Wednesday, September 28, 2005

கரைவு - 6



ஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க...... &
கொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல் பின்னான குறிப்பு

திரு. மறவன்புலவு சச்சிதானந்தன் தமிழகத்திலே காந்தளகத்தினை வைத்திருக்கின்றபோதும், "ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும்" என்று சொல்வது மிகவும் பெருந்தன்மையுள்ள கருத்து. இதை அடிக்கடி நாம் ஈழத்தவருக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாகவிருக்கின்றது. ஒவ்வொருவரும் தாம் விரும்புவதை எங்கே பதிப்பிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரமென்பதை ஒத்துக்கொள்கின்றோம். ஆனால், பெரும்பாலான ஈழத்தமிழர்களின் நிலைமையைத் துணிந்து பதிப்பு, தொலைக்காட்சி, திரைப்படம் மூலம் வெளியிட மறுத்த மறுக்கின்ற திரித்த திரிக்கின்ற பெரும்பாலான தமிழகப்பதிப்பகங்களும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தொலைக்காட்சிச்செய்திகளும் திரைப்படத்துறையாளர்களும் வெட்கமின்றி ஈழப்பதிப்புகளை வர்த்தக ரீதியிலே அணுகுவதும் அவ்வணுகுதலை பல ஈழப்(புலம்பெயர்) "படைப்பாளிகள்" சாதகமாக்கிக்கொண்டு "ஈழப்படைப்பு, புடைப்பு, புடலங்காய்" என்று குறிசுட்டுக்கொண்டு பதிப்பதும் மிகவும் வேதனையளிக்கின்றது. தமிழ்நாட்டின் மிகச்சில படைப்பாளிகளும் பதிப்பகங்களும் மட்டுமே எக்காலத்திலும் ஈழத்தவர்களின் நலனிலே தம் நலன் கெடுகின்றபோதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கின்றார்கள்; இன்னும் செயற்பட்டிருக்கின்றார்கள்; இனியும் செயற்படுவார்கள். ஆனால், இன்றைக்கு இணையத்திலும் தமிழ்வெகுசன ஊடக, பதிப்பக, பத்திரிகைத்துறையிலே ஈழத்தவர்களின் படைப்புகள் எமக்கூடாகவேயென்றும் நாமே அவர்களைத் தாங்குகின்றோமென்றும் பதாகைபிடிக்கும் பிரபல்யங்கள் இந்த மெய்யான நலன்விரும்பிகளுள்ளே அடக்கமில்லை.

அதே நேரத்திலே, சச்சிதானந்தத்தின் "ஈழத்தவர் என்றாலே காமாலைக் கண்ணுடன் பார்க்கக் கூடிய தமிழகச் சூழ்நிலையிலும் (இராஜீவ் கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர் சிலோன் விஜயேந்திரன்) தரமான எழுத்துக்கும் படைப் புக்கும் அணுகு முறைக்கும் தமிழகப் பதிப்பாளர் தரும் ஆதரவு போற்றுதற்குரியது. மணிமேகலைப் பிரசுரத்தார் ஈழத்தவர் படைப்புகளை வெளிக் கொணரும் வேகத்தைப் பாராட்டுகிறேன்" என்ற கருத்தினை ஈழதேசிய அணுகுமுறையிலே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மணிமேகலைப்பிரசுரம் அடிப்படையிலே விற்பனையை முன்வைத்து எதையும் செய்யக்கூடியவர்கள். மணிமேகலைப்பதிப்பகத்தின் லெட்சுமணன் அவர்கள் ஒரு முறை திரு. நாராயணன் மாலன் என்ற இன்னொரு பத்திரிகையாளருடன் சேர்ந்து, வழக்கம்போல வாயை வைத்துக்கொள்ளமுடியாத, தற்போது இந்தியாவிலே பாதிநேரம் தஞ்சம் புகுந்து தானுமொரு பதிப்பாளராக உருவெடுத்துள்ள திரு. எஸ். பொன்னுத்துரை என்பவரின், "புலம்பெயர்படைப்புகளே தமிழிலக்கியத்தினை நிமிர்த்தி நிறுத்தப்போக்கின்றன" என்ற மாதிரியான கருத்துக்கு, எதிர்வினையாக அதேமேடையிலே "சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் என்று பட்டம் கொடுத்தவர்கள் நாமே" என்ற விதத்திலே பதிலிறுத்ததை இப்பாராட்டினை சச்சிதானந்தன் அவர்கள் மணிமேகலைப்பிரசுரத்துக்கு வழங்கும்நிலையிலே நினைவிலே கொள்கிறோம்; சுப்பிரமணியபாரதியையும் உ.வே.சாமிநாதரையும் ந. பிச்சமூர்த்தியையும் ரா. கிருஷ்ணமூர்த்தியினையும் மாதவையாவையும் ராஜமையரையும் மட்டுமே வைத்துத் தமிழிலக்கியவரலாறு கட்டப்படும் அவச்சூழலிலே அதன் நீட்சியாக தமிழிலக்கியத்தின் எதிர்காலவரலாறெழுதுதல் அமையக்கூடிய நிலை குறித்து அழுத்தி நினைவூட்டவிரும்புகிறோம்.

ஆயுதந்தாங்கு தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் முற்பட்ட காலமிருந்தே தமிழ்த்தேசியத்தினை முன்வைத்திருக்கும் திரு. சச்சிதானந்தன் இப்படியாக எத்தனையோ ஈழத்தமிழர் நலனையும் மெய்யாகவே பிணைத்துக்கொண்டு செயற்படுகின்ற நல்ல தமிழகப்பதிப்பகங்கள் (அவருடைய காந்தளகம் உட்பட) இருக்கும்போது, மணிமேகலைப்பிரசுரம் போன்ற சேற்றைக்கண்டால் பதித்து, ஆற்றைக்கண்டால் விற்கும் பதிப்பப்பங்களின் செயற்பாடுகளைப் பாராட்டுக்குரியதாகச் சொல்வது முற்றான புரிதலை அவர் கொண்டிருக்கவில்லையோவென ஐயமேற்படுத்துகின்றது.

இலெட்சுமணனின் தமையனாரான இரவி என்பவர் ஈழத்தின் திருகோணமலை தொடக்கம் இலண்டன், பெர்லின் வீதிகளூடாக அமெரிக்காவின் பொஸ்ரன் நகர்வரைக்கும் இப்படியான விற்பனை-பதிப்பக வர்த்தகராக எப்படியாக அலைகின்றார் ---- மன்னிக்கவேண்டும், ஈழத்தவர்களிடையே ஊடுருவித்திரிகின்றார் - என்பதை நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டேயிருக்கின்றோமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதற்கு, பதிப்பிலே தமது கோவணச்சலவைக்கணக்கும் சாம்பார்ச்சமையற்குறிப்பும் வந்தாலே போதுமென்ற வெறியிலே அலையும் புலம்பெயர்ந்த பெயராத ஈழத்தமிழர்களிலே பலரும் காவு போவது வெட்கத்துக்குரியது. ஆனால், இவர்களுக்கு தற்கால மணிமேகலையின் அண்மைக்கால பிட்சாபாத்திர வரலாறு தெரியாமலிருப்பதும் ஒரு காரணமாகும்.

ஈழத்தின்/ஈழத்தமிழர்களின் சுயமான சுயாதீனமான, சுதந்திரமான எதிர்காலத்துக்கு, இந்தியாவிலே முழுமையாகத் தங்கியிருக்கும் எந்த நிலையும் - அது பதிப்பகமாகட்டும், படைப்பாகட்டும், படமாகட்டும், எந்தப் பணியாரமாகட்டும் - நல்லது செய்யப்போவதில்லை. மிகச்சிறந்த உதாரணம், ஈழத்திலே தக்கிப்பிழைத்த விடுதலைப்புலிகள் இயக்கமும் தக்காது தேய்ந்த மாற்றியக்கங்களும். அதைவிட மிகவும் சிறப்பான கொள்கைகளும் ஆட்பலமும் மிக்க மீதி இயக்கங்கள் அழிந்தபோதும், விடுதலைப்புலிகள் இயக்கம் தக்கப்பிழைத்த முதன்மைக்காரணம், விடுதலைப்புலிகள் இயக்கம் தன் தளத்தினையும் உற்பத்தியினையும் முக்கிய நிலைகளையும் ஈழத்தினை மையமாக, ஈழத்திலே வைத்து செயற்பட்டதே.

அதனால், இன்றைக்கு இந்தியமேலாதிக்கவாதிகளின் கலாச்சார ('பண்பாடு' என்றால் அவர்களுக்குப் பிடிக்காது, 'கலாசார' என்றுகூட இயன்றவரை சரியாக எழுதாமலு மடம் பிடிப்பார்கள்) காவலர்கள் ஆடென ஆடவும் பாடெனப் பாடவுமே நமது தக்கித்திருப்பதற்கான பண்பாட்டுக்கோவையும் எதிர்காலமுமில்லையென்று ஈழத்தவர்கள் உணர்த்தவேண்டிய தேவையும் வாழவேண்டிய அவசியமும் எமது எதிர்காலச்சந்ததியினையிட்டேனும் உள்ளது.

திரு. சச்சிதானந்தத்தின் கருத்து, "I personally believe without India's effective intervention nothing can come to pass in Sri Lanka. And Indian intervention requires a good understanding of the ground situation in Sri Lanka" என்று இன்றுங்கூட இருக்கலாம்; ஆனால், எண்பதுகளிலே இராணுவரீதியாக ஊருடுவமுடியாது தோற்ற இந்திய மேலாதிக்கவாதிகள், ஈழத்திலே இன்றைக்கு வர்த்தக, பண்பாட்டுரீதியாக ஊடுருவ முயன்று ஓரளவுக்கு வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதை அவர் கவனிக்கவேண்டும்.

