்பெற்ற நாகரீகமான பின்னூட்ட விவாதங்களும் மறைந்து போனது. நான் அறிந்தே, வேறு காரணங்களுக்காக அதை செய்யவில்லை என்று சொல்லவே இந்தப் பதில்.<BR/><BR/>பொடிச்சியின் hypocrisy பதிவிலே அது இருப்பது மதிக்கு தெரியும். உங்களுக்கு தெரியாவிட்டால், இதோ, <BR/><BR/>http://dsonador.blogspot.com/2004_01_01_dsonador_archive.html<BR/><BR/>மற்றபடி, உங்கள் ஆறு மணி நேரம் வேஸ்ட் ;-). இதற்கு நித்திலனுடன் விளையாடி இருக்கலாம்.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142110747207772432006-03-11T15:59:00.000-05:002006-03-11T15:59:00.000-05:00ரமணிதரன்,வணக்கம்!உங்கள் எழுத்துக்களையெல்லாம் படித்...ரமணிதரன்,வணக்கம்!<BR/><BR/>உங்கள் எழுத்துக்களையெல்லாம் படித்தபோது எனக்கு இங்ஙனம் தோன்றுகிறது:"Every error has three levels:On the first it is called into life,on the second you don't want to admit it and on the third nothing will make it undone!"இதற்குமேல் எதைச் சொல்ல?<BR/><BR/>இன்றைய சூழலில் இப்படியுமொரு அவஸ்த்தை உங்களெல்லோருக்கும்- உருவாகியுள்ளது. <BR/><BR/>அநியாயமாகப் போகின்ற பொழுதைப் பிடிப்பார் யார்?<BR/><BR/>He who is used to the absurd will get along fine in our time.இதுதாம் உண்மை பெயரிலி!Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142108387690928522006-03-11T15:19:00.001-05:002006-03-11T15:19:00.001-05:00கேட்ட கதை ஒன்று, பொருள் குற்றம் கண்டுபிடிக்காமல் ப...கேட்ட கதை ஒன்று, பொருள் குற்றம் கண்டுபிடிக்காமல் படியுங்கள் :: ராமர் (god) சிவபூசை செய்வதற்கு முன் ஒரு அம்பை (arrow) பூமியிலே குத்தி வைப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் பூமியிலே குத்தி வைத்த அம்பை வெளியே எடுக்கும்போது அதன் நுனியில் ரத்தம்.. அடடா என்று பூமிக்குள் பார்த்தால் ஒரு தவளை குற்றுயிராக கிடக்கிறது.. ராமர் அந்த தவளையை எடுத்து "குத்தும்போதே ஒரு வார்த்தை கத்தியிருக்க கூடாதா" என்றாராம். அதற்கு அந்த தவளை சொன்னதாம் :: யாராலாவது எனக்கு ஆபத்து வந்தால் நான் ராமா ராமா என்று கத்துவேன்.. ஆபத்து ராமராலேயே எனும்போது என்ன சொல்லி கத்துவேன் என்று... <BR/><BR/>// ஒரு மூன்று வருடங்களாவது நிம்மதி அருள்வார்களென // இதை நீங்கள் கண்ணாடி முன் நிற்கும் போதும் கிடா வெட்டும் போதும் வேண்டி அதை நிறைவேற்றினால் போதும்... கண்டிப்பாக இணைய நல்லுலகில் <B>அனைவருக்கும்</B> நிரந்தர நிம்மதி கிடைக்கும்... வேண்டிக்கொள்வீர்களா?முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9437046.post-1142105328379184402006-03-11T14:28:00.000-05:002006-03-11T14:28:00.000-05:00வாசிப்பதற்கு முக்கால் மணிநேரமாச்சு. எழுத ஆறு மணியா...வாசிப்பதற்கு முக்கால் மணிநேரமாச்சு. எழுத ஆறு மணியாகியுள்ளது. குறைந்தது ஒரு மூன்று வருடங்களாவது நிம்மதி அருள்வார்களென மும்மூர்த்தியருக்கு ஒரு வேண்டுதல் மனதுக்குள்ளே...<BR/>நடக்குதா பார்ப்போம்.<BR/><BR/>-அடியாள்SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com