சன் தொலைக்காட்சி, கல்கி, மணிரத்தினம், மணிமேகலைப்பிரசுரம் தொடக்கம் விடுமுறைக்காலங்களிலே இந்தியக்கோயிற்சுற்றுலா, உடுபுடவை வாங்குதலென்று இந்தியமேட்டுக்குடிகளின் கலாசாரத்தினைத் தம் பண்பாடு என்று எண்ணி மயங்கும் ஈழத்தவர்களை அடுத்த இந்தியமேட்டுக்குடிமயமாக்குதலின் அடுத்த கட்டமே, இந்தியமேலாதிக்கக்கூறுகளை மையங்கொண்டியங்கும் தமிழகக்காவலர்கள் ஈழத்தவர்களின் படைப்புகளை எடுத்து தம்விருப்புப்படி உடைப்பிலே போடும் இந்நிலை.

தனிப்பட்ட அளவிலே எவரும் -ஈழத்தவரானாலும் சரி, வேறெந்த மானிடக்குஞ்சானாலுஞ் சரி- தமக்கு விரும்பியபடி எங்கும் பதிப்பிக்கலாம் எதையும் பதிப்பிக்கலாம்; அதை மறுக்கவில்லை; ஆனால், ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவரும் பதிப்புத்துறையிலே நெடுங்காலம் பணியாற்றுகின்றவருமான திரு. சச்சிதானந்தன், மணிமேகலைப்பிரசுரம் ஈழப்படைப்புகளை "துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" என்று வெளியிடுவதை, பாராட்டுவதைச் சரியான பார்வையிலே வந்திருக்கக்கூடிய முடிவாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்கள், இயன்றவரை பதிப்பகங்கள் தொடக்கம் படங்கள்வரைக்கும் கோயில் தொடக்கம் கோவணம்வரைக்கும் இந்தியமேலாதிக்கத்தினை முனைப்புடனோ அல்லது மூளையின் ஒரு மூலையிலேயேனுங்கூட மறைத்துவைத்தோ செயற்படும் கூட்டத்திற்கு ஒரு சதமேனும் மறைமுகமாகச் செல்லாமல் செயற்பட முயலவேண்டும். குறைந்தபட்சம், எக்காலத்திலும் இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்திலே, அதைக் கெடுக்காத ஈழநலனையும் முன்னெடுக்கும் எத்தனையோ பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலே உள்ளன. அவற்றினை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முயலவேண்டும்.

அதைவிட முக்கியமாக, ஈழத்தின் பதிப்பகத்துறை தொழில்நுட்பவளவிலே இன்னும் முன்னேறவேண்டும்; இது குறித்து விரிவாக தன் பதிப்புத்துறை குறித்த பதிவுகளிலே எழுதியிருக்கும் திரு. சச்சிதானந்தனுக்கு நன்றி. இலங்கையின் கொழும்பினை மட்டுமே சார்ந்திருக்காமல், ஸ்ரீலங்கா அரசின், இந்தியாமேலாதிக்க அரசின் ஊடகக்கூலிகளின் கட்டுப்பாடு செல்லுபடியாகாத கைபடாத கைபடமுடியாத ஈழத்தின் முடுக்குகளிலே இப்பதிப்பகங்கள் தோன்றவேண்டும். வெளிச்சம் போன்ற இயக்கம் சார்ந்த பதிப்பகங்களும் இயக்கம் சாராத இன்னும் பல தமிழ் பதிப்பகங்களும் முகிழ்க்கவேண்டும்.

ஆனால், தற்போதைய சூழலினைக் கவனிக்கும்போது, இதுவெல்லாம் நடக்குமென்று எனக்கு நம்பிக்கையில்லை; 80 களிலே இராணுவ, அரசியல்ரீதியாக ஊடுருவ முனைந்து தோற்ற மேலாதிக்க இந்தியா, இன்றைக்கு பொருளாதார, ஊடக, கலை, பண்பாட்டுரீதியாக ஊடுவ முனைந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதே சோகமான யதார்த்தமான நிலையாகும். :-(

எனினும், இயன்றவரை இந்தியமேலாதிக்க/மேட்டுக்குடிகளின் ஈழ எடுபிடிகளை நாம் அடையாளம் கண்டுகொள்வதும் அவர்களின் பாதைகளை நமக்கேனும் நாம் தேர்ந்துகொள்ளாமல் மறுத்துக்கொள்வதும் மிகவும் அவசியமாகும்.

வாழ்க ஈழம்! வளர்க தமிழ்த்தேசியம்!!



பாடலுக்கு நன்றி: தமிழ்தேசியம். அமை

'05 செப்ரெம்பர், 28 புதன் 14:45

பி.கு: இப்பதிவு, இப்பதிவினையும் இதுபோன்ற பதிவுகளையும் இப்பதிவுகளையிடுகின்ற எம்மைப் போன்றவர்களுக்கு இட முடியாதென தாம் நினைக்கும் விதத்திலே கிண்டலடித்து ஒரு கிழ மைப்பதிவிட்டுப் பிழைக்க மட்டுமே பெருந்தன்மையும் பேரறிவும் கொண்ட எல்லா இந்தியமேலாதிக்கச்சின்னக்குசுமூடிக்கழுதைப்புலிகளுக்கும் நம் பின்னூட்டத்தகுதியில்லாத உதிர்ந்த .யிர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. கவனிப்புக் கலையும் இவ்வுரோமங்களுக்கு, தமிழ் அத்துணை பிடிக்காதென்பதால், Please serve yourself and go on living on what I pee(d) on my exdispense ;-) :-)
_/\_


பிற்போக்கைக் கண்டிலர் விண்டிலர் ;-)
கரைவு~

Saturday, September 24, 2005

குவியம் - 17

மிகுந்த மனவழுத்தத்துடன் எழு(து)கிறேன்


தொரந்தோ வாழ் ப்ரோ அவர்கள் நேற்றும் நேற்றுமுன்தினமும் என்னைப் பற்றி மிகவும் தவறான வதந்திகளை இரு பதிவுகளிலே பரப்பியிருக்கின்றார்.

ஒன்று: சிங்கப் பூரான் வாசியா(தவரா)ன ஈயநாத்தன் என்பவரின் பதிவிலே தென்னங்குரும்பா கீழ்க்கண்டவாறு வெட்டியிருக்கின்றார்.

பெயரிருந்தும் படம்போட்டு பெயர்மறந்தார் பெயரிலி

நான் அருகிலிருக்கும் இந்தச்சின்னஞ்சிறுபாலகன் தன் வாழ்க்கையிற் சறுக்கி விளையாடும் வண்ணப்பப்படத்துக்கு ஏன் குழந்தையின் பெயரைப் போடவில்லையென அந்தக்கர்த்தருக்கும் அல்லாவுக்கும் ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் என்னுளம் துன்புறும் வண்ணம் நான் பதிவிலில்லாத வேலை/ளையிலே தேவையில்லாமல் தொரந்தோவாசி தொந்தரவு பண்ணியிருக்கின்றார்.

இரண்டு: நமது டோலி சாரா ஜெஸியின் படத்தினைப் போட்டுவிட்டு, சிரிப்பு, லைவ்லி, லௌலி, லோலி, லைவ்நீ, லௌ கீ கம் நீ என்றெல்லாம் பிதற்றியதோடு மட்டுமில்லாமல், "கார்த்திக், பார்த்தீங்களா.....ஒரு ஜெஸிக்கா பார்க்கரைப் போட்டவுடன் எப்படி எங்கடை ப்ரோ பதிவு, படம், பின்னூட்டம் என்று எதுவும் இல்லாமல் மயங்கிக் கிடக்குகிறார் என்று :-)" என்ற பொய்ப்பிரசாரத்தினையும் பிரசாதமாக 21/2 ஏக்கர் இதய கோல்டன்பெல், உடன்பிறவா கேது காமாசு ஆகியோரிடம் அவிழ்த்துவிட்டிருக்கின்றார்

பாம்புத்தோலர் தோழர் ப்ரோவின் தோளதிலே அடித்துத்தட்டிச் சொல்கிறோம், "ஜெஸிக்கா பார்க்கரைப் பார்க்காமல் பிஸியாய் என்ன பார்க்கர்பேனையா வாங்கினாய் என்று கேட்கிறாயே? அதைவிட முக்கியமான பூனை ஒன்றைத் துரத்தி நாம் திரிந்திருக்கக்கூடுமென்பது உனக்கு மண்டையிலே மறந்து போய்விட்டதா மனத்திலே மறைந்துபோய்விட்டதா? தொரந்தோ பார்க்கரைப் பதிவிலே திறந்து பார்க்காமல் நாம் மியாவ் மியாவென மந்திரம் முனகிக்கொண்டு பொஸ்ரன் பாரிலே உலாவியது உனக்கெங்கே தெரியப்போகின்றது! லௌலியை அடக்கிவாசிக்கவேண்டாமா? இப்படியாக நாட்டுப்பூனைக்கு முன்னால் பாரின்பேனையை நீ முன்வைப்பாயானால் நாங்கள் க்ளாங்கென்று உனது மண்டையிலே எரிகணையோ ஈக்கல்லோ எறிந்தோ எடுத்தோ போடும் இழவு நிர்ப்பந்தம் இத்தால் ஏற்படுமென்று இத்தாளால் எச்சு அரிக்கின்றோம்."

Thursday, September 22, 2005

படிமம் - 162


Chocolate Fields



'05 செப்., 22 வியாழன் 18:03 கிநிநே.

நாளது தொலைந்தது
நானதிற் தொலைந்தேன்
ஆளது தொலைவதால்
ஆனதோ தொலைவு/வாழ்வு?

நானும் பதிகின்றேன் என்ற மாதிரிக்கு....

தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

Tuesday, September 20, 2005

படிமம் - 161





தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

மழைமதியம் '05/20/09 செவ்வாய்.
எழுக பலர்
எழுதுக பல
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து

Saturday, September 17, 2005

குவியம் - 15


படம் பார் படங்கீறியவரைச் சொல்

தமிழ்ப்பதிவுகளிலே படத்தைப் போட்டு, 'ஆளைக் கண்டுபிடியுங்கள்' விளையாட்டினை ஆரம்பித்திருக்கின்றார்கள். வாத்துகள், காட்டுப்பன்றிகள் மறைய, பதிவுக்கூர்ப்பிலே அடுத்தகட்டமாக, இந்த "ஆளைக் கண்டுபிடி-அகதியைக் கண்டுபிடி" விளையாட்டினை ப்ரோக்கள் செய்கின்றார்கள். மாறுதலாக, எமது பங்களிப்பாக, படம் போட்டவரைக் கண்டுபிடியுங்கள் என்று அவரின் படத்தினையும் போட்டுச் சொல்கிறோம்.



ஐம்பதாண்டுகளுக்கு முன்னால், மேலுள்ள படங்களைக் கீறியவரின் படமும் பக்கத்திலே தரப்பட்டிருக்கின்றது; பொஸ்ரனில் வாழும் சண்(முகலிங்கம் துரைசாமி) இன் மலையாளப்பாவை பல்வேறு விடயத்தொகுப்பிலே, இந்தப்படங்கள்-படம் கீறியவர் குறித்து வந்திருக்கின்றதைத் தந்திருக்கின்றோம்.

படம் வரைந்தவரின் பெயரைப் பற்றி(யும் மேலோட்டமாக 'மலையாளப்பாவை' குறித்தும்) பின்னால்.

Friday, September 16, 2005

கணம் - 477


'Che' Incorporated


'05, செப்., 16 வெள் 17:34 கிநிநே.


தோரோ கடனட்டைக்காய்த்
தவளைக்குளம் தூர்த்தார்
ஐயன்ஸ் ரீன் பென்சில் விற்க
வகுப்பு இரண்டுக்குப் போனார்
உலூதர் கிங் வாய் பொறுக்கி
விற்றார் கடித்த அப்பிள்.

பின்னால்,
ஆடி வெக்கை மதியத்தில்
ஒரு கோகாகோலாவுக்காய்
ஒளிந்திருந்து விரல்காட்டிக்
கொடுக்கப்பட்டான்
என் ஐயன்.

வேறாய்ச் சிந்தி!





வேறேதும் சிந்தி!!

'05, செப்., 16 வெள் 18:00 கிநிநே.

படிவு - 14



பிபிஸி தமிழோசை
16 செப்ரெம்பர் 2005


இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க முடிவு

இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார்.

உல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார்.



Thursday, September 15, 2005

உணர்வு - 35


Blessed, Beautified, Brassed, Burnt


'05, செப் 15 வியா. 18:24 கிநிநே


தமிழிலே தலைப்பு நீளும் என்பதாலே தரப்படவில்லையென்பதல்ல, பீம்சிங்-சிவாஜி படவரிசையிலே 'ப' இலே தலைப்புகள் தேடும் பஞ்சியும் காதிலே பஞ்சடைத்தாற்போற் பசியும் விழி துஞ்சிட அவாவும் (இந்த எதுகை போதுமா? மோனே, இன்னும் மோனை வேணுமா?) விஞ்சி நிற்பதாலே தரமுடியவில்லை. பிறகொருநாள் பார்த்துக்கொள்ளலாம்.

துளிர் - 47


Noise Evaporation


வீதிக்கரைப்புல்லுப்பழம், மஸாஸுஸெட்ஸ் மாநிலம்
'05, செப், 15 13:20 கிநிநே. விடாமழைக்காலைம்

படங்களிலே வாத்தும் வானமும் வனமும் வானரவழிவந்தவையும் கூடினதாலே அருள் கிடைத்து கனி பெற்றோம் ;-)

உணர்வு - 34


Momentary Reflection


'05, செப் 15 வியா. 11:24 கிநிநே

இப்படத்தினை எடுக்கப் பொறி தந்த தங்கமணியின் 'கண்ணில் தெரியும் வானம்' இற்கு நன்றி.

Wednesday, September 14, 2005

தெறிப்பு - 23


Glued to the Blue Screen




படங்களைப் பொறுத்தமட்டிலே எந்தப்படமென்றாலும் அலுக்காமல் இருந்து முடிவுவரை பார்ப்பேன் என்ற நம்பிக்கையும் பெருமையடிப்பும் என்னிடமிருந்தது. இருந்ததென்று ஏன் சொல்கின்றேனென்றால், எழுபதுகளிலே ஈஸ்ட்மென் கலர், டெக்னிக்கல் கலர் வண்ணப்படங்களாக சிவாஜி, ஜெமினி நடித்த சில படங்களை அண்மையிலே பார்க்கும் துர்ப்பாக்கியம் கிட்டியது. ஆறுபதுகளின் கருப்புவெள்ளைகளிலே சிவாஜி, ஜெமினி நடித்த படங்களைப் பாடல்களுக்காகவும் நகைச்சுவைக்காகவும் மிகவும் விரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, இது பெரியதாக்கத்தைத் தந்ததென்பதிலும் விடத் தூக்கத்தைத் தந்தது.

தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

Tuesday, September 13, 2005

குவியம் - 14


படம் பார் பாடம் படி




நாட்டிலே இன்றைக்கு மிக முக்கியமான விடயம் எத்தனையாவது பதிவு நாம் போடுகிறோமென்பதுதான் என்பது எனக்குத் தெரியவந்தபோது, நான் எத்தனை பதிவுகளைப் போட்டேன் என்று கணக்கெடுக்க விருப்பம் வந்தது; அனால், இலுப்பைக்கொட்டை, புளியங்கொட்டை, முருக்கங்கொட்டை எண்ணுவதுபோல, பதிவுகளை எண்ணுவது சுகமான வேலையில்லை; பஞ்சிபிடிச்ச வேலை.

ஆனால், தொள்ளாயிரத்து முப்பத்தியேழாவது நாள், இருபத்தொரு மணி நாற்பத்தி மூன்று நிமிடம் இருபத்தி மூன்றாவது செக்கனிலே போட்ட ஏழாயிரத்து நாற்பத்து மூன்றே கால்_பதிவினைப் பற்றி எவருமே கேட்காதலாலே, மிருகங்கள் தமது ஏரியாவிலே ஒண்டுக்கடித்துத் தம் இறைமையினையும் சுதந்திரத்தினையும் உரித்தினையும் நிலைநாட்டுவதுபோல நானே போட்டு வைக்க வேண்டியதாகிப் போனது. இல்லாவிட்டால், அதிப்ரமாண்டமான ஈஸ்ட்மென் கலர் வண்ணப்பதிவின் வரலாற்றின் ஏடுகளைக் குறிப்புக்காகவும் சலவாத்துக்காகவும் (இது வேற சலத்திலே நீந்தும் வாத்து) புரட்டப்போகும் ஆர் ஆட்சியாள 70 மிமீ ராஜராஜசோழர்கள் சோழர்கள் நம்பியாண்டார் நம்பிகள் நம்பியார்கள் என்னை மறந்து பதிவு வரலாற்றினைப் புதுக்கிவிடுவார்கள். பிறகு, என் வாரிசுகள் மனம் நொந்துபோகாதா? இருக்கிற காலத்திலேதான் உருப்படாமற்போன நாசமறுவான், செத்துங்கூட ஒரு கோதாரியும் எம் பெயர் சொல்ல ஏதும் பண்ணாமல் போய்விட்டானே எனத் திட்டுவார்களென ''Deep throat' Mark Felt மாதிரி நான் felt பண்ணியதாலே, இரண்டாம் பதிவினைப் போடவேண்டியதாயிற்று. "முதற்பதிவைத்தானே போடுவது முறை; ஏன் இரண்டாம் பதிவு?" என்று யாராவது அறிஞர் பெருந்தகை கேட்கக்கூடுமென்பதாலேதான், இரண்டாம்பதிவினைப் போட்டிருக்கின்றோம். வரலாற்றாசிரியர்கள் சந்தேகத்தோடு கேள்வி கேட்க இடம் கொடுக்காத எப்பேர்ப்பட்ட ராஜராஜகம்பீர கொசுகடித்தான் அந்ரஸாகேப்பும் அய்யோன்னு சரித்திரத்திலே சாமான்யமானப் போவான் என்பதால், இப்படியாக கேள்விகளுக்கான இடைவெளியைப் பள்ளத்தாக்காக விட்டுப்போகிறோம் என்று அறிக. அடிக்கடி "நாங்கள் இதைப் பண்ணியிருக்கிறோம் அதைப் பண்ணியிருக்கின்றோம்" என்று லேஞ்சியைப்போட்டு ஜன்னலோர ரெயின்சீற்றைப் பிடித்ததையும் ரெஸுமியிலே எழுதிக்கொள்ளவேண்டியது வாழுங்கலைகளிலே ஒன்றாதலால் நாமிதைச் செய்யவில்லை என்று சுட்டிச் சொல்லிக்கொள்வது ஒரு கலை. "களையிலாமற் கலையில்லை; கலையில்லாமற் களையில்லை" என்று யாராவது புலவர் அனானிமாசாகச் சொல்லியிருப்பார் என்பதைக் கவனியுங்கள்; சொல்லாவிட்டால், யாராவது புரவியாகப்போகிறவர்கள் புழுதியாகப்போகிறவர்கள் சொல்லக்கூடும். தமிழை நாமே கண்டுபிடித்தோம்; நாமே - இலக்கணத்தமிழ், இலக்கியத்தமிழ், இசைத்தமிழ், அறிவியற்றமிழ், அவித்ததமிழ், அவியாவுருளைத்தமிழ், கூழ்முட்டைத்தமிழ், குப்பத்துத்தமிழ் அனைத்துத்தமிழையும் அவியலாய்க் கண்டு பிறர் இன்புற முதலில் அளித்தவர், அழித்தவர், அழி ரப்பர் பென்சிலோடு சில்லோட்டக் கற்றுக்கொடுத்தவர் நாமே. நாமேதான்.

தமிழ்மணப்புனலோடு போகாமலிருக்க இத்தனை புலம்பவேண்டியிருக்கிறது பாருங்கள். ஐய்யய்யோ மறந்துவிட்டேன். புனற்றமிழ், புனைத்தமிழ், பூனைத்தமிழ், பூனாத்தமிழ் வகைப்பட்ட பொல்லாத்தமிழ்களையும் புனைந்து தந்தவர் நாமே; யாமே; பண்டைமாந்தர் யாங்கு ஈடேற பண்போடு பண்டமிழ் வழங்கிப் பண்டம் பெறாமலே போன பயிற்றங்காய்த்தமிழர் யாமென்று சொல்லிப் புக்கும் வாருங்காலவராலாறு.




பின்னல் - 26


Aura of a Door-stopper




இப்பதிவு, தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக எத்தனை மேலதிக தமிழ்ப்புலம்பல்களை இங்கே நடத்தவேண்டியதாகவிருக்கிறது. ஆனாலும், பாதகமில்லை. இல்லாவிட்டால், தமிழ்ப்பதிவென்றே ஒரு தம்பி, ஒரு தங்கைச்சி எழுதமாட்டினம். ஆனால், இப்படியான பதிவுகளிலே எது மெய்யான புலம்பல், எது தமிழ்மணத்துக்குத் தேவையான புலம்பல் என்று அறிய விரும்புகின்றவர்கள், கீழே காணும் பெருப்பிக்கப்பட்ட அளவீடுக்கு மேலே இனி வரும் காலத்திலே உரசிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கூடவே, கதவுத்தடுப்பியின் கால் & கையைப் பற்றிப் பின்குறிப்பு எழுத முயற்சிப்பவர்களுக்காக, கால்கை என்பது emission என்பதாகக் கொள்க என்று சொல்லி உபகாரம் பண்ணிக்கொள்கிறேன்


சம்பந்தப்படாத பி.கு: ப்ரோ ரப்பர் மேலே வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்து

தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....


படிமம் - 160


(Over)Exposed



தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக....

அறியாதார் அவலங்களுடன் விடிகிறது காலை
அறியாதார் கொய்த தேயிலைத்துளிருடன்
அறியாதார் வனைத்த கோப்பைப்பிடியுடன்
அறியாதார் எழுதிய அறிவியற்கட்டுரையுடன்
அறிந்தும் -
அறியாதான்போல் (சு)வாசித்துக்கொண்டிருக்கின்றேன்
அதிகாலையை

Monday, September 12, 2005

சலனம் - 4


After Life / Wandafuru raifu (1998)

After Life/Wandafuru raifu (1998)


ஐப்பானியப்படங்களோடு ஒப்பிடும்போது, பொதுவாக பிற நாட்டுப்படங்களிலே இறப்பினைச் சுற்றிய அதீதமான எண்ணச்சுழல்வும் ஈர்ப்பும் மிக அரிதாகவே இருக்கின்றன [Ingmar Bergman இன் 'The Seventh Seal' (1957), Abbas Kiarostami இன் 'A Taste of Cherry' (1997) போன்ற சில குறிப்பிடத்தக்க படங்களைத் தவிர]. ஐப்பானியத்திரைப்படங்களைப் - குறிப்பாக, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான- பொறுத்தமட்டிலே, அவற்றின் மேலே இறப்பின் சாயல் கவின் நிமித்தமாகவேனும், ஒரு மெலிதான ஒய்யாரத்திரையாகப் படிந்திருப்பதைக் காணலாம். இரண்டாம் உலகப்போரின் முடிவிலான ஐப்பானியர்களின் அளவிடமுடியா மனித உயிரிழப்பு மொத்தமாக அவர்களின் சிந்தைப்போக்கிலே இறப்பினைக் குறித்த ஒரு நீக்கமுடியாத பாதிப்பினைத் தந்திருக்கின்றதோ தெரியவில்லை [குரோஸோவாவின் அநேகமான படங்கள் (குறிப்பாக, Ikiru (1952)), Shohei Imamura இன் படங்கள் (குறிப்பாக, Ballad of Narayama (1983)) போன்றவை உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன]. இந்த வகையிலே 'வாழ்வுக்குப்பின்னால்' (After Life) இனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்படம், இறப்பினைக் குறித்தும் வாழ்காலஞாபகங்கள் குறித்தும் பேசுவது; படக்கதையின் சுருக்கத்தினை ஒரு வசனத்திலே சொல்லிவிடலாம்: "ஒருவரின் இறப்பின்பின்னால், அவரால் தன் வாழ்க்கையின் ஒரு ஞாபகத்தினைமட்டும், வரப்போகும் காலத்துக்கெல்லாம் நிலைத்து வைத்துக்கொள்ளலாமென்றால், அவர் எதற்காக, எஞ்ஞாபகத்தினைத் தேர்ந்தெடுப்பது என்பதைக் குறித்தது." புதிய வாரமொன்றின் வேலைநாள் தொடங்குவதாக உணர்த்தப்படுவதோடு படம் தொடங்குகின்றது; இறப்புக்குப்பின்னால், நிலைத்த ஓரிடத்துக்கு (அது, 'நரகம்.எதிர்.சொர்க்கம் என்பதாக படத்திலே எக்குறிப்பும் தெளிவாக உணர்த்தப்படவில்லை; சொல்லப்போனால், அப்படியான வேறுபாடு இல்லையென்பதாக ஒரு பாத்திரத்துக்குச் சொல்லப்படுகின்றது) இறந்தவர்கள் செல்லும்வரைக்கும் அவர்கள் இவ்விருநிலைக்குமிடைப்பட்ட ஒரு திரிசங்கு ஞாபகவிசாரணை + தேர்வுக்கூடத்திலே ஒரு வாரம் தங்க வைக்கப்படுகின்றார்கள். அங்கே, அவர்களுக்குத் தமக்கு முக்கியமான ஞாபகத்தினை மட்டும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது; அதைத் தேர்ந்தெடுக்க, இந்த இடைநிலைகூடத்தின் விசாரணையாளர்கள் (வேண்டினால், இறந்தவர்களின் வாழ்க்கை முழுக்கவுமே ஒளிப்படமாக இருக்கும் படக்கோப்புகளை எடுத்து மீள இறந்தவர்களுக்குப் பார்வையாளர்களாகவிருந்து தம் வாழ்க்கையை மீளப்பார்க்கப் போட்டுக்காட்டியோ, அல்லது தமது வினா-விடைகள்மூலம் முடிவெடுக்கவோ) உதவுகின்றார்கள்; அஞ்ஞாபகம், விசாரணையாளர்கள் துணையோடு இறந்தவர்களும் பங்குபெற மீளவும் நடாத்திக்காட்டப்படுகின்றது; படமாக்கப்படுகின்றது. வாரமுடிவிலே விசாரணையாளர்களுடனான ஒரு விருந்தோடும் விசாரணைத்தலைமையாளரின் உரையோடும் இறந்தவர்கள் அடுத்தநிலைக்குப் போகின்றார்கள்; புதிய வாரம் பிறக்க, புதிய இறந்தவர்கள் கூடத்துக்குள்ளே உட்புகுகின்றனர்; விசாரணை தொடங்குகின்றது.

இச்சாரத்தோடு, பாத்திர ஆய்வுகள் நிகழ்கின்றன; படத்தினைப் பார்க்கும்போது, 'தன் வாழ்க்கையின் முக்கியமான ஞாபகமென்று ஒருவர் கருதுவது, அவரின் விருப்புக்குரிய ஞாபகமாகவிருக்கவேண்டியதில்லை' என்பதாகத் தோன்றுகின்றது. தனது பிடித்த ஞாபகமென்று ஒருவர் எண்ணிக்கொள்வது, சில சமயங்களிலே மெய்யாகவே அவர் ஞாபகப்படுத்திக்கொள்வதுபோல நடந்திருக்கவேண்டியதில்லை, ஆனால், அவர் உணர்ந்துகொள்வதும் ஞாபகத்திலே வைத்திருக்கவிருக்க விரும்புகின்ற விதத்திலுமாகவிருக்கின்றது. சிலருக்குத் தமது கடந்த காலமே ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. இவற்றினூடாக, விசாரணையாளராக இருக்கும் மோஸிஸுகி (Mochizuki) என்பவனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவனிடம் தொழில்பயிலுனராகவும் அவன்மேலே காதல் கொண்டுமிருக்கும் சதோனகா (Satonaka) என்ற இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்படுகின்றன.

விசாரணையாளர்களும் எப்போதோ இறந்தவர்களே; அவர்களை யார் விசாரணையாளர்களாக ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற்றுகின்றார்களெனத் தெளிவாகச் சொல்லப்படவில்லை; இறை, நம்பிக்கை குறித்துப் பேசப்படவில்லை. ஆனால், குறிப்பாக, விசாரணையாளர்களிலே ஒருவர் தனக்கான விருப்பஞாபகத்தோடு அடுத்த நிலைக்கு நகர்கையிலே புதிதாக இறந்து வந்தவொருவர் அந்தப்பதவிக்கு விசாரணைக்கூடத்தின் தலைவராலே நியமிக்கப்படுவது காட்டப்படுகின்றது. விசாரணைக்கூடம், வாழும் உலகத்தின் ஒரு சாதாரண அலுவலகத்தின் பாணியிலேயே காட்டப்படுகின்றது; விசாரணையாளர்களுங்கூட. இவ்விதமான இயக்குநரின் அணுகுமுறை படத்தோடு பார்வையாளரின் ஒன்றிப்போக உதவுகின்றதென்று சொல்லலாம்.

இயக்குநர் ஹொரே எரா டா (Hirokazu Koreeda) இன் விடய அணுகுமுறை, இறப்பினைக் குறித்த மிகவும் சிக்கலான பார்வைகளையும் விவாதங்களையும் தத்துவவிசாரங்களையும் தவிர்த்துவிடுகிறது. அவருடைய இலக்கு, இறப்பு என்பதிலும்விட, தனிமனிதனுக்கும் அவனுடைய ஞாபகங்களுக்கும் இடையிலான ஊடாடல்களைப் பேசுவதாகத்தான் தெரிகின்றது. பட ஒளியத்தட்டிலே மேலதிகமாகத் தரப்பட்டிருக்கும் இயக்குநரின் படத்தின் தேவை, தயாரிப்பினைக் குறித்த பின்புலத்தகவல்கள் மனித ஞாபகத்தினைச் சுட்டிப் பேசுகின்றன; அவர், 'அல்ஸைமர்ஸ் நோயினாலே, இறந்துகொண்டிருந்த தனது பாட்டனார் அவரினைப் பற்றியே அறிதல் உலர்ந்துகொண்டு போனபோது, இப்படம் குறித்த விதை தன்னுள்ளே முளைக்க ஆரம்பித்தது' என்கிறார். ஒரு மனிதன் தனக்கு முக்கியமான ('விருப்பமான' என்று சொல்லமுடியுமோ தெரியவில்லை) ஒரு ஞாபகத்தினை மட்டுமே சேகரித்துத் தன்னுடன் எக்காலத்துக்கும் தக்க வைத்துக்கொள்ளலாமென்றால், 'எதை/ஏன் கொள்வான், அவன் ஞாபகமென்று கொண்டிருப்பதற்கும் மெய்யாக நிகழ்ந்ததற்குமிடையே எத்துணை ஒன்றிப்பு இருக்கின்றது' என்பது குறித்து அலசுகின்றார். இப்படத்தின் கதையினை அமைக்கும்போது, நூற்றுக்கும்மேலானவர்களை நேர்கண்டு, அவர்களின் முக்கிய ஞாபகங்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் கதையினை அமைத்திருக்கின்றார்.

படத்தின் நாயகன் என்று சொல்லக்கூடிய மோஸிஸுகி பாத்திரத்துக்கு, பல நடிகர்களை நேர்கண்டு, அராடா (Arata) என்ற புதுமுகத்தினை எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. அடிப்படையிலேயே ஒரு சோகம் கவிழ்ந்த முகம், அவருடையது; கூட நாயகி, சதோனகா ஆகக் கருதக்கூடிய, எரிகா ஓடா (Erika Oda) இற்கும் பாசாங்குத்தன்மையற்ற, தன் பாத்திரத்துக்குரிய அனுபவமின்மையை முகத்திலேயே காட்டக்கூடிய தன்மை தெரிகின்றதான தேர்வு. கூட வரும் துணைப்பாத்திரங்களான தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேரமுடியாத கிழவர் வடானபே, செர்ரீ பூக்கும் காலத்தினை வேண்டும் கிழவி நிஸிமூரா, டிஸ்னியின் ஸ்ப்ளாஸ் மவுண்டன் நினைவிலிருக்கும் பதின்மப்பருவப்பெண் யோஸிரோ, தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேர்ந்தெடுக்க மறுக்கும் மனிதர், பழைய ஞாபகங்களை மறக்கவிரும்பும் மனிதர், 'ஞாபகமாய் எதுவுமே குறிப்பிட்டுச் சொல்ல இல்லை' என்பதாகப் பிடிப்பின்றிப் பேசும் இளைஞன், தன் ஞாபகங்களைக் கேட்கும் இளம்பெண்விசாரணையாளருக்குத் தன் பாலியற்கிளர்ச்சியூட்டும் ஞாபகத்தினை விரித்து விபரிக்கும் நடுவயது மனிதர் ஆகியோர் முன்னர் பார்த்த ஏதோவொரு ஜப்பானியப்படத்தின் ஏதாவதொரு பாத்திரத்தினை ஞாபகப்படுத்தினாலுங்கூட, இப்படத்தின் நோக்குக்கு, மிகவும் கச்சிதமாக ஐப்பானிய சமூகத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைச் சுட்டும்விதமாக பொருந்தியிருக்கின்றார்களென்று சொல்லலாம்.

படம் முடிந்தபோது, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்பட்டதென்பது உண்மை; அதே நேரத்திலே, ஒரு வெறுமையும் பயமும் கலந்த உணர்வும் ஏற்பட்டது; அவ்வுணர்வுக்குக் காரணம், 'எனக்கு விருப்பமான ஒரு ஞாபகத்தினைத் தீர்மானிக்கச் சொன்னால், என்னத்தினைத் தீர்மானிப்பேனென்ற குழப்பமா, மரணம் குறித்த - காலகாலத்துக்கும் அதே ஞாபகத்துடன் எங்கே உறைந்து நிற்பேன், இப்போதைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட அவ்வொரு ஞாபகத்தோடு மட்டுமே உறைந்து எப்போதைக்குமே அதிலே அலுப்பேற்படாது நிற்பேன் என எண்ணுவது சரியா என்ற குழப்பமா, அல்லது பட முடிவிலே தேர்ந்தெடுத்த தத்தமக்கான ஞாபகங்களோடு இப்பாத்திரங்கள் எங்கே போகின்றார்களென்ற முடிவு தெரியாமையின் விளைவான அச்சமா' என்று என்னால் குறிப்பிட்டுத் தேர முடியவில்லை.

மூலத்தலைப்பு: Wandafuru raifu (1998)
நாடு/மொழி: ஜப்பான்
ஆங்கிலத்தலைப்பு: After Life
ஆண்டு: 1998
ஓடு நேரம்: 118 நிமிடங்கள்
இயக்கம்: Hirokazu Koreeda
நடிகர்கள்: Arata, Erika Oda


'05 செப்., 12 திங்கள் 13:35 கிநிநே.


Sunday, September 11, 2005

புனைவு - 25


தொழிலகத்திலிருந்து பதினைந்து இருபது நிமிடங்கள் மாலைவெயிற்கசகசப்பிலே நடக்கவேண்டும்; நடந்தான். பிறகு, தொடர்வண்டியில் நெருக்கடிக்கேற்ப நின்றோ இருந்தோ முப்பத்தைந்து நிமிடங்கள் வரவேண்டும்; வந்தான். இறங்குநிலையத்திலிருந்து, வீட்டுக்கு, பத்து நிமிட நடை; நடந்து வந்து, கடிதங்களைப் பெட்டியிலே பொறுக்கிக்கொண்டு கதவைத் திறந்தான்.

குழந்தை கெக்கட்டமிட்டுக்கொண்டு கையை விரித்துக்கொண்டு ஓடிவந்தது; தூக்கிக்கொண்டான். தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.நிகழ்ச்சியின் பின்புலம் தொடர்பான மூன்று தகவல்களை மனைவியிடம் தெரிவித்தான்:- செந்நாய்க்குக் குரல் கொடுப்பது இன்னார்; இத்தொடர்நிகழ்ச்சி தயாரிக்கத் தொடங்கின ஆண்டு & முடிந்த ஆண்டு; இத்தொடரின் சிறந்த அங்கங்கள். குழந்தை தாயிடம் மீளத் தாவியது. தோட்பையை ஓரமாகப் போட்டான்; முகப்பிலேயே முழுவதும் தெரியும் கடன், எரிபொருட்கணக்குவழக்குகளுடனான உப்புச்சப்பறுகடிதங்களைப் பிரிக்காமலே மனைவியிடம் நீட்டினான்; இடது இடுப்புக்குக் குழந்தையை மாற்றிக்கொண்டு, 'இதுக்கெல்லாம் நான்' என்பது வெளிப்பட்ட தலையசைப்புடன் வலக்கையால் வாங்கிக்கொண்டாள்.

மீதியாய்க் கைக்கிடந்த இன்னோரன்ன விளம்பரங்களைக் கட்டிலிலே பரப்பி வாசித்துக்கொண்டு உடையை மாற்றினான்; ஊரிலே விபத்துகளுக்கான சட்டத்தரணியின் தொழில்மேசை, விளம்பரத்திலே வேறொரு கோணத்திலே படமாகத் தரப்பட்டிருந்தால், எடுப்பாயிருந்திருக்கலாமெனத் தோன்றியது. விளம்பரங்களைக் கசக்கிக் காலால் அழுத்தித் திறந்த குப்பைக்கூடைக்குள்ளே போட்டபோது, உள்ளே கிடந்த நேற்றைய விளம்பரமொன்றிலே வாசிக்காமல் விட்ட ஒரு குறிப்பு கன்ணிலே பட்டது; 'பரீஸுக்கும் பிரெஸில்ஸுக்கும் குறிப்பிட்ட முகவரூடாக விமானச்சீட்டுக்கு ஒரே தொகைதானெனத் தெரிந்துகொண்டான். தான் கழற்றித் தோளிலே தொங்கிய உடுப்புகளை ஒரு முறை உதறிக் கொண்டு இரண்டாக மடித்து, அலுமாரிக்குள்ளே தொங்கப்போட்டான். சுவரலுமாரிக்கதவுச்சக்கரங்களில் ஒன்று உருள மறுத்தது. தூக்கி வைத்தான்; நிமிர்ந்தபின்னும், உள்ளங்கைகளிலே சமாந்திரக்கோடுகளாகப் பாரம் உறுத்தியது. இந்த உறுத்தும் உணர்வுக்கு அறிவியல்ரீதியான காரணம்...

குளியலறைக்குப் போகும் வழியிலே செல்பேசியை மூடியபின்னான கடந்த இருபது நிமிடங்களிலான உலகநடப்புமாற்றங்களைப் படுக்கையறைக்குள்ளேயிருந்த கணணியூடாக, சில நிமிடங்கள் உந்தலோடு அறிந்துகொண்டான்; தெற்காசியாவிலே ஒரு சின்ன நிலநடுக்கம் - 6.7 ரிட்சர் அளவு; கௌதமாலாவில்....

திருப்தி; நிமிர்ந்து, குளிக்கப்போவதை உரத்துச் சொல்ல, குழந்தை கெக்கட்டமிட்டுச் சிரித்தபடி ஓடிவந்தது. அதன் கைகளும் கால்களும் ஓடுகையிலே எப்படியாக சமநிலையைப் பேண முயல்கின்றதென்பதை அவதானித்தபடி, தூக்கிக்கொண்டான். குழந்தை தன் முகத்தை அவன் முகத்தோடு தேய்த்த அடுத்த கணத்திலேயே அவன் முகத்தினைத் தள்ளிவிட்டு, அம்மா இருக்கும் திசையைக் காட்டி, "ங்கா" என்றது; தாயைக் கண்டு தாவியது; அவர்கள் அந்தப்புறம்போக, இவன் குளியலறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டான்.

குளியலறை முகம்பார்க்கும்கண்ணாடிக்குள்ளே மாலைவெயிலிலே அவன் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் எடுப்பாகத் தோன்றியதாகப் பட்டது; இன்றைக்குமட்டும் தொழில்நிலையத்தலைமைக்குத் தெரியாத ஆறு... இல்லை... ஏழு விடயங்களைச் சுட்டிக் காட்டப் பாராட்டு - குறிப்பாக, மதியத்தின் வாரக்கூட்டத்திலே தொய்கணங்களை உயிர்ப்பூட்ட ஈரக்கையை உதறச் சிதறுகிற நீர்போல, தொழில்நுட்பம் சாரா உலகத்துச் சின்னத்தகவல்கள்:- 'நெருப்புக்கோழி மெய்யாகவுமே தலையை மணலுக்குள்ளே நுழைத்துகொள்கின்றதா என்பது குறித்தது; மழைநீர்த்துளிக்கு மூன்று வடிவங்கள் இருப்பதும் குளியலறைக்குழாயிலே சொட்டும் நீர்த்துளியின் வடிவிலே மழைத்துளியிருக்காதென்பதும் குறித்தது.'

இயலுமானவரை உதடுகளை வெளித்தள்ளி இளித்துப் பார்த்தபடி, பற்களை -வத்தகைப்பழத்திலே நல்லது கெட்டது பார்க்கத் தட்டுவதுபோல- சுண்டிவிட்டான்; வாயைத் திறக்க, கண்ணாடியிலே ஆவிபடர்ந்து மூக்குக்கு நாற்றம் தெறித்தது. பற்களைத் தீட்டிக்கொண்டிருக்கும்போது, ப்ரோக்கலி, வத்தாளங்கிழங்கு ஆகியவற்றிலேயிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்துகளின் வீதங்கள் தனக்கு ஞாபகமிருப்பது சரியா என்பது குறித்து தலைக்குள்ளே கணச்சந்தேகம் ஓடியது; "என் தரவுத்தளம் தளும்பாதது; பாபா வெம்பாவை நான் முதலிலே கேட்ட நாள்... நாளென்ன நாள்.... நேரம்.. சரியாக, ஆயிரத்துத்தொள்ளாயிரத்து...."

குளியற்றொட்டிக்குள்ளே நீரை, சுடுநீரும் தண்ணீரும் அளவாகக் கலக்கும்வரை சரிபார்த்துத் திறந்துவிட்டுக்கொண்டு இறங்கித் தலையைப் பிடித்தான். நீர் கரைத்துக்கொண்டோடியது. கசகசக்காத மாலைகளிலே குளிக்கத் தேவையில்லைத்தான்; ஆனாலும், பழக்கம் விடுவதில்லை; வேலைமுடிந்துவந்து குளிப்பதினால், தொழிலகம் முற்றாகத் தொடர்பறுந்து வீடு மட்டுமே காலைக்குளிப்புவரைக்கும் என்றாகிறதாக உணர்வு.

சீறி மூர்க்கத்துடன் விராண்டப்போகும் பூனைபோலக் கைவிரல்களை மடித்து, உள்ளங்கைகள் முகத்தைக் காணக் குனிந்து பார்த்தான்; நீர் விரல்களிலே சொட்டியது; ஆ,,க்,,, ஹா!............ வலக்கைச்சின்னிவிரல் நகவிடுக்கில் ஒரு கருந்தார்ப்பொட்டு; பதின்மவயதுநடிகையின் மார்பக-இடுப்பு-பின்புற அளவுகள் குறித்தது. தேய்த்தான். போவதாகத் தெரியவில்லை; சவர்க்காரமும் ... ம்ஹூம்! போக்கவில்லை; XX-YY-ZZ இளித்தபடி இன்னும் கருமையாக நுரைக்குள்ளாக மின்னியது. குளியற்றொட்டி விளிம்புகள் தேய்க்கும் வன்பஞ்சை எடுத்துத் தேய்த்தான்; சவர்க்காரநுரையைத் தள்ளிவிட்டு, நீருக்கு வெளியே பிடித்து வாயால் சின்னிவிரலை ஊதி உலர்த்திய பின்னால் - ஈரப்பதன் குறைந்த காற்று, இலகுவிலே உலர்த்துமாம் - வன்பஞ்சாலே அழுத்தித் தேய்த்தான். எரிந்தது; நகமும் விரலும் சேருமிடத்திலே தோல் கழன்று எரிந்தது; கசிவூடக, இரத்தம் மெல்லியதாகப் படர, நடிகை மறைந்துபோனாள்.

வெற்றி, கொட்டிய வம்பயர் வேட்டைப்பல்லிரத்தமாய்ச் சொட்ட, விரலை மீண்டும் மேலிருந்து கொட்டும் நீருக்குள்ளே எடுக்கையிலேதான் அவதானித்தான்; ஐரோப்பாவின் மிகச்சிறியநாட்டின் நிலச்சமவுரக்கோடுகள் அவனுடைய வலதுகையின் நடுவிரல்மொழிக்கும் மணிக்கட்டுக்குமிடையே ஏழிடங்களில் மையங்கொண்டெழுந்த வட்டங்களாக, நீள்வளையங்களாக, வளைகோடுகளாக, மண்ணிறத்தேமல் பூசிப் படர்ந்திருந்தன. ஹா!!! கண் விரிய அடித்தொண்டையிலிருந்து அலறல் கிளம்பிக் கேவலாக வெளிவர, திரும்பக் கையை வெளியேயிழுத்து வன்பஞ்சாலே தேய்த்தான்; நாட்டுவரைபடம் அங்குமிங்கும் சிதம்பினாலுங்கூட, அழிவதாகக் காணோம். குளியலறைக்குழாயுலோகத்திலே பின்னங்கையைத் தேய்த்துப் பார்க்கவும் கொஞ்சந்தான் நாடு மறைந்தது. குளியலறைச்சுவரிலே பின்னங்கையை அடிக்கத் தொடங்கினான்; ஆரம்பத்திலே நடிகையின் இடையும் மார்பும் பின்புறமும் மறையக் கிழிந்தெழுந்த எரிச்சல், இப்போது தெரியவில்லை. வலக்கை உள்ளங்கையைப் பளிங்குச்சுவற்றிலே அழுத்திக்கொண்டு, குளியலறைச்சின்னவாளியை எடுத்து இடது கையாலே சேதமடைந்த வரைபடம்மீது அடித்துக் கொண்டிருந்தபோது, வலது முழங்கையிலே தென்னாபிரிக்க அரசிலே இருக்கின்ற இந்தியவழிவந்த அரசியல்வாதிகளின் பெயர்களும் முகங்களும் இருப்பது அவனுக்கு நீரடித்துக் கழுவப்பட்டுத் தெளிவாகத் தெரிந்தன.

ஒரு மணிநேரமாகியும் குளிக்கப்போனவன் வெளிவராததையிட்டுக் கவலைப்பட்ட மனைவி, பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தன் பலம் கொண்டளவும் தட்டிக் களைத்துப்போய், உதவி தேடியபோது, குழந்தையும் கலவரமுற்று வீரிட்டு அழுதது; நகர்காவலரும் தீயணைப்புப்படையும் வந்து கதவை ஒரு சுத்தியலடியிலே உடைத்துத் திறந்தனர். குளியற்றொட்டியிலே குதம் கக்கிய மலமாய்க் குவிந்துகிடந்த சதையையும் தசையையும் தோலையும் எலும்பையும் அவர்கள் அள்ளிக் கொடுக்க, மனைவியின் வேண்டுகோளின் பேரிலே கொளுத்திச் சாம்பலாக ஒரு செம்பிலே மூடிக் கொடுத்தார்கள் இரண்டு நண்பர்கள். அவள் தொலைக்காட்சிப்பெட்டியையும் கணணியையும் அகப்பட்ட விலைக்கு விற்றுவிட்டுக் குழந்தையோடு வேற்றூருக்குத் தொழில் தேடிப்போனாள்.

'05 செப்., 11 ஞாயி. 00:48 கிநிநே.

Saturday, September 10, 2005

கந்தை - 39





அண்மையிலே 'சிரித்திரன்' சிவஞானசுந்தரத்தின் சுயசரிதை போன்றதாகச் சொல்லப்பட்ட புத்தகத்தினை வாசித்தேன். சின்னப்புத்தகம்; ஒரு புறம் அவரது கருத்துச்சித்திரங்களும் மறுபுறம் துணுக்கு வடிவிலேயே சம்பவங்களும். அவரின் கருத்துச்சித்திரப்பாத்திரங்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மிஸ்டர்& மிஸிஸ் டாமோடரன், கருத்தும் கானமும் ஆகியனவற்றுக்குக் கருத்துக்கொடுத்தவர்களையும் சம்பவங்களையும் குறிப்பிட்டிருந்தார். தான் பம்பாயிலே கட்டிடக்கலை படிக்கப்போனதிலிருந்து வானரசேனையின் குதியாட்டம் காரணமாகத் தான் சிரித்திரனை நிறுத்தவேண்டி வந்தது வரை எல்லாமே சம்பவத்துணுக்குகளாகச் சொல்லப்பட்டிருந்தன. சில கருத்துகள் மிகவும் சிறுபிள்ளைப்பார்வைகள்போலத் தோன்றினாலுங்கூட, சிரித்திரன் இலங்கைச்சமூகத்தின் - குறிப்பாக, யாழ்ப்பாணச்சமூகத்தின் ஓர் இருபதாண்டுக்காலத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைக் காணவும் MAD போன்ற சஞ்சிகைகள்போல, அதை எள்ளி நகையாடவும் மிகவும் உதவியது. தனியே நகைச்சுவைமட்டுமன்றி, கதை, செவ்வி ஆகியனவும் சிரித்திரனூடாகப் படைத்து அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர்கள் பலர். தன் இறுதிக்காலத்திலே, மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலே, வலப்புறக்கை வாதத்தினாலே செயலற்றுப்போகவும் இடது கையினாலே வரைய முனைந்திருக்கின்றார், 'சிரித்திரன்' சுந்தர் என்று அறியப்பட்ட சிவஞானசுந்தரம்.

Friday, September 09, 2005

குவியம் - 13


BeLier Which Project



எல்லாருந்தான் குறும்படம் எடுக்கினமே, நாங்கள் மட்டுமேன் விடுவான்?" எண்டு காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் போன மாசத்தின்ரை பூரணையொண்டிலை தீடீர் யோசனை வந்துது. கவனிச்சுப் பாத்தியளெண்டால், காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் இப்பிடியாக் கலையார்வமும் கடும்யோசனையும் வர்ற நாள் எண்டைக்குமே பூரணை நாளாத்தான் இருக்கு. பொக்கற்றுக்குள்ளை இருக்கிற காசுக்குள்ளை படமெடுத்திடோணுமெண்டு வீட்டுப்பினாஞ்சியர் காம்கோடர், கஸெட் தந்து ஓடர்போட்டுச் சொன்னதாலை, Blair Witch Project பிளானிலை குரூரப்படம் எடுப்பமெண்டு தீர்மானிச்சம் (தீர்மானிச்சமென்ன தீர்மானிச்சம்? தீர்மானிச்சான் காட்டான்குட்டி). ரைற்றில், எண்டில் எல்லாம் போடவெண்டால், ரைம் நல்லா ரைற்றில நிக்குது. அதால, கேக்கிறவைக்கு, "இது வாலுக்கு, தலைக்கும் முண்டத்துக்கும் பின்னாலை வருகுது; அதுதான் இதை ஓப்பினெட்டடாயிலே எடுத்தம். மிச்சத்தை பார்ட் ரூ எடுத்து, குழம்பாக்குவம்" எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறம்





Wednesday, September 07, 2005

துளிர் - 46


Noise Evaporation


வேக்பீல்ட் ஏரி, மஸாஸுஸெட்ஸ் மாநிலம்
'05, ஜூலை இன் ஒரு மாலை
படக்கருவி உபயம்: டிஜே தமிழர்

Sunday, September 04, 2005

கந்தை - 37


enGulfed



.............................................
....................................
..........................
................
........

புலம் - 18








சென்ற கிழமை மூன்று விடயங்கள் தொடர்பான பதிவுகள் எனது கவனத்துக்குரியனவாகின; மூன்றும் பெண்கள் மீதான ஆண்களின் சொல், செயல் வன்முறை குறித்தவை:

1. ரூமியின் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்த விமர்சனம்
2. தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்து
3. யாழ் பல்கலைக்கழக அரசியலறிவியல் விரிவுரையாளர் கே. ரி. கணேசலிங்கம் மீது எழுந்திருக்கும் சிறுமியைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டு

உரைக்கப்பட்டவை உண்மைகளாகும் பட்சத்திலே, இவை பெண்கள்மீதான ஆணாதிக்க எழுத்து, சொல், செயல் வன்முறையென்பது குறித்து கண் விரித்துப் பார்க்கின்றவர்களுக்குக் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. முதலிரண்டு பற்றியும் தோன்றியதை ஏற்கனவே குறித்துவிட்டதனால், மூன்றாவது விடயம் பற்றிமட்டும் அடுத்த பதிவிலே குறிக்க விரும்புகிறேன்.

இது குறித்து என் கருத்து மற்றவர்களுக்கு அவசியமா என்றால், இல்லை என்பதை ஒத்துக்கொள்வேன்; ஆனால், இந்த இடத்திலே எனது கருத்தினைப் பதிவு செய்துகொள்வது என் நிலைப்பாடு குறித்த ஒரு தெளிவினைக் மற்றவர்களுக்குத் தர உதவக்கூடுமென்ற சொந்த நலனை முன்னிட்டது; அதனால், இப்பதிவு எனக்கு அவசியமானது.

முதலிலே, கொள்கையளவிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மார்க்ஸியம் சார்ந்த புளொட், ஈரோஸ் ஆகியன சிதிலமடைந்து திரிபுவாதநிலைப்பாடு கொண்டபின்னால், ஈழநோக்கினை முன்வைத்துத் தக்கித்திருக்கும் ஒரே ஈழ இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து என் நிலைப்பாடு குறித்துச் சொல்ல வேண்டியதாகவுள்ளது; இயக்க ரீதியிலே ஒரு சின்னத்துரும்பைக்கூடத் தேசியவிடுதலைக்காகவும் மார்க்ஸியமுன்னெடுப்புக்காகவும் செய்யாதபோதுங்கூட, தேசியமும் மார்க்ஸியமும் பிணைந்த ஈழமே விடுதலை என்று முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாய்மனைக்கதிரைக்காரர்களிலே என்னையும் கணக்கெடுத்திருக்கலாம். ஆனால், தம்முள் இந்தியமேலாதிக்கத்தின் ஊடுருவலின்பின்னால், புழுக்கொண்டு மாய்ந்தும் தேய்ந்தும்போன மார்க்ஸிய_ஈழ_தேசிய இயக்கங்களின்பின்னால், தேசியமென்றவளவிலே அரசியற்கொள்கையடிப்படையிலே அடுத்த தராசுத்தட்டிலிருப்பினுங்கூட, கட்சி & இயக்கம் சாராது ஒவ்வொரு தனிப்பட்ட செயற்பாட்டினதும் தன்மையைப் பொறுத்து, விடுதலைப்புலிகளின் தேவையை ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு நடைமுறைக்கொவ்வாத ராயாகரனின் கட்டித்த மரபுவாத கொள்கையவினாலான மார்க்ஸியத்தின் சமகாலத்தோல்வியும் இந்திய மார்க்ஸியவாதிகளின் ஈழத்தேசியத்துக்கெதிரான திட்டமிட்ட நிலைப்பாடும் பலஸ்தீன தேசியத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவுமென்ற இரட்டைநிலைப்பாடுகளும் மேலும் ஊக்கிகளாகத் தொழிற்படுகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள்போல தமிழீழம் என்ற பதத்தினை அடிப்படையிலே இன்னமும் நான் ஒத்துக்கொள்வதில்லை; அதைவிட ஈரோஸ் முன்வைத்த தமிழர்கள் அல்லாத மாற்றுமொழியினரும் இனத்தவர்களும் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடிய ஈழம் என்ற பதத்தினையே இன்னும் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்.

மொழி அடிப்படையிலான தேசியமென்ற உணர்வினை இழிவுணர்வென்ற அடிப்படையிலே குற்றவுணர்வினை ஏற்படுத்த முயலும் நடைமுறையிலில்லாத வர்க்கம்சார் மரபுவாதபொதுவுடமைவாதிகளின் கருத்துத்திணிப்பும் அடியிலே மறைந்து மெல்லிய இந்துமேலாதிக்கம் உள்ளோட, மொழியடிப்படையிலான உரிமைகளைப் பின்தள்ள வற்புறுத்தும் இந்தியமேலாதிக்கவாதிகளின் (இவர்களிலே தமிழ்நாட்டினைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இற்றை மார்க்ஸியர்களும் முன்னை_மார்க்ஸியர்களும் அடக்கம்) கருத்துத்திணிப்பும் எனது ஈழதேசியம் குறித்த உணர்விலே குற்ற அழுத்தத்தினைத் திணிக்கமுயன்றபோதுங்கூட, சமகாலத்துக்கான மார்க்ஸியத்தின் ஆழமாதலும் விரிதலுங் குறித்த எனது புரிதல், அத்தகு குற்றவுணர்வு அநாவசியமென்பதை உணர்த்துவதால், அரசியலளவிலே மிகவும் தெளிவாக இருக்கின்றேன்; "ஆயுதப்போராட்டம் என்பது வன்முறையின் அடையாளம்" என்பதாகவும் ஜனநாயகவழிப்பாதை மட்டுமே நெறியானது" என்பாதாகவும் கருத்து முன்வைக்கும் பல "மனிதவுரிமைச்சாத்வீகப்போராளிகளினது பேச்சாளி"களின் உள்நோக்கங்கள், சொந்த நலன்கள் குறித்த வேட்கைகள் மிகவும் துல்லியமாக அவர்களின் வேறு விடயங்கள் தொடர்பான கருத்துவெளிப்பாடுகளிலே தெரிந்துவிடுவதாலும், ஆயுதப்போராட்டமென்பது விரும்பாதபோது ஈழத்தேசியத்தின்மீது காலத்தினாலே திணிக்கப்பட்டதென்பதை நிகழ்வுகளின் சாட்சியாக இந்தப்பேச்சாளிகளின்மேலாக அறிந்திருக்கின்றேன் என்பதாலும் ஆயுதப்போராட்டத்தின் மீது இன்றைய நிலையிலும் - சொந்தமாக ஒரு சின்ன சவர அலகை எடுத்துக் கடதாசி வெட்டவும் மிக அவதானம் கொள்கின்ற ஆளானபோதுங்கூட - நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். குருஷேத்ரத்திலே சொல்லப்பட்ட கீதையை விதந்தோத்துகின்ற நாமதாரிகளுக்கு ஆயுதப்போராட்டத்தின் அவசியம் ஈழம் தொடர்பாக கட்டாயம் தெரிந்திருக்குமென்ற நம்பிக்கையும் அதைத் தம் சொந்தநலன் குறித்து அமுக்கி, மனிதநேயம், ஜனநாயகப்போர்வையால் மூடமுயல்கின்றார்களென்ற உண்மைநிலையும் தெரியும்.

விடுதலைப்புலிகள் குறித்து எனக்கு விமர்சனமிருக்கின்றது; மற்றைய இயக்கங்களை அவர்கள் ஒடுக்குவதற்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே மற்றைய இயக்கங்களின் மேல்மட்டத்தலைமைகள் தாம் சொல்லிக்கொண்ட ஈழதேசியநோக்குக்கு எதிரான நடவடிக்கைகளிலே விரும்பியோ திணிக்கப்பட்டோ இயங்கியதும் காரணமாகவிருந்தபோதுங்கூட, அந்த இயக்கங்களைச் சேர்ந்த கீழ்மட்டப்போராளிகளை விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒடுக்கிய விதத்திலும் அழித்த விதத்திலும் எவ்விதமான ஒப்புதலுமில்லை. தமக்கெதிரான எதிர்க்கருத்துகள் குறித்து, விடுதலைப்புலிகளோ அவர்களின் ஆதரவூடகங்களோ கண்மூடிய ஆதரவாளர்களோ பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே வாய்திறக்கவிடுவதில்லையென்பது மறுக்கமுடியாத உண்மை - கிட்டத்தட்ட, த இந்துவினதும் அதன் ஆதரவு ஊடகவியலாளர்கள், விமர்சனமில்லாத வாசகர்களின் ஈழ ஆதரவு குறித்த பேச்சுக்கான சுதந்திரமளவுக்கே விடுதலைப்புலிகளும் வாயைத் திறக்கவிடுகின்றனர் என்பது என் கருத்து. முஸ்லீங்களை அவர்களின் பாரம்பரியப்பிரதேசங்களிலே இருந்து அகற்றுவதிலே (குறிப்பாக, வடக்கிலே) விடுதலைப்புலிகளின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் - இன்றைய காலகட்டத்திலே தமது அந்தக்குற்றத்தினை மிகவும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டபோதிலுங்கூட. (கிழக்கிலே தமிழர்-முஸ்லீங்கள் குறித்த முரண்பாடு தனியே ஈழதேசியத்தின் அடிப்படையிலானதல்ல; தவிர, அதிலே கிழக்குமுஸ்லீங்களும் முழுக்கமுழுக்க பாதிப்புக்குள்ளானவர்கள் என்ற வகையிலேமட்டும் பார்க்கப்படக்கூடியவர்களல்ல; அடுத்தடுத்திருக்கும் தமிழ்-முஸ்லீம் ஊர்களுக்கிடையேயான தனிப்பட்ட உள்ளூர் அரசியற்குரோதங்களும் அரசுசார் முஸ்லீம் ஊர்காவற்படையின் தமிழரெதிர்ப்பு நடவடிக்கைகளும் கவனத்திலெடுக்கப்படவேண்டியவை). சிறுபிள்ளைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பயன்படுத்துவது குறித்துக் கொள்கையடிப்படையிலே எனக்கு மிகவும் எதிரான கருத்துண்டு - நடைமுறையிலே இயக்கத்தின் தேவையும் நிலைப்பும் அப்படியான சிறுவர்களிலே தங்கியிருக்கின்றபோதிலுங்கூட. எனது குழந்தை அதே வயதிலே ஆயுதம் தூக்கிவிடக்கூடாதேயென்பதிலே மிகவும் கண்காணிப்பாகவும் பயமுள்ளவனாகவுமிருப்பேன். விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளிகள் பற்றி விசனம் தெரிவிப்பவர்களுக்கு நான் தற்கொலைப்போராளிகள் குறித்த சில நூல்களின் கீழ்வரும் அறிமுகக்குறிப்பினை வாசிக்கும்படி பரிந்துரைக்கின்றேன். Why They Do It. ஆனால், அரசின் பொருளாதாரநலன்களையும் அரசுபோரிடுசாதனங்களையும் குறிகளாக்குவதை ஏற்றுக்கொள்ளும்போதிலே, எந்த வகையிலும் நிலையிலும் இவை தவிர்த்த நிராயுதபாணிகளை வேண்டுமென்றோ பக்கவிளைவாகவோ நாசம் செய்வதை முற்றிலும் எதிர்க்கின்றேன்.

இலங்கை-ஈழம்-இந்தியா குறித்த அரசியல் குறித்து நூல்களைப் பரிந்துரைக்கக்கேட்கும் நண்பர்களுக்கு நான் விடுதலைப்புலிகளின் சார்பான புத்தகங்களையோ கட்டுரைகளையோ ஊடகங்களையோ மட்டும் பரிந்துரைப்பதில்லை; எனக்குத் தெரிந்த, நான் வாசித்த, விடுதலைப்புலிகளுக்கு எதிரான/ஆதரவான ஈழத்தமிழர்களின், சிங்கள ஊடகங்களின், இந்தியர்களின் நூல்களையெல்லாவற்றினையுமே பரிந்துரைக்கின்றேன்; வாசித்தபின்னால், அவர்களையே அரசியல் குறித்துத் தீர்மானிக்கும்படி சொல்கிறேன். ஈழத்தவரின் பாரம்பரியப்பிரதேசங்களென்பதும், மொழி, பண்பாடு, கலை வெளிப்பாடுகளென்பதும், ஈழத்தவரின் சுயநிர்ணயவுரிமையின் முழுமையான அடைதலிலேதான் தங்கியுள்ளன என்பதிலே எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அந்த அடைதல் இலங்கை என்ற கூட்டமைவின்கீழான இரு தேசங்களாகவோ அல்லது தனியான ஈழமென்ற தேசமாகவோ இருப்பது குறித்து எனக்குப் பெரிய அக்கறையில்லை; ஆனால், எந்தத்தீர்வு முழுமையான உரிமையைத் தருகின்றதோ அதுவே முக்கியமானது; தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளோ இந்திய அரசுகளோ ஈழத்தவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் இவையிவையெனத் தீர்மானிப்பதினை முழுக்க வெறுக்கின்றேன்; அத்தகு அரசுகளின் விசுவாசிகளும் தரகர்களும் எழுத்தூடகத்திலும் ஒலி ஒளி இணைய ஊடகங்களிலும் அவற்றினை எந்தப்பட்டுப்போர்வையின்கீழும் நெளியும் புழுக்களாக விற்பனை செய்வதனை இயன்றவரை கிழித்துக்காட்டி உள்நோக்குகளையும் திரிபுகளையும் தரகர்களையும் வெளிப்படுத்துவது என் கடமையென்று உணர்கிறேன். இதற்கு நான் ஈழத்தவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை; தர்க்க அடிப்படையிலும் பகுத்தறியும் தன்மையிலும் ஒரு மனிதனாகவே செய்யலாம்; ஆனால், ஓர் ஈழத்தவனாக இருப்பது அவ்வாறு செயற்பட ஓர் உணர்வுந்தலைத் தருகின்றது; அந்த உணர்வுந்தலைச் சிறப்புக்கூறாகப் பெற்றிருப்பது, அவ்வாறு இம்முகமூடிகளை உரித்துக்காட்டும் கடமையை மேலதிகமாக என்னைப் போன்றவர்களிலே சுமத்தியிருக்கின்றதென்று நினைக்கிறேன்.

இந்த வகையிலேயே பொதுவான கருத்தமைவிலே, ஈழம் குறித்த எனது கருத்துநிலைப்பாடும் செயல்நிலைப்பாடுமுள்ளது. தனியாள் எனது கருத்தும் நிலைப்பாடும் எதனையும் மாற்றப்போவதில்லையென்ற நிலையிருப்பினுங்கூட, இந்தக்குறிப்பு என் நிலைப்பாடு குறித்து வெறுமனே "பு...மகனே" என்ற மெய்ஞ்ஞான அரசியல்ஞான பின்னூட்ட விளிப்புக்கு அடுத்தபடியிலே தாவிக் கூர்ப்படைந்திருந்து "புலி ஆதரவு" என்ற குற்றச்சாட்டினைமட்டுமே முன்வைக்கும் அறிஞர்களுக்கும் தார்மீகத்தினைத் தமக்கே உரித்தென்று உரியாடையாகப் போர்த்திருக்கும் அறிவுஜீவிகளுக்கும் மனிதவுரிமைக்காவலாளிகளுக்கும் திரும்பத் திரும்ப, கிளிப்பிள்ளைமாதிரி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லாமல், இப்பதிவினைத் தேவையான இடத்திலே "நிலைமறுப்புக்கூற்று" இணைப்புக் கொடுக்க உதவுமே என இட்டிருக்கிறேன். மீதியானோர் புலம்பலென்று விட்டு நகர்க. விரும்பினோர், இதன் உபயத்திலேயே ஒரு பகிடிப்பதிவு போட்டு, பின்னூட்டம் பெற்றுய்ந்து பிழைத்துச் செல்க ;-)

நாளையிலிருந்து ஈழ அரசியல் குறித்து வெளிவரும் பிறரின் எந்தப்பதிவிலுமே என் பெயரை இழுக்காதவரையில் எந்நிலையிலும் பின்னூட்டமிடுவதில்லை என்ற எல்லோருக்கும் நன்மை பயக்கும் முடிவினை எடுத்திருக்கிறேன். ;-)

இக்குறிப்போடு, கணேசலிங்கத்தின் மீதான பாலியல்வன்முறைக்குற்றச்சாட்டினைக் குறித்து, ஊடறுவில் Rape by Kanesalingam என்று தலைப்பிட்டு வெளிவந்த அதே கட்டுரை, இலக்கிலும் ஜனநாயகத்திலும் Rape by LTTE Kanesalingam என்ற தலைப்போடு வந்தது குறித்தும், சார்ள்ஸ் விஜயவர்த்தனா கொலை குறித்து, ஊடறுவிலே வெளிவந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரை, "இதுவா தமிழ்க்கலாச்சாரம்?" விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு என்பதே முழுக்க முழுக்க நிலைப்பாடாகக் கொண்ட இலக்கிலே "இதுவா தமிழ்க் கலாசாரம்?" எனவும் த இந்து பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாட்டினை பெரும்பாலும் நியாயப்படுத்தி வெளிக்காட்டிய, இந்து ஆசிரியரின் அண்ணன் மகளினைத் திருமணம் செய்துகொண்டவருக்குரிய சன் தொலைக்காட்சியிலே தொழிலாற்றும் மாலன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட திசைகளிலேயும், கருணானந்தம் பரமுவேலன் பதிவின் பின்னூட்டத்திலே வெளிவந்தது குறித்தும் இன்னோர் உள்ளிடுகையிலே சுட்டிப் பேச முடிந்தால் முயல்வேன்.

'06 செப்ரெ.,04 ஞாயிறு. 09:38 கிநிநே.